ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரி உயிரிழப்பு May 9, 2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த அமெரிக்க அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்க வர்த்தக திணைக்களத்தின் கீழ் இலங்கையில் கடமையில் ஈடுபட்டிருந்த செல்சியா டிகமினாடா என்னும் அதிகாரி கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலின் போது காயமடைந்திருந்தார். அவர் மேலதிக சிகிச்சைக்காக விமானம் ஊடாக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #eastersundaylk #usa #singapore #dead http://glob…
-
- 0 replies
- 517 views
-
-
அமெரிக்காவின் ஆலோசனைக்கமைய கோட்டா தலைமையில் விசாரணைகளை ஆரம்பியுங்கள்: மஹிந்த யாப்பா அமெரிக்காவின் ஆலோசனையை ஏற்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மதிப்பளித்து பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவரின் ஊடக அமைப்பினால் இன்று (புதன்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபர்ட் ஓ பிளே…
-
- 0 replies
- 598 views
-
-
இஸ்லாமிய மார்க்கத்தை கற்பிக்க வந்தவர்களை திருப்பி அனுப்பியது அரசு! இஸ்லாமிய மார்க்கத்தை கற்பிப்பதற்காக நாட்டிற்கு வருகைதந்தவர்களில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களை வீசா காலம் நிறைவடைவதற்கு முன்னர் அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்பிப்பதற்காக நாட்டிற்கு வருகைதந்த 160 முஸ்லிம் இனத்தவர்கள் நாட்டில் தற்போதும் தங்கியுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக இவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வீசாவில் குறிப்பிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அரச புலனா…
-
- 0 replies
- 653 views
-
-
குண்டுவெடிப்பின் தாக்கம் – உறவுகளை இழந்தனர் 200 குழந்தைகள்! இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததோடு, 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து இலங்கை செஞ்சிலுவை சங்கம் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பால் 200 குழந்தைகள், …
-
- 0 replies
- 498 views
-
-
புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: சிவாஜிலிங்கம் மீது பாய்கிறது பயங்கரவாத சட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பாணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் வீதியால் சென்று கொண்டிருந்த சிவாஜிலிங்கத்தை வழிமறித்து பொலிஸார் வழங்கியுள்ளனர். அவருடன், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவா் கோ.கருணானந்தராசா மற்றும் நகரசபை உறுப்பினர் பொ.சிவஞானசுந்தரம் ஆகியோருக்கு…
-
- 6 replies
- 1k views
-
-
சேதமடைந்த தேவாலயங்களை புனரமைக்கும் பணி ஆரம்பம் ர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலில் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு விரைவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு முதற் கட்டமாக ஐந்து மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக முதற் கட்டமாக பத்து மில்லிய…
-
- 0 replies
- 382 views
-
-
போலீஸ்க்காரருக்கு லஞ்சம் கொடுக்க முனைந்த இஸ்லாமியர் கைது. கைது செய்யப்பட்ட ஒரு தடை செய்யப்பட்ட இயக்க உறுப்பினரை, காதும், காதும் வைத்தது போல விடுதலை செய்ய, இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கு, 5 லட்ச்சம் தருவதாக பேரம் பேசி உள்ளார் ஒருவர். இன்ஸ்பெக்டர் ஐயாவிடம் , அன்று மாலையே 50% முன்பணம் தருவதாகவும், மிகுதி, விடுதலை செய்த பின்னும் என பேசியுள்ளார். அதன் படி பணத்தினைக் கொடுக்க முனைந்த போது, இன்ஸ்பெக்டர் ஐயா ஏற்பாட்டில் தயாராக இருந்த லஞ்ச திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். இப்போது, அவரிடம், பணம் எங்கிருந்து வந்தது, யார், யார் பின்னால் உள்ளனர் என விசாரணைகள் தொடங்கி உள்ளது. http://www.dailymirror.lk/breaking_news/Man-arrested-for-attempting-to-bribe-Police-O…
-
- 1 reply
- 763 views
-
-
பள்ளிவாசல்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரமழான் நோன்பு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரி எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்துள்ளார். பள்ளிவாசல்களுக்கு வெளியில் கேட்கும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த கூடாது என சகல பள்ளிவாசல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரமழான் நோன்பை நிறைவு செய்த பின்னர் இரவில் இடம்பெறும் மத நடவடிக்கைகளின் நேரத்தை குறைத்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது https://newuthayan.…
-
- 4 replies
- 991 views
-
-
யாழ்.பல்கலை மாணவர்களின் விடுதலை குறித்து முக்கிய தீர்மானம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனு குறித்து இன்று (புதன்கிழமை) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. யாழ். நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், மாணவர்களை விடுவிப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையிலிருந்து மீட்கப்பட்டன. இதனையடுத்து …
-
- 2 replies
- 593 views
-
-
1000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் பெயர் மற்றும் குடும்ப பெயர்களை சிங்களத்திற்கு மாற்றியுள்ளனர் என புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் பத்திரிகை விளம்பரம் மூலம் இவர்கள் இவ்வாறு மாற்றியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பெயர் மாற்றியமை தொடர்பில் புலனாய்வு பிரிவை அறிவுறுத்தயுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.madawalaenews.com/2019/05/1000.html
