ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
கோட்டாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை – சிங்கப்பூர் அரசாங்கம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எந்தவித சலுகைகளோ இராஜதந்திர சலுகைகளையோ வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அரசியல் தஞ்சம் கோருபவர்களின் இலக்காக சிங்கப்பூர் மாறும் என்ற கவலைகள் குறித்து ஆளும் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹான் வெங்கின் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம், சரியான ஆவணம் மற்றும் நுழைவுக்கான …
-
- 0 replies
- 223 views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 11, 2010 ஈழநாதம் சூரியன் அஸ்தமிக்காத இராச்சியமாக உலகில் திகழ்ந்த பிரித்தானிய முடியாட்சிக்குள் 1815ம் ஆண்டு இலங்கை முழுமையாக உள்வாங்கப்பட்டு பிரித்தானிய குடியேற்ற நாடாகியது. உற்பத்திக்கான மூலப்பொருட்களை பெறவும், முடிவுப்பொருட்களுக்கான சந்தையை அமைத்துக் கொள்வதற்கான போட்டியில் பிரான்ஸ், போர்த்துக்கள், ஒல்லாந்து என பல நாடுகள் போட்டியில் குடியேற்ற நாடுகளை பிடித்துக்கொண்டாலும் ஆசியாவில் அதிலும் தெற்காசியாவின் கூடிய பிரதேசங்களை தனது குடியேற்ற பிரதேசங்களாக பிரித்தானிய முடியே கொண்டிருந்தது. பிரித்தானியாவிற்கு கோப்பியை ஏற்றுமதி செய்த மேற்கிந்திய குடியேற்றங்களில் அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டதால் அங்கே மலிவான தொழிலாளர்களுக்கான வாய்ப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
இறுதி யுத்தத்தின் போது, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் மூவரின் பெயர்களை ஜ.நா வெளியிட்டுள்ளது. பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அதிசாரி, நியுஸிலாந்தின் முன்னாள் ஆளுனரும் நீதிபதியுமான சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தானின் தலைமை நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரான அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரின் பெயர்களை ஐ.நா அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/115694-2014-06-25-12-41-01.html
-
- 2 replies
- 784 views
-
-
புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம். இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை நீக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/133487?fbclid=IwAR0BlNvSchaz2DpfXZ0wQ02QbjM6vj0iuIpB5q6jD6vVobVGxukdp2m28dc
-
- 30 replies
- 1.8k views
- 2 followers
-
-
2009ம் ஆண்டின் மே திங்களில் இலங்கையின் உள்நாட்டு போர் முடிவடைந்த பின், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களின் மறுசீரமைப்புப் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. நாட்டின் சமூகப் பொருளாதாரம் நிதானமாக வளர்ந்து வருகிறது. இப்பின்னணியில், சீன அரசும் தொழில்நிறுவனங்களும் இலங்கையில் முக்கிய பங்காற்றி வருகின்றன. சீன இலங்கை உறவு குறித்து பேசுகையில், இரு நாடுகள் நீண்டகால ஆழமான நட்புறவை நிலைநிறுத்துகின்றன என்று இலங்கை பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் பேசில் ராஜாபாக் ஷே தெரிவித்தார். இலங்கை ஒரே சீனா என்ற கொள்கையை உறுதியாக ஆதரிக்கிறது. சர்வதேச கருத்தரங்குகளில் இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்கின்றன. வளர்ச்சியில், இலங்கைக்கு மிக அதிக உதவி வழங்கும் நாடு, சீனாவாகும். பல்வேறு து…
-
- 1 reply
- 785 views
-
-
