ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
-எம்.றொசாந்த், பொ.சோபிகா, யோ.வித்தியா பிரேஸிலில் தயாரிக்கப்பட்ட 5 வாள்களை யாழ். மாவட்டத்திலிருந்து அண்மையில் கைப்பற்றியதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்தார். யாழ்;. பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெறும் மாதத் தொடக்கத்திற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (08) யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, 'பிரேஸில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 வாள்களை யாழில் அண்மையில் மீட்டுள்ளோம். அவை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த வாள்கள் யாரால், எங்கே, எப்போது கொண்டு வந்து விற்ப…
-
- 0 replies
- 358 views
-
-
ஜெனிவாவில் உபகுழுக் கூட்டங்களில் அழுத்தம் பிரயோகிக்கவுள்ள சர்வதேச நாடுகள் இலங்கை பதிலளிக்கும்; சூடுபிடிக்கிறது கூட்டத்தொடர் (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டங்களில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்பில் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்கா கனடா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்த உபகுழுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெனிவாவில் இலங்கை மனித உரிமை வி…
-
- 0 replies
- 139 views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வணிகர்களிடம் ஒருவாரத்துக்குப் போதுமான உணவுப் பொருள்களே கைவசம் உள்ளதாக யாழ்ப்பாண வணிகர் கழகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் சிவில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று நடந்த சந்திப்பிலேயே வணிகர் கழகப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர். யாழ்ப்பாண அரச அதிபர் கே.கணேஷின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு இடம்பெற்றது. தற்போதைய அசாதாரண சூழலில் பொருள்கள் கூடிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதுடன், அவை பதுக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அரச அதிபர் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சந்திப்பில் கலந்துகொண்ட வணிகர் கழகப் பிரதிநிதிகள், அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொருள்களைப் பதுக்கவோ, கூடுதல் விலைக்கு விற்கவோ வேண்டாம் என வர்த்தகர்களிடம் கோருவதாகத…
-
- 7 replies
- 2.8k views
-
-
கண்டியில் கள நிலவரங்களை பார்வையிட்ட பிரதமர் உள்ளிட்ட குழு!!! கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர். கண்டியின் சில பகுதிகளுக்கு விஜயம் செய்த பிரதமர் உள்ளிட்ட குழுவினர், தாக்குதல் நடத்தப்பட்ட மற்றும் சேதங்களுக்கு உள்ளாகிய வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகளுக்கும் சென்று பார்வையிட்டனர். கள நிலவரங்களை விசாரித்த பிரதமர் ரணில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டார். http://www.virakesari.l…
-
- 0 replies
- 213 views
-
-
இலங்கை நோக்கி விரையும் ஈரானிய கடற்படை! [ பிரசுரித்த திகதி : 2010-12-13 10:20:06 AM GMT ] ஈரானியக் கடற்படை தளபதி மற்றும் ஈரானிய கடற்படையின் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் அந்நாட்டின் பாரிய நாசகாரிக் கப்பலுடன் இலங்கை வந்துள்ளனர். இலங்கைக் கடற்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவு வைபவத்தில் கலந்து கொள்ளும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது. இலங்கை வந்துள்ள ஈரானிய கடற்படைத் தளபதி மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக் கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியக் கடல் எல்லைப் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் இவர்கள் ஆராயந்து வருகின்றனர். இதேவேளை,இலங்கைக் கடற்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் 26 நாட…
-
- 0 replies
- 904 views
-
-
இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடுமென ஐரோப்பிய நிறுவனங்கள் ஊகம்:- 17 ஆகஸ்ட் 2014 இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடுமென ஐரோப்பிய நிறுவனங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன. இலங்கையுடனான உடன்படிக்கைகளின் போது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படல் என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டு உடன்படிக்கைகள் தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய நிறுவனங்களின் இந்த நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஏற்றுமதி கடன் முகவர் நிறுவனங்கள் இவ்வாறு புதிய நிபந்தனைச் சரத்துக்களை உடன்படிக்கைகளில் உள்ளடக்கியுள்ளன. ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அப்போது சில ஏற்பாடுகள் செய்யப்படும் …
-
- 1 reply
- 453 views
-
-
