ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
ஜெனிவா பக்க அமர்வில் சரத் வீரசேகர குழு குழப்பம் – தமிழ்ப் பிரதிநிதிகளுடன் வாக்குவாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வில் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்குச் சமாந்தரமாக, பக்க அமர்வுகள் இடம்பெறுகின்றன. நேற்று சிறிலங்கா தொடர்பான பக்க அமர்வு ஒன்று, பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்துடன் இணைந்து, பசுமை தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், சிறிலங்காவில் இரு…
-
- 0 replies
- 115 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் இருவர், விசுவமடு குளத்தில் மூழ்கி இன்று சனிக்கிழமை(11) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா சென்று விசுவமடு குளத்தில் குளித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/150105#sthash.RE5kWYz1.dpuf
-
- 2 replies
- 436 views
-
-
புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி! இனியபாரதி. யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் மருத்துவமனையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட இடங்களில் இன்று வியாழக்கிழமை(02) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதிவான் நளினி சுபாகரன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் அரசினர் மருத்துவமனையை அண்மித்த தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீ…
-
-
- 5 replies
- 428 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் மன்னார் (Mannar) ஆகிய மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களை கடலரிப்பானது மிகமோசமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) மற்றும் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) ஆகியோர் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் இன்றைய (10.05.2024) அமர்வின் போதே அவர்கள் இதனை கூறியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடலரிப்பின் காரணமாக மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தின் கரையோரங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலை அண்மித்த கரையோர பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே …
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
புதன் 17-10-2007 19:01 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] போரே மகிந்தவிற்கு இலாபம் தரும் முதலீடாகிவிட்டது இதற்கான பிரதான காரணம் அவருக்கு உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் ஆதரவுத்தளம் வரவரக்குறைந்து வருகிறது. பதிலாக நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் உள்ளூரில் அவருக்கு எதிரான தரப்புகள் அதிகரித்தும் பலம் பெற்றும் வருகின்றன. இதற்கெல்லாம் பிரதான காரணம், அவரது அரசாங்கத்தின் அணுகுமுறையும் போக்குமே ஆகும். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஏறியுள்ள விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வுக்குக்காரணம் அரசாங்கத்திடம் பொருளாதாரம் இல்லை. கிடைக்கின்ற சகல உதவிகளையும் அரசாங்கம் போருக்கு செலவு செய்கிறது. இலங்கை பொருளாதார வளர்ச்சியைப்…
-
- 0 replies
- 948 views
-
-
மூன்று விடயங்கள் தொடர்பில் மீண்டும் அரசுடன் பேசுவோம்-சுமந்திரன்! Published on December 7, 2011-1:05 pm நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசாங்க உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தையில் மூன்று விடயங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூகையில், நேற்று மாலை, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதுபோல் அரசாங்க அங்கத்தவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்றைய அந்த பேச்சுவார்த்தையிலே மூன்று முக்கிய விடயங்களை அரச அங்கத்தவர்கள் ஏற்க மறுப்புத் தெரிவித்தனர். வடக்கு – கிழக்கு இணைப்பு, காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் ஆகிய முக்…
-
- 0 replies
- 699 views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கு அரசு ஒருபோதும் சம்மதிக்காது எனவும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் நேரத்தில் இப்படியான ஒரு கோசத்தை முன்வைப்பதாகவும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான றாஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். http://www.jdslanka.org/index.php/news-features/politics-a-current-affairs/540-unf-leadership-rules-out-self-government-for-tamils-in-sri-lanka அட அவங்களுக்கும் சம் சும்மின்ரை திருகுதாளங்களை சரியாத் தெரிஞ்சுதான் வைச்சிருக்கிறாங்கள்
-
- 4 replies
- 946 views
-
-
ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம் April 19, 2019 யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை மோதிய வாகனம் தப்பிச் சென்றுவிட்டது என கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புலம்பெயர் சமுகத்துடன் இன்று முற்பகல் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. எனினும் ஊடகவியலாளரிடம் வாக்குமூலம் எடுக்கப்படாத்தால் விபத்தா தாக்குதலா? என்று கூற முடியவில்லை. இந்தச் சம்பவம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு அண்மையில் இன்று முற்பகல் இடம்பெ…
-
- 1 reply
- 725 views
-
-
