Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உலகத் தமிழர்களின் சொத்தாக இருந்த யாழ்ப்பாண பொது நூலகம்; 1981ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவு நேரத்தில், தீ வைத்து எரிக்கப்பட்டதைதொடர்ந்து அந்த எரியூட்டப்பட்ட நூலகத்திற்காக நூல்களை திரட்டிய நாமக்கல்லைச் சேர்ந்த ப.இராமசாமி மரணமானர். 1939 ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி பிறந்த ப.இராமசாமி 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு இவ்வுலகத்தை விட்டு பிரிந்துவிட்டார் என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் அன்றைய கணக்குப்படி 97,000 அரிய நூல்களுடன் திகழ்ந்த அந்த நூலகம் எரிந்த போது கண்ணீர் விட்டு அழாத தமிழர்களே இல்லை. அப்படி அழுதவர்…

  2. சிறிலங்கா அரசுடனும், கூட்டமைப்புடனும் இணைந்து பணியாற்றுவோம் – இந்தியா அறிவிப்பு [ புதன்கிழமை, 25 செப்ரெம்பர் 2013, 05:02 GMT ] [ கார்வண்ணன் ] அனைத்துலக சமூகத்துக்கு மதிப்பளித்து, வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தும் தனது பொறுப்பை, சிறிலங்கா நிறைவேற்றியுள்ளதாக, இந்தியா கருத்து வெளியிட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா வழங்கியுள்ள ஏனைய முக்கியமான வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதை இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாகவும், அதற்கு அப்பாலும் நடைமுறைப்படுத்தவும் சிறிலங்கா முன்வர வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. வடக்கு மாகாணத்தில் உ…

  3. சிறிலங்கா அதிபர் நாடு திரும்பியதும் முக்கிய முடிவு – விக்னேஸ்வரனுடன் சந்திப்பு [ புதன்கிழமை, 25 செப்ரெம்பர் 2013, 04:56 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும், முக்கியமான பல முடிவுகளை எடுக்கவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச கொழும்பு திரும்பியதும், வடக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு உறுதியான வாய்ப்புகள் உள்ளதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூ…

  4. வடக்கு வாக்காளர்களை கூட்டமைப்பு ஏமாற்றியுள்ளது – டக்ளஸ் 25 செப்டம்பர் 2013 வடக்கு வாக்காளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி கூட்டமைப்பு வாக்கு வேட்டையில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றப் போவதாகவும், இராணுவ முகாம்களில் மக்களை மீள்குடியேற்றப் போவதாகவும் கூட்டமைப்பு வாக்குறுதி அளித்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும், இந்த வாக்குறுதிகளை தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நிறைவேற்ற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கால நேரத்தை விரயமாக்காது கூட்டமைப்பு தமிழ் மக்களுகு;கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்…

  5. எந்த மொழி ஆட்சி மொழியாக தகுதியுள்ள மொழி - https://www.youtube.com/watch?feature=player_embedded&v=rCDsHQ_UxpY#t=411

  6. சிறிலங்காவில் ஐ.நா தோல்வியடைந்து விட்டது – மகிந்தவின் முன்பாகவே ஒப்புக்கொண்டார் பான் கீ மூன் போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காவில் ஐ.நா தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 68வது கூட்டத்தொட்ரில், பொதுவிவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு முன்பாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பான உள்ளக மீளாய்வில், ஐ.நா அமைப்பு ரீதியாக தோல்வியை தழுவியுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்கவில்லை என்றும், ஐ.நா அமைப்பு பொருத்…

  7. விட்டுக்கொடுக்காமல் போராட வேண்டும் – வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு சம்பந்தன் அழைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு மதிப்பளித்து, இறுதித்தீர்வுக்காக விட்டுக் கொடுக்காமல் போராட வேண்டும் என்று, வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மத்தியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில், முதல்வரை முறைப்படி தெரிவு செய்வதற்காக ஒன்றுகூடிய நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், "தமிழ் மக்கள் இந்தத் தேர்தல…

