Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “பிள்ளையானை சந்தித்தேன் அவரை வாழ்த்தினேன்” - மகிந்த October 27, 2019 “நான் இன்று பிள்ளையானை சந்தித்து அவருடன் கலந்துரையாடினேன். அவருடைய தலைமையில் நேற்றைய தினம் ஒரு பாரிய கூட்டம் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் காரணமாகவே அவரை வந்து நான் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று மதியம் பிள்ளையானை மட்டக்களப்பு சிறையில் சென்று பார்வையிட்டதுடன் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அதையடுத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், “முதலில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் . மலையக மக்களுக்கு தீபாவளி முற்பணம் கொடுப்பார்கள் அதுவும் இம்முறை கொடுக்கப்படவில்லை அதற்கும் எமது எதிர்ப்ப…

    • 16 replies
    • 1.9k views
  2. இந்து கோயில்களுக்குள் பௌத்த துறவிகள் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள் எனத் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்தார். நேற்று வவுனியாவில் காணாமல் போன உறவுகள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். நாங்கள் 986 ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நேற்றைய தினம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எமது போராட்ட களத்திற்கு வந்திருந்தார்கள். தமிழ் மக்களை மீன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி நாங்கள் கூறுகின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் …

    • 0 replies
    • 348 views
  3. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக, 108 தேங்காய்கள் உடைத்து விசேட வழிபாடு ஒன்று, இன்று (1) கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற விசேட வழிபாட்டைத் தொடர்ந்து 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டன. கிளிநொச்சியில் உள்ள சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்களால் குறித்த விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்றுடன் தபால்மூல வாக்களிப்புகள் நிறைவடையும் நிலையில், இந்த விசேட வழிபாடு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.tamilmirror.lk/வன்னி/சஜததன-வறறககக-சதறததஙகய-உடபப/72-240637

    • 3 replies
    • 702 views
  4. தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை ; எம்.ஏ.சுமந்திரன் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை நாமே வேட்பாளரை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தென்மராட்சியின் தொகுதிகளை மற்றும் வட்டாரக் கிளையினருடனான சந்திப்பு முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதித் தேர்தலில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நாம் ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது இருவரும் கெட்டவர்கள்தான். கோத்தபாய ராஜபக்ஷ ஏற்கனவே கூறிவிட்டார் சிறுபான்மை மக்…

  5. டி.ஷங்கீதன் கொழும்பில் வாழ்கின்ற மலையக இளைஞர், யுவதிகள், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்குத் தயாராக வேண்டும் என்று, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிஷ்ணன் தெரிவித்தார். அதேபோன்று கொழும்பில் வாழ்கின்ற மலையக இளைஞர், யுவதிகளுக்கு உரிய வகையில் விடுமுறை வழங்கி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு, கொழும்பு வாழ் வர்த்தகர்களும் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதி செய்யுமுகமாக, தமிழ் முற்போக்குக் கூட்டணி, கொழும்பு வர்த்தகர்களுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு, கொழும்பு தாஜ்சமுத்ரா விருந்தகத்தில், நேற்று (31) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரைய…

  6. கொழும்பு துறைமுக நகர காணி உறுதிப் பத்திரம் சீனாவிடம் கையளிப்பு Oct 30, 2019by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் கொழும்பு துறைமுக நகரததின் திருத்தப்பட்ட காணி உறுதிப் பத்திரம், நேற்று சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், இந்தப் பத்திரம் சீன நிறுவன அதிகாரிகளிடம் சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், ஒப்படைக்கப்பட்டது. முதலில் இந்த காணி, நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து, சீனாவின் CHEC போர்ட் சிற்றி கொழும்பு நிறுவனத்துக்கு, குத்தகை உடன்பாட்டின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது. …

    • 35 replies
    • 3.3k views
  7. Published by R. Kalaichelvan on 2019-11-01 14:21:52 (தி.சோபிதன்) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் 8 முக்கிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்ப்பாளர் தமிழர்கள் விடயத்தில் என்ன செய்வேன் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னாரோ அதனை குறைவான விடயங்களே உள்ளன என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கடசித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அ…

  8. எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் கொழும்புக்கும் மும்பைக்குமிடையில் தினசரி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக 'விஸ்டாரா' என்ற இந்திய விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 25 முதல், இந்த விமானம் மும்பை விமான நிலையத்திலிருந்து தினமும் காலை 11 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும். அதேபோல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு மீண்டும் மும்பையை சென்றடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/67585

    • 7 replies
    • 1.1k views
  9. LTTE பெயர் பொறிக்கப்பட்ட GPS கருவி கண்டுபிடிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் பாவித்ததாக சந்தேகிக்கப்படும் அவ்வியக்கத்தின் பெயர் பொறிக்கப்பட்ட GPS கருவி ஒன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் நபர் ஒருவர் தனது காணியை சுத்தம் செய்யும் வேளையில் த.வி.பு.055 என்ற இலக்கம் பொறிக்கப்பட்ட குறித்த கருவி ஒரு அடி ஆழமுள்ள குழி ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் இறுதி யுத்தத்தின் போது புலிகளின் வீரர் ஒருவரினால் குறித…

