ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142988 topics in this forum
-
தமிழினப் படுகொலைகளின் பூமியில் பாலிவுட்டின் விருது வழங்கும் விழா – IIFA 2010 Colombo ஏப்ரல் 7th, 2010 வன்னியன் 2010 ஜூலை 2ம் தேதியிலிருந்து 4ம் தேதிவரை கொழும்புவிலுள்ள சுகத்ததாச உள் அரங்கத்தில் IIFA தனது விருது வழங்கும் விழாவை நடத்த உள்ளது. உலகம் போற்றும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப்பச்சன்,ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரும் விழாமேடையில் தோன்றி சிங்கள மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க இருக்கிறார்கள். ( http://beta.thehindu.com/arts/cinema/article306428.ece ). இதன் மூலம் இவர்கள் இலங்கையை அற்புதமான நாடு, அமைதியான நாடு என்று உலகிற்கு சொல்ல இருக்கிறார்கள். இது உண்மையானதுதானா? தமிழ் இனத்தின் மீது சிங்கள அரசு நடத்திய ஈவிரக்கமற்ற போர், மனித அறத்திற்…
-
- 0 replies
- 602 views
-
-
அவுஸ்ரேலியா ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் ஒளிபரப்பான வட்டுக்கோட்டைதீர்மானம் அவுஸ்ரேலிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அவுஸ்ரேலிய தமிழர்களிடையே நடாத்தப்படும் வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன. அதன் காணொளி http://meenakam.com/?p=12366 (
-
- 0 replies
- 440 views
-
-
நடைபெறவுள்ள நாடாளமன்றத் தேர்தலை முன்னிட்டு குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக பல தரப்பினர்களையும் நேர்காணல் செய்து வநதோம். அந்த வகையில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் இருவரை நேர்காணல் செய்ய முற்பட்ட வேளை அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திட்டனர். அதில் எமக்கு நேர்காணல் தருவதாக கூறிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் குறித்த கேள்விகளை பார்த்துவிட்டு அவற்றுக்கு பதில் அளிக்க மறுத்திருக்கிறார். அதேவேளை குறித்த சம்பவத்தின் பின்னர் கேள்விகளை பார்க்காமலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நேர்ககாணல் செய்ய மறுப்பு தெரிவித்திருந்தார். குறித்த கேள்விகளை வாகசர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிற…
-
- 8 replies
- 1.4k views
-
-
Gajendrakumar interview to Canadian Radio http://www.tamilnet.com/art.html?catid=79&artid=31306
-
- 0 replies
- 444 views
-
-
தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் கருத்துக்கள் வீடியோ வழியாக வந்துள்ளன. அவற்றில் சில இங்கு இணைக்கப்படுகின்றன. http://www.youtube.com/watch?v=MZmVSUjOXpY http://www.youtube.com/watch?v=6nq-nUUXeN0 http://www.youtube.com/watch?v=zLCawWjditk
-
- 3 replies
- 778 views
-
-
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருமலை வேட்பாளர் மீது கத்திக்குத்து திருமலை நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 7, 2010 “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமைகொண்ட தேசம்” என்ற கொள்கை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை வேட்பாளரான பிலிப்பையா ஜோன்சன் மீது இனம் தெரியாத நபர்கள் கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) உவர்மலையிலுள்ள தனது வீட்டிற்கு உந்துருளியில் சென்றுகொண்டிருந்தபோது, இவரை வழிமறித்த உந்துருளிக் கவசம் அணிந்த மூவர், அவரைக் கடுமையாகத் தாக்கியதுடன், கத்தியால் பல தடவைகள் குத்த முயற்சி செய்துள்ளனர். இருப்பினும், ஜோன்சனும் எதிர்த்துப் போராடி…
-
- 10 replies
- 899 views
-
-
