Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு உதவுவது என்றால் என்ன பொருள் பிரதமரே? அழகாக வார்த்தைகளைக் கோர்த்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, உண்மையையும் குழி தோண்டிப் புதைத்து, மக்களையும் ஏமாற்றி, பிரச்சனையையும் திசைதிருப்பும் வல்லமை பெற்றவர் நமது பாரத நாட்டின் பிரமதராக வாய்த்துள்ள மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் ஆனாலும், காமன்வெல்த் போட்டிகளில் நடந்த மெகா ஊழல் ஆனாலும், அதில் தான் நேரடியாக சம்மந்தப்படவில்லை என்பதையும், அதற்கு அந்தத் துறை அமைச்சர் மட்டுமே பொறுப்பானவர் என்பதையும் நிரூபித்ததில் அவருடைய இந்த வார்த்தை சாமர்த்தியம் அகில இந்திய அளவில் ஊடகவியலாளர்கள் அனைவரையும் அபாரமாக குழப்பியது. அதிலிருந்து தெளிந்து அவர்கள் அடுத்த கேள்வி கேட்பதற்குள் அவ…

    • 0 replies
    • 1.7k views
  2. காவல்துறை அதிகாரத்தை மத்திய அரசுடன் பேசி வடக்கு மாகாண சபை பெற்றிருக்கலாம் : டக்ளஸ் December 1, 2018 காவல்துறை அதிகாரம் உள்ளிட்டவற்றை மத்திய அரசாங்கத்துடன் பேசி பெற்றிருக்கமுடியும் என்று மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்தமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் தமது கட்சியின் நிலைப்பாட்டை பல வருடங்களிற்கு முன்னதாகவே தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ள அவர் மாகாண சபையை நிர்வகித்தவர்கள் தமது அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காகவே காலத்தை கடத்தியதாகவும் மத்திய அரசாங்கத்துடன் இது தொடர்…

  3. Published By: DIGITAL DESK 3 19 OCT, 2023 | 05:24 PM (நா.தனுஜா) இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலமானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் மற்றும் விசேட அறிக்கையாளர்கள், இச்சட்டமூலத்தின் பெரும்பாலான சரத்துக்கள் சமூகத்தின் மத்தியிலிருந்து பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டுவருவதற்குப் பின்பற்றப்படவேண்டிய சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக்கொண்ட செயன்முறைக்கு முற்றிலும் மாறுபட்டவையாகவே அமைந்திருப்பதாகக் கரிசனை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப்…

  4. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானச்சேவையை இலங்கையின் சுமை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வர்ணித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த விமானச்சேவை எங்கள் நாட்டிற்கு பெரும் சுமை, உலகில் வேறு எந்த விமானச்சேவையும் இவ்வளவு சமையாக விளங்கவில்லை. எங்களுக்கு சொந்தமாக ஒரு எயர்பஸ் கூடயில்லை, ஸ்ரீலங்கன் எயர்லைன்சிடம் சில பேருந்துகளும், லொறிகளும் மாத்திரம் உள்ளன, சாதராண போக்குவரத்து நிறுவனத்திடம் இதனை விட அதிகமான வாகனங்களிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118263/language/ta-IN/article.aspx

  5. 28 OCT, 2023 | 02:02 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் 30 ஆபத்தான மேம்பாலங்களும், 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளும் காணப்படுகின்றன. மேம்பாலங்களை நிர்மாணிப்பதாயின் 350 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இருப்பினும் 200 கோடி ரூபாயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும் இவற்றை புனரமைக்க போதுமான நிதி இல்லை எனவும் நிதியை ஈட்டுவதற்கான பிரதான மூலம் வரியை அதிகரிப்பதாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு செல்லும் மேம்பாலம் சேதமடைந்துள்ளதால் அதனை புனர்நிர்மானம் செய்தவற்காக ஜனாதிபதி 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியிருந்ததுடன் அத…

  6. புலிகளின் விமான பலத்தை ஒழிக்க அமெரிக்கா - இந்தியா வழங்கிய அறிவுறுத்தல்கள் [07 - June - 2007] ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆராய்ந்து மதிப்பீடு செய்வதற்காகவும் அதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசு புலிகள் இயக்கத்துடனான யுத்தத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை பற்றிய அறிவுறுத்தல்களை வழங்குவதற்காகவும் அண்மையில் ஸ்ரீலங்காவுக்கு வந்திருந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை வல்லுனர்களும் இந்திய பாதுகாப்பு வல்லுனர்களும் புலிகள் இயக்கத்தின் யுத்த பலத்தை ஒழிப்பதற்கு அரசு எடுக்கவேண்டிய உடனடியான நடவடிக்கைகள் பற்றிய சிபாரிசுப் பட்டியல்களுடன் தமது பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகளை ஸ்ரீலங்கா அரசுக்கு சமர்ப்பித்துவிட்டதாக ஞாயிறு லங்கா தீபவுக்கு அறிவிக்கப…

