ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
10 JAN, 2024 | 03:27 PM யாழ். குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. இத் தரவுகளைக் கொண்ட தொல்லியல் மையம் வேலணை தீவின் சுற்றுலாத் தலமான கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ் ஆய்வுத் தொடர்ச்சி 2009 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் கரையோர வளங்களின் வரலாற்றுப் பயன்பாடு மற்றும் குறிப்பாக கடல் ஓடுகள் தொடர்பான பயன்பாட்டுப் போக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ் அகழ்வாய்வில் வேட்டையாடி உணவாக உட்கொள்ளப்பட்ட விலங்குகளின் எச்சங்கள், கரு…
-
- 5 replies
- 953 views
-
-
கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் காணி அபகரிக்கப்படும் ஆபத்து கிழக்கில் இனச்சுத்திகரிப்பை நடத்தி தமிழ் பேசும் மக்களின் நிலத்தை பலாத்காரமாக ஆக்கிரமிக்கும் முயற்சிகள் திட்டமிட்ட வகையில் முடுக்கி விடப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கடும் விசனம் தெரிவித்துள்ளதுடன் இதனைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் எனவும் அவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் அவசரமாக குடிசன மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கும் அரசாங்கம் அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. இதேவேளை, காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, தென்பகுதியிலிருந்து சிங்கள மக்களைக் கொண்டு சென்று கிழக்கி…
-
- 1 reply
- 754 views
-
-
[Monday, 2011-09-26 03:06:39] முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள குடியேற்றம் மட்டுமல்ல, சிங்களப்பிரதேச பிரிவுகளும் அமைக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ இயக்கத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்... அரசாங்கம் எம்முடன் பேச்சுக்களை முன்னெடுக்கும் அதே வேளை,சில நகர்வுகளையும்,முன்னெடுத்துச்செல்லுகின்றது. குறித்த செயற்பாடு அரசின் நேர்மையற்றத்தன்மையினை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. சிங்கள குடியேற்றம்,நில அபகரிப்பு ஆகியவற்றை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்…
-
- 1 reply
- 578 views
-
-
சிறிலங்கா படையினர் மீதான தாக்குதல் போர்குற்றம் – என்கிறார் ஐ.நா பொதுச்செயலர் மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இரண்டு சிறிலங்கா படையினர், கொல்லப்பட்டு. ஆறு பேர் காயமடைந்த தாக்குதலை, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டித்துள்ளார். உள்ளூர் நேரப்படி நேற்றுக்காலை 6.30 மணியளவில் சிறிலங்கா இராணுவ வாகனத் தொடரணி ஒன்றின் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. மாலியின் மத்திய பகுதியில் உள்ள டோன்ட்சா என்ற இடத்தில் நடந்த இந்த தாக்குதலில் கப்டன் உள்ளிட்ட இரண்டு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு சிறிலங்கா படையினர் காயமடைந்தனர் என்று ஐ.நா அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் கு…
-
- 0 replies
- 292 views
-
-
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா துப்பாக்கிச் சூட்டில் பலி! adminJanuary 22, 2024 தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இன்று (22.01.24) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று(22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். வெள்ளை நிற டிஃபென்டர் ரக வாகனத்தில் பயணித்த 5 பேரை இலக்கு வைத்து பச்சை நிற கெப் வண்டியில் வந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.…
-
- 8 replies
- 899 views
- 1 follower
-
-
சமூக கட்டமைப்பின் வீழ்ச்சியே வித்தியா படுகொலை, வன்முறைகளுக்கு காரணம்! - பேராசிரியர் தயா சோமசுந்தரம் [saturday 2015-05-23 08:00] புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அதன் பின்னர் நிலவிய குழப்பகரமான நிலைக்கு யாழ் சமூகத்தின் பாரம்பரிய சமூக மற்றும் நிர்வாக கட்டமைப்புகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணம் என யாழ் பல்கலைக்கழக உளநல பேராசிரியர் தயா சோமாசுந்தரம் தெரிவித்துள்ளார். மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் அதன் பின்னர் நிலவிய சூழலிற்கும் யாழ் சமூகத்தின் பாராம்பரிய கட்டமைப்புகள், மரபுகள், ஆதரவளிப்பது மற்றும் கட்டுப்படுவத்துவதற்கான ஓழுங்கு முறைகளில் …
