Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோத்தாபயவின் குண்டர் படையணியால் – அதிர்கிறது யாழ் குடாநாடு:- 10 ஜூன் 2011 யாழ்ப்பாணத்தில் திடீரென முளைத்திருக்கும் கோத்தாபய ராஜபக்சவின் குண்டர் படையணியால் குடாநாடு அதிரத் தொடங்கியுள்ளது. தற்போது சாதாரண வேலிப் பிரச்சினைக்குக் கூட கோத்தபாய அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி மிரட்டல்; சம்பவங்கள் பல பகுதிகளிலும் இடம்பெறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இனந்தெரியாத நபர்கள் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு குடாநாட்டில் அச்சுறுத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த காலங்களில் இராணுவ துணை ஆயுதக் குழுக்கள் அல்லது படையினரின் புலனாய்வுப் பிரிவுகாரர்களே பொதுமக்கள் அல்லது பொது அமைப்புப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கோத்தபாய அலுவலகத…

  2. முக்கியமான கொலைகளுக்கு, கோத்தபாயவே காரணம்; மேர்வின் சில்வா. நாட்டில் இடம்பெற்ற மிக முக்கியமான கொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச காரணம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இரு சந்தர்ப்பங்களில் நான் ஊடகங்களுக்கு எதிராக கூடாத வசனங்களை பயன்படுத்திவிட்டேன். நான் யோசித்து, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவற்றை கூறவில்லை. என் அடிமனத்திலிருந்த கோபத்தினாலும் எனது ஆவேசமான செயற்பாட்டினாலும் நான் அவ்வாறு நடந்துகொண்டேன். அதற்காக சகல ஊடகங்களிடமும் முதலில் மன்னிப்பு கேட்டுகொள்கின்றேன். நான், ருகுணு பெலியத்தையைச் சேர்ந்த நல்லதொரு சிங்கள பௌத்தன். என்னிடம் வ…

    • 7 replies
    • 2.5k views
  3. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் இனந்தெரியாதோரால் தாக்குதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கிலுள்ள இந்த அலுவலகத்தின் மீது நேற்றிரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- நேற்று இரவு 11 மணியளவில் மேற்படி கட்சியின் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்று கட்சியின் பெயர் பலகையை அடித்து சேதப்படுத்தியுள்ளது. இதன்போது கட்சியின் வயதான உறுப்பினர் ஒருவர் அந்த அலுவலகத்திற்குள் இருந்துள்…

  4. தாயக உறவுகளையும் புலம்பெயர்ந்தோரையும் இணைக்கும் ஒரு தொலைக்காட்சி சேவை [01 - April - 2007] * 3 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்.ரி.ரி. தொலைக்காட்சிச் சேவை - வெளிவாசல் பாலன்- தமிழ்க் காட்சியூடகப் பரப்பில் முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன இரண்டு தொலைக்காட்சிகள். ஒன்று தமிழீழ தேசியத் தொலைக்காட்சி. மற்றது மக்கள் தொலைக்காட்சி. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி வன்னியைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது. தமிழகத்தில் சென்னையில் மையங் கொண்டியங்குகின்றது மக்கள் தொலைக்காட்சி. தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் பதினைந்துக்கு மேற்பட்ட தொலைக்காட்சிகளில் இருந்து வேறுபட்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. மற்றத் தொலைக்காட்சிகளின் ஒத்த தன்மைகளில் இருந்து விலகி வேறுபட்டிருப்ப…

  5. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது. இலங்கை தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து விட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்து விட்டு, அரசியல் தீர்வு எதையும் வெளியில் இருந்து யாரும் வற்புறுத்த முடியாது என்று திமிராக பேசி வருகிறது சிங்கள இனவாத ராஜபக்சே அரசு. சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு, தமிழர்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடிய தீர்வை உருவாக்குமாறு விடுத்த பெ…

  6. மாறிவரும் பருவநிலை இலங்கைக்கு அச்சுறுத்தல்: எச்சரிக்கும் உலக வங்கி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அதிகரித்துவரும் வெப்பநிலையும் மாற்றமடைந்துவரும் மழைக் காலங்களும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. படத்தின் காப்புரிமைWORLDBANK.ORG இந்த பருவநிலை மாற்றத்தால் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வாழ்க்கைத் தரமும் குறைந்துவிடக்கூட…

