ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
http://www.nerudal.com/content/view/3207/70/ சீறும் படை என்ற பெயரில் துண்டுப்பிரசுரம்! இன்று காலை கொழும்பில்வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இனுடைய படுகொலைக்கு கருணா குழுவினர் உரிமைகோரியுள்ளனர். மட்டக்களப்பு சீறும்படை என்றபெயரில் இன்றுமாலை துண்டுப்பிரசுரமொன்றை மட்டக்களப்பில் விநியோகித்துள்ளனர். அந்தத் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- எமது எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்தும் வன்னிப்புலிகளின் அடிவருடிகளாகச் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு உறுப்பினர் இன்றுகாலை கொழும்பில் வைத்து தமிழின விடியலுக்காக கொன்றொழிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி கிழக்கின் எமது தா…
-
- 14 replies
- 4.8k views
-
-
வியாழக்கிழமை, ஜனவரி 27, 2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க சற்றுமுன் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த பின்பே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் தமது வேட்பு மனுக்களை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்களுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை இன்று கையளித்துள்ளனர். …
-
- 0 replies
- 497 views
-
-
மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய வலிந்த தாக்குதலை கடற்புலிகள் முறியடித்து தாக்கியதில் கடற்படையினரின் 2 ரோந்துக்கலங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. 1 கடற்கலம் கடுமையாக சேதமடைந்துள்ளது. 3 கடற்கலங்கள் சேதமடைநதுள்ளன. 10-க்கும் மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். விடத்தல்தீவு கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் பயிற்சி நடவடிக்கையில் கடற்புலிகள் ஈடுபட்டிருந்தனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் கடற்புலிகளின் படகுகள் ஈடுபட்டிருந்தன. அப்பகுதிக்கு காலை 6.05 மணியளவில் சென்ற சிறிலங்கா கடற்படையின் வேகத்தாக்குதல் படகுகள், கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதலை தொடுத்தன. கடற்படைய…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியும் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியும் ! ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கருத்துமோதல் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் வ்றாமிங்கம் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற பொதுநிகழ்வொன்றில், சிறப்பு அதிதியாக கலந்த கொண்ட சவேந்திரா சில்வா அவர்கள் கலந்து கொண்டிருந்தார். வன்னிப் போரின் போது இடம்பெற்ற போர்குற்றங்கள், மனிதப் படுகொலைகள் குறித்து, விடுதலைப் புலிகள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக…
-
- 0 replies
- 648 views
-
-
இரணைமடு குளத்தில் மீன்பிடிப்பதை தடுக்கவில்லை : இராணுவம் இரணைமடு குளத்தில் மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டதாகவும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளில் எதுவித உண்மைகளும் இல்லை என இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனை கூறினார். இரணைமடு வாவி பிரதேசத்தில் மீன்பிடி சங்கம் ஒன்று உள்ளது. அதில் அப்பிரதேசத்தில் வசிக்கும் 120ற்கும் அதிகமான மீனவ குடும்பங்கள் அங்கம் வகிக்கின்றன. இவர்களின் மீன்பிடி நடவட…
-
- 0 replies
- 267 views
-
-
அரசியலமைப்பு பேரவைக்கு 03 சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று! 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கு 03 சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று(வியாழக்கிழமை) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் சிவில் பிரதிநிதித்துவம் கோரி சுமார் 112 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக அல்லாத, பொது அல்லது தொழில் வாழ்க்கையில் நற்பெயர் பெற்ற, சிறந்த மற்றும் நேர்மையான …
-
- 1 reply
- 199 views
-
-
வவுனியா பூந்தோட்டம் நலன்புரிமுகாமில் தங்கியுள்ள மக்களை வெளியேறுமாறு பணிப்பு _ வீரகேசரி நாளேடு 2/12/2011 9:49:30 AM வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள மக்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு வவுனியா மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளதாக அங்கு தங்கியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரி.எம்.எஸ்.சார்ள்ஸ் மற்றும் மாவட்ட திட்டப் பணிப்பாளர் வா.கிருபாசுதன் ஆகியோர் கையொப்பமிட்டு, மாவட்ட புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புச் செயலகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக கடந்த முதலாம் திகதி அறிவித்தல் ஒன்று நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 …
