ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143509 topics in this forum
-
[ சனிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2015, 11:10.41 AM GMT ] திருகோணமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். சம்பூர் மீள்குடியேற்றத்தை உத்தியோகவூர்வமாக ஆரம்பிப்பதற்கான வைபவ நிகழ்வு தற்போது சம்பூர் பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமான நிகழ்வு தற்சமயம் நடைபெற்று வருகிறது. நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். http://www.tamilwin.com/show-RUmtyIRWSVlx0A.html
-
- 10 replies
- 892 views
-
-
சிறிலங்கா விரைகிறார் நிஷா பிஸ்வால் – ஐ.நா அறிக்கைக்கு முன் அமெரிக்கா அதிரடி நகர்வுAUG 23, 2015 | 2:18by கார்வண்ணன்in செய்திகள் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு முன்னதாக, சிறிலங்கா அரச தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக நிஷா பிஸ்வால் கொழும்பு வரவுள்ளார். கொழும்பு வரும் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் செவ்வாய் காலையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து பேச்சு நடத்துவார். நிஷா பிஸ்வாலின் பயணத்துக்கு முன்னதாக, மீண்டும் வெளிவிவகார அமைச்சராக, மங்கள சமரவீர பொறுப்பேற்றுக் கொள்வார் என…
-
- 6 replies
- 997 views
-
-
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அரைவாசி உயிர்பெற்ற புலிப் பூச்சாண்டி, ஆகஸ்ட் 17ம் திகதியுடன் முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை தேர்தல் முடிவுகளுடன் புலனாகின்றது. குறிப்பாக யுத்த வெற்றியின் கதாநாயகர்களாக கருதப்பட்ட மகிந்தவின் பிரதமர் கனவும், பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை கனவும் முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை சிறுபான்மை மக்களால் விரட்டியடிக்கப்பட்ட இனவாத அரசியல், பொதுத்தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களாலே விரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இனி, இலங்கையில் நடைபெறப் போகின்ற எந்தவொரு தேர்தலிலும், புலிப் பூச்சாண்டிக்கு இடமில்லை என்பது உறுதி. குறிப்பாக இத்தேர்தலில் பல சந்தர்ப்பங்களில் புலிப் பூச்சாண்டி …
-
- 20 replies
- 1.7k views
-
-
[ புதன்கிழமை, 19 ஓகஸ்ட் 2015, 12:38.54 AM GMT ] வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எப்பொழுதும் நாம் காப்பாற்றுவோம். நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்; வடக்கு கிழக்கு மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை மீண்டும் உலகம் அறிய நிரூபித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டவர்கள். அவர்களின் நம்பிக்கையை எப்பொழுதும் நாம் காப்பாற்…
-
- 67 replies
- 2.4k views
- 1 follower
-
-
புதிதாக அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையின் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐதேகவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பேச்சுக்களில் இன்னமும் இழுபறிகள் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இழுபறிகளால் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிக்கும் என்ற கூறப்படுகிறது. ஐதேகவைச் சேர்ந்த 33 பேரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 18 பேரும் அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது. மேலும் 40 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவ…
-
- 4 replies
- 898 views
-
-
கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் – இழுபறிக்கு இன்றைய கூட்டத்தில் முடிவு?AUG 22, 2015 | 4:41by கார்வண்ணன்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்று இன்று முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, திருகோணமலையில் உள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று முக்கியமான கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியல் ஆசனங்களை வென்ற ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர…
-
- 17 replies
- 1.4k views
-
-
உறவுகளே, இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை இப் பொதுத் திரியில் தொடர்ச்சியாக பதியவும். முன்னரும் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் யாழ் இணையம் பொதுவாகவே வேகமாக செயற்பட்டு வந்துள்ளமையால் இம் முறையும் ஒவ்வொரு முடிவுகளும் வெளிவரும் போது உடனடியாக இத் திரியிலேயே தொடர்ந்து பதிவோம்
-
- 571 replies
- 33.3k views
- 3 followers
-
-
முன்கூட்டியே கசியாது ஐ.நா அறிக்கை – 48 மணிநேரத்துக்கு முன்னரே சிறிலங்காவிடம் கையளிப்புAUG 23, 2015 | 2:40by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு 48 மணிநேரம் முன்னதாகவே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் மற்றும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய ஐ.நா விசாரணை அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை, வ…
-
- 1 reply
- 755 views
-
-
புதிய அரசின் ஆட்சியிலும் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கப் போவதில்லை : இலங்கை அகதிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெற்றி பெற்றமை தமிழ் மக்களின் நிலைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா இராமநாதபுரம் மண்டபம் முகாமிலுள்ள இலங்கை அகதிகளே இவ்வாறு தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்ற தேர்தல் தோல்வியடைந்தமையை வரவேற்றுள்ள இலங்கை அகதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களின் வாழ்க்கையில் காத்திரமான மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பதில் நம்பிக்கை இல்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சி…
