ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143477 topics in this forum
-
ஏப்பிரல் மாதம் 29ஆம் திகதி முதல் மே 2 ஆம் திகதிவரை பிரான்சில், அர்ஜெண்டன் என்ற நகரில் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற "கோசிமொடோ" (Quasimodo) என்ற Foire & Exhibition நிகழ்விற்கு சிறி லங்கா அரசை சிறப்பு விருந்தினராக அழைக்க அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களும், அர்ஜெண்டன் நகரத்தின் மாநகரசபையும் முடிவு செய்து சென்றவாரம் சிறி லங்காவின் பிரான்சிற்கான துதுவர் தயான் ஜெயதிலக அந்த நகரத்தின் மாநகர சபையின் தலைவருடன் ஒரு பத்திரிகை செய்தியும் விட்டிருந்தார். அதில் சிறி லங்காவில் 30 வருடமாக நடைபெற்ற போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சிறி லங்கா ஒரு பாரிய மாற்றத்தில் இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும், இன்று சிறி லங்கா…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இயங்கும் சில வைத்திய சிகிச்சை நிலையங்கள் போலியானவை அங்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களும் போலியானவர்கள். குறிப்பாக பல் சிகிச்சை நிலையங்கள் மூன்று அவ்வாறு இயங்குகின்றன. அங்கு சிகிச்சை அளிக்கும் போலி வைத்தியர்களின் சிகிச்சையினால் பலர் பாதிக்கபப்ட்டுள்ளனர். குறித்த சிகிச்சை நிலையங்களில் போலி வைத்தியர்கள் போலி தாதியர்கள் போலி தொழிநுட்ப உத்தியோகஸ்தர்களே கடமையாற்றுகின்றனர். அந்த வைத்திய சிகிச்சை நிலையங்களோ அங்கு வைத்திய சிகிச்சைக்கு பயன்படுத…
-
- 5 replies
- 1.8k views
-
-
கோத்தா தொடர்பில் வேறு கருத்துக்களும் உள்ளன பொருத்தமான நேரத்தில் தகுதியான வேட்பாளரை களமிறக்குவேன் கோத்தபாய ராஜபக் ஷ பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் என்று பலர் கூறுகின்றனர். அதற்காக அவர் தெரிவுசெய்யப்பட்டுவிட்ட வேட்பாளர் என்று அர்த்தமில்லை. அவர் தொடர்பில் வேறு கருத்துக்களும் உள்ளன என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குறிப்பிட்டுள்ளார். டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருக்கின்றார். செவ்வியின் முக்கிய விடயங்கள் வருமாறு: கேள்வி: சுதந்திரக்கட்சியிலிருந்து வெளிவந்துள்ள 16 பேர் கொண்ட குழுவை உங்கள் அணியில் இணைத்து…
-
- 0 replies
- 335 views
-
-
மகிந்தவுக்கு பதற்றம் அதிகரிப்பு! மன அழுத்தமும் ஏற்ப்பட்டுள்ளதாம் நண்பர்களே உங்கள் கருத்து என்ன? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பதற்றமும் மன அழுத்தம் அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அவர் அஞ்சுவதாக தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவிப்பது தொடர்பான அறிவிப்பை ஒளிப்பதிவு செய்ய தேசிய ரூபாவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றின் ஊடகவியலாளர்கள் உட்பட தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் குழுவினர் நேற்று அலரி மாளிகைக்கு சென்றிருந்தனர். எனினும் அவர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பட்டதாக அரச தொலைக்காட்சிகளின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் அறிவிப்பை ஒளிப்பதிவு செய்ய,மிக நீண்ட நேரம் இந்த இரு அரச தொலைக்காட்சிகளின…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை கள் ஏராளம். எனினும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய தீர் மானங்களை நிறைவேற்றிய வண்ணமுள்ளனர். இன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள் என்று தீர்மானம் எடுத்து அதனை எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைப்பதுதான் பொருத்தமான நட வடிக்கையாக இருக்கும். இருந்தும் பதவி ஆசை விடுவதாக இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவரைத்தான் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண் டும் எனத் தீர்மானம் எடுப்பதற்குள்; தமிழ் மக் களின் எதிர்கால அரசியலையும் சின்னா பின்னமாக்கி தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லா மல் செய்கின்ற உள்நோக்கம் இருப்பதை உணர முடியும். எனினும் தமிழ் மக்கள் அரசியல் பற்றி - எங்கள் தமிழ் அரசி…
