Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் ஊடகவியலாளர் ஜோசப்பை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பு May 21, 2013 03:44 pm மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் ஜோசப் பெர்ணாண்டோவை நாளை (22) காலை 9 மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் வவுனியா காரியாலயத்திற்கு சமூகமளிக்கமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில் உயிரிழத்த மக்களுக்காக கடந்த 18ஆம் திகதி மாலை மன்னாரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கு சென்ற பொலிஸாரும், இராணுவத்தினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் உட்பட அந்த நிகழ்வில் கழந்து கொண்ட 15 பேரை கைது செய்திருந்தனர்.…

  2. வடக்கில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போரை ஒடுக்க சந்திரசிறி கடுமையான உத்தரவை பிறப்பித்தார் 21 மே 2013 வடக்கில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போரை ஒடுக்க ஆளுநர் சந்திரசிறி கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதன் பிரகாரம் இன்று அரச ஊழியர்கள் எவரும் வடக்கில் லீவு பெற தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இன்று கடமைக்கு சமூகமளித்துள்ள பணியாளர்களது வரவு பட்டியல்கள் மூன்று தடைவைகளாக தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டுமெனவும் அவர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக தெரியவருகின்றது. முன்னதாக நேற்று ஆளுநர் சந்திரசிறியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகாளல் அதிர்ச்சியுற்ற அதிகாரிகள் அத்தகவல்களை தமக்கு கீழுள்ள பணியாளர்களுக்கு அறிவித்ததுடன் லீவு விண்ணப்பங்கள் அனை…

  3. தனிநபர் பிரேரணை மூலம் 13ம் திருத்தத்தை நீக்க நடவடிக்கை! [Tuesday, 2013-05-21 16:00:03] 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறையை இரத்து செய்யுமாறு கோரி பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணை இந்த வாரம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார். 13ம் திருத்தச் சட்டமும் மாகாண சபை முறையும் பாராளுமன்ற முறைக்கு மாறானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் மாநிலம் ஒன்று அதிகாரத்தை மீறி செயற்பட்டால் அம்மாநிலத்தின் அதிகாரத்தை மத்திய அரசு பொறுப்பேற்க முடியும். இந்தியாவில் சமூக நீதி பட்டியல் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கின்ற போது…

  4. எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த வேலை நிறுத்த போராட்டம் படு தோல்வி! [Tuesday, 2013-05-21 20:02:19] இலங்கையின் இரும்புத் தொழிச் சங்கம் என ஒருகாலத்தில் பேசப்பட்ட ஜேவீபீ தொழிற் சங்கமும், அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக கணிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமும் ஏற்பாடு செய்திருந்த வேலை நிறுத்த போராட்டம் படு தோல்வியடைந்துள்ளது. வேலை நிறுத்த போராட்டம் நடந்தது என்பதற்கான அடையாளத்தையே இலங்கையில் காண முடியவில்லை எனக் கூறப்படுகிறது. கொழும்பில் தனியார் வர்த்தக நிலையங்கள் கூட அதாவது கோட்டை புறக்கோட்டை கடைகள் எல்லாம் இயங்கியது. வெளி மாவட்டங்களிலும் சகலதும் இயங்கியதாக தெரியவருகின்றது. அரசாங்கம் அச்சுறுத்தி அரச ஊழியா்களை வேலைக்கு வர வைத்தது என்று கூறினாலும…

  5. சிறைக் கைதிகளுடன் தொலைபேசி பேச்சு எதற்கு? 4ம் மாடியில் வைத்து சிவசக்தி ஆனந்தனிம் விசாரணை! [Tuesday, 2013-05-21 16:10:58] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (21) காலை நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் அவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே அவர் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு வருமாறு வவுனியா பொலிஸ் நிலையம் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டதையடுத்தே சிவசத்தி ஆனந்தன் இன்று (…

  6. மக்களின் ஒருமித்த எதிர்ப்பைக் கண்டு அரசு பயந்துள்ளது - கே. டி. லால்காந்த [Tuesday, 2013-05-21 19:16:53] வேலை நிறுத்தத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. நாம் அரசாங்கத்திற்கு எதைக் கூற விரும்பினோமோ அந்த விடயத்தை இன்று வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளோம் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். நிப்போன் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை தொழிற்சங்க ஒருங்கிணைப்பிற்கான இணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் இன்றைய தினத்தை ஒரு…

