Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. David Cameron has been urged to investigate why the Tory Party took over £420,000 from the telecoms group Lycamobile, which has close links to Sri Lanka's controversial President Mahinda Rajapaksa. Labour MP Tom Blenkinsop told the Huffington Post UK: "The Prime Minister knows his party has received over £420k from a company closely associated with the Sri Lankan regime. He was obviously so concerned that his own MPs were recently prevented from visiting there. "So in the interests of transparency I want to know if the Prime Minister is going to investigate why his party has received over £420k from this company so closely associated with the Sri Lankan government." …

    • 2 replies
    • 948 views
  2. 17 நவம்பர், 2013 இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு இந்தியாவின் பங்களிப்பு போதுமான வகையில் இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சருக்கு உள்ளூர் முஸ்லிம் அமைச்சர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் இந்திய அரசின் உயர் மட்டத்துக்கு சரியாக எடுத்துரைக்கப்படவில்லை என்பது சல்மான் குர்ஷித்துடனான சந்திப்பின்போது விளங்கக் கூடியதாக இருந்தது என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷிதை இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் சந்தித்து உள்ளூர் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ள…

  3. தெற்கில் கொண்டாட்டம் வடக்கில் கண்ணீர் இலங்கையில் எப்பொழுதும் இருவேறு மனநிலைதான் நலவுகின்றது. தற்பொழுது பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு தெற்கில்; கொண்டாட்டமும் வடக்கில் கண்ணீரும் நிலவுகிறது. இலங்கைத் தலைநகர் கொழும்பே கோலாகலமாக உள்ளது. தெருக்களில் எல்லாம் பொதுநலவாய மாநாடு தொடர்பான பதாகைகள். பலர் வாகனங்களில்கூட அதனைப் பொருத்தியுள்ளனர். சிங்கள ஊடகங்கள் எல்லாம் பொதுநலவாய மாநாட்டைக் கொண்டாடுகின்றன. இது சிறிலங்காவின் நேரம் என்றும் இது சிறிலங்காவுக்குப் பெருமை என்றும் கொண்டாடுகின்றது. தமிழ் ஊடகங்களோ கண்ணீரோடு புரண்டழும் தமிழ்ச்சனங்களை காட்டுகின்றன. பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாதெனவும் இலங்கைக்கு எதிராகவும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்தன. ம…

  4. Started by nedukkalapoovan,

    நேற்றை தினம் பிபிசியில் (ஆங்கிலம்) இலங்கை தொடர்பான பிரதான செய்தியாக இருந்த தலைப்பில் மக்களின் கருத்துக்களைப் பகிரவும் இடமளிக்கப்பட்டிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாங்களும் இன்னும் பல உறவுகளும் கருத்துக்களைப் பரிமாறி இருதோம். எங்கள் கருத்துக்களில்.. தமிழர்களின் இராய்ச்சியம் எப்படி ஆங்கிலயர்களின் ஆட்சியின் போது பறிக்கப்பட்டது.. சிலோன் எப்படி சிறீலங்கா என்ற சிங்கள அடையாளத்தைப் பெற்றது... அதன் மூலம் முழுத் தீவும் சிங்களவர்களுக்கு என்று அடையாளப்படுத்தப்பட்டது மற்றும் தமிழ் இன அழிப்பை திட்டமிட்ட இனக்கலவரங்கள் மூலம் ஆரம்பித்தது அதனை எதிர்க்க தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினர். அவர்களே புலிகள் என்றும்.. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் தீவில் இங்கிலாந்து ஸ்கொட்லாந்து..வேள்ஸ…

  5. இன்று மதியம் சனல் 4 வெளியிட்ட இசைப்பிரியா வை உயிருடன் கைது செய்யும் காட்சிகளைக் கொண்ட காணொளி.

  6. எனக்கும் சானல் 4 சக ஊழியர்களுக்கும் [இலங்கை] அரசின் உளவு, காவல் மற்றும் குடிநுழைவு அதிகாரிகள் ஓயாமல் தந்த உளைச்சலால், இலங்கை செய்தியாளர்களுள் தைரியமும் ஆர்வமும் கொண்ட உங்களில் பிறர் துயரில் இன்புறும் உணர்வேற்பட்டதைக் கண்டுகொண்டேன். அடிபணிந்து, ராச்சியத்தின் காலாவதியான பரப்புரைகளைக் கூக்கரலிடும் ராட்வெய்லர் [நாய்வகைகளில் ஒன்று] நிருபர்களை இங்கே நான் குறிப்பிடவில்லை, அவர்களும் இதை ரசித்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை என்றாலும். ஒவ்வொரு நாளும் இத்தகைய உளைச்சலோடு வாழ்ந்துகொண்டு, அதுகுறித்து குறைகூறாமலிருக்கும், அல்லது குறைகூற முடியாமலிருக்கும் உங்களைப்பற்றி பேசுகிறேன். நீங்கள் செய்கிறவற்றைச் செய்தல் என்பது சமயத்தில் எத்தனை கடினமாக இருக்கிறது என்று என்னிடம் …