-
- 1 reply
- 813 views
-
-
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யத் தேவையில்லை என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் கூறியிருப்பார் என்று நான் நம்பவில்லை என்று தெரிவித்த த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் நாம் இல்லை என்றும் தெரிவித்தார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யத் தேவையில்லையென அண்மையில் இங்கிலாந்தில் வைத்து மாவை சேனாதிராஜா தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது; தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயற்பட்டு வருவதுடன், அக்கட்சித் தலைவர்களும் ஒற்றுமையாகச் செயற்பட்டு வருகிறார்கள். எங்களுடைய மக்களுடைய கருமங்களை பொறுத்தவரையில்…
-
- 1 reply
- 788 views
-
-
விடுதி அமைப்பதைத் தடுக்கும் முஸ்லிம்கள்! – யாழில் இன்றும் சற்றுப் பதற்றம்!! இந்த விடுதி அனைத்து அனுமதிகளும் பெற்றுக் கட்டப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. அங்கு விடுதி அமைப்பதற்கு அங்குள்ள முஸ்லிம் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம், ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அண்மையில் ஹலீமா வீதியில் விடுதி அமைக்கும் பணிக்கு அந்தப் பகுதி மக்கள் இன்று எதிர்ப்புக் காட்டினர். இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையம் வருமாறு அறிவுறுத்தினார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடுதி அனைத்…
-
- 0 replies
- 519 views
-
-
வியாழக்கிழமை 7 டிசெம்பர் 2006, 16:14 ஈழம் (புதினம் நிருபர்) இலங்கைப் பிரச்சினையை இந்தியா தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று வியாழக்கிழமை சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றிய போது மிகவும் ஆழ்ந்த கவலை தெரிவித்து உரையாற்றினர். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்து உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது உணர்வுப் பூர்வமான கருத்துக்களை இங்கு தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து நானும் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அதையே சொல்லி பிரச்சினையை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை. தமிழக மக்களின் உணர்வு …
-
- 13 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாண மாவட்டம் உட்பட 75 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைக்க முடிபு தேர்தல் திணைக்களத் தகவல்கள் தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-19 07:52:46| யாழ்ப்பாணம்] யாழ்.மாவட்டம் உட்பட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை எதிர்த்து கட்சிகளினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 75 உள்ளூராட்சி சபைக ளிற்கான தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் முடிபு செய்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத் தகவல்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது, நாடளாவிய ரீதியில் 301 உள்ளூராட்சி சபைக ளுக்கு எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி தேர்தலை நடத்த தேர்தல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்தது.இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஜனவரி 24 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.இதில் …
-
- 0 replies
- 897 views
-
-
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர். அதன் போது பொலிஸாரின் தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டனர். அதன் போது பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அவ்வேளை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினா…
-
- 4 replies
- 754 views
-
-
சிறிலங்காவின் உண்மையான முகத்தை மன்மோகன் சிங்கிடம் அதிகாரிகள் எடுத்துச் சொல்வதில்லை: வைகோ [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 19:12 ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்காவின் உண்மையான முகத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதிகாரிகள் எடுத்துச் சொல்வதில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணல்: "இந்திய அரசாங்கம் சிறிலங்கா இராணுவத்துக்கு ஆயுதங்களையும், வெடிமருந்துப் பொருட்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறதா?" "மன்மோகன்சிங் அவர்களின் தலைமையில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் ஈழத் தமிழகர்களுக்கு எதிராக எடுக்கவிருந்த பல …