அவசர ஊடக மறுப்பு அறிக்கையும் - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு தார்மீக ஆதரவும். கடந்த யுpசடை 6ம் ,7ம் திகதிகளில் பல்கலைக்கழக முன்னால் மாணவர் ஒன்றிய தலைவர்கள் ,பல்கலைக்கழக முன்னால் மாணவர் பிரதிநிதிக ள்(2005-2006) ஆகிய பெயர்களில் தமிழ் வின்இ லங்கா சிறி ஆகிய இணையத்தளங்களில் வந்த அறிக்கைகளுக்கும் 2000ம் ஆண்டு தொடக்கம் இதுவரை உள்ள மாணவர் ஒன்றியத்திற்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் எந்தவித தொடர்பு இல்லை எனவும் இவ்வாறான அறிக்கைகள் எதனையும் பழைய மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகிய நாம் வெளியிடவில்லை என்பதை அறியத்தருவதோடு இவ்வறிக்கைகள் தொடர்பான உறுதிப்பாட்டை அதன் மூலப் பிரதிகள் அனுப்பிய விபரம் என்பவற்றை எமக்கு உடனடியாக தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 2000ம் ஆண்டு க…
-
- 3 replies
- 1.3k views
-
-
இந்தியாவில் நடைபெறுவதைப் போன்று வாக்காளர்களுக்கு பெருமளவு பணத்தையும் மதுபானங்களையும் வழங்கி வாக்குக்களைக் கவரும் நடவடிக்கைகளில் ஆளும கட்சியும் அதன் தோழமைக் கட்சியான ஈ.பி.டி.பியும் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன. தீவுப் பகுதிகளில் ஈ.பி.டி.பியைச் சேரந்தவர்கள் இன்று முழுவதும் வீடு வீடாகச் சென்று பணத்தினை வழங்கி தமக்கு வாக்களிக்கும் படி கேட்டு வருவதாகவும் மதுப் பிரியர்களுக்கு மதுபானத்தை வழங்கி வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதே போல மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் றிசாட் பதியுதீனின் ஆதரவாளர்கள் சைக்கிள்கள், தையல் மெசின்கள் போன்றவற்றை வழங்கி வாக்குக்களைக் கவரும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் தெரிவிக…
-
- 3 replies
- 953 views
-
-
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை சக்தி வாய்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் பாதிப்பேரை ஒருதலைப்பட்சமாக கூட்டமைப்பின் தலைமை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, தமிழ் காங்கிரசுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றிய நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை விலக்கிக்கொண்டது. மேலும் தாம் நடுநிலை வகிக்கப் போவதாகவும், இம்முறை மக்கள் பொருத்தமான வேட்பாளர்களை, கட்சியை தாமே தெரிவு செய்யட்டும் எனவும், தாம் மக்களிடம் வைக்கு…
-
- 28 replies
- 2.5k views
-
-
. யாழ்ப்பாணத்தில் புதிய சாமியார் அவதாரம். பல கோடி ரூபாய் செலவில் ஆச்சிரமம். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சுக போகானந்தா என்னும் பெயரில் புதிய சுவாமி உருவாகி உள்ளார். இவர் பல அற்புதங்களை செய்து வருகின்றார். இவரின் அருள் வாக்கை கேட்க யாழ் மக்களும் , பாடசாலை மாணவ, மாணவியரும் தினமும் சென்று வழிபட்டு வருகின்றனர். சுகபோகானந்தா தனது வாயிலிருந்து சிறிய சிவலிங்கம், புத்தர் சிலைகளை எடுப்பதால் இந்து மக்கள் மட்டுமன்றி, யாழிற்கு சுற்றுலா வரும் சிங்கள மக்களும் இவரின் ஆச்சிரமத்துக்கு சென்று வணங்கி வருகின்றார்கள். இவர் தமிழ்,சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக கதைக்கின்றார். இவரின் பூர்வீகம் ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனாலும் பலர் தமது பணத்தை வாரிவழங்குவதால் ஆச்ச…
-
- 52 replies
- 5.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்றில் இருந்து பாடம் கற்கவில்லை – Dr.பிறையன் செனவிரட்ன மலேசிய நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 7, 2010 “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற முழக்கங்களுடன் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்” தேர்தல் விஞ்ஞாபனத்தை, தான் வரவேற்பதாக, தமிழ் மக்களின் உரிமைப் போரின் நியாயத்தை கடந்த பல ஆண்டுகளாக உலகிற்கு உணர்த்திவரும் மருத்துவக் கலாநிதி பிறையன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் மைத்துனரான இவர், தமிழனாக தான் இல்லாத நிலையிலும், தமிழ் மக்களின் வாக்குரிமை, வாக்களிப்புப் பற்றிக் கருத்துக்கூற தகுதி இல்லாத…
-
- 1 reply
- 551 views
-
-