  7. ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் :டோக்ரா ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட, கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று சிறைத்துறை இயக்குனர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. டோக்ரா தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற விடுதலைப்புலிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து விட்டார். இதனால் அவர்கள் 3 பேரும் தூக்கில் போடப்படுவது உறுதியாகி விட்டது. இதற்கிடையில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மீண்டும் கோர்ட்டுக்கு போவோம் என்று வக்கீல் புகழேந்தி அறிவித்துள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கு தூக்கு தண…

  8. திருமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக சிங்கள இராணுவத்தில் புதிய படையணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் பிரிகேடியர் அத்துல கொடிப்பிலி தலைமையிலான 224ஆவது படையணி உருவாக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஹப்புஆரச்சி தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் வாழும் இடங்களையும் சிங்களமயப்படுத்த அவற்றினை இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரும் சிங்கள அரசாங்கத்தின் முயற்சியே இது என முஸ்லிம் மக்கள் கடிந்துகொள்கின்றார்கள். . முஸ்லிம் மக்கள் வாழ் பிரதேசங்களையும் இராணுவமயபப்டுத்துவதற்கான திட்டத்தின் கீழேயே கிறிஸ் பூதம் என்ற இரகசியபடைகளை நோன்பு காலத்தில் ஏவிவிட்டு மக்களை கோபமுறவும், பீதியடையவும் சிங்கள …

  9. சுன்னாகம் மற்றும் அதனையண்டிய பகுதிகளினில் நிலத்தடி நீர் நஞ்சூட்டப்பட்டமை தொடர்பிலான விழிப்புணர்வை அனைத்து மட்டங்களினில் ஏற்படுத்தவும் உண்மையை வெளிக்கொணரவும் ஊடகவியலாளர்கள் குழுமத்தினால் உருவாக்கப்பட்ட தகிக்கும் தண்ணீர் ஆவணப்படம் எதிர்வரும் 17ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. சுன்னாகம் மற்றும் அதனையண்டிய பகுதிகளினில் நிலத்தடி நீர் நஞ்சூட்டப்பட்டுள்ளமை உறுதியாகி வருகின்ற நிலையினில் யாழ்.ஊடக அமையத்தின் அனுசரணையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வாவணப்படம் அண்மைக்காலங்களினில் வடக்கினில் தயாரிக்கப்பட்டுள்ள விடயம் சார் ஆவணப்படங்களினில் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது.யாழ்ப்பாணத்தின் முன்னணி இளம் ஊடகவியலாளர்களுள் ஒருவரான ஜெராவின் நெறியாள்கையினில் இவ் ஆவணப்படம் …

  10. 17 NOV, 2023 | 06:30 PM கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பல் (INS) கோரா இன்று வெள்ளிக்கிழமை ( 17) இந்தியாவிற்கு புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படை மரபுகளுக்கு அமைய குறித்த கப்பலை வழியனுப்பி வைத்தனர் . 91.1 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலானது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணை கப்பலாகும். கோரா கப்பலின் கட்டளை அதிகாரியான கொமாண்டர் ஆர்.எம். நம்பியர், ரியர் அட்மிரல் சமன் பெரேராவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த கப்பலில் வருகை தந்திருந்த இந்திய கடற்படையினர் நாட்டில் இருந்த போது கொழும்பில் உள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. …

  11. யா. புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்ட்ட பாடசாலை விளையாட்டு மைதான சுற்றுமதில் கையளிப்பும் விளையாட்டு விழாவும் எதிர்வரும் 21.04.2015 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் அதிபர் திரு. ச.கணேஸ்வரன் அவர்களது தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு. இ.இளங்கோவன் (செயலாளர், ஆளுநர் அலுவலகம், வட மாகாணம்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. ஜீ.வீ. இராதாகிருஸ்ணன் (ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர்), திரு. ரி.ஜோன்குயின்ரஸ் (வலயக் கல்வி அலுவலகம், தீவகம்), திரு. பொ.சிவானந்தராசா (கோட்டக்கல்விப் பணிப்பாளர், வேலணை), திரு. கா.குகபாலன் (ஓய்வுநிலை பேராசிரியர்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வில் கௌர…

  12. 1 Min Read December 27, 2018 கடந்த 21 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் பல கிணறுகள் வெள்ளத்தினால் மூடப்பட்டு காணப்பட்டது. இதனால் சுகாதாரமான நீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் கிளிநொச்சியில் உள்ள படையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்அந்த வகையில் இன்று(27) படையினரும், கடற்படையினரும் இணைந்து இப் பணியைமுன்னெடுத்தனர். கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வெள்ள நீர் கலந்த மக்கள் பாவணை கிணறுகளை துப்பரவ…

