ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
வடக்கிற்கு நேற்று விஜயம் செய்த போர்க்குற்ற விசாரணைகளுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ் ரீபன் ரெப்பினுடைய சந்திப்புக்களை அவதானித்த புலனாய்வாளர்கள் அச்சந்திப்புக்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் புகைப்படக் கருவிகளைத் தருமாறும் அங்கு எடுக்கப்பட்ட படங்களை அழிக்குமாறும் வற்புறுத்தியுள்ளனர். இதேவேளை யாழில் கிறின் கிறாஸ் விடுதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்புக்களை அவதானித்த புலனாய்வாளர்கள் தொடர்பாக அங்கு செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் போர்க்குற்ற விசாரணைகளுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ் ரீபன் ரெப்பின் கவனத்திற்குக் கொண்டுவந்த பொழுது அப்புலனாய்வாளர்கள்…
-
- 2 replies
- 710 views
-
-
சிறிலங்கா நிர்வாக சேவை சங்கத்துடன் இணைந்து கொண்டு, ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார் வடக்கு மாகாணசபையின் தலைமைச் செயலர் விஜயலட்சுமி ரமேஸ். சிறிலங்காவின் ஆளும்கட்சிக்கு நெருக்கமானவரான, விஜயலட்சுமி ரமேசை தலைமைச்செயலர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, வேறொருவரை நியமிக்க வேண்டும் என்று புதிதாகத் தெரிவான வடக்கு மாகாணசபை கோரி வருகிறது. அண்மையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த போதும் வடக்கு மாகாண முதல்வர் தலைமைச்செயலரை மாற்றுவது குறித்து பேச்சு நடத்தியிருந்தார். இதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதிய…
-
- 0 replies
- 592 views
-
-
-குணசேகரன் சுரேன், எஸ்.ஜெகநாதன் இலங்கையில் காணாமற் போனோர் என்ற ஒரு மனித இனம் உருவாகியுள்ளதாகவும் அந்நிலைமையினை அரசாங்கம் கவனத்தில் எடுத்து சரியான முறையில் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் இன்று (09) நடைபெறபோது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'காணாமற் போனோரின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்' என வலியுறுத்தும் பிரேரணையொன்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனால் வடமாகாண சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பிரேரணையினை வழிமொழிந்து …
-
- 0 replies
- 345 views
-
-
உதாரு இது? அடேங்க்கப்பா! ஜப்பானில் கலியாண ராமன் போல இஸ்ரேலில நம்ம James Bond
-
- 0 replies
- 575 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சரின் உருவப்படத்தை மாகாணசபை அலுவலகங்கள் அனைத்திலும் வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பிரேரணை முன்வைத்துள்ளார். வடக்கு மாகாணசபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம் பெறவுள்ளது. இந்த அமர்வில் 7 பிரேணைகள் சமர்ப்பிக்கப் படவுள்ளன. செங்கோல் தயார் வடக்கு மாகாணசபையின் அமர்வு இதுவரை காலமும் செங்கோல் இன்றியே நடை பெற்று வந்தது. இந்த நிலையில் வடக்கு மாகாண சபைக்குப் புதியதோர் செங்கோல் மற்றும் மாகாணக் கொடி, மாகாண இலச்சினை என்பன தயாரிக்கப்பட்டுள்ளன. இவை இன்றையதினம் உறுப்பினர்களின் அங்கீகாரத்துக்காகச் சபையில் சமர்ப்பிக்கப் படவுள்ளன. பிரேரணைகள் கொக்குத் தொடுவாய் மக்களின் வாழ்வாதாரத்துக்குரிய விவசாயக் காணிகள்…
-
- 5 replies
- 827 views
-
-
புலிகளின் புதிய தலைவர் என இலங்கை அரசால் அழைக்கபட்ட சீலன் இந்தோனேசியாவின் மேடான் நகரில் வைத்து இலங்கை புலனாய்வு பிறிவினரால் கைது செய்யபட்டுள்ளார். குமரன் பத்மநாபன் வழங்கிய தகவலின் அடிபடையில் இந்தோனேசியன் பொலிசாரின் உதவியுடன் இவர் கைது செய்யபட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி அளவில் இவர் கைது செய்யபட்டு மிஹின் விமானசேவையின் மூலம் கொழும்புக்கு அழைத்து வரபட்டுள்ளார். இவரின் கைது தொடர்பான தகவல் எதுவும் வெளிவராத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முதல் லண்டன் நோக்கி புறபட்ட விமானம் மேலும் 3 விமானங்கள் விசேட படையினரால் திருப்பி அழைக்கபட்டு தேடுதல் நடத்தப்படதன் மூலம் இவர் கைது அம்பலம் ஆகியுள்ளது. இலங்கை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஒரு மேலதிகாரி புலிகளின் புலனாய்வ…
-
- 7 replies
- 1.3k views
-
-