ஈகத்தால் அடையப்பெற்ற தேசியத்தை பதவிக்காய் பலிகொடுக்கும் தமிழ்க்கட்சிகள்! மீண்டும் மீண்டும் தந்தை செல்வா அவர்கள் கூறிய „ தமிழினத்தை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்“ என்ற வரிகளே இன்றைய நிதர்சனமாகிக் காதில் ஒலிக்கிறது. 62 ஆண்டுகாலத் தமிழரின் அடிமை வாழ்வில் 30 ஆண்டுகாலம் அமைதிவழி மிதவாதம் நாடாளுமன்றம் இலங்கைத்தீவு என்ற சுற்றிலும் அதனையடுத்து வந்த 32 ஆண்டுகாலம் அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டு தற்காத்துக் கொள்ளும் நோக்கில் மென்முறைவழியிலான சனநாயமுறைமைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் வன்முறைவழியிலான போராட்டம், இலங்கைத்தீவையும் பிராந்தியத்தையும் கடந்து அனைத்துலக பரிணாமம் என்ற சுற்றிலும் தமிழரது உரிமைப் போராட்டமானது காத்திரமானதொரு கட்டத்து…
-
- 0 replies
- 714 views
-
-
http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article7088337.ece
-
- 2 replies
- 845 views
-
-
அராலி கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் கரையொதுங்கிய நிலையில் யாழ் நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 7, 2010 அராலி கடற்கரையில் அடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் சடலம் ஒன்று ,இன்று மதியம் கரையொதுங்கியுள்ளது. நடுத்தர வயது மதிக்கத்தக்க மேற்படி சடலம் பிறிதொரு ,இடத்திலிருந்து அவ்விடத்திற்கு ஒதுங்கியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கடற்கரையிலிருந்த சடலத்தை மீட்ட அராலிப் பொலிஸார் அடையாளம் காண்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8…
-
- 0 replies
- 764 views
-
-
பத்திரிகை தர்மம் ஜனவரி 8, 2009 அன்று காரில் சென்று கொண்டிருந்தபோது, சுட்டுக் கொல்லப்பட்டார் லசந்தா. சமூகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் தரும் செய்திகளின் ஊடாகவே உலகத்தை அறிந்து கொள்ளும் அளவு ஆற்றல் படைத்தது மீடியா எனப்படும் ஊடகத்துறையாகும். ஊடகங்கள்தாம் உலகத்தைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றன என்றால் அது மிகையல்ல. ஒரு செய்தி, அது பெற வேண்டிய முக்கியத்துவத்தையும் அது மக்களைச் சென்றடைய வேண்டுமா என்பதை முடிவு செய்வதும் ஊடகங்கள்தாம். தமது மரணம் எவ்வாறு நிகழும் என்பதை மாத்திரம்தான் லசந்தாவால் யூகிக்க முடியவில்லை. மற்றபடி, அவர் தன் மரணத்தை எதிர்பார்த்திருந்தார். நிச்சயம் அரசாங்கம்தான் பொறுப்பாளி என்று எழுதியும் வைத்திர…
-
- 1 reply
- 561 views
-
-
பெயர் குறிப்பிடப்படாத விடுதலைப்புலிகளின் நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டும் ‐ பசில் பதினோராயிரம் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்து வருவதாகவும், இவர்கள் பற்றிய தகவல்கள் குறித்த அமைச்சின் இணைய தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளதாகவும் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் கரிட்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மதகுருமார், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன்போதே இந்த அதிர்ச்சியான தகவலை பசில் ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார். எனினும் விடுதலைப் புலிகளுடனான …
-
- 8 replies
- 2.1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்றில் இருந்து பாடம் கற்கவில்லை: Dr.பிறையன் செனவிரட்ன “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற முழக்கங்களுடன் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்” தேர்தல் விஞ்ஞாபனத்தை, தான் வரவேற்பதாக, தமிழ் மக்களின் உரிமைப் போரின் நியாயத்தை கடந்த பல ஆண்டுகளாக உலகிற்கு உணர்த்திவரும் மருத்துவக் கலாநிதி பிறையன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் மைத்துனரான இவர், தமிழனாக தான் இல்லாத நிலையிலும், தமிழ் மக்களின் வாக்குரிமை, வாக்களிப்புப் பற்றிக் கருத்துக்கூற தகுதி இல்லாத போதிலும், காலத்தின் கட்டாயம் கருதி வெளியி…
-
- 1 reply
- 570 views
-
-
