ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142820 topics in this forum
-
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிஅன் சீமான் இன்று விடுத்துள்ள பொங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது காலம் காலமாகத் தொடரும் நம் தமிழர் நம்பிக்கை.ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழர் தம் வாழ்வு முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்குத் துன்பமும் துயரமுமாகக் காட்சியளிக்கின்றன.பழந்தமிழர் வீரத்தை நிகழ்காலத்தில் நம் கண் முன்னே கண்ட ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்திய சிங்கள ஏகாதிபத்தியத்தால் கொல்லப்பட்டு,அவர்களது போராட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில்,மீதமுள்ள தமிழர்கள் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.உயிரை மட்டும் கையிலேந்தி இந்த உலகில் எங்காவது போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று இலங்கையில் இருந்து படகு கட்டித் தப்பி வந்த தமிழர்கள் …
-
- 0 replies
- 620 views
-
-
அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை! அடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போதே, 2ஆம் திகதி எதிர்ப்பில் ஈடுபடுவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1304807
-
- 0 replies
- 440 views
-
-
எமது இனத்திற்கு விரோதமாக இந்த அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளிற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கு எமது கட்சியின் இளைஞர்கள், தொண்டர்கள் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தயாராக வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் மற்றும் மகளீர் அணியின் ஏற்பாட்டில் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இனப்பிரச்சினைக்கு சமஸ்டி கட்டமைப்பில் ஒரு தீர்வு வரவேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறி…
-
- 3 replies
- 611 views
-
-
அடக்குமுறைக்குப் புறமுதுகு காட்டாத எழுத்துச் சமராடிகள் -சி.இதயச்சந்திரன்- பிரகடனப்படுத்தப்படாத இராணுவ ஆட்சி எவ்வாறு நடைபெறுமென்பதை ஸ்ரீலங்காவில் வசிப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். கிணற்றுத் தவளைபோல் வாழ்வது எப்படியென்பதையும் அங்கு கற்றுக்கொள்ளலாம். ஆசியப் பிராந்தியத்துள், ஜனநாயக முகமூடியணிந்த சர்வாதிகார ஆட்சிகள் பல இருந்தும், ஸ்ரீலங்கா போட்டிருக்கும் புதியரக முகக் கவசங்கள் புதுமையானவை. போர் நடக்கும். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் இருக்கும். கடத்தலும், காணாமல் போகடித்தலும் தினமும் நடைபெறும். அதை விசாரிக்கச் சங்கங்களும் இருக்கும். எதிர்மறைகளின் ஆட்சி நிலவும் அற்புதமான பூமி ஸ்ரீலங்கா. இரண்டையும் ஒரு நிறுவனமே கையாளும் அதிசயமும் இங்குதான் நிகழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவ அடக்குமுறைக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனனர் – அவுஸ்திரேலிய செனட்டர் லீ ரியாணன் கடந்த வருட இறுதியில் இலங்கை சென்று அங்கு அரசால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நாடுகடத்தப்பட்ட லீ ரியாணன் தமிழ்லீடருக்கு பிரத்தியேக நேர்காணலை வழங்கி இருந்தார். அதன் போது, தமிழ் மக்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இராணுவ பிரசன்னம், தஞ்சம் கோரி வருபவர்களின் உண்மை நிலைப்பாடு, என பலதரப்பட்ட விடயங்களை தமிழ்லீடருடன் பகிர்ந்து கொண்டார். அதன் முழுமையான ஒலி, ஒளி வடிவினை இங்கே பார்வையிடலாம். நேர்காணலை தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழி வடிவிலும் கேட்கலாம் http://tamilleader.com/?p=26267
-
- 0 replies
- 442 views
-
-
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களின் இருப்பபையே இல்லாதொழிக்கும் தனது அடக்குமுறை நடவடிக்கைகளை இலங்கை அரசு நிறுத்திக் கொள்வதற்கு காலக்கெடு விதிக்கவிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி. அடுத்த மூன்று மாதத்துக்குள் - அதாவது இந்த ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதிக்குள் - அடக்கு முறை நடவடிக்கைகளை நிறுத்தி, நிலைமையைச் சீர்செய்வதற்கு இலங்கை அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறுமானால் - அடக்குமுறை நடவடிக்கைகள் தொடருமானால் - தைத் திங்கள் முதலாம் திகதி தொடக்கம் தமிழர் தாயகம் எங்கும் அஹிம்சைப் போராட்டம் தொடர்ந்து கட்டவிழும். அந்தப் போராட்டத்துக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் முழு ஆதரவு தரவேண்டும். - இவ்வாறு அறிவிக்கவிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி. அக்கட்சியின் 15…