மத்திய கிழக்கிற்கான விஜயத்தின் நிறைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக்காலை இஸ்ரேல் சென்றடைந்தார். மத்திய கிழக்கு நாடுகளிற்கான விஜயத்தில் இரண்டு நாட்களை ஜோர்தானில் கழித்த ஜனாதிபதி நேற்று பெத்லகேமிலிருந்து ஜெருசலேமை வந்தடைந்தார். நேற்றைய தினம் அங்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்த ஜனாதிபதி இரு தரப்புப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளார். அதனையடுத்து ஜெருசலேம் புராதன நகரத்திலுள்ள புகழ்பெற்ற மதத் தலங்களுக்குச் சென்று பார் வையிட்டார். இன்று இஸ்ரேல் ஜனாதிபதி சிமோன் பெரஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பதுடன் தமது இஸ்ரேல் விஜயத்தின் ஞாபகார்த்தமாக மரக்கன்றொன்றையும் நடவுள்ளார். அதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டின் வர்த்…
-
- 4 replies
- 563 views
-
-
சிறீலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த சூட்டுத்தவிர்ப்பு வலயங்களில் வாழ்ந்த மக்கள் மீது படை யினர் தாக்குதல் நடத்தியதும், கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் போரில் பயன்படுத் தியமையும் உன்மையே. புலிகளை காரணம் காட்டிக் கொண்டு நடத்தப்பட்ட இவ்வாறான தாக்கு தல்களில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட கண கறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட மக்கள் தொகைக்கும் போரின் இறுதியில் படையினரின் கட்டுப்பா ட்டிற்குள் வந்த மக்கள் தொகை;கும் வித்தியாசம் உள்ளது. இதன்படி 1லட்சத்து 46ஆயிரத்து 67 9 பொதுமக்களுக்கு என்ன நடந்து என்பதே தெரியாது. இன்றைய தினம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல…
-
- 13 replies
- 1.1k views
-
-
போருக்குப்பின்னர் 'ஒரே நாடு ஒரே மக்கள்| என்று அரசாங்கம் உரக்கக் கூறிவருகிறது. உண்மையில் அப்படி இல்லை. தமிழர்கள் நாங்கள் சிங்களச் சகோதரர்களிம் இருந்து பேசும் மொழியால், வாழும் இடத்தால், கைக்கொள்ளும் பண்பாட்டால் வேறுபட்டவர்கள் என்பதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கு நீதியான, நிலையான அரசியல் தீர்வை வழங்கினால் மாத்திரமே விவசாயத்தில் மாத்திரம் அல்ல எல்லாத் துறைகளிலும் நிலைத்த அபிவிருத்தி சாத்தியமாகும் என்று வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார். ஏழாலை மயிலங்காட்டுப்பகுதியில் இன்று வியாழக்கிழமை (09.01.2014) உருளைக்கிழங்குச் செய்கையை ஊக்குவிக்கும் வயல்வி…
-
- 2 replies
- 461 views
-
-
என் தலைவர் பிரபாகரன் போன்ற உண்மையான புரட்சித் தமிழர்கள் இருக்கும் போது அந்தப் பட்டத்துக்குக் கொஞ்சமும் தகுதி இல்லாத என்னை, இனி அப்படி அழைக்காதீங்கனு கெஞ்சிக் கேட்டுக்கிறேன். இவ்வாறு நடிகர் சத்யராஜ் விகடன் மேடை நிகழ்வில் வாசகர் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அவரிடம் வாசகர்கள் கேட்ட சில கேள்விகளும் விடைகளும், புரட்சித்தமிழன்’ என்ற பட்டத்துக்குத் தாங்கள் தகுதியானவரா? என் தலைவர் பிரபாகரன் போன்ற உண்மையான புரட்சித் தமிழர்கள் இருக்கும்போது அந்தப் பட்டத்துக்குக் கொஞ்சமும் தகுதி இல்லாத என்னை, இனி அப்படி அழைக்காதீங்கனு கெஞ்சிக் கேட்டுக்கிறேன். 20 வருஷத்துக்கு முன்னாடி 'திருமதி பழனிச்சாமி’ படம் நடிச்சுட்டு இருந்த சமயம், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்க…
-
- 0 replies
- 643 views
-
-
வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் முதன்முறையாக செங்கோல் எடுத்து வரப்பட்டது. அதன்படி இன்று காலை 9மணிக்கு ஆரம்பமாகிய சபை நடவடிக்கையின் போது அவைத்தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார். எனினும் இதற்குமுன்னைய அமர்வுகளில் செங்கோல் இன்றியே சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. எனினும் புதிய செங்கோலினை முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் அமைச்சர்கள் சிலர் இணைந்து வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். மேலும் இன்றைய அமர்வின் போது செங்கோல் எடுத்து வரப்படும் என கடந்த சபை அமர்வில் அவைத்தலைவரால் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=809192565809388322
-
- 8 replies
- 587 views
-
-
பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அர சியல் கைதிகள் மற்றும் தமி ழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை, இலங்கைக்கு வருகை தந் துள்ள அமெரிக்கப் போர்க் குற்ற நிபுணர் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை நேர டியாகச் சென்று பார்வையிட்டுள்ளார். இலங்கைக்கு வருகை தந் துள்ள அமெரிக்காவின் போர்க் குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் பூஸா தமிழ்க் பல்வேறு தரப்பினரையும் சந் தித்துக் கலந்துரையாடி வருகின்றார். இலங்கை அரச அதிகாரிகளை நேற்றுமுன்தினம் கொழும்பில் ஸ்ரீபன் ராப் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது அவர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அரச அதிகாரிகள் பதிலளிக்கத் திணறியதாகத் தெரியவருகின்றது. இலங்கை அரசினால் அமைக் கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை நடை …
