Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கானல் நீராக மாறிவரும் தீர்வுக்கான யோசனைத் திட்டம் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கான யோசனைத் திட்டத்தைத் தயாரித்து சிபார்சு செய்யவெனத் தம்மால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு விடயத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில் நிற்கிறார் என்பதைக் கடந்தவாரம் இப்பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம். "ஒரு புறம் வேடன்; மறுபுறம் நாகம்' என்ற நிலைமை. சர்வதேச சமுதாயத்தைத் திருப்திப்படுத்துவதற்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்காகத் தென்னிலங்கையின் இணக்கப்பாட்டை உருவாக்கும் ஆக்கபூர்வமான எத்தனத்தில் தாம் ஈடுபட்டிருக்கிறார் எனக் காட்டுவதன் மூலம் உலக சமூகத்தை சமாளிப்பதற்கு இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற தந்…

  2. த.தே.கூட்டமைப்புக்கான அமெரிக்க அழைப்பின் பின்னணி ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் தீவிரம் பெற்று வருகின்ற நிலையில், அவர்களை நோக்கி சர்வதேச சமூகத்தின் கதவுகள் திறக்கத் தொடங்கியுள்ளன. அடுத்த வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நால்வர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளப் போவது முக்கியமானதொரு திருப்புமுனையாகவே கருதப்படுகிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரே அமெரிக்கா செல்லவுள்ளனர். இவர்களு…

    • 16 replies
    • 1.8k views
  3. மன்னாரில் விபத்து -இளைஞன் பலி -3 பேர் படுகாயம் : March 4, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் குழு ஒன்று எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) மதியம் இடம் பெற்றுள்ளது. மன்னாரில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 பேர்கள் கொண்ட இளைஞர் குழு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேளையில் பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர். குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மன்னார் அ…

  4. அப்துல் கலாம் இன்று இலங்கை வருகிறார்! [Thursday 2015-06-25 07:00] முன்னாள் இந்திய ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜயமொன் றை மேற்கொண்டு இன்று இலங்கை வரு கை தரவுள்ளதாக வெளிவிவகார அமை ச்சின் ஊடகப் பேச்சாளர் மஹிஷினி கோலோன் தெரிவித்தார். நாளை கலாநிதி அப்துல் கலாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அழைப்பின் பிரகாரம், அணுசக்தி மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக இன்றைய தினம் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை வருகை தரவுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=134780&category=TamilNews&language=…

  5. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பொது மக்களின் நலன் கருதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மதியம் 12 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் விடுமுறை நாட்களில் முற்பகல் பத்து மணி வரை யே வெளிநோயாளர் பிரிவில் பொது மக்கள் சிகிசை பெற்று வந்தனர். இதனால் பெருமளவான மக்கள் சிகிசையை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இந்த நிலையில் பொது மக்களின் கோரிக்கைக்க அமைவாக மதியம் 12 மணி வரை வெளிநோயாளர் பிரிவில் சிகிசை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. …

  6. மாவீரர் நாளை தடுப்பதற்கான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான ஆனந்த ஜயமான்னவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கரலியத்த மற்றும் மாயாதுன்னே, கோரையா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதேவேளை …

  7. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு நாளில் முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவும், அரச தலைவர் மகிந்த ராஜபச்கவும் பங்கேற்கமாடார்கள் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் வாசிக்க

  8. ஆசியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இனக்கொலையை வடிவமைக்கும் இந்தியா - நோர்வே அறிக்கை தோல்வியடைந்த இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வு அறிக்கையில் ஆசியாவின் வல்லரசுச் சக்திகள் ராணுவ ரீதியான தீர்வை உள்நாட்டுப் பிணக்குகளுக்கு முன்வைத்ததன் காரணமாகவே தமது சமாதான நடவடிக்கை இலங்கையில் தோல்வியடைந்ததாக நோர்வேக்குழு தெரிவித்திருக்கிறது.மேலும் இவ்வாறான போக்கு நோர்வே தலமையிலான பிற்காலத்தில் நடக்கவிருக்கும் எந்தவொரு சமாதான நடவடிக்கைகளையும் முற்றான தோல்விக்கு இட்டுச் செல்லும் என்று அது அஞ்சுவதாகக் கூறியிருக்கிறது. தமிழர் மீது நடாத்தி முடிக்கப்பட்ட இனக்கொலையின் சுத்திரதாரியாக இந்தியாவை நேரடியாக இந்த அறிக்கைச் சுட்டிக்காட்டவில்லையாயினும் கூட , இந்த அறிக்கை…

  9. தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அதேவேளை, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தத்தேர்தலில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக அவர் முறையாக விண்ணப்பித்திருந்தால், அவரை அழைத்து தாங்கள் பேசியிருப்போம் என்றும் மாவை சேனாதிரஜா பிபிசி தமிழோசையிடம் கூறினார்…

