Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “நேசம் கல்வித்திட்டம் 2013″ பலமைப்பரிசில் மாணவர்களுக்கு உதவுங்கள். கடந்த வருடம் நேசக்கரத்தின் மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவு வழங்கிய அனைத்து நல்லிதயங்களுக்கும் முதலில் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள். நேசக்கரம் கல்வித்திட்டம் 2013ம் ஆண்டை கடந்த வருடத்து முன்னெடுப்பை விட பன்மடங்கு மேம்படுத்த வேண்டிய தேவையை கடந்த வருடம் பங்கேற்ற மாணவர்களின் தொகையும் பாடசாலைகளின் விண்ணப்பங்களும் உணர்த்தியுள்ளன. கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிப்புற்ற இடங்களைத் தெரிவு செய்திருந்தோம் இவ்வருடம் போரால் பாதிப்புற்ற வடகிழக்கு இரு மாகாணங்களையும் உள்ளடக்கிய பயிற்சி நெறிகளை முன்னெடுக்கவுள்ளோம். எமது பயிற்சிநெறியினை பெப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து ஆடிமாதம் வரை 7மாதங்களுக்கான ம…

    • 2 replies
    • 551 views
  2. “நேசம்” கல்வித் திட்டத்தில் இணைந்து புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு ‘நேசம் கல்வித்திட்டம் 2012′ புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா 12.11.2012 அன்று இந்து கலாசார மண்டபம் , நாவற்குடா , மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது. திரு. ஆ. ஜனனன் (அமைப்பாளர் – Bright Future – Nesakkaram) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிவஸ்ரீ உ. ஜெகதீஸ்வர குருக்கள் (J.P) , அருட்தந்தை ஓ.ஐ. ரஜீவன் அடிகளார் , திரு.கிரிதரன் (பிரதேச செயலாளர் மண்முணை வடக்கு மட்டக்களப்பு) திரு .மு. கமலராஜா (சமுக சேவை உத்தியோகத்தர் மண்முணை வடக்கு) ஆகியோர் கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து சிறப்புரைகளை வழங்கினர். ‘நேசம் கல்வித்திட்டம்’ சிறப்பபுச்சித்தியடைந்த 125ம…

    • 16 replies
    • 1.3k views
  3. “நொதேன் பவர் ” – பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடுகளை பெற சம்மதம்… October 28, 2020 யாழ்.சுன்னாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த “நொதேன் பவர்” நிறுவனத்தினால் பொறுப்பற்ற விதத்தில் வெளியேற்றப்பட்ட கழிவோயிலினால் பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் உற்பத்தி நிறுவனமான “நொதேன் பவர்” நிறுவனத்திலிருந்து வெளியேறிய கழிவோயில் அப்பிரதேசத்தை சூழவுள்ள வீடுகள் , தோட்டங்களின் குடிநீர் கிணறுகளில் கலந்தன. அதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை …

  4. “பச்சை” உடலைப் பாழாக்கும் யாழ்ப்­பாண இளை­ஞர்­க­ளுக்­கி­டை­யில் முளை­வி­டும் மற்­றொரு நாக­ரீ­க­மாக உரு­வெ­டுத்­துக் கொண்­டி­ருக்­கி­றது ‘பச்­சை’­­குத்­திக் கொள்­ளும் மரபு. இதைக் கொண்டு தமது உடல் அங்­கங்­களை அலங்­க­ரித்து மகிழ்­கி­றார்­கள் இவர்­கள். எமது பெண்­க­ளுக்­குள் முளை­விட்­டுப் படர்ந்­து­விட்ட நகை, நட்­டுக்­க­ளால் உடலை அலங்­க­ரித்­துக் கொள்­ளும் கலா­சா­ரத்தை ஒத்த தொன்­றா­கவே ‘பச்சை’ குத்­திக் கொள்­ளும் பழக்­கம் இளை­ஞர்­க­ளி­டத்­தில் காணப்­ப­டு­கி­றது. அதி­லும் போருக்­குப் பிற்­பட்ட, வெளி­நாட்டு, புலம்­பெ­யர் தொடர்­பு­கள் அதி­க­மி­ருக்­கும் சம காலத்­தி­லேயே இது உச்­சங்­கண்­டி­ருக்­கி­றது. பச்சை குத்­து­த­லில் ஏற்­பட்ட மாற்­றங்­கள் …

  5. “படையினர்கள் எப்போதும்.... அரசியலமைப்பிற்கு உட்பட்டே, செயற் படுவார்கள்” ஆயுதப்படையினர்கள் எப்போதும் அரசியலமைப்பிற்கு உட்பட்டு செயற்படுவார்கள் என பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் இணைப்பாளர்களை, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இராணுவத் தளபதி நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ஜெனரல் சில்வா, நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. மேலும் நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படை எப்போதும் செயற்படுவதாக இராணுவத் தளபதி…

