ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143199 topics in this forum
-
எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான் தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை மண்ணில் மலராகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவனின் வழியில் நடந்தவர் தான் கபிலன் அல்லது கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை. 1984 தமிழகத்தில் விடுதலைபுலிகளின் 4 வது பயிற்ச்சி முகாமில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பயிற்ச்சி பெற்றார். இவர்கட்கான பயிற்ச்சியை முன்னாள் திருமலை தளபதி புலேந்திஅம்மான் அவர்கள் வழங்கினார். அதன் பின்னர்......... திருமலை வந்து புலேந்தி அம்மான் அவர்களுடன் இணைந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தினார் அங்குள்ள மக்களுடன் நல்லா உறவினை பேணி அவர்களின் உதவியுடன் திறமையாக செயற்பட்டார். திருமலை மக்கள் மனதில் இன்றும் கபிலம்மான் நிறைந்திருக்கிறார்.அவர் பழக…
-
- 2 replies
- 2.4k views
-
-
... பக்கத்திலை இருக்கிற தூணிலை தலையை அடிக்கிறதென்ன, தூக்குப் போட்டுச் சாகலாம் போல கிடக்கு .... ஆண்டவா!!!!!!!
-
- 23 replies
- 3.7k views
-
-
தங்கள் உறவுகளையும் உடைமைளையும் இழந்து போய் இனிவரும் காலங்களில் தங்கள் கல்வியை மட்டுமே நம்பி அதனைக்கொண்டு தாங்கள் புதியதொரு வாழ்வினை கட்டியமைக்க முடியுமென்கிற இறுதி நம்பிக்கையுடன் மனக்காயங்கள் உடற்காயங்கள் என்று அத்தனையும் தாங்கியபடி பல்கலைக்கழகம் சென்று கொண்டிருக்கும் பல மாணவர்களில் அவசர உதவி கோருவோர் 11 பெயரின் விபரங்கள் நேசக்கரம் ஊடக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு இணைக்கிறோம்.. ஒரு பல்கலைக்கழக மாணவனிற்கான மாதாந்த உதவிக்தொகையாக நேசக்கரம் இலங்கை ரூபாய் 5ஆயிரம் நிர்ணயித்துள்ளது.(36 யுரோக்கள்) உதவ விரும்பும் உள்ளங்கள் நேசக்கரத்துடன் தொடர்பு கொண்டால் உங்கள் உதவிகள் நேரடியாகவே மாணவர்களை சென்றடைவதற்கான அவர்களது வங்கிஇலக்கம் விலாசம் போன்றவற்றை தந்துதவி வழிவகைகளை ஏற்படுத்திதரலாம். …
-
- 14 replies
- 2.6k views
-
-
இலங்கை கடற்படையினர் செய்த அட்டூழியம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றன. அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 4 ரோந்து படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். மேலும் இலங்கை கடற்படையினர் 50-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் ஒவ்வொரு படகாக ஏறி அதில் இருந்த விலை உயர்ந்த இரால் மற்றும் கனவாய் மீன்களை கொள்ளையடித்துச் சென்றனர். இலங்கை கடற்படையினர் கொள்ளையடித்ததாலும், விரட்டியடித்ததாலும் மீனவர்கள் குறைந்தளவு மீன்களுடன் கரை திரும்பினர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=33487
-
- 0 replies
- 1.7k views
-
-
மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? - சீமான் சென்னை: தமிழ் உணர்வாளர்களும், தென்னகத் திரைத்துறையினரும் எவ்வளவோ எடுத்துக் கூறியும், தமிழர் வேதனையைச் சொல்லியும் கேளாமல் கொழும்பு விழாவில் கூத்தடித்த இந்தி நடிகர்கள், மும்பையில் குண்டுவைத்த பாகிஸ்தானியர்கள் அழைத்தாலும் இதே மாதிரி போய் கூத்தடிப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஈழத்தில் 1 லட்சத்துக்கும் மேல் கடந்த ஆண்டு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இன்று அனைத்துலக நாடுகள் ராஜபக்சே மீதும், சிங்கள ராணுவத்தின் மீதும் போர்க்குற்றங்களைச் சுமத்தி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளன. தமிழினத்தை கொலை செய்த பெர…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளி யெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ர…
