ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
தற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் தற்கொலை அங்கி கண்டெடுப்பு காத்தான்குடியில் உள்ள தற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் தற்கொலை அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தற்கொலை குண்டு தாரியான முகமது காசிம் முகமது ரில்வானின் மாமியாரின் வீட்டிலேயே இன்று (வியாழக்கிழமை) மாலை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து கல்முனை சாய்ந்தமருது சுனாமி வீட்டுத் திட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட முகமது காசிம் முகமது ரில்வானின் மனைவியின் தாயார் வீட்டில் வவுணதீவு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி ரத்நாயக்க மற்றும் காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்…
-
- 0 replies
- 618 views
-
-
மத அனுட்டானங்களின்றி ஐ.எஸ். தீவிரவாதிகளின் உடல்கள் புதைப்பு கல்முனை சாய்ந்தமருதில் வீடொன்றுக்குள் தற்கொலை குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் 10 பேரின் ஊடல்கள் பொலிஸாரினால் இன்று (வியாழக்கிழமை) புதைக்கப்பட்டன. குறித்த உடல்கள் எந்தவொரு மத அனுட்டானங்களும் இன்றி புதைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவத்தார். இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மத அமைப்புக்கள் பலவற்றின் கோரிக்கைக்கு அமைவாக பொலிஸாரால் இந்த சடலங்கள், எந்தவொரு தொழுகை, அனுட்டானங்களும் நடத்தப்படாமல் புதைக்கப்பட்டதாக ருவான் குணசேகர குறிப்பிட்டார். எனினும் தற்கொலை குன்டுதாரிகள் குன்டுகளை வெடிக்கவைத்த போது அதில் உயிரிழந்த 6 குழந்தைகளின் …
-
- 2 replies
- 794 views
-
-
முன்னாள் போராளிகள் சிலர் இராணுவ புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு – சுமந்திரன் முன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் புலனாய்வுப் பிரிவோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் என்றதொரு பதற்றத்தை நாட்டிலே பரப்புவதற்காகவே புலனாய்வுப் பிரிவின் ஒரு பகுதி கொலைகளை செய்வதற்கும் துணிந்துவிட்டதாக சுமந்திரன் கூறினார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதைனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,…
-
- 4 replies
- 660 views
-
-
April 30, 2019 கிழக்கு மகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவற்துறை விசேட அதிரடிப் படையினர் காத்தான்குடி கடற்கரை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த துப்பாகிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன் விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் உட்பட 11 பேர் இதன்போது கைதுசெய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடமிருந்து கணிணி உதிரிப்பாகங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.#Kattankudy #srilanka #arrested #MLAMH…
-
- 15 replies
- 1.7k views
- 1 follower
-
-
யாழில். தேடுதல்கள் சுற்றிவளைப்புக்களில் பள்ளிவாசல்களை அவமதிக்கும் விதமாக பாதுகாப்பு தரப்பினர் நடந்து கொள்வதாக ஐந்து சந்தி மொஹைதீன் ஜீம்மா பள்ளி வாசல் நிர்வாகி சரபுல் அனாம் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த ஞாயிற்றுக்கிழமை எமது பிரதேசத்தை இராணுவத்தினர் , காவல்துறை விசேட அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது எமது பள்ளி வாசலில் தேடுதல் நடத்த வந்த போது , அவர்கள் பள்ளி வாசலுக்குள் சப்பாத்துக்களுடன் …
-
- 8 replies
- 1.4k views
-
-
May 2, 2019 இலங்கையில் உள்ள மதரஸாக்களை தடை செய்வது தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற சிவில் அமைப்புகளுடனான கலந்துரையாடலிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம் விவகார அமைச்சர், தற்போது, மதரஸா கல்வி நிறுவனங்களைத் தடை செய்வது தொடர்பான சட்ட திட்டங்களை உருவாக்கி வருவதாகவும், அதேப்போல் மதரஸா என்ற பெயர்களில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வீசா அற்ற வெளிநாட்டு ஆசிரியர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். #…
-
- 1 reply
- 838 views
-
-
களில் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் இரண்டாம் தவணை விடுமுறை காலத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றுகல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, எதிர்வரும் 6 ஆம் திகதி இரண்டாம் தவணைக்கு பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக விடுமுறை கிடைத்துள்ளது. இந்த நிலையில், கல்விப் பொதுத்தராதார உயர்தர மற்றும் சாதாரணத் தரப்பரீட்சைகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். …
-
- 0 replies
- 730 views
-
-
ஈஸ்ரர் ஞாயிறுத் தாக்குதலுடன் வடக்கு கிழக்கு யுத்த சூழலுக்குள் தள்ளப்படுகிறதா? வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களுடன் தெற்கிலிருந்து வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, வவுனியாவில் நிரந்தர இராணுவ வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்றுத் தொடக்கம் குறித்த வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வாகனங்களின் இலக்கங்கள் உள்ளடங்கலான தகவல்கள் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. #explosive #eastersundayattackslk #srilankanorth …