  6. “படைவீரர்களுக்கான சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” : ஜனாதிபதி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் படைவீரர்களின் நலன்கள் மற்றும் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அத்துடன் நின்றுவிடாமல் அவர்களது நலன்களுக்காக செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். இன்று முற்பகல் மன்னார், முள்ளிக்குளம் இலங்கை கடற்படையின் வயம்ப தலைமையகத்தில் நடைபெற்ற மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எமது படையினருக்கான கௌரவத…

  7. “பட்டறிவைப் பயன்படுத்தத் தெரியாதவன்….” – கூட்டமைப்பு தொடர்பில் வித்தியாதரன் கடும் விமர்சனம்! தோல்வியிலும் பின்னடைவிலும் பாடம் படிக்காதவன், பட்டறிவைப் பயன்படுத்தத் தெரியாதவன், முன்னேறப் போவதில்லை. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்களினால் பிரதிபலிக்கப்பட்ட மனப்போக்கை தமிழ்க் கூட்டமைப்பு உணரவில்லையோ அல்லது உணரத் தலைப்படவில்லையோ என்பது புரியவில்லை. மக்கள் அளித்த தீர்ப்பு தெளிவானது. முன்னைய தேர்தல்களில் ஏறத்தாழ ஏகமனதாகக் கூட்டமைப்புக்கு பின்னால் நின்ற மக்கள் இன்று அதிலிருந்து கலைந்து போகத் தலைப்பட்டு விட்டார்கள். வடக்கு, கிழக்கில் இத்தனை தமிழ் எம்.பிக்களில் இத்தனை பேர் நாங்கள் என்று இதுவரை காலமும் பீற்றியடித்த கூட்டமைப்புப் பேச்சாளர் எம்…

  8. “பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும்” நிலைமை மாறிவிட்டது என்கிறார் ஜனாதிபதி (ப. பன்னீர் செல்வம்) பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தியது 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பே ஆகும் எனக் குற்றஞ்சாட்டிய ஜனாதிதி மைத்திரிபால சிறிசேன, ஒரு நாட்டின் வரலாற்றை அழிப்பது மன்னிக்க முடியாத குற்றமென்றும் குறிப்பிட்டார். கொழும்பு, மருதானை டார்லி வீதியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியினால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கல்வி பயிலும் கலாசாலையின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வ…

  9. “பண்டாரநாயக்க குடும்பத்தினர் எதிர்கொண்டவற்றை, என் மகனும் எதிர்கொள்வதை விரும்பவில்லை” August 8, 2021 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனது மகன் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருவதாகக் கூறப்பட்ட கருத்தை மறுத்துள்ளார். தனது மகன், அரசியலுக்கு நுழையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார்.. அரசியலுக்குள் நுழைவதற்கு மகனுக்கு விருப்பமில்லை. அதேபோல, அரசியலில் நுழைவதற்கான எந்த காரணமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். செயற்பாட்டு அரசியலில் இருக்கும் போது நானும், பண்டாரநாயக்க குடும்பத்தினரும் முகங்கொடுத்தவற்றை, தனது மகனும் முகங்கொடுத்துவிடக் கூடாது என்பதில், தான…

    • 5 replies
    • 602 views
  10. “பண்பாட்டு கலாசாரம் பேணப்படவேண்டும்” நல்லூர் திருவிழா காலத்தில் போது எமது பண்பாட்டு கலாசாரம் என்பன எவ்வாறு பேணப்படவேண்டும் என்ற தேவையுள்ளதோ அதே போல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியின் புனிதத்தன்மையினையும் பேணவேண்டிய அவசியம் உள்ளது. கடந்த திருவிழாக்காலங்களில் இத்தூபி உணவு உட்கொள்வர்களினதும், ஐஸ்கிறீம் குடிப்பவர்களினதும், இளைப்பாறுபவர்களின் அமைவிடமாக இருந்தது. இதனை கருத்திற்கு கொண்டு அதன் மகத்துவத்தினை, அதன் புனிதத்தினை பாதுகாக்கும் நோக்குடன் அதனை துப்பரவு செய்து அதனைச் சுற்றி வேலியமைக்க வேண்டும் என்று நேற்றைய யாழ்.மாநகர சபை அமர்வின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபனால்…

    • 1 reply
    • 289 views
  11. “பந்துல குணவர்தனவுக்கு ஏதேனும் நோயா என சிறிவிமல தேரர் என்னிடம் கேட்கிறார்” “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை எதிர்க்கிறேன் அது குறித்து பேசும் போது கவனமாக இருக்கிறேன்” நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை தான் எதிர்ப்பதாகவும் அது குறித்து பேசும் போது மிகவும் கவனமாக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி கெட்டம்பே ராஜமஹா விகாரையின் விகாராதிபதி கெப்பட்டிவில சிறிவிமல தேரரை நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்று பந்துல …