  8. [ திங்கட்கிழமை, 23 செப்ரெம்பர் 2013, 14:38 GMT ] [ மட்டக்களப்புச் செய்தியாளர் ] கிழக்கு மாகாண தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் பலத்தையும் வட மாகாண சபைத் தேர்தலின் வெற்றி வலுப்படுத்தியுள்ளது. வடக்கின் வெற்றி கிழக்கின் அரசியலில் எதிர்காலத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு கிழக்குமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்ற வெற்றியானது ஒரு கட்சியின் வெற்றி என்பதை விட மக்களின் வெற்றி என்பதே உண்மையாகும். பல்வேறு நெருக்கடிகளுக்கும், அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்தே மக்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஏனைய மா…

    • 0 replies
    • 601 views
  9. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளார். யாழ். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு வருமாறு செல்வராசா கஜேந்திரனுக்கு நேற்றைய தினம் (24) கடிதமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் 25ஆம் திகதி புதன்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு யாழ். பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், என்ன காரணத்திற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை கடிதத்தில் குறிப்பிடப்படவில்லையென செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். http://tamilworldtoday.com/?p=34860

    • 0 replies
    • 461 views
  10. வடமாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகூடிய பெரும்பான்மையை பெற்றுள்ளதால் சிறு கட்சிகளின் ஆதரவு அவர்களுக்கு தேவையில்லை எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளி த்தும் விபரீத முயற்சிகளை விமர்சித்து சுமுகமான உறவைப் பேணிச் செல்ல எண்ணியுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் முஸ்லிம்கள் உள்ள போதும் அனேகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதால் வாக்களிப்பில் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டதால் கனிசமான வாக்குகளைப் பெற முடியாது போனதென அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். எனினும் வடக்கில் முஸ்லிம்களின் தனித்துவக் குரலாக செயற்பட …

  11. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மீண்டும் ஜந்தாவது தடைவையாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலத்தில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்ட புலனாய்வுப் பிரிவினர் நாளை காலை 10.00 மணிக்கு விசாரணைகளுக்காக சமூகமளிக்குமாறு கூறியுள்ளதாக கஜேந்திரன் குளோபல் தமிழ்ச் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96914/language/ta-IN/article.aspx

  12. ஐந்து கோடிக்கு விலை போன டக்ளஸ் தேவானந்தா!! வட மாகாண சபைத்தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு முன்னிலை பெற்ற சிலர் பணத்தைக் கொடுத்து அதிகார மிரட்டலின் கீழ் ஓரம் கட்டப்பட்டு ஐந்தாவது இடத்தில் பின்னால் நின்றவரை இரண்டாவது தெரிவு உறுப்பினராக அரசாங்கத்தின் உயர் மட்டத்தினால் முன்னிலைப்படுத்தியதாக பாரிய குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பில் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகள் இனைந்து போட்டியிட்டன. இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வேட்பாளர்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் யாரும் முதல் ஐந்த…

    • 2 replies
    • 978 views
  13. யாழ். போதனா வைத்தயிசாலையின் 90 வைத்தியர்களுக்கான இடமாற்றம் இந்த வார இறுதிக்குள் இடம்பெற வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் இந்த அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இருந்தபோதிலும் யாழ் போதனா வைத்தயிசாலையில் ஆளனிப் பற்றாக்குறை நிலவுவதால் வைத்தியர்களின் இடமாற்றம் குறித்து சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக அந்த பேச்சாளர் குறிப்பிட்டார். வைத்தியர்களின் இடமாற்றத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து வைத்தியர்களின் கையொப்பத்துடன் பிரேரணை ஒன்று வைத்தியசாலை பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த பி…

  14. வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குரிய இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் அவர்களுக்கு வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த ஆசனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெண்ணொருவருக்கு வழங்கப்படலாமென தெரிவிக்கும் அதே வேளை கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரிக்கு வழங்குமாறு பேச்சுக்கள் அடிபடுவதாகவும் தெரிய வருகின்றது. இந் நிலையில் அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மினின் பெயர் நாளை மறுதினம் வர்த்தமானி அறிவித்தலு…

  15. இலங்கையின் சிங்கள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் டுவிட்டரில் கேள்வி கேட்கலாம்.. இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நாளை புதன்கிழமை இலங்கை நேரப்படி மாலை 6.30 மணியளவில் ருவிற்றர் சமூகத்தளத்தினூடு கேள்விகளைக் கேட்கலாம். அவற்றுக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவுள்ளார் என்று சிறீலங்கா ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் 68வது பொதுச்சபை அமர்வில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் சென்றுள்ள சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை அமெரிக்க நேரப்படி காலை 8.30 மணிளவில் (இலங்கை நேரம் மாலை 5.30) உரையாற்றவுள்ளார். அதன் பின்னரே ருவிற்றரில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார். சிறீலங்கா ஜனாதிபதியுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியை ஜனாதிபதியின் செயல…

