ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143274 topics in this forum
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 06/09/2009, 14:07 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – மகிந்த நாளை சந்திப்பு! இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்துமாறு பேசுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை திங்கட்கிழமை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். வடக்கில் இடம்பெயர்ந்து வவுனியா தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளவும் குடியமர்த்துவது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். நாளை நடபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, என்.சிறீகாந்தா, சுரேஸ் பிரேம…
-
- 0 replies
- 472 views
-
-
ஈஸ்டர் தாக்குதல்: சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவுகின்றது – பொலிஸ்மா அதிபர் ஈஸ்டர் தாக்குதலில் குறித்து பலரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தெரிவித்தார். இத்தகைய அறிக்கைகளை வெளியிடுபவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றத்தின் முன் எடுத்துச் செல்லக்கூடிய உண்மைகளை மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்வதற்கு முன் சி.ஐ.டி.க்கு தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 2019 ல் சஹரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினர் நடத்திய தாக்குதல் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டவை அல்ல என்றும், அது …
-
- 0 replies
- 257 views
-
-
கானகன் ‘என்ன செய்யலாம் ஊடகங்களை?’ என்று விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கொதித்துக்கொண்டிருக்கிறா
-
- 5 replies
- 870 views
-
-
மலையக பிரதேசங்களில் ஊசி மருந்துகள் மூலமாக தொற்று நோய்களை வெளிநாட்டவர்கள் பரவ செய்கின்றனர் என்ற வதந்தி சில மாதங்களாக பரவுகிறது. இந்நிலையில் ஹப்புத்தளை, பிட்ரத்மலை பகுதியில் ஊசி மருந்து ஏற்ற வந்தார்கள் என்ற சந்தேகத்தில் சைக்கிளில் பயணித்த மூன்று வெளிநாட்டவர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றள்ளது. சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹப்புத்தளை, பிட்ரத்மலை பகுதியில் தேவாலயம் ஒன்றில் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அப்பகுதி ஊடாக வெளிநாட்டு பிரஜைகள் மூவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவர்களில் ஒருவர் தனது சைக்கிள் டயர்களுக்கு காற்று நிரப்பும் உபகரணங்களை தனது பையில…
-
- 0 replies
- 211 views
-
-
பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் தமது நடவடிக்கைகளில் நேர்மையற்ற விதத்தில் நடந்துகொள்கிறார்கள் என நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பு சட்டவாளர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
வாருங்கள் சுத்தம் செய்வோம்... களுத்துறை மாவட்டத்தில், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட புளத்சிங்கள, யட்டகம்பிற்றிய மற்றும் நாஹகதொல பிரதேசங்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (05) முற்பகல் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்தார். அங்கு, அழிவடைந்த வீடுகள் மற்றும் காணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார். இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தையொட்டி, சுற்றாடல் அமைச்சினால் அப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். இராணுவத்தினர் மற்றும் சீன உதவிக் குழுவின் பங்களிப்புடன் இந்தச் சிரமதான நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேள…
-
- 0 replies
- 393 views
-
-
இயக்குநர் சீமான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது. முன்னதாக அவர் புதுக்கோட்டை மாரீஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், ’’தேசிய இனத்தின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தைத்தான் பிரபாகரன் நடத்திவந்தார்.அதைத்தான் நாங்களும் செய்து வருகிறோம். இனி போராடி பலனில்லை என்று சில அமைப்புகள் கொஞ்சம் அமைதி காக்கின்றன. ஆனால் நாம் தமிழர் இயக்கம் அமைதியாக இருக்காது. பொதுவாக நேற்று வரை நடந்து வந்த ஈழ போராட்டத்தில் இப்போது சிறிது இடைவெளி இருக்கு. இன்னும் நான்கு மாதங்கள் அல்லது நான்கு வருடங்களில் ஈழ போராட்டம் முன்…