    • 2 replies
    • 661 views
  10. துட்டகைமுனுவின் சகோதரருக்கோ, தந்தையின் புதல்வருக்கோ முடியாது- அநுர குமார நாட்டை அபிவிருத்தி செய்வது என்பது தனிநபர் ஒருவரின் பணியல்லவென தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். சிலாபம் பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். 2010 ஆம் ஆண்டு துட்டகைமுனுவென மஹிந்த ராஜபக்ஸவைக் கொண்டுவந்து நாட்டைக் கட்டியெழுப்ப இந்த நாட்டு மக்கள் முயற்சித்தனர். அது முடியாமல் போனது. கடந்த 2015 ஆம் ஆண்டில் மீண்டும் பொலன்னறுவை மைத்திரியைக் கொண்டுவந்து செய்யப் பார்த்தனர் அதுவும் முடியாமல் போயுள்ளது. தற்பொழுது துட்டகைமுனுவின் சகோதரரைக் கொண்டு வ…

    • 0 replies
    • 596 views
  11. எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் தொடர்ச்சியாக 984 ஆவது நாளாகவும் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு இங்கே சிங்கள வேட்பாளர்கள் எந்த முகத்துடன் ஓட்டு கேட்டு வருகிறார்கள் அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க கூடாது எனவும் மீன் சின்னத்திலே போட்டி போடுகின்ற தமிழ் வேட்பாளர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் காணாமல் போன உறவுகள் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் மேற்கொள்ளும் கொட்டகைக்கு முன்பாக தமிழகத்த…

  12. சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது Oct 31, 20190 புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதல் பிரதிகள் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமின்றி, நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.(15) http://www.samakalam.com/செய்திகள்/சஜித்-பிரேமதாசவின்-தேர்/ ‘சஜித்தின் சமூக புரட்சி’ வெளியிடப்பட்டது… October 31, 2019 புதிய ஜன…

    • 5 replies
    • 3.7k views
  13. இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! கட்டாயம் இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்! இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! கட்டாயம் இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்! ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு என்பது தொடர்பில் மக்கள் தெளிவு பெற வேண்டும். வாக்களிப்பு தொடர்பில் தெளிவின்மையே கடந்த 2015 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சத்துக்கும் அதிக வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இம்முறை தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்களிக்கும் மேசையில்…

    • 0 replies
    • 548 views
  14. வாக்குச்சீட்டை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவோருக்கு மூன்று வருட சிறை தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று (31) தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தற்பொழுது தபால் மூல வாக்களிப்பின் போது வாக்களிப்பை புகைப்படம் எடுத்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தரவேற்றம் செய்வது முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செயற்படும் ஊழியர்களை கண்டறிந்து நட…

  15. Thursday, October 31, 2019 - 5:39pm வெளிநாடு சென்ற வாக்காளர்கள் ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதற்கு வரும்போது, தேசிய அடையாள அட்டையுடன் தங்களது கடவுச்சீட்டையும் கொண்டுவர வேண்டுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறான வாக்காளர்கள் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க முடியாது போனால், மற்றுமொரு செல்லுபடியாகும் அடையாள ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகுமெனவும், தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆவணத்தையும் சமர்ப்பிப்பது கட்டாயமென,தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வாக்காளர்களின் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கடந்த வர…

    • 0 replies
    • 371 views
  16. இன்றைய தினம் அரசு ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பில் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலையில் இருந்து நுவரெலியா வலயக்கல்வி காரியாலயத்திற்கு தபால்மூல வாக்களிப்பிற்கான ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று லிந்துலை பகுதியில் வைத்து இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது . இச்சம்பவமானது இன்று பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது . தலவாக்கலை நுவரெலியா A7 பிரதான வீதியின் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை பிரதேசத்தில் அமைந்துள்ள சமூர்த்தி வங்கிக்கு அருகாமையிலேயே குறித்த தனியார் பஸ் கல் வீச்சிக்குள்ளானது. இதில் பயணித்த எவருக்கும் எவ்விதமான காயங்களும் ஏற்படாத போதிலும் பஸ்ஸின் கண்ணாடி பகுதி அளவில் சேதம் அடைந்த…

  17. யாழ்ப்பாணம் வேம்படி இந்து மகளிர் கல்லூரிக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் பெயரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமையால் அங்கு இன்று (31) பெரும் பரபரப்பான நிலை தோன்றியது. யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள வேம்படி மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டு கல்லூரிக்கு கடிதம் ஒன்று அனுப்ப்பட்டுள்ளது. அப்போது குறித்த கல்லூரியின் அதிபர் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார் என்று தெரிவித்து அவரது வீட்டு முகவரி தபால் ஊழியரிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த கடிதம் முன்னாள் அதிபரின் வீட்டில் ஒப்படைக்கப்பட்டது . கடிதத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் அதிபர் அதனை வாசித்தபோது வேம்படி மகளிர் கல்லூரியில் அடுத்த மாதம் குண்டுவெடிப்பு தாக்குதல் இடம்பெறவுள்ள…

