ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143227 topics in this forum
-
அனைத்து யாழ் கள கனடா உறவுகளும் இந்த நிகழ்வுக்கு கண்டிப்பாக குடும்பத்துடன் வாருங்கள். உங்களுக்கு தெரிந்த அனைவரையும் கூட்டிவாருங்கள், அது வேற்று இனத்தவராயினும் சரி. வேலை நாளென்றாலும் மாலையில் வைப்பதால் வேலையைக் காரணம் காட்டி வராமல் விட வேண்டாம். Shift முறையில் வேலை என்றால் முன்னனுமதி பெற்று நேரத்தை மாற்ற முயலுங்கள்.
-
- 4 replies
- 1.5k views
-
-
தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? கட்டுரைத் தொடர் - 17 (தாமரை காருண்யன்) இவ் வாரம் நம்மை எல்லாம் நிலைகுலைய வைத்து பெருவலி தந்த நிகழ்வுகள் நடந்தேறிய வாரம். நாம் கற்பனையில் என்றுமே எண்ணியிருக்காத பேரவலம் தொடர்ச்சியாக நடந்தேறி நமது நெஞ்சையெல்லாம் கசக்கிப் பிழிந்து, நம்மை அழுது குழற வைத்து ஆற்றுவாரின்றி அந்தரிக்க வைத்த இறுதி நாட்களின் ஓராண்டுப் பூர்த்திக் காலம். முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த நமது விடுதலை இயக்கத்தின் அனைத்துச் சுவடுகளும் சிங்கள இனவாதப்பூதத்தால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சிங்களம் ஈழத்தமிழர் தாயகத்தின்மீது வெற்றிக்கொடி நாட்டிய காலத்தின் ஓராண்டு நினைவு வாரம். முள்ளிவாய்க்கால் தற்போது ஒரு ஊரின் பெயர் அல்ல. …
-
- 2 replies
- 2.6k views
-
-
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள குமரப்பா புலெந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபிகளும் இடித்தழிப்பு‐ ஜீரிஎன் செய்தியாளர்‐ 16 May 10 02:10 pm (BST) வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதிகளான குமரப்பா புலெந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபிகள் படையினரால் இன்றிரவு இடித்தழிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதேபகுதியில் அமைந்துள்ள கேணல் கிட்டு உள்ளிட்ட போராளிகளின் நினைவுத்தூபிகளும்; இடித்தழிக்கப்பட்டுள்ளன. வல்வெட்டித்துறையில் முன்னதாக பிரபாகரனின் வாசஸ்தலம் இடிக்கப்பட்டது. பின்னதாக எல்லம் குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லமும் இடிக்கப்பட்டு இருந்…
-
- 9 replies
- 1.3k views
-
-
தேர்தல் வாக்குறுதிகளை கைவிட சிறீலங்கா முடிவு திகதி: 16.05.2010 // தமிழீழம் சிறீலங்கா அரசு தேர்தல் பரப்புரைகளுக்காக தெரிவித்த ஊதிய அதிகரிப்பு என்ற கவர்ச்சியான விளம்பரத்தை கைவிடுவதற்கு அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் அரச தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டது போன்று 2,500 ரூபாய் ஊதிய அதிகரிப்புக்களை அரச ஊழியர்களுக்கு வழங்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது. அதனை எதிவரும் ஜுன் 29 ஆம் நாள் சமர்ப்பிக்க உள்ள குறுகிய வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்போவதில்லை என நிதி அமைச்சக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த ஊதிய உயர்வை வழங்குவதற்கு 1.5 பில்லியன் ரூபாய்கள் தேவைப்படும் ஆனால் ஏற்கனவே வரவு செலவு…
-
- 6 replies
- 948 views
-
-
சிறீலங்கா சிங்களப் பேரினவாத ஆளும் வர்க்கத்திற்கு இதுகாள் வரை புலி எதிர்ப்பு என்பதன் பெயரால் சேவகம் புரிந்து வந்த, வந்து கொண்டிருக்கும்.. ஈபிடிபி எனும் தமிழ் ஆயுதக் கும்பலின் யாழ்ப்பாண மாநகர சபை துணை மேஜர் என்று சொல்லப்படும் இளங்கோ அல்லது ரேகன் என்பவரை சாவகச்சேரி நீதிமன்ற நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்து சிறையில் போட்டுள்ளனர். அண்மைக்காலமாக ஈபிடிபி ஆயுதக் கும்பல் மீது சிறீலங்கா படையினர் கடுமையாக நடந்து கொள்வது போல் நடித்துக் கொண்டு பின்னர் அவர்களைக் கொண்டும் தமது சிங்களக் காடைகள் அடங்கிய புலனாய்வுத்துறையைக் கொண்டும் மக்கள் விரோத செயல்களை ஊக்குவித்து வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ----------- EPDP Jaffna Deputy Mayor place…
-