-
- 70 replies
- 5.8k views
-
-
நாட்டில் உள்ள சில அரசாங்க அதிபர்களின் இடமாற்றம் நடைபெறவுள்ள நிலையில். அதில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மாவட்டமான மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றமும் இடம்பெறவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் 2015 ஆண்டு நடைபெற்ற வெள்ளநிவாரண ஊழல் சம்பந்தமான விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை முறையான விசாரணை நடத்த கோரவேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊழல் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு அரசாங்க…
-
- 1 reply
- 483 views
-
-
பொருத்து வீடு குறித்து அரச அதிகாரிகளுக்கு நேற்று வகுப்பெடுப்பு பொருத்து வீடு நிர்மாணிக்கவுள்ள நிறுவனத்தினர், வடக்கு – – கிழக்கு மாவட்டச் செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்களைச் சந்தித்து, இந்த வீடு அமைக்கப்படுவதன் நன்மை பற்றி விளக்கமளித்துள்ளனர். மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் கொழும்பு ரேனுகா விடுதியில் நேற்று இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. மீள்குடியேற்ற அமைச்சின் மீளாய்வுக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக நேற்றைய கூட்டத்தில், சுமார் அரை மணி நேரம் மீள்குடியேற்ற அமைச்சால் முன்னெடுக்கப்படும் வேலைகளின் முன்னேற்ற மீளா…
-
- 0 replies
- 677 views
-
-
சிலர் தோற்றுப் போன பின்னர் அரசியல் வெற்றிக்காகவே தமிழ்த் தேசியம் என்கின்ற ஆடையை அணிந்துள்ளார்கள்! சி.சந்திரகாந்தன் சிலர் தோற்றுப் போன பின்னர் அரசியல் வெற்றிக்காகவே தமிழ்த் தேசியம் என்கின்ற ஆடையை அணிந்துள்ளார்கள். இன்று அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இளைஞர்களை உசுப்பேற்றுகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இன்று(29) புதன்கிழமை போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆணைகட்டியவெளி சின்னவத்தை 02 கிலோமீட்டார் வீதி கொங்கறீற்று வீதியாகப் புனரமைப்பு செய்து மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 412 views
-
-
வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு சாமானியனின் சவால் மடல்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் வட மாகாணசபைக்கு தெரிவாகிய கட்சிகளின் அங்கத்தவர்களுக்கும், தங்களின் வெற்றிக்காய் பணி செய்த சாமானியனின் அன்புமடல் அல்லது ஆவேசத்துடன் கூடிய சவால்… எனது மடலை வாசிக்கும் சூழல் தங்களுக்கு இருக்கும் என்று அடியேன் கருதவில்லை ஆனாலும் இன்று ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் மனங்களை வாட்டும் ஒரு விடயம் பற்றி எவரும் நேரடியாக தங்களது கவனத்துக்கு கொண்டு வந்ததாக யான் இந்நேரம் வரை அறியவில்லை ஆதலால் இம்மடலை வரைகின்றேன். வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நீங்களும் உங்களைப் போன்றசிலரும் அதிகாரங்கள் பிடுங்கப்பட்ட மாகாண சபைய…
-
- 0 replies
- 307 views
-
-
போரினால் இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக்டியமர்த்துவதற்கு அரசாங்கம் அதிகளவு முன்னுரிமை கொடுத்துவருவதாகத் தெரிவித்த சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச, கற்பனை செய்வதைவிட இது மிகவும் கடினமான இலக்கு எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாதலின் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்குகொண்டு உரையாற்றிய அரசுத் தலைவர், உள்நாட்டில் இடம்பெயர்நத தற்காலிக வசதிகளுடன் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை அவர்களுடைய வீடுகளுக்கு துரிதமாக அனுப்பிவைப்பதே அரசின் முக்கியமான நோக்கம் எனவும் தெரிவித்தார். அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவத…
-
- 0 replies
- 358 views
-
-
