ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மையப்படுத்திய இனப்பிரச்சினையானது, பல ஆண்டுகளாகப் புரையோடி, பல்வேறு பிரச்சினைகளாக கிளைவிட்டு ஊதிப் பெருத்திருக்கின்றது. அரசாங்கத்தினால், இராணுவத்தின் ஊடாகவும், வேறு வழிகளிலும் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீட்டெடுத்தல், காணாமல் போனவர்களைக் கண்டறிதல், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், எல்லை தாண்டி வந்து மீன்வளங்களைச் சுரண்டி செல்கின்ற இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்தல் அல்லது அவர்களின் மீன்பிடி தொழிலை சீர் செய்தல், மாகாண மட்டத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிர்வாகச் செயற்பாடுகளுக்கான அதிகாரங்களை வலுப்படுத்தி மேம்பட…
-
- 13 replies
- 997 views
-
-
இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான ஆறு நிபந்தனைகள் விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளது. 1. தொழில் தகமைகள் அல்லது கல்வித் தகைமைகள் வைத்திருத்தல். 2. இலங்கையில் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான சொத்துகளை வைத்திருத்தல். 3. இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கியொன்றில் 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட பணத்தை 3 ஆண்டுகள் நிலையான வைப்பாக பேணுதல். 4. மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட ஏதாவது ஓர் வங்கியில் வெளிநாட்டு நாணயப் பெறுமதியில் 25, 000 அமெரிக்க டொலர்களை வைப்பாக பேணுதல். 5. 25, 000 அமெரிக்க டொலர்கள்…
-
- 157 replies
- 8.8k views
-
-
மக்களினால் தோற்கடிக்கப்பட்ட நபர் மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்ற முயற்சிக்கும் சதித்திட்டம் இடம்பெறுகின்றது. இழந்த உரிமைகளை வென்றெடுக்கவே நாம் போராட வேண்டியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டிற்கு ஏற்ற மிகச் சரியான தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் தாய்மாரை கெளரவிக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதானது. இலங்கையில் இன்று ஒற்றுமைய…
-
- 3 replies
- 1.3k views
-
-
திருகோணமலை மூதூர் கங்குவேலிப் பகுதியிலுள்ள தமிழ் விவசாயிகளின் காணிகளில் அத்துமீறி பலகாலம் விவசாய நடவடிக்கையில் சிங்கள விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கங்குவேலிப் பகுதியில் சுமார் 300 ஏக்கர் வயல் காணிகளிகளை 1993ஆம் ஆண்டு முதல் சிங்கள விவசாயிகள் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் பல தரப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஆவணங்களுடன் தெரிவித்த நிலையிலும் தீர்வு எட்டப்படவில்லை. தற்போதைய புதிய அரசு பதவி ஏற்ற காலப்பகுதியான ஜனவரியில் குறித்த காணி உரிமையாளர்கள் அரசாங்க அதிபர், பிரதேச செயலர், கிராம சேவகர் ஆகியோருக்குக் குறித்த காணி அபகரிப்புத் தொடர்பில் ஆவணங்களுடன் தெளிவுபடுத்தியிருந்த நிலையில் சி…
-
- 0 replies
- 475 views
-
-
கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று வடக்கிற்கு வருகை தந்துள்ள நிலையினில் ஊடகங்களிற்கு அவர் வாய் திறக்க மறுத்துள்ளார். பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு .முதலில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிற்கு அவர் சென்றிருந்தார்.அங்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்டவர்களை அவர் சந்தித்திருந்தார். பின்னர் யாழினில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் அரச ஆதரவு சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களுடன் வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார். வடக்கிற்கான விஜயம் மற்றும் அவதானிப்புக்கள் தொடர்பினில் ஊடகவியலாளர்கள் கேள்வி…
-
- 0 replies
- 718 views
-
-
சிறிலங்காவின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க 2020ம் ஆண்டளவில் ஜனாதிபதியாகும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது ஜாதகத்தில் அவர் 2020ம் ஆண்டாகும் போது பிரதமராகி, பின்னர் ஜனாதிபதியாவார் என்று கூறி இருப்பதாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி அவர் இரகசிய திட்டம் ஒன்றுடன் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைய ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. http://www.pathivu.com/news/38912/57//d,article_full.aspx
-
- 0 replies
- 587 views
-