  7. சிறிலங்காவில் புதிய நம்பிக்கை – அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து JAN 28, 2015 | 1:06by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் ஜனநாயகம் குறித்த புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதுடெல்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நேற்று புதுடெல்லியில் 2000 வரையான இளைஞர்கள், புலமையாளர்கள், கல்வியாளர்கள் மத்தியில் உரையாற்றினார். இதன் போது அவர், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். “இந்தியர்கள் மட்டுமே, உலகில் இந்தியாவின் பங்கை தீர்மானிக்க முடியும் அதிகாரத்தைப் பொறுப்பேற்பதன…

  8. வெடுக்குநாறிமலைக்கு வந்த கூட்டுஎதிரணியுடன் பிரதேச மக்கள் முறுகல்! இனவாதச் செயற்பாடுகளை தூண்டும் முயற்சியா? October 3, 2018 தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் ,தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர ஆகியோர் இன்றைய தினம் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். அத்துடன் கூட்டு எதிரணியோடு சென்றிருந்த தொல்லியல் திணைக்களத்தைச்சேர்ந்த இருவர் முற்றுமுழுதாக சிங்களத்தில் வரலாற்றுக்களை திரிவுபடுத்தி பல பொய்யான தகவல்களை அவர்களுக்கு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் கூட்டு எதிரணியினருக்கும் ஆலயத்தை சூழ்ந்த மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டத…

  9. 2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையிலும், புத்தாக்க அடிப்படையிலும், எதிர்காலப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தூரநோக்குடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மாணவர்களை உருவாக்கும் வகையிலும் இலங்கையின் பல்கலைக்கழக கல்விமுறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். சர்வதேச தரத்திற்கு உள்ளூர் பல்கலைக்கழகங்களை தர முயர்த்த வேண்டும் என்பதுடன், 2030ஆம் ஆண்டளவில் பிராந்தியத்தில் சிறந்த பல்கலைக்கழகங்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கான கல்வி மறுசீரமைப்பு, கொள்கை உருவாக்கம் குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்…

  10. ஓமந்தை சோதனை சாவடி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது ஓமந்தை சோதனைச் சாவடி மீது இன்று செவ்வாய்கிழமை காலை மோட்டார் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது இன்று காலை 7.45 மணியளவில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட இவ் மோட்டார் தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் பலியானதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் காயமடைந்த இராணுவ வீரர்கள் வவுனியா பொறு வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார் இதனையடுத்து ஒமந்தை சோதனைச்சாவடி தற்காலிகமாக மூட்ப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புட் ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது http://www.tamilwin.com/

    • 1 reply
    • 908 views
  11. [Friday, 2011-06-24 11:22:55] சர்வதேச மன்னிப்புச்சபை ஐ.நா.தலைமை அதிகாரி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என்று பாலித கொஹண ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை ஐ.நா.தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபையின் ஐநாவுக்கான பணியகத்தின் தலைமை அதிகாரி சர்வதேச மன்னிப்பு சபையின் இணையத் தளத்தில் எழுதியுள்ள கட்டுரையொன்றிலேயே மேற்கண்ட விடயம் குறித்துப் பிரஸ்தாபித்துள்ளார். இலங்கையின் கொலைக்களம் காணொளி திரையிடப்பட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, காணொளியைப் பார்க்கும் போது கருத்திலெடுக்கக்கூடிய குறித்த சில வன்முறைகள் இடம்பெற்றிருக்கக்கூடும் என பாலித கொஹண ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததார். இலங்கையின்…

    • 3 replies
    • 1.9k views
  12. 140 மில்லியன் ரூபாய் இழப்பு – இலங்கை போக்குவரத்துச் சபையின் மனுவுக்கு, பதில் வழங்க மகிந்தவுக்கு உத்தரவு.. October 10, 2018 140 மில்லியன் ரூபாய் நட்டத்தை மீளப் பெற்றுக் கொடுக்குமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 06ம் திகதி பதில் வழங்குவதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (10.10.18) வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளை …

  13. தமிழ்க் கைதிகள் 274 பேரை விடுவிக்க முயற்சி தமிழ் அரசியல் கைதிகள் 274 பேரை முதல் கட்டமாக விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி விசேட செயலணி ஆராயும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நல்லிணக்க நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இவ்விசேட ஜனாதிபதி செயலணியில் 7பேர் வரை அங்கம் வகிப்பர். கடந்த காலங்களில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களினால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 274 தமிழ் கைதிகளின் …