பேஸ்புக் மீதான தடை நீக்கம் ! பேஸ்புக் மீதான தற்காலிக தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை அடுத்து கடந்த 7 ஆம் திகதிமுதல் நாட்டில் சமூகவலைத்தளங்களுக்கு தேசிய பாதுகாப்பு கருதி தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் வைபர் சமூக வலைத்தள சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் வட்ஸ்அப் சேவையும் வழமைக்குத் திரும்பியது. இந்நிலையில் பேஸ்புக் தொடர்பில் தற்காலிக தடை நீடிக்கப்பட்டிருந்த நிலையில் பேஸ்புக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இ…
-
- 0 replies
- 462 views
-
-
புலிகளுக்கு உதவிய இளைஞர்கள்: யூ.எஸ்ஸிடம் கையளிக்கிறது கனடா! ShareTweet தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைக்கு உதவி செய்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இருவர் கனடாவால் அமெரிக்காவிடம் கையளிக்கப்படுகின்றனர். பிரதீபன் நடராஜா, சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரே இவர்கள். இவர்கள் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று கடந்த வருடம் கனடாவின் கீழ்நிலை நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கி இருந்தது. இருவரும் இத்தீர்ப்புக்கு எதிராக ஒன்ராரியோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒரு ஏவுகணைகள், ஏ.கே-47 துப்பாக்கிகள் ஆகியவற்றை ஒரு மில்லியன் அமெ…
-
- 0 replies
- 596 views
-
-
மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் பலம் வெளிப்படுமா? அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு முன்பாக எந்த வகையிலேனும் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தி விடுகின்ற செயற்பாடுகள் மும்முரமாக இடம் பெறுவதை அவதானிக்க முடிகின்றது. கூட்டமைப்பினுள் இருந்து கொண்டே அதற்குக் குழி பறிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலில் வடக்குக் கிழக்கில் அதிக ஆசனங்களை கூட்டமைப்பு பெற்ற போதிலும், அதன் வாக்குவங்கியில் சிறிது சரிவு ஏற்பட்டதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தேர்தல் வியூகங்களை …
-
- 1 reply
- 309 views
-
-
சவேந்திர சில்வாவிற்கு அரசாங்கம் காணி அன்பளிப்பு!! [ பிரசுரித்த திகதி : 2010-12-30 07:08:20 AM GMT ] ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் 58ம் படைப்பிரிவின் பொறுப்பதிகாரியுமான மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வாவிற்கு, அரசாங்கம் காணியொன்றை அன்பளிப்பு செய்துள்ளது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இவ்வாறு காணித் துண்டொன்று அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. சாவேந்திர சில்வாவிற்கு காணி வழங்கும் யோசனைத் திட்டம் அமைச்சரவையில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வாவிற்கு பத்தரமுல்ல பிரதேசத்தில் 24 பேர்சஸ் காணியொன்று வழங்கப்பட்டுள்…
-
- 0 replies
- 300 views
-
-
மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம் எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் நலிவடைந்த பிரிவினர் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கூட்டாக கொண்டு வந்த கவன ஈர்ப்பு பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இந்நாட்டில் நாம் 1…
-
- 5 replies
- 331 views
-
-
இனப்படுகொலை மண்ணில் உலககோப்பை மட்டைப்பந்து போட்டி நடைபெறுவதை தடுப்போம்…இலங்கையை உலக கோப்பை கிரிக்கெட்டில் இருந்து நீக்க குரல் கொடுப்போம்… இலங்கையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடுத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல இலங்கை அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின் முதன்மையான அணிகளின் அலுவலுகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். ஒரு லட்சம் கையெழுத்துக்கள் குவிக்க உறுதி கொள்ளுங்க தோழர்களே… போராட்டம் ஆரம்பிக்கட்டும்… நாம் வெல்வோம்… http://www.change.org/petitions/view/boycott_of_sri_lanka_cricket_2011 http://www.eelamwebsite.c…
-
- 0 replies
- 765 views
-
-
சம்பந்தன் கருத்தை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி உணர்ச்சி பேச்சுக்களாலும் வெற்றுக் கோசங்களாலும் அரசியல் தீர்வை அடைய முடியாது என்றும், நடைமுறை யதார்த்த வழியிலேயே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் 15 வது தேசிய மாநாட்டில் கூறியிருப்பதோடு கடந்த காலங்களில் அரசியல் உரிமைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கிடைத்திருந்த பல நல்ல வாய்ப்புக்களையும் இழந்திருக்கின்றோம் என்பதையும் எற்றுக் கொண்டிருக்கின்றார். இது ஈ.பி.டி.பியினராகிய எமது நீண்டகால அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடேயாகும். ஆகவே நாம் அதனை வரவேற்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 10 replies
- 769 views
-
-
அக்டோபர் 28 - 29 இல் ஜெனிவாவில் பேச்சு! என்ன நடக்கும்? இலங்கை அரசு இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் புலிகளும் இணங்கியுள்ளனர். அனால் இது நடை பெறுமா? அல்லது பேச்சுகளுக்கு போய் முறியுமா? இலங்கை அரசு இந் மாத முடிவுக்குள் பேச்சுக்க போவகவிட்டால் உதவி கிடையுது என்ற மிரட்டலின் பின்னே அரசு இணங்கியுள்ளதாம்.