  12. “பயங்கரவாத யுத்தத்தை மீண்டும் உருவாக்க சாதகமாக அமையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்” (இராஜதுரை ஹஷான்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தினை வடக்கு, கிழக்கு பகுதிகளில் துக்க தினமாக அனுஷ்டிப்பது நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற பயங்கரவாத யுத்தத்தினை மீண்டும் உருவாக்குவதற்கு சாதகமாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் . இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வடகிழக்கில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமையானது வருந்தத்தக்க விடயம். ஆனால் தற்போது வடகிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் யுத்தத்தினை காரணம் காட்டி நாட்டை பிளவுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த…

  13. “பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைவிரித்தாடுகின்றது” பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தற்போது தலைவிரித்தாடுவதாக பொதுபலசேனா எச்சரித்துள்ளது. இலங்கையில், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயங்களா எனவும் அவ் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. இராஜகிரிய நாவல வீதியில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும் பேதே பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பய…

    • 3 replies
    • 302 views
  14. “பரந்தன் பூநகரி வீதி அரசியல்வாதிகளின் சட்டைப் பையுக்குள் சென்றுவிட்டது” June 26, 2022 வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் சட்டைப்பைக்குள் காணப்படுகின்றது. இதுதான் இலங்கையின் அபிவிருத்தி என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க, “பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? சாதாரணமாக அத்தகையவொரு வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம் இருக…

  15. “பரீட்சையில் அதிகளவான தமிழர்கள் சித்தியடைந்தமையால் பரீட்சை” இரத்து (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி ) அரச நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்திபெற்றவர்களில் அதிகளவானவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் குறித்த பரீட்சையை இரத்துச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிமல் ரத்நாயக்க எம்.பியும் சுமந்திரன் எம்.பியும் பாரளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு ஒரு வருடங்களின் பின்னர் பரீட்சை மோசடி நடைபெற்றதாகக் கூறி பரீட்சையை இரத்துச் செய்வது நியாயமற்றது என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல ஏற்றுக்கொண்டதுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில்…

  16. “பலவிடயங்களை சகித்துக்கொண்டே கூட்டமைப்பில் இருக்கின்றோம்” - விக்கி தரப்புடனான கலந்துரையாடலின் போது ரெலோ (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபகக்கட்சியினுள் ஒன்றாக இருக்கும் ரெலோ பல விடயங்களை சகித்துக்கொண்டு தான் அதனுள் இருக்கின்றது என்று விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் ரெலோவின் முயற்சியின் மற்றொரு கட்டமாக விக்னேஸ்வரன் தரப்பினை அவருடைய யாழ்.இல்லத்தில் ரெலோ சந்தித்திருந்தது. இதன்போது, விக்னேஸ்வரன் தரப்பில் விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழரசுக்கட்சியின் கடந்தகாலச் செயற்பாடுகளை சுட்டிக்காட்டினார்கள். குறிப்பாக, …

  17. “பழைய குருடி கதைவை திறடி” மீண்டும் கொழும்பில் பொலிஸ் பதிவு! January 14, 2022 வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருக்கும் நபர்களின் விவரங்களைத் திரட்டும் பணிகளில் மேல் மாகாண சமூக காவற்துறைப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இம்மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள், அலுவலகங்கள், வியாபார நிலையங்கள், அரச அல்லது தனியார் காணிகளில் இடம்பெறும் நிர்மாணங்கள் போன்றவற்றில் தற்காலிகமாக தங்கியிருப்போரின் விவரங்கள் திரட்டப்படும். தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு இ…

    • 1 reply
    • 347 views
  18. “பாதுகாப்பு வலயம் தாக்கப்படுவதை உலகம் அறிந்திருந்தது” – விக்கிலீக்ஸ் Monday, September 5, 2011, 0:27 இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது இலங்கைப் படையினர் தாக்கியதை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளும் அறிந்திருந்தன என்று அண்மையில் கசிந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன. இருந்தபோதிலும், தாம் அறிந்தவற்றை பகிரங்கப்படுத்துவதை உதவி வழங்கும் நாடுகள் நிறுத்திக்கொண்டன என்று பிபிசிக்கு கிடைத்த விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன. பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விவகாரத்தை, ”தான்” இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகரான பசில் ராஜபக்ஷ அவர்களிடம் எழுப்பியதாக, கொழும்புக்கான அப்போதைய அமெரிக்கத்தூதுவர் றொபேர்ட் பிளேக் அவர்கள், 2009 ஆம…

