Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் அதிகரித்துள்ள வன்முறை சம்பவங்கள் ; இதுவரை 11 பேர் கைது கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று இடங்களில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளையடுத்து கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று இரவு முற்படுத்தப்பட்டனர். அவர்கள் 10 பேரையும் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், அவர்களை அடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறும் அறிவுறுத்தினார். அத்துடன், கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தனுரொக் என்ற இளைஞர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரையும் எதிர்வரும் வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்க…

  2. போரை வழி நடத்திய தளபதியாக சுமந்திரன் எண்ணுகின்றார் ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள். போரை வழி நடத்திய தளபதியாக சுமந்திரன் தன்னை எண்ணுகின்றார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் 850வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் உண்ணாவிரத போராட்ட கொட்டகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஐ.நா பாதுகாப்பு சபையில் முக்கியமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளமையை கருத்திற்கொண்டு புதிதாக இணைத்தலைவிகள் மூவரை தெரிவு செய்துள்ளோம். மேலும் வடக்கு, கிழக்கை சேர்ந்த அந்தணர் ஒன்றியத்தை சேர்ந்த தலைவர்கள் அந்தணர்கள் பங்கு…

  3. மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் இலங்கை தோல்வியடைகிறது – நஸீர் அஹமட்! In இலங்கை June 18, 2019 9:33 am GMT 0 Comments 1247 by : Dhackshala மனங்களை வெல்லாது மதத்தை முன்னுரிமைப்படுத்தி வருவதால் தோல்வி அடைந்த நாடாக இலங்கை மாறி வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டில் அதிகாரபூர்வமற்ற அதிகாரிகளாக பேரின மதவாதிகள் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார். நாட்டின் சமகால நிலைமைகள் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில மேலும் தெரிவிக்கையில், “கடந்த 30 வருட காலமாக இடம்பெ…

    • 8 replies
    • 1.3k views
  4. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற சப்த கன்னிமார் ஆலய வளாகத்தை அபகரித்த இலங்கை இராணுவப் படையினர், குறித்த பகுதியில் பாரிய பௌத்த விகாரை ஒன்றை நிர்மாணித்து இருப்பதால் ஆலயத்தின் கிரியைகளை செய்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து இன்று வரை இந்த விடயம் தொடர்பாக பல தரப்பினரிடமும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் ஆலய கிரியைகளை செய்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட்டுவாக…

    • 0 replies
    • 599 views
  5. யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சர்வமத வழிபாடுகளில் இன்றையதினம் ஈடுபட்டனர். இதற்கமைய யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனையடுத்து நல்லுார் கந்தசுவாமி கோவிலிலும் விசேட பூஜைகளையும் இராணுவத்தினர் ஏற்பாடுசெய்திருந்தனர். யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர…

  6. June 17, 2019 கிழக்கு மாகாணம் திருகோணமலையில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திடீரென வைக்கப்பட்டுள்ள இந்த புத்தர் சிலை சிறுபான்மை மத மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத இன ஆக்கிரமிப்புகளால் திருகோணமலை நகரமும் மாவட்டமும் தனது அடையாளங்களை இழந்து வருகின்றது. 2005ஆம் ஆண்டு சமாதான காலத்தில் திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை தொடர்ந்து அங்கு பல முரண்பாடுகள் ஏற்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. திருகோணமலை நகர சபையின் அனுமதியின்றி, அமைதிக்கு பங்கம் விளை…

    • 5 replies
    • 1.6k views
  7. (எம்.ஆர்.எம்.வஸீம்) வடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டத்துக்கு முரணாகும்.அவர்களை பயங்கரவாத சட்டத்துக்கு கீழ் கைதுசெய்யவே நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பைத்தொடர்ந்து ஊடகவியலாளர் ஒருவர், வடமாகாண ஆளுனர், யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவை தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளமை தொடர்பில் கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து …

    • 4 replies
    • 774 views
  8. பிரபாகரனின் தீர்க்கதரிசனத்தினால் சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடிஸ்வரர்களாகிவிட்டனர் – அடைக்கலநாதன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனத்தினால் கடந்த காலத்தில் வடக்கில் இருந்து சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடிஸ்வரர்களாகிவிட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் ஒப்பிடமுடியாது என்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கருத்தை வரவேற்பதாகவும் …

    • 1 reply
    • 1.4k views
  9. வாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த In இலங்கை June 18, 2019 9:44 am GMT 0 Comments 1589 by : vithushan எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை எதிர்க்கட்சி தலைவராக இருந்த இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார் இதன் காரணமாகவே தான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டத…