தலைமன்னார் – இராமேஸ்வரம் , யாழ்ப்பாணம் – தமிழ்நாடு : கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கத் திட்டம் தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்கும் இடையிலான நேரடி கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணத்திலிருந்து – தமிழ்நாட்டுக்கான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். மன்னார் பிரதேசத்தின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை என்பனவற்றை மேம்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்;. மன்னார் தனியார் பேருந்து வளாகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் நக…
-
- 0 replies
- 398 views
-
-
பண்டாரவன்னியனின்... 219ஆவது, நினைவு நாள் இன்று. வன்னி இராஜ்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின், 219வது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபை மற்றும் பண்டார வன்னியன் விழாக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் காலை 8.15மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டார வன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும் அவரது சிலை மாவட்ட செயலகத்தில் அமைவதற்கு காரணமாக இருந்தவருமான மு.சிற்றம்பலம் சார்பாக மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அத்துடன், நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினர், அரச அதிகாரிகள், சமூக செயற்பாட்டாள…
-
- 9 replies
- 531 views
- 1 follower
-
-
மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயமும், அதனைத் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளும் யாழ்ப்பாணத்தை சிங்கள மயமாக்கும் நிகழ்ச்சிநிரலுடன்தான் அரசாங்கம் செயற்படுகின்றது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் சென்று தம்மை அங்கு குடியமர்த்துமாறு கோரி யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களைப் பார்வையிடுவதற்காகவே அமைச்சர் யாழ். சென்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிங்கள மக்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்றுவதற்காக அரங்கேற்றப்படும் நாடகத்தின் ஒரு அங்கமே மில்ரோய் பெர்னான்டோவின் யாழ். விஜயம் என்பது இப்போது தெளிவாகத் தெரிகின்றது. தமது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத…
-
- 0 replies
- 767 views
-
-
2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் பாதாள உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் பாதுகாப்பு தரப்பு அதீத அக்கறை எடுத்தது. அதனாலோ என்னவோ தலை நகரில் தலைவிரித்தாடிய பாதாள உலகக் குழுக்களின் நடமாட்டமானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போதைப் பொருள் கடத்தல், ஒப்பந்த கொலைகளை செய்தல், மிரட்டுதல் போன்றவையே பாதாள உலகக் குழுக்களின் முக்கிய வருமான மார்க்கமாக இருந்தது. இந் நிலையில் பல முக்கிய பாதாள உலகத்தலைவர்கள் என இனம் காணப்பட்ட பலரும் பொலிஸாருடன் சட்ட அமுலாக்கலின் போது முரண்பட்டு உயிர் துறந்ததுடன் மேலும் சிலர் வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்றனர். எனினும் நாட்டில் இடம்பெற்றுவந்த போதைப் பொருள் வர்த்…
-
- 1 reply
- 631 views
-
-
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது கெடுபிடி; கனடா உன்னிப்பாக கவனம்! பொது விவகாரங்களில் பங்கேற்றல், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியனவற்றை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என கனேடிய வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான கெடுபிடிகள் தொடர்பில் கனடா உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தொண்டு நிறுவனங்கள் ஊடகங்களுடன் தொடர்புகளைப் பேணக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிதப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் சிவில் அமைப்புக்கள் முக்கிய பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். வலுவூட்டப்பட்ட சிவில் சமூகக் கட்டம…
-