- 29 replies
- 2.5k views
-
-
செவ்வணக்கம் மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே! இடைவழிச் சமரசங்களைத் தோற்கடிப்போம்! ஈழம்காண இறுதிவரை ஊற்றெடுப்போம்!! அன்பார்ந்த தமிழீழ மக்களே,மாணவர்களே, இளைஞர்களே, முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தில், நடந்த வீரப் போர்களில், அவை வேண்டிய தியாக வேள்வியில், எதிரிகளைப் படிப்படியாகத் தோற்கடித்து நாம் ஓர் அரசை உருவாக்கியிருந்தோம். மே 18 2009, பிரபாகரன் கட்டியெழுப்பிய அந்த சுதந்திர தமிழீழ அரசு, எதிரிகளிடம் சரணடையாமல், சண்டையிட்டு சரிந்து சாவைத் தழுவிக் கொண்ட சரித்திர நாளாகும். இதனால் தமிழீழ தேசமும்- போராடும் உலகமும் அதிர்ச்சிக்குள்ளான நாளாகும். ‘’புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’ என முழங்கி அடிமைப்பட்டுக் கிடந்த ஈழத் தமிழினத்தை தூக்கி நிறுத்த முப்பது…
-
- 7 replies
- 1.7k views
-
-
முத்துக்குமார் சிலை திறப்பு விழாவிற்கு போலீஸ் அனுமதி மறுப்பு முத்துக்குமார் சிலை திறப்பு விழாவிற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. பொதுக்கூட்டம் மட்டும் போட்டுக்கொள்ளலாம். ஆனால் மேடையில் முத்துக்குமார் சிலையை வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஈழத்தமிழருக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாருக்கு முதன் முதலில் தஞ்சை மாவட்டத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நான்கு சாலை பிரிவில் புலவர் ரத்தினவேலு முத்துக்குமாருக்கு சிலை அமைக்க இடம் கொடுத்தார். இளந்தமிழர் இயக்கத்தினர் தானமாக பெற்ற இந்த இடத்தில் முத்துக்குமாருக்கு சிலை அமைக்கும் பணியை மேற்கொண்டு முடித்துள்ளது. இன்று (மே-16) இளந்தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பொதுவுடமை கட்ச…
-
- 0 replies
- 702 views
-
-
தமிழ் மக்கள் தங்கள் சொந்த பந்தங்களை இழந்து, சொத்து சுகங்களை இழந்து அகதிகள் முகாம்களிலும் வதை முகாம்களிலும் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல. தமிழ் மக்களின் துன்பத்தை, துயரத்தை போக்க குறிப்பிட்டு சொல்லக்கூடிய எந்த ஒரு முயற்சியும் இலங்கை ஆட்சியாளர்களால் இதுவரை எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் இளம் யுவதிகளையும் இளைஞர்களையும் கடத்துதல், கற்பழித்தல் தடுத்து வைத்தல் படுகொலை செய்தல் போன்ற மனித குலம் ஜீரணிக்க முடியாத கொடுமைகளை மென்மேலும் ராஜபக்ஷே குடும்பத்தினர் தலைமயிலான இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. எம்மைப் போன்றே தமிழ் மக்களும் இறைமை மிக்க தேசிய இனம். அவர்கள் விரும்புவது சுய உரிமையுடன் கூடிய வன்முறையற்ற அ…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
விழலுக்கிறைத்த நீராகுமா? [ உதயன் ] - [ May 16, 2010 04:00 GMT ] யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பகுதியில் புனர் வாழ்வு, மீள்கட்டுமானப் பணிகளுக்காக இலங்கைக்கு இந்தியா தெடர்ந்து நிதி உதவி வழங்கும் என்று இந் திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தெரி வித்துள்ளார். 2009 மே 18இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்த பின்பு, இலங்கைக்கு இந்தியா குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடபகுதியின் புனர்வாழ்வு, மீள் கட்டுமானப் பணி களுக்கு உதவி செய்து வருகிறது. இவற்றுள் கடந்த வருடம் பிரதமர் மன்மோகன் சிங்கினால் அறிவிக் கப்பட்ட 500கோடி ரூபா உதவி, வடபகுதிக்கான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்கவும் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்குமான 41 கோடியே 60 லட்ச…
-
- 0 replies
- 759 views
-
-