    • 0 replies
    • 324 views
  14. இலங்கைக்கான எரிபொருள் முழுவதனையும் றிலையன்ஸ் கம்பனியே கடந்த இருவருடமாக விநியோகித்து வருகின்றது. ஆனால் சீனா, பாகிஸ்தான் கம்பனிகள் எரிபொருள் வளங்குவதில் போட்டி போட்டுகொண்டு நிற்கின்றன. இந்தியாவிற்கான ரெண்டரை அடுத்த முறையாவது காலி செய்யவேண்டுமானால் அதற்கான தகுந்த காரணத்தினை கண்டு பிடித்தே ஆகவேண்டும். ஆகவே தான் பொதுமக்கள் ஊடாக பிரச்சினையை ஏற்படுத்தும் பொருட்டு அரசாங்கம் எரிபொருளில் கலப்பினை ஏற்படுத்தியதாக தென்பகுதி செய்திகள் கூறுகின்றன. . இப்படி பொதுமக்கள் ஊடாக கலகத்தினை ஏற்படுத்தி இந்திய கம்பனியான ரிளையன்ஸ் இன் ரெண்டரை அடுத்த முரை நிற்பாட்டுவெதே சிங்களத்தின் நோக்கமாம். நல்லவிடயம் செய்தால் நல்லது. . இந்திய ஆட்சியாளர் இந்திய முதலீட்டு முதலைகளால் விழுங்கப்பட்ட நிலையில்…

    • 2 replies
    • 1k views
  15. கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு பிரதமர் ரணில் முயற்சிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார். தொலைகாட்சி ஒன்றிக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:பதிவு இணைய செய்தி கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பாக சிறிலங்க அரசாங்கத்தினுடைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய பங்களிப்பு கூடுதலாக இருப்பதாக நங்கள் அவதானிக்கின்றோம். அவருடைய அந்த அறிவுறுத்தலின் பிரகாரம் ஆளுநர் ஊடக இந்த முதலமைச்சு பதவி வாழங்கப்பட்டதாக அறிகின்றோம். ஏற்கனவே நங்கள் கூறினோம் முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்று பட முடியாத ஒரு மனக்கசப்பு இருந்த நேரத்தில் ஒன்று படுவார்கள் என்ற…

  16. கிளிநொச்சி சிறுவர் பூங்கா ஆபத்தான நிலையில் October 23, 2018 குளோபல் தமிழ்ச செய்தியாளர் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஆபத்தான நிலையில் காணப்படுகிறது என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள ஒரேயொரு சிறுவர் பூங்காவாக டிப்போச் சந்திக்கருக்கில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா காணப்படுகின்றது. இங்கு காணப்படுகின்ற சிறுவர்களுக்குரிய விளையாட்டு பொருட்களில் பல உடைந்தும், உடைந்து விழும் நிலையிலும் காணப்படுகிறது. இது தொடர்பில் பூங்காவை ஆளுகை செய்யும் கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வில்லை என்றும் ஆனால் அங்கு செல்லும் சிறுவர்களுக்கும் அவர்களை அழைத்துச்செல்லும்…

  17. பதிந்தவர்: ADMIN வியாழன், 7 ஜூலை, 2011 ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ள ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தில் தமிழர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இது தொடர்பில் நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை. ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த சிறிலங்க அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளது, தமிழர்களுக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் அமைத்த நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை இந்திய அரசு அறிவி…

  18. “இனவாதங்களை தூண்டிவிட்டு தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்க முயற்சி” இனவாதங்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தில் தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாடுளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். …

    • 1 reply
    • 317 views
  19. இலங்கையின் படைச் சமநிலை வான் புலிகளால் மாறிவிட்டது! முன்னாள் இந்திய இராணுவ ஜெனரல் மேத்தா கொழும்பு, மே 2 இலங்கையின் யுத்த நிலைமை ஆபத்தான ஒரு திருப்பு முனையை எட்டியிருக்கின்றது. சரித்திரத்தில் முதல் தடவையாக அரசு அல்லாத ஓர் அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் ஒழுங்கான விமானப்படையைத் தான் தொடங்கியிருப்பதை வெளிக்காட்டியிருக்கின்றது. இந்த 24வருட காலப் பிணக்கில் படைச் சமநிலை மாறியிருக்கின்றது என்பது உண்மை. இந்தியாவின் ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் அசோக் கே.மேத்தா மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் அமைதிப்படை அதிகாரியாகப் பணியாற்றிய இவர் "த வோல் ஸ்ரீட் ஜேனல்' என்ற பாதுகாப்புத்துறைச் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இப்படிக் கூறியுள்ளார். "பறக்க…