மருத்துவமனையொன்றை நாடியபோது வைத்தியர் ஒருவர் தன்னை பாலியல்தொந்தரவுக்குட்படுத்தியதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் பெண்ணொருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கையில் ஏற்பட்ட நோவிற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள தனியார் மருத்துவமனையொன்றை நாடியபோது வைத்தியர் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் பெண்ணொருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு கடந்த 2 ஆம் திகதி தான் சென்றதாக அப்பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில், சோதனை அறையொன்றுக்கு தான் அழைத்து…
-
- 0 replies
- 848 views
-
-
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது அதன் எதிர்காலப் பயணத்தின் ஆபத்தைக் முன்னரே கட்டியம் கூறுவதாகவுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தை மேலோட்டமாக பார்க்குமிடத்து அது சுயநிர்ணயம், சமஷ்டி, பகிரப்பட்ட இறையாண்மை போன்ற சொற்தொடர்களை பாவித்து ஏதோ வடகிழக்கு தமிழ் மக்களுக்காக தயாரிக்கப்பட்டது போன்ற தோற்றப்பாட்டை காட்டுகிறது. ஆனால் உண்மையில் அது எவ்வாறு சிங்கள மக்களை இயன்றவரை திருப்திப்படுத்த முடியும் என்ற வகையிலும் தனித்து தமிழரசுக்கட்சியென்ற ஒரு கட்சியை முதன்மைப்படுத்தும் வகையிலுமே தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் சுதந்திரத்துக்கு பின்னரான காலத்திலிருந்து அரசியல் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் ஒடுக்குமுறைக்குள்ளானவர்களாகம் மிகக் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைக் கோர்வைக…
-
- 0 replies
- 1k views
-
-
28 MAY, 2024 | 04:28 PM பொது வேட்பாளர் என்பது தமிழர் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்துகின்ற விடயம். ஜனாதிபதித் தேர்தலிலே தமிழர்கள் கடந்த காலத்தில் தமது விரல்களைச் சுட்டுக் கொன்றதை மறக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன். என ரணில் 2024 செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டமும் கலாசார நிலையாட்டு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் நட…
-
- 0 replies
- 148 views
-
-
லூயிஸ் ஆர்பரின் இலங்கை விஜயமும் மனித உரிமைகள் விவகாரமும் [30 - October - 2007] குரு நவீன இலத்திரனியல் ஊடகங்கள் கொடிகட்டிப் பறக்கின்ற இந்த யுகத்தில் எஃகுத் திரைகளுக்குப் பின்னால் எந்தத் தகவல்களையும், மறைத்து வைக்க எடுக்கின்ற நடவடிக்கைகள் திரைப்படங்களில் வரும் கோமாளித்தனம் பண்ணும் பாத்திரங்களின் செயல்பாடுகளுக்கு ஒப்பான நடவடிக்கையாகவே கணிப்பீடு செய்ய வேண்டியிருக்கின்றது. கடந்த மூன்று தசாப்தங்களாக நமது மண்ணில் நடந்து கொண்டிருக்கும் சிறுபான்மைச் சமூகங்களின் வாழ்வு தொடர்பான அவலங்கள் என்றோ சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குச் சென்றுவிட்டது. அதனை சர்வதேச சமூகத்தின் கவனத்திலிருந்து மறைப்பதற்காக எடுக்கப்படுகின்ற எந்த நடவடிக்கைகளும் காலம் கடந்து போன ஒரு அணுகுமுறையாகவே அமைய…
-
- 0 replies
- 729 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தினை செவிமடுத்து, ஆக்கபூர்வமான வகையில் செயற்பட இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும். நாட்டில் நிரந்தர கௌரவமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு எமது பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக உள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தானது ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய சகல தேவைகள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாக சுட்டிக்காட்டி நிற்கின்றது. இந்தியாவின் இத்தகைய நிலைப்பாடானது வரவேற்கத்தக்கதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப் பட…
-
- 1 reply
- 867 views
-
-
14 JUN, 2024 | 07:26 PM வடக்கின் மூன்று மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 3 பேர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், தொலைபேசி ஒன்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்டிருந்தன. இது தொடர்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் பாதிக்கப்பட்டவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
பிரித்தானிய சிறையில் அடைக்கப்பட்ட கருணா: ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டான் சிறீலங்கா துணை இராணுவக் குழு ஒன்றுக்குத் தலைமைதாக்கும் ஆயுததாரி கருணா ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று இலண்டனில் கைது பிரித்தானியக் குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள ஆயுததாரி கருணா அங்கு தடுத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கேம்பிறிச் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட கருணா தற்போது வேறு தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது http://www.pathivu.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
2012ல் மகிந்தர் தனது ஆட்சியை இழப்பார் என நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல யோசியர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து ஏன் அவர் ஆட்சிபீடத்தில் இருந்து இறங்க நேரிடும் என்பது போன்ற விடையங்களை அவர்கள் விளக்கியுள்ளனர். சிலருக்கும் யோசியம் மேல் நம்பிக்கை கிடையாது தான்! இருந்தாலும் இவர்கள் கூறுவது தமிழர்களுக்கு மனதளவிலாவது ஆறுதலைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. காணொளியைப் பாருங்கள். http://youtu.be/4NuavHlqftY http://www.vannionli...01/2012_02.html
