ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
(இராஜதுரை ஹஷான்) 115 வருட கால பழைய மஹவ - ஓமந்தை புகையிரத பாதை முழுமையாக புனரமைக்கப்பட்டு தற்போது பாவனையில் உள்ள புகையிரத பாதையினை முழுமையாக நீக்கும் வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. செயற்திட்ட ஒப்பந்த நிறுவனமான ஐகோன் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் பங்குதாரர்களுடன் குறித்த நிர்மாணப்பணி ஒப்பந்தத்தில் அமைச்சர் கைச்சாத்திட்டார். வடக்கு புகையிரத சேவையில் மஹவ - ஓமந்தை இடையிலான புகையிரத பாதை 133 கிலோ மீற்றராகும். மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையிலான புகையிரதப்பாதை 1904…
-
- 0 replies
- 362 views
-
-
115,000 கோடியை கடனுக்காக வழங்குவதால் ரூபாவின் பெறுமதி குறையும் ஆபத்து மிகவும் மோசமான முறையில் வீழ்ச்சி அடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் உறங்குவதாக நாட்டின் உயர்மட்ட வங்கியின் அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக குற்றசாட்டிய தினத்தன்றே இலங்கை மத்திய வங்கியினால் 115,000 கோடியை விடுவிக்கும் முடிவானது ரூபாவின் மதிப்பிழப்பு உள்ளிட்ட பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வணிக வங்கிகளால் மத்திய வங்கியில் கட்டாயம் வைப்புச் செய்ய வேண்டிய நிதியின் அளவை நான்கு வீதத்தில் இருந்து இரண்டு வீதமாக சட்டரீதியான இருப்பு விகிதத்தை (SRR) குறைப்பதன் மூலம் கடன் வழங்க வசதியாக 115 பில்லியன் ரூபாவை விடு…
-
- 0 replies
- 443 views
-
-
118 நீதிபதிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்! March 13, 2022 நாடளாவிய ரீதியில் 118 நீதிபதிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சன்ஜீவ சோமரத்தினவினால் உரிய வகையில் இடமாற்ற கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதியில் இருந்து இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வடக்கு கிழக்கில் உள்ள நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிமன்றில் கடமையாற்றும் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா பருத்தித்துறை மாவட்ட நீதிவான் …
-
- 0 replies
- 134 views
-
-
118வது பிறந்த தினம் தந்தை செல்வாவின் 118வது பிறந்த தினமான இன்று மலர்மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தந்தை செல்வா அறங்காவல் சபை தலைவர் பேராயர் ஜெபநேசன் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை 09.30 அளவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தும், சதுக்கத்திற்கு மலர் வைத்தும் அஞ்சலி செலுத்தினார்கள். http://tamil.adaderana.lk/news.php?nid=2109&mode=head
-
- 0 replies
- 384 views
-
-
119 ஆவது ஜனன தினம் எஸ்.நிதர்ஸன் தந்தை செல்வாவின் 119 ஆவது ஜனன தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்குக்கு முன்னால் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில், இன்று (31) நடைபெற்றன. தந்தை செல்வாவில் உருவச்சிலைக்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா மலர் மாலை அணிவித்தார். அவரைத் தொடர்ந்து வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் வ.கமலேஸ்வரன் மலர் மாலை அணிவித்தார். இதன் பின்னர் தந்தை செல்வாவின் சமாதிக்கு மாவை சேனாதிராசா உட்பட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அரசியல் பிரமுகர்கள்; அஞ்சலி செலுத்தியிருந்தனர். மேலும் கட்சி ஆதரவாளர்கள்; பலரும் கலந்து கொண…
-
- 0 replies
- 165 views
-
-
119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் Dec 18, 2025 - 04:48 PM 119 அவசர அழைப்பு இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான ஏனைய குறுந்தொலைபேசி இலக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தி இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். '119' அவசர அழைப்பு சேவைக்குக் கிடைக்கும் அழைப்புகளை ஆராயும்போது, பொலிஸார் உடனடியாகச் செயற்பட வேண்டிய முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, பொய்யான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய அவசர சேவைகளுக்குப் பாரப்படுத்த வேண்டிய முறைப்பாடுகளையும் இந்த அழைப்பு மையத்திற்கு வழங்கி, அதனைத் தவறாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உண்மையான…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
11ஆம் திகதி ஊரடங்கு தளர்வு: மட்டக்களப்பு நிலைமை குறித்து ஆராய கூடியது கொரோனா செயலணி! by : Litharsan நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் வரும் 11ஆம் திகதி நீக்கப்பட்டு, நாடு வழமைக்குத் திரும்பவுள்ள நிலையில் மட்டக்களப்பு நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கொரோனா செயலணிக் கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தா, இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு போதனா வ…
-
- 0 replies
- 769 views
-
-
11ஆவது நாளாகவும், தொடரும்... மக்கள் எழுச்சிப் போராட்டம்! காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 11ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். அத்தோடு, குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர். ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1277207
-
- 2 replies
- 222 views
-
-
