ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
'மரணபூமியின் மேல் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றோம்' -சரவணபவஆனந்தன் திருச்செந்தூரன் இசைநிகழ்ச்சியை நடத்துபவர்கள் ஒவ்வொருவரும் 'மரணபூமியின் மேல் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றோம்' என்பதை நினைவிற் கொள்ளுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஐpலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ். நகரில் எதிர்வரும் 9ஆம் திகதி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்துகொள்ளும் 'நண்பேன்டா' இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கு 200, 1,000, 5,000 ரூபாய் பெறுமதியில் நுழைவுச் சீட்ட…
-
- 1 reply
- 498 views
-
-
ஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித் வீரசிங்கவை தற்போது அரசாங்கம் மேலும் சிலருடன் சேர்த்து கைது செய்துள்ளது. அமித் வீரசிங்க கடந்த சில வருடங்களுக்குள் இந்த நாட்டுக்கு ஏற்படுத்தியிருக்கிற ஆபத்தும், அழிவுகளும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல தான். ஹலாலுக்கு எதிராக, முஸ்லிம்களின் வியாபரத்துக்கு எதிராக, முஸ்லிம்களின் ஜனத்தொகைக்கு எதிராக, ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக, ஹிஜாப் அணிவதற்கு எதிராக, என்று அடுக்கிக் கொண்டு போகலாம். ஜாதிக ஹெல உறுமய சித்தாந்த தளத்திலும், களத்திலும் பெரும் பங்கை 90 களிலிருந்து இரு தசாப்த காலம் பங்கை ஆற்றிய பின்னர் அவர்கள் அரசியல்…
-
- 1 reply
- 563 views
-
-
என். சரவணன் “மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அல்ல “மஹாசொன் பலகாய” தான் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். சிங்கள மரபிலக்கிய அர்த்தத்தில் கூறுவதாயின் அதுவொரு “அரக்கர் சேனை” (Demon Brigade) “மஹாசொன் பலகாய” என்கிற அமைப்பின் பெயர் முதன் முதலில் வெளியானது 2008 ஒக்டோபர் மாதமளவில் தான். அதாவது யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. 20.10.2008 ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு சிறிய கடிதப் பொதியொன்று கிடைத்தது. ஒரேவிதமான கடிதத்தின் 50 பிரதிகள் அதில் இருந்தன. மனித உரிமைகளின் பேரால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வாதிடும் அனைவரும் கொல்லப்படுவர் என்…
-
- 1 reply
- 1k views
-
-
'மஹிந்த சிந்தனை' ஆட்சியில் தகிக்கின்றது இலங்கைத் தீவு 29.05.2008 "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடிய கதையாக' இருக்கிறது ஜே.வி.பி. இப்போது மேற்கொள்ளும் பிரசாரமும் சூளுரையும். தற்போது ஆட்சியிலிருக்கும் அரசை வீழ்த்தி விரைவில் நாட்டுக்குப் பொருத்தமான மக்களின் விருப்பை நிறைவேற்றக்கூடிய அரசை ஆட்சியில் அமர்த்துவோம் என்றும் அது பிரதிக்ஞை செய்திருக்கின்றது. கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதன் ஐந்தாவது தேசிய மாநாட்டிலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா இவ்வாறு சபதம் செய்திருக்கின்றார். நல்லது. இன்று தான் சூளுரைக்கும் விவகாரத்தைத் தன்னால் செய்யக்கூடியதாக இருந்தபோது, "மஹிந்த சிந்தனை'யைத் தூக்கிப்பிடித்து, அந்த வாய்ப்பைக் கோட்டை விட்ட ஜே.வி.பி., இப…
-
- 1 reply
- 1.1k views
-
-
'மஹிந்த தரப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால இணையத் தயார்' சின்னசாமி ஷிவானி “எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக இருக்கின்றார் என்பதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தயாராகவே இருக்கின்றது” என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர், அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படுகின்றார…
-
- 0 replies
- 105 views
-
-
