ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
"எது தலைமை? குழப்பத்தில் மக்கள்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasu/wuyqickza0hf?utm_source=soundcloud&utm_campaign=share&utm_medium=facebook
-
- 13 replies
- 1.7k views
-
-
இப்போதுள்ள களநிலைவரப்படி விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியத்தை வைத்து அரசியல் செய்யும் சக்திகளாக தேர்தல் களத்தில் ஈரணிகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்தப் பிளவு திட்டமிட்டு நடத்தப்பட்டதோ நடைமுறைப்படுத்தப்படுவதோ அன்று. மாறாக இது தானாய் நிகழ்ந்த ஒன்று என்றுதான் பார்க்க வேண்டும். இந்த இருநிலைக் களம் என்பது காலத்தின் தேவையேதான். அதாவது 2010 இல் கஜேந்திரகுமார் தலைமையில் ஓரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான தளத்தை உருவாக்காமல் விட்டிருந்தாற்கூட காலப்போக்கில் வேறு யாராவது அதை உருவாக்கியேதான் இருப்பார்கள். ஏனென்றால் ஈழத்தமிழ்ச்சமூகத்தின் இயங்குநிலையில் இந்த மாற்றணி கட்டாயத் தேவையும் காலத்தின் தேவையுமாகும். அவ்வகையில் இந்த இருநிலைத் தளங்கள் என்பத…
-
- 2 replies
- 905 views
-
-
இன்று வாக்குப் பொறுக்குவதற்காகத் தமிழ்த் தேசிய வியாபாரிகள் ஒருவரை ஒருவர் துரோகியாக்கிக் கொள்கின்றனர். பாராளுமன்ற அரசியல் வழிமுறை என்பதே வாக்கு வங்கியை அடிப்படையாகக்கொண்டது. வாக்குத் திரட்டுவதற்கான உக்திகளைப் பயன்படுத்துவதையே ஒவ்வொரு கட்சிகளும் மேற்கொள்ளும். தாம் சார்ந்த அதிகாரவர்க்கத்தோடு முரண்பட்டுக்கொள்ளாமல் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குகளைத் திரட்டிக்கொள்வதே தேர்தல் ஜனநாயகம். எழுபதுகளின் இறுதிப்பகுதிவரை தமிழீழம் மட்டுமே தமது இலக்கு என வாக்குத்திரட்டி வெற்றிபெற்றுவந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சி ஆகியன சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் வீங்கி வெடிக்கும் நிலையை உருவாக்கின. இந்தியா அதனைப் பயன்படுத்திக்கொண்டு ஆயுதங்களையும் பயிற்சியையும் வழங்கி வீக்கத…
-
- 35 replies
- 2.3k views
-
-
சிறிலங்காவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – சற்று நேரத்தில் வாக்களிப்பு ஆரம்பம் AUG 17, 2015 | 1:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவடையும். சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர், நடைபெறும் இந்த 15அவது பொதுத்தேர்தலில், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. 2014ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடக்கும் இந்த தேர்தலில் 15,044,490 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இம்முறை தேர்தலில், 21 அரசியல் கட்சிகள் மற்றும் 201 சுயேச்சைக் குழுக்களின் சா…
-
- 20 replies
- 2.1k views
-
-
தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வரும் வீழ்ச்சியும் மாற்றுத்தரப்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு வரும் கணிசமான வளர்ச்சியும் சர்வதேச மட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான பலத்தை அதிகரிக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து கடந்த கட்டுரை நிறைவு செய்யப்பட்டிருந்தது. அக்கருத்தைச் சற்று விரிவாகப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக எவ்வாறான அணுகுமுறையைக் கடந்த காலத்தில் உலகம் கையாண்டது, இப்போது கையாண்டுகொண்டு வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். சில ஆண்டுகளின் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச் சந்திக்கவென அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. முள்ளிவாய்க்கால் பேரழிவின்பின்னர், அதாவது புலிகள் களத்தில் இ…
-
- 10 replies
- 1.5k views
-
-