  13. விடுதலைப்புலிகளிடம் இராணுவப்பயிற்சி பெற்ற சிங்கள இளைஞர்கள் வெலிக்கடசிறைச் சாலையில் வீரகேசரி இணையத்தளப்பிரிவு விடுதலைப்புலிகளிடம் இராணுவப்பயிற்சி பெற்றுக்கொண்ட என்ற சந்தேகத்தின் பேரில் புரட்சிகர விடுதலை இயக்க ஆரம்பித்துள்ள தென் பகுதியை சேர்ந்த சிங்கள இளைஞர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டடுள்ளனர் கைது செய்யப்பட்ட இவர்கள் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் கொழும்பு மேலதிக நீதிமன்ற உத்தரவையடுத்து இவர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். அதே வேளை ஏற்கனவே விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 மலையக இளைஞர்கள் வெலிக்கடை சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்

  14. சிறிலங்கா அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல் – வாயைப் பிளந்த மங்கள சமரவீர APR 25, 2015by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்கு அருகே தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் மங்கள சமரவீர, ருவான் விஜேவர்த்தன மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரைக் கொண்ட குழு, சென்று, பேச்சுக்களை நடத்தி விட்டுத் திரும்பியுள்ளது. அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சன், வளைகுடாவில் பாதுகாப்பு பணியை முடித்துக் கொண்டு, தாய்த்தளமான, ஹவாயில் உள்ள சான் டியாகோ நோக்கிச் சென்ற போதே, சிறிலங்கா, குழுவினர், அங்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். சிறிலங்காவில்…

    • 0 replies
    • 1.7k views
  15. 'கணவன், பிள்ளை, சகோதரன் மீண்டும் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் காணாமல் போனவர்களின் சொந்தகள் நாள் தோறும் செத்து பிழைக்கின்றனர்' காணாமல் போனவர்களின் உறவினர்கள் வெலிக்கடை மற்றும் பூசா தடுப்பு முகாம்களில் தங்களது உறவினர்களை தேடுவதற்கு அனுமதியளிக்கப்பட உள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இதன்படி, கடத்தப்பட்டவர்கள் காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள பூசா மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலை தடுப்பு முகாம்களுக்கு உறவினர்கள் நேரில் சென்று விபரங்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்ளுக்கும் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது. காணாமல் போனவர…

    • 0 replies
    • 302 views
  16. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஐ.தே.க. அமைக்கும் பொதுக்கூட்டணிக்கு இ.தொ.கா., மு.கா. ஆதரவு வீரகேசரி நாளேடு பதவியில் உள்ள அரசாங்கத்தை கவிழ்த்து புதிய ஆட்சியை மலரச் செய்யும்வகையில் பொதுக்கூட்டணி அமைக்கும் ஐ.தே.க.வின் முயற்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முழுமையான ஆதரவினை வழங்கும் என்று நம்புகின்றோம். அதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் பலர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அரசாங்கத்தில் நம்பிக்கையிழந்து விரக்தியில் இருக்க…

  17. புதிய‌ அர‌சிய‌ல் திருத்த‌த்தின் மூல‌ம் வ‌ட‌க்கையும் கிழ‌க்கையும் மிக‌ இல‌குவாக‌ இணைக்க‌ முடியும் என்ப‌தால் அங்குள்ள‌ சிங்க‌ள‌, ம‌ற்றும் முஸ்லிம் ம‌க்க‌ள் அடிமைப்ப‌டுத்த‌ப்ப‌டுவார்க‌ள் என‌ முஸ்லிம் உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி குறிப்பிட்டார். புதிய‌ யாப்பு ச‌ம்ப‌ந்த‌மாக‌ க‌ட்சி உய‌ர் பீட‌ உறுப்பின‌ர்க‌ளுக்கு தெளிவு ப‌டுத்தும் கூட்ட‌த்திலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ‌ர் மேலும் கூறிய‌தாவ‌து, சும‌ந்திர‌னால் முன் வைக்க‌ப்ப‌ட்டிருக்கும் புதிய‌ அர‌சிய‌ல் யாப்பு ந‌க‌லின் ப‌டி இரு மாகாண‌ங்க‌ளின் முத‌ல‌மைச்ச‌ர்க‌ள் விரும்பினால் இரு மாகாண‌ங்க‌ளையும் இணைக்க‌ முடியும் என்ப‌தாகும். இது பாராளும‌ன்றில் ஏற்க‌ப்ப‌ட்டு புதிய‌ அர‌சிய‌ல‌மைப்பு உருவாக்க‌ப்ப…

