ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
மாகாணசபைக்கு காணி அதிகாரங்கள் இல்லை - சிறிலங்கா உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு [ வியாழக்கிழமை, 26 செப்ரெம்பர் 2013, 11:56 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் கிடையாது என்றும், சிறிலங்காவின் மத்திய அரசுக்கே காணி அதிகாரங்கள் அனைத்தும் உள்ளதாகவும், சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் தலைமை நீதியரசர் மொகான் பீரிஸ் தலைமையிலான, மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வே இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நீதியசர்கள் மொகான் பீரிஸ், சிறீபவன், ஈவா வணசுந்தர ஆகியோர் தனித்தனியாக இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளனர். மத்திய மாகாணத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் அரசியலமைப்பின் 13வது திர…
-
- 5 replies
- 640 views
-
-
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் சரீப்பை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள நியூயோர்க் நகரில் தங்கியிருக்கும் வேளையிலேயே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது பொருளாதார கூட்டுறவு உட்பட இரு நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு குறித்தும் இருதரப்பிலும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது. http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 316 views
-
-
26 வருடங்களின் பின்னரும் திலீபனின் பசி தீரவில்லை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்தீபன் இன்று செப்டம்பர் 26. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவுநாள். ஒவ்வொரு ஆண்டும் திலீபன் தியாகச் சாவடைந்த நாளை நினைவுகூர்ந்து கொண்டே இருக்கிறேன். சின்ன வயதில் இடம்பெயர்ந்து வீடுகளே இல்லாத நாட்களில்கூட திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்தோம். 1995இற்கு முன்பாக ஒரு வருடத்தில், அதுவும் ஒரு நாவற்பழக்காலம் வீட்டின் முன்பாக உள்ள நாவல் மரத்தின் கீழ் எங்கேயோ வாங்கி வந்த திலீபனின் படத்தை கொண்டு வந்து தீபம் ஏற்றிய நினைவு இப்பொழுதும் அந்த நாவல்மரத்தின் கீழிருக்கிறது. இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் இருந்த பொழுது எங்களுக்கு வசிக்க வீடே இருக…
-
- 1 reply
- 778 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி பதில் மூலம் டுவிட்டரில் உரையாடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டமை தோல்வியில் முடிந்துள்ளது. நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், அங்கிருந்தவாறு டுவிட்டர் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. நேற்று மாலை கேள்விகளுக்கு டுவிட்டர் மூலம் ஜனாதிபதி பதிலளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், கொமன்வெல்த் செயலாளர் கமலேஷ் சர்மாவுடனான சந்திப்பில், ஜனாதிபதி மகிந்த பங்கேற்றதால், குறிப்பிட்ட நேரத்துக்கு டுவிட்டர் உரையாடல் தொடங்கவில்லை. எனினும் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னரே ஆரம்பமான இந்த டுவிட்டர் உரையாடல், திடீரென …
-
- 4 replies
- 1.1k views
-
-
நடந்து முடிந்துள்ள வட மாகாண சபையின் தேர்தல் முடிவுகளை பதிவு செய்வதற்கான பதிவு. நான் முடிந்த வரையில் பதிவு செய்ய முயற்சிக்கும் அதே வேளையில் ஏனையவர்களும் தாம் அறியும் முடிவுகளை இணைத்துங் கொள்ளுங்கள்...
