Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் கேள்வியினை அதிகரிக்கும் நோக்குடன் இங்குள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் என வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் மன்றத்தின் வடமாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உற்பத்திப்பொருட்களுக்கான சர்வதேச சந்தைவாய்ப்பு என்ற தொனிப்பொருளில் ஏற்றுமதியாளர்களுக்கும் வடக்கு மாகாண உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது. இதற்கான நிகழ்வுகள் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தலைமையில் இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேல…

    • 75 replies
    • 10.5k views
  2. தமிழ்த் தேசியக் கூட்மைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயற்படும். இதற்கென புதிய புரிந்துணர்வு செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கி அதன் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பேச்சாளர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதில் உள்ள நெருக்கடிகள், அடுத்தகட்டச் செயற்பாடுகள் குறித்து ஆராயும் முக்கிய கூட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி சார்பாக க.சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், க.சர்வேஸ்வரன், துரைரட்ணசி…

    • 0 replies
    • 418 views
  3. விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மீளவும் ஒருங்கிணைந்து, இன்னொரு போருக்குத் திட்டமிடக் கூடும் என்று சிறிலங்காவின் புதிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தமது அரசாங்கம் அழுத்தம் கொடுத்துள்ளதாக கொழும்பில் நேற்று கருத்து வெளியிட்ட, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு வெளிநாடுகளில் மில்லியன் கணக்கான டொலர் சொத்துகள் இருப்பதாகவும், அந்த நிதியை அவர்கள் உள்நாட்டில் மீண்டும் கெரில்லா போரை ஆரம்பிக்க பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். “புலிகளின் முன்னணி அமைப்புகள் வெளிநாடுகள…

    • 3 replies
    • 1.2k views
  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நான்கும் கூட்டமைப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள யாப்பின் படி இணங்கிச் செயற்படுவதற்கும், புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும் இணக்கம் தெரிவித்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் திருமலை மாவட்ட எம்.பி. இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்றிரவு நடைபெற்றது. தமிழரசுக் கட்சி, ஈ,பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் ஆகிவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக கடுமைன வாதப்பிரதிவாதங்களுடன் நடைபெற்றது. கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும், கூட்டமைப்புக்கான கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஈபி.ஆர்.எல். பிரதிநிதிகள் ம…

  5. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாணத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான ரூபா செலவில் கட்டியுள்ள சர்வதேச மாநாட்டு மத்திய நிலையம் போன்ற அரச மாளிகையைப் பார்த்து அதிர்ந்துபோனதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த மாளிகையை 6 நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்போவதாகவும் தெரிவித்தார். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று இலவச Wi - Fi திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு:- யாழ்ப்பாணத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அரச மாளிகையொன்றைக் கட்டியுள்ளார். 200 ஏக்கர் நிலப்பரப்பில், கோடிக்கணக்கான ரூபா செலவில் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. அந்த மாளிகையில் 10 அற…

  6. மைத்திரிபால சிறிசேனவின் தம்பி பிரியந்த சிறிசேன ‘மணல் ராஜா” என்ற பெயரில் தான் பொலன்னறுவையில் பிரபலமாகியிருக்கின்றார். அவர் தொழிலாக செய்வது மணல் வியாபாரம். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொலன்னறுவையின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றுக்கு சென்ற மைத்திரிபால சிறிசேன தன் தம்பி பற்றி வெறுப்படைந்த நிலையிலேயே கதைத்திருந்தார். மைத்திரிபால ஜனாதிபதி ஆனவுடன் பொலன்னறுவையில் மணல் அகழ்வுக்கான அனுமதி பத்திரங்களை இரத்து செய்திருந்தார். அது மைத்திரியின் தம்பியின் வயிற்றில் அடிக்கும் சம்பவமாகவே இருந்தது. ஆனால்; தம்பி அண்ணன் மைத்திரியிடம் தன் துன்ப துயரங்களை பற்றி சொல்ல செல்லவில்லை. ஏனென்றால் மைத்திரிடம் தனக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்காது என்பது பற்றி அவர் அறிந்திருந்தார். கடந்த வியாழக்கிழ…

  7. இராணுவத்தினரின் நிறுவனங்களை புலம்பெயர் தமிழர்கள் கைப்பற்றிக் கொள்வார்களாம்! இராணுவத்தினரின் நிறுவனங்களை புலம்பெயர் தமிழர்கள் கைப்பற்றிக் கொள்ளக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வந்த பல்வேறு நிறுவனங்கள் இவ்வாறு புலம்பெயர் தமிழர்களின் கைகளுக்குச் செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் விடுமுறை விடுதிகள், ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள், உணவு விடுதிகள் என்ப இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிறுவனங்களை படையினரிடமிருந்து வாங்கி கேள்விப்பத்திரங்களை கோரி வேறும் நபர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முப்படையினர் வர்த்தக நடவடிக்கைக…