போர்க்களத்தில் இறுதிவரை நின்றிருந்த வைத்தியரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தவுக்காக போட்டி! கடந்த வருடம் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்குமிடையே போர் உக்கிரமாக நடைபெற்றபோது, அங்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பாக உலகத்தின் கவனத்தை ஈர்த்த வைத்தியர் ஒருவர் தமிழ் மக்களுக்கு எதிராக போரை முன்னெடுத்த அரசதலைவரை ஆதரிக்கும் கட்சி ஒன்றின் சார்பாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இறுதியாக இராணுவம் வெற்றி பெற்றதையடுத்து சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் விடுதலைப்புலிகளின் தவறான தகவல்களை வழங்கியதென்ற குற்றச் சாட்டில் வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா(40) மேலும் 4 வைத்தியர்களுடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டா…
-
- 1 reply
- 940 views
-
-
தேர்தலின் பின்னர் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளை இணைத்து பரந்த கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க இருக்கிறோம் தமிழ்தேசியக் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மாவை. சேனாதிராஜாவுடன் குளோபல் தமிழ்ச்செய்திகளுக்காகவும் உதயன் பத்திரிகைக்காகவும் தீபச்செல்வன் நடத்திய உரையாடல் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தமிழ் மக்களின் பெரும் சக்தி என்று கருதப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு சவால்களுடன் தேர்தல் போராட்டத்தை எதிர்கொள்கிறது. பேரினவாத அரசாங்கத்தின் தாக்குதல்கள், சூழ்ச்சிகள், தந்திரங்கள் எனப் பல நடவடிக்கைகளை எதிர் கொண்டுவருகிறபோதும்., உள் முரண்பாடுகள், இறுதிநேர தேர்தல் கால வெளியேற்றங்கள், அவைகளினால் ஏற்பட்ட வாதங்கள் எல்லாவற்றையும் எதிர்…
-
- 1 reply
- 518 views
-
-
தேர்தல் கணிப்புகள்: வடக்கில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு? முத்துக்குமார் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை முஸ்லீம் பிரதேசங்களில் தேர்தல் களம் சூடுபிடித்த அளவிற்கு தமிழ்ப் பிரதேசங்களில் சூடு பிடித்ததாக கூற முடியாது. அதற்கு பிரதான காரணம் யுத்த பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடாமையே. பாராளுமன்ற அரசியலுக்கு அப்பால் விடுதலைப் போராட்ட அரசியலுக்குள் பயணித்த மக்கள் திரும்பவும் பாராளுமன்ற அரசியலுக்குள் வருவதற்கு விருப்பமற்று காணப்படுகின்றனர். மக்களின் இந்நிலை வேட்பாளர்களைத்தான் பெரிதும் பாதித்துள்ளது. அவர்கள் நடாத்தும் பிரச்சார கூட்டங்களுக்கு மக்கள் குறைந்தளவில் கூட செல்வதில்லை. ஒரு பிரச்சார கூட்டத்திற்கு 50 பேர் சமூகமளித்தால் கூட அது பெரிய பிரச்சார கூட்டமாக…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிழக்கு தேர்தல் களம் - சம்பந்தனுக்கு வெற்றி வாய்ப்பு உண்டா? முத்துக்குமார் திருகோணமலை மாவட்டத்தில் இந்த தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதிநிதித்துவம் கிடைக்குமா என்பது சந்தேகமே. சென்ற தேர்தலில் புலிகள் நேரடியாக வழிநடாத்தியதனால் 68,000 வரையிலான வாக்குகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்தன. இந்த தடவை தமிழ் மக்களின் வாக்களிப்பு மட்டம் குறைவானதாகவே இருக்கும். மூதூர் கிழக்கு பிரதேச மக்கள் இன்னமும் முழுமையாக குடியமர்த்தப்படவில்லை. பலர் தொடர்ந்தும் இடம் பெயர்ந்த நிலையிலேயே உள்ளனர். வன்னிக்கு இடம் பெயர்ந்த குடும்பங்களும் குடியமர்த்தப்படவில்லை. எனவே இந்த தடவை 50,000 வரையிலான மக்களே வாக்களிக்க கூடியதாக இருக்கும். தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார…
-
- 0 replies
- 749 views
-
-
http://www.yarl.com/articles/files/100406_Jaffna_reporter.mp3
-
- 0 replies
- 497 views
-
-
http://www.yarl.com/articles/files/100406_Colombo_reporter.mp3
-
- 0 replies
- 479 views
-
-
http://www.yarl.com/articles/files/100406_V_Ruthrakumar_part_2.mp3
-
- 0 replies
- 576 views
-
-
http://www.yarl.com/articles/files/100406_Ariya_Nenthiran.mp3
-
- 0 replies
- 442 views
-