-
- 1 reply
- 683 views
-
-
பயங்கரவாத தாக்குதலின் அதிர்வுகள் – களையிழந்தது சீயோன் தேவாலயம் இலங்கையின் பல பகுதிகளில் கடந்த மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர். குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் (புதன்கிழமை) 17 நாட்கள் கடந்துவிட்டன. இலங்கை ஓரளவு வழமைக்குத் திரும்பியுள்ள போதிலும், பாதிப்படைந்த மக்களும் பாதிக்கப்பட்ட தேவாலயங்களும் வலிகளின் ரணத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இதற்கு மட்டக்களப்பு சீயோன் தேவாலயமும் விதிவிலக்கல்ல. கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் சுமார் 30 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். இந்த…
-
- 2 replies
- 712 views
-
-
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும் -சுரேஸ் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை தென்னிலங்கை அரசியல்வாதிகள் கைவிட்டால்தான் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (புதன்னகிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே லேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், தற்போதும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் இலங்கையில் நடைமுறையில் உள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாகவே சிங்கள குடியேற்றங்கள் கொண்டுவரப்படுவதாகவும் பௌத்த கோயில்கள் அமைக்கப்படுவதாகவும் முஸ்லிம் கடைகளுக்க எதிராக நட…
-
- 0 replies
- 268 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமில்லாதவர் என்பது எனக்கு அப்போதே தெரியும். எனினும் இவ்வாறான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி எம்மை நாசமாக்கிய பெருமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவையே சாரும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமறத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான சபை ஒத்தி வைப்புவேளை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோது ஐக்கிய தேசிய முன்னணி எம்.பி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக ஜனாதிபதி மீதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உரையாற்றிகொண்டிருந்தார். …
-
- 0 replies
- 454 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரானின் மிக நெருங்கிய சீடர்கள் எனக் கூறப்படும் 7 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அம்பாந்தோட்டையில் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் அம்பாந்தோட்டையில் ஆயுத, தற்கொலை தாக்குதல் பயிற்சி வழங்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தை கண்டுபிடிக்கவும், உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தாக்குதல்களில் சந்தேக நபர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து வெளிப்படுத்தவும் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். …
-
- 0 replies
- 440 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் குண்டு வெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக பீல்மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அத்துடன் பயங்கரவாதிகளில் 150 பேரில் 50 பேர்வரை கைதுசெய்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அப்படியாயின் இன்னும் 100 பயங்கரவாதிகள் இருக்கின்றனர். இது மிகவும் எச்சரிக்கையான நிலையாகும். உளவுத்துறை பலவீனமடைந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சிலர் விமர்சித்து வந்ததனர். உளவுத்துறையில் சிலர் நீக்கப்படுவதன் மூலம் உளவுத்துறை பலவீனமடையவில்லை. மாறாக உளவுத்துறையை தொழிநுட்ப ரீதியில் பலப்…
-
- 0 replies
- 721 views
-
-
காத்தான்குடியில் பாரிய தீ விபத்து – சொத்துக்கள் நாசம்! மட்டக்களப்பு காத்தான்குடியில் மர ஆலையொன்று தீப்பிடித்து எரிந்தமையினால் குறித்த மர ஆலை முற்றாக சேதமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய காத்தான்குடி பிர்தௌஸ் பாடசாலை வீதியிலுள்ள மொஹமட் நஜீம் என்பவருக்கு சொந்தமான மர ஆலையே இன்று (புதன்கிழமை) அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினர் ஸ்தலத்திற்கு விரைந்து தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் குறித்த மர ஆலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்த பெறுமதியான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் என்பனவும் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ பரவல் க…
-
- 2 replies
- 803 views
-
-
சொப்பின் பேக்குடன் கொழும்பு வந்த ரிஷாத் பதியுதீன் இன்று ஆசியாவின் 10 வது பணக்காரர் ஆகும் அளவிற்கு அவரும் அவரது குடும்பம் சொத்துக்களை சேர்த்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தேரர் விதாரந்தெனிய நந்த தேரர் குறிப்பிட்டுள்ளார். ரிசாத் பதியுத்தீன் அமைச்சர் தனது அமைச்சினை பயன்படுத்தி பாரிய வர்த்தகங்களிக் ஈடுவடுபதாகவும் அடிப்படை வாதிகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகளை செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் பதிவு செய்த வழக்கில் ஞானசார தேரர் ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார். https://www.madawalaenews.com/2019/05/10.html
-
- 3 replies
- 1.3k views
-
-
அம்பலாந்தோட்டை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அகதிகளை ரிதிகம வீட்டு நிர்மாணத்திட்டத்திற்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை முதல் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்களில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #ambalantota #harthal #pakistan #refugees…
