Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 8000 வெளிநாட்டவர்களை நாடு கடத்த தயாராகும் சிறிலங்கா நுழைவிசைவு காலாவதியான நிலையில், சிறிலங்காவில் தங்கியுள்ள 8000 வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்குத் தேவையான நிதி மற்றும் ஒழுங்குகளைச் செய்வதற்கு, அமைச்சரவையின் ஒப்புதலை உள்நாட்டு விவகார அமைச்சு கோரவுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர், நுழைவிசைவு காலாவதியான பின்னரும், சிறிலங்காவில் தங்கியுள்ள 7900 வெளிநாட்டவர்கள் பற்றிய தரவுகளை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வு அலகு கண்டறிந்துள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்தார். “இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா நுழைவிசைவில் வந்தவர்கள். தற்போது விடுதிகள் கட்டுமானத் துறைகளில…

  2. தீர்வுக்கான முழுமையான பொறுப்புக்கூறலை இந்தியா வழங்க வேண்டும் : செல்வம் அடைக்கலநாதன் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும். தீர்வுக்கான முழுமையான பொறுப்பு கூறலை இந்தியா வழங்க வேண்டும் என குழுக்களின் பிரதி தலைவரும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஓருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இன்று (23.06) இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எங்களைப் பொறுத்தவரை 13 வது திருத்தச் சட்டம் ஒரு அடிப்படை. அது தீர்வல்ல. தீர்வு என்பது சமஸ்டியாகத் தான் இருக்க வேண்டும். ஒரு சிலரின் செயற்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைபின் மீது பொய்யான செய…

  3. போட்டியில் இருந்து விலகுகிறார் சிறிசேன சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், கட்சிக்கும், கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் அதிபர் தேர்தல் விடயத்தில் கௌரவமான முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அத்துடன், மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, அடுத்த அத…

    • 3 replies
    • 1.2k views
  4. கல்முனையில் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜனும் தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார். இந்நிலையில் கல்முனையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு தம…

    • 2 replies
    • 1.1k views
  5. யாழ்.மாநகர சபைக்கு புதிய உறுப்பினர்கள் June 23, 2019 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரு யாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து சுய விருப்பின் பேரில் விலகியதை அடுத்து அக் கட்சியின் பரிந்துரையில் புதிய உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்,மாநகர சபைக்கு தெரிவான அஜந்தா தனபாலசிங்கம் மற்றும் சுகந்தினி சிறிகரன் ஆகிய இரு உறுப்பினர்களும் கடந்த மே மாதம் தமது சுயவிருப்பின் பேரில் விலகியிருந்தனர் அவ்விரு வெற்றிடங்களுக்கும் அக்கட்சியின் சார்பில் டெய்சி பிலீப் ஜெயரஞ்சன் , தர்சிபா லவகீசன் ஆகியோரின் பெயர்கள் தேர்தல் ஆணையாளருக்கு பரிந்துரைக்கப்பட்டதனை அடுத்து அவர்கள் இருவரின் பெயர்களும் வர்த்தமானியி…

  6. UPDATE -சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதத்தலைவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மதத்தலைவர்களின் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதத்தலைவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கிறது. இந்நிலையில், போராட்டக்களத்திற்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவுள்ளதாக எமது பிர…

  7. இலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ்.! – வெளிவரும் புதிய தகவல் உயிர்களை தியாகம் செய்த ஜிகாதிகளை ஐ.எஸ் அமைப்பு அங்கீகரிக்க வேண்டும் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொண்டதனாலேயே ஈஸ்தர் தற்கொலை தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது எனவும் தாக்குதல் திட்டங்கள் தொடர்பாக ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை எனவும் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈஸ்தர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ள புலனாய்வு பிரிவு இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன்…

  8. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வரலாற்றைப் பார்க்கும் போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன . 1989 ம் ஆண்டு வர்த்தமானி ஊடாக அங்கிகாரம் வழங்கப்பட்ட பிரதேச செயலகத்தை செயற்பட விடாது தடுத்து வருகின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது கரவாகு வடக்கு உப பிரதேச செயலகமாக 31 கிராம சேவகர்கள் பிரிவை உள்ளடக்கி 1989ம் ஆண்டு வர்த்தமானி ஊடாக பிரசுரிக்கப்பட்டது முதல் இயங்கி வருகிறது. கரவாகு வடக்கு செயலகமும், நாவிதன் வெளி செயலகமும் இயங்க அன்றைய உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் தேவநாயகம் அம்பாறை அரச அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 1989ம் ஆண்டு ஜனவரி 12ம் திகதி இடப்பட்ட கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. …