-
- 2 replies
- 434 views
-
-
உடையும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி – மகிந்த தலைமையில் உருவாகிறது தனியான அணி?AUG 23, 2015 | 3:37by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும், தேசிய அரசாங்த்தில் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராகியுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய தரப்பினருடன் இணைந்து தனியான அணியொன்றை உருவாக்கவுள்ளனர். இதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி வரிசையில் அமரத் திட்டமிட்டுள்ளார். அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தனியான அணியொன்றை உருவாக்குவது தொடர்பாக இன்று முடிவெடுக்கவுள்ளார். சிறிலங்கா …
-
- 0 replies
- 775 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜிதமுனி சொய்சா, எஸ்.பி. திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமதிபால, அங்கஜன் ராமநாதன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மலித் ஜயதிலக்க, பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த 12 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 11 பேர் முன்னாள் அமைச்சர்களாவர். ஏற்கனவே தேர்தல் ஆணையாளரிடம் வழங்கப்பட்டிருந்த தேசியப்…
-
- 16 replies
- 1.7k views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பை நாமே மீண்டும் வழிநடத்துவோம் – ஜனநாயக போராளிகள் கட்சி August 03, 201511:27 am தமிழ் தேசியக்கூட்டமைப்பினை தாமே வழிநடத்தவிருப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து ஜனநாயக போராளிகள் கட்சியானது தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படவிருக்கின்றதா அன்றேல் அரசுடன் இணைவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பினை வழிநடத்தும் அன்றேல் தலைமை தாங்கும் கட்சியாக ஜனநாயக போராளிகள் கட்சி உருவாகவிருப்பதாக வித்தியாதரன் நம்பிக்கை தெரிவித்தார். 2009ம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் ஆளுகையின் கீழ் எவ்வாறு…
-
- 12 replies
- 1.2k views
-
-
தேசியப் பட்டியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை : தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேசியப் பட்டியல் நியமனங்களில் இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லையென தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பிரதான அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் பெண்களுக்கு போதுமான சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை எனவும் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் உத்தேச 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் தேசிய பட்டியல் மூலம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்து முக்கிய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியலின் ஊடாக மூன்றில் ஒரு பங்கு பெண்களின் பிரதிநிதித்துவ…
-
- 0 replies
- 333 views
-
-
வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை குடியேற்ற நடவடிக்கை : அமைச்சர் சத்தியலிங்கம் வவுனியாவில் அமைந்துள்ள இரு நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் உப அலுவலகத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், எமது அமைச்சின் கீழ் சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூக சேவைகள், புனர்வாழ்வு, பெண்கள் விவகாரம், சிறுவர் நன்னடத்தையும் பராமரிப்பும் உட்பட 6 திணைக்களங்கள் உள்ளன. 2015 ஆம் ஆண்டுக்குரிய நிதியில் சுமார் 53 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு அதில் 40 ம…
-
- 0 replies
- 403 views
-
-
இலங்கை மக்கள் ஜனநாயகத்துக்காக அர்ப்பணிப்பு ! ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது இலங்கை மக்கள் ஜனநாயகத்துக்காக அர்ப்பணிப்பை செய்துள்ளதாக அமெரிக்கா ராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜோன் கிர்பி செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர் சமூக குழுக்கள் பொதுமக்கள் வேட்பாளர்கள் அனைவரும் அமைதியான தேர்தல் ஒன்றுக்காக பாடுப்பட்டனர் என்று கிர்பி குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இலங்கையின் வரலாற்றில் அமைதியான நியாயமான தேர்தல் ஒன்று நடந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இணைந்து செயற்படும் என்றும் கிர்பி குறிப்பிட்டுள்ளார். - See more at: http://onlineuthay…
-
- 0 replies
- 427 views
-
-
காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்குழு அமர்வு களுவாஞ்சிக்குடியில் ஆரம்பம் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்று காலை கழுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது. ஆணைக்குழவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் விசாரணைகள் ஆரம்பமாகின. ஆணைக்குழு உறுப்பினர்களான திருமதி மனோ ராமலிங்கம், திருமதி சுதர்சனா வித்யாரத்ன ஏ.ரி.ரத்னாயக்கா எச்.சுமணபால ஆகியோரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றைய அமர்விற்கு 701 காணாமல்போன உறவினர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 200 புதிய விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பிரசே செயலாளர் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கான விசாரணைகள் இ…
-
- 0 replies
- 350 views
-
-
தேசியப் பட்டியல் ஆசனங்கள் குறித்து பங்காளிக் கட்சித் தலைவர்கள் சம்பந்தனுடன் ஆலோசனை! [Friday 2015-08-21 09:00] தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நேற்று மாலை திருகோணமலையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனா ஆகியோரும் புளொட் சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சிவசக்தி ஆனந்தன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்துள்ள தேசியப் பட்டியல் பிரதிந…
