ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143185 topics in this forum
-
வன்னி மக்களை வகைதொகையின்றி சிறீலங்கா அரசாங்கம் கொன்றுகுவித்துள்ளது! பன்னாட்டு நெருக்கடிக் குழு கண்டனம்!!! இறுதி யுத்தத்தின் பொழுது வன்னி மக்களை வகைதொகையின்றி சிறீலங்கா அரசாங்கம் கொன்றுகுவித்திருப்பதாக பன்னாட்டு நெருக்கடிக் குழு கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் பன்னாட்டு நெருக்கடிக் குழு, கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தத்தின் பொழுது பொதுமக்களையும், மருத்துவமனைகளையும், மனிதநேயப் பணிகளையும் இலக்குவைத்து தொடர்ச்சியாக திட்டமிட்ட வகையில் பீரங்கிக் கணைத் தாக்குதல்களை சிறீலங்கா அரசாங்கப் படைகள் நிகழ்த்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களாக செய்கோள் படங்கள், ஆவணங்கள், பாதிக…
-
- 0 replies
- 770 views
-
-
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவப் பிரசன்னத்தினை இல்லாது செய்யவேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையினை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்திருக்கிறார். வடக்குக் கிழக்கில் அரச படையினர் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டினைத் தளர்த்துவதானது 'முட்டாள்த்தனமான' ஒரு செயல் என்றும் அது விடுதலைப் புலிகள் தங்களை மீள ஒருங்கிணைப்பதற்கே வழிசெய்யும் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்குக் கோத்தாபய கூறியிருக்கிறார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்து, உக்கிரமான இறுதிப்போர் இடம்பெற்ற வன்னிப் பெருநிலப்பரப்பில் படையினரின் செறிவான பிரசன்னம் …
-
- 0 replies
- 654 views
-
-
யுத்த வெற்றியின் முதலாம் ஆண்டு விழா மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு தற்போதுகாணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடவிருந்த யுத்த வெற்றி விழா மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அதன் முதலாவது ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன. இந்தக் கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு, காலி முகத்திடலில் நடத்த ஏற்பாடாகியிருந்தது. இருப்பினும் தற்போது நிலவி வரும் காலநிலை காரண…
-
- 0 replies
- 1.1k views
-
-
யுத்தத்தினால் வன்னிக்கிராமங்களிலிருந்து இடம்பெயரந்து தற்சமயம் வவுனியா நகரில் முகாம்களிலும் வெளியேயும் தங்கியிருந்து வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் உடல்அவயவங்களை இழந்து மிகவும் வறுமை நிலையில் கல்வியை தொடரும் 84 மாணவர்களிற்கான அடிப்படை தேவை மற்றும் கல்வி உதவி கோரப்படுகின்றது ஒரு மாணவன் அல்லது மாணவிக்கான உதவி படசாலை உபகரணங்கள் 500 ரூபாய் போக்குவரத்து 100 ரூபாய் உடை மற்றும் உள்ளாடைகள் 2400 ரூபாய் மொத்தம் 3000 ரூபாய் ஆரம்பகட்ட உதவிகள் 84 மாணவ மாணவியரிற்குமான மொத்ததொகை 252000.00 ரூபாய் உதவ விரும்புவர்கள் நேசக்கரத்துடன் மின்னஞ்சல் ம…
-
- 5 replies
- 943 views
-
-
நாளை மாலை நான்கு மணிக்கு இலண்டனில்முள்ளிவாய்க்கால் நிகழ்வு -தமிழர் பேரவை * முக்கிய-செய்தி * புலம்-பெயர் * இணைய-பதிப்பு இலண்டன் நிருபர் திங்கட்கிழமை, மே 17, 2010 இலண்டன் மாநகரில் நாளை மாலை நான்கு மணி தொடக்கம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதலாண்டு நினைவு கூரல் இடம்பெறும். அனைத்து மக்களையும் கறுப்பு அடையணிந்து தவறாது நிகழ்வில் பங்குபற்றுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது. கூடவே வரும் போது உங்கள் நண்பர்கள், உங்களுக்கு தெரிந்த பிற இனத்தவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து வருமாறும் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. நிகழ்வு இடம்பெறும் இடமும் நேரமும். 18 May - Mullivaikal Remembrance Day - London Wa…