-
- 0 replies
- 700 views
-
-
May 2, 2019 தற்கொலைக் குண்டுதாரியின் மனைவியை தாம் பார்க்க செல்லவில்லை என அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணி (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) பாராளுமன்ற உறுப்பினர் எம். ஐ.எம். மன்சூர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (2) அவரது சம்மாந்துறை அலுவலகத்தில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில் அம்பாறை வைத்தியசாலையில் க…
-
- 0 replies
- 483 views
-
-
சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் தம்மிடம் கையளிக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். சாவகச்சேரி காவல நிலையத்திற்கு உட்பட பகுதிகளின் பாதுகாப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி காவல நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெற்றது. அதன் போதே கிராம சேவையாளர்களிடம் காவல்துறையினர் குடும்ப விபரங்களை கோரினார்கள். காவல்நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர்கள் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யாத குடும்பங்கள் இருப்பின் உடனடி…
-
- 0 replies
- 590 views
-
-
இலங்கை குண்டுவெடிப்பு: சாய்ந்தமருது சம்பவத்தில் பலியான அஸ்ரிபா - ’வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே, முடிந்து போன சோகம்’ யூ. எல். மப்றூக்பிபிசி தமிழுக்காக, அம்பாறையிலிருந்து 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஉயிரிழந்த அஸ்ரிபா பதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது…
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா? கிழக்கு இழக்கப்பட்டிருக்குமா? எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் ஏற்படுத்த மீண்டும் பிரபாகரன்தான் வர வேண்டுமா என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், நான் கடந்த முப்பது வருடங்களில் யுத்தத்தை நன்கு அறிந்த பிக்கு, நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் இங்கு இருந்தேன், அப்போது நான் வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளேன். அந்த பகுதிகளுக்குச் சென்ற நான் விகாரைகளைப் புணரமைப்பதற்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து பல உதவிகளைப் …
-
- 4 replies
- 957 views
-
-
இலங்கை அரசாங்கத்துடன் கரம் கோர்க்கும் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ வி…
-
- 0 replies
- 912 views
- 1 follower
-
-
காத்தான்குடியில், 5 இந்தியர்கள், பெண் ஒருவர் உட்பட, 12 பேர் கைது.. April 30, 2019 மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலில், விசா இன்றி தங்கியிருந்த 5 இந்தியர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட 12 பேரை இன்று (30.04.19) கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ரவவைகள், பெரும் திரளான கணினிகள், இறுவெட்டுக்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் கடற்கரை வீதி தொடக்கம் ஒரு பகுதியை 600 பேர் கொண்ட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (30.04.19) அதிகாலை …
-
- 16 replies
- 1.8k views
-
-
இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்படவேண்டும் - மாவை தற்போதைய நிலையில், வடக்கில் மக்களின் பாதுகாப்பு, இராணுவத்தால் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்கிற, மாவை, முன்னர் அவர்கள் வடக்கிலிருந்து விலக்கப்பட வேண்டும் என கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dailymirror.lk/breaking_news/Mavai-now-asks-for-Army-security-to-North/108-166322
-
- 0 replies
- 385 views
-
-
கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது போல் பௌத்த விகாரைகள் கை வைத்தால் கடும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் பொதுபலசேனா எச்சரித்துள்ளது. விகாரைகள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் எதிர்வினைகளை எவராலும் தடுக்க முடியாது எனவும் பொதுபல சேனா அமைப்பை சேர்ந்த மாகல்கந்தே சுதத்த தேரர் எச்சரித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேரர் கருத்து வெளியிட்டார். தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. தற்கொலைதாரிகள் அனைவரும் தேசிய தௌவீத் ஜமாத் மற்றும் ஜமியத்துல் இப்ராஹீம் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என உறுதியாகியுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் அரசியல்வாதிகளுக…
-
- 0 replies
- 770 views
-
-
உயிரைப் பணயம் வைத்தேனும் தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பேன் - ஜனாதிபதி ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை என்று ஒருவருகொருவர் குறைகூறிக் கொள்வதனை விடுத்து நாடு என்ற வகையில் ஒரே இனமாக ஒன்று திரண்டு அன்று இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தின் வடுக்களை நினைவிற்கொண்டு பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் அனைவரும் ஒரே கொடியின் கீழ் ஒன்று திரள வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (01) பிற…
