ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
ஓமந்தை சோதனைச் சாவடியை மூடியதால் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்துகிறது சிறிலங்கா அரசு: பா.நடேசன் குற்றச்சாட்டு [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:07 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியாவில் உள்ள ஓமந்தை சோதனைச் சாவடியை கடந்த மூன்று நாட்களாக சிறிலங்கா படைத்தரப்பு மூடியிருப்பதால் வன்னிப் பெருநிலப்பரப்பில் பாரிய மனித அவலவத்தை சிறிலங்கா ஏற்படுத்துகிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக "புதினம்" இணையத்தளத்துக்கு அவர் தெரிவித்துள்ள கருத்து: ஓமந்தை சோதனைச் சாவடி கடந்த மூன்று நாட்களாக சிறிலங்கா படையினரால் மூடப்பட்டுள்ளது. இதனால் வன்னிப் பெருநிலப் பரப்பில் வாழும் மக்களுக்கான உணவு- மர…
-
- 1 reply
- 747 views
-
-
`காக்கேசியக் கோட்டைகளை இரஷ்யா கைப்பற்றிய பொழுதும், வீரஞ்செறிந்த போலாந்தை அது தீர்த்துக்கட்டிய பொழுதும் ஐரோப்பிய மேல்தட்டு வர்க்கங்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக்கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருந்ததாக' மார்க்ஸ் அன்று சாடியதுண்டு வன்னிக் கோட்டைகளை இலங்கை ஆட்சியாளர் கைப்பற்றும்பொழுதும், தமிழ் பேசும் மக்களின் ஆள்புலத்தை அவர்கள் தீர்த்துக்கட்டும்பொழுதும் வெளியுலக மேன்மக்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக் கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருப்பதைச் சாடுவதற்கு மார்க்ஸ் இன்று உயிருடன் இல்லை. இந்தக் கொடுமையை அனுபவிப்பதற்குத் தமிழ் பேசும் மக்கள் புரிந்த குற்றம்: தன்னாட்சிப் போராட்டத்தில் குதித்த குற்றம்! …
-
- 0 replies
- 1.1k views
-
-
திரு. யோகி அவர்களின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.7k views
-
-
போரில் ஏற்பட்டுவரும் இழப்புக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வரும் தகவல்கள் மிகவும் குறைவானது, ஆனால் இழப்புக்கள் அதிகம் என உலக சோசலிச இணைய அமைப்பு தனது ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 683 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய பெருமை எனக்கே - விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நானே. போர் நடைபெறுகையில் நாடாளுமன்றில் தமிழர்களின் குரல் ஒலிக்க வேண்டும் என சிவராம் கூறியதற்கிணங்கதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் கூறி நானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினேன் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். பொத்துவில் – ஊறணியில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-“வடக்கு, கிழக்கில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும். கொழும்பை மையமாக வைத்தியங்கும் சுமந்திரன் ரணிலின் முகவர். தமிழர…
-
- 5 replies
- 637 views
-
-
கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு கடந்த மூன்று மாதங்களாக சிறிலங்கா அரசாங்கம் எரிபொருட்களை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-
-
இறுதி யுத்தம் தொடர்பாக பி.பி.சீ ஊடகவியலாளர் தெரிவித்த கருத்துக்கள் போலியானவை: இலங்கை இராணுவம் தகவல்கள் பிழையானவை: இராணுவம் [saturday, 2012-12-22 09:10:53] பி.பி.சீ ஊடகவியலாளர் வெளியிட்டுள்ள தகவல்கள் பிழையானவை என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் படையினர் லட்சக் கணக்கான தமிழ் ஆண், பெண்களை கொலை செய்ததாக பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். 2004ம் ஆண்டு பிரான்சிஸ் ஹரிசன் இலங்கையை விட்டு வெளியேறிச் சென்றார். லண்டனில் உள்ள பத்து பேர் வழங்கிய போலித் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சாட்சியாளர்கள் வன்னிப் போ…
-
- 0 replies
- 413 views
-
-
4,000 ஹெரோய்ன் பக்கெட்களுடன் ஒருவர் கைது மிரிஹான சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 4,000 ஹெரோய்ன் பக்கெட்கள் வைத்திருந்த நபரொருவரை, அதுருகிரியப் பகுதியில் இன்று புதன்கிழமை (27) காலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஒரு மோட்டார் சைக்கிளிலே குறித்த ஹெரோய்ன் பக்கெட்களை மறைத்து வைத்துக்கொண்டு சென்ற வேளையிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து அருகிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பிறிதொரு சந்தேகநபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள் மூன்ற…
-
- 0 replies
- 198 views
-
-
சர்வதேச நியமங்களின்படியே புலிகளின் போர் இருந்தது- கருணாவின் கருத்து சாதாரணமானதே- சிவமோகன் யுத்த காலத்தில் போராளிகள், படையினர் மரணிப்பது சாதாரண விடயமே எனவும், அதனைத்தான் கருணா கூறியுள்ளார் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “யுத்தத்தின் போது நேரடியாக மரணிப்பதை ஒரு விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு யுத்த காலத்தில் நேரடியாக சர்வதேச நியமங்களை ஏற்றுக்கொள்ளாமல் அதனை மீறி ஒரு நடவடிக்கை இடம்பெற்றிருந்தால் மட்டுமே அது ஒரு போர்க் குற்றமாக அல்…
-
- 1 reply
- 530 views
-
-