-
- 392 replies
- 31.4k views
-
-
சிறிலங்கா பொறுப்புக்கூறாவிடின் அனைத்துலக விசாரணையே – அமெரிக்காவும் எச்சரிக்கை [ வியாழக்கிழமை, 26 செப்ரெம்பர் 2013, 14:58 GMT ] [ தா.அருணாசலம் ] ஐ.நா மனிதஉரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அறிவித்தது போலவே, பொறுப்புக்கூறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்காது போனால், அனைத்துலக விசாரணைக்கு வலியுறுத்தப்படும் என்று அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வில், சிறிலங்கா குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். “மனிதஉரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக, ஒத்துழைப்பு வழங்கும் ஐ.நா மனிதஉரிமை ஆணையம் மற்றும் நாடுகளை அமெரிக்கா பாராட்டுகிறது. சிறிலங்கா தொடர…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 696 views
-
-
இனப்படுகொலைக்கு பான் கி மூனும் பொறுப்பாளி: வைகோ குற்றச்சாட்டு கடமை தவறிய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனும் இனக்கொலைக் குற்றத்திற்குப் பொறுப்பாளி என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ஈழத்தமிழர் இனக்கொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: "ஐக்கிய நாடுகள் மன்றம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, உலக நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மூண்ட யுத்தங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் கடமை ஆற்றி இருக்கிறது. ஆனால், பல வேளைகளில், வல்லரசு நாடுகள் ஐ.நா.வின் ஆணைகளை உதாசீனப்படுத்தி விட்டு, பிற நாடுகள் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தியும் உள்ளன. இலங்கைத் தீவில், ச…
-
- 0 replies
- 250 views
-
-
கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி முதற் தடவையாக வட மாகாண சபை தேர்தல் சமாதான முறையில் நடத்தப்பட்டதை ஜப்பான் வரவேற்றுள்ளது. பல வருட போரின் பின்னர் தேசிய நல்லிணக்க செயல்முறையில் இது ஒரு முக்கியமான செயற்பாடாகும் எனவும் ஜப்பான் தெரிவித்துள்ளது. தேசிய நல்லிணத்தை நோக்கிய பயணத்தில் இலங்கை சீராக முன்னேறிச் செல்லும் எனவும் ஜப்பான் நம்புகிறது. இந்த இலட்சியத்தை அடைவதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் ஜப்பான் குறிப்பிட்டுள்ளது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் ஊடக செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/83780-2013-09-26-06-13-00.html
-
- 0 replies
- 271 views
-
-
காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே என உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காணி உரிமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு தாக்கல் செய்த மனுவொன்றிற்கு தீர்ப்பு வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் நீதியரசர்களான எஸ்.ஸ்ரீபவன் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோரை கொண்டு குழவினரே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/83776-2013-09-26-05-26-31.html
-
- 10 replies
- 938 views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான டுவிட்டர் உரையாடல் தோல்வியில் முடிந்துள்ளது. நியூயோர்க் சென்றுள்ள மகிந்தவுடன் டுவிட்டரில் உரையாடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, பாரியளவில் பரப்புரை செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை கேள்விகளுக்கு டுவிட்டர் மூலம் மகிந்த பதிலளிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னரே ஆரம்பமான இந்த டுவிட்டர் உரையாடல், திடீரென இடைநிறுத்தப்பட்டது. இந்த உரையாடலின் நடுவராகச் செயற்பட்ட அரசுத்தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க, டுவிட்டர் உரையாடல், தற்போதைய ஐ.நா கூட்டத்தொடரையும், நியூயோர்க்கில் ராஜபக்சவின் அதிகாரபூர்வ செயற்பாடுகளையும் மையப்படுத்தியதாக இருக்கும் என்று அறிவித்திருந்தார். எனினும், பொதுநலவாய செயலாளருடனான சந்தி…
-
- 0 replies
- 693 views
-
-
இலங்கையின் 13ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் எவையும் இல்லை என்றும், மத்திய அரசாங்கத்துக்கே முழுமையான காணி அதிகாரம் இருப்பதாகவும் இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கையின் உயர் நீதிமன்ற நீதியரசர் மொஹான் பீரிஸ் உட்பட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினர் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். மத்திய மாகாண சபைக்குட்பட்ட காணி ஒன்று தொடர்பான வழக்கை விசாரித்த கண்டி மேல் நீதிமன்றம், அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தின்கீழ் மாகாணசபைகளுக்கு காணிகள் சம்பந்தமான எந்தவிதமான அதிகாரம் இல்லை என்று 2000 ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக…
-
- 1 reply
- 884 views
-
-
சற்று முன்னர் குமரிக்கண்டம் மேலெழும்பியது நேற்று இரவு 70 அடி உயரமும் பல பல மைல் விட்டமும் உடய பெரும் தீவு ஒண்டு இந்து சமுத்திரத்தில் குமரிக்கண்டம் அல்லது ஆங்கிலத்தில் லமோரியா என அழைக்கபடும் இடத்தில் தோண்றியுள்ளது. விஞ்ஞானிகள் இது போன்ற நிகழ்வு இதுவரை வரலாற்றில் நடக்கவில்லை என கருத்து வெளியிட்டிருக்கின்றனர். மக்கள் படகுகளில் புதிதாக தோன்றியுள்ள நிலப்பரப்புக்கு போக முற்பட்டபோதிலிலும் இந்திய பாகிச்தானிய கடற்படைகள் கூட்டாக தடுத்தவண்ணம் உள்ளனர்.. மேலதிக விபரத்துக்கு டீவிய போடுங்கோ..