-
- 0 replies
- 367 views
-
-
வடக்கு மாகாணசபை அமர்வு களில் இதுவரை நிறைவேற் றப்பட்ட எந்தவொரு தீர்மானங் களுக்கும், நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங் களுக்கு அனுப்பிய கடிதங்க ளுக்கும் இதுவரை பதில் எது வும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் முதன் முறையாக நடத்தப்பட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தச் சபையை பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. இதுவரை வரவு செலவுக் கூட் டத் தொடர் உள்ளிட்ட மூன்று கூட்டத் தொடர்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று கூட்டத் தொடர்க ளிலும் பல்வேறு உறுப்பினர் களாலும் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களை நடைமு…
-
- 0 replies
- 408 views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்கத் தூதரகத்தினால், இன்றைய தினம் செய்த டுவிட்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட இடங்களுக்கு அமெரிக்க அதிகாரிகள் விஜயம் செய்துள்ளதாக தூதரகத்தின் டுவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட் கணக்கில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன் மற்றும் அமெரிக்க யுத்தக் குற்றச் செயல் பிரதிநிதி ஸ்டீவன் ரெப் ஆகியோர் தற்பேர்து யுத்த வலயத்திற…
-
- 0 replies
- 401 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெபிற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தார். இதன்போது யுத்த சூனிய வலயம் - 2 அமைக்கப்பட்டிருந்த புதுமாத்தளன் பாடசாலை, வைத்தியசாலை மற்றும் யுத்த காலத்தில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்து ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கும் ரெப் விஜயம் செய்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசனும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டார் என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட யுத்த சூன்ய வலயத்தில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பொதுமக்கள் அகப்பட்டிருந்தனர். யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இர…
-
- 1 reply
- 530 views
-
-
முஸ்லிம்களின் முதலாவது புனிதத் தளமான அல் - அக்ஷா பள்ளிவசாலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று விஜயம் செய்தார். http://tamil.dailymirror.lk/--main/96198-2014-01-09-07-03-52.html
-
- 2 replies
- 290 views
-
-
யாழ்ப்பாணம் விஜயம் செய்யதுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று மாலை 7.30 மணிக்கு யாழ் நல்லூரில் உள்ள மங்கோஸ் விருந்தினர் விடுதியில் சந்திப்புடன் இரவுப்போசனமும் நடைபெற்றுள்ளது. சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் மிக்சேலும் கலந்துகொண்டிருந்தார். இந்தச் சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டது குறித்து இரண்டு தரப்பும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 4 replies
- 1k views
-
-
LLRC பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றது அமுல்படுத்தப்படுகின்றது என்பதன் அர்த்தம் என்ன? உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றது அமுல்படுத்தப்படுகின்றது என்பதன் அர்த்தம் என்ன என யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவன் ரெப் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரை அமுலாக்கம் குறித்த இணைய தளத்தை பார்வையிட்ட போது அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். குறித்த இணைய தளத்தில் பல பரிந்துரைகள் 'முன்னெடுக்கப்பட்டு வருகின்றது' என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் எப்போது இந்த பரிந்துரைகள் பூர்த்தியாகும் என தெரிவித்துள்ளார்.உண்மையைக் கண்டறியு…
-
- 1 reply
- 1k views
-
-
ரஷ்யாவைப் பின்பற்றுமா கூட்டமைப்பு?! மஹிந்தவைச் சந்தித்தனர் சி.வி.வியும் சுமந்திரனும்? (படங்கள்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. வடமாகாண சபை அமைக்கப்பட்ட பின்னர் மாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன் அவரது செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கிய அதிகாரிகளும், முதலமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பேச்சுக்களில் கலந்துகொண்டனர். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு நிபந்தனையற்ற …