- 0 replies
- 409 views
-
-
மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகின்றோம் ; ஐ.தே.க. (எம்.எம்.மின்ஹாஜ் ) உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நாம் தலைவணங்குகின்றோம். மக்கள் எமக்கு வழங்கிய எச்சரிக்கையாகவே தேர்தல் முடிவினை கருதுகின்றோம். இது தொடர்பில் ஆழ்ந்து சிந்தித்து எமது செயற்பாடுகளை சரியான முறையிலும் வேகமாகவும் முன்னெடுக்க நாம் பாடுபடுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டில் சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கு மக்கள் எமக்கு பொறுப்பு வழங்கினர். அதே மக்கள் ஆணை அவ்வாண்டின் ஆகஸ்ட் மாதமும் கிடைக்கபெற்றது. இந்நிலையில் எமது மீது சுமத்தப்பட்ட பொறுப்புகள்…
-
- 0 replies
- 245 views
-
-
ஜெயராஜ் கொலையை திட்டமிட்டது கருணா, பிள்ளையான் – விமானப்படை அதிகாரி திடுக்கிடும் தகவல் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலையின் பின்னணியில் ராஜபக்சாக்கள் உள்ளதாக முன்னாள் விமானப்படை அதிகாரியும் ஊடகவியலாளருமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தாக்குதலை நடத்தியவர் நாட்டிலிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கருணா, பிள்ளையான் கும்பல் தாக்குதலை திட்டமிட்டது ராஜபக்சாக்களின் உத்தரவின் பேரில் கருணா மற்றும் பிள்ளையான் கும்பல் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தெரிந்த போதிலும் பெர்னாண்டோபுள்ளேவின் பணத்தை காப்பாற்ற சுதர்ஷனி இதை பேசவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இணைய ந…
-
- 3 replies
- 377 views
-
-
மொழி சார்ந்த கருத்துகணிப்பு: தாய் தமிழுக்கு உங்க பொன்னான வாக்குகளை பதிவு செய்யுங்கள் http://www.surveymonkey.com/s/8P7PZCY முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 1 reply
- 1.1k views
-
-
சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டும் – சிவில் சமூகம் கோரிக்கை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்து, நீண்டகாலமாக இழுபடும் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான புரவெசி பலய கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய புரவெசி பலய அமைப்பு, தற்போதைய அரசியல் குழப்பங்களைத் தீர்த்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக, புரவெசி பலயவைச் சேர்ந்த தம்பர அமில தேரர் நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம…
-
- 0 replies
- 140 views
-
-
திருமலையில் கிபீர் குண்டு வீச்சில் 5 போராளிகள் வீரச்சாவு 4ம் கட்ட ஈழப்போர் எந்நேரமும் தொடங்கலாம். திருகோணமலை ஈச்சலம்பற்றுப் பகுதியில் சிறீலங்கா விமானப் படை விமானங்கள் இன்று மீண்டும் நடத்திய விமானக் குண்டு வீச்சில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். பொதுமக்கள் பலர் காயமடைந்ததுடன் பத்துக்கு மேற்பட்ட வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. பெருமளவு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். தமிழர் தாயகத்தின் மீது மேற் கொள்ளப்படும் விமானத்தாக்குதலோ அல்லது தரைத் தாக்குதலோ யுத்தப் பிரகடனமா கருதப்படும் என விடுதலைப் புலிகள் எச்சரித்த நிலையில் நடைபெற்ற இத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து 4ம் கட்ட ஈழப்போர் எந் நேரமும் தொடங்கலாம் என செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை முல்லை…
-
- 0 replies
- 1.2k views
-
-