    • 2 replies
    • 1.2k views
  9. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். பரிசுத்த பாப்பரசரைசந்திப்பதற்கு முன்னர் ரோமில் செய்தியாளர்களை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தனது உணர்வுகளை கண்ணீருடன் அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கணவர் ஒருவர் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் இழந்துள்ளார், நான் அவரை சந்திக்கசென்றவேளை தான் வேலையிலிருந்து வீடு திரும்பியவுடன் பிள்ளைகள் ஓடிவருவதை அவர் நினைவுகூர்ந்தார் இன்று அந்த வீடு வெறுமையாக உள்ளது என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளன எ…

    • 2 replies
    • 472 views
  10. இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம்.! இலங்கையில் விரைவில் ஆட்சியைப் பிடித்து காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தேசிய சுதந்திர முன்னணி கட்சியினர் சார்பில் விகாரமகாதேவி பூங்கா அருகே நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மகிந்த ராஜபக்சே, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இலங்கை அரசு பொறுப்பேற்காமல் தப்பிக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார். இலங்கையில் போர் காலம் முடிந்து 10 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக வசித்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது அந்த நி…

    • 9 replies
    • 1.5k views
  11. மட்டக்களப்பு இளைஞருடன் இரு பெண்கள் தப்பியோட்டம், இளம் பெண் கடத்தல் முயற்சி! அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் உடுவில் கிழக்கு கிராம அலுவலகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் பாலியல் தொழில் புரியும் விடுதியொன்று இயங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முற்பகல் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் தென்னிலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நால்வர், இளம் பெண் ஒருவரைக் கடத்த முற்பட்டுள்ளனர். இது தொடர்பில் அந்த இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸார், ஒருவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் 2 பெண்கள் உட்பட மூவர் தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவ…

    • 11 replies
    • 1.4k views
  12. தீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். கிழக்கு மாகாண சங்கைக்குரிய தேர்கள் அனைவரும் இவர்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டுமென ஒன்றிணைத்துள்ளோம் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தின் 6 ஆம் நாளாகிய இன்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உட்பட பல தேர்கள் கலந்து கொண்டு வாக்ககுறுதிளித்ததனை தொடர்ந்து போராட்ட வடிவம் மாற்றப்பட்டுள்ளத…

  13. (நா.தனுஜா) நீதிமன்றத்தை அவமதித்தமைக்காகக் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்த ஜனாதிபதியின் செயலை எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர். ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்ததாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி குற்றவாளியாகக் கண்டது. அவருக்கு ஆறு வருடங்களில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய 19 வருட கடூழிய சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்தது. எட்டு மா…

  14. June 22, 2019 நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற சகோதரர்கள் இருவரைக் காணவில்லை என்று வவுனியா காவல் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். குறித்த சிறுவர்கள் நேற்று முந்தினம் முதல் காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு பகுதியிலிருந்து வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணை ஒன்றிற்குச் சென்ற இருபிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தந்தை ஒருவர் …

  15. புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’ தமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் கொழும்பு வந்த இந்தியப் பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அவசரமாக அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்த இந்தியா …

    • 27 replies
    • 3k views
  16. கல்முனை உண்ணாவிரத்துக்கு பின்னால் இருப்பது அரசியல் சூத்திரதாரிகளே – ரவூப் ஹக்கீம் நாட்டில் பாரிய பாதுகாப்பு பிரச்சினை இருக்கின்ற சந்தர்ப்பத்தில், கல்முனையில் உண்ணாவிரதம் இருப்பதன் பின்னணியில் அரசியல் ரீதியான சூத்திரதாரிகள் இருக்கின்றதாகவும், அந்த அரசியல் சுத்திரதாரிகளுக்கு தேவையாக இருப்பது நாட்டின் சுமுக நிலமையை குழப்பி தொடர்ச்சியாக பதற்ற நிலையில் வைத்துக் கொள்வதாகும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். ஆவர் மேலும் தெரிவிக்கையில், அத்துரலிய ர…

