Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.ஆர்.எம்.வஸீம்) வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்வதற்காக அம்பாந்தோட்டை சுகீ தேசிய பாடசாலைக்கு வந்த வாகனமொன்றில் இருந்து வாக்குச்சீட்டுக்களுக்கு சமமான 58 போலி வாக்குச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதைத்தொடர்ந்து குறித்த வாகன சாரதி கைதுசெய்யப்படுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது, அம்பாந்தோட்டை முல்கிரிகல தேர்தல் தொகுதியில் இத்ததெமலிய வாக்களிப்பு நிலையத்துக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வதற்கு குறித்த வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரி மற்றும் உதவியாளர் வாக்குப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு குறித்த வேனுக்குள் ஏறியுள்ளனர். இதன்போது வாகன சாரதி ஆசனத்துக்கு அ…

  2. தாம் ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு சூழ்நிலையிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று நடந்த பரப்புரைப் பேரணியில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதற்கு தவறியதற்கு, பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். அங்கு உரையாற்றிய அவர், “எந்தவொரு சூழ்நிலையிலும், நான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டேன். யாருடைய பேச்சுக்கும் செவிசாய்த்து, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் சட்டங்களில் மோசமான மாற்றங்களைச் செய்ய மாட்டேன். வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் போது, நான் எந்த நிபந்தனைகளுக்கும் இணங்கவில்…

  3. தேர்தலில் தவறாது வாக்களியுங்கள்: ரட்ணஜீவன் ஹூல் Published by Loga Dharshini on 2019-11-15 14:22:33 (ரொபட் அன்டனி) நாட்டின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளை நடைபெற வுள்ள தேர்தல் வாக்களிப்பில் மக்கள் கட்டாயம் பங்கேற்கவேண்டும். மக்கள் எந்தவகையிலும் வாக்களிப்பை புறக்கணி க்கவோ பகிஷ்கரிக்கவோ கூடாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார். முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் மற்றும் நிகாப் அணிந்துகொண்டு செல்லலாம். ஆனால் வாக்களிக்கும்போது மட்டும் ஹிஜாப்பை நீக்கி முகத்தைக் காட்டவேண்டும். இது தொடர்பில் போலியான பிரசாரங்களுக்கு ஏமாறக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். நா…

  4. Published by Priyatharshan on 2019-11-15 17:04:15 (நா.தனுஜா) கோதுமைமாவின் விலை கூட்டப்படவோ அல்லது ஏதேனும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படவோ இல்லை. எமது நாடு மிகவும் முக்கியமானதும், நெருக்கடியானதுமான தேர்தலொன்றுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில் கோதுமைமாவின் விலையை அதிகரிப்பதென்பது திட்டமிடப்பட்ட சதி என்பதுடன், அது அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுவதுமாகும். எனவே உரிய அமைச்சு மற்றும் அதிகாரசபைகளின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் இவ்வாறான விலை அதிகரிப்பில் கோதுமைமா வழங்குநர்கள் எவரேனும் தொடர்புபட்டிருப்பின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தொழில், வர்த்தகம், இடம்பெயர்ந்தோருக்…

    • 0 replies
    • 267 views
  5. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான வாக்கெண்ணும் நிலையத்தின் பணிகளுக்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த அரச ஊழியர்கள் 51 பேர் உணவு விஷமானதால் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதையடுத்து ஏற்பட்ட நிலைமையின் பின்னர் குறித்த 51 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 4 சிவில் பாதுகாப்பு படையினரும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் கூறினர். இந் நிலையில் இந்த உணவு விஷமான விவகாரம் சதி நடவடிக்கையா அல்லது அதற்கான வேறு காரணிகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் விஷேட விசாரணைகளின் பொறுப்பு சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிர…