நமல் ராஜபக்சவிற்கும் பசில் இராஜபக்சவிற்கும் பனிப்போர் நடைபெறுவது அனைவருக்கும் தெரியும். வடக்கின் வசந்தம் நிகழ்ச்சி திட்டத்தில் நாமலின் தலையீடு பற்றி பல தடவை மஹிந்தவிற்கு பசில் எடுத்துக்கூறியுள்ளார். ஆனால் மஹிந்தவின் துணைவியார் நாமல் ராஜபக்ஷவை, தன் கணவர் மஹிந்தவிற்கு அடுத்த நாட்டின் அதிகாரம் உள்ளவர் நாமல்தான் என அதிகாரிகளை அச்சுறுத்தி வருகின்றார். கடந்த வாரத்தில் கிளிநொச்சியில் காணி சுவீகரிப்பு கூட்டத்திற்கு நாமல் ராஜபக்ஷ ஜி.எல்.பீரிஸ் அவர்கலை அழைத்து வந்து கூட்டத்தை நடத்தினார். இதனால் பசில் ஆத்திரமடைந்தார். இதற்கு பதிலாக நாமலின் மாவட்டமான ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி கூட்டத்திற்கு பசில் அழையா விருந்தாளியாக போய் குந்தினாராம். இவ்வாறு கருத்து மோதல்கள் வலுத்து வரும் நி…
-
- 1 reply
- 1.2k views
-
-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது புத்திசாதூரியமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது பொருத்தமானதாக அமையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அது அரசாங்கத்திற்கே சாதக தன்மையை ஏற்படுத்தும் எனவும் தேர்தலில் வெற்றியீட்டக் கூடிய சாத்தியங்கள் குறைவு எனவும் சம்பந்தன், நேரடியாக குறிப்பிட்டுள்ளார…
-
- 0 replies
- 259 views
-
-
பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் அக்கறை காட்டுமா? உள்ளூராட்சி தேர்தலின் பெறுபேறுகள் தேசிய அரசாங்கத்திற்குள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை காரணமாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் ஜெனிவாவிற்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடியாது. அரசாங்கம் அவ்வாறு செயற்படுவதற்கு முற்பட்டு காரணங்களை முன்வைக்கும் பட்சத்தில் அதனை ஜெனிவாவின் உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தான் வலியுறுத்தியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தேசிய அரசியல் நிலைவரங்கள் எவ்வாறாக இருப்பினும் வாக்குறு…
-
- 0 replies
- 173 views
-
-
கிழக்கின் திருப்பமும் தெற்கின் திகைப்பும் -பீஷ்மர்- [06 - August - 2006] [Font Size - A - A - A] வடக்கே முகமாலையிலும் நாகர் கோவிலிலும் வடமராட்சியிலுமே நடைபெறப்போவதாக இருந்த விடுதலைப்புலிகளின் பதிற்குறிகள் சகல எதிர்பார்ப்புகளையும் மீறி திருகோணமலைப் பகுதியை அதுவும் கொக்கிளாய், புல்மோட்டை, சேருவில பகுதிகளையும், மூதூரையும் மையக் களங்களாக்கும் `நடவடிக்கைகள்' மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏறத்தாழ கடந்த ஒன்றரை இரண்டு வருடங்களாக திருகோணமலை நகரப்பகுதியிலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் அரச படையினர் மேற்கொண்டுவந்த நேரடி, மறைமுக செயற்பாடுகளின் போது கிழக்கில் விடுதலைப்புலிகளை தலைமையாகக் கொண்ட தமிழர் உரிமைப் போராட்டக் குரலுக்கு இடமிருக்காது என்ற நிலைப்பாட்டில் அரச இராணுவம் பல …
-
- 0 replies
- 1k views
-
-
மத்தல விமான நிலையத்தின் ஓடுபாதை, நிலப்பரப்பை வசப்படுத்துகிறது சிறிலங்கா விமானப்படை மத்தல விமான நிலையத்தை அவசர தேவைகளுக்கும், தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கும் பயன்படுத்துவதற்கான உரிமையையும், விமான நிலையத்தின் ஒரு பகுதி நிலத்தையும் தமக்கு வழங்க வேண்டும் என்று சிறிலங்கா விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது. மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா விமானப்படை இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அவசர தேவைகளின் போதும், தேசிய பாதுகாப்பு பயன்பாடுகளுக்காகவும், மத்தல அனைத்துலக விமான நிலையத்தின் ஒரு ஓடுபாதைதையைப் பயன்படுத்துவதற்கு தமக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டு…
-
- 3 replies
- 511 views
-
-
