ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக இலங்கை இராணுவத் தலைமையகம் குற்றம்சுமத்தியுள்ளது. 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் படையினரின் எண்ணிக்கை பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 8420 கட்டிடங்களில் இருந்து படையினர் வெளியேறியுள்ளனர். தனியார் கட்டிடங்களும் பலாலியில் உள்ள கட்டிடங்களும் இதில் அடங்கும்.அதிலும் கடந்த வாரத்தில் சுமார் 200 சிறிய படைமுகாம்கள் மூப்பட்டு அதில் உள்ள படையினர் பிரதான முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இந்தநிலையில் படையினரின் கண்காணிப்புகள் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக இலங்கை இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. http:/…
-
- 0 replies
- 320 views
-
-
ஐந்து மாணவர்கள் கடத்தல் விவகாரம்: காணாமல் ஆக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு மிக விரைவில் அறிவிக்கவுள்ள நீதிமன்றம் (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்களில் மூவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு (ஹபயாஸ் கோப்பர்ஸ்) விசாரணைகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. இந்நிலையில் சாட்சி விசாரணைகளை நிறைவு செய்த கொழும்பு பிரதான நீதிவான், இந்த காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளார். இதனையடுத்து அந்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் வெளிப்படுத்தவுள்ளது. கடந்…
-
- 0 replies
- 228 views
-
-
வன்னிமக்களின் சொத்துக்கள் விற்பனையாகும் கள்ளச்சந்தை திகதி: 18.03.2010 // தமிழீழம் வன்னி ஆக்கிரமிப்பின் பின்னர் மக்களால் கைவிடப்பட்ட வன்னி மக்களின் சொத்துக்கள் பரந்தன் உமையாள்புரம் பகுதியில் வைத்து மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாவது தொடர்பிலான தகவல்கள் வெளிவந்துள்ளன. உமையாள்புரம் பகுதிக்கு கொண்டுவரப்படுகின்ற உழவியந்திரம் உட்பட்ட ஊர்திகள் மற்றும் உந்துருளிகள் அங்குள்ள பாரிய பதுங்குகுழி ஒன்றினுள் இறக்கப்பட்டு கழற்றப்படுகின்றன. கழற்றப்பட்ட உதிரிப்பாகங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தும் தென்னிலங்கை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் இருந்தும் செல்லும் கொள்வனவாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பனைசெய்யப்படுகின்றன. உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நபர்கள் வன்னியில் …
-
- 0 replies
- 559 views
-
-
GTBC.FMன் விழுதுகள் நிகழ்ச்சியில் தர்மலிங்கம் சித்தார்த்தன்:- 1) இலங்கையின் அரசியல் அமைப்பு சொல்கிறது மாகாண சபையின் ஆளுநர் நிறைவேற்று அதிகாரமுடையவர். 2) மாகாண சபையை ஒரு தீர்வாக நாம் கருதவில்லை - மாகாண சபை இனப்பிரச்சனைக்கான தீர்வும் மையாது என்பதில் தெளிவாக உள்ளோம். 3) ஒரு அரசியல் தீர்வு என்பது அரசியல் மைப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமே ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வைக் கொண்டு வரமுடியும். 4) TNA அரசாங்கத்துடன் பேசும் போது தரவுகள் வடிவிலே தீர்வு குறித்து கொடுத்திருக்கிறோம். 5) 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டபோதே விடுதலை இயக்கங்கள் இதனை தீர்வாக ஏற்கவில்லை. 6) "மாகாண சபை முறைமையை இந்தியப் பிரதமர் கொண்டுவந்த போது நடத்திய முக்கிய கூட்டத்தில் …
-
- 3 replies
- 608 views
-
-
அரசாங்கத்திற்கான... உற்சாகமூட்டல்களே, போராட்டங்கள் – வைராக்கியத்துடன் எதிர் கொள்வோம் என்கிறார் டக்ளஸ் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான உற்சாகமூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் சகஜ நிலைக்கு திரும்பும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று(சனிக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு பல்வேறு காரணங்கள் இரு…