  7. முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் Written by tharsan // May 21, 2013 // 2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப் பாதையின் பெரும் இராஜதந்திர முன்னகர்வாக மே-18 முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு கூட்டு நினைவேந்தல் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமைந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்துள்ளது. தமிழீழத் தாயக மக்கள் மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பங்கெடுத்த உருவாக்கியிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கத்தின் விபரம்: நிலைப்பாடுகள்: 1. தமிழீழ மக்களாகிய நாங்கள் தன்னாட்சியுரிமை கொண்ட ஒரு தேசத்தவர் என்றவகையிலும், இலங்கைத் தீவினுள் சிங்கள பௌத்த தேசிய அரசுகளினால் தொடர்ச்சியாக இன…

  8. கால் நூற்றாண்டு பழமைவாய்ந்த பள்ளிவாசல் சிங்களவர்களால் இடிப்பு உள்நாடு முக்கிய-செய்தி இணைய-பதிப்பு கொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 21, 2013 சுமார் 124 வருடங்கள் பழமை வாய்ந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசல் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை, குருகல இதிகொட்டுவ பிரதேசத்தில் அமைந்திருந்த பள்ளிவாசலே இவ்வாறு தரைமட்டமாக்கப்பட்டது. சிவில் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் தொல்பொருள் திணைக்களம் இந்தப் பள்ளிவாசலை உடைத்துத் தரைமட்டமாக்கிய விடயம் தொடர்பில் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஜனாதிபதி மஹிந்தையரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார். இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அங்கு சென்று தேவையற்ற கட்டடங்களை உடை…

    • 13 replies
    • 1.1k views
  9. 13ஆவது அரசியலமைப்புத் திருத்திற்கு எதிராக மக்களின் கருத்துக்களைக் கட்டியெழுப்புவதற்கு பொதுபல சேனா தயாராகிவருவதாக அந்த அமைப்பின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுபல சேனா அமைப்பு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் முழுமையான ஆதரவுடன் செயல்பட்டுவரும் அமைப்பு என்பது சுட்டிக்காட்டத்தக்கது. மேலும், http://tamilworldtoday.com/?p=11685

    • 1 reply
    • 411 views
  10. இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் இதுவரையில் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், மனித உரிமை ஆர்வலர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் போன்றவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அத்துடன், தமிழ் மக்களின் கஷ்டங்களை நிவர்த…

  11. ஒரு நாள் 3 அப்பாக்கள்..... அப்பா 01 அப்பாவுக்காக காலிமுகத்திடல் காத்துக் கொண்டிருந்தது. செந்நிறச் சால்வையை வழக்கம் போல கழுத்தில் போட்டுக் கொண்டு தன் மூன்று புத்திரர்கள் சகிதம் மேடையில் ஏறியமர்ந்தார். அவர் கண்முன்னே விதவிதமான சாகசங்கள் நிகழ்ந்தேறத் தொடங்கின. வானத்திலிருந்து பரசூட் குதிப்புக்கள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் என்பவற்றுடன் இதுவரை போர்க்களம் பார்த்திராத ஆயுதங்களும், டாங்கிகளும் இன்னமும் மாறாத வெற்றி செருக்குடன் அசைந்துகொண்டிருந்தன. அப்பாவுக்கு பெருமை பிடிபடவில்லை. போதாக்குறைக்கு ஒலிவாங்கிக்கு முன்னால் வந்தவர்கள் எல்லாம் அப்பாவினதும் அவரது தம்பியினதும் புகழையும் வீரத்தையும் வானளாவ புகழ்ந்து கொண்டிருந்தார்கள். நவீன த…

  12. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்?என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான சஜித்பிரேமதாஸா தெளிவுப்படுத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார். அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக நாட்டைபிரிப்பதற்கு முயன்றனர் என்று குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்த சஜித்பிரேமதாஸா எம்.பி இது தொடர்பில் பிபிசி சிங்கள செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலே ஜனாதிபதி பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்தது ஏ…