-
- 1 reply
- 562 views
-
-
Chalo Sri Lanka, says Salman By: Subhash K Jha Date: 2010-06-14 Place: Mumbai Salman Khan forces Anees Bazmee to move shooting location from Mauritius to Sri Lanka Salman Khan has convinced his Ready director Anees Bazmee to change the location for the film, barely days before the unit was to begin shooting in Mauritius. Salman is so sold on Sri Lanka that he wants his next film to be shot there. According to a source, he enjoyed every minute of the experience and made the decision while at a film awards event in Colombo. "I'll be back," he promised smitten Lankan fans and has kept his promise. The minute he landed in Mumbai, he called up…
-
- 0 replies
- 1.5k views
-
-
அடங்காத அதிர்வுகள் -வேழினி- சிறிலங்காவின் அநுராதபுரம் வான்படைத்தளம் மீது கரும்புலி வீரர்கள் நிகழ்த்திய ~எல்லாளன் படை நடவடிக்கை|யின் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் சிங்கள தேசம் மீள முடியாதவாறு திணறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது படைவீட்டுக்குள்ளேயே நுழைந்து அதன் முற்றத்தில் நின்ற வானூர்திகளைக் கரும்புலி வீரர்கள் எரித்தழித்த போது சிறிலங்கா அரசு துடித்தபோதும் அங்கு ஏற்பட்ட இழப்பை வெளியில் தெரியாமலேயே மூடி மறைத்துவிடலாம் எனச் பெரும் பிரயத்தனத்தைச் செய்தபோதும் அது முடியாமற் போயிற்று. ஆரம்பத்தில் தாக்கியழிக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை நான்கென்றும் பின்னர் ஐந்தென்றும் உண்மையை விழுங்கிக்கொண்டிருந்த சிறிலங்கா அரசின் பொய்யுரையை உடைத்தெறிந்து சர்வதேச ஊடகங்க…
-
- 1 reply
- 1.7k views
-
-
அடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் செய்தி என்ன? - சி.இதயச்சந்திரன் இருளை விலக்கும் ஒளித்துளியைச் சுமந்து "வணங்கா மண்' என்கிற நிவாரணப் பொருட்களைத் தாங்கிய கப்பல் லண்டனிலிருந்து புறப்படப் போகிறது.ஐரோப்பாவிலிருந்து பாலஸ்தீனம் நோக்கிப் புறப்பட்ட "இடப்பெயர்வு "1947' (Exodos 1947) என்று பெயரிடப்பட்ட கப்பலே, "வணங்காமண்' நினைவூட்டுகிறது. வன்னி நோக்கிப் பயணிக்கும் இந்த "வணங்கா மண்' கப்பலின் நோக்கம், அவசர மனிதாபிமானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. "இடப்பெயர்வு 1947' கப்பல் பயணம், இஸ்ரேல் என்ற யூத தேசத்தை நோக்கிய நகர்வினைக் கொண்டிருந்தாலும் வணங்காமண்ணின் தாயகப் பயணம், பல நாடுகளின் கரைகளை தொட்டுச் செல்லும் நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கி இருப்பதாக கூ…
-
- 9 replies
- 1.7k views
-
-
அடங்குபவர்கள் அடக்கப்படுவீர்கள் . அடங்கினால் அடக்குமுறை இன்னும் பிரயோகிக்கப்படும் நீங்கள் உரிமைக்காக போராட வேண்டும் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்தார் . யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மகளிர்களுக்கான உரிமைகள் கிடைக்கவில்லை என்பதற்கு போராட்டங்களும் விழிப்புணர்வுகளும் மகளிர் தினங்களும் ஆதாரப்படுத்துகின்றன. அதனைவிட எமது இந்து சமயத்திலும் மகளிர் பெருமை தத்துவங்கள் ரீதியாக காட்டப்படுகின்றது . அத்துடன் பிரதேச ரீதியில் இருக்கும் …
-
- 1 reply
- 421 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவும் விளையாட்டு மைதானமும் சனிக்கிழமை (28) திறந்துவைக்கப்பட்டுள்ளன. நெல்சிப் திட்டத்தின் கீழ், 9.1 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில்; மாந்தை மேற்கு பிரதேச சபையால் சிறுவர் பூங்காவும் விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டன. குறித்த விளையாட்டு மைதானத்தில் மரமும் நாட்டப்பட்டது. இதன் பின்னர் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட அணிக்கும் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்;பட்ட அணிக்குமான கால்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றது. மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் எஸ்.வரப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் மற்றும் வர…
-
- 0 replies
- 373 views
-
-