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடமாகாணத்துக்கான விஜயம் இரண்டு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. ஒன்று: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பகைத்துக்கொண்டு அவருக்குப் போட்டியான நிர்வாகம் ஒன்றை வடக்கில் ஏற்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றாரா? இரண்டு: வடக்கில் அவர் மேற்கொண்ட விஜயம் பிரதமர் என்ற ரீதியானதா அல்லது ஐ.தே.க. தலைவர் என்ற முறையில் தேர்தலை இலக்காகக்கொண்டதா? வடமாகாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளும் எந்தவொரு அரசாங்கத் தலைவரும் வடமாகாண முதலமைச்சரைச் சந்திப்பதென்பது வெறுமனே சம்பிரதாயபூர்வமானது மட்டுமல்ல. வடக்கு மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமன்றி, அதற்கான தீர்வை முன்வைப்பதற்கும் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசுவது முக்கியமானது. ஏனெனில் வ…
-
- 1 reply
- 757 views
-
-
சந்திரிக்கா தீர்வு காண்பார் எனக் கூறுவது மோசமான பாதைக்கு கொண்டு செல்லும்: கஜேந்திரகுமார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேசுவது பிரிவினைவாதம் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் விபரித்தால், கூட்டமைப்பு தமிழ் தேசியவாதத்தை தேர்தலுக்கான கோஷமாக மட்டுமே பயன்படுத்துகின்றது என்பதை சம்மந்தன் மக்களுக்கு முன்பாக ஒத்துக்கொள்ள வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஆற்றிய உரை தொடர்பில் விளக்கமளிப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பொன்றைய யாழ்.ஊடக அமையத்தில் முன்னணி நடத்தியிருந்தது. இதன்போது கலந்து கொண்டு அவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்…
-
- 9 replies
- 1.1k views
-
-
இழந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எமது ஒரே குறிக்கோள். எட்டு இலட்சம் சனத்தொகை கொண்ட மக்களுக்கு கொசோவோ என்ற நாடு உருவாகியது போல 10 கோடி தமிழனுக்கு தமிழீழம் என்ற ஒரு நாடு உருவாகட்டும் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். இயக்குநர் கௌதமனின் இயக்கத்தில் இலங்கையில் நடந்த இன அழிப்பு மற்றும் 2009 இன் பின்னர் இரகசியமாக தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் உருவான பேர்சுட் ஒப் ஜஸ்டிஸ் (''Pursuit of Justice) என்ற ஆவணப்படம் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம் அரங்கில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 4 replies
- 751 views
-
-
யாழ் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் விற்பனையை தடுக்க சகலரும் ஒத்துழையுங்கள்: யாழ் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் யாழ் மாவட்டத்தில் மாணவர்களுக்கிடையில் அதிகரித்து வரும் போதை பொருள் பாவணையை ஒழிக்க சகலரும் ஒத்துழைக்க வேண்டுமென சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது யாழ் மாவட்டத்தில் ஹெரோயின், கேரள கஞ்சா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பாக்கு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதை தடுக்க சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். அதேவேளை இங்குள்ள பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மீது உங்களுக்கு சந்தேகம் என்றால் உடனடியாக, நேரடியாக என்னோடு தொடர்பு கொள்ளுங்கள் என்றும் கேட்டு கொண்டார். யாழ் மாவட்ட ச…
-
- 0 replies
- 420 views
-
-
படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பலாலி இராஜராஜேஷ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அவ் மக்களுடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அங்கு சென்று கலந்துரையாடினார் . http://www.pathivu.com/news/38856/57//d,article_full.aspx
-
- 13 replies
- 1.3k views
-
-
"விக்னேஸ்வரன் இதுவரை எந்த அரசியல் கட்சியினதும் உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளவில்லை..." முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்கும் தேவையோ? அல்லது அவரை மாகாண சபையில் இருந்து வீட்டுக்கு அனும் தேவையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ அல்லது தமிழரசுக் கட்சிக்கோ அல்லது எனக்கோ இல்லை என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சற்று முன்னர் மாவை சேனாதிராஜாவுடன் லண்டனில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகள் தொடர்புகொண்ட போது மீள்குடியேற்ற அமைச்சில் மீள் குடியேற்றம் தொடர்பாக உரையாடல்களை நடத்திக்கொண்டிருந்த மாவை “ நீங்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக மன்னாரில் கருத்து வெளியிட்டு இருந்தீர்களா? எனக் கேட்டதற்கு” “தம்பி என்ன…
-
- 12 replies
- 888 views
-
-
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு செல்லும் ரயில் சேவைகளில் எதிர்வரும் 2ம் திகதி முதல் நேரமாற்றம் செய்யப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி காலையில் 7.15 மணிக்கு புறப்படும் உதய தேவி புகையிரதம் 7.30 க்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். காலை 10.30 க்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்தி நோக்கி புறப்படும் புகையிரதம் காலை 11.30 க்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மாகோ சந்தியை சென்றடையும். மட்டக்களப்பிலிருந்து மாலை 5.45 க்கு புறப்படும் பிரயாணிகள் புகையிரதம் மாலை 5.30 க்கு புறப்பட்டு கல்லோயா சந்தியில் திருகோணமலையிலிருந்து வரும் புகையிரதத்துடன் இணைக்கப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொழும்பு கோட்டையை…