-
- 1 reply
- 374 views
-
-
ஜனாதிபதியின் யாழ். விஜயம் ; விபரங்களைத் திரட்டும் பொலிஸார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்செய்யவுள்ளதால் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாக யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கொலைச் சதி வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்தில் அவர் செல்லும் இடங்களை அண்டிய பிரதேசங்களில் குடியிருப்பாளர், நிறுவனங்களின் விவரங்களைச் சேகரிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6 ஆ…
-
- 2 replies
- 785 views
-
-
பதற்றமான பிரதேசங்களில் அதிரடிப்படை குவிப்பு Saturday, October 8, 2011, 10:15 இன்று நடைபெறும் உள்ளுராட்சி சபைத் தேர்தலையிட்டு பல வாக்களிப்பு நிலையங்களில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என தேர்தல்கள் தொடர்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். பதற்றம் நிறைந்த பகுதிகள் என இனங்காணப்பட்ட பிரதேசங்களிலேயே விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படுவர். விசேடமாக, கொலன்னாவ, வெல்லம்பிட்டி,ராஜகிரிய, நுகேகொட, கல்கிஸ்ஸ – தெஹிவளை, அநுராதபுரம், காலி, மாத்தறை உட்பட பல பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலைங்களிலேயே விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கடமைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அதிகளவு பொலிஸாரும் குவ…
-
- 0 replies
- 504 views
-
-
சரவணபவனிடம் சென்றபோது காணியை தனது பெயருக்கு எழுதித்தருமாறு கேட்டார்: காணிக்குச் சொந்தக்காரர்: குளோபல் தமிழ் செய்தியாளர்:- யாழ்ப்பாணம் மானிப்பாயிலுள்ள தனது வீட்டில் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினரின் அலுவலகம் அமைத்துள்ளதாகவும் அந்த வீட்டை மீளத்தருமாறு கேட்டால் துப்பாக்கி கொண்டு தன்னை அவர்கள் மிரட்டுவதாகவும் காணிக்குச் சொந்தக்காரான முதியர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனது காணி ஒன்பது வருடங்களாக ஈபிடியால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது வீட்டை மீள வழங்குமாறு முன்னாள் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவிடம் கோரியபோதும் அவர் அதற்கு செவிசாய்க்கவி…
-
- 0 replies
- 717 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்திய பிரபல பாடகர் ஹரிகரனின் மாபெரும் இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அமைதியின்மையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட, ஆள் அடையாளத்தை உறுதி செய்துக்கொள்ள முடியாத ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இதைத் தவிர, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பிரபல தென்னிந்திய நடிகையான ரம்பா, இலங்கையின் யாழ…
-
- 5 replies
- 1k views
- 1 follower
-
-
இனப்பிரச்சினைத் தீர்வு யோசனை யானை பார்த்த குருடனது கதையே! அரியநேத்திரன் எம்.பி. கூறுகிறார் ""சர்வகட்சி மாநாடு முன்னெடுத்துச் சென்ற இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் இந்த வாரம் வெளியிடப்படும், அடுத்தவாரம் வெளியிடப்படும் என்பதெல்லாம் சர்வதேச சமூகத்தையும் தமிழர்களையும் ஏமாற்றும் ஒரு நாடகமாகும். யானை பார்த்த குருடன் கதையாகவே இருக்குமே தவிர இதனால் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை.'' இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். சர்வகட்சி மாநாடு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு: அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைம…
-
- 1 reply
- 786 views
-
-
மன்னார் மனித புதைகுழியில் இருந்து இது வரை 316 மனித எலும்புக்கூடுகள் மீட்பு-கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது. தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த அகழ்வு பணிகள் இன்று144 அவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 144 அவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.தற்போது வரை 316 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 307 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்கள…