  7. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவின் கருத்துக்கு கனடா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இலங்கை உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கமலேஷ் சர்மா அண்மையில் தெரிவித்திருந்தார். சர்மாவின் இலங்கை குறித்த கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கனடா அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என கனடா தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சின் மனித உரிமை விவகாரச் செயலாளர் தீபக் ஒபராய் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், வடக்கில் …

  8. ஏதோ சிங்களவன் ராஜ தந்திரி, மோட்டுச் சிங்களவன் அல்ல அறிவாளி (தமிழன் தான் முட்டாள்) என்றெல்லாம் எங்கட ஆக்காள் புகழ்ந்து தள்ளினவை, ஆனால் இப்போது அதுக்கு என்னாச்சு சர்வதேச தொலைகாட்சி எல்லாத்திலேயும் பொதுநலவாய மாநாட்டை இருட்டடிப்பு செய்து இன சுத்திகரிப்பு நடவடிக்கையே பிரதானப்ப்டுத்தப்பட்டது என்னுடையா கேள்வி எல்லாம் ஏன் அநாவசியமாக நாம் சிங்களவனை புகழந்து எம்மைத் தாழ்த்திக் கொண்டோம் என்பது தான் ??

  9. காணொளி : இலங்கை விஜயம் தொடர்பில் கெமரூனின் பாரா­ளு­மன்­ற விசேட உரை காணொளி: http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10062:-sss-&catid=1:latest-news&Itemid=18

  10. 54 நாடுகளில் 21 நாட்டுத் தலைவர்களே இலங்கை சென்றனர்: ஒருவருக்கு தலா 70 கோடி செலவு:- விரைவில் வரியில் திணறுவர் மக்கள் - திஸ்ஸ அத்தநாயக்க பொதுநலவாய மாநாட்டு கொழும்பு பிரகடனம் மூலம் மனித உரிமை தொடர்பான சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கையை அழைத்துச் செல்லும் திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ரோம் பிரகடனத்தில் ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட மறுத்ததன் காரணமாக இலங்கையை சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்ற போதும் மஹிந்த ராஜபக்ஷ அரசு அதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளதாக ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (18.11.13) இடம்பெற்ற ஊடகவியலா…

  11. பிரதமர் கமரோன், மகிந்த ராஜபக்ச மீள் சந்திப்பு பிரித்தானிய நிலைப்பாட்டின் தீவிரத்தினையும், அதனால் வரக் கூடிய விளைவுகளையும் தாமதமாக உணர்ந்து கொண்ட, முதாவது சந்திப்பில் இறுக்கமாக இருந்த மகிந்த ராஜபக்ச, மாநாடு முடிந்து, பிரதமர் கமரோன் புறப்பட இருந்த நிலையில், அவருடன் அவசரமான இரண்டாவது சந்திப்பினை மேற்கொண்டதாயும் இதில் சில விடயங்கள் வெளிப் படையாக கலந்துரையாடப் பட்டதாகவும் தெரிய வருகிறது, திரும்பும் வழியில் துபாயில், அங்கு நடந்த விமானக் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட போது பத்திரிகையாளர்களிடம் இதனை பிரதமர் கமரோன் தெரிவித்தார். அழுத்தங்களை தான் தொடர்ந்து பிரயோகிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார். Prime Minister David Cameron had another short meeting about inter…

  12. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இலங்­கை­ மீ­தான சர்­வ­தேச விசா­ரணை ஒன்றை அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை எனவும் அவ்­வா­றா­ன­தொரு நட­வ­டிக்கை தொடர்­பான கோரிக் ­கையை தாம் முற்­றாக நிரா­க­ரிப்­ப­தா­கவும் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன் அந் நாட்டின் புலம் பெயர்ந்த தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் ஆத­ர­வா­ளர்­களை திருப்­திப்­ப­டுத்­தவே சர்­வ­தேச விசா­ர­ணையைக் கோரு­வ­தா­கவும் அவர் குற்றம் சுமத்­தி­யுள்ளார். வரும் மார்ச் மாதத்­துக்குள் நம்­ப­க­ர­மான உள் நாட்டு விசா­ரணைப் பொரி­முறை ஒன்று போர்க் குற்­றங்கள் மற்றும் மனித உரி­மைகள் விட­யங்­களில் இடம்­பெ­றா­விடின் ஐ. நா.மனித உரிமைப் பேர­வை­யுடன் இணைந்து சர்­வ­தேச நட­வ­ட…

