Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பேராளிகளுக்கு அரசாங்கம் கண்டிய நடனப் பயற்சியளித்துள்ளது. புனர்வாழ்வு முகாம்களிலுள்ள புலிகளின் முன்னாள் போராளிகள் 100 பேருக்கு கண்டிய நடனப் பயிற்சி அளிக்கப்பபட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சபை முதல்வாரன அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தெரிவித்தார். "இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கலாசார அமைச்சு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது?" என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். Eelanatham

  2. பிரதியமைச்சர் அரசாங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேர்வின் சில்வா தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையொன்றின் பின்னர் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன Eelanatham.net

  3. இலங்கை அமைச்சர் 24.ம் புலிகேசி தான் ஏற்பாடு செய்த நிகழ்வுக்கு வருகை தராத ஓர் அரசாங்க அதிகாரியை, இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் பாணியில் மாமரத்தில் கட்டி வைத்து தண்டனை வழங்கியதன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இலங்கையின் பெருந்தெருக்கள் துறை பிரதியமைச்சர் மேர்வின் சில்வா. உண்மையில், இந்த இம்சையாரின் கீர்த்திப் பட்டியல் ரொம்ப நீளம்...! மேர்வின், சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் அரசியலுக்குள் நுழைந்தவர். அவருக்குப் பின்னால் மகிந்தா ராஜபக்ஷேவையும் காக்கா பிடித்து இன்று அமைச்சராக வலம் வருபவர் என்ற முன்னுரையுடன் அவரை கடுப்புடன் ரசிப்போம்! ஒரு நைட்கிளப்பில் மேர்வினின் மகன் மாலக சில்வா குடித்துவிட்டுத் தகராறு செய்ய... நைட்கிளப்உரிமையாளர்கள் மகனைத் தூ…

  4. சீன, அமெரிக்க நாடுகள் வடக்கு கிழக்கு மாகாண நடவடிக்கைகளில் தலையிடுவது தொடர்பாக இந்திய அரசாங்கம் தனது அதிருப்தியை இலங்கையிடம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பசில் ராஜபக்ஷ, கோதபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளனர். ஆனால் இந்தியாவின் அழைப்பின் பேரில், உயர் மட்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக இவர்கள் அங்கு செல்லவுள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. பேச்சு வார்த்தையின் போது, வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, இடம்பெயர்ந்தவர் மீள்குடியேற்றம் மற்றும் கே.பியைப் பயன்படுத்தி அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்பன சம்பந்தமாக முக்கிய கவனம் செலுத்தப்படும்…

    • 0 replies
    • 1.2k views
  5. விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை விற்க முயலும் இலங்கை! புதன்கிழமை, ஆகஸ்ட் 11, 2010, 12:37[iST] வவுனியா: வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது கைப்பற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களில் ஒரு பகுதியை தாம் பயன்படுத்தி வருவதாகவும் பெரும்பான்மை ஆயுதங்களை விற்க முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை இலங்கை பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கில் புலிகளால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ஆயுதங்களை இராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும், நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடுவிலும் முள்ளியவளையிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 60 மி.மீ மோட்டார் குண்டுகள் உட்பட பெருமளவிலான ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர் என்றும் ப…

  6. புதன்கிழமை, ஆகஸ்ட் 11, 2010 ஈழநாதம் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இன்று கைதிகள் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார். கொலைசெய்யப்பட்ட கைதியின் பெயர் விபரம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் நிலமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

  7. புளொட் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளராக இருந்து வருகிறார் இந்த புலிக்குட்டி. இவரது உண்மையான பெயர் ரஞ்சன். இவரை சுவிடர்சர்லாந்து அரசு இலங்கைக்கு நாடு கடத்தி விட்டது. இந்த புலிக்குட்டி, பல ஆண்டுகாலம் சுவிஸ் இல் தமிழ் மக்கள் மத்தியில் பல கலாசார சீர்கேடுகளை நிகழ்த்தி வந்தார் என்பது விடுதலைப் புலிகள் முன்பு குற்றம் சாட்டி வந்தனர். கடந்த மாதம்தான் இவருக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவரை தற்போது சுவிஸ் அரசு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது. தற்போது கொழும்பில் தங்கியுள்ளார் புலிக்குட்டி. http://thatstamil.oneindia.in/news/2010/08/11/kp-pulikutty-swiss-deportation.html