-
- 0 replies
- 144 views
-
-
ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க நடவடிக்கை! ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் அதிகளவான சிறுவர்கள் ஊட்டச் சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அண்மையில் வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அரசினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தரம் 1 முதல் 5 வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1370800
-
- 0 replies
- 234 views
-
-
நாடெங்கிலும் உள்ள பள்ளிவாசல்கள் ஊடாக இரண்டு லட்சம் கையெழுத்துக்கள் பெறப்படவுள்ளன இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் எல்லையில் மறிச்சுக்கட்டி கிராமத்தில் குடியேறியுள்ள முஸ்லிம் குடும்பங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்துவதற்கான கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து சென்று பின்னர் திரும்பி வந்து மீள்குடியேறியவர்களே அந்தக் குடும்பங்கள், தவிர அவர்கள் புதிதாக வில்பத்து சரணாலயத்துக்குரிய காணிகளில் அத்துமீறி குடியேறவில்லை என்று ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துக்கு விளக்கமளிப்பதற்கான கையெழுத்து நடவடிக்கை இன்று ஞாயிறன்று தொடங்கியது. தென்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஜனாத…
-
- 0 replies
- 391 views
-
-
செவ்வாய் 04-09-2007 03:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து எறிகணைத்தாக்குதல்: ஒரு பொதுமகன் பலி, மற்றொருவர் காயம் சிறீலங்கா படையினர் 3ம் திகதி மதியம் 1 மணியளவில் தள்ளாடி இராணுவமுகாமில் இருந்து வண்ணாங்குகுளம் பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டும் மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர் இருபிள்ளைகளின் தந்தையான 32 அகவையுடைய நேசன் எனவும் காயமடைந்தவர் 38 அகவையுடைய யோகநாதன் தீபன் எனவும் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 0 replies
- 615 views
-
-
அலுகோசுப் பதவிக்கு வெளிநாட்டவர் நியமனம்? | மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்படி அலுகோசு பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள போதிலும் கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார். இந்நிலையில் வெளிநாட்டவரை அலுகோசு பதவிக்கு நியமிப்பதற்கான நடவ…
-
- 1 reply
- 302 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....52ed3d89a146b44
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்குமிடையே இன்று காரைநகர் கடற்பரப்பினில் இடம் பெற்ற கைகலப்பினில் உள்ளுர் மீனவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.இதே வேளை இச்சம்பவத்தையடுத்து உள்ளூர் மீனவர்கள் முப்பத்திமூன்று பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய படகுகள் பன்னிரண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட மீனவ சமாசங்களின் சம்மேளனத்தலைவர் சி.தவரட்ணம் தெரிவித்தார்.எனினும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் இன்றிரவு விடுவிக்கப்பட்டுவிட்டதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் அத்தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. வடமராட்சியின் பருத்தித்துறை முனைப்பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும் அத்து…
-
- 3 replies
- 929 views
-
-
மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள 3 உணவகங்களை மூட மன்னார் நீதிமன்றம் உத்தரவு- மன்னார் பஸார் பகுதியில் உள்ள பிரபலமான மூன்று உணவகங்களை மூடுமாறு இன்று வியாழக்கிழமை (18) மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் பஸார் பகுதியில் உள்ள நான்கு (4) வர்த்தக நிலைங்களில் சுகாதார சீர்கேடுகளுடன் உணவு விற்பனை செய்யப்படுவதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்கனவே குறித்த உணவகங்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த வர்த்தக நிலையங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மன்னார் நீதிமன்றம் ஏற்கனவே குறித்த நான்கு (4) வர்த்தக நிலைங்களுக்கும் கால அவகாசம் வழங்கி இருந்தது. இந்த நிலையில் குறித…
-
- 0 replies
- 334 views
-
-