  13. குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள், செனல்4 ஊடகவியலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆறு குடிவரவு திணைக்கள அதிகாரிகள் செனல்4 ஊடகவியலாளர்களை சந்தித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். வீசா விதிகளை மீறிச் செயற்பட்டு வருவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த ஊடகவியலாளர்கள் அலரி மாளிகைக்குள் பிரவேசிக்க முயற்சிப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகவியலாளர்கள் இலங்கை சட்ட திட்டங்களுக் மதிப்பளிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். எனினும், அலரி மாளிகைக்குள் பிரவேசி;க்க உத்தேசிக்கவில்லை என செனல்4 ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தமக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகி…

  14. தமிழ்ச்சமூகம் மரங்களை வழிபட்ட ஒரு இனம். அதன் தொடர்ச்சியாகவே இன்று எமது ஆலயங்கள் தல விருட்சங்களைக் கொண்டிருக்கின்றன. பிறந்தநாள் நினைவாக மரங்களை நடுகின்ற நாம் அதேசமயம் மறைந்த உறவுகளின் நினைவாகவும் மரங்களை நடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில்; தேசிய மரநடுகைத் திட்டத்தில் இணைந்துகொண்டிருக்கும் நாம் மாவீரர் தினத்தன்றும் மரங்களை நடுவோம். அரசாங்கத்திற்கு பயங்கரவாதிகள் எனத்தெரிபவர்கள் எமக்கு மாவீரர்கள். அவர்கள் எங்களுடைய இரத்த உறவுகள். இதனைப் படையினர் புரிந்துகொள்ளவேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இரணைமடுக்குள இடதுகரை வாய்க்க…

  15. சீனாவும் மனித உரிமை விடயத்தில் தீவிர கவனம் செலுத்துமாறு இலங்கையைக் கோரியது. இலங்கையினை கவலை கொள்ள வைக்கும் விடயங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. பிரிட்டிஷ் பிரதமரின் சரவெடிகள் குறித்து, நாங்கள் எல்லாம் இதுக்கு பயப் பட மாட்டோம் என்று சொன்ன இலங்கை, டேவிட் கேமரோன், இலங்கை வருவதற்கு முன்னர் இந்தியாவில், மன்மோகன் சிங்குடன், தனது நிலைப்பாடு குறித்து ஆலோசித்து தான் இலங்கையில் சரவெடிகள் போட்டார் என்பதை தாமதமாக புரிந்து கொண்டது. மேலும் இன்று திங்கள் கிழமை சீனா வேறு மனித உரிமை விடயத்தில் தீவிர கவனம் செலுத்துமாறு இலங்கையைக் கோரி உள்ளது, இலங்கையில் பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. முன்னர் இந்தியாவின் நிலைப்பாடுகள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சீனா, நடந்து கொண்டதால், அ…

  16. ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள சிறிலங்கா தயாராகவுள்ளதாக மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே மனித உரிமை தொடர்பான தமது முன்னேற்றங்களை ஐ. நா. மனித உரிமைப் பேரவைக்கு அறிவித்துவந்துள்ளது. இம் முறையும் அதனை முன்வைக்கவுள்ளது. அதேவேளை மனித உரிமை தொடர்பில் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிடினும் அதற்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கத் தயாராகவே உள்ளது. மனித உரிமையைப் பாதுகாப்பது தொடர்பில் நாம் மிகவும் பொறுப்புடனும் அதற்கு முக்கியமளித்தும் செயற்பட்டு வருகிறோம். இது தொடர்பில் எந்த வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் நாம் அடிபணியத…

  17. யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்திய தமிழ் உறவுகள் மீதும், கத்தோலிக்கப் பாதிரியார் மீதும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமையவே பொலிஸார் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இது ஒரு மிருகத்தனமான செயல். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை. இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: காணாமற்போனோரின் உறவினர்கள் வடக்கிலிருந்து கொழும்பு சென்று பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த சர்வதேச தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் போராட்டங்களை நடத்த முயற்சித்தனர். எனினும், கொழும்பு சென்ற அவர்களை இடைவழியில் அரச படைகள் தடுத்துத் திருப்பியனுப்பி விட்டன. இந்…