-
- 18 replies
- 957 views
-
-
'வியாபாரத்தை எவ்வாறு நேசித்து அணுகுகின்றோம் என்பதிலேயே அதன் வெற்றி தோல்வி தங்கியுள்ளது" வியாபாரம் என்றால் அது ஒரு தொழில் ரீதியிலான உறவுமுறை. அதை எப்படி நாம் நேசிக்கின்றோம், அணுகுகின்றோம் என்பதிலேயே அதன் வெற்றி, தோல்வி தங்கியுள்ளது. இலங்கையின் அந்நியச்செலாவணி வருமான ஈட்டலில் எனது நிறுவனத்தின் சிறு பங்களிப்பும் உள்ளது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என சிறந்த தொழில் முயற்சியாளருக்கான தேசிய விருதினை பெற்றுக்கொண்ட இளம் வர்த்தகர் சு. வெங்கட சரண்ய ஐயர் தெரிவித்தார். 2012– 2013 ஆம் ஆண்டுக்கான ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளருக்கான விருது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சு. வெங்கட சரண்ய ஐயருக்கு அண்மையில் கிடைத்…
-
- 10 replies
- 1.5k views
-
-
அவசரகால நிலைமை பிரகடனம், ஊரடங்கு சட்டம் சமூக வலைத்தள இடையூறு சட்டவிரோதமானவை - சுமந்திரன் ( எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்ததும் அதனை பாராளுமன்றின் அனுமதிக்காக முன் வைக்க வேண்டும். எனினும் இங்கு அச்சட்டம் பாராளுமன்ற அனுமதிக்காக முன் வைக்கப்படாது ஏப்ரல் 5 ஆம் திகதி மீளப் பெறப்பட்டுள்ளது. அதனால் ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்தமை, ஊரடங்கு சட்டம் பிறப்பித்தமை, பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக் குழு ஊடாக சமூக வலைத் தளங்களின் செயற்பாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் என்பன சட்டத்துக்கு முரணனாவை. என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று (7) உயர் நீதிமன்றில் வாதிட…
-
- 1 reply
- 365 views
-
-
ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணும் மோசடி - 12 இந்திய கணனி தொழில் நுட்பவியலாளர்கள் ஈடுபட்டனர். கொழும்பு நிருபர் சனிக்கிழமை , ஏப்ரல் 3, 2010 கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணூம் போதான மோசடிகளில் ஈடுபடுவதற்காக 12 கணனி தரவு நிரற்படுத்தும் தொழில் நுட்ப நிபுணர்கள் இந்தியாவில் இருந்து மஹிந்த அரசினால் வரவளைக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு சிங்கள இணையதளம் ஒன்று கூறியுள்ளது. இந்த 12 பேரும் இந்தியாவில் பிரபல கம்பனி ஒன்றில் பணி புரிகின்றவர்கள். இந்த கம்பனி இலங்கையில் பல்வேறு வியாபாரங்களை மஹிந்த அரசின் மூலம் செய்துவருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது. இலக்கம் 5 ஸ்ரேசன் ஒழுங்கை, பார்க் ரோட், நாரகென் பிட்டியில் இவர்கள் தங்க வைக்கப்படிருந்தனர் எனவும் கூறப்படுகின்றது. இந்த 12…
-
- 1 reply
- 845 views
-
-
ரோஹிங்யா அகதிகள் மீதான அத்துமீறல் : மேலும் இருவரை கைது செய்ய இரு தனிப்படை மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செய்த அத்து மீறல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் முன்னின்று செயற்பட்ட மேலும் இருவரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த இரு தனிப் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிருலப்பனை, பூர்வாராம விகாரையின் அரம்பேபொல ரத்னசார தேரர் மற்றும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளான மஹவாதுவ, வாதுவை பகுதியைச் சேர்ந்த பிரக…
-
- 0 replies
- 226 views
-
-
அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை – 113க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை, பெற்றுள்ளதாக எதிர்க் கட்சி அறிவிப்பு! அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமது கட்சி 113க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, அரசாங்கத்திலிருந்து வெளியேறியவர்கள் தமக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதால், பிரேரணைக்கு தேவையான எண்ணிக்கை தங்களிடம் உள்ளதாக தெரிவித்தார். இடைக்கால அரசாங்கத்தில் இருந்து விலகி இருப்பதே தங்களின் முந்தைய நிலைப்பாடாக இருந்தது என்றும் ஆனால் தாங்கள் இடைக்கால அரசாங்கத்தில் பதவிகளை ஏற்காவிட்டால், நம்பிக்கையில்லா பிரேரண…