  6. ஒரு தகவல் கொடுத்தால் முகநூல் தடை அமுலுக்கு வரும்- தே.ஆ. தலைவர் 8:51 am November 15, 2019 0 186 Views ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார சூன்ய காலத்தில முகநூல் பக்கங்களில் பதிவுகளை இடுபவர்களையும், அந்தப் பதவுகளை வேறு முகநூல்களுக்கு பரிமாறிக் கொள்பவர்களையும் சட்டத்தின் முன் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேர்தல் பிரசாரம் சூன்ய காலப் பகுதியில் இணையத்தளமொன்றின் கீழ் செயற்படும் முகநூல் பக்கத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பாடல் ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த …

  7. கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி குறித்த பகுதியில் குடியேறியிருந்த மக்கள் முதன்முறையாக இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருந்தனர். இருப்பினும் தங்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுவிக்கவில்லை என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இரணைமாதா நகருக்கு சென்றே வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளபோதும் அவர்களுக்கான படகு வசதிகளோ வேறு எந்த வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர். யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் இரணைதீவு பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றது…

    • 5 replies
    • 639 views
  8. படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையின் 8வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இதன்படி, நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் தற்போது கொண்டு செல்லப்படுகின்றன. நாடு முழுவதும் 12,845 வாக்கெடுப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. முதல் முறையாக கார்டு போர்டுகளினால…

  9. வடக்கு, கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டத்திலும் வாக்குப்பெட்டிகளை கொண்டு சென்று வாக்களிப்பு நிலையங்களை தயார்ப்படுத்தும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இதன்படி, யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மத்திய கல்லூரியிலிருந்து ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுச் செல்லும் நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பமாகியுள்ளன. ஊர்காவற்றுறை, மானிப்பாய், கோப்பாய் காங்கேசன்துறை உள்ளிட்ட தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகளும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மன்னார் …

  10. மொத்த தேர்தல் செலவு ரூபா 5500 மில்­லியன்: ஒரு வாக்­கா­ள­ருக்­கான செலவு 344 ரூபா Published by Loga Dharshini on 2019-11-15 15:31:19 (எம்.எப்.எம்.பஸீர்) நாளை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான மொத்த செலவு 5500 மில்­லியன் ரூபா எனவும் அத­ன­டிப்­ப­டையில் ஒரு வாக்­கா­ள­ருக்­காக இம்­முறை தேர்­தல்கள் ஆணைக்குழுவால் 344 ரூபா செல­வி­ட­ப்படு­வ­தாக மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடும் நிலையில், அவர்கள் அனை­வரும் தேர்தல் பிர­சா­ரத்­துக்கு செல­விட்­ட­தாக மதிப்­பி­டப்­படும் மொத்த தொகை 10 ஆயிரம் மில்­லியன் ரூபா­வாகும். அதன்­படி ஒரு வாக­்காளர் தொட…

  11. (எம்.நியூட்டன்) தமிழ் வேட்ப்­பா­ள­ருக்கு தமிழ் மக்கள் தமது முதல் விருப்பு வாக்­கையும் இரண்­டா­வது விருப்பு வாக்கை தந்­தி­ரோ­பா­ய­மாக சிந்­தித்தும் வழங்­கலாம் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான தமிழ் சுயா­தீனக் குழு தமிழ் அர­சி­யலில் சிவில் சமூ­கங்கள் தலை­யி­டு­வது என்­பது தமிழ் ஜன­நா­ய­கத்தை மேலும் செழிப்­பாக்கும் எனத் தெரி­வித்­துள்­ளது. பேர­வையால் தொடக்­கப்­பட்ட ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான சுயா­தீனக் குழு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறிக்கை ஒன்­றினை வெளி­யிட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, பேர­வையால் தொடக்­கப்­பட்ட ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான சுயா­தீனக் குழு எனப்­ப­டு­வது தமிழ் அர­சி­யலின் மீதும் தமி…