சுயநலமின்றி பிறர்நலம் பேணுவதிலேயே மனிதனது விடுதலை தங்கியுள்ளது :நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அடுத்தவர்களது கஷ்டங்களைப் புரிந்துகொள்வது டன் தமக்குத்தாம் நேர்மை யாக இருப்பதனால் மனி தம் வளம்பெறும் என்பதை ரமழான் நோன்பு எமக்கு நினைவுபடுத்துகின்றது. ஈதுல்பிதர் நோன் புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நோன்புப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பௌதீக வளங்கள் மீது அளவு கடந்த பேராசையைக் கொண்டுள்ள நவ…
-
- 1 reply
- 246 views
-
-
ஓசியன் லேடி கப்பலில் கனடா சென்ற 76 பேரில் ஒருவர் கனேடிய ரோயல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனையோர் 48 மணி நேர விசாரணை முடிந்து அடுத்த கட்ட விசாரணைக்காக 07 நாட்கள் பிரிதொரு தடுப்பு முகாமிற்கு அனுப்பபட்டுள்ளனர். குறிப்பிட்ட கைது செய்யப்பட்ட தமிழர் என்ன நோக்கங்களுக்காக கைது செய்யப்பட்டார் என்பதனை தெரிவிக்க பொலிசார் மறுத்துவிட்டனர். எனினும் இலங்கை அரசாங்கம் கொடுத்த தகவல்களை அடிப்படையாகவைத்தே கைது செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வருகின்றது. ஏனைய 75 பேரும் வான்கூவரில் உள்ள மாபிள் ரிட்ஜ் தடுப்பு நிலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 626 views
-
-
வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் இன்று (17) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். வட மாகாண சபையின் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அமைச்சு பொறுப்புக்களுக்கே சிவி இன்று சத்தியப்பிரமாணம் செய்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. http://www.tamizl.com/?p=45063
-
- 1 reply
- 326 views
-
-
கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்! கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது. கிழக்கில் அரச நிலங்களை அபகரிதது அரபு தனவந்தர்களுக்கு விற்பனை செய்த ஒரு அரசியல்வாதியே புதிய ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக கிழக்கு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது. முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக கிழக்கு மகாண ஆளுநரைத் தொர்புகொண்டு வினவியபோது, தான் இன்னும் பதவி விலகவில்லை என்று மாத்திரம் தெரிவித்தார். கிழகக்கில் தமிழ் மக்களின் கோயில் க…
-
- 10 replies
- 748 views
-
-
சரத் பொன்சேகா ஒரு அரச தந்திரி அவரை விருப்பத்திற்கு மாறாக விசாரிக்க முடியாது என்று அமெரிக்காவிடம் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகாவுடன் அமெரிக்க உள்ளக பாதுகாப்பகம் நாளை புதன் கிழமை (04-11-2009) "நேர்காணல்" நடாத்தவுள்ளது. அவருக்கென்று அரச தந்திரச் சிறப்புரிமை உண்டு .(diplomatic immunity) என்று இலங்கை அரசு வாதிடுகிறது. ஒரு நாட்டின் அரச தந்திரிகள் இன்னொரு நாட்டில்செயற்படும் போது அவர்களுக்கென்று சிறப்புரிமைகள்உண்டு.(diplomatic immunity -A principle of international law that provides foreign diplomats with protection from legal action in the country in which they work) இந்தச் சிறப்புரிமைகள் 1961 ஆண்டு நடந்த வியன்னா அரச தந்திரிகளுக்கான மாநாட்டில் உலக நாடுகளால் ஒ…
-
- 0 replies
- 1.1k views
-
-
வடக்கு - கிழக்கு இணைப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் குறித்தும் சாதகமாகப் பரிசீலிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வுடன் செயற்பட முன்வர வேண்டும்.'' இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபைக் குழுத் தலைவர் ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார். 13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கிழக்கு மாகாண முஸ்லிம்கள் காட்டியுள்ள சமிக்ஞையைக் கருத்திற் கொண்டு சாதகமாக - பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டிய தார்மீகக் கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். "வடக்கு - கிழக்கு இணைப்புக்கு கிழக்கு மாகாணம் இணக்கம…
-
- 34 replies
- 1.8k views
-
-