இலங்கை அரசுக்கு புரிந்தது, ஏன் எம்மவர்க்கு புரியல??? Title : Tamil Elamists Plot to Get UN Recognition Either as a UN Non-Member State or as a UN Observer - "All these moves pose a mortal danger to the territorial integrity and sovereignty of Sri Lanka." - "Having the TGTE recognized as a non-member-state of the UN is still difficult although they are likely to make a push for that. In doing so, they will tap into legal concepts accepted by the UN including the right of a group of people to self determination. Once becoming a non-member-state recognized in the UN, it is up to the TGTE to proceed to become a full fledged member." - "The minim…
-
- 6 replies
- 1.3k views
-
-
வன்னி தோல்வியுறு காவியத்திற்கான மிக முக்கியமான முன்னுரை தானா விஷ்ணு மூன்று நகரங்களின் வெற்றிகளாலும், ஒரு நகரின் தோல்வியாலும் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான கோட்டையே வன்னி. வன்னியென்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. தமிழர்களின் இத்தனை வரலாற்றுக் காலங்களில் மிக முக்கியமான படையெடுப்புக்களைக் கண்டும், மண்டியிடாப் பூமி என அழைக்கப்பட்டிருந்தது. அதுவும் வரலாற்றில் இரண்டுமுறை வீழ்ச்சியுற்றது. ஒன்று, பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டாவது, பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டு வீழ்ச்சிகளுமே தமிழ் மக்களின் வீழ்ச்சியாகக் கொள்ளப்பட வேண்டியதாகிப் போயிற்று. யாழ்ப்பாணம் அரசப் படைகளிடம் வீழ்ச்சியுற்றதும்,1 விடுதலைப்புலிகள் தமது நிர்வாக நாடாக வன்னி…
-
- 22 replies
- 2.1k views
-
-
தியத்தலாவ சிங்கள இராணுவ முகாமிற்கு அருகே இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கபட்டுள்ளது. இது வரை உரிமை கொரப்படாத இந்த சடலம் பொலிசாரினால் பொறுப்பெடுத்து செல்லபட்டுள்ளது. ஏற்கனவே இந்த முகாம் அருகே பல சடலங்கள் கடந்த ஓராண்டில் கண்டெடுக்கப்பட்டு அரச செலவில் தகனம் செய்யப்பட்டுள்ளன. தியத்தலாவ இராணுவ முகாமிலேயே முக்கிய விடுதலைப்புலி உறுப்பினர்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. www.eelanatham.net
-
- 0 replies
- 623 views
-
-
யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதியில் பாடசாலை மாணவிகள் இருவரைக் கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் தொடர்புடைய வாகனம் வவுனியாவில் கைப்பற்றப்பட்டுள்ளது. அண்மையில் சுண்ணாகம் கந்தரோடைப் பகுதியில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகள் இருவரை வெள்ளை வானில் வந்தோர் கடத்த முற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவத்தில் தப்பித்த மாணவிகள் இருவரும் அருகிலுள்ள சட்டத்தரணி ஒருவருக்குத் தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்து குறித்த வாகனத்தில் இலக்கங்கள் கண்டறியப்பட்டு சுண்ணாகம் காவற்துறையினருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து காவற்துறையினர் மேற்கொண்ட தொடர்விசாரணைகளின் பிரகாரம் வவுனியாப் பகுதியில் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்…
-
- 4 replies
- 828 views
-
-
இதய பூமியான கொக்கிலாய் பகுதியில் அமைந்துள்ள சரணாலய பகுதியில் 1000 ஏக்கர் காணி சிங்கள அரசினால் அழிக்கப்பட்டு வருகின்ரன. கனரக இயந்திரங்கள் கொண்டு அழிக்கப்படும் இந்த 1000 ஏக்கர் காணியிலும் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காகவே என கூறப்படுகின்றது. இந்த காணி 1950 ஆம் ஆண்டு சட்ட மூலத்தால் வரையறுக்கப்பட்ட சரணாலயத்திற்கு சொந்தமானது எனினும் எதேச்சாதிகாரமாக காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன இவ்வாறு சூழலியலாளர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். www.eelanatham.net
-
- 0 replies
- 602 views
-
-