    • 12 replies
    • 785 views
  12. தூர நோக்குடன் செயற்படும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் முன்மாதிரி மிக்க ஜனாதிபதி என்று மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளனர். திரிபீடகத்தை உலக நினைவுப் பதிவேட்டில் உள்ளடக்குவதற்கான விண்ணப்பத்தை தயாரிக்கும் நிபுணர் குழு, திரிபீடகத்தை பேணிப் பாதுகாக்கும் சபை, பௌத்த ஆலோ சனை சபை, பௌத்த புலமைத்துவ சபை, அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபை ஆகியவற்றை பிரதி நிதித்துவப்படுத்தும் மகாசங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்குமிடை யிலான சந்திப்பொன்று நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப் பின்போதே மகாசங்கத்தினர் இதனை தெரிவித்தனர். திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தி அதனை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை நாட்டின் பௌத்த சாசனத்…

    • 1 reply
    • 337 views
  13. கிளிநொச்சி இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிப்பு நிலையம் இல்லை கிளிநொச்சி – இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் இரணைதீவு பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றது. குறிப்பாக கடந்த காலங்களில் வானூர்தியில், படகுகளில் வாக்களிப்பு பெட்டிகள் கொண்டு வரப்பட்டு தேர்தல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தங்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுவிக்கவில்லை என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.அவர்கள் இரணைமாதா நகருக்கு சென்றே வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளபோதும் அவர்களுக்கான படகு வசதிகளோ வேறு எந்த வசதிகளோ செ…

  14. வடமாகாண மக்களுக்கு போக்குவரத்தில் உலகதர சேவையை வழங்கலே எனது கனவாகும்- வடக்கு ஆளுநர் வடமாகாண மக்களுக்கு போக்குவரத்தில் உலகதர சேவையை வழங்கலே எனது கனவாகும் என்று தனியார் பஸ் துறையில் புரட்சிகர வலையமைப்பு சேவையின் அறிமுக நிகழ்வில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.வரையறுக்கப்பட்ட யாழ் தூர சேவை பஸ் உரிமையாளர்களின் நிறுவன அனுசரணையுடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த அறிமுக நிகழ்வில் பஸ் உரிமையாளர்களுக்கான பற்றுச்சீட்டு இயந்திரம் ஆளுநரினால் வைபவ ரீதியாக வழங்கப்பட்டன. ஆளுநர் இங்கு குறிப்பிடுகையில், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பஸ்பயணத்தின்போது விசேட பஸ் கட்டண கழிவுகள் வழங்கப்படவேண்டும் என்பதுடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்க…

  15. ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் வேட்பாளர் ஒருவருக்கோ அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகளையோ வாக்குச் சீட்டில் அடையாளமிட முடியும். குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவத…

  16. Share0 சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை (டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார். நேற்று (13) கோத்தாபயவின் தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார். மேலும், தமிழர்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா முஸ்லிம்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா என்ற போட்டி கிழக்கு மாகாணத்தில் நிலவுகிறது. இதில் கிழக்கு மாகாண மக்கள் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டு…

    • 4 replies
    • 572 views
  17. மில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகளால் அமெரிக்கா கவலை Published by T. Saranya on 2019-11-14 16:07:25 (லியோ நிரோஷ தர்ஷன்) மில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் உண்மைக்கு முரணான போலி செய்திகள் இலங்கையில் காணப்படுவதையிட்டு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஹெய்டி நாட்டில் மில்லேனியம் சவால் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றது. அவ்வாறனதொரு அமெரிக்க திட்டம் ஹெய்டியில் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை , மில்லேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற சில முக்கிய திட்டங்கள் குறித்தும் அமெரிக்க தூதரகம் விளக்கியுள்ளது …

  18. எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி. வி. கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் , உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார், இங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராஜா, தமிழ்த் தேசிய…

    • 12 replies
    • 1.3k views
  19. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவ பதவி விலக வேண்டும் என கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா பொலிஸாரல் கைது செய்யப்பட்டார். கொழும்பு மாவட்ட வாக்காளர்களின் விபரத்தை கோரிய போது அது சிங்கள மொழியில் தரப்பட்டதாகவும், அது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்ட போது , தமிழில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியபோதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதமையால், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என கோரி இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மாவட்ட செயலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். அதனையடுத்து தேர்தல் கடமைக்காக மாவட்ட செயலகத்தில் கடமையில் இருந்த பொலிஸார் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதற்கு அவர்…