-
- 0 replies
- 883 views
-
-
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ். பிரதான வீதியை புனரமைப்புச் செய்யும் பணிகள் இன்று திங்கட்கிழமை முதல் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறன. அண்மைக்காலமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சேதமடைந்திருந்த இந்த வீதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டிருந்தன. இந்த வீதி திருத்த பணிகள் தொடர்பாக புனரமைப்பு வேலையில் ஈடுபட்ட ஆர். யோகேஸ்வரன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இந்த வீதி புனரமைக்கப்பட்டு வருகிறது. வீதியை அகலப்படுத்துவதற்காகவே இவ்வளவு காலமும் வீதி புனரமைக்கப்படாமல் இருந்தது என்றார். தைப்பொங்கல் விழாவையொட்டி யாழ்ப்பாணம் வரவிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரியாலைப் பகுதியில் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுவரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி மூன்று பிள்ளைகளின் தந்தையான அயலவரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை மாலை மேற்படி சிறுமியின் தந்தையினது பலசரக்குக் கடைக்கு சென்றுள்ள சந்தேக நபர் மழை பெய்வதால் குடையொன்றை கேட்டுள்ளார். இதன்போது அந்தநபருக்கு குடையொன்றை கொடுத்துள்ள சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியையும் கூடவே அனுப்பியதுடன் சந்தேக நபரின் சகோதரியின் வீட்டில் அவரை விட்டுவிட்டு குடையை எடுத்து வருமாறு சிறுமிக்கு அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு இந்நபருடன் சென்ற சிறுமி நெடுநேரம் ஆகியும் வீடு வந்து சேராததால் சிறுமியின் குடும்பத்தினரும், அயலவர்களும் சிறுமியை தேடியுள்ளனர். இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கும் அறிவி…
-
- 11 replies
- 1.7k views
-
-
ஆரம்பத்திலேயே சர்வதேசத்திடம் சரணடைந்திருக்கலாம்; மஹேஷ் சேனாநாயக்க போர்க் குற்ற விவகாரத்தில் ஒருசிலர் தனிப்பட்ட ரீதியில் கருத்துக்களை வெளியிட்டு செயற்பட்டதால் இலங்கை மீதான போர்க் குற்ற விவகாரத்தில் சர்வதேச ரீதியில் எரிகிற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியதுபோலாகிவிட்டது என இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இறுதிப்போரில் குற்றம் இழைத்திருக்காத போதிலும், போர் முடிந்த கையுடன் சர்வதேசத்திடம் சென்று சரணடைந்திருந்தால் சர்வதேசத்திடம் இருந்து வருகின்ற அறிவுறுத்தல்களை தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்த அவர், சர்வதேச பொறிமுறையை விட, உள்நாட்டுப் பொறிமுறைக்கு அடிபணிவதே தனது கடமை என்றும் கூறினார். …
-
- 1 reply
- 512 views
-
-
மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முழு அதிகாரமும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது – டக்ளஸ் கடற்றொழில் அமைச்சரென்ற வகையில் மீனவர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான முழு அதிகாரத்தையும், ஜனாதிபதி தமக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை- – இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இருதரப்பு இராஜதந்திர பேச்சு வார்த்தைகளை நாம் கைவிடவில்லையென்றும் சபையில் தெரிவித்த அமைச்சர், அந்த நடவடிக்கைகள் தொடர்வதாகவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது ஜேவிபி எம்பி விஜித ஹேரத் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச…
-
- 0 replies
- 188 views
-
-
வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான தரவுகளை தாக்கல் செய்ய அந்த நிறுவனங்களுக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. "நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்குள் அருகாமையில் உள்ள சிறிலங்கா காவல்நிலையங்களில் கடந்த 6 மாத கால வாகன விற்பனை தொடர்பான விவரங்களை கையளிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விற்கப்பட்டது எந்த வாகனம்? வாகனத்தின் இலக்கம், மாதிரி மற்றும் யார் வாங்கியது உள்ளிட்ட விவரங்களை காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. http://www.eelampage.com/?cn=29359