-
- 0 replies
- 94 views
-
-
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் படம் மெர்சல். தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு கேளிக்கை வரி, சென்சார் பிரச்சனை, விலங்கு நல வாரியம் நோட்டீஸ் என ஒரு பக்கம் பல பிரச்சனைகள் இருந்தாலும், ரசிகர்களின் ஆரவாரம் மறுபக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மெர்சல் வெளியாகவுள்ள தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. இந்நிலையில் மெர்சல் படத்தை வரவேற்பதில் தமிழகத்திற்கு இணையான அளவிற்கு இலங்கை ரசிகர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். அங்கு ஒரு லட்சம் மதிப்பில், 80 அடியில் விஜய்க்கு கட்- அவுட் வைத்துள்ளனர். மேலும் பல இடங்களில் சிறிய அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்…
-
- 20 replies
- 2.9k views
-
-
சீனா ஒத்துழைக்காவிடின் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு கேள்விக்குறியாகலாம் - இலங்கைக்கு எச்சரிக்கை (லியோ நிரோஷ தர்ஷன்) நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடியும் மேலோங்கியுள்ளது. இதனால் உண்மையான பொருளாதார பிரச்சினைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. இந்திய நிதியுதவிகள் மே மாதத்துடன் முடிவடைகின்றமையால் நாட்டின் உண்மையான பிரச்சினைகள் இனிமேல் தான் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறிப்பாக எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் இலங்கை எதிர்கொண்டுள்ள கடும் நெருக்கடிகளே எதிர்வரக் கூடிய பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமாகும். எனவே, இலங்கையின் இறுதி எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின்…
-
- 0 replies
- 90 views
-
-
400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சேமிக்க உதவும் வானூர்தி தொழினுட்பத்தைக் கண்டறிந்த தென்மராட்சி இழைஞருக்கு இலண்டன் அரசு பாராட்டு. [Tuesday, 2014-03-11 19:59:28] 400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் வானூர்தி நிறுவனங்கள் சேமிக்க உதவும் தொழினுட்பத்தைக் கண்டறிந்தவர், தென்மராட்சி இளைஞர். முனைவர் சிதம்பரநாதன் சபேசன். அன்னாரை உலகம் இன்று வியந்து பாராட்டுகிறது. 1984இல் பிறந்த இவர். 2003 12ஆம் ஆண்டுத் தேர்வுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்தவர். அதற்குமுன்பு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் படித்தவர். மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பொறியியலாளராக முதலாண்டு படிக்கையிலேயே புலமைப் பரிசில் பெற்று பிரித்தானியா சென்றார். செபீல்டு பல்கலையில் மின்னணுப் பொறியியல்…
-
- 31 replies
- 2.1k views
-
-
அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் சிறந்த தீர்வு கிடைக்குமென எதிர்பார்ப்பதாக வட மாகாண சபை உறுப்பினர் எம். கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த சந்திப்பில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஜனாதிபதியை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே எம். கே சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை (14) ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல்வாதிகள் மற்றும் …
-
- 2 replies
- 406 views
-
-