  20. வாக்களிக்க செல்லும்போது மொட்டு சின்னத்தை பார்த்தால் தமிழர்கள் வெறுப்படைய வேண்டும். கடந்தகால அநியாயங்களை மறந்து மொட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழனும் ஈனப்பிறவிகள் என்றே கருதப்படுவர் என டெலோ அமைப்பின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மாபெரும் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார். அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு வருகைதந்த அவரை பெருந்திரளான மக்கள் ஒன்றினைந்து வரவேற்றனர். அவர் தொடர்ந்தும் உரைய…

  21. இலங்கையில் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு?

  22. போதைவஸ்து கடத்துவதில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை கொடுத்தே தீருவேன் எனக் கூறிவந்த ஜனாதிபதி அவர்கள் அந்தப் போதைவஸ்துக்கு அடிமையாகி ஒரு பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து மரண தண்டனை விதிக்கபட்டவருக்குப் பொது மன்னிப்பினை வழங்கியது அதிர்சியைத் தருகிறது. இந்தப் பொது மன்னிப்பில் நியாயம் கண்ட ஜனாதிபதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சத்தியானந்தம் ஆனந்த சுதாகரன் அவர்களின் குழந்தைகள் இருவரும் தாயின் மரணத்தின் பின் அனாதைகளான நிலையில் அந்த இரு குழத்தைகளினதும் உருக்கமான வேண்டுகோளில் நியாயம் காணத் தோன்றாதது ஏன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னித் தேர்தல் மாவட்ட அமைப்பாளருமான ஜனகன் விநாயகமூர்தி அவர்கள் கேள்வி எழுப்பி …

    • 11 replies
    • 1.2k views
  23. “நாங்கள் கோதபாயவிற்கு அஞ்சுகிறோம்” – சண்டே ஒப்சேர்வர் தலையங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் நாட்டின் நாடித்துடிப்பை வெளிப்படுத்தும் தென்னிலங்கை ஆங்கில ஊடகங்கள் தங்கள் ‘பிரசாரத்தை’ அமைதியாகவே செய்து வருகின்றன. பெரும்பாலானவை பொதுஜன பெரமுன வேட்பாளரான கோதபாயவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்தாலும் பகிரங்கமாக அவரை விமர்சிக்க அஞ்சுகின்றன. இச் சூழலில் இந்று வெளியான ‘சண்டே ஒப்சேர்வர்’ மிகவும் உருக்கமான தலையங்கமொன்றை எழுதியிருக்கிறது. அதைத் தமிழிலாக்கி மீளப் பிரசுரிப்பது தேவையென்று கருதுகிறோம். We fear Gotabaya கோதபாய சஜித்தின் பகிரங்க விவாத அழைப்பை நிராகரித்து விட்டார். தனக்கு வேலை தான் முக்கியமே தவிரப் பேச்சல்ல என்பது அவ…

    • 14 replies
    • 1.8k views
  24. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்? முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ் 18 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image captionமக்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்தார் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெருமளவில் மைத்திரிபால …

  25. அமைதிப்படையில் இணைய மாலிக்கு புறப்பட்டது இலங்கை இராணுவ அணி மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையணியில் இணைந்து கொள்ள, 243 இராணுவ வீரர்கள் அடங்கிய இலங்கை இராணுவ அணி இன்று (புதன்கிழமை) காலை புறப்பட்டு சென்றது. விஜயபாஹு காலாட்படை படைப்பிரிவின் 20 அதிகாரிகளும், 203 மருத்துவ, பொறியியல் மற்றும் சிப்பாய்கள், அதிகாரிகள் அடங்கிய 223 பேரைக் கொண்ட குழுவே பயணமானது. இவர்களிற்காக எத்தியோப்பியன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767- 300 விமானத்தை ஐக்கிய நாடுகள் சபை ஒதுக்கியிருந்தது. அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கை இராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை 3.20 மணிக்கு விமானம் புறப்பட்டது. அமைதிப்படையில் இணையும் இராணுவ அணியை வழியன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.