-
- 4 replies
- 746 views
-
-
தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படங்கள் வெளியானது! ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியோரின் படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 250 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் சுமார் 500 ற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 150க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 44 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு…
-
- 5 replies
- 1.2k views
-
-
கற்பிட்டி பிரதேசத்தில் 31 சந்தேகநபர்கள் கைது… May 2, 2019 கற்பிட்டி, மண்டலகுடாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 31 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கையில், கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதுடன், 25 – 70 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 03 மோட்டார் சைக்கிள்கள், கார் ஒன்று மற்றும் 03 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். …
-
- 0 replies
- 472 views
-
-
தென்மராட்சி, கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உள்பட்ட பாலாவிப் பகுதியில் சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடாத்தினர். சம்பவத்தில் தனது வீட்டில் இருந்த பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் ஆயுதக் கும்பல் ஈட்ட…
-
- 10 replies
- 1.5k views
- 1 follower
-
-
பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலய அந்தோனியார் திருச்சொருபம் இனந்தெரியாதோரால் உடைப்பு May 2, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான ‘பள்ளகண்டல் புனித அந்தோனியார்’ தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொருபம் கடந்த செவ்வாய்க்கிழமை (30) இரவு இனம் இனந்தெரியாதோரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டுள்ளமை நேற்று புதன் கிழமை மாலை தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அப்பகுதிக்கு பொறுப்பான காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர். சிலாபம் மறைமாவட்டத்தின் கீழ் அமைந்துள்ள மிகவும் சிறப்பு மிக்க இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு வருட…
-
- 0 replies
- 674 views
-
-
பள்ளிவாசல்களைச் சுற்றி வளரும் புற்களை வெட்டுவதற்காகவே வாட்களைச் சேமித்து வைத்திருந்தோம் - முஸ்லீம் சமய கலாசார அமைச்சர் ஹலீம் ! கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலும் அமைந்திருக்கும் முஸ்லீம் பள்ளிவாசல்களில் ராணுவமும் பொலீஸும் இணைந்து தேடுதல் நடாத்தி வருகின்றன. இத்தேடுதல்களின்பொழுது பல்வேறு வகையான வாட்கள், கோடரிகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் நாளாந்தம் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து முஸ்லீம் விவகார அமைச்சரான ஹலீமிடம் பத்திரிக்கையாளர்கள் வினவியபோது, தமது பள்ளிவாசல்கள், முஸ்லீம் அடக்கஸ்த்தலங்களுக்கு அருகில் அமைந்திருப்பதால், அவற்றைச் சுற்றி வளரும் புற்கள் பற்றைகளை அழிப்பதற்கு பல்வேறு உத்திகளை தாம் பாவித்துவருவதாகவும், அவற்றில் ஒரு உத்தியே வாட்களைக் கொண்டு…
-
- 2 replies
- 522 views
-
-
யாழில் பாரிய சுற்றிவளைப்பு – வீடுகள் சோதனை யாழ்ப்பாணம் – கொக்குவில் தலையாழி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 4 மணியளவிலிருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள் எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டைவிட்டு வீதியில் இறங்கவோ இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் இருப்பவர்கள் குறித்து பதிவுகள் இடம்பெற்றதோடு வீடுகளும் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டது. அவ்வாறு சோதனைக்கு உட்படுத்த…
-
- 0 replies
- 580 views
-
-
ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு? கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தற்போது அங்கு தீவிர தேடுதல் இடம்பெற்று வருகின்றது. இன்று (வியாழக்கிழமை) காலை அங்குள்ள மலசலகூடத்தில் மர்ம பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார், இராணுவம் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் தற்போது வெளியேற்றப்பட்டு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சோதனையிடப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். http://athavannews.com/ஸ்ரீலங்கா-இன்ஸூரன்ஸ்-தலை/
-
- 0 replies
- 721 views
-
-
மட்டு. சீயோன் தேவாலய தாக்குதல் – இதுவரை 30இற்கும் மேற்பட்டோர் கைது! மட்டக்களப்பில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து இதுவரையில் 30இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை காத்தான்குடியின் 01ஆம் வாட்டாரம் உட்பட பல பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டனர். குறித்த தற்கொலைத் தாக்குதல் குறித்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு தேசிய தௌஹீத் ஜமாய்த்துடனான தொடர்புகள் குறி…
-
- 0 replies
- 386 views
-