மே 18 நாடு கடங்த தமிழீழ அரசின் முதல் அமர்வு அமெரிக்காவில் நமைடபெறும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள சிங்கள அரசு நாடு கடங்த தமிழீழ அரசுக்கான முதலாவது கூட்ட அமர்வு எதிர்வரும் மே 18ம் திகதி அமெரிக்கமாநிலமான வென் சுவேனியாவிலுள்ள டுசில்டொப்பியா சகரத்தில் நடைபெற உள்ளது கடந்த மே 2ம் திகதி தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் அங்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது அமெரிக்கநாடு சுதந்திரத்துக்கான போராட்டத்தை நடத்தியபோது அதன் பிரகடனம் இந்த டுசில் டொப்பியா மாநிலத்திலேயே நடைபெற்றது அத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க மாநகரில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழினத்தின் பிரதிநிதிகள்புதிய வரலாறு ஒன்றினைப்படைக்கப் போகிறார்கள் கடந்த மே 18:2009 முள்ளிவாய்க்காலுடன்ஈpத்தமிழினத்தின்…
-
- 11 replies
- 2.3k views
-
-
யாழ்க்குடாநாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள குழுச் சண்டைகள் ராணுவ காவற்துறை பாதுகாப்பு வழங்கும் கட்டத்தை அது எய்தியிருக்கின்றது. வடமராட்சியின் கரவெட்டி, அல்வாய், மற்றும் நாவலடிப்பகுதியில் கடந்த 4 தினங்களாக இடம்பெற்று வருகின்ற கிராம மோதல்களை அடுத்து அப்பகுதியில் ராணுவத்தினரும் காவற்துறையினரும் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட இரு கிராமக் குழுக்களுக்கிடையே 4ம் நாளாக இன்று ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக 10 வயதுடைய காசிப்பிள்ளை ஜென்சி மற்றும் 30 வயதுடைய ஆறுமுகம் ஜெயரஞ்சனி எனும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 தினங்களாக இரு தரப்புகளும் மாறி மாறி ஆட்களை வெட்டுவதும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில…
-
- 5 replies
- 1.1k views
-
-
கருப்பினத்தினர் பெப்ரவரி மாதத்தைக் கருப்பு மாதமாக அனுஷ்டிக்கின்றார்கள். அதைப்போலவே மே மாதம் தமிழரின் சோகம் நிறைந்த கருப்பு மாதமாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்படுகின்றது. 1983-ஆம் ஆண்டு ஜூலை 23 தொடக்கம் 30 வரை நடைபெற்ற ஈழத்தமிழருக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000 தமிழர் படுகொலை செய்யப்பட்டு முப்பது கோடி டாலர்கள் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சூறையாடப்பட்டது. பல இலட்சம் தமிழர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பாதுகாப்புக்காக சென்றனர். இந்த ஜூலை கலவரத்தை இதுநாள் வரை கருப்பு மாதமாக கருதப்பட்டது. ஆனால் மே 2009 நடைபெற்ற நிகழ்வு உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத சோக நிகழ்வாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வானது வார்த்தைகளால் வர்ணிக…
-
- 0 replies
- 452 views
-
-
பார்வதி அம்மாள் தமிழத்தில் சிகிச்சையளிக்க அனுமதித்த கலைஞருக்கு நன்றியாம் - சுப.வீ சுரரொட்டி அடித்து விளம்பரம் செய்கிறார் சுரொட்டி சில நாட்களுக்கு முன் அடித்து ஒட்டிப்பட்டது எனினும், தமிழர்களின் பார்வைக்கு வைக்கப்படவேண்டிய ஒன்று. சுப.வீயை நாம் மிகவும் மதித்தோம். அவர் தூய தமிழர் என்பதால். ஆனால், கலைஞருக்கு இப்படியெல்லாம் ஜால்ரா அடித்து காகா பிடிக்க, சுவரொட்டி ஒட்டி கேவலமான முறையில் ஒரு தாயாரின் மருத்துவ சிகிச்சையை நடத்த கூட இப்படி நடந்து கொள்வதை பார்க்கும் போது.... இவரும் கேடு கெட்ட அரசியல் சகதிக்குள் சீக்கி விட்டார் போலும். அடுத்த சட்டமன்ற தேர்தலிலோ அல்லது புதிதாய் வருகின்ற மேலவையிலோ ஒரு சீட்டுக்காக இப்படி நடப்பது இவர் மீது வைத்திருந்த, மரியாதை சுத்தமாய் போ…
-
- 2 replies
- 1.2k views
-
-
வடமராட்சி துன்னாலைப்பகுதியில் இன்று காலை காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் மாலை வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்‐GTN செய்தியாளர்‐ 15 May 10 07:10 pm (BST) வடமராட்சி துன்னாலைப்பகுதியில் இன்று காலை காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் மாலை வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 44 வயதான 5 பிள்ளைகளின் தந்தையான நல்லையா பாஸ்கரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீடகப்பட்டுள்ளார். புன்னாலை வேம்படியில் தனது உறவினர் ஒருவரின் மரண வீட்டிற்குச் சென்றிருந்த இவர் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ஆட்களற்ற மயானம் ஒன்றில் நிர்வாண முறையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கை கால்கள் கட்டுப்பட்டு உடைகள் களையப்பட்டு நிர்வாணமான நிலையில்…