-
- 1 reply
- 755 views
-
-
எதிர்வரும் 20 ஆம் திகதி கிளிநொச்சி பாடசாலை மாணவர்களை இராணுவத்தினரின் பாதங்களில் மலர்தூவி வணங்குமாறு உத்தரவு! சிறிலங்காவில் போர்வெற்றி தினமாக அறிவிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 20 ஆம் திகதியன்று ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வெற்றித்தூபிக்கு அருகில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் வன்னிப்பகுதி பாடசாலைகள் ஒவ்வொன்றிலுமிருந்து தலா 20 மாணவர்கள் கலந்துகொண்டு இராணுத்தினரின் பாதங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தவேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தின் வன்னி கட்டளை தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது:- சிறிலங்காவெங்கும் போர் வெற்றிவிழா கொண்டாட்டங்களுக்கான நாளாக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 20 ஆம் திகதி அன்று ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள தூ…
-
- 2 replies
- 751 views
-
-
திங்கட்கிழமை, 17, மே 2010 (11:44 IST) மீண்டும் பிறப்பெடுப்போம்! விடுதலைப்புலிகள் அறிக்கை! எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. இருப்பினும், இவ்வலிகளினால் சோர்ந்து விடாது மீண்டும் பிறப்பெடுப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை என்ற பெயரில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, எமது உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே! எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. எமது மக்கள் இன்னமும் அந்தக் கொடூர வலிகளிலிருந்து விடுபடாதநிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக…
-
- 0 replies
- 1.7k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசும், இரா. துரைரத்தினமும்! ஒற்றுமை குறித்து காகங்கள் பேசலாம், ஓநாய்கள் பேசலாமா?-ஈழநாடு முள்ளிவாய்க்கால் வரை முழங்கி நீட்டினார்கள். முடிவுக்கு வந்ததும் முடங்கிப்போய் இருந்தார்கள். கூட்டமைப்புத் தேர்தல் வந்ததும் குதித்து எழுந்தார்கள். இப்போது அவர்களுக்கு இரை போடுவது நாடு கடந்த தமிழீழ அரசு என்ற யுத்த களம். இலங்கைத் தமிழ் ஊதிய ஊடகவியலாளர்களின் இன்றைய நிலவரம் இதுதான். சிங்கள தேசத்தின் இருதுருவக் கோட்பாட்டுக்குள் விலை போயுள்ள எத்தனையோ மனிதப் பிறவிகள் இப்போது எம் மத்தியில் தத்துவம் பேசிக்கொண்டு வருகின்றார்கள். பாவம், அவர்கள் கூறி விற்க முணலும் சிங்கள யுக்திகளை புலம்பெயர் தமிழர்கள் கொள்வதற்கு முன் வருகின்றார்கள் இல்லை. சிங்கள தேசம் அறிவித்தது போலவே,…
-
- 6 replies
- 1.3k views
-
-
அனைத்து யாழ் கள கனடா உறவுகளும் இந்த நிகழ்வுக்கு கண்டிப்பாக குடும்பத்துடன் வாருங்கள். உங்களுக்கு தெரிந்த அனைவரையும் கூட்டிவாருங்கள், அது வேற்று இனத்தவராயினும் சரி. வேலை நாளென்றாலும் மாலையில் வைப்பதால் வேலையைக் காரணம் காட்டி வராமல் விட வேண்டாம். Shift முறையில் வேலை என்றால் முன்னனுமதி பெற்று நேரத்தை மாற்ற முயலுங்கள்.
