ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், அரச பயங்கரவாதத்தால் உள்ளக இடப்பெயர்விற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு, மனிதப் பேரவலத்தை எதிர் நோக்கியுள்ளனர். வன்னியில் உருவாக்கப்பட்டிருக்கும், தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் பேரினவாத உளவியல் சமரினை எதிர்கொண்டவாறு, மக்கள் படைக் கட்டமைப்பும் விரிவடைகின்றன. மரணத்தின் விளிம்பில் தத்தளிக்கும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, அர்ப்பணிப்புடன் இயங்கும் தொண்டு நிறுவனங்களை முடக்கும் குரூரச் செயற்பாட்டில், தனது அரச இயந்திரப் பரப்புரை நிறுவனத்தை முடுக்கி விட்டுள்ளார் மகிந்தர்.கொழும்பு சமாதானச் செயலகமும், இடர் முகாமைத்துவ, மனித உரிமை அமைச்சும், தமிழ் மக்களின் அவல நிலை குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது. வவுனியா …
-
- 0 replies
- 1.9k views
-
-
http://www.youtube.com/watch?v=fMUdBD-o8rg&feature=share http://www.youtube.com/watch?v=fMUdBD-o8rg&feature=share Palaniswamy இந்துத்வா கட்சியின் ஆங்கிலப் பெயர் கொண்ட ஒரு தொலைகாட்சியில் தேசிய தலைவர் பிரபாகரனை புகழ்ந்து 'சரித்திரத்தின் சரித்திரம்' என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப் படம் இது. ராஜபக்சேவுடன் கூட்டு ஒப்பந்தம் போட்ட இக்கட்சியின் தொலைக்காட்சி இப்படி ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி உள்ளது நமக்கு அதிர்ச்சியை தான் தந்துள்ளது. பாஜகவின் கொள்கை எல்லாம் புறந்தள்ளி விட்டு ஈழம் பற்றியும் தமிழ்த் தேசிய தலைவரை பற்றியும் தமிழர் பார்வையில் இருந்து தெளிவாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர் இந்த தொலைக்காட்சி குழுவினர் . நாளை…
-
- 51 replies
- 4.7k views
-
-
சர்வதேச அரசியல் அரங்கில் இலங்கை கடந்த மூன்றரை ஆண்டுகளில் தனக்கான ஆதரவை பெருமளவில் இழந்துள்ளதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்கத் தீர்மானத்தின்போது, இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்தன. ஆனால் அந்த ஆதரவு இப்போது 13 நாடுகளாகக் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் தனக்கு இருந்த சர்வதேச ஆதரவை இலங்கை பெருமளவு இழந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசு அது நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் சர்வதேச ஆதரவை தக்கவைத்திருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ம…
-
- 2 replies
- 1.1k views
-
-
-எம்.றொசாந்த் சர்வதேச ஒத்துழைப்புடனேயே தமிழர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் இன்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். யாழ். காரைநகர் ஊரிப் பகுதியில் கடற்படை சிப்பாய் ஒருவரால் 11 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (18) காரைநகர் பிரதேச செயலகம் முன்றலில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அராஜகத்திற்கு எதிரான எதிர்ப்புக்களை தமிழர்கள் 1956ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே வெளிப்படுத்தி வருகின்றார்கள். தமிழர்கள் இந்த நாட்டிலே வாழ வேண்டுமா? என்…
-
- 0 replies
- 353 views
-
-
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு காரணமாக, புது வருடத்தில் சம்பள உயர்வையோ வேறு சலுகைகளையோ வழங்குவதற்கு முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இது தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் விளக்கமளிக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கோரினார். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/14027-2010-12-31-09-08-02.html
-
- 1 reply
- 712 views
-
-
போர்கள் நடத்தப்பட வேண்டிய முறை குறித்த சர்வதேசச் சட்டங்களில் பெரும் பிரச்சினைகள் இருப்பதாக ஐ.நா.மன்றப் பொதுச்சபையில் உரையாற்றுகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்தச் சட்டங்கள் இரு நாடுகளுக்கிடையிலான போர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை என்று கூறிய ராஜபக்ஷ அவர்கள், ஆனால், இப்போது பயங்கரவாதக் குழுக்கள் மரபுசாரா வழிகளில் மோதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சினைகள் பெரிதாக வழி செய்கிறார்கள் என்றார். அதனால், இன்றைய தேவைகளை சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் எந்தளவுக்கு எதிர்கொள்ளும் வல்லமை கொண்டவையாக இருக்கின்றன என்பதை பரிசோதனை செய்வது நல்லது என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்…
-
- 0 replies
- 620 views
-
-
இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐ.நா மன்ற மனித உரிமைக்கவுன்சில் கடந்த ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது இலங்கை அரசு இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நிலையில், இது குறித்து மீண்டும் ஒரு தீர்மானம் இந்த ஆண்டு வரும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக, தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார். பிபிசி தமிழோசியிடம் பேசிய இரா.சம்பந்தன், இந்த மாதிரி நடவடிக்கை எடுக்காததன் விளைவுகள் மீண்டும் இப்போது நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் என்று தாங்கள் எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார். இந்த விஷயங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கருத்தை "வேண்டிய இடங்களுக்கு" தெரிவித்திருப்பத…
-
- 0 replies
- 642 views
-
-
'சர்வதேச விசாரணை வேண்டுமென்று சம்பந்தன் கூறமாட்டார்' -எம்.றொசாந்த் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதையே நானும் விரும்புகின்றேன். கட்சிகள் பலவும் அவற்றை விரும்பினாலும், அரசியல் காரணங்களுக்காக அதனை வெளியில் கூறமாட்டார்களென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில், நேற்று வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், சர்வதேச விசாரணைதான் வேண்டும் என்…
-
- 0 replies
- 263 views
-
-
'சர்வதேச விசாரணையே அவசியம்': ஐநா வல்லுனர்களிடம் தமிழ் மக்கள் பேரவை மோனிக்கா பின்டோ இலங்கை சென்றுள்ள ஐநா மனித உரிமைகள் வல்லுனர்களான மோனிக்கா பின்டோ மற்றும் ஜுவான் இ மென்டஸ் ஆகிய இருவரையும் சந்தித்த தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் சிலர் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறும் விடயத்தில் சர்வதேச விசாரணையே அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர். பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் கட்நத காலங்களில் உள்நாட்டு ஆணைக்குழுக்கள் நடத்திய விசாரணைகளில் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை என்பதால் உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். பொறுப்பு கூறலுக்கான சர்வதேச விசாரணையின் மூலம் அரசியல் தீர்வு ஒன்றுக்கு சர்வதேசம்…
-
- 1 reply
- 334 views
-
-
'சர்வதேச விசாரணையே தேவை' இலங்கையில் நடந்து முடிந்த போர் குறித்த விடயங்களை ஆராய்வதற்கு சுயாதீனமான சர்வதேச மட்டத்திலான ஒரு விசாரணையே சிறப்பான பலனைத்தரும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். அப்படியான ஒரு விசாரணையின் மூலமே நீதியும், நீண்டகால நல்லிணக்கமும் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 14 வது அமர்வில் திங்களன்று உரையாற்றிய நவநீதம் பிள்ளை அவர்கள், உலகளவில் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்த அறிக்கை ஒன்றையும் அங்கு சமர்ப்பித்தார். உலக மட்டத்தில் பல நாடுகளில் காணப்படும் அடக்குமுறைகள், அநீதிகள், புறக்கணிப்புக்கள் மற்றும் வன்செயல்கள் குறித்து இந்த அறிக்…
-
- 0 replies
- 982 views
-
-
பிரிவினையை உருவாக்குவதற்கான புதிய உத்தியை சர்வதேச சமூகம் இலங்கையில் பரீட்சித்துப் பார்க்க முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்கொலைக் குண்டுதாரிகள் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்த இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையை ருவான்டாவில் நடந்த மக்கள் படுகொலைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது நியாயமற்றது என்று இலங்கை அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் டலஸ் அலகப்பெரும ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 'பழைய வாக்குறுதிகள்': ஐதேக முப்பது ஆண்டுகால யுத்தத்திலிருந்து மீண்டு இருக்கின்ற இலங்கையின் மீது ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் தேவையற்ற அழுத்தங்களைக் கொடுப்பதாகவும் இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் இலங்கை அரசாங்கம…
-
- 0 replies
- 494 views
-
-
-நவரத்தினம் கபில்நாத் சவால்களுக்கு மத்தியில் பல்கலைக்கழகம் செல்லும் முல்லைத்தீவு பாரதி வித்தியாலய மாணவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். முல்லைத்தீவு பாரதி வித்தியாலயத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் பாடசாலையைச் சேர்ந்த பல மாணவர்கள் இறுதி யுத்தத்தின்போது மரணமடைந்துள்ளதுடன், பல மாணவர்கள் தமது தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர். இப்பொழுது இந்தக் குழந்தைகளின் குடும்பத்தினர் வறு…
-
- 0 replies
- 234 views
-
-