    • 3 replies
    • 950 views
  17. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பெயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்(நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கல்முனை பிரதேசத்தில் 73 வீதமான முஸ்…

    • 4 replies
    • 1.3k views
  18. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறை அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறையென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாடு மீண்டும் சுமூகமான நிலைக்கு வந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, சில தூதரகங்கள், பாடசாலைகள் விடுத்த கோரிக்கைக்கமையவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். http://www.dailyceylon.com/184896/

    • 3 replies
    • 847 views
  19. அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வருமானால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்வதென காத்தான்குடி நகர சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை எவரிடமிருந்தும் அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வரவில்லை. அவ்வாறு வருமானால் அதற்கெதிராக காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைக்கு செல்லும் என காத்தான்குடி நகர சபையின் மாதார்ந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காத்தான்குடி நகர சபையின் 15வது மாதார்ந்த அமர்வு வியாழக்கிழமை இன்று காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமை…

    • 6 replies
    • 1.3k views
  20. பாரா­ளு­மன்­றத்தில் இரு நாள் விவாதத்தை கோரு­வ­தற்கு தமிழ்க் கூட்­ட­மைப்பு தீர்­மானம் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யுடன் பேச்சு நடத்­து­வ­தற்­காக புது­டில்லி செல்­வ­தற்கு முன்னர் இனப்­ பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தாம­த­மா­வது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தக் கோரு­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்மா­னித்­தி­ருக்­கின்­றது. நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தில் இத்­த­கைய முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நடை­பெறும் பாரா­ளு­மன்றக் கட்சித் தலை­வர்­களின் கூட்­டத்தில் இந்த இரண்டு நாட் கள் விசேட விவா­தத்­துக்­கான கோரிக்­கையை கூட்­ட­மைப…

    • 2 replies
    • 756 views
  21. கல்முனைக்கு ஆதரவு தெரிவித்து நாளை யாழில் கவனயீர்ப்பு போராட்டம் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. அகில இலங்கை சைவ மகா சபை இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக நாளை மதியம் 2 மணிக்கு இப்போராட்டம் இடம்பெறும் என சைவ மகாசபை அறிவித்துள்ளது. கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி சைவ, பௌத்த, கிறிஸ்தவ மதகுருமாரும் அப்பிரதேச பொது அமைப்புக்களின் பிரநிதிகளும் பொதுமக்களும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்சினைக்கு விரைந்து…

    • 2 replies
    • 552 views
  22. மன்னார் மாந்தை சந்தியில் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதி மீண்டும் இடை நிறுத்தம் June 22, 2019 மன்னார் மாந்தை சந்தியில் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு மன்னார் பிரதேச சபை வழங்கி இருந்த அனுமதியை மன்னார் பிரதேச சபை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது. குறித்த தோரண நுழைவாயில் அமைக்கும் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம். முஜாகிர் கையெழுத்திட்ட கடிதம் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில்,,,,, மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியில் தோரண நுழைவாயில் அமைக்க மன்னார் பிரதேச சபையினால் கடந்த 14 ஆம் திகதி வழங்கப்பட்ட அனுமதியின் பின்னர் ப…

    • 1 reply
    • 641 views
  23. மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் ஜூலை 2ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 46 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பெண்கள் பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் 8 வயது மாணவியை மலசல கூடத்துக்குள் வைத்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆசிரியர் உள்படுத்தினார் என்று பொலிஸாரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ய…

    • 2 replies
    • 496 views
  24. யாழில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள் யாழ் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது. அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா 50 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், வழக்கை வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். மேலும் நட்சத்திர விடுதிகள் மூன்றின் உரிமையாளர்கள் தம்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதால் அவர்களில் இருவருக்கு முறையே 21 ஆயிரம் ரூபா மற்றும் 15 ஆயிரம் ரூபா தண்டம் வ…

    • 5 replies
    • 1.6k views
  25. June 17, 2019 அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்துள்ளனர். கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களும்,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ சிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள்,அளகக்கோன் விஜயரெட்னம் கல்முனை மாநகரசபை உறுப்பினர், சந்திரசேகரம் ராஜன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.