-
- 0 replies
- 660 views
-
-
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், நேற்று செவ்வாய்க்கிழமை (31) உயர்நீதிமன்றத்தில் தலையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக, ஏற்கெனவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, சுமந்திரன் எம்.பி.யினால் மேற்படி திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி, 'மேற்படி அரசியலமைப்பு திருத்தத்தை சட்டமாக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று தேவையில்லை என்பது தொடர்பில் தான் நீதிமன்றில் ஆஜராகி வாதாடவுள்ளதாக' கூறினார். அரசியமைப்பின் 19ஆவது திருத்தம் தொடர்பான விவாதம…
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கை போர்ச் சூழலில் இருந்து விடுபட்டும் பொருளாதார நிலையில் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. ஒன்றுபட்ட நாட்டினுள் சமூக, பொருளாதார அபிவிருத்தியினை வென்றெடுக்க வேண்டு மாயின் அனைத்து கட்சிகளினதும் புரிந்துணர்வும் ஒற்றுமையும் அவசியம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலின் பின்னரும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்த தேசிய அரசாங்கத்தினையே கட்டியெழுப்ப வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தேசிய அரசே ஒரேவழி எனவும் பிரதமர் தெரிவித்தார்.சக்தியினால் வலுப்பெறும் இலங்கை எனும் தொனிப்பொருளில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்…
-
- 0 replies
- 380 views
-
-
தனது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் இரகசியச் சித்திரவதைத் தடுப்பு முகாம்கள் ஏதுமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுதலித்துள்ள போதிலும் அவை வடக்கே படையினரால் இப்போதும் நிர்வகிக்கப்பட்டு வருவதனை இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடக அமைப்பு (ஜே.டி.எஸ்) என்ற அமைப்பு இன்று அம்பலப்படுத்தியிருக்கிறது. இவ்வாறு முல்லைத்தீவில் படையினரினால் நிர்வகிக்கப்பட்டுவரும் இரகசியச் சித்திரவதைத் தடுப்பு முகாம்களில் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நான்கு தமிழ் இளைஞர்களின் விபரங்களை ஜே.டி.எஸ் ஆதாரங்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வடக்கிற்குத் திக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதம மந்திரி…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தில் அரச மாளிகை அமைத்திருந்தால் அந்த மக்கள் எம்மை நாட்டிலிருந்து விரட்டியிருப்பார்கள். ஆனால், யாழில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 200 ஏக்கர் காணியில் கோடிக்கணக்கான செலவில் அரச மாளிகை அமைத்தபோதும் தமிழ் மக்கள் இன்றுவரை பொறுமையாக இருந்ததே பெரிய விடயம். - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமது வீடுகளைக் கேட்டுப் போராடும் தமிழ் மக்கள் மீது நாம் குற்றம்கூறமுடியுமா என்றும் கேள்வி அவர் எழுப்பினார். கொழும்புக் கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று இலவச Wi - Fi திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:- மஹிந்த அரசின் மோசடிகள் பல உள்ளன. இது தொடர்பில் நாம் விசா…
-
- 6 replies
- 512 views
-
-
இன்று திங்கட்கிழமை(30) வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 28 பேர், 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி வி.சண்முகரட்ணம் தெரிவித்தார். 9 ஏ சித்திகளை 28 பேரும் 8 ஏ சித்திகளை 48 பேரும் 7 ஏ சித்திகளை 25 பேரும் 6 ஏ சித்திகளை 24 பேரும் பெற்றுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய 246 பேரில் 245 பேர் சித்தியடைந்துள்ளதாகவும் அவர்கூறினார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 18 பேர், 9 ஏ சித்திகளையும் 32 பேர், 8 ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர். இந்தப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 236 பேரில் அனைவரும் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார். - http://www.tamilmirror.lk/142987#sthash.eTJq…
-
- 20 replies
- 1.2k views
-
-
வடக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் கேள்வியினை அதிகரிக்கும் நோக்குடன் இங்குள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் என வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் மன்றத்தின் வடமாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உற்பத்திப்பொருட்களுக்கான சர்வதேச சந்தைவாய்ப்பு என்ற தொனிப்பொருளில் ஏற்றுமதியாளர்களுக்கும் வடக்கு மாகாண உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது. இதற்கான நிகழ்வுகள் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தலைமையில் இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேல…