  8. தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று 19வது நாளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார். இன்று காலையில் Baigneux-Les-Juifs என்ற இடத்தில் இருந்து ஆரம்பித்த நடை பயணத்தில் சிவந்தனுடன் 8 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர். நேற்று 41 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 40 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாலையில் இணைந்து நடந்திருந்தனர். சிவந்தனின் மனிதநேய நடை பயணம் பற்றி பிரெஞ்சு ஊடகவியலாளர்கள், மற்றும் பொதுமக்கள் கேட்டறிந்து அதனை ஏனையவர்களும் அறியச்செய்து வருகின்றனர். பரிஸ் நகரில் இருந்து 301 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன், ஜெனீவாவை சென்றடைவதற்கு இன்னும் 245 கிலோமீற்றர்கள் நடக்க வே…

    • 0 replies
    • 586 views
  9. ஈழ நாதம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து சுயாதீனமான முறையில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டனிடம் அமெ. காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.இந்தக் கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸைச் சேர்ந்த 57 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்களின் விசாரணை நடவடிக்கைகள் காலதாமதமாக இடம்பெறுகின்றன எனவும், இலங்கை அரசின் சில தலையீடுகள் காரணமாக அதிகாரிகள் சிலர் ஆணைக்குழுவிலிருந்து விலகியுள்ளதா…

    • 0 replies
    • 520 views
  10. கிளிநொச்சி, கனகபுரம் கோழிப்பண்ணைப் பகுதியில் வீட்டுக்கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் நேற்று நண்பகல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பாலசுப்பிரமணியம் நிமலன் (வயது 50) என்பவரது சடலமே மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவரு வதாவது: கனகபுரம் கோழிப்பண்ணையில் மீள் குடியமர்ந்த இந்த நபர் தனிமையில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக இவரைக் காணாத நிலையில் நேற்றைய தினம் கிணற்றில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தை மீட்ட பொலிஸார் மரண விசாரணைகளுக்காக வவுனியா மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளனராம். ஈழ நாதம்

    • 0 replies
    • 441 views
  11. Aug 10, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / ஈழவன் நெத்தியடி நாகலிங்கம், வம்பன் சூரி, மடார் முருகேசு ஆகியோர் உரையாடல் சந்திக்கும் இடம் கிளிநொச்சி சந்தை நெ…நா – என்ன முருகேசு கொஞ்ச நாள உம்முடைய பேச்சு மூச்சைக் கானேல்ல என்ன ஏதும் வெட்டி முறிக்கிற வேலை நடக்குதோ. ம…மு – நான் படுகிற பாட்டுக்கை இந்தக் கிண்டல் தானே வேண்டாம் என்கிறது. உன்னை பற்றி எனக்கு தெரியாது என்று நினைக்கிறியே வலு பக்குவமாய் முருகேசு என்கிறாய். நான் அங்காலை போனதும் மடார் முருகேசு எண்டு சொல்லிச் சிரிப்பாய். நெ…நா – ஏன்டாப்பா கோவிக்கிறாய் நான் மாத்திரமே சொல்லுறன் உங்க ஊரே அப்படித்தானே சொல்லினம். அது தான் உன்ரை மூத்த மோன் தன்னை மடார் முருகேசுவின் மகன் என்று சொல்லித் திரியிறான் அது தெரியாதெ உனக்கு …

  12. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்பில் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்று நடப்பதாக பரபரப்பான செய்திகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் இருந்தும் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதாக அறிகின்றேன். அவசர அவசரமாக இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்கான பின்னணி என்ன? ஓர் இனத்தினதும் மொழியினதும் மனச்சாட்சியாகவும், அவர்களுடைய விடுதலைக் குரலாகவும் ஒலிக்கும் தகைமையர் படைப்பாளிகள். அத்தகையவர்கள் ஏன் தரந்தாழ்ந்தார்கள்? கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் ஈழரின் படைப்பிலக்கியத்திற்கு நிறை பங்களித்துள்ளவன் என்கிற முறையிலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக புலம்பெயர்ந்தோர் படைப்பு தமிழ் இலக்கியத்தில் புதிய பரிமாணமும் கூறும் என்பதை இலக்கிய ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஊழியம் செய்தவன் …

  13. புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு விழுந்த பேரிடியே கே.பியின் கைது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வாஷிங்டன், ஓகஸ்ட் 07 விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச இணைப்பாளர் குமரன் பத்மநாதன் எனப் படும் கே.பி. இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டமை புலிகளின் சர்வதேச வலைய மைப்புக்கு விழுந்த பேரிடி என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆண்டில் இடம்பெற்ற தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை யொன்றை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்று அமெரிக்க காங்கிர ஸிடம் கையளித்தது. அந்த அறிக்கையி லேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட் டுள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக் கும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து புலிகளின…

