Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளி 18-08-2006 17:49 மணி தமிழீழம் [முகிலன்] கண்டல்காட்டுப் பகுதி ஊடான முன்னேற்றம் விடுதலைப் புலிகளால் முறியடிப்பு. நாகர்கோவில் பகுதிக்கும் எழுதுமட்டுவாள் பகுதிக்கும் இடைப்பட்ட கண்டல் காட்டுப் பகுதியில் இன்று சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 8 மணி நேர உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. கண்டல் காட்டுப் பகுதி ஊடாக இன்று காலை 4 மணியளவில் ஆரம்பித்த சிறீலங்காப் படையினரின் வலிந்த முன்னேற்ற நகர்வை விடுதலைப் புலிகளின் படையணிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். படையினரின் படைநகர்வை தொடக்கத்திலேயே விடுதலைப் புலிகள் முறியடித்ததை அடுத்து இருதரப்பினாலும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. தாக்குதல்கள் இன்று மதியம் 12 மணியுடன்…

    • 0 replies
    • 1.5k views
  2. தாய்லாந்து கடற்படை உயரதிகாரி சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் முக்கிய ஆலோசனை:தமிழ் அகதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்துவது முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது. [Tuesday, 2010-12-07 04:04:37] தாய்லாந்து றோயல் கடற்படையின் ஆலோசனைக் குழுத் தலைவர் அட்மிரல் சூபாகோன் பூரநாடிலொக் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபாய ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் திசார சமரசிங்கவும் உடனிருந்தார். தாய்லாந்து கடற்பகுதி ஊடாக தமிழ் அகதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்தச் சந்திப்…

  3. தமிழ் மக்களுக்கு இன்று தேவை அரசியல் ஞானி (Statesman) தமிழ் மக்களிடையே அரசியல்வாதிகள் நிறையவே இருந்துள்ளனர். தற்போதும் இருந்து வருகின்றனர். ஆனால் Statesman என்று அதாவது அரசியல் ஞானி அல்லது அரசியல் இராஜதந்திரியை தமிழினம் கொண்டிருக்கவில்லை. அதாவது தூர நோக்கில் சிந்தித்து தமிழினத்தை வழிநடத்தக் கூடிய அரசியல் ஞானியை தமிழினம் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாகத் தமிழினத்தைக் காலத்துக்குக் காலம் வழி நடத்தியவர்கள் தாம் விட்ட தவறுகளை உணர்ந்த போது ஒன்றில் அவர்களால் அந்தத் தவறினைத் திருத்திக் கொண்டு தமிழினத்தை வழி நடத்த முடியவில்லை. அல்லது கால அவகாசம் போதாத நிலையில் இருந்துள்ளனர். அல்லது இடிந்து போய் உட்கார்ந்துள்ளனர். அல்லது வயது மூப்பினால் அமைதியாகி விட்டுள்ளனர். இவ…

    • 2 replies
    • 654 views
  4. 21 ஆம் திகதி மீண்டும் மாற்று வழியை வலி­யு­றுத்­த­வுள்ள செயிட் அல் ஹுசைன் (ரொபட் அன்­டனி) ஜெனி­வாவில் எதிர்­வரும் 21 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இலங்கை குறித்த விவா­தத்­தின்­போது உரை­யாற்­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக் க­ளுக்கு நீதி வழங்கும் விட­யத்தில் மாற்று வழி­களை ஆரா­யு­மாறு சர்­வ­தேச சமூ­கத்­திடம் கோரிக்கை விடுக்­க லாம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ரணை இது­வரை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டா­மையின் கார­ண­மாக இந்த மாற்­று­வழி குறித்து ஆரா­யு­மாறு சர்­வ­தேச நாடு­க­ளிடம் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் கோரிக்கை …

  5. அகதிகள் முகாமில் தொற்றுநோய் கந்தளை, ஆக. 31: இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் நடந்து வரும் சண்டை காரணமாக பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். கந்தளை என்ற நகரில் மட்டும் இடம் பெயர்ந்து வந்த 29 ஆயிரம் பேர் பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுகாதாரமற்ற சூழ்நிலையில், இவர்களுக்கு தட்டம்மை, வயிற்றுபோக்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன. இப்போது மழை பெய்வதால் மலேரியா போன்ற நோய்கள் பரவலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். http://www.dinakaran.co.in/epaperdinakaran...5507&code=16445