  20. செவ்வாய்க்கிழமை, 12, ஜூலை 2011 (10:29 IST) மருத்துவமனையில் சரத் பொன்சேகா ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஏற்ப தண்டனை அனுபவித்து வரும் இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் கொழும்பு தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57614

  21. பிரிட்டனின் முத்தரப்பு மாநாட்டில் அரசு கலந்துகொள்ளமாட்டாது! அமைச்சர் ரம்புக்வெல நேற்று அறிவிப்பு கொழும்பு, மே 08 இலங்கையில் மோதலில் ஈடுபட்டிருக்கும் தரப்புகளிடையே சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் பிரிட்டனில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் உயர்நிலை முத்தரப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்திருக்கின்றது. இலங்கை விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட விசேட விவாதம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து அரசு அலட்டிக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருக்கும் அரச பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இலங்கை அரசு நோர்வே புலிகள் தரப்புகளை இணைத்து நடத்தப்படவிருக்கும் மாநாட்டில் இலங்கை அர…

    • 2 replies
    • 1.4k views
  22. November 8, 2018 வடக்கில் தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ், ஆண்டான்குளத்தை அடுத்துள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்துள்ளது. இதனால் ஒரு குடும்பத்தினர் காணமல் போயுள்ளதுடன், பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும் பாதிப்படைந்துள்ளன. பல வருடங்கள் பயன்பாடின்றி காணப்பட்ட குறித்த குளம் கடந்த சில மாதங்களுக்கு முனபதாகவே மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் மேலும் அறிய வருகையில். நித்தகைக்குளம் மற்றும் அதனோடு இணைந்த வயல் நிலங்கள் கடந்த கால அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல…

  23. மக்கள் முன்னுள்ள இருவேறு தெரிவுகள் அருஸ் (வேல்ஸ்) பொருளாதாரமே இன்றைய உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய காரணி. மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய்வளங்களை தேடி அமெரிக்காவும், ஆபிரிக்க நாடுகளில் தனது சந்தை வாய்ப்பை தேடி சீனாவும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. உலகிலேயே அதிகளவு அணுகுண்டுகளைக் கொண்ட சோவியத்து ஒன்றியம் உடைந்து சிதறியதும் அதன் பொருளாதார கட்டமைப்பை பேணத் தவறியதனால் தான். போரின்போதுகூட ஒவ்வொரு நாட்டின் படையினரும் எதிரியின் இராணுவ இலக்குகளுக்கு நிகராக பொருளாதார இலக்குகளையும் தாக்கி அழிக்கத் தவறுவதில்லை. வான்குண்டு வீச்சுக்கள் உச்சம்பெற்ற இரண்டாம் உலகப்போரில் இருந்து 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற லெபனான் இஸ்ரேல் போர் வரைக்கும் வான்படையினர் தாக்கி அழித்தவற்றில் …

    • 1 reply
    • 997 views
  24. நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது நாடாளுமன்றம் வந்து, செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். கடந்த மாதம் 26ஆம் நாள், சிறிலங்கா அதிபரால் பதவிகவிழ்க்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அதன் பின்னர் அலரி மாளிகையை விட்டு வெளியேறவில்லை. இன்று காலை மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக 122 உறுப்பினர்கள் வாக்களித்திருப்பதாகவும் அவர் தெரிவித்த…

  25. விக்கிபீடியா இணையத்தளம் இராணுவ இரகசியங்களை வெளியிடுகின்றது: ஐ.தே.க [வெள்ளிக்கிழமை, 25 மே 2007, 16:34 ஈழம்] [அ.அருணாசலம்] ஐக்கிய தேசியக் கட்சி இராணுவ இரகசியங்களை விடுதலைப் புலிகளுக்கு வெளியிடுவது என்பது தவறானது நாம் அதனை வெளியிடவில்லை. ஆனால் விக்கிபீடியா இணையத்தளத்தில் சிறிலங்காப் படையினரின் போரிடும் திறன் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு படையினர் தொடர்பான இரகசியங்களை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கி வருகின்றது என்று எரிபொருள் மின்சக்தி பிரதி அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கையிலேயே ஜெயசே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.