  8. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா கடந்த வாரம் சமகால அரசியல் விடயங்கள் சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமாக நாம் எமது கருத்தை கூற வேண்டிய தேவையும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அண்மைக்காலமாக சிலர் கடுமையான கோசங்களை எழுப்பி வருகின்றார்கள். இன்று யாழ் ஊடக அமையத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசிய முண்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டு கருத்துக் கூறுகையில்:- ஒரு நாடு இரண்டு தேசங்கள் எனக் கூறி வருகின்றார்கள் இவர்கள் குறிப்பிடுவது தமிழர் பகுதி ஒரு தேசம் சிங்களப் பகுதி ஒரு தேசம் இந்த இரண்டு தேசங்களும் இணைந்துதான் ஒரு நாடு எனக் கூறுகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கோசங்களினால் நாம் எதனையு…

    • 0 replies
    • 507 views
  9. யாழ்ப்பாணம் பல் கலைக்கழக நுன்கலைப்பீட வரைதலும் வடிவமைத்துலும் துறையின் இறுதியாண்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் காணரமாக இன்று செவ்வாயக்கிழமை விரிவுரையாளர்கள் முதற்கொண்டு உதவிப் பதிவாளர் மற்றும் துறைத்தலைவர்களும் வீடு செல்ல முடியாத நிலமை ஏற்பட்டது. பகல் 10.00 மணியளவில் வகுப்புக்களைப் புறக்கணித்து மருதனார்மடம் உரும்பிராய் வீதியில் அமைந்துள்ள பிரதான கதவினைப் பூட்டிய மாணவர்கள் அமைதியான முறையில் யாரையும் வெளிச்செல்லவிடாதவாறு தடுத்து வாசலில் அமர்ந்து இருந்தார்கள். இதனால் நுன்கலைப் பீடத்தின் உள்ளிருந்த விரிவுரையாளர்கள் உட்பட யாருமே வெளிச்செல்ல அனுமதிக்கப்படாத நிலமை காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 4.30 மணியளவில் நுன்கலைப் பீடத்திறக்கு வருகைதந்த கலைப் பீடாதிபதி வ…

    • 0 replies
    • 359 views
  10. இலங்கை மக்கள் 39 நாடுகளுக்கு எந்தவித தடைகளும் இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது. இலங்கையின் பாஸ்போர்ட் ஆசியாவில் பெறுமதியான பாஸ்போர்ட் என்றும், பல சுற்றுலா மையம் கொண்ட நாடுகளுக்கே இப்படியான சலுகைகள் வழங்கப் படுகின்றது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் பல நாடுகள் வருகை விசாவினை அறிமுகப்படுத்தியுள்ளன. வருகை விசா என்பது நீங்கள் ஒரு நாட்டினுள் நுழையும் போது அங்குள்ள விமான நிலையத்தில் வைத்து உங்களுக்கு விசா தரப்படும். இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை. இலங்கையின் பாஸ்போர்ட் உலகின் 88 ஆவது மிகவும் மதிப்பு மிக்க பாஸ்போர்ட் ஆகும். கீழே உள்ள நாடுகளுக்கு விசா இல்லாமல் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். Bahamas: Visa not required – 3 months. Barbado…

    • 23 replies
    • 3.7k views
  11. . ஆஸ்திரேலியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அங்கு இலங்கை அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கான ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் யூலி பிஷப்பை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் புலம்பெயர் அமைப்புப் பிரதிநிதிகளும் பங்குகொண்டனர். http://www.tamilcnnlk.com/

  12. வடமாகாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற தமிழக மீனவர்களுக்கு சிறிலங்காவின் கடற்படையினர் ஆதரவு தெரிவிப்பதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. வடமராட்சி மீனவ சங்கத் தலைவர் வீ.அருள்தாஸ் இதனை கொழும்பு ஊடகம்ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட முறைகளை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் வடமாகாணாத்தின் கடல் வளத்தை வீணடிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுகின்ற யாழ்ப்பாண மீனவர்கள் குடும்பத்தாருடன் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையே உருவாகி இருக்கிறது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு இவ்வாறான நிலைமை உறுதியாகும் அபாயம் இருக்கிறது. இந்த நிலையில் எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்களை சுட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. அதேநேர…