  16. யாழில் திரையிடப்படும் சர்ச்சைக்குரிய மெட்ராஸ் கபே திரைப்படம் சர்ச்சைக்குரிய மெட்ராஸ் கபே திரைப்படம் யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தத் திரைப்படத்தை திரையிடுவது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் முக்கிய நகரங்களில் பாரிய எல்.சீ.டி திரைகளை அமைத்து மெட்ராஸ் கபே திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி, சுண்ணாகம் மற்றும் நெல்லியடி போன்ற பிரதேசங்களில் குறித்த திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து விளக்கமளிப்பதற்கு முன்னர் எல்.சீ.டி திரைகள் பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக…

  17. றிலங்காவில் நிவாரண பணிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவித் திட்டங்கள் இனிமேல், வடக்கு மாகாண முதல்வரின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும் என்று இந்திய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறிலங்காவில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. 27 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும். இந்திய அரசாங்கம் எப்போதுமே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் ஆதரவாகத் தான் செயற்பட்டு வருகிறது. அதுபோலத் தொடர்ந்து செயற்படும். சிறிலங்காவில் நிவாரண பணிகளுக்கு இந்திய …

  18. பூநகரி பிரதேச மக்கள் தமக்கு மாகாணசபை பிரதிநிதித்துவம் வேண்டி இரா.சம்பந்தன் மற்றும் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு மகஜர் கையளிப்பு. நடுநிலைமையுடன் நீதியின் பக்கம் நின்று நடவடிக்கை எடுப்பார்களா? தலைவர் சம்பந்தரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும். பூநகரி பிரதேசத்தின் கிராம அபிவிருத்திச்சங்கங்கள் மாதர் அபிவிருத்திச்சங்கங்கள் கமக்கார ஒன்றியங்கள் மீனவ சமாசங்களின் பிரதிநிதிகள் கூட்டாக இணைந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று காலை இந்த மகஜரை கையளித்துள்ளனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்�� பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா கூட்டமைப்பின் இணைத்தலைவர்களான சுரேஸ் க.பிறேமச்சந்திரன்�� த.சித்தார்த்தன்�� செல்வம் அடைக்கலநாதன் ஆ…

  19. ஐ.நா சபையில் இலங்கை இனப்படுகொலை குறித்து மருத்துவர். அன்புமணி இராமதாசு ஆற்றிய உரை: [Tuesday, 2013-09-24 20:21:08] உலகில் அனைத்து வகையான இன வெறியையும், அது தொடர்பான சகிப்புத்தன்மையின்மையையும் எவ்வளவு கடுமையாகக் கண்டிக்க முடியுமோ,அவ்வளவு கடுமையான வார்த்தைகளால் பசுமைத் தாயகம் கண்டிக்கிறது. இன வெறியால் அன்றாட ஒடுக்குமுறை முதல் ஒட்டுமொத்த இனப்படுகொலை வரை பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றில் இரண்டாவது விளைவான இனப்படுகொலை துரதிருஷ்டவசமாக இன்று இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இனப்படுகொலை என்பது அப்பாவி மக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்வது என்று வரையறுக்கப் பட்டிருக்கிறது. இனப்படுகொலை திட்டமிட்டுச் செய்யப்படும் ஒன்று என்பதால், அது மிகவும் கொடூரமானதாகவு…

  20. விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பொறுப்பாளரும், பின்னர் அரசிடம் சரணடைந்து, புலிகளின் தலைவர் பிரபாகரனது சடலத்தை அடையாளம் காட்டியவர்களில் ஒருவரும், நடந்து முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் இலங்கை அரசின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட கடும் முயற்சி செய்தும் அரசாங்கத்தால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட தயா மாஸ்டர், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சரை உத்தியோகப்பூர்வமாக தேர்வு செய்யும் நிகழ்வு யாழ். டில்கோ ஹோட்டலில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வருகை தந்து நிகழ்வில் கலந்துகொண்டமை, அங்கிருந்த ஊடகவியலாளர்களையும், நிகழ்வில் கலந்துகொண்டவர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரை புகைப்படம் எடுக்க முயற்சி செய்த ஊடகவியலாளரை அழைத்து, குழப்பும் வகையில் உங்கள் ஊடகத்…