-
- 0 replies
- 479 views
-
-
1) ரட்ணசிறி விக்ரமநாயக்க உள்நாட்டு நிர்வாகம் 2) அநுர பண்டாரநாயக்க தேசிய மரபுரிமைகள் 3) டி.எம்.ஜயரட்ண பெருந்தோட்டக் கைத்தொழில் 4) நிமால் சிறிபால டி சில்வாசுகாதாரம் மற்றும் போஷாக்கு 5) மங்கள சமரவீரதுறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து 6) ஏ.எச்.எம்.பௌசிபெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத் துறை 7) ஜெயராஜ் பெர்னாண்டோப்புள்ளே நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி 8) மைத்திரிபால சிறிசேன விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் 9) சுசில் பிரேமஜயந்த கல்வி 10) கரு ஜயசூரிய பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் 11) ஆறுமுகம் தொண்டமான் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி 12) ரவூப் ஹக்கீம்தபால் தொலைத் தொடர்பு 13) தினேஷ் குணவர்த்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
யாழில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை திரட்டும் படையினர் April 13th, 2011 nila குடாநாட்டில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிற்போடப்பட்ட நிலையில் உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விவரங்களைத் திரட்டுவதில் பாதுகாப்புப் படையினர் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடைபெறாத போதிலும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து வேட்பாளர்கள் மத்தியில் பலவிதமான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.யாழ்.மாவட்டத்தில் இடம் பெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்த்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய மக்கள் …
-
- 0 replies
- 641 views
-
-
பட்டித்திடல், மணற்சேனை, கிளிவெட்டி ஆகிய நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சம்பூர் மக்கள்;, தற்போது பெய்கின்ற மழையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார். மழைநீர் வழிந்தோட முடியாதவாறும் சேறும் சகதியாகவும் அவர்களின் நலன்புரி நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளும்; நடைபாதைகளும் காணப்படுகின்றன. இதனால், இந்த மக்கள் குறிப்பாக, குழந்தைகள் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்தப் பிரச்சினைகளை உடனடியாக கவனித்து நலன்புரி நிலையங்களையும் சூழலையும் சுத்தமாக பேணுவதற்குரிய நிதியொத…
-
- 0 replies
- 263 views
-
-
[04 - February - 2007] [Font Size - A - A - A] சத்தியாக்கிரகம் என்ற அகிம்சைக் கோட்பாட்டையும் போராட்ட வடிவத்தையும் மோகனதாஸ் கரம்சந் காந்தி உலகிற்கு அறிமுகம் செய்து நூறு வருடங்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இந்தியத் தலைநகர் புதுடில்லியில் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் `சமாதானம், அகிம்சை, அதிகாரமளித்தல்- 21 ஆம் நூற்றாண்டில் காந்தீயக் கோட்பாடு' என்ற தொனிப்பொருளில் இருநாள் சர்வதேச மகாநாடொன்று நடைபெற்றது. சுமார் 90 நாடுகளில் இருந்து இந்த மகாநாட்டுக்கு பிரதிநிதிகள் வந்திருந்தனர். தென்னாபிரிக்காவில் வெள்ளையர் இன ஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கறுப்பின மக்களின் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த அங்கிலிக்கன் ஆயர் டெஸ்மண்ட் டுட்டு,நோபல் சமாதானப் பரிசு பெற்றவர…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ்க்கொடி வழி இதழில் “சீமான் தலைமை ஏற்போம்” என்ற பெயரில் வெளிவந்துள்ள கட்டுரை: சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராக மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர் தான் சீமான், தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர்: தமிழர்களின் தேசிய தலைவர் வேலுப்பபிள்ளைபிரபாகரன் மீது கொண்ட அன்பினாலும் தமிழின் மீது கொண்ட பற்றினாலும் ‘தம்பி” ‘வாழ்த்துக்கள்’ போன்ற தரமான படங்களை வழங்கினார். ‘காவிரிநீர் பிரச்சனை’ ‘பாலாறுபிரச்சனை” என தமிழர்களுக்கென எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி திரைப்படத்துறையில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல் இவர்குரலாகத்தான் இருக்கும், இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்தபோத…