இலங்கைக்கு ஆயுத உதவி வழங்குவது ஈழத் தமிழருக்கு சமாதி கட்டும் வேலை ` விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக அவசர போரா யுத உதவிகளை இந்தியாவிடம் கோரியிருக்கின்றதாம் இலங்கை. இந்தியா வழங்கும் போராயுதங்கள் புலிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்படும்; தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படமாட்டா என்ற உறுதிமொழியுடன் தான் தனக்குத் தேவையான போராயுதங்களின் பட்டியல் ஒன்றைப் புதுடில்லிக்குச் சமர்ப்பித்திருக்கின்றது இலங்கை. இப்போது புதுடில்லியின் பதிலுக்குக் கொழும்பு காத்தி ருக்கின்றது என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. விடுதலைப் புலிகள் விவகாரத்தில் புலிகள் இயக்கத்தைத் தடை செய்த மேற்குலகம், அதற்கு மேல் புலிகளுக்கு எதிராக எதனையும் செய்யப் போவதில்லை என்ற விசன…
-
- 0 replies
- 962 views
-
-
Lawyers working for Tamil activists are attempting to obtain a war crimes arrest warrant against Sri Lanka's president and senior member of his entourage who have arrived in Britain. Mahinda Rajapaksa, whose government defeated the separatist Tamil Tigers last year amid humanitarian protests about the treatment of civilians trapped in the war zone, is due to speak at the Oxford Union on Thursday. The visit comes as Tamil supporters claim to have acquired a video showing a former Tamil Tiger colonel being interrogated by Sri Lankan forces. His family allege he was killed after surrendering. Rajapaksa is also expected to meet the defence secretary, Liam Fox. …
-
- 0 replies
- 1.4k views
-
-
?????????கொழும்பின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக?????????? கொழும்பும் அதன் சுற்றுப்புற நகர்களிலும் புதிய பொலிஸ் பதிவு நடைமுறை அமுல் செய்யப்படவுள்ளாதாக நேற்றுமுன்தினம் கூடிய பத்திரிகையாளர். மாநாட்டில் கொழும்பு பிராந்திய பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார். கொழும்பின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இந்த நடைமுறை கடைபிடிக்கவுள்ளதாக தெரிவித்தார், இதன்படி மக்கள் தமது சொந்த தகவல்களை கிராமசேவகர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தமது தனிப்பட்ட விபரங்கள் தெரியப்படுத்துவது ஒவ்வொருவரும் தமது பாதுகாப்பினை உறுதி செய்யும் செயற்பாடு என்றும் தெரிவித்தார், இதனால் எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்கும் அசொகரியங்கள் ஏற்படாது என்றும் தெரிவித்தார். மக்களுக்குள் உட…
-
- 0 replies
- 892 views
-
-
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 7, 2010 கொழும்பில் இருந்து வந்த புலனாய்வு பிரிவினரால் ஐம்பதுக்கும் மேற்பட்ட யாழ் நகரப் பகுதி வர்த்தகர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களாக இந்த விசாரணை யாழ் வணிகர் கழக அலுவலகத்தில் இடம்பெற்கின்றது. கடந்த 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணத்துக்குப் பொருள்களை இறக்குமதி செய்த யாழ்.நகர் வர்த்தகர்களே புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட காலப் பகுதியில் கப்பல் மூலம் யாழ்ப்பாணத் துக்கு தருவிக்கப்பட்ட பொருள் களின் விவரம், செலுத்தப்பட் டுள்ள வரிகள் உள்ளிட்ட விட யங்கள் தொடர்பாக இதன்போது…
-
- 0 replies
- 763 views
-
-
சிறிலங்கா வெளிவிவகா அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற போது, மியான்மரின் நே பி டோ நகரில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட, சீன வெளிவிவகார அமைச்சர், சீன - சிறிலங்கா உறவு, ஒலியின் வேகத்துடன் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இருதரப்பும், உயர்மட்டத் தொடர்புகளைப் பேணி வரவேண்டும் என்றும், பொருளாதார, வர்த்தக, உட்டகட்டமைப்பு கட்டுமான, ஒத்துழைப்பைத் தொடர வேண்டும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், சோதனையான காலகட்டங்களையும் தாண்டி…
-
- 1 reply
- 235 views
-