  13. மனநிலை பாதிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ள பெண் - மக்களின் உதவி நாடப்படுகிறது Monday, May 20, 2013 Jaffna Muslim 0 (தினகரன்) சவூதியிலிருந்து நாடு திரும்பியுள்ள சின்ன கலைமதி என்ற இந்தப் பெண் தான் யார்? எங்கு இருக்கிறோம்? உறவினர்கள் யார்? எதுவுமே கூறத் தெரியாமல் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிகிச்சை பிரிவில் உள்ளார். கடந்த ஜனவரி மாதம் 29 திகதி சவூதியிலிருந்து தூதரகம் ஊடாக தற்காலிக கடவுச் சீட்டில் நாடு திரும்பினார். அவர் இலங்கை வந்த போது மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். விமான நிலைய வைத்திய பிரிவினரிடம் இவர் ஒப்படைக்கப்பட்ட போது அவரை அங்கொட மனநல மருத்துவ மனையில் அனுமதிக்குமாறு டொக்டர்கள் சிபாரிச…

  14. -எஸ். எம். மும்தாஜ்,எம்.என்.எம். ஹிஜாஸ் சொகுசு வீடொன்றினுள் மறைமுகமான முறையில் நடாத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை சுற்றவளைத்துள்ள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள சொகுசு வீடொன்றையே சிலாபம் பொலிஸார் இன்று திங்கட்கிழமை சுற்றிவளைத்துள்ளனர். தங்களுக்கு கிடைத்த தகவல்களையடுத்தே குற்ற ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அந்த வீட்டிலிருந்து 24,120 டிரேம் சோடா, மற்றும் 10 பெரல்கள், இரண்டு கேஸ் சிலிண்டர்களுடன் மேலும் பல உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் கைது…

  15. தமிழ்மக்களின் போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன்! - கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் உரை!! கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்துள்ளதாக நாதம் ஊடகசேவை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை முதன்மையாக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனேடிய மண்ணில் மேற்கொள்ளப்பட்டிருந்த மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இக்கருத்தினை அவர் முன்வைத்துள்ளதாக நாதம் மேலும் தெரிவித்துள்ளது. தமிழ்மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடியோரையும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் இழந்த துக்க நாள் இதுவென…

  16. மஹிந்த அரசுக்கு எதிராக இலங்கை முழுவதும் மாபெரும் போராட்டம்! - 700 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு!! மின்கட்டண உயர்வை வாபஸ் பெறுமாறு மஹிந்த அரசைக் கடுமையாக வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறும் மாபெரும் தொழிற்சங்கப் போராட்டத்தில் 700 தொழிற்சங்கங்கள் பங்கேற்பதுடன், இலங்கை முழுவதும் அரச எதிர்ப்புப் பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் இடம்பெறவுள்ளன. இதற்கமைய தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில், பொது எதிர்க்கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இடம்பெறும் பிரதான பேரணி இரத்மலானை ஹெலிக்கடையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகி கல்கிஸை வரை செல்லும். அத்துடன், விஸ்வரூபமெடுக்கும் இந்தப் போராட்டம் இன்று முதல் இலங்கை முழுவதும் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருக்கும் என்…

  17. ஜனாதிபதி பதவிக் காலம் குறித்து திருத்த யோசனையுடன் மாகாண சபையின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான 19ஆவது அரசியலப்பு திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் சிலர் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவிடம் தெரிவித்துள்ளனர். மேலும்... http://tamilworldtoday.com/?p=11692

    • 0 replies
    • 385 views
  18. வடக்கு, கிழக்குத் தமிழர்கள் ஒரு தேர்தலில் பொன்னம்பலத்தை தோற்கடித்து கொப்பேக்கடுவவை வெற்றி பெறச் செய்தவர்கள் என்றுதெரிவித்திருக்கிறார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலையே அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெற்றி பெற்று ஜனாதிபதியானார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேக்கடுவ தோல்வியடைந்தார். இதே தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம், ரோஹண விஜேவீர, கொல்வின் ஆர். டி. சில்வா, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் போட்டியிட்டனர். குமார் பொன்னம்பலம் நான்காவது இடத்தைப் பிடித்தார். ரோஹண மூன்றாம் இடத்தைப் ப…