-
- 5 replies
- 1.8k views
-
-
2014 இற்குப் பின் முதல் முறையாக புதுடெல்லி செல்கிறார் மகிந்த ஆட்சியை இழந்த பின்னர் முதல் முறையாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு வரும் செப்ரெம்பர் மாதம் 12ஆம் நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பாஜகவின் முக்கிய பிரமுகரான நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே, மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்றில் இந்திய- சிறிலங்கா உறவுகள் மற்றும் தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றி மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். மகிந்த ராஜபக்சவின் பயணத்துக்கான திட்டத்தை இறுதி செய்வதற்காக, குழுவொன்றை சுப்ரமணியன் சுவாமி விரைவில் கொழ…
-
- 0 replies
- 282 views
-
-
சிறீலங்காவில் உள்ள எதிர்க்கட்சிகளும், அரசில் உள்ள சிலகுழுவினரும் இணைந்து அரசின் மீதும் அதன் பிரதம மந்திரியின் மீதும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் இரகசியமாக விவாதிக்கப்பட்டுவரும் இந்த நடவடிக்கையில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மீறல்கள், கடத்தல்கள், படுகொலைகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், போர் தொடர்பாக பொதுமக்களை தவறாக வழிநடத்துதல், பதவிகளில் உள்ளவர்களின் உறவினர்களின் அத்துமீறிய தலையீடுகள் என்பன நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான காரணங்களாகவும் முன்வைக்கப்பட உள்ளன. இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு 113 வாக்குகள் தேவை. ஐ.தே.கவின் 43 உறுப்பினர்களும், தமிழ்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் செயல்பாடு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார். அவர் இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒடுக்கப் போவதாகக் கூறி இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு இறுதிக் கட்டத்தில் தமிழினப் படுகொலை நடத்தியது. பல்லாயிரம் தமிழர்கள் ஒரே நாளில் இலங்கை அரசின் முப்படைகளும் வீசிய கொத்து குண்டுகளுக்கு இரையாயினர். தமிழக முதல்வர் கருணாநிதி இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்துவார் என்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழின வாழ்வை விட முதல்வர் பதவி பெரிது என்று கருதிய கருணாநிதி காலை உணவுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் மதிய உணவுக்கு முன் வரை உண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
1996 இல் யாழ். குடாநாட்டில் பலர் காணாமற்போனதற்கு படையினரே காரணமென்பதற்கு போதிய ஆதாரங்களுண்டு - சாவகச்சேரி நீதிபதி தீர்ப்பு 1996 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல்களில் பலர் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல்போனதற்கு இராணுவத்தினரே காரணமென்பதற்கு போதிய ஆதாரங்களிருப்பதாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையின் முடிவிலேயே நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார். 1996 ஆம் ஆண்டு காலை 19 ஆம் திகதி, ஆகஸ்ட் 4 ஆம் திகதி மற்றும் அக்டோபர் 2 ஆம் திகதிகளில் தென்மராட்சியின் கைதடி, நாவற்குழி, கோயிலாக்கண்டி, தனங்க…
-
- 0 replies
- 680 views
-
-