'மஹிந்த, சர்வதேசத்துக்கு பொய் சொல்கின்றார்' முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் பொய் பிரசாரம் செய்தது போதாதென்று இப்போது சர்வதேச ரீதியில் பொய் கூறுகின்றார் என அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 'மத்தல சர்வதேச விமான நிலையம் இன்னும் நெற்களஞ்சியசாலையாக பயன்படுத்தப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ, ஜப்பானுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்த நெல், கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே அகற்றப்பட்டு விட்டன' என அமைச்சர் மேலும் கூறினார். …
-
- 1 reply
- 293 views
-
-
'மஹிந்தவுக்குப் பணம் கொடுத்தது தவறு' 'யாராக இருப்பினும், தமது தனிப்பட்ட தேவைக்காக அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் உகண்டாப் பயணத்துக்கு பணம் கொடுத்தது, தவறான விடயம் தான்' என்று அரசாங்கம் நேற்றுத் தெரிவித்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதாவது, 'நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுள், தனது சொந்த வெளிநாட்டு பயணத்துக்காக அரசாங்கத்திடம் பணம் கேட்டவர் மஹிந்த ராஜபக்ஷ ஒருவரே ஆவார். அதுவும், தான் முன்னாள் ஜனாதிபதி என்பதால், விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்துக்கொண்டிருக்காமல் ஹோட்டலில் தங்கவைக்க வேண்டும் என்றும், தனது பயணத்துக்கான ஏனைய செ…
-
- 0 replies
- 416 views
-
-
'மஹிந்தவை சந்தித்தப் பின்னரே பிரச்சினை வந்தது' முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில், மட்டக்களப்பு மங்களாராமய விகாரைக்கு சென்று விகாரதிபதி சுமனரத்தின தேரரை சந்தித்து கலந்துரையாடி வந்தார். இதன்பிறகே மட்டக்களப்பு மங்களராமய விகாதிரபதி தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. ஆகவே இந்த இரண்டுக்கும் தொடர்பு உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் கூறினார் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தன் பேஸ்புக் பக்க பத்தியில், “மட்டக்களப்பு சுமனரத்தின தேரர்-மஹிந்த-புலிகள்-மைத்திரி-நான்-தமிழ் மக…
-
- 4 replies
- 394 views
-
-
'மஹிந்தவை மந்திரிதுமா என்றா அழைப்பது' முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், அவரை எவ்வாறு அழைப்பது என்பது பற்றி உறுதியற்ற தன்மை நிலவுவதாக, ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். அதிகாரங்களை தன்வசப்படுத்திக் கொள்ள நினைத்ததாலேயே மஹிந்த ராஜபக்ஷ அவருடைய நற்பெயரை இழந்தார். இதுவே இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடாமல் இருந்திருந்தால், நாம் அவரை முன்னாள் ஜனாதிபதி என்று அழைத்திருப்போம் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது அவரை, நாடாளுமன்ற உறுப்பினர் (மந்திரிதுமா) அல்லது முன்னாள் ஜனாதிபதி என்ற இரண்டை கொண்டு எவ்வாறு அழைப்பது என்று கூட தெரியாத சங்கட நிலைக்கு நாம் தள்ளப்…
-
- 2 replies
- 607 views
-
-
'மஹிந்தவைப் பொறுக்காது கல்லும் வெடித்தது' 'மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்துக்குச் சென்றதைப் பொறுத்துக்கொள்ளாது, குருநாகலில் உள்ள யானைக்கல்லும் வெடித்து விட்டது' என்று இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாட்டையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்த மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் வெறுத்துவிட்டனர். எனினும், அவர் குருநாகலுக்குச் சென்றார். அதனைப் பொறுத்துக் கொள்ளாது, அங்குள்ள யானைக்கல்லும் வெடித்துவிட்டது. எ…
-
- 0 replies
- 278 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) மாகந்துரே மதூஷை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற பல பாதாள உலக கொலைகள், போதைப் பொருள் கடத்தல்களின் பின்னணியில் இருக்கும் மிக முக்கிய புள்ளியான பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிலாகே மதூஷ் லக்ஷித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலை நகரான அபுதாபியில் 6 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்பில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்க…