  6. வடமாகாணத்தை சேர்ந்த 197 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன வடமாகாணத்தை சேர்ந்த 197 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் 10 பேர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்தல் மற்றும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த நியமனங்களை வழங்கி வைத்துள்ளார். முன்னதாக புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அதிகாரத…

  7. காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் அனுப்பப்பட்ட கடிதங்கள் தீக்கிரை! அரசாங்கத்தின் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் அனுப்பப்பட்ட கடிதங்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தீக்கிரையாக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக இன்று (வியாழக்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறகளுக்கு அரசாங்கத்தின் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மேலதிக விபரங்கள் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த அல…

  8. பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை : கடுமையான சட்டமூலத்தை கொண்டு வருமாறு ரத்ன தேரர் வலியுறுத்தல் By DIGITAL DESK 5 01 NOV, 2022 | 01:23 PM (இராஜதுரை ஹஷான்) கொவிட் வைரஸ் தொற்று பரவலை காட்டிலும் ஐஸ் போதைப்பொருள் பாவனை சமூகத்தில் தீவிரமடைந்துள்ளது. பின்தங்கிய பாடசாலை மாணவர்கள் கூட தற்போது ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளார்கள். ஐஸ் போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டமூலத்தை இருவார காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (0…

  9. தியாக தீபன் சீமான் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் சீறுவோர் சீறும் சிறுத்தை புலியே சிறைக்கு அஞ்சா சீமானே வணக்கம். ஆட்சியைப் பிடிக்கும் அவசரம் வேண்டாம், காட்சியை மாற்றுவதில் கவனம் செல்க, “இரண்டு பகையை எதிர்த்திடல் இயலாது இரண்டில் ஒன்றை இன்துணையாய்க் கொள்க, இயம்பிடும் வள்ளுவம், ஏற்றுச் செயல்ப்பட இணைத்திடுவீர் ஈழ ஆதரவாளர் எல்லோரையும்! நாட்டைச் சூறையாட நரிகள் கூட்டனி சேர, நரிகளை வேட்டையாட, நல்லவர்கள் இணைவதில் தயக்கம் என்ன? தயைகூர்ந்து அனுசரிப்பீர். தந்தை வயது நெடுமாறனைத் தலைவராக ஏற்பதில் தவறொன்றும் இல்லையே, தனயன் வை.கோ.வின் தம்பியாய்ச் செயல்படுவதில் தன்மானம் குறையாது. மற்ற வீரர்களை மார்போடு அணைப்பதால் மங்காது புகழ் மாறாக பொங்கிப் பொலியும…

  10. இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினால்தான் தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழைத்து இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத்சாலி தெரிவித்தார். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை அமுல் படுத்துவது தொடர்பில் பிரதமர் மோடி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உறுதியளித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் ஒப்பந்தக்காரராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் சுப்பிரமணிய சுவாமி 13 ஆவது திருத்தம் 90 வீதம் அமுல்படுத்தப்பட்டதாக கூறியது முற்றிலும் பொய்யானது என்றார். புத்தி சுவாதீனம் இல்லாதவர் சுப்பிரமணிய சுவாமி என்பதும் தெட்ட தெளிவாகி விட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்த…

  11. போர் தீவிரமாகப் போகும் நாளும் அதனை ஒத்திவைப்பதற்கான பிரயத்தனங்களும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலுமாக ஒட்டுமொத்தமாக இலங்கைத்தீவு முழுவதும் நாளாந்தம் படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் இடையறாது நடந்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடரும் இந்த பயங்கரவாதத்தில் பலியாகிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்களேயாவர். இதில் இருந்து இதற்கான சூத்திரதாரிகள் யார் என்பதை தெளிவாக அடையாளம் கண்டுவிட இயலும். இதனைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்வதற்கு எந்த விசாரணைக்குழுக்களும் தேவையில்லை. நாளாந்தம் ஐந்து அல்லது ஆறு பேர் என்ற கணக்கில் தமிழினக் குறைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது கடந்த திங்களன்று அம்பாறையில் பத்து முஸ்…