மது போதையில் பயணித்த இளம் சட்டத்தரணி மீது வழக்கு! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மீது மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தெல்லிப்பளை பொலிஸாரால் வழக்கு நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் வீதிச் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை வழிமறித்துள்ளனர். எனினும் அந்தக் கார் நிறுத்தாது சென்றதால் சந்தேகம் கொண்ட பொலிஸார், அதனை பின்தொடர்ந்து சென்று வழிமறித்தனர். அந்த காரை செலுத்திச் சென்றவர், தன்னை சட்டத்தரணி என்று பொலிஸாருக்கு அறிமுகம் செய்தார். எனினும் அவர் மதுபோதையில் இருப்பதை முகத்தோற்றளவில் அறிந்துகொண்ட பொல…
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
வெளிநாடுகளில் சிறிலங்காவுக்கான தூதரக நியமனங்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 594 views
-
-
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அரசாங்கம் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேநேரம், பெப்ரவரி மாதத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டி வருமெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதத்திற்குப் பின்னர் புலிகள் இயக்கத்திற்குச் சாதமான சூழ்நிலைகள் காணப்படுவதாகவும்,ராவய பத்திரிகையின் செய்திகள் தெரிவிக்கின்றன இதை அரசாங்க அமைச்சர் 2009 இல் வரப்போகும் பொருளாதாரச்சீர்ரளிவை பற்றி கருத்து வெளியிட்டுள்ளார் அதனால் அரசாங்கம் யுத்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்னடைவைச் சந்திக்க நேரிடலாம் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. உலக அரசியல் களம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை போன்றவை அரசாங்கத்…
-
- 1 reply
- 3.7k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது:- பிரதமர் உருத்திரகுமாரன் [Friday, 2013-01-04 11:47:38] "நமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஜனநாயக வரம்பிற்குள்ளேதான் நடைபெறுகின்றன. அத்துடன் நமது அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒத்த பல அமைப்புக்கள் ஆரோக்கியமான முறையில் இயங்கிவருகின்றன. எனவே நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அறிதலுக்காக கூறிவைக்க விரும்புகின்றேன். எனினும் இலங்கை அரசாங்கத்தோடு இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அந்த நாட்டிற்குள் நின்று செயற்ப…
-
- 11 replies
- 1.2k views
-
-
போரை நிறுத்த இலங்கை அரசுடன் பேச்சு நடத்துகிறதாம் இந்தியா; பிரணாப் விரைவில் கொழும்பு வருவார்: சிங்வி [ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2008, 04:55.09 AM GMT +05:30 ] இலங்கையில் நடைபெற்று வரும் போரை உடன் நிறுத்துவது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் இந்தியா இராஜதந்திர ரீதியாகப் பேச்சு நடத்தி வருகிறது. அங்கு போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்காக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்வார்.இவ்வாறு ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிசேக் சிங்வி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் டில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறினார். அப்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:- தி.மு.க. அரசுக்கு காங்கிரஸ் தலை…
-
- 0 replies
- 930 views
-
-
வடக்கில் வென்றாலும் தோற்றாலும் தமிழன் தமிழனே- கிழக்கில் அந்த நிலையில்லை- கருணா July 17, 2020 வடக்கில் வென்றாலும் தோற்றாலும் தமிழன் தமிழனே ஆனால் கிழக்கில் தமிழருக்கு அவ்வாறான நிலைமை கிடையாது என விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில கிழக்குமாகாணாத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதே எமது அரசியல் புரட்சியாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்குகிழக்கை பொறுத்தமட்டில் பல வேறுபாடுகள் உள்ளன வடக்கில் வென்றாலும் தோற்றாலும் தமிழன் தமிழனே என அவர் தெரிவித்துள்ளார். எனினும் கிழக்கில் மூவினங்கள் வாழ்கின்றன தமிழர்களின் இருப்பை காக்கவேண்டிய தேவையுள்ளது என அவர் தெரி…
-
- 5 replies
- 935 views
-
-
புலிகளின் குரல் செய்திகளிலும், தமிழ் நெற்றின் செய்தி குறிப்பிலும் பரந்தன் சந்திக்கு அண்மையில் சண்டை நடப்பதாக குறிக்கப்பட்டு உள்ளது. Ki'linochchi hospital attacked again [TamilNet, Tuesday, 30 December 2008, 15:30 GMT] Sri Lanka Army (SLA) fired artillery shells have again hit Ki'linochchi hospital Tuesday evening between 3:50 and 4:00 p.m., initial reports from the town said. Hospital building was damaged in the shelling. Meanwhile, close-exchange of gunfire was reported in Paranthan area. A telecommunication centre located 300 meters south of Ki'linochchi hospital was badly damaged in the shelling by the SLA Tuesday morning http://tamilnet.com/art.html…
-
- 42 replies
- 8.1k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப் பொருட்கள் மலேசியா நாட்டினுடைய சக்தி அறவாரியம் மூலம் பெறப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிரதேச சபையின் தலைவர் அ.தனிநாயகம் மக்களிடம் கையளித்தார். கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியிலும், கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வன்னியில் பெய்த கனமழையினால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சக்தி அறவாரியம் குறித்த உதவிகளை வழங்கியிருந்தது. நட்டாங்கண்டல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 18 குடும்பத்தினருக்கும், மூன்று முறிப்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 15 குடும்பத்தினருக்கும், கரும்புள்ளியான் கிராம…