இனப்பிரச்சினையில் அரசாங்கம் தனது யுத்தக் கொள்கையை கைவிட்டு அரசியல்தீர்வு குறித்து மீளப் பரிசீலனை செய்து, செயற்படவில்லையெனின் நழுவவிட்ட சந்தர்ப்பங்களுக்காகவும், விட்ட தவறுகளுக்காகவும் ஒரு காலத்தில் வருந்த வேண்டியிருக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீள்குடியேற்ற அதிகார சபை சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும்போதே ஷ்ரீகாந்தா எம்.பி. இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; இந்த மீள்குடியேற்ற அதிகார சபை சட்டமூலமானது நகைப்புக்குரிய விடயமாகும். பல வருடங்களாக முடிவில்லாமல் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு ஜனாதிபதியும், அர சாங்கமும் இராணுவ ரீதியிலான தீர்வுக்கு …
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த கொள்கைகளில் மாற்றமில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படக் கூடாது என மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவுஸ்திரேலியா இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். உண்மையான புகலிடக் கோரிக்கையாளர்களைக் கண்டறிவதற்கு அவுஸ்திரேலியா சிறந்த முறைமை ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே புகலிடக் கோரிக்கையாளர் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் எனவும்…
-
- 0 replies
- 207 views
-
-
இரணைமடுவில் உள்நாட்டு விமான நிலையம் கிளிநொச்சி- இரணைமடுவில் உள்ள விமான ஓடுபாதை, உள்நாட்டு விமான தளமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று முன்தினம், யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட வளாகத்தில் உள்ள கட்டடத் தொகுதிகளை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு அபிவிருத்தியின் போது, இரணைமடு விமான ஓடுபாதை, மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி என்பனவற்றில் கவனம் செலுத்தப்படும். காங்கேசன்துறையில் விரைவில் கைத்தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்படும். அதற்கான காணிகள் விரைவில் ஒதுக்கப்படும். மன்னார்- வவுனியா- திருகோணமலை வீதியை அபிவிருத்தி செய்ய…
-
- 0 replies
- 327 views
-
-
வடமராட்சி மாணவி சிங்களவர்களால் கடத்தப்பட்டு மிகிந்தலையில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்! Posted by admin On May 12th, 2011 at 11:07 am / தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட யாழ்.வடமாட்சி கிழக்கைச் சேர்ந்த மாணவி ஒருவர் மதவாச்சியில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். கடந்த 9ஆம் திகதி வடமராட்சி கிழக்கு கற்கோவளப் பகுதியில் வைத்து கடத்தப்பட்ட பிரஸ்தாப மாணவி மிகிந்தலைக் காட்டுப்பகுதியில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவி வடமராட்சியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வந்தவர்களை தேடி அலையும் புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க 250 உத்தியோகத்தர்கள் வடக்கிற்கு வருகைதந்துள்ள நிலையில் அவர்களை கண்காணிக்க இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினர் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு நாளைய தினம் மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.இதில் வடமாகாணத்திலுள்ள சகல படைமுகாம்களிலும் கடமையாற்றும் படையினர் வாக்களிக்கவுள்ளனர். இந்த நிலையில் படை முகாம்களில் வாக்களிப்பினை ஒழுங்குபடுத்துவதற்கும், கண்காணிப்பதற்குமாக குறித்த 250 உத்தியோகத்தர்களை தேர்தல் திணைக்களம் வடக்கிற்கு அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படிக் குழுவுக்கு முன்னாள் வடமாகா…
-
- 0 replies
- 467 views
-
-
ரயில் சேவைகள் தொடர்ந்தும் ஸ்தம்பிதம் மாற்று வழிக்கு தயாராகிறது அரசு நா.தினுஷா சம்பள உயர்வுக் கோரிக்கையினை முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்கங்களுக்கு சுமுகமான பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளோம். எனினும் அவர்கள் , தொடர்ந்தும் பிடிவாதமாக செயற்பட்டால் அரசாங்கம் மாற்று வழிகளைக் கையாளும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த புதன்கிழமை பிற்பகல் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி புகையிரத ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .இதனால் மக்கள் பாரியளவில் அசௌகரியங்களை எதிர்கொண்டனர…