அடம்பனுக்காக உக்கிர மோதல் 2/17/2008 10:05:13 AM வீரகேசரி வாரவெளியீடு - மன்னார் களமுனையில் அடம்பன் நகரைப் படையினர் கைப்பற்றி விட்டதாகப் பலமுறை செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பின்னர் அடம்பன் சந்திக்கு தெற்கே 1.கி.மீ தொலைவில் படையினர் நிலை கொண்டிருப்பதாகவும், மேற்கே 800 மீற்றர்வரை முன்னேறியிருப்ப தாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், அடம்பன் களமுனையின் முக்கியத்துவம், அதன் இன்றையநிலை என்பனவற்றை இந்த வாரம் எடுத்து நோக்குவது பொருத்தமானது. சிலர் கூறுவதைப் போன்று அடம்பன் ஒன்றும் பெரியநகரம் சார்ந்த பகுதியல்ல. இங்கு இருக்கின்ற ஒரேயொரு பெரியவிடயம் அடம்பன் தள வைத்தியசாலையாகும். மிக அண்மையில்தான் தொண்டர் நிறுவன உதவி யுடன் இது புனரமைக்கப்பட்டது. மன்னாரின் ம…
-
- 3 replies
- 2.8k views
-
-
அடம்பன் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது:- மன்னார் மாவட்டம் அடம்பன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம் , மாவீரர் நாள் நினைவேந்தல் குழுவினரால் சிரமதானம்மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை துப்பரவு செய்யப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/48504
-
- 0 replies
- 380 views
-
-
அடம்பன் கீலிக்கரையான் கடற்பகுதியில் 820 கிலோ பீடி சுற்றும் இலைகள் கொண்ட பொதிகள் மீட்பு : February 14, 2019 குளோபல் தமிழ்ச்செய்தியாளர் மன்னார்-அடம்பன் காவல்துறைப் பிரிவில் சுமார் 820 கிலோ கிராம் நிறை கொண்ட பீடி சுற்றும் இலைகள் அடங்கிய பொதிகளை இன்று வியாழக்கிழமை(14) காலை அடம்பன் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அடம்பன் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து அவ்விடத்துக்கு சென்ற காவல்துறையினர் அடம்பன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கீலிக்கரையான் கடற்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 13 பொதிகளைக்கொண்ட 820 கிலோ கிராம் எடை கொண்ட குறித்த பீடி சுற்றும் இலைகளை மீட்டுள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட…
-
- 0 replies
- 170 views
-
-
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாலைக்குழிப் பகுதியில் இருந்து அடம்பன் நோக்கி முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.8k views
-
-
மன்னார் பாலைக்குழியிலிருந்து அடம்பன் நோக்கி முன்னேறிய சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இதில் 10-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 20-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
மன்னார், அடம்பன் பிரதேச வைத்திய சாலைக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது. வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திலீபன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவதானிப்பாளர்களாக வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், அடம்பன் தேவாலயப் பங்குத் தந்தை நியூட்டன் மற்றும் காத்தான்குளம் பங்குத்தந்தை வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், அடம்பன் வைத்தியசாலை மன்னார் வைத்தியசாலை அளவிற்கு முன்னேற வேண்டும் என்பது எனது விருப்பம். இங்குள்ள பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய மாகாண சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, நான் நடவடிக்கை எடுப்பேன்.- எனவும் தெரிவி…
-
- 0 replies
- 365 views
-
-
மன்னாரில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று தாக்குதல் நடத்தியதில் மூன்று படையினர் கொல்லப்பட்டனர். 9 படையினர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 665 views
-
-
அடம்பிடிக்காமல் விசாரணைகளைக்கு அனுசரணை வழங்குமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்! போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவின் செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்குமாறு சிறிலங்காவினை அமெரிக்கா கோரியுள்ளது. ஐ.நா. வழங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் பிரதிநிதி சுஸானா ரைஸ் தெரிவித்துள்ளார் என்று பி.ரி.ஐ. செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் அமைத்துள்ள நிபுணர்குழு தொடர்பாக சிறிலங்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அந்த நிபுணர்குழு விசாரணைகளை மேற்கொள்வதற்கு நாட்டிற…
-
- 0 replies
- 1.3k views
-
-