-
- 15 replies
- 2.4k views
-
-
சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் நியமனம்! நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் வர்த்தகம் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். https://athavannews.com/2024/1389352
-
- 0 replies
- 197 views
-
-
திருந்தாத மகிந்த அரசும் வருந்தாத அனைத்துலகும்-சேனாதி- கடந்த ஒக்ரோபர் மாதம் 15 ஆம் நாள் அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் தாக்குதலை அடுத்த ஒருமாத காலத்துள் நடந்த குறிப்பிடத்தக்க மோதல்கள் அனைத்தும், சிறிலங்காப் படையினருக்கு ஒப்பீட்டளவில் அதிக சேதம் விளைத்தவையாகவே அமைந்திருந்தன. ஒக்ரோபர் 22 ஆம் நாள் அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மேல் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல், நவம்பர் 1 ஆம் நாள் மன்னார் பாலைக்குழி மற்றும் கட்டுக்கரைக்குளத்தில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு, 'பாதீட்டு நடவடிக்கை" என்ற கேலிப்பெயரைச் சம்பாதித்துக்கொண்ட நவம். 7 ஆம் நாளைய கிளாலி-முகமாலை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு என்பவற்றில் அரச படைகள் நிச்ச…
-
- 0 replies
- 756 views
-
-
காணாமற் போனவர்களின் விபரங்களை நேரில் திரட்டுகிறது கூட்டமைப்பு கடத்தப்பட்டோர், காணாமல் போனோர் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளோர் தொடர்பான விபரங்களை தற்பொழுது மக்களிடமிருந்தே நேரடியாக திரட்டுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. இவர்கள் தொடர்பான விபரங்களை அறிவதற்குப் பலவழிகளில் முயன்றும் அவை கிடைக்கப்பெறாததை அடுத்தே, இந்த நடவடிக்கைகயை மேற்கொள்ளத் தீர்மானித்ததாக வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் தங்களது குடும்பத்தில் காணாமல்போனோர் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளோர் தொடர்பான விபரங்களை அந்தந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் இந்த விடயத்தி…
-
- 2 replies
- 977 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை காலை சுபநேரமான 10.3க்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இலங்கையின் 19ஆவது பிரதமாராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். - See more at: http://www.tamilmirror.lk/152496#sthash.k1FvibfJ.dpuf
-
- 2 replies
- 498 views
-
-
கிளிநொச்சி தர்மபுரத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய மிலேச்சத்தனமாக குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.4k views
-
-
தமிழர் தரப்பை சந்தித்த பின்னரே சிங்கள தரப்புடன் பேச வேண்டும் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்கு வலியுறுத்தல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்எஸ்.எம்.கிருஸ்ணாவின் சிறிலங்காவுக்கான நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், தமிழரின் விருப்பை அறிந்த பின்னரே சிறிலங்கா அரசுடன் அமைச்சர் கிருஸ்ணா பேசவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்மைப்பு வலியுறுத்தியுள்ளது. http://naathamnews.com/2012/01/15/tna-india/
-
- 0 replies
- 616 views
-
-
தமிழர்களை பலியெடுத்த சிங்கள பேரினவாதம் முஸ்லிம் மக்கள் மீது திரும்பியுள்ளது -விக்னேஸ்வரன் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆரத்தழுவுவதாகவும் அவர்களின் துயரத்தில் பங்குகொள்வதாகவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப் பல தசாப்தங்களாக பலிகொண்டுவரும் சிங்கள பேரினவாதத்தின் பார்வை தற்போது முஸ்லிம் மக்களின் மீது திரும்பியிருக்கும் இந்த வேளையில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கைகோர்த்து, இணைந்த வடக்கு கிழக்…
-
- 3 replies
- 520 views
-
-
23 JUL, 2024 | 03:09 PM (நா.தனுஜா) சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் தேர்தலின் பின்னர் தாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான மீள்பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றியமைக்கப்போவதாக கூறுகின்றன. ஆட்சிபீடம் ஏறும் அரசாங்கம் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முற்படுகையில், முன்னைய அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மாற்றியமைக்கக்கூடும். தேர்தலின் பின்னர் தமக்கான நிவாரணங்கள் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் உயர்வாகக் காணப்படும். இருப்பினும் நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அடுத்து இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் தென்பட ஆரம்பித்துள…
-
- 0 replies
- 437 views
- 1 follower
-
-
வெள்ளி 07-12-2007 12:16 மணி தமிழீழம் [மயூரன்] உடவலவே பகுதியில் வாகனவிபத்து: 32 படையினர் காயம் அம்பாந்தோட்டை யால சரணாலயம் நோக்கி சென்ற சிறீலங்கா படையினரின் ரக் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் 32 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று காலை உடவலவே படை முகாமிலிருந்து படையினரை ஏற்றிக்கொண்டு சென்ற ரக் வண்டி செவனகலப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியது. இதன்போது காயமடைந்த 32 படையினரும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 2 replies
- 1.3k views
-