காணாமல் போனோருக்கான பணியத்தின் பிராந்திய கிளை மாத்தறையில் திறப்பு காணாமல் போனோருக்கான பணயத்தின் முதலாவது பிராந்திய கிளைச் செயலகம், மாத்தறையில் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிக்கு அமைய, நிலைமாறு கால நீதிப்பொறிமுறைகளை உருவாக்கும் செயல்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு, காணாமல் போனோருக்கான செயலகத்தை உருவாக்கியது. இந்தச் செயலகம், வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், தென்பகுதியிலுமாக, மொத்தம் 12 கிளை செயலகங்களை அமைக்கவுள்ளதாக அதன் தலைவர் சாலிய பீரிஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் முதலாவது கிளைச் செயலகம் நேற்று முன்தினம் மாத்தறையில் திறந்து வைக்கப்பட்டத…
-
- 2 replies
- 464 views
- 1 follower
-
-
நெடுமாறன் என்னும் ஓர் அரசியல் சமிக்ஞை [16 - September - 2007] [Font Size - A - A - A] -பீஷ்மர்- ராஜபக்ஷ அரசாங்கம் பற்றி ஐ.தே.க. கூறிவந்தமை எத்தனை ஆழமானவை என்பதை கடந்த வாரத்து தென் இலங்கை அரசியல் காட்டுகிறது. ஊழலின் உச்ச எடுத்துக்காட்டுகளாக விமான கொள்வனவில் ஏற்பட்டிருந்த விடயங்களும் அதற்கும் மேலாக ஏறத்தாழ 50/60 கோடி மதிப்புள்ள அஸ்டன் மாட்டின் கார் ஒரு முக்கியஸ்தரின் முதல்வருக்கென வரவழைக்கப்பட்டிருப்பதும் சிங்கள மக்களே சிரித்துக் கொண்டு பேசும் விடயமாகிவிட்டது. ஆனால், இதனூடே ஐரோப்பிய நாடுகள் மனித உரிமைகள் பிரச்சினைகள் காரணமாக நிதி உதவிகளை நிறுத்தும் நிலைக்கு வந்துவிட்டதைக் கண்டு படபடத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளிநாட்டு அமைச்சர் எழுதியுள்ள கட…
-
- 1 reply
- 1k views
-
-
முறிகண்டி பிரதேசத்தில் இருந்து மக்களை வேறு இடத்திற்கு குடியேற்றும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. இப்பகுதி மக்களை மக்கள் நடமாட்டம் குறைந்த பனிக்கன்குளம் பகுதியில் குடியேற்ற இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் தனிச்சிங்கள மொழியிலான கடிதங்களை அப்பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு இராணுவம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். யுத்தத்தின் பின்னர் அப்பிரதேசத்தில் குடியேற இராணுவம் அனுமதி மறுத்தே வருகிறது. இதனால் அம்மக்கள் உறவினர், நண்பர்கள் வீடுகளிலேயே தங்கி வருகின்றனர். இந்த நிலையிலேயே அம் மக்களுக்கு மாற்று காணிகளை வழங்கிவிட்டு முறிகண்டி பிள்ளையார் ஆலயச்…
-
- 1 reply
- 971 views
-
-
தேர்தலில் போட்டியிட புதிய கட்டுப்பாடு! - தகுதிச்சான்றிதழ் தேவை [Thursday 2015-06-25 06:00] தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தகுதிச் சான்றிதழ் இன்றி எந்தவொரு நபரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாதென அதன் தலைவர் டொக்டர் சமீர நிலங்க சமரசிங்க தெரிவித்தார். இது குறித்த விபரங்களை திரட்டுவதற்காக நாடு முழுவதும் 200 குழுக்கள் நியமிக்கப்பட் டிருப்பதாவும் அவர் கூறினார். பெப்ரல் அமைப்பின் பிரகடனத்தின்படி வேட்பு மனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு நபரும் போதைக்பொருள் பாவனை, விற்பனை, விநியோகத்துடனான தொடர்பு, மதுபான விற்பனை நிலையம் மற்றும் எந்தனோல் இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரம், கெசினோ அனுமதிப் பத்திரம் ஆகியவற்றை கொண்டிருத்தலாகாது. இந்த பிரகடனத்தை தொடர்ந்து…
-
- 0 replies
- 819 views
-
-
சிறிலங்காவின் காலி "தக்சனா" கடற்படைத் தளத்துக்கு சொந்தமான டிங்கி படகு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமான்டர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்ததாக நோர்வே அறிவித்துள்ளது. இலங்கை சமாதான முனைப்புக்கள் தொடர்பில் நோர்வே இன்று விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் சமாதான முனைப்புக்கள் எதனால் தோல்வியடைந்த என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டுமென இந்தியா பெரிதும் விரும்பியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தின் மீது அனுதாபம் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோர்வே மத்தியஸ்தத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முனைப்புக்கள் தோல்வியில் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்…
-
- 87 replies
- 6.5k views
-