  21. தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது நேற்று கொழும்பில் முழைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட விக்னேஸ்வரன் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார் கடும்தொனியில் காசியானந்தன்(காணொளி) வடமாகாண தேர்தல் முடிந்து அங்கே விக்னேஸ்வரன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் இதனை பெரிதாக ஊடகர்கள் அலசி ஆய்ந்துகொண்டிருக்கின்றார்கள். அங்கிருந்து கொண்டு தமிழர்களின் விடுதலைஉணர்வினை மழுங்கடிக்கும் முயற்சியினை நாலுபக்கத்திலும் நஞ்சர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த தேர்தல் மகிந்த அரசிற்கு பெரிதும் உதவி புரிந்திருக்கின்றது மகிந்தவின் அரசு ஒருநேர்மையான அர…

  22. ஆரையம்பதி பிரதான வீதியில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பின் சிற்றரசி உலக நாச்சியின் சிலையினை நேற்று நள்ளிரவில் உடைத்துக் கொண்டிருந்த நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஓட்டமாவடியைச் சேர்ந்த நியாஸ் என்பவரே காத்தான்குடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரையம்பதி பிரதான வீதியில் சமூகப் பெரியார்களின் திருவுருவச்சிலைகள் தமிழர்களின் கலாசாரப் பின்னணியுடன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் கி.மு 513ம் ஆண்டளவில் மண்முனையினை தளமாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்த உலக நாச்சி மட்டக்களப்பின் முதலாவது சிற்றரசி என்பதனால் அவரினை நினைவு கூறும் முகமாக அவரின் திருவுருவச்சிலை ஆரையம்பதி பொதுச் சந்தைக்கு முன்…

  23. ஜப்பானின் கரையோர சுய பாதுகாப்பு படையினரின் மூன்று போர் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு சென்றடைந்துள்ளன. நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இந்த கப்பல்கள் கொழும்பு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த கப்பல்களை வரவேற்கும் முகமாக நிகழ்வொன்றை சிறீலங்கா கடற்படையினர் இன்று நடத்தினர். குசிமா டிவி-3508 சிராயுகி டிவி-3517 இஸோயுகி டிடி -127 ஆகிய கப்பல்களே சென்றுள்ளன. இதில் கசிமா என்ற பயிற்சிக்கப்பல்143 மீற்றர் நீளத்தை கொண்டது. சிராயுகி என்ற நாசகாரி கப்பல் 130 மீற்றர் நீளத்தை கொண்டது. இஸோயுகி என்ற நாசகாரி கப்பல் 130 மீற்றர் நீளத்தை கொண்டது.இவை மூன்று 200க்கும் - 300க்கும் இடைப்பட்ட கடற்படை வீரர்களை காவிச் செல்லும் வல்லமை கொண்டது.எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இந்த கப்பல்கள் சிற…

  24. அராலி மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட தினமாகிய நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஆதரவாளர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் அணி கட்சியிலிருந்து வலி.மேற்கு பிரதேச சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் அண்மையில் அந்த உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு சிராஸீடன் இணைந்துகொண்டவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்தே மேற்படி உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கும் மேற்படி கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும் இ…

  25. எதிர்வரும் 30.09.2013. திங்கட்கிழமை புறுக்சலில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் பிரான்சு மற்றும் ஐரோப்பா வாழ் தமிழீழ மக்கள் கலந்து கொண்டு பலம் சேர்க்க வேண்டும் என்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கேட்டுக்கொள்கின்றது. தாயகத்தில் நடந்து முடிந்த வடமாகணத் தேர்தலில் தமிழீழ மக்கள் சர்வதேசம் எதிர்பார்த்ததற்கு மேலாக அதிகளவிலான வாக்குகளை அளித்து தமது ஆள்மன எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ள ஒர் பலமான வேளையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் தமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக தொடர்ந்து தொடர்ந்து சர்வதேசத்தின் கதவுகளை பல வழிகளில் சென்று மிகப்பலமாக தட்டிக்கொண்டேயிருக்க வேண்டும். ஈழத்தமிழ் மக்கள் உயிரையும், உடமையையும் துச்சமென நின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.