  10. (தி.சோபிதன்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது கடசியின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். சுதந்திரக் கடசியின் மறுசீரமைப்பு செயற்திட்ட மகாநாடு யாழ்ப்பாணத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன கடசிக்கான புதிய செயலாளராக தயாசிறி ஜயசேகரவை அண்மையில் நியமித்தார். …

  11. ”தமது பங்காளி கட்சிக்கு வன்முறையை தவிர்க்குமாறு ரணில் அறிவுரை வழங்க வேண்டும்” - மனோ கணேசன் தமது பங்காளி கட்சிக்கு வன்முறையை தவிர்க்குமாறு ரணில் அறிவுரை வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குண்டர்கள் அந்த சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் செல்லமுத்து என்பவரது மகன்கள் மூலம் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டி…

  12. மாளிகாவத்தையில் 50 வீடுகள் முழுமையாக எரிந்து நாசம் வீரகேசரி நாளேடு கொழும்பு மாளிகாவத்தை ஆர். பிரேமதாஸ விளையாட்டு மைதானத்திற்கு பின்புறமாகவுள்ள அப்பிள் தோட்ட குடியிருப்புப் பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 50 வீடுகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன. இதன்போது சிலர் காயமடைந்துள்ளனர். வீடுகளின் மேற்பகுதியில் உள்ள மின்சார இணைப்பு கம்பிகள் விழுந்ததினாலேயே இத்தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, வீடு ஒன்றிலிருந்த காஸ் சிலிண்டர் வெடித்தமையே தீவிபத்து ஏற்படக் காரணம் என்றும் கூறப்படுகின்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், விமானப்படையினர், பொலிஸார் ஆகியோருடன் பொதுமக்களும் இணைந்து தீய…

  13. மாவீரர் வாரத்தில் மாவீர்கள் சென்ற வழியில் சென்று தங்கள் வாழ்வை இன்று சிறைகளில் கழிக்கிற முன்னாள் போராளிகள் முகவர்கள் ஆயிரக்கணக்கில் சிறைகளில் வாடுகிறார்கள். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவுமற்ற மிகவும் அவலப்படுகிறார்கள். அவர்களுக்கான அடிப்படை உதவிகளை வழங்கியுதவுங்கள். தமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படைத் தேவைகளையாவது கொடுக்க உதவுங்கள். இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தமது அத்தியாவசிய தேவைகளுக்கான சிலவற்றுக்கான உதவிகளை வேண்டியுள்ளனர். அவசர தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை போன்றவற்றை புலம்பெயர் சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றனர். இவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதும் இவர்களைச் சென்று பார்க்கவோ பொருட்களை வ…

    • 21 replies
    • 2.3k views
  14. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 10 வேட்பாளர்களை இந்த தேர்தலில் சுயேச்சைக் குழுவொன்றில் நிறுத்தியிருக்கிறது. யாழ். மாவட்டச் செயலகத்தில் சுயேச்சைக் குழுக்களுக்கு பல்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சுயேச்சைக் குழு தமது சின்னமாக புலிமுகச் சிலந்தியைத் தெரிவு செய்துள்ளது. தாம் சிலந்தி சின்னத்தை தெரிவு செய்திருப்பதாகவும், அது புலிமுகம் கொண்டதாக இருப்பதால், தமது கட்சிக்கு நல்லது என்றும் சுயேச்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர் ந.வித்தியாதரன் கொழும்பு ஆங்கில நாளிதழ் …

    • 0 replies
    • 319 views
  15. வட மாகாணத்தில் குடிநீரின் அளவும் தரமும் பாதிப்பு – ஆய்வில் தகவல்! வட மாகாணத்தில் குடிநீரின் அளவும் தரமும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இதனைத் தெரிவித்துள்ளார். மாகாண நீர்பாசன திணைக்களம் மற்றும் பிராந்திய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை முன்னெடுத்திருந்த ஆய்விலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடல்நீர் உட்புகுதல், வடிகாலமைப்பு வசதிகள் குறைவாக இருக்கின்றமை, புனரமைக்கப்படாத உவர்நீர் தடுப்பணைகள், சீரமைக்கப்படாத கைவிடப்பட்ட குளங்களை மீள்சக்திபடுத்தாமை…

