Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை விமானப் படைத் தளபதி எயார் மாஷல் ரொஷான் குணதிலக நேற்று முன்தினம் வவுனியா விமானப் படைத் தளத்துக்கு விஜயம் செய்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.விமானப் படைத் தளத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக அவர் ஆராய்ந்ததுடன் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடந்த 9ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளையும் பார்வையிட்ட அவர் படை அதிகாரிகளையும் சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார். http://www.tamilseythi.com/srilanka/Airfor...2008-09-17.html

  2. தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெற்று வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் சந்தித்து கலந்துரையாடினர். தொடர்ந்து வாசிக்க

  3. மாவீரர் தின நிகழ்வில் பங்கேற்க லண்டன் செல்கிறார் வைகோ. சிறீலங்கா | ADMIN | OCTOBER 23, 2012 AT 11:49 அடுத்த மாதம், நடக்கவுள்ள, மாவீரர் தின கூட்டத்தில் பங்கேற்க, ம.தி.மு.க பொதுச்செயலர், வைகோ லண்டன் ‌செல்கிறார். இம்முறை லண்டனில் நடக்கும் மாவீரர் தின நிகழ்வில் உரை நிகழ்த்துவதற்கு, தமிழகத்திலிருந்து, இரு தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் ஒருவர், வைகோ . இதற்காக, நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம், அவர் ஏற்கனவே தனது பாஸ்போட்டை பெற்றுள்ளார். லண்டன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, வைகோ அடுத்த மாதம் லண்டன் செல்வார் எனதெரிவிக்கின்றன. http://thaaitamil.com/?p=36382

  4. 17 Nov, 2025 | 04:19 PM வடக்கு மாகாணத்தில் நீடித்து வரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் 'கழிவிலிருந்து மின்சார உற்பத்தி' (Waste-to-Energy) திட்டத்தை நிறுவுவதற்கான உதவியை இலங்கைக்கான கொரியக் குடியரசுத் தூதுவர் லீ மியோனிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்துள்ளார். இன்றைய தினம் திங்கட்கிழமை (17) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கொரியத் தூதுவர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்துக்கான திட்டம் ஒன்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக நிதி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆ…

  5. இலங்கை உட்பட பல நாடுகளிலிருந்து ஜப்பானில் அகதிகளாக புகலிடம்கோரி விண்ணபிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அகதிகளுக்கு உதவிவரும் தன்னார்வ நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரையான காலப்பகுதியில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1,015ஐ அடைந்திருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. “மியன்மார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்தே கூடுதலானவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இதனைவிட இலங்கை, நேபாளம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் காணப்படும்ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த நாடுகளிலிருந்து புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என டோக்கியோவைத் தளமாகக் கொண்டியங்கும் அகதிகளுக்கான ஜப்பான் நிலையம் தெரிவித்துள்ளது. ஜப்பா…

  6. சீரற்ற வானிலை ; மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்! 27 Nov, 2025 | 11:54 AM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, மின்சாரத்தடை ஏற்பட்டால் இலங்கை மின்சார சபையின் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும். இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/artic…

  7. Published By: Digital Desk 3 08 Dec, 2025 | 03:06 PM நிவாரண பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று திங்கட்கிழமை (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/232771

  8. விசா விண்ணப்பங்களைக் கையாள்வதில் தனது பொறுப்பைச் சரிவரச் செய்யாத காரணத்தால் கொழும்பிலுள்ள கனடிய தூதரகத்தின் முதலாவது செயலாளரை திருப்பியழைக்குமாறு கோரி கனடாவின் வெளிநாட்டு அமைச்சருக்கு மனு ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது. தெற்காசிய சமாதானத்திற்கான நிறுவனத்தினால் இம்மனு தயாரிக்கப்பட்டுள்ளது. நவசமசமாஜக்கட்சியின் தலைவரை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்று கனடிய அரசாங்கம் தெரிவித்த கூற்றினால் தாங்கள் உண்மையில் ஆச்சரியமடைந்ததாகவும் கனடியத் தூதரகத்தின் முதலாவது செயலாளர் மக்கென்னி , விக்ரமபாகு கருணாரத்னவின் பாஸ்போர்ட்டைச் சரியாக அவதானித்திருப்பாரேயானால் உண்மையைக் கண்டு பிடித்திருக்க முடியும் எனவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லாமல் விக்ரமபாகு கருணாரட்ணவ…