-
- 14 replies
- 8.9k views
-
-
இலங்கையின் நலன்களைச் சீரழிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டிருந்த அறிக்கை பற்றி கருத்து வெளியிட்ட போதே கோதாபய இவ்வாறு கூறியுள்ளார். மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்த பின்னர், ஜனநாயகத்தை ஏற்படுத்த, சிறிலங்கா அரசாங்கம் தனது அதிகாரங்களைக் கொண்டு எல்லாவற்றையும் செய்த போதிலும், அமெரிக்கத் தூதரகம் அவற்றை வலுவற்றதாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணி மீது குற்றம்சாட்டுவது நியாயமற்றது என கோதாபய கூறியுள்ளார். சில வங்குரோத்…
-
- 2 replies
- 687 views
-
-
தமிழர்களுக்கு நீதி கிடைத்தால் இலங்கை பழியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆலோசனை கூறியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். ஐ.நா.சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக பி.பி. சி.தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலேயே சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். "இலங்கை மீது சில நாடுகள் குறிவைக்கின்றன. தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றன. ஐ.நா. சபையின் பல்வேறு அரங்குகளைப் பயன் படுத்தி இலங்கை மீது அழுத்தம் தருகின்றன என்ற ஜனாதிபதியின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த தமிழருக்கு நிலையில் தமிழர்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு…
-
- 0 replies
- 285 views
-
-
தமிழீழத் தாயக விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் (இராசையா பார்த்தீபன்) 26 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந் நிகழ்வானது முற்பகல் 10.48 மணிக்கு திலீபன் சாவைத் தழுவிக் கொண்ட நேரத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியதுடன் நினைவு பேருரைகளையும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பல்கலைக்கழகத்தின் உட்பகுதி எங்கும் திலீபனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்படுகிறது. http://www.onlineuthayan.com/News_More.php?id=82760232392683…
-
- 0 replies
- 415 views
-
-
வடமாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கான தேர்த ல்கள் வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழு மையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் அதற்கு அப்பாலான வரப்பிர சாதங்களையும் வழங்க வேண்டு மெனவும் இந்தியா அறைகூவல் விடுத்துள்ளது. இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாவது, தேர்தல்களிலான வாக்களிப்பு வீத அதிகரிப்பு, பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆர்வமிகுதியான பங்கேற்பு ஆகியன ஜனநாயக விழுமியங்களையும் மாகாண சபைகள் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களிலான பிரதிநிதித்துவப்படுத்தும் சபைகளுக்கான தேர்தல்களையும் இலங்கை வாழ் மக்கள் தொடர்ந்தும் …
-
- 0 replies
- 297 views
-
-
இன்று செப்டம்பர் 26. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவுநாள். ஒவ்வொரு ஆண்டும் திலீபன் தியாகச் சாவடைந்த நாளை நினைவுகூர்ந்து கொண்டே இருக்கிறேன். சின்ன வயதில் இடம்பெயர்ந்து வீடுகளே இல்லாத நாட்களில்கூட திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்தோம். 1995இற்கு முன்பாக ஒரு வருடத்தில், அதுவும் ஒரு நாவற்பழக்காலம் வீட்டின் முன்பாக உள்ள நாவல் மரத்தின் கீழ் எங்கேயோ வாங்கி வந்த திலீபனின் படத்தை கொண்டு வந்து தீபம் ஏற்றிய நினைவு இப்பொழுதும் அந்த நாவல்மரத்தின் கீழிருக்கிறது. இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் இருந்த பொழுது எங்களுக்கு வசிக்க வீடே இருக்கவில்லை. ஒரு மர நிழலில் வாழ்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுதும் திலீபனின் நினைவுநாள் வந்தது. ஒரு துணியால் …
-
- 0 replies
- 340 views
-
-
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா முக்கியமாக ஆதரவளிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கவலை வெளியிடப்பட்டாலும், பொதுநலவாய அரச தலைவர்கள் அனைவரும் கட்டாயம் மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிகள் மற்றும் மனித உரிமைகள் குறித்த செயற்பாடுகளின் முன்னேற்றத்தினை வெளிக்காட்ட இலங்கைக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என ஜூலி பிஷப் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை அரசாங்கம், வடமாகாண சபைத் தேர்தல் நடத்தியமைக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=93805&category=TamilNews&la…
-
- 0 replies
- 312 views
-
-