-
- 4 replies
- 1.5k views
-
-
தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? கட்டுரைத் தொடர் - 17 (தாமரை காருண்யன்) இவ் வாரம் நம்மை எல்லாம் நிலைகுலைய வைத்து பெருவலி தந்த நிகழ்வுகள் நடந்தேறிய வாரம். நாம் கற்பனையில் என்றுமே எண்ணியிருக்காத பேரவலம் தொடர்ச்சியாக நடந்தேறி நமது நெஞ்சையெல்லாம் கசக்கிப் பிழிந்து, நம்மை அழுது குழற வைத்து ஆற்றுவாரின்றி அந்தரிக்க வைத்த இறுதி நாட்களின் ஓராண்டுப் பூர்த்திக் காலம். முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த நமது விடுதலை இயக்கத்தின் அனைத்துச் சுவடுகளும் சிங்கள இனவாதப்பூதத்தால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சிங்களம் ஈழத்தமிழர் தாயகத்தின்மீது வெற்றிக்கொடி நாட்டிய காலத்தின் ஓராண்டு நினைவு வாரம். முள்ளிவாய்க்கால் தற்போது ஒரு ஊரின் பெயர் அல்ல. …
-
- 2 replies
- 2.6k views
-
-
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள குமரப்பா புலெந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபிகளும் இடித்தழிப்பு‐ ஜீரிஎன் செய்தியாளர்‐ 16 May 10 02:10 pm (BST) வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதிகளான குமரப்பா புலெந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபிகள் படையினரால் இன்றிரவு இடித்தழிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதேபகுதியில் அமைந்துள்ள கேணல் கிட்டு உள்ளிட்ட போராளிகளின் நினைவுத்தூபிகளும்; இடித்தழிக்கப்பட்டுள்ளன. வல்வெட்டித்துறையில் முன்னதாக பிரபாகரனின் வாசஸ்தலம் இடிக்கப்பட்டது. பின்னதாக எல்லம் குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லமும் இடிக்கப்பட்டு இருந்…
-
- 9 replies
- 1.3k views
-
-
தேர்தல் வாக்குறுதிகளை கைவிட சிறீலங்கா முடிவு திகதி: 16.05.2010 // தமிழீழம் சிறீலங்கா அரசு தேர்தல் பரப்புரைகளுக்காக தெரிவித்த ஊதிய அதிகரிப்பு என்ற கவர்ச்சியான விளம்பரத்தை கைவிடுவதற்கு அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் அரச தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டது போன்று 2,500 ரூபாய் ஊதிய அதிகரிப்புக்களை அரச ஊழியர்களுக்கு வழங்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது. அதனை எதிவரும் ஜுன் 29 ஆம் நாள் சமர்ப்பிக்க உள்ள குறுகிய வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்போவதில்லை என நிதி அமைச்சக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த ஊதிய உயர்வை வழங்குவதற்கு 1.5 பில்லியன் ரூபாய்கள் தேவைப்படும் ஆனால் ஏற்கனவே வரவு செலவு…
-
- 6 replies
- 947 views
-
-
சிறீலங்கா சிங்களப் பேரினவாத ஆளும் வர்க்கத்திற்கு இதுகாள் வரை புலி எதிர்ப்பு என்பதன் பெயரால் சேவகம் புரிந்து வந்த, வந்து கொண்டிருக்கும்.. ஈபிடிபி எனும் தமிழ் ஆயுதக் கும்பலின் யாழ்ப்பாண மாநகர சபை துணை மேஜர் என்று சொல்லப்படும் இளங்கோ அல்லது ரேகன் என்பவரை சாவகச்சேரி நீதிமன்ற நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்து சிறையில் போட்டுள்ளனர். அண்மைக்காலமாக ஈபிடிபி ஆயுதக் கும்பல் மீது சிறீலங்கா படையினர் கடுமையாக நடந்து கொள்வது போல் நடித்துக் கொண்டு பின்னர் அவர்களைக் கொண்டும் தமது சிங்களக் காடைகள் அடங்கிய புலனாய்வுத்துறையைக் கொண்டும் மக்கள் விரோத செயல்களை ஊக்குவித்து வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ----------- EPDP Jaffna Deputy Mayor place…
-
- 29 replies
- 2.5k views
-
-
செவ்வணக்கம் மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே! இடைவழிச் சமரசங்களைத் தோற்கடிப்போம்! ஈழம்காண இறுதிவரை ஊற்றெடுப்போம்!! அன்பார்ந்த தமிழீழ மக்களே,மாணவர்களே, இளைஞர்களே, முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தில், நடந்த வீரப் போர்களில், அவை வேண்டிய தியாக வேள்வியில், எதிரிகளைப் படிப்படியாகத் தோற்கடித்து நாம் ஓர் அரசை உருவாக்கியிருந்தோம். மே 18 2009, பிரபாகரன் கட்டியெழுப்பிய அந்த சுதந்திர தமிழீழ அரசு, எதிரிகளிடம் சரணடையாமல், சண்டையிட்டு சரிந்து சாவைத் தழுவிக் கொண்ட சரித்திர நாளாகும். இதனால் தமிழீழ தேசமும்- போராடும் உலகமும் அதிர்ச்சிக்குள்ளான நாளாகும். ‘’புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’ என முழங்கி அடிமைப்பட்டுக் கிடந்த ஈழத் தமிழினத்தை தூக்கி நிறுத்த முப்பது…