புதியதிசைகள் துண்டுப்பிரசுரம் ஒரு வருடம் கடந்து போய்விட்டது. அப்பாவிகளின் அவலக் குரல்கள், குழந்தைகளின் அழுகுரல்கள்,முதியோரின் கூக்குரல்கள் வன்னிமண்ணிலிருந்து உலகமெல்லாம் எதிரொலித்து பன்னிரண்டு மாதங்கள் கடந்து போய்விட்டன. உலகமே செய்வதறியாது பார்த்துக்கொண்டிருக்க மனிதர்களைச் சாரிசாரியாகக் கொன்றுபோட்ட ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரம் கொலைகளைக் கொண்டாட்டமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. தமிழ்ப் பேசும் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயிருக்கிறார்கள். சாட்சியின்றிச் சாகடிக்கப்பட்ட ஐம்பாதாயிரம் மக்கள் குறித்து உலக அதிகாரவர்க்கம் மறந்து போயிருக்கலாம், துரோகங்களுக்குப் பலியான தமிழ்ப் பேசும் உலகம் மறந்துவிடாது. எம்மைப்போல ஒடுக்கப்படும் தேசிய இனங்களும், ஒடுக்குமுறைக்கெதிராக உலகெங்க…
-
- 1 reply
- 620 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்குவரும் சாத்தியம் : சிவாஜிலிங்கம் தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் நாளை மறுதினம் நிறைவுக்கு வரும் சாத்தியம் உள்ளதாக கூறியுள்ள மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் போதைவஸ்த்து கடத்தல் மற்றும் பாரிய குற்றங்களை செய்த கைதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகள் இனிமேல் தடுத்துவைக்கப்படமாட்டார்கள் அதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். ஆளுநர் றெஜினோல்ட் கூரே என்னை தொடர்பு கொண்டு மேற்படி 3 தமிழ் அரசியல் கைதிகளுடைய கோரிக்கையும் நாளை அல்லது நாளை மறுதினம் தீர்க்கப்படும் என தனக்கு ஜனாதிபதி அறிவித்திருப்பதாக கூறியுள்ளார். அதேபோல் தமிழ் அரசியல்…
-
- 0 replies
- 334 views
-
-
புதிய பிரதமராக... ரணில்? – இன்று அல்லது நாளை, பதவியேற்பு! ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்போதே பிரதமர் பதவி தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க இணக்கம் காணப்பட்டதாக சிங்கள ஊடகமொ…
-
- 48 replies
- 2.2k views
- 2 followers
-
-
ஐ.நா.வின் நிபுணர் குழுவுக்கு பிரிட்டிஷ் அரசு ஆதரவு [ தினக்குரல் ] - [ May 28, 2010 04:00 GMT ] இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர் குழுவை அமைப்பதற்கு பிரிட்டன் ஆதரவளித்துள்ளது. இந்தவார முற்பகுதியில் ஐ.நா.வுக்கான பிரிட்டிஷ் தூதுவர் லியோல் கிரான்ட் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்தித்திருந்தார். இச்சந்திப்பின்போது செயலாளர் நாயகத்திடம் இலங்கை விவகாரம் குறித்துப் பேசியிருந்ததாக தூதுவர் ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸுக்குக் கூறியுள்ளார். சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தெடார்பான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்கான பதிலளிக்கும் கடப்பாட்டு நடவடிக்கைகளுக்காக பான் கீ மூன் தெரிவித்திருக்கும் யோசன…
-
- 0 replies
- 701 views
-
-
சிறிலங்காவின் எதிர்கால உறுதித்தன்மை மற்றும் செழுமை போன்றவற்றைக் கருத்திற் கொண்டு உலக நாடுகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என நான் நம்புகிறேன். அதாவது உலக நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்து தமது வாக்குகளை வழங்கும் என நான் நம்புகிறேன். இவ்வாறு பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹெக் [William Hague is the Foreign Secretary of the U.K.] சென்னையை தளமாகக் கொண்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மார்ச் 24 அன்று தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்கப்படுவர்…
-
- 0 replies
- 296 views
-
-