புறமுதுகு காட்டி ஓட வேண்டாம் நான்கு சமயத் தலைவர்கள் கூறுவதை கேட்பதெனின் பாராளுமன்றம் எதற்கு? கூட்டமைப்பு சபையில் கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) சமயத்தலைவர்கள் நான்கு பேர் கூறுவதால் அரசாங்கம் முக்கிய விடயங்களை மேற்கொள்வதிலிருந்து பின்வாங்குகின்றதா என்ற பாரிய சந்தேகம் எமது மக்களுக்கு எழுந்துள்ளது. அவ்வாறு கூறுவதனால் தான் விடயங்கள் நிறுத்தப்படுமாக இருக்கும் என்றால் இந்தப் பாராளுமன்றம் தேவையில்லை. நான்கு பேரும் சேர்ந்து நாட்டில் என்ன நடக்க வேண்டுமென சட்டமியற்றிக் கொண்டிருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சபை யில் காட்டமாக தெரி…
-
- 9 replies
- 755 views
-
-
பௌத்த மதத்தைப் பாதுகாத்து அதற்குரிய கௌரவத்தை வழங்கி ஒற்றையாட்சி முறைமையின் கீழேயே அரசமைப்பு உருவாக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன், முப்படைகளை அரசு ஒருபோதும் காட்டிக்கொடுக்காது என்றும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை மீட்டெடுத்த படையினரைப் பாதுகாப்பதற்காக அரசு என்ற வகையில் நாம் உறுதி கொண்டுள்ளோம். இனவாதத்தைத் தூண்டிவிட்டு நாடு என்ற வகையில் எம்மால் முன்னேறிச் செல்ல முடியாது. நாம் எல்லோரும் ஒரே தேசத்தினராக முன்னேறிச் செல்ல வலுவான ஆட்சி முறைமை அவசியம் என்ற தீர்மானத்துக்கு வரவேண்டும். பௌத்த மதத்துக்குரிய கௌரவம் பெற்றுக்கொடுக்கப்படும். ஒற்றையாட்சி முறைமை சவாலுக்குட…
-
- 2 replies
- 326 views
-
-
பிரதமர் மகிந்தவிடம்.. கேள்வி கேட்க, சந்தர்ப்பம்! ஆளும் கட்சி மாத்திரமன்றி, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமரிடம் இரண்டு கேள்விகள் விகிதம் கேட்டு, அவரிடமிருந்து பதிலை பெற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) முதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படாததை அடுத்தே, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயிருந்தது. இந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தினை இன்று முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1249048
-
- 3 replies
- 344 views
-
-
காணொளி : புலம்பெயர் ஈழப் பெண்ணான மாயாவை வாழ்த்தும் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜீலியன் காணொளி.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9853:2013-11-03-22-01-54&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 413 views
-
-
இணையத்தில் மான மறவர்கள், மாத்தமிழ் மாவீரர்களுக்கு அகல் அஞ்சலி செலுத்துவோம் www.november27.net www.tamilheroesday.com முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 833 views
-
-
முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு: அடுத்தடுத்து வழக்கு, கைது: பழ.நெடுமாறன் கண்டனம். தஞ்சாவூர் விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டு கடந்த 8ந் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அனுமதி கொடுக்க கால தாமதம் ஏற்படுத்தியதால் விழாக் குழுவினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்து அனுமதி பெற்றனர். ஆனாலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதியை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்ததால் கடந்த 6ந் தேதியே அவசரமாக திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நிகழ்ச்சி தட்டிகள் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளது என்றும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படம் போடப்பட்ட தட்டிகள் வைக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 624 views
-
-
பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பதவியிலிருந்து நீக்கம்!! மத்திய மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம், புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான சுவிஸ்குமார் என்பவரை கொழும்புக்குத் தப்பிச் செல்ல உதவினார் என்ற குற்றச்சாட்டில் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று அவசரமாக ஒன்றுக்கூடிய பொலிஸ் ஆணைக்குழு அவரை பணிநீக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியது என்று கூறப்படுகின்றது. லலித் ஜயசிங்கவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எ…
-
- 2 replies
- 313 views
-