  19. “பாரதூரமான விளைவுகள் ஏற்படும்” – மஹிந்தவின் மிரட்டலுக்கு சம்பந்தன் பதில்! இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது. அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை அரசே முறித்துக் கொண்டது என்றும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர். “இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கூட்டமைப்பினரே இழுத்தடிக்கின்றனர், தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, அதனை தனது பலவீனம் என்று எவரும் கருதினால், பாரதூரமான விளைவுகள் ஏற்படும்” என்று ஜனாதிபதி அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது தெரிவித்தக…

    • 0 replies
    • 359 views
  20. “பாராளுமன்ற கலைப்பு சட்ட விரோதம் – உயர் நீதிமன்றம் செல்வோம்” November 10, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நேற்றையதினம் பாராளுமன்றம் சட்ட விரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடுகள் மிகத் தெளிவாக காணப்படுகின்றது எனவும் அதனை தவறாக அர்த்தப்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைப்பதனை உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையகமும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நாலரை ஆண்டுகளைக் கடப்பதற்கு முன்னர் அதனை ஜனாதிபதி கலைக்க முடியா…

    • 5 replies
    • 868 views
  21. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக பாரிய ராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். ஜெனீவாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள மேற்படி தீர்மானம் தீங்கற்றது எனவும் அது குறித்து இலங்கை கவலையடையத் தேவையில்லை எனவும் அமெரிக்கா தற்போது கூறியுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். எனினும் இது தொடர்பான அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை இலங்கை ஆதரவிக்க…

  22. “பாரிஸிலுள்ள தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம் அநேகமாக குட்டி பம்பாய் எனத் தவறாக அழைக்கப் படுகிறது” -ஆக்கம்: அமென்டா மொரோ அது அநேகமாக குட்டி பம்பாய் எனத் தவறாக அழைக்கப் பட்டாலும் சென்ட் டானிஸின் போபோக் வீதியிலிருந்து லா சப்பலின் வடக்கு வரை நீண்டிருக்கும் பகுதியின் கலகலப்பான உயிரோட்டமுள்ள சுற்றுப்புறம் உண்மையில் பரிஸில் வாழும் தமிழ் சமூகத்தினரது இருப்பிடமாகும். அந்தப் பகுதியிலிருந்து தவழ்ந்து வரும் காற்றின் நறுமணத்தில் கலந்திருப்பது பலதரப்பட்ட வண்ணமயமான கடைகளில் விற்பனையாகும் பட்டுத் துணியிலிருந்து கமகமக்கும் வாசனைத் திரவியங்கள் வரையானவற்றின் சுகந்தமே. இதன் முகப்புத் தோற்றம் எப்படியாயினும் இந்தப் பகுதியின் பிறப்பிடத்துக்கான துயரம் தோய்ந்த யதார்த்தத்தின் முகமூட…

  23. “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” ஆவணக் காட்சியகம் திறப்பு! September 23, 2023 தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமாகியதுடன் பின் வரலாற்று ஆவணக் காட்சியகத்தை மூன்று பிள்ளைகளின் மாவீரர்களின் தாய் சுடரேற்றி ஆரம்பித்து வைத…

  24. 23 Dec, 2025 | 04:53 PM ஆழ்கடல் மீன்பிடியின் இரை மீன் தூண்டில் முறையில் இரையாகப் பயன்படுத்தப்படும் பாலை மீன் எனப்படும் மீன் வகையை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.12.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 23 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் விசேட மீன்வகையான சூரை மீன் (tuna) இனத்திற்குரிய மீன்களைப் பிடிப்பதற்காக பலநாள் கடற்கலன் உரிமையாளர்கள் ஆழ்கடல் மீன்பிடியின் இரை மீன் தூண்டில் முறையைப் பயன்படுத்துகின்றனர். அதற்கான இரையாக ஊசிக்கணவாய் மற்றும் பாலை மீன், சூடை, பறக்கும் மீன் …

  25. “பி.சி.ஆர் விவகாரம்” – யாழ்.பல்கலை மருத்துவபீடத்தின் குற்றச்சாட்டுக்கு ஆ.கேதீஸ்வரன் பதில் 78 Views கடந்த சில நாட்களாக குடாநாட்டின் ஊடகங்கள் சிலவற்றில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கோவிட்-19 தொற்றுக்கான பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கு வடமாகாணத்தின் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அசண்டையே காரணம் என்ற வகையில் செய்திகள் வெளிவந்துள்ளதை அவதானித்து கவலையடைவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவிட் பெரும் தொற்று இலங்கையில் ஆரம்பித்த காலத்தில் வடமாகாணத்தில் கோவிட் தொற்றுக்குரிய பிசிஆர் பரிசோதனை வசத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.