  9. காணாமல் போன மாணவர்கள் யாழ்பாணத்தில் கண்டுபிடிப்பு மாத்தளை நாவுல பகுதியில் காணமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் யாழ்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தரம் 8 மற்றும் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் டி.எம் சசிந்த பண்டார மற்றும் எ.ஜி.எஸ்.எஸ். அம்பகஸ்பிட்டிய என்ற குறித்த மாணவர்களே காணமல் போயுள்ளனர். கடந்த 14 ஆம் திகதி குறித்த இருவரும் காணமல் போயுள்ள நிலையில் 15 ஆம் திகதி குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனடிப்படையில் குறித்த மாணவர்கள் யாழ்பாணத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மாணவர்கள் தொடர்பான தகவலை பொலிஸார் பெ…

  10. வட மாகாணம் தொடர்ச்சியாக கல்வியில் வீழ்ச்சியடைவதற்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடே காரணம்- தவராசா (தி.சோபிதன்) வடக்கு மாகாணம் கல்வியில் தொடர்ச்சியாக வீழ்ச்சியான நிலையில் காணப்படுவதற்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடே காரணம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது வெளியாகியுள்ள சாதாரண பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது வடக்கு மாகாணசபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடு. இதனை நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். மாகாணசபை ஆட்சியில் இருந்தபோது கல்வி கொள்கையில் மாற்ற…

    • 5 replies
    • 823 views
  11. (செ. சுபதர்ஷனி) "இந்தியாவின் 'மான் பார்மசூட்டிகல்' நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 10 மருந்துகள் தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், அரசாங்கம் தொடர்ந்தும் அதே நிறுவனத்திடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது. குறித்த நிறுவனத்திடம் மிருந்து மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்குப் பின்னால் உள்ள 'மருந்து மாபியா' குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அச்சங்க ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் சஞ்ஜீவ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (19) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்: "பொதுமக்களுக்குத் தரமான மருந்துகளை விநியோகிப்பது அரசாங்கத்தி…

  12. தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நான்காம் தலைமுறை யுத்த உபாயங்களைப் பயன்படுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக லக்பிம நாளேட்டின் ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவம் மூன்றாம் தலைமுறை யுத்த தந்திரோபாயங்களை பயன்படுத்தி களத்தில் வெற்றிகளை ஈட்டி வருகின்ற போதிலும், யுத்தம் தவிர்ந்த ஏனைய விடயங்களில் அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வான்,தரை மற்றும் கடல்வழி மூலமாக முழுப்படைப்பலத்தையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குல்களை மேற்கொள்வதே மூன்றாம் தலைமுறை யுத்த உபாயமாகும். யுத்த நடவடிக்கைகளுடன், சமய, கலாச்சார அரசியல் சக்திகளை இணைத்துக் கொண்டு இராஜதந்திர ரீதியில் போராட்டத்தை முன்னெடுப்படுப்பது நா…

    • 0 replies
    • 1.5k views
  13. வெள்ளவத்தையில் ஹெரோய்ன்: மூவர் கைது ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருடன், மூவரை வெள்ளவத்தையில் வைத்து இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அந்த போதைப்பொருளை கடத்திய அதிசொகுசு கார்கள் இரண்டையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர். அத்துடன், அவர்களிடமிருந்து 7 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருளின் பெறுமதி ஒருகோடி ரூபாவாகும் என்றும் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/175277/வ-ள-ளவத-த-ய-ல-ஹ-ர-ய-ன-ம-வர-க-த-#sthash.BZyI0nPb.dpuf