-
- 15 replies
- 628 views
-
-
"அருந்தவபாலன் வெற்றி என்று அவரது மகனே அறிவித்தார்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 21.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/theivigan/pdpikacsnvre
-
- 0 replies
- 690 views
-
-
கொடுத்த வாக்குறுதியை மறுத்தவர் ரணில்..! [ வெள்ளிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2015, 09:53.03 PM GMT ] இலங்கை முழுவதும் சிங்களவர் நாடு. தமிழர் இரண்டாம் தர குடிகளே என்ற கண்ணோட்டம், 1919ல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கித் தலைமை வகித்தவர் பொன்னம்பலம் அருணாசலம். யாழ்ப்பாணத் தமிழரோடு இலங்கைத் தேசிய காங்கிரஸார் ஒப்பந்தம் செய்து ஆதரவை பெற்றனர். மேற்கு யாழ்ப்பாணத்தில் தமிழர் ஒருவர் சட்டசபை உறுப்பினர் ஆவார் என்பதே உடன்பாடு. தேர்தலில் வென்ற உடனேயே உடன்பாட்டை மீறிய சிங்களவர்களை விட்டு, 1920ல் அருணாசலம் அகன்றார். சிங்களவர்களை நம்பமுடியாது என்ற கருத்தை அப்பொழுதே எழுதி வைத்தவர் அவரே. 2002ல் நோர்வே நாட்டு ஒஸ்லோ நகரில் விடுதலைப்புலிகளோடு பேசிய பின், 20 நாடுகளின் முன்னிலையில் தமிழர்…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கைக்குள் வேறு தேசத்தை உருவாக்குவதற்கோ அல்லது அதற்காக முயற்சிக்கும் எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை என சற்றுமுன்னர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சத்தியப்பிரமாண கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வாசிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார். - See more at: http://www.tamilmirror.lk/152498#sthash.4jgyTIV0.dpuf
-
- 30 replies
- 3.3k views
-
-
தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று வெள்ளிக்கிழமை கைச்சாடப்பட்டதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்படமாட்டாது எனத் தெரியவருகிறது.தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைமை பதவியை கோர முடியும் என்ற உருவாகியுள்ளது. இதனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றாவது அரசியல் கட்சி என்ற நிலை இல்லாமல் போயுள்ளதே இதற்குக் காரணமாகும். அரசியலமைப்பின்படி இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் மூன்றாவது கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டு…
-
- 13 replies
- 689 views
-
-
தெருமுனைக்கு வந்துள்ள சிறிலங்காவின் போர்க் கதாநாயகன்AUG 22, 2015 | 3:37by நித்தியபாரதிin கட்டுரைகள் வரும் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையானது சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டிய மிகப்பாரிய சோதனையாகும். இவ்வாறு சிஎன்என் ஊடகத்தில் அக்ரவால் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. கடந்த பத்தாண்டில் சிறிலங்காவின் மிகப் பலம் பொருந்திய சக்தி மிக்க அரசியல்வாதி மீண்டும் ஒரு தடவை நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளார். சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் நா…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் – தோல்வியுற்றவர்களுக்கு வாய்ப்புAUG 22, 2015 | 2:04by கி.தவசீலன்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஐதேகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், சமர்ப்பித்துள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான பட்டியலில், தேர்தலில் தோல்வியுற்ற பலருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. நேற்று ஐதேக தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் 13 பேர்தொடர்பான விபரங்களை வெளியிட்டதையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் 12 பேர் கொண்ட தமது பட்டியலை வெளியிட்டது. இதன்படி, ஐதேக சமர்ப்பித்துள்ள பட்டியலில்- கரு ஜெயசூரிய, மலிக் சமரவிக்கிரம, டி.எம்.சுவாமிநாதன், வண.அதுரலியே ரத்தன தேரர், கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன, திலக் மாரப்…
-
- 0 replies
- 487 views
-
-
ஐதேகவின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியானது! [Friday 2015-08-21 09:00] தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில், ஐதேகவுக்கு 13 தேசியப் பட்டியல் அசனங்கள் கிடைத்திருந்தன. அவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விபரங்களே வெளியிடப்பட்டுள்ளன. 1. மலிக் சமரவிக்ரம 2. டி.எம்.சுவாமிநாதன் 3. கரு ஜயசூரிய 4. அதுரலிய ரதன தேரர் 5. ஜயம்பதி விக்ரமரட்ன 6. திலக் மாரப்பன 7. சீ.ஏ. மாரசிங்க 8. எம்.கே.டி.எஸ். குணவர்தன 9. எம்.எச.எம்.எம. நாவீ (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) 10. எம்.எச்.எம். சல்மான் (முஸ்லிம் காங்கிரஸ்) 11. ஏ.ஆர்.ஏ. ஹாபீஸ் (முஸ்லிம் காங்கிரஸ்) …
-
- 2 replies
- 670 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனங்களில் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் பீடத்தினர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தனி தமிழர்களைக்கொண்ட தேர்தல் தொகுதியாக கருதப்படும் பட்டிருப்பு தொகுதிக்கு இந்த தேசிய பட்டியலை வழங்க தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த தேர்தலில் பட்டிருப்பு தொகுதிக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்வுப்போக்கு காணப்படுகின்றது. இந்தநிலையில் பல தரப்பினராலும் பட்டிருப்பு தொகுதிக்கு தேசிய பட்டியல் மூலம் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா…
-
- 8 replies
- 618 views
-