-
- 7 replies
- 1.7k views
-
-
முத்துக்குமார் சிலை திறப்பு விழாவிற்கு போலீஸ் அனுமதி மறுப்பு முத்துக்குமார் சிலை திறப்பு விழாவிற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. பொதுக்கூட்டம் மட்டும் போட்டுக்கொள்ளலாம். ஆனால் மேடையில் முத்துக்குமார் சிலையை வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஈழத்தமிழருக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாருக்கு முதன் முதலில் தஞ்சை மாவட்டத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நான்கு சாலை பிரிவில் புலவர் ரத்தினவேலு முத்துக்குமாருக்கு சிலை அமைக்க இடம் கொடுத்தார். இளந்தமிழர் இயக்கத்தினர் தானமாக பெற்ற இந்த இடத்தில் முத்துக்குமாருக்கு சிலை அமைக்கும் பணியை மேற்கொண்டு முடித்துள்ளது. இன்று (மே-16) இளந்தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பொதுவுடமை கட்ச…
-
- 0 replies
- 700 views
-
-
தமிழ் மக்கள் தங்கள் சொந்த பந்தங்களை இழந்து, சொத்து சுகங்களை இழந்து அகதிகள் முகாம்களிலும் வதை முகாம்களிலும் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல. தமிழ் மக்களின் துன்பத்தை, துயரத்தை போக்க குறிப்பிட்டு சொல்லக்கூடிய எந்த ஒரு முயற்சியும் இலங்கை ஆட்சியாளர்களால் இதுவரை எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் இளம் யுவதிகளையும் இளைஞர்களையும் கடத்துதல், கற்பழித்தல் தடுத்து வைத்தல் படுகொலை செய்தல் போன்ற மனித குலம் ஜீரணிக்க முடியாத கொடுமைகளை மென்மேலும் ராஜபக்ஷே குடும்பத்தினர் தலைமயிலான இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. எம்மைப் போன்றே தமிழ் மக்களும் இறைமை மிக்க தேசிய இனம். அவர்கள் விரும்புவது சுய உரிமையுடன் கூடிய வன்முறையற்ற அ…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
விழலுக்கிறைத்த நீராகுமா? [ உதயன் ] - [ May 16, 2010 04:00 GMT ] யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பகுதியில் புனர் வாழ்வு, மீள்கட்டுமானப் பணிகளுக்காக இலங்கைக்கு இந்தியா தெடர்ந்து நிதி உதவி வழங்கும் என்று இந் திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தெரி வித்துள்ளார். 2009 மே 18இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்த பின்பு, இலங்கைக்கு இந்தியா குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடபகுதியின் புனர்வாழ்வு, மீள் கட்டுமானப் பணி களுக்கு உதவி செய்து வருகிறது. இவற்றுள் கடந்த வருடம் பிரதமர் மன்மோகன் சிங்கினால் அறிவிக் கப்பட்ட 500கோடி ரூபா உதவி, வடபகுதிக்கான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்கவும் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்குமான 41 கோடியே 60 லட்ச…
-
- 0 replies
- 758 views
-
-
இலங்கை அரசுக்கு புரிந்தது, ஏன் எம்மவர்க்கு புரியல??? Title : Tamil Elamists Plot to Get UN Recognition Either as a UN Non-Member State or as a UN Observer - "All these moves pose a mortal danger to the territorial integrity and sovereignty of Sri Lanka." - "Having the TGTE recognized as a non-member-state of the UN is still difficult although they are likely to make a push for that. In doing so, they will tap into legal concepts accepted by the UN including the right of a group of people to self determination. Once becoming a non-member-state recognized in the UN, it is up to the TGTE to proceed to become a full fledged member." - "The minim…
-
- 6 replies
- 1.3k views
-
-
வன்னி தோல்வியுறு காவியத்திற்கான மிக முக்கியமான முன்னுரை தானா விஷ்ணு மூன்று நகரங்களின் வெற்றிகளாலும், ஒரு நகரின் தோல்வியாலும் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான கோட்டையே வன்னி. வன்னியென்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. தமிழர்களின் இத்தனை வரலாற்றுக் காலங்களில் மிக முக்கியமான படையெடுப்புக்களைக் கண்டும், மண்டியிடாப் பூமி என அழைக்கப்பட்டிருந்தது. அதுவும் வரலாற்றில் இரண்டுமுறை வீழ்ச்சியுற்றது. ஒன்று, பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டாவது, பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டு வீழ்ச்சிகளுமே தமிழ் மக்களின் வீழ்ச்சியாகக் கொள்ளப்பட வேண்டியதாகிப் போயிற்று. யாழ்ப்பாணம் அரசப் படைகளிடம் வீழ்ச்சியுற்றதும்,1 விடுதலைப்புலிகள் தமது நிர்வாக நாடாக வன்னி…