-
- 1 reply
- 344 views
-
-
கோத்தபாய ராஜபக்சவை நஞ்சூட்டிக் கொல்ல திட்டம்? சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நஞ்சூட்டிக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறை தெரிவித்திருக்கின்றது. கடற்படையில் இருந்து வெளியேறிய முன்னாள் வீரர்களை வைத்தே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான முழு விபரங்களும் பாதுகாப்புச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருப்பதாவது: புலனாய்வுத்துறையினர் இது தொடர்பாக எனக்கு விபரங்களை கடந்த வியாழக்கிழமை சமர்ப்பித்துள்ளனர். மேலும் இச்சதித்திட்டத்தில் அரசில் உள்ள சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உள்ளன. விடுதலைப் புல…
-
- 5 replies
- 1.8k views
-
-
வன்னியில் இடம்பெற்ற போரில் இறந்தவர்களையும், தப்பியவர்களையும் நாம் மதிக்கவேண்டும் எனில் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி ஜோலந்தா போஸ்ரர் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் இரண்டாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையி;ல் தெரிவித்துள்ளார். நேற்று (17) வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்காவில் இடம்பெற்ற போர் நிறைவடைந்து இன்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்த நேரத்தில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என நாமும், போரில் தப்பியவர்களும் வேண்டிக்க…
-
- 0 replies
- 896 views
-
-
தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலைய நிர்வாகி தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்விகற்க வருகின்ற மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக முயற்சி என தர்மபுரம் பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை அடுத்து குறித்த நிர்வாகி நேற்று (17.08) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டார். குறித்த வழக்கை விசாரித்த பதில் நீதவான் சிவபாலன் எதிர்வரும் 30 .08 .2018 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். குறித்த கல்வி நிலையத்தை பொறுத்தவரை அங்கு 18 வயதிற்கும் குறைந்தவர்களே கல்விகற்று வருகின்ற நிலையில் அங்கு கல்விகற்க வருகின்ற மாணவிகளுக்கு பாலியல் துஸ்பிரயோகம் ,பாலியல் தொந்தரவு பலமுறை இடம்ப…
-
- 0 replies
- 300 views
-
-
Published By: VISHNU 16 MAY, 2023 | 05:26 PM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இனிவருங்காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், நல்லிணக்கத்தை முன்னிறுத்தி நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்கள் சுயாதீனமாகச் செயற்படும் அதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்கால் தமிழர்களின் அபிலாசைகள் அவர்களின் சுயம் என்பவற்றுக்கு அப்பால் மனிதம் தோற்கடிக்கப்பட்ட நாள். சிங்கள அரசாங்கத்தின் மிக கீழ்த்தரமான, மனித குலத்திற்கு புறம்பான படுகொலைகளுக்கு மகுடம் சூட்டுமால் போல் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறியது. இவ்வாறு வர்ணித்துள்லார் ஐயர்லாந்தில் பட்டப்பின் படிப்பு படித்துக்கொண்டிருக்கும் சிங்கள இனத்தவரான யூட் லால் பெணாண்டோ (Irish School of Ecumenics). முள்ளிவாய்க்காலில் சிங்கள இனத்தவராகிய எம்மவர்களால் கொல்லபப்ட்டவர்கள் தமிழ் குழந்தைகள், தமிழ் சகோதரர்கள், தமிழ் பெற்றோர்கள். 2600 ஆம் வருட சம்புத்த ஜயந்தியை கொண்டாடும் சிங்கள மக்களின் அதே நாள்தான் உலகம் முழுவதும் தமிழர்கள் தங்கள் உறவுகளை பலிகொடுத்த நாளாக, இனப்படுகொலை நாளாக அனுட்டிக்…
-
- 0 replies
- 863 views
-