-
- 75 replies
- 10.5k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்மைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயற்படும். இதற்கென புதிய புரிந்துணர்வு செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கி அதன் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பேச்சாளர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதில் உள்ள நெருக்கடிகள், அடுத்தகட்டச் செயற்பாடுகள் குறித்து ஆராயும் முக்கிய கூட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி சார்பாக க.சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், க.சர்வேஸ்வரன், துரைரட்ணசி…
-
- 0 replies
- 417 views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மீளவும் ஒருங்கிணைந்து, இன்னொரு போருக்குத் திட்டமிடக் கூடும் என்று சிறிலங்காவின் புதிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தமது அரசாங்கம் அழுத்தம் கொடுத்துள்ளதாக கொழும்பில் நேற்று கருத்து வெளியிட்ட, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு வெளிநாடுகளில் மில்லியன் கணக்கான டொலர் சொத்துகள் இருப்பதாகவும், அந்த நிதியை அவர்கள் உள்நாட்டில் மீண்டும் கெரில்லா போரை ஆரம்பிக்க பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். “புலிகளின் முன்னணி அமைப்புகள் வெளிநாடுகள…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நான்கும் கூட்டமைப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள யாப்பின் படி இணங்கிச் செயற்படுவதற்கும், புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும் இணக்கம் தெரிவித்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் திருமலை மாவட்ட எம்.பி. இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்றிரவு நடைபெற்றது. தமிழரசுக் கட்சி, ஈ,பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் ஆகிவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக கடுமைன வாதப்பிரதிவாதங்களுடன் நடைபெற்றது. கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும், கூட்டமைப்புக்கான கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஈபி.ஆர்.எல். பிரதிநிதிகள் ம…
-
- 1 reply
- 466 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான ரூபா செலவில் கட்டியுள்ள சர்வதேச மாநாட்டு மத்திய நிலையம் போன்ற அரச மாளிகையைப் பார்த்து அதிர்ந்துபோனதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த மாளிகையை 6 நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்போவதாகவும் தெரிவித்தார். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று இலவச Wi - Fi திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு:- யாழ்ப்பாணத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச மாளிகையொன்றைக் கட்டியுள்ளார். 200 ஏக்கர் நிலப்பரப்பில், கோடிக்கணக்கான ரூபா செலவில் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. அந்த மாளிகையில் 10 அற…
-
- 7 replies
- 667 views
-
-
மைத்திரிபால சிறிசேனவின் தம்பி பிரியந்த சிறிசேன ‘மணல் ராஜா” என்ற பெயரில் தான் பொலன்னறுவையில் பிரபலமாகியிருக்கின்றார். அவர் தொழிலாக செய்வது மணல் வியாபாரம். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொலன்னறுவையின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றுக்கு சென்ற மைத்திரிபால சிறிசேன தன் தம்பி பற்றி வெறுப்படைந்த நிலையிலேயே கதைத்திருந்தார். மைத்திரிபால ஜனாதிபதி ஆனவுடன் பொலன்னறுவையில் மணல் அகழ்வுக்கான அனுமதி பத்திரங்களை இரத்து செய்திருந்தார். அது மைத்திரியின் தம்பியின் வயிற்றில் அடிக்கும் சம்பவமாகவே இருந்தது. ஆனால்; தம்பி அண்ணன் மைத்திரியிடம் தன் துன்ப துயரங்களை பற்றி சொல்ல செல்லவில்லை. ஏனென்றால் மைத்திரிடம் தனக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்காது என்பது பற்றி அவர் அறிந்திருந்தார். கடந்த வியாழக்கிழ…
-
- 0 replies
- 586 views
-
-
இராணுவத்தினரின் நிறுவனங்களை புலம்பெயர் தமிழர்கள் கைப்பற்றிக் கொள்வார்களாம்! இராணுவத்தினரின் நிறுவனங்களை புலம்பெயர் தமிழர்கள் கைப்பற்றிக் கொள்ளக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வந்த பல்வேறு நிறுவனங்கள் இவ்வாறு புலம்பெயர் தமிழர்களின் கைகளுக்குச் செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் விடுமுறை விடுதிகள், ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள், உணவு விடுதிகள் என்ப இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிறுவனங்களை படையினரிடமிருந்து வாங்கி கேள்விப்பத்திரங்களை கோரி வேறும் நபர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முப்படையினர் வர்த்தக நடவடிக்கைக…
-
- 1 reply
- 452 views
-