-
- 8 replies
- 1k views
-
-
பிரகீத் கடத்தப்பட்டது ஏன்? கொழும்பில் கடத்தப்படட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டனவா? லங்கா.ஈ நியூஸ் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார் ‐ தொகுப்பு – விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்‐ 15 May 10 06:58 pm (BST) பிரகீத் எக்னலியகொட லங்கா ஈ நியூஸ்இன் அரசியல் பத்தியாளராக இருந்தார். அத்தோடு கடந்த இரண்டு வருடங்களாக அவர் கேலிச்சித்திரங்கள் வரைவதிலும் ஈடுபட்டிருந்தார். இன்றோடு அவர் காணாமல் போய் 106 நாட்களாகி விட்டன. அவர் காணாமல் போனதிலிருந்து அவருடைய நண்பர்கள் அவரைத் தொடர்ந்தும் தேடி வருகிறார்கள். இதேவேளை ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்ரர் ஐவன் பிரகீத்இன் பெயருக்கு இழுக்கு ஏற்படும் வகையில் அவர் காணாமல் போனது பற்றி தனது கற்பனைகளை அண…
-
- 2 replies
- 963 views
-
-
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை வேதனையோடு நினைவுப்படுத்தும் விதத்தில் எதிர் வரும் 17, 18 ஆம் திகதிகளில் தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் கறுப்பு சின்னம் அணிய வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 பேர் கையொப்பம் இட்டு வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் இயக்குணர்கள்; மகேந்திரன், பாலுமகேந்திரா, ஆர்.சி. சக்தி, மணிவண்ணன், காந்திய சிந்தனையாளர் தமிழருவி மணியன், கவிஞர்கள் புலமைப்பித்தன், காசி ஆனந்தன், தாமரை, எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பா. செய் பிரகாசம், மூத்த மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம், ஓவியர்கள் மணியம் செல்வன், மாருதி, அரஸ், நடிகர்கள் நாசர், சத்யராஜ், உள்பட 1…
-
- 1 reply
- 722 views
-
-
மே 17-19 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முதலாம் ஆண்டு நினைவு : எங்கள் காலத்தில்தான் ஊழி நடந்தது ரவிக்குமார் ‘எதிர்காலத்தைச் செதுக்குவதற்கு யுத்தம் என்ற உளி பயன்படாது’ என்று சொன்னார் மார்ட்டின் லூதர்கிங். ஆனால் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்கு அது நன்றாகவே பயன்படும் என்பதை உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள் மெய்ப்பித்துவருகின்றன. ஒரு போர் நடக்கும்போது அதில் முதலில் பலியாவது ‘உண்மை ‘ தான் எனச் சொல்வார்கள். போர்க்களத்திலிருந்து கடைசியில் அகற்றப்படும் சடலமும் உண்மையின் சடலம்தான். அந்த சடலத்தை எளிதாகப் புதைத்துவிட முடியாது என்பதால்தானோ என்னவோ, அதை அகற்றுவதற்கு எவரும் முன்வருவதில்லை. புதைக்கப்படும் உண்மையின் சடலம் கண்ணிவெடியைப்போலக் காத்திருக்…
-
- 3 replies
- 1.5k views
-
-
http://eelavarkural.blogspot.com/
-
- 2 replies
- 1.2k views
-
-
சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும் லூயிஸ் ஆபர் அம்மையார் பிரச்சாரம் இலண்டன் நிருபர் வியாழக்கிழமை, மே 13, 2010 louis arbour இலங்கையில் கடந்த வருட மோதல்களின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற தாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பிரசாரம் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் தீர்மானித்திருக்கின்றார். இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் திங்கட்கிழமை லண்டனில் "இலங்கையில் யுத்தக் குற்றங்கள்" என்ற மாநாட்டை அவர் ஏற்பாடு செய்துள்ளார். தற்போது "சர்வதேச நெருக்கடிக்குழு" என்ற பிரபல சர்வதேச அரச சார்பற்ற அமைப்பின் தலைவராகவுள்ள லூயிஸ் ஆர்பர் அம்மையார் லண்டனின் ப…
-
- 13 replies
- 770 views
-