11ஆவது போர் வெற்றி விழா இன்று மாலை Leftin May 19, 2020 11ஆவது போர் வெற்றி விழா இன்று மாலை2020-05-19T10:11:31+00:00Breaking news, உள்ளூர் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் 11ஆவது போர் வெற்றி விழாவை சிங்கள தேசம் இன்று கொண்டாடுகின்றது. இந்த விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாடாளுமன்றத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெறுகின்றது. இன்றைய போர் வெற்றி விழாவில் 14 ஆயிரத்து 617 இராணுவத்தினருக்குப் பதவி உயர்வுகளும் வழங்கப்படவுள்ளன. இலங்கையில் இராணுவ வரலாற்றில் இடம்பெற்றுள்ள பதவி உயர்வு நிகழ்வுகளில் ஒரு நாளில் அதிக இராணுவத்த…
-
- 30 replies
- 3.3k views
- 1 follower
-
-
11இளைஞர்கள் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டமை, கோத்தபாயவுக்கும் தெரியும்…. March 5, 2019 கொழும்புக்கு அண்மித்த பகுதியில் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரனாகொட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவையும் இந்த விவகாரத்தில் சிக்கவைத்துள்ளார். வசந்தகரனாகொட தான் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்காக நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில் கோத்தாபய ராஜபக்சவிற்கும் இந்த விவகாரம் குறித்து தெரியும் என குறிப்பிட்டுள்ளார். 11 தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட விடயம் எவ்வாறு இடம்பெற்றது என தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வசந்தகரனாகொட கொழும்பில் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்பட…
-
- 0 replies
- 424 views
-
-
11வயதில் புலியாகியவன் 17வயதில் தன்னிரு கண்களையும் ஒரு கையையும் இழந்து போனான். இன்று 31 வயது இவனுக்கு. வெற்றிகள் தந்து எங்களை வீரத்தின் அடையாளங்களாக்கிய இவர்கள் இன்று ஒரு நேர உணவுக்கே அல்லாடுகி்றார்கள். இரு கண்களையும் ஒரு கையையும் இழந்து இன்று உதவிகள் எதுவுமற்ற நிலையிலும் தன்னம்பிக்கையுடன் விவாசயம் செய்ய ஒரு தண்ணீர் இயந்திரத்தைக் கேட்கிறான். இவனது குரலைக் கேளுங்கள்.....யாராவது கருணை மனம் படைத்தோர் இவனுக்குக் கைகொடுங்கள்.
-
- 0 replies
- 2.1k views
-
-
11வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்து, அதை வீடியோ படம் எடுத்த ஆசிரியர் கைது! - மட்டக்களப்பில் சம்பவம். [sunday, 2014-04-20 09:58:53] மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றில் தனியார் கல்வி நிலையமொன்றில் 11வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்து அதனை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ படம் எடுத்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து தங்களிடம் ஒப்படைத்தாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரியகல்லாறு 1ஆம் வட்டாரத்தில் ஆங்கில கல்வி நிலையமொன்றிலேயே இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியர் மட்டக்களப்பு பிள்ளையாரடிப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், குறித்த ஆசிரியரின் கையடக்க தொலைபேசியை கைப்பற்றிய…
-
- 2 replies
- 630 views
-
-
ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபா மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 12ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/262075
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
12 ஆம் திகதி நடைபெறும் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்திலேயே அடுத்த தீர்மானம் (ஆர்.ராம்) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஆராயப்பட்ட பின்னரே அடுத்த கட்ட தீர்மானங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்விடயம் குறித்து தெரியவருதாவது, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான சந்திப்ப…
-
- 0 replies
- 265 views
-
-
12 ஆயிரம் புலிகள் விடுதலையா? 38 தமிழ்க் கைதிகளின் பிணையா பாரதூரமானது? : ரணில் கேள்வி 12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை கடந்த ஆட்சியில் விடுதலை செய்தது பாரதூரமானதா? அல்லது 38 தமிழ்க் கைதிகளை பிணையில் விடுவித்தமை பாரதூரமானதா? என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர்களின் மீதான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதமர் விக்கிரமசிங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். சிறைச்சாலையிலுள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மகிந்த தரப்பு அணியினர் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பதிலளி…
-
- 0 replies
- 635 views
-
-
சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12000 வெளிநாட்டவர்கள் உரிய வீசாயின்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்தார். இவ்வாறானவர்கள் நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாதெனத் தெரிவித்த அவர் இவர்களைக் கைதுசெய்து நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவவும் குறிப்பிட்டார். உரிய வீசா அனுமதியில்லாமல் 12000 வெளிநாட்டவர்கள் நாட்டில் தங்கியுள்ளனர். சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டில் உள்ளனர். இவர்கள் அனைவரையும் கைது செய்து கூடிய விரைவில் நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டவர்களில் அதிகமானவர்கள் சுற்றுலா வீ…
-
- 0 replies
- 425 views
-
-
12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர் க.இன்பராசா தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. கடந்த ஆட்சியில் 12 போராளிகள் புனர்வாள்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எதையும் அவர்கள் செய்யவில்லை. சாதாரணமாக அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை விடுதலை செய்வதாக கூறப்பட்ட போதிலும் அவரைகூட இவர்களால் விடுதலை செய்ய முடியவில்லை. அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளிலேயே வாழ்கின்றனர். இந்த நிலையில் மொட்ட…