-
- 1 reply
- 871 views
-
-
அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பிக்கள் மாவை சேனாதிராஜா தலமையில் சுரேஷ்பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன் முதலியோர் வன்னி அகதிகளை சந்திக்கும் பயணம் ஒன்றை மேற்கொண்டார்கள். இந்தக் குழுவினருடன் சென்ற குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர்களில் ஒருவரான நவராஜ் பார்த்தீபன் விரக்தியும் துயரும் படிந்த கடல் மக்கள் எனக் குறிப்பிடும் அல்லாறை தடுப்பு முகாமில் தடுக்கப்பட்டிருக்கும் வடமராட்சி கிழக்கு மக்களது அவலங்கள் குறித்து இந்த விபரணத்தை எழுதியிருக்கிறார். கடற்கரையில் வாழும் எங்கள் வாழ்க்கையை எங்களுக்கு மீளப் பெற்றுத் தாருங்கள் என்று வடமராட்சி கிழக்கை சேர்ந்த மக்கள் கண்ணீர் மல்க கேட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் அண்மையில் யாழ்ப்பாணம் அல்லாரை என்ற தடு…
-
- 0 replies
- 1.6k views
-
-
1 முள்ளிவாய்க்கால் மனித அவலம் நிகழ்ந்து ஒரு வருடமாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் நினைவு தினம் அனுஸ்டிப்பது போன்றே இதனையும் நினைவு தினமாக அனுஸ்டித்து நம்மை நாமே ஆற்றுப்படுத்திக் கொண்டோம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம்மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிரான நினைவு தினங்கள் அனைத்தும் இயலாமையின் வெளிப்பாடாக இருந்திருக்கின்றனவே தவிர செயலுக்கான அணிச் சேர்க்கையாக, செயலுக்கான முனைப்பாக இருந்ததில்லை. இதற்கு மேல் இந்த இடத்தில் முள்ளிவாய்க்கால் பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. எனது அவதானம் முள்ளிவாய்க்கால் மனித அவலத்திற்கு பிற்பட்ட காலத்தில் என்னுள் எழுந்த ஒரு கேள்வியின் மீதான விசாரனையாகவே அமைகிறது. அது நவீன அரசியலில் நீதி என்னும் கருத்துநிலை வகிக்கும் இடம் பற்றி…
-
- 0 replies
- 950 views
-
-
வன்னி இறுதி யுத்தம் வரை முல்லைத்தீவில் பணியாற்றிய வைத்திய கலாநிதி கைலைநாதன் சுதர்சன் இலங்கையின் காவற்துறையின் விசேட புலனாய்வுப் பிரிவான ரி.ஜ.டி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச்செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதியில் மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய அவர் நீண்ட நாட்களின் பின் தன்னை வைத்தியர் என இனங்காட்டாது முகாமிலிருந்து வெளியேறி குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று இந்தியா சென்றிருந்தார். அங்கு தனது மேற்படிப்புத் தொடர்பான விடயங்களை கவனித்திருந்த வேளை கியூப் பிரிவினருக்கு இவரொரு வைத்தியர் என்றும் இறுதி யுத்தம் வரை வைத்தியராகப் பணியாற்றியவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
காலம் கடந்த ஞானம் இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம டைந்த நாளில் இருந்து டி.எஸ்.சேனநாயக்கா முதல் பல தலைவர்களைக் கண்டுவிட்டது. ஆனால் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. சமா தானத்தை ஏற்படுத்துவதற்கு கிடைத்த அரிய சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டுள்ளன. இந்த சந் தர்ப்பங்கள் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டார நாயக்கா முதல் ஆட்சிக்கு வந்த அனைத்து தென்னிலங்கைத் தலைவர்களுக்கும் இருந்தன. ஆனால் இவர்கள் பதவியில் இருக்கும் போது பேரினவாதிகளின் பிடியில் சிக்கி விடுவார்கள். பின்புதான் ஞானம் பிறக்கும். சமீபத்தில் கொழும் பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சந்திரிகா குமாரதுங்க ஆற்றிய உரை இதனைத்தான் நினைவுபடுத்துகிறது. இலங்கையர்கள் அனைவருக்கும் அரசியல் பொருளாத…
-
- 1 reply
- 1.1k views
-
-