  18. “ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்கு வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகலாம்” நாட்டில் நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்குள்ள பல கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது தேர்தல் களத்தை சூடேற்றியுள்ளது. பலர் ஜனாதிபதி வேட்பாளராக வரும் போது ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுவார் என்பது குறித்து பலருக்கும் சட்ட விளக்கம் இல்லாத ஒரு நிலைமை காணப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு டெய்லி சிலோன் வாசகர்களுக்காக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத் அவர்களுடன் நடாத்திய விசேட நேர்காணலை இங்கே தருகின்றோம். கேள்வி : நாட்டில் காணப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டங்கள் பற்றி ? பதில் : இலங்கையில் இரண்டு…

  19. இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று தொடக்கம் 31 அக்டோபர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (அக்டோபர் 31ஆம் தேதி) நாளையும் (நவம்பர் 01ஆம் தேதி) நடைபெறுகிறது. இலங்கையில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 6,59,514 பேர் தகுதி பெற்றுள…

  20. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒரே நிலைப்பாட்டில் ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில் தமிழ் தேசிய பரப்பிலுள்ள ஐந்து கட்சிகளும் இன்று கூடி கலந்துரையாடினோம். எனினும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவராத நிலையில் நாளைய தினம் ஆரம்பமாகும் தபால்மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தாம் தமிழ் மக்களை கோர முடியாதுள்ளதாக மாணவர் ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. எனினும் தமிழ் மக்கள் தமது வாக்குரிமையை தவறாது பிரயோகிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. யாழ் மற்றும் கிழக்கு பல்கலை மாணவர்களின் தொடர் முயற்சியால் கொள்கையில் ஒன்றாக பயணிக்கும் ஐந்து தமிழ்கட்சிகள் இன்று 30.10.2019 புதன…

  21. வட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது – இராதாகிருஷ்ணன் வட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது. 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை அவர்கள் புறக்கணித்ததால் தமிழர்கள் பாரிய இழப்புகளையும் பல்வேறு துன்பத்திற்கும் உள்ளானார்கள். எனவே இந்த தேர்தலை சிந்தித்து அவர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க கூடிய கீழ்மட்ட மக்களின் வாழ்க்கையை நன்கு உணர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் வேண்டுக்கோள் ஒன்றை விடுத்துள்ளார். …

    • 1 reply
    • 937 views
  22. பஷீரும், ஹசனும் கோத்தாவுடன் இணைந்தனர் Oct 31, 2019 | 6:12by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் இரண்டு முன்னாள் முக்கிய பிரமுகர்கள், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகு தாவூத் மற்றும், அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலர் ஹசன் அலி ஆகியோரே, கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கவுள்ளதாக கூறியுள்ளனர். ஐக்கிய சமாதான கூட்டணி என்ற பெயரில் இயங்கும், அமைப்பின் தலைவராக பஷீர் சேகு தாவூத்தும், அதன் செயலராக ஹசன் அலியும் இருக்கி…

  23. சத்தியாக்கிரகத்தில் குதிக்கவுள்ளார் சிவாஜிலிங்கம் நீண்­ட­ கா­ல­மாக சிறை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு வலி­யு­றுத்தி எதிர்­வரும் 6ஆம் திகதி ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு முன்­பாக சத்­தியாக் கிரகப் போராட்­டத்தில் ஈடு­படப் போவ­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான எம்.கே.சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்தார். யாழ்ப்­பாணம் ஊடக அமை­யத்தில் நேற்று இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்கள் நம்பி வாக்­க­ளித்­தனர். எனினும் அவர் ஆட்­சிக்கு வந்தும் இன்­று­ வரை தமி­…

    • 2 replies
    • 865 views
  24. அமைச்சர் சம்பிக்கவை பிரதமராக்க நேற்றிரவு விசேட ஆலோசனைக் கூட்டம்- ஹிஸ்புல்லா தகவல் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சஜித் பிரேமதாசவின் அரசாங்கத்தில் பிரதமராக அறிவிப்பதற்கு நேற்றிரவு விசேட ஆலோசனையொன்று நடாத்தப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்தே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (30) திடீரென ஊடகவியலாளர்களைக் கூட்டி தானே பிரதமர் என அறிவித்ததாகவும் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். தற்பொழுது அரச தொலைக்காட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். அடுத்த பிரதமர் யார் என்பதை சஜித் பிரேமதாச இதுவரையில் எந்தவொரு இடத்திலும் அறிவிக்கவில்லை. இவ…

    • 0 replies
    • 573 views
  25. ஜனாதிபதி தேர்தலில் பிரதமரை தெரிவு செய்ய இயலாது - மனுஷ Published by J Anojan on 2019-10-31 14:21:09 (நா.தனுஜா) தனது அரசாங்கத்தில் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவிற்கு பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் என்பதைத் தவிர சஜித் பிரேமதாச வேறு பதவிகள் தொடர்பில் இதுவரை எதுவும் கூறவில்லை. அதேபோன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவிருப்பது நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மாத்திரமேயாகும். இதனூடாக பிரதமர் ஒருவர் நியமனம் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிந்த ஊடகவியலாளர் ச…

    • 0 replies
    • 314 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.