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களோடு சம்மந்தப்பட்டவர் என்று செயற்பாட்டாளர்களால் வர்ணிக்கப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை தென் ஆப்பிரிக்காவுக்கான இலங்கைத் துணை தூதராக நியமிப்பதை அந்த நாடு ஏற்கவில்லை என்று ஒரு வழக்காடும் அமைப்பு தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வாவை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பும் முடிவை அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தும் இலங்கை அமைச்சர் ஒருவர், தென் ஆப்பிரிக்காவின் தயக்கம் குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்கிறார். இலங்கையின் இறுதி கட்டப் போரின் போது வன்னியில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 58 டிவிஷனின் கமாண்டரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது போர் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. போருக்கு…
-
- 4 replies
- 1.3k views
-
-
[size=5]'சாட்சி பாதுகாப்பு' சட்டமூலம் தயாரிப்பு நடவடிக்கை ஆரம்பம்[/size] [size=4]அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள 'சாட்சி பாதுகாப்பு' சட்டமூலத்தை தயாரிக்கும் வேலைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். சர்வதேச மனித உரிமைகள் நியமங்கள், தராதரங்களுக்கு அமைய இலங்கையில் இவ்வாறான சட்டத்தை கொண்டுவரும்படி சர்வதேச நிறுவனங்கள் இலங்கையிடம் கேட்டிருந்தன. இந்த சட்டமூலத்தை சட்டவரைஞர் திணைக்களம் தயாரித்து வருகிறது என சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார். சட்டமா அதிபர் இதை அங்கீகரித்ததும் இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அவர் கூறினார். [size=5]ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நீதியமைச்சர் ரவூப…
-
- 2 replies
- 349 views
-
-
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டுவரப்பட இருந்தவை என்றால், அது தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.எஸ்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். - http://www.tamilmirror.lk/169145/-%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE…
-
- 6 replies
- 698 views
-
-
கேட்பதற்கு நாதியில்லை என்பதுபோல தமிழகத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநீதி தொடர்ந்துகொண்டே இருக் கிறது. திருச்சி, இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில், சோதனை என்ற பெயரில் காவல் துறையினர் ஒரு கர்ப்பிணியை, நிர்வாணப் படுத்திய கொடுமை அரங்கேற்றியுள்ளது. தமிழகத்தில் பூந்தமல்லி, செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு முகாம்கள் செயல்படுகின்றன. அவற்றில், திருச்சி முகாமில்தான் ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு, இலங்கை நாதன், குணராஜ், பார்த்திபன், சிவக்குமார் உள்ளிட்ட 10 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சங்கர் என்பவரைப் பார்ப்பதற்காக அவரது மனைவி காவியா, (இருவரின் பெயர்களும் மாற்றப் பட்டுள்ளன) கடந்த 20-ம் தேதி, காலை 11.20 மணிக்கு சென்றார…
-
- 2 replies
- 699 views
-
-
'சி.வியை கைது செய்' வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார். கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார். தமிழ் மக்கள் பேரவையினால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு அரசாங்கத்தின் வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றில் முதல்முறையாக தமிழ் பிரிவினைவாத ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுசரனை கிடைத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல, இனவாதத்தை கக்குகின்ற சி.வி.விக்ன…
-
- 3 replies
- 549 views
-
-
ஊடகவியலாளர் என்ற போர்வையில் இராணுவப் புலனாய்வாளராக செயற்படுபவர்தான் சிகரம் ஊடகத்தின் இயக்குநர் ருசாங்கன் என சிறிதரன் எம்.பி தெரிவித்துள்ளார். இன்று தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த 12ஆம் திகதி ரி.ஐ.டி கிளிநொச்சியில் உள்ள எனது அலுவலகத்தினை சோதனை செய்யும் போது அரசாங்கத்திற்கு சார்பான ஊடகங்கள் அழைக்கப்பட்டிருந்தன. ஆனால் சுயாதீனமாக செயற்படும் பத்திரிகை மற்றும் இணைய ஊடகங்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை. இதிலிருந்து விளங்கிக் கொள்ள முடியும் சோதனை நடவடிக்கை என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டது. இதில் அரசாங்கத்திற்கு ஒத்து ஊதக்கூடிய தினமுரசு, …
-
- 0 replies
- 446 views
-
-
'சிங்கக் குட்டிகள்', 'அம்பாந்தோட்டைப் பூனைகள்': கோத்தபாய பயன்படுத்திய கொலைகாரக் குழுக்கள்! - விக்கிலீக்ஸ் தகவல்!! இலங்கையில் நீதிக்கும், சட்டத்திற்கும் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் 'சிங்கக் குட்டிகள்' என அழைக்கப்படும் குழுவொன்றைப் பயன்படுத்தியமை தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய இரகசிய தகவல் குறிப்பை மேற்கோள் காட்டியே விக்கிலீக்ஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக அப்போது பணியாற்றிய ரொபேர்ட் ஓ பிளேக் சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், அப்போது ஆள…