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முதல் முறையாக நாளை மாலை நடைபெறவுள்ள உத்தியோகபூர்வமான சந்திப்பில் பேச்சுவார்த்தையில் போருக்குப் பிந்திய மீள்குடியேற்றத்துக்கும், சிறையில் உள்ள இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு, தமிழ் மக்களுக்கு உரிய நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும் கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா. தமிழ் மக்களின் போருக்கு பிந்திய கால மீள்குடியேற்றம் , சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர் இளைஞர், யுவதிகளை விடுவிக்க விரைவான நடவடிக்கை விடுதலைப் புலிப் போராளிகள் எனத் தெரிவித்து முகாம்களில் தடுத்துவைக…
-
- 0 replies
- 585 views
-
-
இலங்கையில் தமிழ் மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாகவே இந்திய முன்னணி நடிகர்கள் எவரும் கொழும்பில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க வரவில்லை என்பதை அரசு புரிந்துகொண்டு அதற்கேற்றவாறான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடில் எதிர்காலத்திலும் இதுபோன்ற பாதகமான நிலைமைகளைச் சந்திக்க வேண்டி வருமென ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான ரோசி சேனநாயக்க உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது; பயங்கரவாதம்…
-
- 1 reply
- 721 views
-
-
தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தாண்டி இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகமும்(IIFA), இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும் (FICCI)யும் இணைந்து நடத்தில் ஐஃபா விருது வழங்கு விழாவும், அதனைத் தொடர்ந்து நடந்த வணிக மாநாடும் பெரும் தோல்வியில் முடிந்தது. இந்தி நடிகர்களில் பெரும்பாலோர் இந்த விழாவைப் புறக்கணித்தது மட்டுமின்றி, இந்த விழாவில் ஐஃபாவின் தூதராக நியமிக்கப்பட்ட சல்மான் கானும், விவேக் ஓபராயும் தங்களுடைய தனிப்பட்ட பகையை அங்கே வெளிப்படுத்தி முதல் நாள் கூத்தைக் கெடுத்தனர். இதனால் ஐஃபா விருது வழங்கு விழா முதல் நாளே களையற்றுப் போனது. அடுத்த நாள் நடந்த உலக வர்த்தக மாநாடும் பெரும் நகைச்சுவையாகியுள்ளது. இந்த மாநாட்டிற்கு தலைமை விருந்தினராக வரவேண்ட…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், இஃபா.விழாவில் அமிதாப்பச்சன் போன்ற முன்னணி நடிகர்கள் பங்கேற்காமை போன்ற விடயங்களின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நடவடிக்கைகள் இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேசரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன் சில சந்தர்ப்பங்களில் வெற்றியும் பெற்றிருப்பதற்கு நவநீதம்பிள்ளை அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்களை முன்னுதாரணமாக அமைச்சரவை, பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வார…
-
- 0 replies
- 1.4k views
-
-
. பாலஸ்தீனத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம். பாலஸ்தீனத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்படன் சுற்றுவட்டம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு லிப்டன் சுற்றுவட்ட தெவட்ட கஹ பள்ளிவாசலில் ஜூம்மா தொழுகையின் பின்னர் ஒன்றினைந்த முஸ்லிம்கள் பாலஸ்தீனத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து பல பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் …
-
- 4 replies
- 1.5k views
-
-