வடக்கிலிருந்து இராணும் வெளியேற்றப்படும் எனவும் இராணுவம் இருக்கும் இடங்களில் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்த நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலம் தாழ்த்தாது தமது கருத்துக்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இராணுவம் தமிழ் தாயகத்தை விட்டு வெளியெற வெண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்பதை அவர் ஒத்துக் கொண்டுள்ளார். அவரது சகாக்களான பசிலும் கோத்தபாயாவும் வீரவன்சவும் வடபகுதியில் படையினர் மக்களைப் பாதுகாப்பததாகவும் படையினர் இருப்பதை மக்கள் விரும்பு…
-
- 4 replies
- 1k views
-
-
http://www.youtube.com/user/oodaham தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற வெற்றி தமிழ் தேசியத்தின்பால் மக்கள் கொண்டுள்ள பற்றுணர்வையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தி நிற்கின்றது என இம் முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலச்சந்திரன் கஜதீபன் எமது ஊடகம் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் போது குறிப்பிட்டுள்ளார். <iframe width="640" height="390" src="//www.youtube.com/embed/vMQKSJIrw1w" frameborder="0" allowfullscreen></iframe> http://www.youtube.com/watch?v=vMQKSJIrw1w
-
- 2 replies
- 631 views
-
-
ஒபாமாவுடன் தனிப்பட்ட சந்திப்பு இல்லை – ஆனாலும் குடும்பமாக படமெடுத்துக் கொண்டார் மகிந்த [ புதன்கிழமை, 25 செப்ரெம்பர் 2013, 13:46 GMT ] [ தா.அருணாசலம் ] ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நியுயோர்க்கில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். ஆனால், இந்த அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் இந்த தனிப்பட்ட சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் உள்ளடங்கவில்லை. எனினும், நேற்று ஐ.நா பொதுச்சபையின் 68வது அமர்வின் வரவேற்பு நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது மனைவி சிராந்தியுடன் இணைந்து, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். ந…
-
- 0 replies
- 482 views
-
-
இது சாம்பலில் இருந்து மீண்டெழும் ஈழப் பறவையின் முதல் சிறகடித்தல். - டி.அருள் எழிலன் [ வியாழக்கிழமை, 26 செப்ரெம்பர் 2013, 01:57 GMT ] [ அ.எழிலரசன் ] [சென்னையில் இருந்து வெளியாகும் ஆனந்த விகடன் 02 Oct, 2013 இதழில் வெளியான இக்கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது.] இனப்படுகொலைப் பயங்கரங்களுக்குப் பிறகு கதறி அழக்கூட உரிமையற்று இருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கான அரசியலைத் தாங்களே தீர்மானிக்க அடித்தளமாக, ஓர் ஆரம்பமாக... முதல் முத்திரை வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்! இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது, ஈழத் தமிழர்கள் ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு. முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட சி.வி.விக்…
-
- 0 replies
- 488 views
-
-
"ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்காக தாளம் போடும் இலங்கையின் நீதித்துறை"- குளோபல் தமிழ்ச் செய்திகள் 26 செப்டம்பர் 2013 "உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றமே மாற்றி அமைத்தது" காணி அதிகாரங்கள் குறித்த தீர்மானங்களை மத்திய அரசாங்கமே எடுக்க முடியும் - உச்ச நீதிமன்றம் காணி அதிகாரங்கள் குறித்த தீர்மானங்களை மத்திய அரசாங்கமே எடுக்க முடியும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. காணி அதிகாரங்களை மாகாணசபையிடம் ஒப்படைக்க முடியாது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கா மாகாண அரசாங்கத்திற்கா என்பது தொடர்பில் கண்டியைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலனை செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ப…
-
- 0 replies
- 491 views
-
-
வட மாகாணத்திலன் பிரபல புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ந.ஜெயக்குமாரனிடம் விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்ற பயங்கரவாதத் தடுப்பு காவல்துறையினர் அங்கு வைத்தியர் இன்மையால் நேரே சத்திர சிகிச்சை கூடத்திற்கு சென்று அவரது மனைவியிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் மருத்துவர்களிடையே பெரும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. யாழ்.போதானா வைத்தியசாலையில் புற்றுநோய் வைத்திய நிபுணராக கடமையாற்றிய வைத்தியர் ஜெயக்குமாரன் தற்போது மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். இந் நிலையில் மேற்படி வைத்தியரிடம் விசாரணை நடத்தவேண்டுமென்று கூறி நேற்று போதனா வைத்தியசாலைக்கு பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் சென்றுள்ளனர். குறித…
-
- 4 replies
- 749 views
-