    • 6 replies
    • 473 views
  14. இலங்கையில் போரில் பாதிக்கப்படும் தமிழ் மக்கள் மீது கரிசனை கொண்டுள்ளோம். ஆனால் அதற்காக இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தமுடியாது. இலங்கையோடு நட்புறவை பேணிவருகின்றோம். இந்தியாவின் பிராந்திய நலனிற்கு இலங்கை தீவின் நட்புறவு அவசியமாகின்றது. நாங்கள் இலங்கைக்கு இராணுவ உதவி அளிக்காவிட்டால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இப் பிராந்தியத்தில் காலூன்ற வழிவகுத்துவிடும். எனவே உங்கள் பாதுகாப்பு தேவைகளுக்கு எங்கும் அலையவேண்டிய அவசியம் இல்லை நாங்கள் இருக்கின்றோம் என இலங்கைக்கு உறுதியளித்திருக்கின்றோம் ( He said Colombo had been told that India would "look after your security requirements, provided you do not look around. ) எங்கள் முற்றத்தை சர்வதேச நாடுகளின் விளையாட்டு ம…

    • 2 replies
    • 1.5k views
  15. புத்தளம் பாலாவிப் பிரதேசத்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைக்க சிறீலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விமானநிலையக் கட்டுமானப் பணிகளுக்கு 750 மில்லியன் ரூபா செலவிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. புதிய விமானநிலையக் கட்டுமானத்துக்கு 26 ஹெக்டயர் நிலம் அபகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் விமானநிலையங்களை புனரமைப்புச் செய்யும் நிதித் திட்டத்தின்கீழ் இந்தப் புதிய விமானநிலையம் அமைக்கப்படவுள்ளது. இதன்படி மட்டக்களப்பில் அமைந்துள்ள விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் புத்தளம் பாலாவியில் சிறிய விமானநிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனையே தற்போ…

    • 0 replies
    • 268 views
  16. மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு வெவ்வேறு மின்பட்டியல் அனைத்து பாவனையாளர்களுக்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக வெவ்வேறாக மின் பட்டியல்களை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனங்களுக்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பான ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபையினால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக ஒரே மின்சார கட்டணப…

    • 0 replies
    • 620 views
  17. கொழும்பு வெள்ளவத்தை காவல்நிலைய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறீலங்காவின் பயங்காரவாத தடுப்புப் பிரிவினரால் திருகோணமலையில் கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட இளைஞன் வெள்ளவத்தை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். குறிப்பிட்ட இளைஞன் திருகோணமலையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும், கொழும்பில் கைது செய்யப்பட்டதாக மற்றொரு தகவல் கூறுகின்றது. இவர் சயனைட் அருந்தியே உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், வதைகளின்போது கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்வதற்கு சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர…

  18. யுத்த காலங்களில் கல்விக்கூடங்களை பயன்படுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்தது. [Wednesday, 2012-11-21 06:33:31] இலங்கை உட்பட 24 நாடுகளில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் காவல்துறையினரும், இராணுவத்தினரும் கல்விக்கூடங்களைப் பயன்படுத்திக் கொண்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு பாடசாலைகளை படைத்தரப்பினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஆயுத போராட்டம் நடைபெற்ற நாடுகளிலேயே அதிகளவில் இவ்வாறு பாடசாலைகளை படையினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இவ்வாறு பாடசாலைகளை படையினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஆயுதக் களங்…

  19. விடுதலைப்புலிகளின் தலைவர் அரசியலுக்கு திரும்பியிருந்தால் தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்பார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.அதில் அவர் தெரிவித்துள்ள விடங்கள் வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடைசி துப்பாக்கி குண்டு வரை எதிர்கொண்டார். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை எப்போதும் இருக்கிறது. பிரபாகரன் அமைதி வழியை ஏற்று அரசியலுக்கு திரும்பியிருக்கலாம். அவர் அரசியலில் இருந்திருந்தால் இப்போது மிகப் பெரிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்ப…