  19. 1982ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொன்னம்பலத்தை வடக்கு, கிழக்குத் தமிழர்கள் தோற்கடித்து கொப்பேக்கடுவவை வெற்றி பெறச் செய்தவர்கள் என இலங்கை அரச அதிபர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார். கடந்த சனிக்கிழமை காலிமுகத்திடலில் நடைபெற்ற அரசாங்கத்தின் போர் வெற்றியின் நான்காவது ஆண்டு கொண்டாட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். அத்துடன் வடக்கு மக்களின் மனதைத் தான் அறிவதாகவும் கூறியிருந்தார். எனினும், பொன்னம்பலத்தைத் தோற்கடித்து, கொப்பேகடுவவை தமிழர்கள் ஆதரித்தார்கள் என அரச தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ கூறியிருப்பதைத் தேடிப்பார்த்தபோது, தேர்தல் முடிவுகளின் படி முற்றிலும் பொய்யான தகவல் எனத் தெரியவருகிறது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு…

  20. கிரகநிலை சரியில்லையாம் – ஆறாவது தடவையாக சீனாவுக்கு ஓடுகிறார் மகிந்த [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:48 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 22ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை சீனாவில் பயணம் மேறகொள்ள சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார். எனினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. சிறிலங்கா அதிபராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர், சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் ஆறாவது பயணம் இதுவாகும். அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், சிறிலங்கா அ…

  21. Published on May 20, 2013-9:19 am · No Comments வடமாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்க தேவையில்லை என ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா டெயிலி மிரருக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இந்த அதிகாரங்களை வழங்குவது குறித்து தெற்கில் உள்ள தெற்கில் உள்ளவர்கள் சிலர் கடுமையான கருத்துக்கள் வெளியிட்டு வருவதால் காணி காவல்துறை அதிகாரங்களை வடமாகாணத்திற்கு வழங்காது நிறுத்தி வைப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசுத்தலைவர் தன்னை மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறியதாகவும் எனினும் தான் மாகாணசபை தேர்தலில் போட்டியிட விருப்புவதாகவும் அவர் தெரிவித்தார். ‘ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடாமல் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்…

  22. நெடுங்கேணி பிரதேசத்தில் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.05.2013 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 07 வயது பாடசாலை மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து சேனைப்புலவு மக்களும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் இணைந்து அழைப்புவிடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளன. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சம்வம் நடந்து இதுவரை காலமும் அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கயவன் கைது செய்யப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் வேதனையையும் விரக்தியையும் தருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்புக்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும…

    • 0 replies
    • 2.3k views
  23. சிங்களவர்களை விடவும் சிறந்தவர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது – அஸ்வர் 19 மே 2013 சிங்களவர்களை விடவும் சிறந்த மனிதர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் மிகவும் கருணையானவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெசாக் பௌர்ணமி காலத்தில் வீதியில் செல்லும் மக்களுக்கு பல்வேறு உணவு பானங்களை வழங்கி வருதாகத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் வாழ்க்கை முறைமையில் முக்கியமானதாக தானங்களை (தன்சல்) கருத முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இன மத பேதங்களை கருத்திற் கொள்ளாது வீதியில் செல்லும் அனைவருக்கும் இதய சுத்தியுடன் சிங்கள பௌத்தர்கள் தங்களால் இயன்றதை வழங்க…

  24. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தில் உள்ள மாகாண சபைகளுக்குரிய காணி, காவல்துறை அதிகாரங்களை நீக்க வேண்டாம் என இந்திய அரசாங்கம் கோரவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும்... http://tamilworldtoday.com/?p=11451

    • 4 replies
    • 503 views
  25. மக்கள் எழுச்சியைக் கண்டு ராஜபக்ஷ ரெஜிமென்ட் பயந்துவிட்டது - ரணில்! [Monday, 2013-05-20 18:42:18] ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்களின் எதிர்ப்பு போராட்டத்தைக் கண்டு பயந்துவிட்டது. இந்நிலையில் நாளை …

    • 2 replies
    • 636 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.