    • 2 replies
    • 540 views
  10. 19 ஆவது திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி அதிகாரமற்றவர் – மனுஷ நாணயக்கார In இலங்கை June 18, 2019 11:12 am GMT 0 Comments 1033 by : vithushan 19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் அற்றவர் என பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கட்டுபடுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை ஜனாதிபதி ந…

  11. சலசலப்பின்றி நிறைவடைந்தது அமைச்சரவை கூட்டம்! In இலங்கை June 18, 2019 10:54 am GMT 0 Comments 1076 by : Dhackshala அமைச்சரவைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கடந்த வாரம் ஜனாதிபதியினால் அமைச்சரவை ஒத்திவைக்கப்பட்டது என்ற பரவலான கருத்து நிலவிவருகின்ற நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடியது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள ஸ்தாபிக்கப்பட்ட நாடா…

  12. தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாத அரசு மஹிந்தவுக்கு பில்லியன் ரூபாய்களை ஒதுக்குகிறது – ஜே.வி.பி. In இலங்கை June 18, 2019 9:24 am GMT 0 Comments 1267 by : vithushan குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்காத இந்த அரசாங்கம் அதிசொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு பில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களு…

  13. கோட்டாவின் மனுக்கள் நிராகரிப்பு – நாளை முதல் தொடர் விசாரணை In இலங்கை June 18, 2019 10:16 am GMT 0 Comments 1225 by : vithushan முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த இரண்டு மனுக்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. டீ. ஏ. ராஜபக்‌ஷ நினைவகத்தை நிர்மாணிக்க அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை இரத்துசெய்ய கோரி, கோட்டாபய ராஜபக்‌ஷ குறித்த மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) அந்த மனுவை நிராகரித்துள்ளது. …

  14. சவேந்திர சில்வாவிற்கு இராணுவத் தளபதி பதவி? 6 மாத கால பணி நீடிப்பு இலங்கை இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு ஜூன் 21ஆம் திகதி 55 வயது பூர்த்தியாகிறது. குறித்த தினத்தில் அந்த அதிகாரி ஓய்வு பெற வேண்டும் என்ற போதிலும், அவருக்கு மேலும் 06 மாத காலம் பணி நீடிப்பை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வரும் நவம்பர் 21ஆம் திகதி வரை சவேந்திர சில்வா பதவி நீடிப்பு பெறவுள்ளார் எனக் கூறப்படுகிறது. அத்துடன், இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவின் பதவிக் காலம் இவ்வருடம் ஓக்ஸ்ட் 18ஆம் திகதி வரை இருக்கிறது. அடுத்த இராணுவத் தளபதி பதவிக்கு பொறுத்தம…

    • 0 replies
    • 428 views
  15. அமைச்சுக்களை துறந்த, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மீண்டும் பதவியேற்பர்? June 18, 2019 அமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர், மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளைப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், கபீர் ஹஸீமும் அப்துல் ஹலீமும், தாங்கள் ஏற்கெனவே வகித்த அமைச்சுப் பொறுப்புகளை மீண்டும் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்விருவரைத் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் ஆகியோரும் முன்னர் இராஜாங்க அமைச்சுகளைப் பொறுப்பேற்றிருந்த நால்வரும் பிரதிய அமைச்சராகவிருந்த மற்றொருவருமான ஒன்பது பேர், ஏற்கனவே தமது பதவிகளை இராஜினாமா செய…

  16. கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள கான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த சிலர் சிலைகளை கண்டுள்ளனர். இது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. விரைந்து செயற்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸார் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளை மீட்டுள்ளனர். மோட்டர் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று புத்தர் சிலைகளை அங்கு வீசி விட்டுச் சென்றதை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த பிக்குமாரும் அந்தப் பகுதிக்கு சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இதுவொரு தி…

  17. ஆவா குழுவிற்கு, வடக்கு ஆளுநர் அங்கீகாரம்? – PTA ஐ பயன்படுத்தி உள்ளே போட வேண்டும்: கொதிக்கிறார் வாசு யாழில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஆவா குழுவினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தமை நாட்டின் சட்டதிட்டத்திற்கு முரணான விடையம் அன்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற சோசலிச மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,”யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவாகுழு என்பது ஆயுத குழுவாகும். அது அர…

  18. யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இளம்பெண் விரட்டிச் செல்லப்பட்டு கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரே இந்த பாதகத்தை அரங்கேற்றினார். அவரது சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்தார். காணிப் பிணக்கு காரணமாக உறவினர்களான அயலர்கள் இருவருக்கு இடையே நீண்டகாலமாக பிணக்குக் காணப்பட்டது. அதனைச் சாட்டாக வைத்து பெரிய தந்தையார் கத்தியுடன் சென்று பாடசாலைக்கு முன்பாக வைத்து பெறாமகனுக்கு வயிற்றில் …