  12. இலங்கையுடனான மீனவர் பிரச்னைக்கு, பெரும்பாலான விசைப்படகுகளுக்கு மறைமுக சொந்தக்காரர்களான தமிழக அரசியல் பிரபலங்கள் தான் காரணம்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி, நேற்று, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பரபரப்பான தகவலை பகிரங்கப்படுத்தினார். போராட்டம் : நேற்று முன்தினம், ராமேஸ்வரம் மீனவர்கள், 15 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு, இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட, 319 தமிழக மீனவர்களின், 64 விசைப்படகுகளையும் இலங்கை அரசு திருப்பிக் கொடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த, 40 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த சூழலில், 'இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் சொல்லி, நான் தான், தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க தடை போட்டே…

  13. வாக்கெடுப்பு முடிந்ததும் விகாரைக்கு ஓடிய ரணில் கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்த பின்னர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கங்காராமய விகாரைக்குச் சென்று வழிபாடு நடத்தினார். சிறிலங்கா பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்தது. நேற்றிரவு 9.30 மணியளவில் ஒவ்வொருவராக பெயர் அழைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முடிவு சுமார் அரை மணிநேரத்தில் அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மைத்ரி விக்கிரமசிங்கவுடன், கங்காராமய விகாரைக்குச் சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் பெருமளவான ஐதேக…

  14. ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது By T. SARANYA 14 NOV, 2022 | 01:37 PM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பல குற்றச்சாட்டுக்களின் கீழ் கறுவாத்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139984

  15. இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஜனாதிபதி அக்கறை கொள்ளாதவர் அமெ.யிடம் சொல்யஹய்ம் எடுத்துரைத்தார் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-09 10:02:09| யாழ்ப்பாணம்] இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறிதும் அக்கறை காண்பிக்கவில்லை. அது தொடர்பில் அவரிடம் சரியான அறிவும் இருக்கவில்லை என நோர்வேயின் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான அனுசரணையாளருமான எரிக் சொல்ஹெய்ம் நோர்வேயின் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்ததாக ஒஸ்லோ பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களிலேயே இந்த உரையாடல் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ள அந்தப் பத்திரிகை, 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை வந்த சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகள் தொடர்ப…

  16. யாழ். பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளுடன் வீதிகளில் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதிகள் மற்றும் வாடகை அறைகளில் தங்கியுள்ள மாணவிகள், பல்கலைக்கழகத்தில் தமது கற்றல் செயற்பாடுகளை முடித்துக்கொண்டு தமது தங்குமிடத்திற்கு திரும்பும் வேளைகளில் பல்கலையை சூழவுள்ள வீதிகளில் அநாவசியமாக கூடி நிற்கும் இளைஞர்கள் கும்பல்கள் மாணவிகளை இலக்கு வைத்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசுதல் , தமது அந்தரங்க உறுப்புக்களை காட்டுவது , ஆபாசமாக சைகைகளை காட…

  17. அவுஸ்திரேலியாவின் பயண எச்சரிக்கை: அதிருப்தியில் சிறிலங்கா இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக அவுஸ்திரேலியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் சிறிலங்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் வடக்கு கிழக்குக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவசியப் பயணம் மேற்கொள்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் வெளிநாட்டவருக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. சுற்றுலா இடங்களில் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளால் பாலியல் தாக்குதல், கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பிலான …

  18. கோப்பாய் பொலிஸாரினால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உரும்பிராய் யோகபுரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்ட சடலம் அந்தப் பகுதியில் கடந்த வாரம் காணாமல் போன ஜந்து பிள்ளைகளின் தந்தையினுடையது என அடையாளம் காணப்பட்டுள்தாக எமது மாவட்ட செய்தி நிரூபர் தெரிவித்துள்ளார். மேலும், யாழ் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டு இருந்த சடலத்தை நேற்று மாலை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள். இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் தாயார் இன்று குறிப்பிட்ட சடலத்தை அடையாளம் காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சடலம் மீட்க்கப்பட்ட கிணற்றில் இருந்து காணமல் போன மகாலிங்கம் அமிர்தராஜ் என்பவரின் கையடக்க தொலைபேசி மற்றும் சாரமும் நேற்றயை தினம் அடையாளம் காணப்பட…