    • 1 reply
    • 500 views
  20. கொழும்பு: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, தமிழ் திரையுலகத்தினருக்குப் போட்டியாக, சிங்கள நடிகர்கள் நாளை கொழும்புவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இலங்கையில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, கடந்த மாதம் 19 ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் தமிழ் திரையுலக இயக்குநர்கள் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர். இதனையடுத்து, தென்இந்திய நடிகர் சங்க வளாகத்தில், நடிகர், நடிகையர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். இதேபோல, சின்னத்திரை கலைஞர்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தமிழ் திரையுலகத்தினருக்குப் போட்டியாக, இலங்கையில், அந்நாட்டு நடிகர், நடிகையர் போட்டி போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். கொழும்பு நகரில் உள்ள சுதந்திர தின மைதாணத்தில் இந்தப்…

  21. சிரியா இரசாயன ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறதாம். அறிவித்துவிட்டார்கள். ராணுவ நடவடிக்கை பற்றி ஆராய்கிறார்களாம்.பலஸ்தீனர்களுக்கு "காதில் பூ" வைத்துவிட்டார்கள். அமெரிக்காவில் தேர்தல் முடிந்துவிட்டது. சிரியாவிற்குப் படையெடுப்பு ஆரம்பித்து, ஈரானை இலக்கு வைக்கப் போகிறார்கள். யாராலும் தடுக்க முடியாதபடி மனித குலத்திற்கான அடுத்த பேராபத்தை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். WASHINGTON (AP) — The White House and its allies are weighing military options to secure Syria's chemical and biological weapons, after U.S. intelligence reports show the Syrian regime may be readying those weapons and may be desperate enough to use them, U.S…

  22. தாயகத்தில் சிங்கள அரசின் தமிழின அழிப்பின் போர் வெறியினால் இடம்பெயர்ந்து துன்பப்படும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காக வட நெதர்லாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து தமிழ் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து தமது ஒருநாள் நிதியை துயர் துடைப்புக்காக வழங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  23. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் பவானந்தனுள்ளிட்ட இருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினது யாழ்.அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர். தமக்கான பாதுகாப்பை வலியுறுத்தியே அவர்கள் சரணடைந்துள்ளனர். 2006 முதல் 2008 வரையான காலப்பகுதிகளில் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற வகை தொகையற்ற ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை பல இளைஞர்கள் யுவதிகள் தமது உயிரை காத்துக்கொள்ள இவ்வாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவினது யாழ்.அலுவலகத்தில் சரணடைந்திருந்தனர். அத்தகைய சூழல் திரும்பியிருப்பதான மனோ நிலை யாழில் திரும்பியுள்ளமையே இச்சரணடைதல் மூலம் வெளிப்பட்டிருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினது யாழ்.அலுவலக இணைப்பதிகாரி கனகராஜ் இவ்வாறு…

  24. ’பொதுக்கூட்டம் நடந்தால் கொவிட் மீண்டும் வரும்’ பொதுக்கூட்டங்கள் கூட்டப்படுவதால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பாக எச்சரித்துள்ள அரசாங்கம், இதுபோன்ற பொதுக்கூட்டங்களை, அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொவிட்-19இன் பதிவுகள் குறைந்து வரும் நிலையில், சிலர் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு முயன்று வருவதாக, அவர் தெரிவித்தார். இந்நிலையில், இவ்வாறான பொதுக்கூட்டங்களை நடத்துவதன் மூலம், சமூகத்துக்குள் கொவிட் - 19 பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டு…

  25. அரசாங்கம் வெளியேறச்சொன்னால் இரட்டிப்பான பலத்துடன் வெளியேறத் தயாராக இருப்பதாக கூறுகிறார் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2490&cat= மலையக மக்கள் முன்னணியின் விமர்சனத்துக்கு முகங்கொடுக்க முடியாது அரசாங்கம் தம்மை வெளியேற்றினால் தாம் வெளியேறுவதற்கு தயாராகவே உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரன் தெரிவித்தார். கொட்டகலையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் அரசாங்கம் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய தேவை தனக்கு ஏற்படவில்லை. அதே வேளை அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய தேவையும் தற்போதைக்கு ஏற்பட வில்லை எனக் குறிப்பிட்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.