"கஜேந்திரகுமார் அன்று ஏன் பதவி விலகவில்லை?": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளரும் கவிஞருமான கருணாகரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasu/wulair9thgmu
-
- 9 replies
- 1.6k views
-
-
வரலாற்றிலேயே மிக அமைதியான முறையில் இடம்பெற்ற தேர்தல் இது : ஜனாதிபதி Aug 17, 2015 Bella Dalima Local, News Ticker, Top Slider 0 இன்று இடம்பெற்ற பொதுத்தேர்தல் தான் வரலாற்றிலேயே மிக அமைதியான முறையில் இடம்பெற்ற தேர்தல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றியினை மிக அமைதியான முறையில் கொண்டாடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். http://newsfirst.lk/tamil/2015/08/வரலாற்றிலேயே-மிக-அமைதியா/
-
- 0 replies
- 627 views
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் 25பேர், கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கட்சிக்கு மேலும் புதிய 25 உறுப்பினர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் புதிய பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் கையெழுத்தின் கீழ், இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilmirror.lk/152216#sthash.1lGbEozZ.dpuf
-
- 0 replies
- 494 views
-
-
PARLIAMENT ELECTION 2015 வாக்களிப்பு வடிவத்தைப் பார்க்கிறபோது சுதந்திரக்கட்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிக இடங்களை பெறுமென தெரிகிறது.. ரணில் அறுதிப் பெரும்பாண்மையான 113 அங்கத்தவர்களைப் பெற வாய்பில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 அல்லது 17 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. அதனால் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் கை ஓங்கும். அவர் ஏற்கனவே கட்சிக்குள் சர்வாதிகாரியாகவே செயல்படுகிறார். ஜனாதிபதி தேசிய அரசு அமைக்கவும் பிரதமரை தேர்ந்தெடுக்கவும் நேரலாம். நாளை அதி காலை 18.08.2015 தந்தி ரிவி விவாதத்தில் கலந்து கொள்கிறேன். வாக்களிப்பு வீதம் குறைவு என்று சொல்வதற்க்கு வாய்ப்பில்லை. 2 015 ஜனாதிபதி தேர்தலைவிடக்குறைவு. 2010 நாடாளுமன்ற வீதத்தைவிட மிக அதிகம். திருகோணமலை அம்பாறை மாவட்டங்களுக்கு வெளியில்…
-
- 1 reply
- 1.2k views
-
-
முடிந்தது வாக்களிப்பு – தமிழர் பகுதிகளில் மந்தமான வாக்குப்பதிவுAUG 17, 2015by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளதையடுத்து, வாக்குப் பெட்டிகளை முத்திரையிட்டு, அவற்றை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் வடக்கு. கிழக்கில் தமிழர் பகுதிகளில் வாக்களிப்பு மந்தமாகவே இருந்த்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. வாக்களிப்பு முடிவடைந்த போது, எத்தனை வீதமான வாக்களிப்பு இடம்பெற்றது என்பது பற்றிய புள்ளிவிபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், மாவ…
-
- 11 replies
- 1.2k views
-
-
• தமிழக தலைவர்களால் ஏன் வழி காட்ட முடியவில்லை? நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக தலைவர்கள் இதுவரை கருத்து கூறாதது ஆச்சரியமாக இருக்கிறது. தான் சாவதற்குள் தமிழீழத்தைக் காண வேண்டும் என்று டெசோ மாநாடு நடத்தும் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்கள் இந்த தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏன் இன்னும் கூறவில்லை? இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பெற்றுக்கொடுப்பேன் என்று கூறி ஈழத்தாய் பட்டம் பெற்றிருக்கும் ஜெயா அம்மையார் தேர்தலில் ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏன் வழிகாட்டவில்லை? 2016ல் சட்டசபையை கைப்பற்றி தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கவிருக்கும் "நாம் தமிழர்" சீமான் அவர்கள் அதற்குமுன்னர் …
-