இலண்டன் சீமையில இருந்தும் பல அறிவிலிகள் செம்மொழி மாநாட்டுக்கு போகபோறதாக இலண்டினல இருந்து இலவசமாகவரும் பத்திரிகை ஒன்றில போறவரின் படத்தோட விபரமாக செய்தி வந்திருக்குது. அதில ஒருவர் தான் தான் தான் தமிழ் மொழியை இலண்டன் பல்கலைகழகத்த்திற்குள் புகுத்தியவர் என்று தம்பட்டம் அடிக்கும் சிவாப்பிள்ளை அவர்கள். அவர்தான் தன்னுடைய ஆய்வறிக்கையையும் முள்ளிவாய்க்காலில் முச்சு விட்ட நாற்பதிநாயிரம் உயிர்களின் சாம்பலையும் கொண்டு கருநாநிதி வீட்ட போறாராம். போறவர் பரவாயில்லை செய்தியாக போட்டு தான் போறதையும் பிரபல படுத்தி ஈழத்தில ஒன்றுமே நடக்கவில்லை எல்லாம் சாகஜமாக இருப்பது போல் சந்தோசமாக தாங்கள் கொடுக்க இருக்கும் ஆய்வுகள் பற்றி புளகாங்கிதம் அடைந்துள்ளார்கள். இல…
-
- 0 replies
- 718 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவு தொடர்ந்து நீடிக்கப்படும் என பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவை நீடிப்பது தொடர்பிலான உறுதிமொழி இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹய்ஸினால் பிரதமர் டி.எம்.ஜயரட்னவுக்கு வழங்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்தில் டி.எம்.ஜயரட்னவை சந்தித்த பீற்றர் ஹய்ஸ், இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர உறவை வளர்த்துக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2851
-
- 15 replies
- 1.5k views
-
-
பொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார். தமிழீழ மக்கள் …
-
- 12 replies
- 1.5k views
-
-
NDTV ஒளிபரப்பிய இலங்கை குறித்த விவரணம்: பெரும் சர்ச்சை இலங்கையைப் பற்றிய "தண்ணீரில் இரத்தம்" (“Blood on Water”) என்ற விவரணத்தை சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் என்.டி.ரி.வி (NDTV) அண்மையில் ஒளிபரப்பியிருந்தது. ஆனால் இந்த விவரணத்தில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் இருப்பதாகக் கூறியுள்ள இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவாசம், அந்த விவரணத்தைத் திரும்பப் பெற்றுவிடுமாறு குறித்த தொலைக்காட்சி சேவைக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவரணத்தில் பல பொய்யான தகவல்கள் இருப்பதாகக் கூறும் காரியவாசம், தற்போது இடம்பெயர் முகாம்களிலும், முட்கம்பிக்குப் பின்னாலும் 3 முதல் 6 லட்சம் வரையான மக்கள் இருப்பதாக பேராசிரியர் செனோய் குறிப்பிட்டுள்ளார், ஆனால் தற்போது…
-
- 6 replies
- 1.5k views
-
-
கடந்த வருடம் நடைபெற்ற போரின் இறுதிப்பகுதி மிகவும் கெடுமையானது. அதன் போது 20,000 தொடக்கம் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக த யப்பான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகளின் போரிடும் வலுவை முறியடித்த சிறீலங்கா அரசு அதன் ஓராண்டு விழாவை கொண்டாடி வருகின்றது. ஆனால் சிறுபான்மை இனங்களின் அபிலாசைகளை சிறீலங்கா அரசு நிறைவேற்றாத சமயத்தில் அதனால் களமுனை வெற்றியை தக்கவைக்க முடியாது. சிறுபான்மை இனங்களின் பிரச்சனைக்கான தீர்வுகளை காணமுற்படாது, எதிர்க்கட்சிகளின் குரல்களை சிறிலங்கா அரசு அடக்க முற்படுவது ஒரு தலைமுறையினருக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அது இழந்ததாகவே இருக்கும். மகிந்தா அரசு தற்போது கூட அதனை மேற்கொள்ள முடியும். அதன…
-
- 9 replies
- 926 views
-
-
கிளிநொச்சி மாவட்டம் திருநகர்ப் பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் மீது பாலியல் குற்றம் புரிய முற்பட்டதாக படைச்சிப்பாய் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக ஜீ.ரீ.என் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. மேற்படி குடும்பப் பெண் கணவருடன் வீட்டில் படுத்திருந்த சமயம் வீட்டினுள் புகுந்த சிப்பாய் மேற்படி குடும்பப் பெண் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ள முயன்றதாகவும் வீட்டுக்காரர்கள் விழித்துக் கொண்டதால் தப்பி ஓடிய படைச்சிப்பாய் அருகிலுள்ள கிணறு ஒன்றில் விழுந்துள்ளதாகவும் ஜீ.ரீ.என் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அச்சமயம் தான் ஒரு படைச்சிப்பாய் எனவும் தன்னைக் காப்பாற்றும் படியும் அங்கு கூடிய பொதுமக்களிடம் கோரியுள்ளார். அங்கு கூடிய பொது…