  19. 2019 பொது­ந­ல­வாய உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­களின் மாநாடு இலங்­கையில் பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு உரித்­தான நாடு­களின் உள்­ளூ­ராட்சி மன்­ற உறுப்­பி­னர்­களின் அடுத்த மாநாட்டை 2019ஆம் ஆண்டு இலங்­கையில் நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு அறி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு உரித்­தான நாடு­களின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­களின் அடுத்த வரு­டத்­துக்­கான மாநாட்டை இலங்­கையில் நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. பொது­ந­ல­வாய மாநாட்டின் உள்­ள…

  20. இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டைப்பெற்று இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே பேச்சுவார்த்தையின் நோக்கம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் By DIGITAL DESK 2 12 DEC, 2022 | 11:10 AM இந்த இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டையும் நிரப்பி, ஒட்டுமொத்தமாக இந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவற்கு ஒரு மிகப்பெரிய தேவை ஒன்று இருப்பதால் நாங்கள் எங்களுடைய முக்கியத்துவத்தை இந்த சந்தர்ப்பத்தில் விளங்கிக் கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படவர்கள் என்ற வகையில் செயற்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்…

  21. தமிழக ஊடகமான தினமணியின் கருத்து அமைதியைத் தேடி இலங்கை அரசியலில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இலங்கையின் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இரண்டு ஆண்டுகளுக்கு இணைந்து செயல்படுவதென ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, தேர்தல் சீர்திருத்தம், சிங்களர்-தமிழர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பதன் மூலம் இலங்கையில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துதல் ஆகிய இந்த நான்கு குறிக்கோள்களுக்காகவும் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படவுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கட்சி என்று சொல்வதைக் காட்டிலும், இரண்டாம் இடத்தில் உள்ள கட்சி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஏனெனில், இலங்கை நாடா…

  22. படுகொலைகளில் ஈடுபட்ட STF அதிகாரிகளின் பட்டியலை ஐ.நா விடம் கையளித்த ITJP ஸ்ரீலங்காவின் எஸ்.ரி.எப் என்றழைக்கப்படும் விசேட அதிரடிப்படை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட மனித குலத்திற்கு எதிராக கொடூரங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்துள்ளது. ITJP என்ற ஸ்ரீலங்காவின் நீதிக்கும் நியாயத்திற்குமான சர்வதேச அமைப்பு இந்த பட்டியலை வழங்கியுள்ளதுடன், அந்த அமைப்பு நேற்றைய தினம் லண்டனில் வைத்து வெளியிட்ட அறிக்கையொன்றில் வெள்ளைவான் கடத்தல்கள், சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களை விசேட அதிரடிப்படை பொல…

  23. யாழ் - தக்கவைக்கப் போராடும் சிங்களப்படை மாவிலாறு நீர் பிரச்சினையைக் கொண்டு தனது இராணுவ, அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முயற்சித்த அரசு இன்று பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதியான மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராட்சி தலைமையில் 3,000 வீரர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை 26 நாட்களாகியும் இன்றுவரை இலக்கை அடையவில்லை. போர்நிறுத்தத்தை தனக்கு கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தனது நீண்ட கால இராணுவ நலன்களை எட்ட முற்பட்டுள்ளது அரசு. அதாவது தெரிவு செய்த நிலைகள் மீது படை நடவடிக்கைகளையும், விமானத்தாக்குதல்களையும் மேற்கொள்வது இவை ஒரு முழு அளவிலான போராக மாறி தனக்கு…

  24. தமிழக மீனவரைத் தாக்குகின்ற மூன்றாவது சக்தி எது? இந்தியாவின் தமிழக மீனவர் மீது மூன்றாவது சக்தி ஒன்றுதான் தாக்குதல் நடத்துகின்றது என அரசு அறிவித்து உள்ளது. அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் இதை தெரிவித்து உள்ளார். "தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவார்களாக இருந்தாலும்கூட இலங்கைக் கடல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவே மாட்டார்கள்.. எனவே தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு பின்னால் மூன்றாவது சக்தி ஒன்று உண்டு என சந்தேகிக்க வேண்டி இருக்கின்றது." இவ்வாறு தூதுவர் தெரிவித்து உள்ளார். http://www.tamilcnn.org/index.php?action=fullnews&id=571

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.