- 23 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இருந்து 25 பேரை நீக்கினார் மைத்திரிAUG 17, 2015 | 13:24by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் 25 பேரை கட்சியின் தலைவரான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் 25 பேரே நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர்களான டி.எம்.ஜெயரட்ன, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மற்றும் ஜோன் செனிவிரத்ன, சுசில் பிரேமஜெயந்த ஆகியோரும் சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்டவர்களில் அடங்கியுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக, புதிதாக 25 பேரை சுதந்திரக் கட்சியின் ம…
-
- 1 reply
- 571 views
-
-
[ திங்கட்கிழமை, 17 ஓகஸ்ட் 2015, 02:59.36 PM GMT ] தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் குருநாகல் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியே முன்னிலை வகிக்கின்றது. இரண்டாம் இடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், மூன்றாம் இடத்தில் ஜே.வி.பி யும் உள்ளன என்று உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தபால் மூல வாக்குகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலிடத்தில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் சுமார் 60 வீத தபால் மூல வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 23 வீத வாக்குகளும், ஈ.பி.டி.பி.யினர் அண்ணளவாக 7 வீத…
-
- 4 replies
- 742 views
-
-
[ திங்கட்கிழமை, 17 ஓகஸ்ட் 2015, 11:45.09 AM GMT ] இன்று நடைபெற்ற தேர்தலில் பிரதான அரசியல் கட்சி மற்றும் ஏனைய குழுக்கள் பெற்று கொள்ளும் வாக்குகள் மற்றும் ஆசனங்கள் தொடர்பில் டீ.கே.ரிசர்ச் என்ற நிறுவனத்தினால் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆய்விற்கமைய அதிகமான வாய்ப்புகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு காணப்படுவதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் அறிக்கைகமைய ஐக்கிய தேசிய கட்சி 110 ஆசனங்களையும் முன்னணி 84 ஆசனங்களை பெற்று கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/show-RUmtyISbSVlt1H.html
-
- 11 replies
- 756 views
-
-
வாக்களிப்பு நிலையங்களில் வீணை ஏந்திய சரஸ்வதி சிலைகள் மூடிமறைப்பு - 17 ஆகஸ்ட் 2015 அப்போ வீடு சைக்கிள் சின்னங்களை மறைத்தீர்களா? தேர்தல் ஆணையாளரிடம் கேட்டாரே ஒரு கேள்வி டக்ளஸ் தேவானந்தா.... வாக்களிப்பு நிலையங்களில் வீணை ஏந்திய சரஸ்வதி சிலைகளை மூடிமறைந்தமை தொடர்பில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணையாளருக்கு முறைப்பாடு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பாடசாலைகளில் அமைக்கப்பட்டு வாக்களிப்பு நிலையங்களிலுள்ள சரஸ்வதியின் கைகளிலுள்ள வீணையை தேர்தல் கண்காணிப்பாளர்கள் துணியினால் மூடிமறைத்துள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முறைப்பாடு செய்துள்ளார் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறும் நிலையி…
-
- 9 replies
- 1k views
-
-
சவூதி அரேபியாவில் 3 இலங்கையர்களுக்கு தலையை வெட்டி மரணதண்டனைAUG 17, 2015 | 13:50by கார்வண்ணன்in செய்திகள் சவூதி அரேபியாவில் இன்று மூன்று இலங்கையர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்து கொள்ளையடித்த குற்றத்துக்காகவே இலங்கையர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. வீடு ஒன்றை உடைத்து நுழைந்த இவர்கள், அங்கிருந்தவரைத் தலையில் அடித்துக் கொலை செய்ததாகவும், அங்கிருந்த பணத்தைக் கொள்ளையிட்டதாகவும், சவூதி அரேபிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ள்ளது. இவர்கள் மூவருக்கும், செங்கடல் நகரான ஜெட்டாவில் வைத்து சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 689 views
-
-