  18. கொழும்பு: மூளை வளர்ச்சி குன்றிய அமைச்சர்கள் இலங்கையில் பதவி வகித்து வருவதாக முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், "இலங்கை மொத்த ஜனத்தொகையில் 95 சதவீதம்பேர் மூன்று வேளை உணவு உட்கொள்ள முடியாத வறுமையில் வாடுகின்றனர். இலங்கை ஆசியாவின் ஆச்சரியம் என்பது எவ்வாறாயினும், ஆசியாவின் நரகமாக மாறி வருகின்றது. நாட்டில் அதிவேக வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன, 90 சதவீத மக்களால் இந்த பாதைகளில் பிரவேசிக்க முடியாது. நாட்டில் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் தலைவரின் சகோதரர், கட்டுநாயக்க விமான பாதையின் குறைபாடுகள் என்ன என கேள்வி எழுப்புகின்றார். ஒரு பிரச்னையும் இல்லை. எனினும், ஒரு கிலோ மீட்டருக்கு 1400 மில்லியன் ரூபாய் வேறு எங…

  19. வடமாகாண முஸ்லிம்களுக்காக ஆணைக்குழுவொன்று உருவாக்கப்பட்டு அந்தக் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தீர்வு காணப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை உறுப்பினரும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான ஜஸ்மின் ஆயுப், மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். பொதுநூலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது வடமாகாண முஸ்;லிம்; மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என யாழ். மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். முஸ்…

  20. மனிதஉரிமைகளை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று சிறிலங்காவிடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது. பீஜிங்கில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கயின் கங் இந்தக் கருத்தை வெளியிட்டு சிறிலங்காவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். “வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு பொருளாதார, சமூக வேறுபாடுகளால், மனிதஉரிமைகள் பாதுகாப்பிலும் வேறுபாடுகள் இருக்கக் கூடும். எனவே குறிப்பிட்ட நாடு, மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் முக்கியமாக முயற்சிகளை எடுக்க வேண்டும். அதேவேளை, உலகின் ஏனைய நாடுகள், ஆக்கபூர்வமான உதவிகளை வழங்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் மார்ச் மாதத்துக்குள் சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமை விவக…

  21. வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் 31ம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காகவே அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்ததாக தமிழ் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் புலம்பெயர் இலங்கை தமிழர்களை சந்தித்து நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த பயணம் வெற்றியளித்தால் வேறு நாடுகளுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வட மாகாண சபை உறுப்பினர்களில் முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது உறுப்பினர் அனந்தி சசிதரன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்…

    • 28 replies
    • 2.8k views
  22. யாழ்ப்பாணத்திற்கு ரயில் மூலமாகப் பயணம் செய்த கலம் மக்ரே உள்ளிட்ட சனல் 4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநுராதபுரத்தில் ரயிலை மறித்து நடத்தப்பட்ட ஓர் ஆர்ப்பாட்டம் காரணமாக அவர்கள் யாழ் பயணத்தைக் கைவிட்டு கொழும்பு திரும்பியிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். புதன்கிழமை காலை 6.50 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் புறப்பட்ட ரயிலில் சனல் 4 ஊடகவியலாளர்கள் குழுவினர் யாழ்ப்பாணம் செல்வதற்கான தமது பயணத்தை ஆரம்பித்திருந்தனர். இவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்காக ரயிலில் வருவதை அறிந்த குழு ஒன்று அநுராதபுரத்தில் வந்து நின்ற ரயிலை மறித்து, பாதையில் கூடிநின்று கலம் மக்ரேயை திரும்பிச் செல்லுமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த …

    • 46 replies
    • 3.3k views
  23. http://bcove.me/zl5dv1cu

  24. மனித உரிமைகள் விவகாரத்தில் எம்மை மூலைக்குள் தள்ளி கால வரையறை வழங்குவதை ஏற்க முடியாது : ஜனாதிபதி மனித உரி­மைகள் விவ­காரம் குறித்த விட­யத்தில் இலங்­கை­யையும் அர­சாங்­கத்­தையும் மூலை முடுக்கு ஒன்­றுக்குள் தள்ளிவிட முயற்­சிப்­பதை விடுத்து நீதி நியா­யத்தை கடைப்­பி­டிப்­ப­வர்க­ளாக சர்­வ­தேச சமூ­கத்­தி­னரும் குறிப்­பாக வெளிநாட்டு ஊட­கத்­தி­னரும் விளங்க வேண்டும் என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். நாட்டில் நல்­லி­ணக்­கத்­திற்­கான செயற்­பா­டு­களை ஏற்­க­னவே நாம் ஆரம்­பித்து விட்டோம். இந்தச் செயற்­பாட்­டிற்கு சர்­வ­தேச சமூகம் காலவரையறை விதிப்­ப­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இது ஓர் இராப்­பொ­ழுதில் செய்து முடிக்­கக்­கூடி பணி அல்ல என்­பதை நீங்கள் புரிந்து கொள்­வ­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.