  19. ரிஷாத்தை பாது­காக்க ரணிலின் தந்­திரமே இது..!: முஸ்லிம் அமைச்­சர்­களின் பதவி விலகல் நாடகமே என்கிறார் வாசு எஸ்.வினோத் முஸ்லிம் அமைச்­சர்­களின் பதவி விலகல் வெறும் நாடகம் என்­பது தற்­போது நாட்­டு­மக்­க­ளுக்கு தெட்­டத்­தெ­ளி­வாக புல­னா­கி­யுள்­ளது. ரிஷாத் பதி­யு­தீனை பாது­காக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் தந்­தி­ரமே இது. ரிஷாத் பதி­யுதீன் பாது­காக்­கப்­பட்­டதன் பின்னர் இது நிறை­வுக்கு வந்­துள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்கள் மீண்டும் தமது பத­வி­களை பொறுப்­பேற்­க­வுள்­ள­தாக வெளி­யா­கி­யுள்ள விடயம் குறித்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.…

    • 1 reply
    • 980 views
  20. June 17, 2019 தான் அணிந்திருந்த ஆடை ஒன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை காவற்துறையினர் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்திலுள்ள கொலங்கொட எனும் பிரதேசத்தை சேர்ந்த, 47 வயதுடைய மஸாஹிமா எனும் பெண் ஒருவரே இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணிகள் ஏ.எம்.எம். சறூக், பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க, ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன்ன, இந்த வழக்கை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்…

    • 2 replies
    • 1.2k views
  21. இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப்போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர். இறுதிப்போரின்போது சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஆனால், அந்த 12 ஆயிரம் பேரில் சிலருக்கு எதிராக வழக்கு த…

  22. அகதிகளை வெளியேற்றுவது பாரதூரமான மனித உரிமை மீறல்: சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையிலுள்ள வெளிநாட்டு அகதிகளை வலுக்கட்டாயமாக சொந்த நாட்டுக்கு வெளியேற்றுவது பாரதூரமான மனித உரிமை மீறல் என சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. ஆகையால் இலங்கை அரசாங்கம், அகதிகளை வெளியேற்றும் செயற்பாட்டை கைவிட வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் அனுசரணையுடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மையின முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் இலங்கையில் தங்க வைக்கப்பட்டனர். ஆனாலும் அண்மையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்…

  23. படையினரைக் கொன்றதாக குற்றச்சாட்டு – முன்னாள் புலிகளுக்கு எதிராக வழக்கு போர்க்காலத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவர் மீது வவுனியா மேல்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு இந்த மாதம் 24 ஆம் நாள் தொடக்கம் விசாரிக்கப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள், 18 கடற்படை அதிகாரிகள், 08 இராணுவத்தினர் என, விடுதலைப் புலிகளின் தடுப்பில் இருந்த 26 சிறிலங்கா படையினர் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர். அவர்களின் சடலங்களை அடையாளம் காண முடியவில்லை. புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்த புலிகளின் புலனாய்வு முகாமை கைவிடும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த போர்க்கைதிகள…

    • 1 reply
    • 839 views
  24. சிறிலங்கா அதிபர் கம்போடியா பறக்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இம்மாத இறுதியில் கம்போடியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கம்போடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்றே சிறிலங்கா அதிபர், இரண்டு நாட்கள் பயணமாக நொம்பென்னுக்கு செல்லவுள்ளார். எதிர்வரும் 26ஆம் நாள் அவர் கம்போடியாவுக்குப் புறப்பட்டுச் செல்வார் என்றும், 27ஆம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார் என்றும் அதிபர் செயலக தகவல்கள் கூறுகின்றன. கடந்தவாரம் தஜிகஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர், நேற்றைய தினமே நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/06/17/news/38568

    • 1 reply
    • 512 views
  25. குழப்பத்தில் சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள் அரச பாதுகாப்பு அதிகாரிகள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்கக் கூடாது என, சிறிலங்கா அதிபர் விடுத்துள்ள உத்தரவை அடுத்து, தெரிவுக்குழு விசாரணை நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதுகுறித்து தெரிவுக்கு உறுப்பினர்கள் நாளை சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்து, அவரது நிலைப்பாட்டை அறிந்து கொள்ளவுள்ளதுடன், தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயவுள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, பதவியில் இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹெமசிறி பெர்னான்டோ, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிஸ் உ…

    • 1 reply
    • 420 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.