சமஷ்டியை ஏற்க முடியாது! - என்கிறார் ரணில் [Sunday 2015-08-16 09:00] ஒஸ்லோ கூட்டறிக்கையை ஏற்கவோ, நிராகரிக்கவோ இல்லை, அது பேச்சுவார்த்தையில் ஆராய இணங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. தேர்தல் பிரச்சாரங்களின் முடிந்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஓய்வாக அலரி மாளிகையில் இருந்த போது த ஹிந்து அவரை செவ்வி கண்டது. இதன் போது அவர், 1977 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தமக்கு, 1977ஆம் ஆண்டைப்போன்றே இது முக்கியமான தேர்தல் என்று குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்சவின் சர்வதிகார ஆட்சியை தோற்கடித்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான பொருளாதார அபிவிருத்திக்கான தேர்தலாக இது இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தவ…
-
- 10 replies
- 755 views
-
-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது, வாக்களிப்பு நிலையங்களில் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் தலையில் துப்பாக்கிச்சூடு நடத்துமாறு சகல பொலிஸாருக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவது மிகவும் அவசியமென குறிப்பிட்ட அவர், இவற்றை மீறி செயற்படுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றால் குறித்த வாக்குச்சாவடியின் வாக்களிப்பு ரத்துச்செய்யப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அசம்பாவிதங்களைத் தடுக்க பொலிஸாருக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையா…
-
- 2 replies
- 825 views
-
-
சில மாவட்டங்களின் தேர்தல் முடிவுகளை வெளியிட கால தாமதமாகும் - தேர்தல் ஆணையாளர்:- போலியாக வெளியிடப்பட்ட செய்தி குறித்து விசாரணை நடத்தப்படும் - தேர்தல் ஆணையாளர்:- சில மாட்டங்களின் தேர்தல் முடிவுகளை வெளியிட கால தாமதமாகும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் பொதுத் தேர்தலின் சில மாவட்டங்களின் முடிவுகள் கால தாமதமாகியே வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக 12 மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் நாளை நண்பகல் 12 மணியளவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவினை வெளியிட நள்ளிரவு 12 மணியாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மாவட்ட ரீதியான முடிவுகள் நாளை நண்பகல் வரையிலும் முழும…
-
- 0 replies
- 750 views
-
-
நிருபராகச் செல்ல முடியாத நிலையில் உல்லாசப் பயணியாக.. வெளிநாட்டு தமிழர்களோடு.. பிற பயணிகளோடு.. பயணம் செய்த பிபிசி செய்தியாளர்.. சிங்கள இராணுவம் உள்ளூர் தமிழர்களை விரட்டி அடித்துவிட்டு பிடித்த நிலங்களில் நடத்தும் உல்லாச கோட்டல்கள் மற்றும்...நில அபகரிப்பால் குடிசைகளில் வாழ நிர்பந்திக்கப்பட்ட தமிழர்களின் வேதனை கொண்டு வருகிறார் செய்தியாக. அதிகாரப் பகிர்விற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று மீண்டும் முழங்குகிறார் மகிந்த. அது நாட்டைப் பிரிக்குமாம். பதிலடியாக.. இப்படியே நிலைமை தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யாமல் தொடரின்.. மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டம் சாத்தியப்படலாம் என்கிறார்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். இப்படி பல தகவல்…
-
- 8 replies
- 1.4k views
-
-
அரசியல் வாரிசுகள் அதிகம் போட்டியிடும் கம்பஹா மாவட்டம்! [Monday 2015-08-17 07:00] இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அரசியல் குடும்பங்களை சார்ந்த வாரிசுகள் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்திலேயே களமிறங்கியுள்ளனர். ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட சிறிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் இவ்வாறு தேர்தலில் களமிறங்கியுள்ளனர். ஐ.தே.கட்சியில் போட்டியிடும் ஹர்ஷன ராஜகருண சாலிந்த விஜேவர்தன, உதேன விஜேரத்ன, அசங்க அபேகுணசேகர, அர்ஜூன ரணதுங்க, சத்துர சேனாரத்ன ஆகியோர் முன்னாள் அமைச்சர்களின் புதல்வர்களாவார்கள். அத்தோடு ஜோர்ஜ் பெரேராவின் தந்தையாரும் முன்னாள் அரசியல்வாதியாவார். ஐக்கிய மக்கள…