-
- 0 replies
- 393 views
-
-
கல்லுண்டாய் வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் துரித நடவக்கையை மேற்கொண்டுள்ளார். கல்லுண்டாய் வெளியில் பல காலமாகக் கொட்டப்பட்டுவரும் திண்மக் கழிவுகள் தீப்பற்றி கொண்டதால் ஏற்பட்டிருக்கும் பாரிய புகைமண்டலம் சுற்றுச் சூழலுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றது என கல்லுண்டாயையும் அதன் சுற்றுப்புறங்களிலும் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இக் கழிவுப் புகையிலிருந்து வெளிவரும் இரசாயனத் தாக்கத்தைப் பொறுக்காத இப் பிரதேச வாசிகளின் விருந்தாளிகளாக வந்து தங்கிய வெளிநாட்டு உறவுகள், இந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கியிருக்கின்றனர். இதைப் போன்று அன்றாடம் தமது வாழ்வியல…
-
- 0 replies
- 230 views
-
-
காணொளி அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல் திகதி: 05.01.2009 // தமிழீழம் // [] அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல் http://www.tamilkathir.com/news/793/58//d,view_audio.aspx
-
- 0 replies
- 2.8k views
-
-
அரசின் முடிவு தவறானதென்பதை காலம் விரைவில் உணர்த்தும்: சபையில் ஸ்ரீகாந்தா எம்.பி. [ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 06:56.08 AM GMT +05:30 ] விடுதலைப்புலிகளை அடியோடு அழித்தலென்னும் முடிவை எடுத்து அதனடிப்படையில் செயற்பட்டு வரும் அரசாங்கத்தின் முடிவு தவறானதென்பதை காலம் அவர்களுக்கு விரைவில் உணர்த்துமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா கிளிநொச்சியுடன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பேச்சுக்கான சூழலை ஏற்படுத்த அரசு முன்வரவேண்டுமென்றும் கோரினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டநீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இந்தியப்படைகளுடனான மோதல்களின் போது புலிகள் வடக்கு, கிழக்…
-
- 0 replies
- 778 views
-
-
மட்டக்களப்பில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழர்களின் எல்லைக் கிராமங்களான வாகனேரி மற்றும் புணானை பகுதிகளை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைத்து தமிழர் காணிகளை கபளிகரம் செய்யும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் மட்டக்களப்ப…
-
- 0 replies
- 451 views
-
-
பொதுமக்கள் மீதான தாக்குதல் பதிவு Get Flash to see this player. புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினர் எறிகணை தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 11 சனவரி 2009, 05:50 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பின் தென்பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அப்பாவி பொதுமக்கள் உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு தெற்கு 9 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று சனி…
-
- 15 replies
- 2.3k views
-
-
டக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி! புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர். கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் இன்று இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர்கள் இருவரும் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர். அதன்படி, டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு 32,146 வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றிருந்தார். இவ…
-
- 0 replies
- 564 views
-
-
உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக-எம்.கே.நாராயணன் வெள்ளி, 16 ஜனவரி 2009, 01:22 மணி தமிழீழம் [ அண்மைய சிறீலங்க இராணுவ வெற்றிகளின் பின்னர் தன்னுடன் பேசிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக்காவே என்று தன்னிடம் கூறியதாக கோதபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழர் தாயகத்தில் நிலங்களை சிறிலங்கா படைகள் கைப்பற்றி தமிழின அழிப்பை முன்னெடுப்பதை வாழ்த்திய போதே இவ்வாறு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்ததாக கோதபாய தெரிவித்துள்ளார். பதிவு
-
- 26 replies
- 4.2k views
-
-
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு வழங்காவிடில் உங்கள் மீது சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் எனக் கூறியுள்ள மன்மோகனிடம் பதிலளித்த நீங்கள் எங்களுக்கு போரில் உதவியதைப்போல பக்கபலமாக இருங்கள், சர்வதேசத்தினை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் எனக் கூறியுள்ளார் அண்மையில் இந்தியா சென்ற மகிந்த அரசின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குழுவிற்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் குழுவிற்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது தெரிந்ததே. இந்தச் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இலங்கை வெளியுறவுச் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம, இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம், இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் காந்தா ஆகியோர் …
-
- 2 replies
- 538 views
-