-
- 1 reply
- 1.1k views
-
-
கொழும்பு: உலகெங்கும் உள்ள தமிழர்களின் தொடர் கோரிக்கைகள், போராட்டங்களுக்கு மதிப்பளித்து கொழும்பு நகரில் நாளை தொடங்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்வதில்லை என்று இந்தித் திரையுலகின் அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களும், நடிகைகளும் முடிவு செய்துள்ளதால், கொழும்புப் பட விழா களையிழந்துள்ளது. கொழும்பில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு இஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட வட இந்திய திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாம் தமிழர் இயக்கம் களத்தில் இறங்கியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து ரத்தக்கறையுடன் உள்ள ராஜபக்சே அரசு, தனது சுய லாபத்துக்…
-
- 15 replies
- 1.5k views
-
-
முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்பு பலரும் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு ஆதரமும் இல்லாமல் எடுத்தவனையெல்லாம் துரோகி,இலங்கை அரசுடன் சேர்ந்தியங்குகிறார்கள்,விலை போய்விட்டார்கள் என்ற ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு தேச விடுதலையை நேசிக்கும் மக்களை குழப்புவதையே சில தமிழ் இணையங்கள் தற்போது வேலையாக வைத்துள்ளது. பேசி தீர்க்கவேண்டிய விடையங்களை இணையத்தில் எழுதி உங்கள் முகத்தில் நீங்களே காறித்துப்புவதாகவே இது உள்ளது. தலைமையின் வெளிப்பாடு இல்லாத இந்த காலப்பொழுதில் மக்களை தேசிய உணர்வுள்ளவர்களே வழிநடத்தி ஒரு குடையின் கீழ் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.போர் குற்றங்களை உலக அளவில் நிருபிப்பதற்கு போராட வேண்டும். ஆனால் நாம் செய்வது தான் என்ன?? …
-
- 7 replies
- 1.7k views
-
-
ஐஃபா விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு நடனமாட நடிகை நமீதாவுக்கு ஐஃபா அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக பெரும் தொகை ஒன்றையும் வழங்க இலங்கை அரசு மற்றும் ஐஃபா நிர்வாகம் நமீதாவை அணுகியுள்ளது. ஆனால், இந்த வாய்ப்பை அவர் ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டார். இதுகுறித்து நமீதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஃபா விழாவுக்காக என்னை சில தினங்களுக்கு முன்பே அணுகினார்கள். என்னை இந்த விழாவில் நடனமாட அழைத்தார்கள். அதற்காக பெரும் தொகையும் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இங்கே இந்த பிரச்சனை இருப்பது தெரிந்த பிறகும் எப்படி நான் போக முடியும். எனக்கு சோறு போட்டது தமிழ் மக்கள்தான். இன்று இந்த அந்தஸ்து வந்தததும் அவர்களால்தான். எனவே யாரும் சொல்வ…
-
- 7 replies
- 1.5k views
-
-
எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா-பிபாஷா! கொழும்பில் நடக்கும் ஐஃபா விழாவில் பங்கேற்காமல் ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டார்களே புறக்கணித்து நிற்க, தமிழில் அறிமுகமாகி புகழ்பெற்ற நடிகையொருவர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். அவர் பாய்ஸ் படத்தில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனிலியா டிஸூஸா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் நாயகிகளில் இவரும் ஒருவர் என்று கூறிவந்தது நினைவிருக்கலாம். தமிழில் அறிமுகமானாலும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில்தான் இவர் நடித்து வருகிறார். கோவாவைச் சேர்ந்த இவர் மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனை காதலிக்கிறார். ஐஃபா வ…
-
- 1 reply
- 1.9k views
-