-
- 9 replies
- 1.6k views
-
-
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச சுயாதீனப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வழி செய்யும் ஒரு தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் தமது நாடு கொண்டுவரும் என்று போர்க் குற்றங்களுக்கான அமெரிக்க தூதர் ஸ்டிபன் ஜெ ராப் தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் இரு தரப்பும் போர்க் குற்றங்களைச் செய்ததாக ஐ நா பொதுச் செயலருக்கு ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு கூறியிருந்தது. போர்க் குற்றங்கள் குறித்து பிரிட்டனில் இருந்து இயங்கும் சேனல் 4 தொலைக்காட்சி சில வீடியோ படங்களை வெளியிட்டது. இவற்றின் உண்மைத் தன்மையை குறித்து ஐ நாவின் நிபுணர்களும் பி…
-
- 11 replies
- 978 views
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வருகிறது. ஜெனீவா: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வருகிறது. இதன் காரணமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009-ம் ஆண்டு உச்சக்கட்டம் அடைந்தது. அப்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. போர்க்குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. போர் இல்லாத பிரதேசங்களில் தஞ்சம் புகுந்த அப்பாவி தமிழ்மக்களையும் சிங்கள ராணுவம் விட்டு வைக்கவில்லை. அப்போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. புள்ளி விவரம் கூறுகிறது. போர் உச்சக்கட்டம் அடைந்தபோது மனித உரிம…
-
- 1 reply
- 661 views
-
-
வலி வடக்கில் (காங்கேசந்துறை-KKS) அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் 28/11/2013 தொடக்கம் படைத்தரப்பால் காங்கேசன்துறை நடேஸடவராக் கல்லூரியும் மூன்று இந்துக் கோவில்களும் உள்ளடங்கலாக மக்களின் அனைத்து சொத்துகலும் படையினரால் முற்றாக இடித்து அழித்து மண்ணுக்குள் புதைப்பு.
-
- 48 replies
- 3.4k views
-
-
லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமானப்படை விமானத்தில் லைக்கா மொபைல் என்ற பல்தேசிய வியாபார நிறுவனத்திற்கும் இலங்கை அரசிற்கும் இடையேயான தொடர்பும், லைக்கா மொபைல் டேவிட் கமரன் கட்சிக்கு வழங்கிய நிதி தொடர்பான ஆதரங்களும் கடந்த சில வாரங்களக வெளியாகியிருந்தன. இனியொரு இணையம் இது குறித்த பல தகவல்களை வெளியிட்டிருந்தது. லைக்கா மொபல் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், லைக்கா பிளை நிறுவனத்தின் இணைப்பாளரும் லைக்கா ஊடகப் பேச்சாளருமான திரு.சிவசாமி ஆகியோர் இலங்கை அரச விமானப்படை விமானத்தில் சென்று இறங்கும் காட்சி இன்று வெளியானது. இந்த் இருவரோடும் இலங்கை அரச அமைச்சராகவிருந்த கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரிய மற்றும் ஐங்கரன் நிறுவன உரிமையாளர் கருணாகரமூர்த்தி ஆகியோர் காணப்படுகின்றனர். ஐங்க…
-
- 12 replies
- 1.3k views
-
-
தமிழனை ஒரு கோப்பை கோப்பி கொடுத்து மயக்கிவிடும் காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதிகாரத்தை பிரித்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவை, இப்போதே இந்த அரசாங்கத்தின் கனவில் வந்து அரசு தலைவர்களின் தூக்கங்களை கெடுக்கிறது. கண் முன்னே தெரிகின்ற உண்மைகளை எதிர்கொள்ள முடியாமல் இந்த அரசு தவியாய் தவிக்கிறது. அதனால்தான் அமெரிக்க போர்குற்ற தூதுவர் ஸ்டீவன் ரெப், உள்ளூரில் போர் குற்ற விசாரணைகளை உறுதியளித்தபடி செய்துள்ளீர்களா என விசார…
-
- 3 replies
- 1.3k views
-
-
'பலஸ்தீனின் நட்சத்திரம்' எனும் பலஸ்தீனின் அதியுயர் விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலஸ்தீன் அரசாங்கம் இன்று வழங்கி கௌரவித்தது. "இலங்கைக்கும் பலஸ்தீன அரசுக்கும் இடையிலான உறவு தனித்துவமானது. பலஸ்தீன அரசுக்கும் நட்புறவுமிக்க பலஸ்தீன மக்களுக்கும் நாம் எப்போதும் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்" என இவ்விருது வழங்கும் விழாவின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, இலங்கை மக்கள் சார்பாக ஜனாதிபதி ராஜபக்ஷ, முன்னால் பலஸ்தீன் ஜனாதிபதி யாசிர் அரபாத்துக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கும் 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷன' விருதினை வழங்கிவைத்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/95874-2014-01-06-13-39-34.html இரண்டு நாள் உத்தியோகபூர…
-
- 11 replies
- 967 views
-