    • 4 replies
    • 486 views
  13. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையிலும் வடக்கிலுள்ள இளைஞர்கள் குறிப்பாக வன்னியிலுள்ள இளைஞர்கள் வன்னியை விட்டு வெளி மாவட்டங்களுக்கு ஒருவித பயத்துடனேயே சென்று வருகின்றனர். இந்தியாவுக்கு செல்லுவதென்றால் பல இளைஞர்கள் UN இல் பதிந்துவிட்டே செல்லுகின்றனர். இதற்குக்காரணம் பல தமிழ் இளைஞர்கள் விமான நிலையத்தில் வைத்து காணாமல் போன சம்பவங்கள் இடம்பெறுவதால் தான்; தற்போது ஒரு உண்மைச் சம்பவம் கசிந்துள்ளது. அது என்னவென்றால் UN-இல் பதிந்த இளைஞர்களே விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அப்படியானால் UN இல் பதிந்தவர்களின் தகவல்கள் புலனாய்வாளர்களிடம் சென்றதெப்படி? அதுமட்டுமல்லாமல் இந்தியா சென்ற இளைஞர்களை இந்தியாவில் வைத்து தமிழ் நாட்டுப்…

    • 4 replies
    • 721 views
  14. புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் முன்னைய அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்குவது குறித்து இன்னும் இறுதி தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதி வெளிநாட்டு அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த தடையை மீளாய்வு செய்வதாகவும், விரைவில் அதனை நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறி இருந்தார். ஆனால் தற்போது இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஆதரவு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த தடை விதிக்கப்படும் போது நாடாளுமன்றத்தின் ஆதரவு பெறப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/38871/57…

  15. விடுதலைப் புலிகள் இயக்கத்தை உடைத்தமை போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் உடைப்பதற்கான நகர்வை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டுவருவதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு தேர்தல் தொகுதி தமிழரசுக்கட்சிக் கிளைக்; கூட்டம், மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள அதன் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தின்போது, அங்கு நடைபெற்ற நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. ஆனால், வடமாகாண முத…

    • 1 reply
    • 382 views
  16. உரிய அழைப்பின்மையாலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான மூன்று நாட்கள் விஜயத்தின் போது இடம்பெற்ற நிகழ்வுகளில் முதலமைச்சர் பங்கேற்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் அதனாலேயே அந்நிகழ்வுகளில் முதலமைச்சர் பங்கேற்கவில்லை என்றும் வட மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உறுதிப்படுத்தியுள்ளார். அரசாங்கத்துக்கும் வட மாகாணசபைக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இப்பொழுது இல்லை. இந்நிலையினில், பிரதமரின் வடக்குக்கான விஜயத்தின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஏன் அழைக்கவில்லை என்பது தெரியவில்லை. எவ்வாறெனினும், பிரதேசத்துக்கு பிரதமரொருவர் விஜயம் செய்வாராயின் அந்த விஜயம் தொடர்பில் முதல…

    • 1 reply
    • 549 views
  17. தாய், தந்தையரை இழந்த நிலையில் சபை ஒன்றின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்த தன்னை அச்சபையின் மதபோதகர் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து துஸ்பிரயோகம் செய்து வந்தார் என்று 20 வயது யுவதி ஒருவர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் குறித்த யுவதியும், யுவதியை சிறு வயதில் பராமரித்து வந்த பெண் ஒருவரும் இணைந்து இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து குறித்த யுவதி வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி தனது தாய், தந்தையை இழந்த நிலையில் வேறு ஒருவரின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்து வந்த நிலையில் அவர் தொடர்ந்து கற்பதற்காக கிறிஸ்தவ சபை ஒன்றின் பராமரிப்பு நிலையத்தில் கடந்த 2006 ஆம் ஆண்ட…

    • 10 replies
    • 1.2k views
  18. தமது சகோதரரின் மரண இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதை ஜனாதிபதி வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த ஜனாதிபதியின் சகோதாரர் பிரியந்த சிறிசேன, கடந்த வாரம் நண்பர் ஒருவரால் தாக்கப்பட்டு மரணமானார். இதன்போது ஜனாதிபதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்தநிலையில் குறித்த விஜயம் மார்ச் 28ம் திகதி முடிவடைந்தது. எனினும் நேற்று மாலை சகோதரரின் இறுதிக்கிரியை பொலநறுவையில் இடம்பெறும் வரையில் அவர் நாடு திரும்பவில்லை. எனினும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர உட்பட்ட ஜனாதிபதியுடன் சென்ற ஏனைய அதிகாரிகள் நாடு திரும்பிவிட்டனர். ஏற்கனவே 2012ம் ஆண்டு ஒக்டோப…