நாளை மாகாணசபைத் தேர்தல் - கொழும்பு மாவட்டத்தில் 2 அடி நீள வாக்குச் சீட்டு! [Friday, 2014-03-28 09:46:18] மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சுமார் 2 அடி நீளமான வாக்குச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாக, தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு மாகாண சபைகளிலும் அதி நீளமான வாக்குச் சீட்டு கொழும்பு மாவட்டத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் வரலாற்றில் கொழும்பு மாவட்டத்திலேயே கூடுதலான கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. அதேவேளை, மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் நாளை நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இரண்டு மாகாண சபைகளின் சா…
-
- 0 replies
- 414 views
-
-
21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்ஷர்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் - சம்பிக்க (இராஜதுரை ஹஷான்) காலிமுகத்திடல் சம்பவத்தை தொடர்ந்தும் ராஜபக்ஷர்கள் குடும்பம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலைமையே ஏற்படும். அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைத்த ராஜபக்ஷர்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 43 ஆவது படையணியின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகை…
-
- 1 reply
- 370 views
-
-
புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் குடும்பங்களைக் குறிவைக்கிறது இலங்கை அரசு! – 61 வயது வடமராட்சிப் பெண் கைது. [Thursday, 2014-04-03 06:41:14] விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புக்களை தடைசெய்து இலங்கை அரசு, புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் குடும்பங்களை தாயகத்தில் வேட்டையாடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. கரவெட்டி அல்வாய் தெற்கைச் சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழு பிள்ளைகளின் தாயாரான கணபதிப்பிள்ளை யோகராணி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பிள்ளைகள் அனைவரும் புலம்பெயர் தேசங்களில் வசித்து வருவதாகவும் அவர்களை தொடர்புபடுத்தியே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. …
-
- 0 replies
- 561 views
-
-
விக்னேஸ்வரனையும், வீரவன்சவையும் கடலில் தள்ளவேண்டும்;ஐ.தே.க சீற்றம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தெற்கில் வீரவன்ச போன்ற இனவாதிகளை ஒன்றாக சேர்த்துக் கட்டி, நடுக்கடலில் தள்ளிவிட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது. புதிய அரசியலமைப்பை வேண்டாம் என்று கூறிய தெற்கு சிங்கள மக்கள் இன்று அதனை வரவேற்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, இனவாதிகளின் செயற்பாடுகளால்தான் புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்த்ததாகவும் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு கோட்டையிலுள்ள கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்றைய தினம் பகல் நடைபெற்றத…
-
- 3 replies
- 704 views
-
-
Rajapakse can't afford to ignore Tamils http://gulfnews.com/opinions/editorials/rajapakse-can-t-afford-to-ignore-tamils-1.647976 நன்றி கூறி Gulf Newsக்கு ஆதரவாக எழுதுங்கள்
-
- 0 replies
- 1k views
-
-
சட்டவிரோத முஸ்லிம் குடியேற்றங்களை அரசாங்கம் உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டும். இலங்கையை முஸ்லிம் நாடாக மாற்றும் செயற்பாட்டிற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று பொதுபலசேனா தெரிவித்துள்ளது. வில்பத்து பிரதேசத்தில் பெளத்த புராதன சின்னங்களையும், விலங்கினங்களையும் அழிக்கும் நடவடிக்கைகளையே முஸ்லிம் அமைச்சர்கள் செய்துவருகின்றனர் எனவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வில்பத்து பிரதேசத்தில் பெளத்த சின்னங்கள் அழிக்கப்படுகின்றமை மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களை மேற்கொண்டு விலங்குகளை அழிக்கின்றமையினை எதிர்த்து ஊடகவியலாளர்களை இணைத்துக்கொண்டு பொதுபலசேனா அமைப்பினர் வில்பத்து பகுதிக்கு நே…
-
- 2 replies
- 671 views
-