  14. வெள்ளிடைமலையாகும் கே.பியின் கதாநாயகர்கள்! - சேரமான் திகதி: 07.08.2010 ஃஃ தமிழீழம் இறுதி யுத்தத்தில் தம்மிடம் சரணடைந்த போராளிகளின் நல்வாழ்விற்கான செயற்திட்டங்கள் என்ற போர்வையில், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடமிருந்து பெரும் தொகையில் நிதியைத் திரட்டுவதற்கான திட்டம் ஒன்று, கே.பி குழுவினர் ஊடாக சிங்கள அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கே.பி அவர்களின் தலைமையில் வடக்குக் கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழகம் என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள தன்னார்வ நிறுவனத்தின் ஊடாகவே இதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. புகலிட தேசங்களில் இதனை நடைமுறைப்படுத்துவோர் யார்? இவர்களின் பின்னணி என்ன? சிங்கள அரசின் நிகழ்ச்சித் திட்டத்தை இவர்கள் செயற்படுத்துவத…

    • 58 replies
    • 4.4k views
  15. எனக்கு வந்த ஊடக நண்பர் ஒருவரின் மின்னஞ்சலிலிருந்து... 'இவரேதான் அவரே..அவரேதான் இவரே'. இது ஒரு பழைய பாட்டு. கே.பீ. அண்ணனை காப்பற்றவே, இத்தனை காலமும் காஸ்ட்ரோவின் மீது செறடித்தார்களோ என்று தோணுது. அண்ணனுக்கும்,அரசியலுக்கும் தொலைதூர இடைவெளி. ''இருக்கிறார் இல்லை. வருவார் வரமாட்டார். வரும் ஆனால் வராது. மௌனிக்கப்பட்டுள்ளது ...இனி சாத்தியமில்லை. கோத்தபாயா சகோதரய, பணிஸ் கொடுத்த சீதக்காதி. ''' இப்படியே இழுபட்டுச் செல்லும் அண்ணனின் பொன்மொழிகள். அண்ணனை 'LIE DETECTOR ' கொண்டு சத்திய சோதனைக்கு உட்படுத்தினால் ,வெளிவரும் உண்மைகள் சில.... [ஆழ்மனத் தூக்கத்தில் நிறுத்தி, உண்மைகளை உளறவைக்கும் அற்புதமான அறிவியல் கருவி.- LIE DETECTOR ] ''நான்தான் தலைவர். …

  16. உயிரோடு இருக்கிறரா க.வே.பாலகுமாரன்? இன்று ளுசi டுயமெய புரயசனயைn பத்திரிகை திரு.க.வே.பாலகுமாரன் அவர்கள் 17 மே 2009 அன்று இராணுவத்திடம் வெள்ளைக் கொடியுடனும் மேலும் சில உயர்நிலைத் தலைவர்களுடனும் சரணடைந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இராணுவத்தினரின் பகுதிக்குள் தனது மகனுடன் சரணடைந்த நிலையில் எடுக்கப்பட்ட பிரத்தியேகப் புகைப்படத்தினை வெளியிட்டள்ளது. இராணுவத்திற்குள் இருக்கும் தங்களது தகவல் பிரிவிடமிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படம் இதுவெனத் தெரிவித்துள்ளனர். இப்புகைப்படத்தின் பின்புலத்தில் இராணுவத்தினரின் நடமாட்டம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டதாக அமைச்சர் ஒருவரால் தெரிவிக்கப்பட்ட செய்தி இதன்மூலம்…

  17. http://www.yarl.com/articles/files/100810_thamilaga_parvai.mp3 நன்றி: ATBC

  18. சுதந்திரமான வாழ்வு, கெளரவமான , கற்பதற்கேற்றதான அமைதியான சூழல் தெரிவுகள் ,அனைத்தையும் இழந்துபோன மனதின் சுமைகளோடு வாழ்வதற்க்கு நிர்ப்பந்திக்கபடுதலே வன்னி மாணவர்களின் இன்றைய சூழல் , கொடும்போரின் வடுக்களை சுமந்த வாழ்வே வாழ்வழிக்கிறது. யுத்தத்தில் அவயங்களை இழந்து உற்றார், உறவினர் , நண்பர்களை பிரிந்து ,சாதாரண மக்களாக எப்படி இவர்கள் வாழ்வார்கள். உடல் ,உள ரீதியாக பாதிக்கபட்ட மாணவர்களை வழிநாடாத்த முன் வருபவர்கள் யார் ? உதவுபவர்கள் யார் ? யாருமேயில்லை பல எதிர்கால கனவுகளுடன் சிறகடித்து திரிந்த எம்மலர்களின் கனவுகள் சிதைந்ததும் , சிதைக்கபடுவதுமான காலம் இதுவே எனலாம் போரின் இழப்புகளிற்குள் மீண்டெழுவதற்குள் சிங்களபேரினவாதத்தின் இராணுவ புலனாய்வு செயற்பாட்டளர்களின் விசாரணைக…