-
- 21 replies
- 1.8k views
- 2 followers
-
-
12 ஆயிரம் முன்னாள் புலிகளை மீண்டும் கைதுசெய்யவேண்டும் சர்வதேச நீதிபதிகளை ஏற்க முடியாது என்கிறார் சம்பிக்க (ஆர்.யசி ) சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க அரசாங்கம் தயாராக இல்லை; சர்வதேச நீதிபதிகளை அனுமதித்து தமிழ் மக்களின் நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என தமிழர் தரப்பு எதிர்பார்க்கின்றது என்றால் அது தமிழீழத்தை தரவேண்டும் என்று கோருவதற்கு சமனாகும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இராணுவம் விதிமுறைகளை மீறி செயற்பட்டிருந்தால் அது தொடர்பில் ஆராயவேண்டும். அதேபோன்று புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் விசாரிக்கவேண்டும். விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேரை ம…
-
- 1 reply
- 452 views
-
-
[size=4]தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாம் ஈழத் தமிழர்கள் கடந்த 12 நாட்களாக தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது முகாமில் நான்கு பேர் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.[/size] [size=4]மருத்துவமனையில் 9 பேர்கள் உண்ணாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில் ஜகன் என்பருக்கு இதயத் துடிப்பு குறைந்து கொண்டு வருகிறது.[/size] [size=4]நர்மதன், சதீஸ் குமார் ஆகியோருக்கு சிறுநீரில் இரத்தம் வரத் தொடக்கி நிலைமை கவலைக்கிடமாகி வருகிறது,[/size] [size=4]செந்தூரன் அவர்களுக்கு இரத்தப் போக்கு தொடர்ந்து நிற்காமல் இருக்கிறது. இதனால் இந்த நால்வரின் நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது.[/size] [size=4]தமிழ…
-
- 2 replies
- 578 views
-
-
23 Dec, 2025 | 12:50 PM சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (23) கைது செய்துள்ளனர். "தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் நீர்நிலைகளுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் இலங்கையைச் சேர்ந்த கண்காணிப்புக் குழுவால் கைது செய்யப்பட்டு, அவர்களது படகுடன் தீவில் உள்ள கடற்படைத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்" என தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (22), இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட மீனவர்களுக்கு சுமார் 450 டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு …
-
-
- 2 replies
- 230 views
-
-
12 இந்திய மீனவர்கள் கைது.! அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரின் ஒத்துழைப்புடன் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த இந்த மீனவர்களை கைது செய்துள்ளனர். இந்த மீனவர்கள் பயணித்த இரண்டு மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/18286
-
- 0 replies
- 171 views
-
-
12 இந்திய மீனவர்கள் விடுதலை கடந்த வாரம் பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 12 பேரும் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். எனினும், மீனவர்கள் சென்ற பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகை அரசுடமையாக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/12-இநதய-மனவரகள-வடதல/175-299965
-
- 1 reply
- 322 views
-
-
எஸ்.சசிக்குமார் இராச பல்லிகளை 12 ஐ முச்சக்கர வண்டியொன்றில் எடுத்துசென்ற போது திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிலுள்ள தானியகம என்னும் இடத்தில் வைத்து சனிக்கிழமை கைது செயய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த மூவரையும் திருகோணமலை பதில் நீதவான் திருச்செந்தில்நாதன் முன்னிலையில் சனிக்கிழமை மாலை ஆஜர்செய்தபோதே அந்த மூவரையுமு; 50,000 ரூபா சரீர பிணையில் நீதவான் விடுதலை செய்தார். இந்த மூவரையும் கைது செய்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மே மாதம் 5 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி ஜே.எம்.லாகீர ஆஜராகி இருந்தார். கைப்பற்றப்பட்…
-
- 0 replies
- 355 views
-
-
12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டை அறிமுகம்! 12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்த அடையாள அட்டைகளில் உள்ள 9 இலக்கங்கள், நான்கு பாகங்களாக பிரிக்கப்படும். இதன்படி முதல் பாகத்தில் உள்ள இரண்டு எண்கள், நபரின் பிறந்த ஆண்டை குறிக்கும். …
-
- 0 replies
- 453 views
-
-
12 SLA soldiers missing in Mankerni fighting- Defense Ministry [TamilNet, Saturday, 07 October 2006, 16:26 GMT] Twelve soldiers of the Sri Lanka Army (SLA) have been reported missing in the fight with the LTTE in Mankerni area, private electronic media reported Saturday evening quoting defence ministry sources. The defence ministry has brought this disappearance to the notice of the International Committee of Red Cross (ICRC). Further search operation has been launched to locate the missing soldiers, electronic media reports said quoting military sources. Meanwhile, LTTE Trincomalee Political Head S. Elilan said Saturday that Colombo had refused to a…
-
- 5 replies
- 2.4k views
-