  16. தமிழீழ மாவீரர் நாளாகிய 27.11.2011 இரவு 8.00 மணிக்கு கோலாலம்பூர் துன்சம்பந்தன் கட்டடத்திலுள்ள சோமா அரங்கத்தில் செம்பருத்தி மற்றும் உலகத்தமிழா; நிவாரண நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. இங்கே, தமிழீழப் போரிலே இறுதிவரை போராடி தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களையும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் நினைவுகொள்ளும் நினைவெழுச்சிநாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது இதில் 300க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர் அகவணக்கத்துடன் ஆரம்பமான தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வில் பொதுச்சுடரினை மலேசிய சுவாராம் மனித உரிமை கழகத்தின் தவைலர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் ஏற்றிவைத்தார் தொடர…

  17. 50 போர்க்குற்றவாளிகளின் பட்டியலுடன் ஐ.நாவின் போலி போர்க்குற்ற அறிக்கை – வெளிவரப் போகிறதுJUL 20, 2015 | 0:02by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்பி, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அனுதாப அலையைத் தோற்றுவிக்கும் நோக்கில், போலியான ஐ.நா போர்க்குற்ற அறிக்கை ஒன்றை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர்மட்ட அரசாங்கப் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அடுத்த மாத முதல் வாரத்தில்- நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, இந்த போலியான போர்க்குற்ற அறிக்கை வெளியிடப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையில் சுமார் 50 ப…

    • 0 replies
    • 396 views
  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இரசாங்கத்திற்கும் இடையிலான 16வது சுற்றுப்பேச்சுவார்த்தை இன்று செவ்வாயக்கிழமை நடைபெறவிருக்கின்றது. இன்றைய பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் விடுத்த அழப்பை ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய சேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இருப்பதாக அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே 15ம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் முன்பு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றாததால், பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்போது அரசாங்கத்தின் அழைப்பை எதுவித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டுள்ள கூட்டமைப்பு, தமது முன்னைய முடிவை ஏன் மாற்றினோம் என்பது குறித்தும் மக்களுக்கு எதுவித வ…

    • 2 replies
    • 860 views
  19. மணலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 516 views
  20. சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவியதாக சந்தேகிக்கும் வேன் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மரதங்கடவொல, இகல புளியம்குளம் பகுதியில் வைத்து குறித்த வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.250-5680 என்ற இலக்கத்தை உடைய வேன் ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வேன் கெகிராவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/55037

  21. சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பான பயணங்களுக்குப் பயன்படுத்தப்படுத்துவதற்கென மேலும் இரண்டு பெல் 412-EB ரக உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த இரண்டு உலங்குவானூர்திகளும், இந்தவாரம் சிறிலங்கா விமானப்படைக்கு விநியோகிக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் சுமார் 2 மில்லியன் டொலர் (225 மில்லியன் ரூபா) பெறுமதி கொண்டவையாகும். சிறிலங்கா அதிபரின் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் விமானப்படையின் மிகமுக்கிய பிரமுகர்களுக்காக விமான அணியில் இவை சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாதத் தொடக்கத்தில் Textron நிறுவனத்தினால் இரண்டு பெல் 412 ரக உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப…

  22. யாழ்ப்பாணத்தில் 7 ஆசனங்களையும் கைப்பற்றும் கூட்டமைப்பு – சுமந்திரன் நம்பிக்கைAUG 08, 2015 | 13:15by கி.தவசீலன்in செய்திகள் வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள 7 ஆசனங்களையும் கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 7 ஆசனங்களையும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கூட்டமைப்புக்கு இருக்கிறது. ஆசனம் ஒன்றைப் பெறுவதற்கான ஆகக்குறைந்த 5 வீத வாக்குகளை ஏனைய கட்சிகளால் பெற முடியாமல் போகும். இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 வரையான ஆசனங்களைக் கைப்…

    • 0 replies
    • 446 views
  23. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகள் மீதான வான் குண்டுத்தாக்குதலில் விழுப்புண் அடைந்திருந்த மற்றொரு போராளி இன்று வெள்ளிக்கிழமை வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  24. தாக்குதல் அச்சத்தால், கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது… May 13, 2019 கொழும்பின் பல பகுதிகளில் இன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவும் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், காவற்துறையினர், விசேட அதிரடிப்படை, இராணுவம், கடற்படை, விமானப்படை என சகல பாதுகாப்பு படையினரும் பாதுகாப…

  25. எமக்கு கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டோம்! - ஜனாதிபதி - தொழில் அமைச்சராக தாம் பதவிவகித்தபோது வியட்நாம் நாட்டின் தொழில் அமைச்சர் தம்மை சந்தித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை பெற்றதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொரலஸ்கமுவையில் இடம்பெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 09 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்தோடு நாங்கள் இந்த நாட்டில் ஒரு ஏற்றுமதித் தொழிற்துறைய உருவாக்கவில்லை எனவும் வாய்ப்புகள் இருந்தும் அந்த வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 1979 ஆம் ஆண்டில் நான் சீனாவுக்குச் சென்றபோது சீனா நம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.