    • 0 replies
    • 1k views
  19. http://www.yarl.com/articles/files/100810_vanni_school_principal.mp3 நன்றி: ATBC

  20. யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், மக்கள் வாழ்க்கை மேம்பாட்டு அபிவிருத்தி, மீள்குடியமர்வு என்பன தொடர்பான நடவடிக்கைகள் தமக்குப் பூரண திருப்தியை அளிப்பதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் குடாநாட்டின் உயர் அதிகாரிகள் பலரிடம் கூறியதாகத் தெரியவந்ததுள்ளது. இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இருவர் நேற்றுக் குடாநாட்டுக்குத் திடீர் விஜயம் செய்திருந்தனர். யாழ்ப்பாணத்தின் இப்போதைய பாதுகாப்பு நிலையை நேரில் கண்டறியும் பொருட்டே இங்கு அவர்கள் வந்தனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நேற்றுக் காலை விஜயம் செய்து பொதுமக்களுடன் உரையாடி இப்போதுள்ள பாதுகாப்பு நிலைவரத்தைக் கேட்டறிந்தனராம். போருக்குப் பின்னரான பாதுகாப்பு நிலைமை குறித…

  21. http://www.yarl.com/articles/files/100810_ira_sathiyanathan_australia.mp3 நன்றி: ATBC

  22. காஷ்மீரில் 1989 - 2009ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய ராணுவ மற்றும் துணை ராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து, ஆய்வு செய்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தினரால் வெளிக்கொணரப்பட்ட “புதைக்கப்பட்ட சாட்சியங்கள்” என்ற ஆய்வு அறிக்கையின் தமிழாக்கத்தை குடியுரிமை பாதுகாப்பு நடுவம் வெளியிட முன்வந்துள்ளது. காஷ்மீர் பிரச்னை என்பதே இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான பிரச்னை என்றும், காஷ்மீரிகளின் அடையாளம் மற்றும் சுதந்திர வேட்கைக்கான போராட்டம் என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது போன்றும், இந்திய இராணுவப் படையினர் போராளிகளிடம் இருந்து காஷ்மீர…

  23. மன்னாரில் கழுதைகளுக்கு மறுவாழ்வு; கணக்கெடுப்புப் பணி ஆரம்பமாகியது மன்னார்,ஓக. 2 மன்னார்ப் பிரதேசத்தில் கட்டாக்காலி களாக அலைந்து திரியும் கழுதைகளின் தொகை பற்றிய கணக்கெடுப்பு ஆரம்ப மாகியுள்ளது. இதற்கான பணிப்புரைகள் பிரதேச செயலாளரால் கிராம சேவைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மன்னாரில் தற்போது கட்டாக்காலிக் கழுதைகள் பல்கிப் பெருகியுள்ளன. இவைகள் நகரின் பேருந்து நிலையங்கள், வர்த்தகப் பகுதிகள், பாடசாலைகள், பள்ளிகள், கோயில்கள் மற்றும் தெரு வீதிகளில் அலைந்து திரிந்து நகரை அசுத்தம் செய்வதோடு தறி கெட்டு ஓடித்திரிந்து பொது மக்களுக்கு விபத் துக்களையும் ஏற்படுத்துகின்றன. ஒரு காலத்தில் "விண்ணர்' களின் செல்லப் பிள்ளைகளாகவும், பொதி, சுமக் கும் வாகனங்களாகவுமிருந்த இவைகள் தற…

  24. யாழ். பல்கலைக்கழக விவசாய பீடம் விரைவில் கிளிநொச்சிக்கு மாற்றப்படும் சரவணபவன் எம்.பியிடம் ஆளுநர் தெரிவிப்பு கொழும்பு,ஓக.8 யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தை கிளிநொச்சியில் இயங்கச் செய்வ தற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திர சிறி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடமே இத்தகவலை கூறியுள்ளார் ஆளுநர். யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் விடுத்த கோரிக்கையின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆளுநருடன் பேச்சு நடத்தினார். ஆளுநரிடம் சரவணபவன் எம்.பி. தெரி வித்தவை வருமாறு: விவசாயப் பிரதேசமான கிளிநொச்சி யில் விவசாயபீடம் அமைவதே உகந்தது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.