    • 0 replies
    • 695 views
  18. 1975 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் சாவொறுப்புப் பெற்ற யாழ்ப்பாணத்தின் மேயரான அல்பிரட் துரையப்பாவின் மருமகனான கொழும்பில் பிறந்த நிஷான் துரையப்பா, தற்போது கனடாவின் பீல் கோட்டத்தின் காவல்துறையின் தலைமையராக இருந்து இலங்கைக்கு வருகை புரிந்துள்ளார். அவர் இங்கு காவல்துறை தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் உண்ணோட்டமிட்டார். பின்னர் அவர் துணை காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். திரு நிசான் துரையப்பா தான் பிறந்த வீட்டிற்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். https://www.sundaytimes.lk/231231/news/duraiappahs-nephew-glad-to-be-back-home-543904.html

  19. இராவணேசுவரம் ஆலயத்தில் -செந்தமிழில் திருக்குடமுழுக்கு!! யாழ்ப்பாணம் பொன்னாலைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்துக்கு முன்னால் இரவோடு இரவாக திடீரெனத் தோன்றிய லிங்கத்துக்கு, இராவணேசுவரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இராவணேசுவரம் ஆலயம் சைவமகாசபையின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு இன்று காலை செந்தமிழில் திருக்குடமுழுக்கு இடம்பெற்றது. ஈழத்தை ஆட்சிசெய்த தமிழ் மன்னனான சிவபக்தன் இராவணேசுரன்…

  20. கொழும்பில் மாணவர்கள் போராட்டம்- காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீச்சு [திங்கட்கிழமை, 30 யூலை 2007, 16:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்த ராஐரட்டை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீர் பாய்ச்சியும் கலைத்தனர். லிப்டன் சுற்றுவடத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் முழக்க பதாகைகளையும் முழக்கமிட்டு தமது ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பல்கலைக்கழகத்திற்கான போதுமான வளங்கள், விடுதி வசதி ஆகியவற்றைப் பெறுத்தர ராஜரட்டை பல்கலைக்கழக நிர்வாகமோ அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ முன்வரவில்லை என்று கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப…

  21. ஏர்ணாக்குளம் மாவட்டம் கொத்தமங்களம் பிரதேசத்தில் 37 இலங்கையர்களை கேரள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று காலை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 26 ஆண்களும், 7 பெண்களும் மற்றும் 4 சிறுவர்களும் உள்ளடங்குவதாக கேரள பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாடகை வீடொன்றில் குடியிருந்து வந்த நிலையிலேயே குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு அகதி முகாம்களில் இருந்து கொத்தமங்களம் பிரதேசத்துக்கு வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள புலனாய…

  22. சென்னை மெரினா கடற்கரையில் மாற்றம் மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் அணிவகுக்கு ஒன்று நடை பெற்றது. அவ் நிகழ்வில் இலங்கை, இந்தியா உலக வல்லாதிக்க நாடுகளின் துணை கொண்டு படுகொலை செய்யப்பட்ட்ட போராளிகளுக்கும் ,மக்களுக்கும் மாணவர்கள் அணிவகுக்கு மரியாதையோடு மலர் அஞ்சலி செலுத்தி பின்னர். இதில் உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் உட்பட பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். http://www.pathivu.com/news/40132/57//d,article_full.aspx

    • 0 replies
    • 635 views
  23. பிரபா,ரணில் செயற்பாடுகள் ஒரு நிகழ்ச்சித் திட்டத்திலேயே! குருநாக்கல் கூட்டத்தில் ஜனாதிபதி 'எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், விடுதலைப் புலிகளின் தலவர் பிரபாகரனும் ஒரே நிக்ழ்ச்சித்திட்டத்திலேயே - ஒரே சிந்தனையிலேயே - செயற்படுகின்றார்கள் என்பது இன்று மக்களுக்கு நன்றாகத் தெரிகின்றது." இவ்வாறு தெவித்திருக்கின்றார் ஜனாதிபதி. நேற்று முன் தினம் குருநாக்கலில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் "மக்கள் மேடை" பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு :- நாடு பிளவுபடுவதை நாம் உறுதியோடு தடுத்து நிறுத்தியிருக்கினறோம். அதேசமயம் நாட்டை அபிவிருத்தி செய்து, கட்டியெழுப்பவும் காத்திரமான …

    • 0 replies
    • 1.3k views
  24. 16 நாடுகளுடன் இணைந்து நடத்தும் பாரிய போர்ப்பயிற்சி – சிறிலங்கா கழற்றி விட்டது இந்தியா Monday, October 3, 2011, 10:20 இந்திய இராணுவம் 16 நட்பு நாடுகளின் படைகளுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள பாரிய போர்ப்பயிற்சியில் பங்கேற்க சிறிலங்கா இராணுவத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1.13 மில்லியன் படையினரைக் கொண்ட இந்திய இராணுவம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நட்பு நாடுகளுடன் இணைந்து பாரிய அளவிலான போர்ப்பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது. நட்பு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தக் கூட்டுப் போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா, மொங்கோலியா, கசாக்ஸ்தான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.