-
- 0 replies
- 893 views
-
-
யாழப்பாணத்தில் வாக்களிக்கத் தகுதியானோர் 696,587 பேர் 2011-01-15 21:34:14 யாழ் மாவட்டத்தில் உள் ளூராட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க 696,587 பேர் தகுதி பெற்றுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் திணைக்கள உதவித் தேர்தல் ஆணையாளர் பொ. குகநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 13 பிரதேச சபைகளுக்கும், 3 நகர சபைகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளதகாவும், இதில் 201 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு பிரதேச சபைகளிலும், நகர சபைகளிலும் 9 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 12 பேர் போட்டியிட முடியும் எனத் தெரிவித்த அவர், இவற்றில் 5 இளைஞர்கள் கட்டாயமாகப் போட்டியிட வேண்டும் என்றும் கூறினார். பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய…
-
- 0 replies
- 745 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக யுத்துக் குற்ற விசாரணைகள் இடம்பெறுகின்றமைக்கு புறம்பாக, சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் உதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கு மறுத்து வருகிறது. இந்த நிலையில் பான் கீ மூன் இவ்வாறு உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய நாடுகளின் வெளிவிவகார திணைக்களத்தின் குழுவினை அனுப்பவுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இ…
-
- 0 replies
- 338 views
-
-
எங்கிருந்தோ வந்த படையினருக்கு காணிகளை வழங்க சட்டத்தில் இடமில்லை! - என்கிறார் முதலமைச்சர். [Monday 2014-09-22 17:00] பொதுமக்களின் காணிகளை பொது மக்களின் நன்மை கருதி அல்லது தேவைகருதி மட்டுமே அரசாங்கத்திற்கு கையளிக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுன்னாகம், சபாபதிப்பிள்ளை முகாமில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு இன்று உதவிபொருட்கள் வழங்கிய பின்னர், கருத்து தெரிவிக்கும் போது, அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டேன் எந்த அடிப்படியில் பொதுமக்களின் காணிகளை அரசுக்கு கையளிக்கின்றீர்கள் என்று.அதற்கு அவர் சட்டத்தின் அடிப்படையில் என தெரிவித்தார…
-
- 2 replies
- 835 views
-
-
( எம்.எப்.எம். பஸீர்) கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டி ஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை ( 16) கண்டி பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். குடிபோதையில் வாகனம் செலுத்தி வெளிநாட்டு தூதுக் குழுவின் பயணத்துக்கு தடங்கல் ஏற்படுத்தியமை, பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனம் செலுத்திச் சென்றமை தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வெளிநாட்டு தூதுக் குழு கட்டுகஸ்தோட்டை பாலத்தை அண்மித்த பகுதியில் பயணிக்கும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்புக்கு சென்ற அதிகாரிகளின் தகவல்கள் பிரகாரம் சுதே…
-
- 2 replies
- 633 views
-
-
http://www.dailymotion.com/video/xgo1hu_yyyyyy-yyyyy-yyyyy_news
-
- 0 replies
- 918 views
-
-
உறவுகளுக்கு உணவு கிடைக்கும்வரை உண்ணாவிரதம் யாழ்கள உறவுகளே, எங்கள் தமிழ் மக்களை சிங்கள இனவாத அரசாங்கம் திட்டமிட்டு பட்டினி போட்டு அழித்து வருகின்றது. இதற்கு இந்தியாவும் மேற்கு நாடுகளும் நேரடி மற்றும் மறைமுக ஆதரவை வழங்கி வருகின்றன. போர்க்களத்தில் புலிகள் வீறு கொண்டு போராடுகின்றனர். அரசியலில் கூட்டமைப்பினர் உயிரை பணயம் வைத்து போராடுகின்றனர். ஈழத்திலும் சரி புலத்திலும் சரி தமிழர்கள் நாம் என்ன செய்கிறோம். எமக்கு துன்பம் ஏற்படும் போது எப்போதும் மாற்றனை குறை கூறுகின்றோம். எதிரி என்றுமில்லாதவாறு பாரிய அளவில் தமிழின அழிப்பை ஆரம்பித்துள்ளான். "எனக்கு பாதுகாப்பில்லை", "குடும்பச் சூழ்நிலை", "பண உதவி செய்தோம்" என்று கூறி …
-
- 11 replies
- 2.3k views
-