    • 0 replies
    • 561 views
  19. ஐ.நா மண்டபத்தில் கடந்த புதன்கிழமை திரையிடப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப்படத்தினை பார்வையிட்ட தமிழ் மற்றும் வேற்றின பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கினர்.. இந்த ஆவணப்படத்தினை தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னனி இயக்குநர் கௌதமன் பலத்த சிரமத்தின் மத்தியில் இயக்கியுள்ளார். கடந்த புதன்கிழமை ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் “OCAPROCE INTERNATIONAL” என்ற அமைப்பின் சார்பாக மாநாடு இடம்பெற்றது. இம்மாநாடு OCAPROCE INTERNATIONAL அமைப்பின் தலைவி தலைமையில் இடம்பெற்றதுடன், இதில் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளரான செல்லத்துரை ரஜனி, தமிழ் நாட்டில் இருந்து பேராசிரியர் இராமு.மணிவண்ணன், உயர் நீதிமன்ற சட்டத்தரணி திருமதி. அங்கயக்கன்னி, செல்வி உமாசங…

    • 0 replies
    • 371 views
  20. பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை பெறு­வ­தற்­கான பெரும்­பான்மை பலம் எங்­க­ளி­டமே இருக்­கின்­றது. எனவே, எதிர்­வரும் ஏழாம் திகதி சபா­நா­யகர் வெளி­யிடும் அறி­விப்­புக்­காக நாங்கள் காத்­தி­ருக்­கின்றோம் என்று மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். பெரும்­பான்மை பல­மில்­லாத ஒரு­வரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சபா­நா­யகர் அறி­விக்க முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சித் தலைவர் விவ­காரம் குறித்து குறிப்­பி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ள நிலையில் எதிர்க்­கட்சி தலை­வ­ரா…

    • 0 replies
    • 239 views
  21. கிழக்கு மாகாண ஆட்சியில் த.தே.கூ பங்கேற்பு; இரண்டு அமைச்சுப் பதவிகளையும் ஏற்கிறது! கிழக்கு மாகாண சபையில் புதிதாக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொண்டுள்ளது. இதன்பிரகாரம், இரண்டு அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொள்ளவுள்ளது. இது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் முன்னிலையில் ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் அனுமதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மகாண சபை உறுப்பினர்களுக்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்த…

    • 32 replies
    • 1.9k views
  22. கமரா பொருத்தப்பட்ட 'ட்ரொன்' விமானம் ஒன்று கொழும்பு கோட்டை பகுதியில் பறக்கவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வேளையில் அந்த விமானத்தை 5 சீனர்களும் இலங்கையர் ஒருவரும் கீழிருந்து இயக்கியுள்ளனர். இந்த விமானத்தின் மூலம் நகரை படம்படிக்க அனுமதி கோர வேண்டும் என தமக்கு தெரியாது என அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் தேவையான ஆவணங்களை பொலிஸில் சமர்பித்ததால் விடுவிக்கப்பட்டுள்ளனர். நவீன இயந்திரங்கள் தொடர்பில் செயற்பட வேண்டிய விதம் குறித்து சட்டம் இயற்றி மக்களை தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக இது குறித்து எம்மிடம் கருத்து தெரிவித்த சட்டத்தரணி குறிப்பிட்டார். அதன்மூலம் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்…

  23. வடக்கில் 252 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வடக்கு மாகாணத்தில், ஆங்கிலம், கணிதம்,விஞ்ஞானம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களாக 252 பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்று காலை யாழ்.இந்து; மகளிர் கல்லூரியில், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. ஏற்கனவே இடம்பெற்ற நேர்முகப் பரீட்சைகளின் அடிப்படையில் வட மாகாண கல்வி அமைச்சினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன்படி ஆங்கில பாடத்துக்கு 67 பேருக்கும், கணித பாடத்துக்கு 57 பேருக்கும், விவசாய விஞ்ஞானப் பாடத்துக்கு 35 பேருக்கும், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பாடத்துக்கு 69 பேருக்கும்,தகவல் தொழில…

  24. முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் வீட்டுக்கு அனுப்புவோம்! மாவை சேனாதிராசா எச்சரிக்கை!! வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுவாரானால் அவரையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டிவராலாமென எச்சரித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா மன்னாரில் தனிப்பட்ட சந்திப்புக்கள் சிலவற்றினில் கலந்து கொண்ட மாவை சேனாதிராசாவிடம் இன அழிப்பு தீர்மானம் மற்றும் ரணில் வருகையினை புறக்கணித்தமை தொடர்பினில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த மாவை கடும் சீற்றத்துடன் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுகின்றார்.இதனை அனுமதிக்கமுடியாது.அவ்வாறு செயற்பட்டால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனத்தெரிவித்தார்.ஏற்கனவே மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்…

    • 21 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.