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கைக்கும் UKக்கும் இடையிலான விமான சேவை விஸ்தரிக்கப்பட உள்ளது:- 26 பெப்ரவரி 2011 இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிhன விமான போக்குவரத்து சேவை விஸ்தரிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பயணத்தில் ஈடுபடும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இரு நாட்டு விமான சேவை உயரதிகாரிகளும் இணங்கியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 14 இலிருந்து 21 ஆக உயர்த்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த விமான சேவைகளை கனடா வரையில் நீடிப்பதற்கும் பிரித்தானிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி வாரத்தில் ஏழு விமானங்கள் கனடா நோக்கிப் பயணிக்கும் என விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சில்வா தெரிவித்துள்ளார். பிரித்…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கும், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேரடி சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக, "முதல்வர் விக்னேஸ்வரனுக்கும், எனக்கும், ஐக்கிய இலங்கை வட்டத்துக்குள், அ முதல் ஃ வரை அனைத்தையும் அலசும், முக்கிய கலந்துரையாடல்" என மனோ கணேசன் தனது டுவீடர் சமூக தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முதல்வர் விக்னேஸ்வரனுடனான சந்திப்பில் பல்வேறு பரஸ்பர சமகால முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் உரையாடினோம். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், நமது ஜனநாயக மக்கள் முன்னணி எதிரணியில் பங்களிக்கும் என்றாலும் பொது வேட்பாளர் தொ…
-
- 4 replies
- 579 views
-
-
SLFP – SLPP – இணைந்து பரந்துபட்ட கூட்டணி – TNA யுடனும் பேசுகிறோம்…2020 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர்.. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளன என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க இந்த கூட்டணியே 2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தெரிவு செய்யும் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அடுத்த மாகாணசபை தேர்தலில் கூட்டணியொன்றே போட்டியிடும் என தெரிவித்துள்ள எஸ்பி திசநாயக்க தற்போதைய தேசிய அரசாங்கம் அதன் எஞ்சிய காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்…
-
- 0 replies
- 196 views
-
-
பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு : காணி உரிமையாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை வழங்க நடவடிக்கை By VISHNU 26 JAN, 2023 | 04:29 PM யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு செய்யும் செயற்பாடு இன்று (26) தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் காணி பிரிவில் இடம்பெற்றுவருகிறது. காணி உறுதிப் பத்திரம், தோம்பு, வங்கி கணக்கு புத்தகம், தத்துவ உரித்தாளர் சத்தியக்கடுதாசி முடித்த படிவம் , தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் வருகை தந்து குறித்த காணி உரிமையாளர்கள் பதிவு செய்ய முடியும். காணி கிராம சேவையாளர் பிரிவுகளான J 246 , J256, J240 இற்குள் அடங்குக…
-
- 2 replies
- 786 views
- 1 follower
-
-
கூட்டமைப்பை சிதைப்பது குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும் ரி.விரூஷன் தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரை காலமும் பேணிப் பாதுகாத்து அப் பலத்தினூடாக தங்களது நிலைபாட்டில் உறுதியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைத்து, அக் கட்சியினை விட்டுப் பிரிந்து செல்வது குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவ்வாறு அவர் செய்வாராயின் அது தமிழ் மக்களின் ஒற்றுமையினை சிதைத்தமை போன்றதாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்…
-
- 0 replies
- 223 views
-
-
Mar 13, 2011 / பகுதி: செய்தி / வன்னியில் உள்ள படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளம் பெண்கள் எங்கே? வன்னியில் போர் நிறைவடைந்த பின்னர் அங்கிருந்து வெளியேறிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கைது செய்த சிறீலங்கா இராணுவத்தினர் அவர்களை பல தொகுதிகளாக வன்னியிலும், தென்னிலங்கையிலும் உள்ள படை முகாம்களிலும், தடை முகாம்களிலும் தடுத்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டு வன்னியில் உள்ள இனம்தெரியாத தளம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களையும், இளைஞர்களையுமே படத்தில் காண்கிறீர்கள். ஈழம் ஈ நியூஸ் இனால் பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த புகைப்படங்களில் உள்ளவர்கள் எங்கே என்பது யாருக்கும் தெரியாது. ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நாவின் மனித உரிமை…
-
- 0 replies
- 954 views
-
-