-
- 0 replies
- 671 views
-
-
கலவரத்தை தூண்டிவிட்டு தேர்தலை நிறுத்த சதி? [Monday 2015-08-17 07:00] இலங்கையில் பொதுத்தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் இன்று இனக்கலவரமொன்றை உருவாக்கி வாக்களிப்பை தடுக்கும் நோக்கில் சதித்திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களிடம் செல்வாக்கு இழந்து போயுள்ள மஹிந்த அணியினர் போலிக் குண்டுகளை வெடிக்க வைத்து புலிப்பூச்சாண்டி காட்டி பொதுமக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க முதலில் திட்டமிட்டிருந்தனர். எனினும் விடயம் ஊடகங்களுக்கு கசிந்து விடயம் அம்பலமாகிப் போனதால் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை அளிக்கவில்லை. இந்நிலையில் கடைசி அஸ்திரமாக இன்று இனக்கலவரமொன்றைத் தூண்டி வாக்களிப்பை தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள மஹிந்த தரப்பு திட்டமிட்டுள்…
-
- 0 replies
- 469 views
-
-
தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள் நாளை நள்ளிரவு முதல் வெளியாகும்AUG 16, 2015 | 3:05by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நாளை நடக்கவுள்ள தேர்தலின் தொகுதி மட்டத்திலான முடிவுகள், நாளை நள்ளிரவுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். “நாளை பிற்பகல் 4 மணியளவில் வாக்களிப்பு முடிவடைந்த பின்னர்,அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும். எனினும், வாக்களிப்பு நிலையங்களில் பதிவான வாக்குகளைக் கொண்ட வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வந்து சேர்ந்ததும், நாளை இரவு 9 மணியளவில், வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும். முதலில் தேர்தல் தொகுதி ரீதியான முடிவுகள் வெளியிடப்படும். அதைய…
-
- 1 reply
- 381 views
-
-
வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகளையே மக்கள் ஆதரிக்க வேண்டும்! - பொங்குதமிழுக்கு மனோ கணேசன் செவ்வி!! வடக்குக் கிழக்கிலே இருந்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டிக் கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கும், இரு தேசம் ஒரு நாடு என்ற கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கும் நியாயமான அடிப்படைகள் இருக்கின்றன. இதனை யாரும் நிராகரிக்க முடியாது. வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசிய வேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும். அது கட்டாயமானது. கூட்டமைப்பா அல்லது மக்கள் முன்னணியா என்பதை மக்கள் முடிவு செய்வர். வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எந்தவொரு பெருந்தேசிய வாதக்கட்சிக்கும் வாக்களிப்பதில் எமக்கு உடன்பாடு இல்லைஎன கொழும்பு மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ …
-
- 7 replies
- 1.6k views
-
-
எப்.டி.பீ கட்சியின் தலைவருமான பிலிப் மியுலர் கோரிக்கை - குளோபல ;தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்குமறு சுவிட்சர்லாந்து அரசியல்வாதி கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் தற்போது சமாதான சூழ்நிலை நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.யுத்தம் அல்லது முரண்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிட்சர்லாந்து தற்காலிக அடிப்படையிலேயே உதவிகளை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்குவதில் தவறில்லை என்ற போதிலும் தற்காலிக அடிப்படையிலேயே இவ்வாறு அடைக்கலம் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டுக்குள் பிரவேசிக்…
-
- 2 replies
- 669 views
-