-
- 0 replies
- 455 views
-
-
NTJயின் இரண்டு முக்கியஸ்த்தர்கள், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றனர்… May 8, 2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்திய, தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அடிப்படைவாத அமைப்பின் முக்கியஸ்தர்கள் என கருதப்படும் இரு பயங்கரவாதிகள் வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்று அங்கு தலைமறைவாக இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இருவரும் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டிருக்க வேண்டும் என நம்பும் விசாரணையாளர்கள், அவர்கள் இருவரையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டம் வகுத்துள்ளதாகவும், அது தொடர்பில் இராஜதந்திர மட்ட செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் உயர்…
-
- 0 replies
- 407 views
-
-
1000க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்பு – இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் கைது கடுவெல – நவகமுவ பகுதியில் 1000க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளுடன் இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவகமுவ பொலிஸாரின் வீதி போக்குவரத்து அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளின் இருக்கையின் கீழ் வெவ்வேறு பைகளில் வகைப்படுத்தப்பட்ட நிலையில் உரப்பையொன்றிலிருந்து குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் வசமிருந்த ரவைகளில் ரி–56 ரக ரவைகள் 205, 9 மில்லிமீற்றர் அளவிலான 640 ரவைகள், ரி-56 ரக ரவைகள் 40, ரி–56 ரக மகசீன் ரவைகள் 2,9 மில்லிமீற்றர் நீளமுடைய மகசீன் துப்பாக்கி …
-
- 0 replies
- 353 views
-
-
குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் தகவல்! ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுவிட்டனர் என பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தாக்குதல்களில் ஈடுபட்ட குழுவில் இரண்டு குண்டு தயாரிக்கும் நிபுணர்களே இருந்தாகவும் அவர்கள் இரண்டு பேரும் தற்போது இறந்துவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால தாக்குதல்களுக்காக அவர்கள் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாகவும் அவற…
-
- 0 replies
- 171 views
-
-
(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்) விடுதலைப்புலிகள் என தமிழர்களை பார்த்ததைப்போல் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என பார்க்க வேண்டாம் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் மூன்றே நாட்களில் ஒட்டுமொத்த பயங்கரவாதிகளையும் பிடித்துக் காட்டுவேன் எனவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சபைக்கு வந்த ஜனாதிபதி சிறப்புரையை நிகழ்த்தினார். இதில் அவர் கூறுகையில். இந்த பிரச்சினை இலங்கையின் பிரச்சினை அல்ல இது சர்வதேச …
-
- 2 replies
- 1.1k views
-
-
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பலத்த சோதனை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து பலத்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கமைவாகவே இவ் சோதனை நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினருடன் பொலிசாரும் இணைந்து மேற்கொண்டதாக பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.பகிரதன் தெரிவித்தார். பல்கலைக்கழக நிர்வாகப் பகுதி மற்றும் மாணவர் விடுதிகள் போன்றன சோதனை நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். இதேவேளை பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவானது மீண்டும் பல்கலைக் கழகம் ஆரம்பிப்பதற்கான திகதியினை வழங்காமையினால் கிழக்கு பல்கலைக்கழத்தின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லைய…
-
- 1 reply
- 484 views
-
-
நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமென மகிந்தவிரும்புகின்றார்- கோத்தபாய இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தான் தேர்தலில் போட்டியிட முடியாததன் காரணமாக நான் போட்டியிட வேண்டுமென விரும்புகின்றார் எனவும் தெரிவி;த்துள்ளார். இந்தியாவின் த வீக்கின் லக்ஸ்மி சுப்பிரமணியத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் கோத்தபாய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குள்ள தலைவர் மகிந்த ராஜபக்ச எனினும் அரசமைப்பின் 19 வது திருத்தம் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது இதன் காரணமாக அவர் நான் போட்டியிட வேண்டும் என எதிர்பார்க்கின்றார…
-
- 1 reply
- 1.3k views
-
-
ராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மைத்திரி ராணுவ , விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகள், குறிப்பாக உளவுத்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு கடமையின் நிமித்தம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காக தண்டனைகளை அனுபவிப்பதைத் தடுக்கும் முகமாக, "விலக்களிப்பு பரிந்துரை" ஒன்றை முன்னால் படை அதிகாரிகள் ஜனாதிபதியிடம் அண்மையில் கையளித்தபோது, அவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக நீதிக்கான இலங்கைப் பத்திரிக்கையாளர் அமைப்பு செய்தி வெளியிட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர், முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபெய ரஜபக்ஷ மற்றும் முன்னால் ராணுவ, கடற்படை விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட இப்பரிந்துரைகளை முன்னால்…
-
- 0 replies
- 797 views
-