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு இந்தியா வழங்கும் வாகனங்களுக்கு வரிச்சலுகை அளிக்க இலங்கை மறுத்துள்ளது. இதனால் இந்த மாத இறுதிக்குள் 7 வாகனங்களை வடக்குக்குக் கொண்டுவரத் தாம் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு மாகாண சபை கடந்த வருடம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஆட்சியமைக்கப்பட்டது. இதில் தெரிவான 38 உறுப்பினர்களுக்கும் அன்பளிப்பாக வாகனங்களை வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்தது. இந்த வாகனங்களுக்கான இறக்குமதி தீர்வையை நீக்குமாறு இலங்கை அரசை இந்திய அரசு கேட்டது. ஆனால் இலங்கை அரசு அதனைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது இறக்குமதி தீர்வையை தாமே செலுத்தி முதல் கட்டமாக 7 வாகனங்களை வடக்குக்கு கொண்டுவ…
-
- 0 replies
- 347 views
-
-
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் மரணம்! June 17, 2018 யாழ்ப்பாணத்தில் இன்று இரவு பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகம் சந்தியில் சற்று முன்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது. மல்லாகம் சகாய மாதா தேவாலாய திருவிழாவில் இரு கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலைத் தடுக்க முற்பட்ட போது, பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்த முன்ற இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இளைஞர் உயிரிழக்கவில்லை, துப்பாக்கிச்சூட்டில் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்ற போதும், அவர் உயிரிழந்து விட்டார் என்பதை வைத்தியசாலை வட்டாரங்…
-
- 18 replies
- 2.7k views
-
-
எப்படி இருக்கிறது யாழ்ப்பாணம் ‘‘திறந்தவெளி சிறைச்சாலைக்குள் தினம் தினம் சாக ஏலாது!’’ ‘‘ரவுணில் இருக்கிற எல்லாக் கடையளுக்கும் போய்ரன், ஒரு ‘ஹோர்லிக்ஸ்’ வாங்கலாமெண்டு! ஓர் இடமும் கிடைக்கயில்ல. அப்பாவுக்கு உடல் நலமில்லாம வைத்திய சாலையில சேர்த்திருக்கிறம். ஓப்ரேஷனுக்கு நாள் குறிச்சாச்சு. உடம்பில சக்தி இல்ல. எதாவது சத்து மா வாங்கிக் கொடுக்கச் சொல்லி மருத்துவர்கள் சொல்லுகினம். அதுக்காக ரெண்டு நாளா அலையுறன். எவ்வளவு காசு வேணுமெண்டாலும் கொடுக்கலாம். ஆனா, எல்லாக் கடையிலயும் சாமான் இல்லயெண்டு சொல்லுகினம்...’’ - ஏக்கமும் களைப்புமாகச் சொல்கிறார் சிந்துஜா. இலங்கையின் மற்ற பகுதிகளைத் தரை வழியாக யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் முக்கியச் சாலையான ஏ-9 பாதை கடந்த நான்கு மா…
-
- 1 reply
- 1.6k views
-
-
கோதபாஜவை இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக்க அமெரிக்கா இரகசிய நகர்வா? மேற்குலக நாடுகளை சமாளிப்பதற்குரிய தகுதி ராஜபக்ச குடும்பத்துக்கு உண்டு என்கிறார் திஸாநாயக்க புதுப்பிப்பு: ஜூன் 24 18:22 இலங்கையில் இராணுவ ஆட்சியை மகாநாயக்க தேரர்கள், பௌத்த அமைப்புகள் விரும்புகின்றனவா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. இலங்கை இராணுவத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி, தற்போதைய அமைச்சர் பீலட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கியதேசியக் கட்சி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்கியது ஒரு சக்தி. ஆனாலும் மஹிந்த ராஜ…
-
- 0 replies
- 351 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டே இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த [saturday, 2011-04-02 10:12:41] வடபகுதியில் உள்ள சகல அதியுயர் பாதுகாப்பு வலயங்களையும் நீக்கி,வட மாகாணத்திற்கு காவற்துறை அதிகாரங்களை வழங்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார் என திவயின கூறியுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது, இந்த யோசனைகளை முன்வைக்க இருந்தது. வடபகுதிக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அரசாங்கத்தின் எந்த ஒரு அரசியல்வாதிக்கும், பலாலி விமான நிலையம் ஊடக யாழ்ப்பானத்திற்கு செல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என பாதுகாப்பு அதிகாரிகள் அரசாங்க…
-
- 0 replies
- 976 views
-
-
இராணுவ மயமாக்கல் - டக்ளஸின் தேவையற்ற தலையீடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் சரவணபவன் காட்டம் வடக்கிலே மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல் மற்றும் சிறிலங்காவின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தேவையற்ற தலையீடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் நேற்று (07.04.11) நாடாளுமன்றத்தில் காட்டமாக விசனம் தெரிவித்துள்ளார். வடபகுதியில் சகலவிதமான நிர்வாகப் பணிகளும் இராணுவ மயமான பாணியிலேயே இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட இவர், எந்த விடயத்திலும் ஆளுனரோ, படை அதிகாரிகளோ தலையிடும் நிலை உருவாகியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:' முப்பது வருடங்களின் பின்பு அபிவிருத்திக் காற்று மெல்ல மெல்ல வடக்கை நோ…
-
- 0 replies
- 931 views
-