-
- 0 replies
- 696 views
-
-
பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் டக்ளஸுக்கும் இடையில் கடுமையான வாய்ச்சண்டை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம் தொடர்பில் உரையாற்றினார். அதற்கு அரசு சார்பாக பதிலளித்து அமைச்சர் டக்ளஸ் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், அரியநேத்திரன் உள்ளிட்டோர் அவருடன் கடுமையான வாய்ச்சண்டையில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளித்த டக்ளஸ் தேவா…
-
- 11 replies
- 1.7k views
-
-
'சிங்கத்தின் குகைக்குள் சீறிய புலிகள்" -வேழினி- அநுராதபுரம் சோழமன்னன் ஐந்தாம் மகிந்த ஆட்சியின் பின் நவீன மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் தாக்குதலுக்குள்ளாகி விட்டது எனச் சிங்களத்துச் சோதரர்கள் தமக்குள் மனம் நொந்து கிடக்கின்றனர். சோழ மன்னனின் தாவும் புலிச்சின்னப் படைகளின் பின்னர் பிரபாகரனின் பாயும் புலிச் சின்னக் கரும்புலிகள் தாக்கி விட்டனர் எனச் சிங்களம் மனம் வெதும்பி அழுகின்றனர். 22.10.2007 அதிகாலை 3.20 ஒரு வளர்பிறைக்காலம். 1961 இல் குடிசார் வானூர்தி நிலையமாகவும் 1983 இல் சிறிலங்காவின் வான் படைத்தளமாகவும் மாறி இன்று தமிழர் நிலம் மீதான படைப்பின் தளமாகவும் தமிழர் மீதான வான்தாக்குதல் பயிற்சித்தளமாகவும் விளங்கும் அநுராதபுரம் படைத்தளத்தின் மீது கரும்புலிக…
-
- 0 replies
- 1.4k views
-
-
'சிங்கராசா வழக்கை இரத்துச் செய்தால் சிக்கல் தோன்றும்' உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள சிங்கராசா வழக்கின் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் ஊடாக இரத்துச் செய்யப்படுமாயின், அது சட்டமுறைமையில் சிக்கல்களை தோற்றுவிக்கும். அவ்வாறான நிலைமையொன்று உருவாகுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமையானது, தன்னுடைய மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக கூறி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி தர்ஷன வேரவகே என்பவரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் குறிப்பிடப்பட்…
-
- 0 replies
- 270 views
-
-
'சிங்கள இராணுவத்தினர் பேய்கள்" என நினைத்தோம் : தமிழினி எழுதிய புத்தகத்தை ஆதாரமாக எடுங்கள் என்கிறார் பிரசன்ன புற்றுநோயால் பீடிக்கப்பட்டு மரணித்த விடுதலை புலிகள் அமைப்பின் பெண்கள் அமைப்பின் தலைவி தமிழினி தான் உயிருடன் இருக்கும்போது நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விடங்களை நோக்கும் போது இராணுவத்தினர் யுத்தக் குற்றம் புரியவில்லை என்பது புலனாகிறது என சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார். “தாய் நாட்டுக்காக இராணுவத்தினர்” அமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் ம…
-
- 3 replies
- 1k views
-
-
(சென்னை) சிங்கள புத்த பாசிச சக்திகள் முஸ்லிம் மக்களை குறி வைக்க துவங்கியுள்ளனர். முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலம், கலாச்சாரம், வணிக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் சிங்கள புத்த பேரினவாத குழுக்களால் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. இந்நிலையில் சிங்கள பேரினவாத பாசிசத்திற்கும், இதற்கு துணைபோகும் ராஜபக்ஷே அரசை கண்டித்தும் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் போராட்டங்களை நடத்தியது. இதனைத்தொடர்ந்து, ‘நேற்று தமிழர்கள்!இன்று முஸ்லிம்கள்! சிங்கள பாஸிசத்தை அனுமதியோம்! என்ற தலைப்பில் சென்னையில், எழும்பூர் ஹோட்டல் சிங்கப்பூரில் நேற்று 16-ஆம் தேதி மாலை 4.45 மணி அளவில் கருத்தரங்கம் ஒன்றை பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தியது. இக்கருத்தரங்கில் பாப்புல…
-
- 1 reply
- 821 views
-
-
பிரித்தானியாவில் வாழும் அரசியல்வாதியான தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம் ஜி.ரிவி. நேரடி நிகழ்ச்சி ஒன்றைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. வியாழன் நள்ளிரவு தொலைக்காட்சியின் 'வெளிச்சம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயா இடைக்காடர் 'சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை' என்று கூற முயன்ற அவரது கருத்தை, அதை நெறிப்படுத்திய செய்தியாளர் தினேஷ் அவர்கள் வெகு புத்திசாதுரியமாக தடுத்து நிறுத்தியுள்ளார். திரு. தினேஷ் அவர்களின் இந்த முடிவு பாராட்டத்தக்கது என்றாலும், திரு தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தெளிவு படுத்தியே ஆகவேண்டும். தயா இடைக்காடர் சொல்ல வந்தது போல்,…
-
- 28 replies
- 2.6k views
-