-
- 22 replies
- 2.1k views
-
-
தியத்தலாவ சிங்கள இராணுவ முகாமிற்கு அருகே இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கபட்டுள்ளது. இது வரை உரிமை கொரப்படாத இந்த சடலம் பொலிசாரினால் பொறுப்பெடுத்து செல்லபட்டுள்ளது. ஏற்கனவே இந்த முகாம் அருகே பல சடலங்கள் கடந்த ஓராண்டில் கண்டெடுக்கப்பட்டு அரச செலவில் தகனம் செய்யப்பட்டுள்ளன. தியத்தலாவ இராணுவ முகாமிலேயே முக்கிய விடுதலைப்புலி உறுப்பினர்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. www.eelanatham.net
-
- 0 replies
- 621 views
-
-
யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதியில் பாடசாலை மாணவிகள் இருவரைக் கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் தொடர்புடைய வாகனம் வவுனியாவில் கைப்பற்றப்பட்டுள்ளது. அண்மையில் சுண்ணாகம் கந்தரோடைப் பகுதியில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகள் இருவரை வெள்ளை வானில் வந்தோர் கடத்த முற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவத்தில் தப்பித்த மாணவிகள் இருவரும் அருகிலுள்ள சட்டத்தரணி ஒருவருக்குத் தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்து குறித்த வாகனத்தில் இலக்கங்கள் கண்டறியப்பட்டு சுண்ணாகம் காவற்துறையினருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து காவற்துறையினர் மேற்கொண்ட தொடர்விசாரணைகளின் பிரகாரம் வவுனியாப் பகுதியில் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்…
-
- 4 replies
- 827 views
-
-
இதய பூமியான கொக்கிலாய் பகுதியில் அமைந்துள்ள சரணாலய பகுதியில் 1000 ஏக்கர் காணி சிங்கள அரசினால் அழிக்கப்பட்டு வருகின்ரன. கனரக இயந்திரங்கள் கொண்டு அழிக்கப்படும் இந்த 1000 ஏக்கர் காணியிலும் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காகவே என கூறப்படுகின்றது. இந்த காணி 1950 ஆம் ஆண்டு சட்ட மூலத்தால் வரையறுக்கப்பட்ட சரணாலயத்திற்கு சொந்தமானது எனினும் எதேச்சாதிகாரமாக காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன இவ்வாறு சூழலியலாளர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். www.eelanatham.net
-
- 0 replies
- 601 views
-
-
மே 18 நாடு கடங்த தமிழீழ அரசின் முதல் அமர்வு அமெரிக்காவில் நமைடபெறும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள சிங்கள அரசு நாடு கடங்த தமிழீழ அரசுக்கான முதலாவது கூட்ட அமர்வு எதிர்வரும் மே 18ம் திகதி அமெரிக்கமாநிலமான வென் சுவேனியாவிலுள்ள டுசில்டொப்பியா சகரத்தில் நடைபெற உள்ளது கடந்த மே 2ம் திகதி தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் அங்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது அமெரிக்கநாடு சுதந்திரத்துக்கான போராட்டத்தை நடத்தியபோது அதன் பிரகடனம் இந்த டுசில் டொப்பியா மாநிலத்திலேயே நடைபெற்றது அத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க மாநகரில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழினத்தின் பிரதிநிதிகள்புதிய வரலாறு ஒன்றினைப்படைக்கப் போகிறார்கள் கடந்த மே 18:2009 முள்ளிவாய்க்காலுடன்ஈpத்தமிழினத்தின்…
-
- 11 replies
- 2.3k views
-
-
யாழ்க்குடாநாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள குழுச் சண்டைகள் ராணுவ காவற்துறை பாதுகாப்பு வழங்கும் கட்டத்தை அது எய்தியிருக்கின்றது. வடமராட்சியின் கரவெட்டி, அல்வாய், மற்றும் நாவலடிப்பகுதியில் கடந்த 4 தினங்களாக இடம்பெற்று வருகின்ற கிராம மோதல்களை அடுத்து அப்பகுதியில் ராணுவத்தினரும் காவற்துறையினரும் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட இரு கிராமக் குழுக்களுக்கிடையே 4ம் நாளாக இன்று ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக 10 வயதுடைய காசிப்பிள்ளை ஜென்சி மற்றும் 30 வயதுடைய ஆறுமுகம் ஜெயரஞ்சனி எனும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 தினங்களாக இரு தரப்புகளும் மாறி மாறி ஆட்களை வெட்டுவதும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில…
-
- 5 replies
- 1.1k views
-