அடம்பிடித்த பிள்ளையான் -அப்துல்சலாம் யாசீம் கிழக்கு மாகாண சபையின் 65ஆவது அமர்வுக்கு வருகை தந்திருந்த, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மாகாண சபை அமர்வு முடிந்த பின்னர், தான் வெளியில் வரும்வரை தன்னை அழைக்க வேண்டாம் எனக் கூறி, மாகாண சபைக்குள்ளேயே அமர்ந்து கொண்டார். இன்று வியாழக்கிழமை (27) பிற்பகல் 3.15 மணியளவில் சபை அமர்வு முடிவடைந்த நிலையில், பிற்பகல் 4 மணிவரை சபையின் அறைக்குள் இருந்து கொண்டு அவசரமாக செல்ல முடியாது என பொலிஸாரிடம் தெரிவித்த அவர், அங்கேயே இருந்துவிட்டார். http://www.tamilmirror.lk/184905/அடம-ப-ட-த-த-ப-ள-ள-ய-ன-
-
- 4 replies
- 610 views
-
-
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் 5 வருடங்களின் பின் மீண்டும் தமது முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக மீள் குடியேறியுள்ளனர். கடந்த யுத்தத்தின் போது 07-09-2007 அன்று குறித்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உட்பட முசலியில் உள்ள அனைத்துக் கிராம மக்களும் இடம் பெயர்ந்து சென்றனர். பின் யுத்தம் முடிவடைந்த நிலையில் 2009 ஆம், 2010 ஆம் ஆண்டுகளில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள அனைத்து மக்களும் மீள் குடியேற்றப்பட்டனர். ஆனால் முள்ளிக்குளம் கிராம மக்கள் மீள் குடியேற்றப்படவில்லை. இந்த நிலையில் குறித்த மக்கள் மன்னார், பேசாலை, தலைமன்னார், தாழ்வுபாடு, கீரி, மடுக்கரை…
-
- 0 replies
- 774 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அமரர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடல் பாலசிங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அடல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனவும், பெண் புலிகளுக்கான தலைமைப் பொறுப்பாளராக கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 10 வயது சிறுமிகளுக்கு பயிற்சிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவர் போராளிகளின் கழுத்தில் அடல் பாலசிங்கம் சயனைட் வில்லைகளை மாட்டி விட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிக்கினால் சயனைட் வில்லைகளை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளுமாறு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேல் நாட்டு பெண் மற்றும் தாதி ஒருவர் இவ்வாறு கொடூரமான செயற்பாடுகளுக்கு …
-
- 3 replies
- 834 views
-
-
அடாத்தாக காணிகளை பறித்தே கீரிமலை ஜனாதிபதி மாளிகை! ஒப்புக்கொள்கின்றார் அமைச்சர் கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் இடங்களைக் கைப்பற்றிச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அந்த இடத்துக்கு 8 பேர் உரிமை கோரியுள்ளனர். அதனால் அந்த மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்த்த பின்னரே மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்கமுடியும். காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதா? அல்லது வேறு வழிகளில் தீர்ப்பதா? என்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றோம். பிரச்சினையை…
-
- 0 replies
- 103 views
-
-
அடாத்தாக பிடிக்கப்பட்ட புலிகளின் மூத்த தளபதியின் வீடு: வாங்கிக் கொடுத்துவிட்டு வாய்மூடியிருக்கும் சாட்சி பசுபதிப்பிள்ளை! June 17, 2018 விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராக இருந்த தினேஷ் மாஸ்டரின் கிளிநொச்சி வீட்டை, நபர் ஒருவர் அத்துமீறி அடாத்தாக பிடித்து வைத்துள்ளார். அந்த வீட்டில் வாழ்ந்து வந்த தினேஷ் மாஸ்டரின் வயோதிப மாமியாரை குறித்த நபர் வீட்டிலிருந்து விரட்டியுள்ளார். இந்த வீட்டை தினேஷ் மாஸ்டரிற்காக அப்போது இந்த கொடுக்கல் வாங்கலை கவனித்தவர் தற்போதைய வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை. இப்போது அது குறித்து அவர் வாய் திறக்காமலிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகள்- அரசு சமாதான உடன்படிக்கை காலத்தில் கிளிநொச்சி கணேசபுரத்தில், புக…
-
- 0 replies
- 806 views
-
-
அடாத்தாக வீடுகளில் குடியிருப்போர் மீதான சட்ட நடவடிக்கைக்கான காலக்கெடு. சாதாரண சட்டத்தின்படி வாடகை செலுத்தாமல், அல்லது கோரப்படாமல், ஒரு வீட்டில் அல்லது ஆதனத்தில் குடியிருக்கும் ஒருவர், 10 ஆண்டுகளின் பின்னர் அந்த ஆதனத்தின் 'ஆட்சி உரித்து' மூலமான உரிமையாளர் ஆகின்றார். அதன் பின்னர் ஒரிஜினல் உரிமையாளர் உரிமை கோர முடியாது. இலங்கையின் வடக்கு கிழக்கு யுத்தத்தின் காரணமாக, இந்த 10 ஆண்டுகள் காலப்பகுதி, 30 ஆண்டுகள் என விசேட வர்த்தமானி அறிவிப்பினை அரசு வெளியிட்டிருந்தது. வடக்கு கிழக்கில், யுத்த காலத்தில் உங்கள் வீடுகளில் குடியிருந்தோரை எழுப்பி வீட்டினைப் மீள பெறும் சட்ட நடவடிக்கைக்கான காலக்கெடு இம்மாதம் 30ம் திகதி என அறிவிக்கப் பட்டுள்ளது என தெரிய வருகிறது. அதாவது இந்…
-
- 0 replies
- 392 views
-