-
- 0 replies
- 503 views
-
-
போருக்கு பிந்தைய சமூகத்தில் தமிழ் மக்களுக்கு உடனடியாக கவனிக்கப்படவேண்டிய பல தேவைகள் இருக்கும் நிலையில், அந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய, ஒரு அரசியல் தீர்வு அவசியம், இதை அடைய இலங்கையின் மத்திய அரசுடன் ஒரு நல்லுறவும் அவசியம், எனவே தான் ஒரு சுமுகமான சமிக்ஞையைத் தரும் வண்ணம், இலங்கையின் வட மாகாண முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன் , ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்று கூறுகிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். விக்னேஸ்வரன் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே இருந்த சர்ச்சை பற்றி குறிப்பிட்ட சம்பந்தன், முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஜனாதிபதியிடம் பதவி பிரம…
-
- 0 replies
- 507 views
-
-
'மாகாணங்களுக்காக அடிபடாதீர்கள்' -சொர்ணகுமார் சொரூபன் பிரித்தானியரால் இலங்கையில் 9 மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. அவர்களின் நிர்வாகத்தை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மாகாணத்துக்காக, நாங்கள் ஒவ்வொருவரும் அடிபடக்கூடாது. ஒரே நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, 'விளையாட்டும் நல்லிணக்கமும் உலகின் பொதுவான மொழி. இந்த விளையாட்டில் அனைவ…
-
- 1 reply
- 399 views
-
-
இந்திய அரசின் ஆதரவுடனேயே இலங்கையின் 13-ம் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் முயன்றுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். [size=3][size=4]இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி 1987-ம் ஆண்டில் இலங்கையில் மாகாணசபை முறைமையை கொண்டுவந்த 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாது செய்துவிட இலங்கை அரச மட்டத்தில் பல்வேறு முயற்சிகள் நடந்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.[/size][/size] [size=3][size=4]மாகாணசபை முறையை ஒழித்துவிடவேண்டும் என்ற தொனியில் ஜனாதிபதியின் சகோதரர்கள் உட்பட அரசின் உயர்மட்ட பிரமுகர்கள் பலரும் அண்மைக் கா…
-
- 0 replies
- 623 views
-
-
–வடிவேல் சக்திவேல் தொலைக்காட்சி நாடகங்கள் மாணவர்களின் கல்வியை வீணடிப்பதாகவும் இதற்கு பக்கபலமாக இருப்பவர்கள் பெற்றோர் எனவும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தெரிவித்தார். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதலைக்குடா கனிஷ்ட வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (03) வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மாணவர்கள் அனைவரும் திறமையானவர்கள். அவர்களை உயர்நிலைக்கு கொண்டுவருவது அனைவரதும் கடமையாகும். தற்போது, அநேகமான மாணவர்கள் உட்பட அனைவரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகங்களையே ப…
-
- 2 replies
- 515 views
-
-
'மாணிக்கநகர்' வீட்டுத்திட்டம் பொது மக்களிடம் கையளிப்பு மட்டக்களப்பு, போரதீவுப்பற்றில் நிர்மாணிக்கப்பட்ட 'மாணிக்கநகர்' வீட்டுத் திட்டம் நாளை காலை 10.00 மணிக்கு பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவம் மற்றும் ஆசீர்வாதத்துடனும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டமானது வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. கம்உதாவ திட்டத்தன் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத் திட்டத்தில் 25 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/50389
-
- 0 replies
- 546 views
-
-
இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை நகரில் மருத்துவமனைக் கட்டடமொன்றுக்கான அத்திவாரம் தோண்டும்போது ஓராண்டுக்கு முன்னர் கிடைத்த மனித எலும்புகளை மேலதிக பரிசோதனைக்காக சீனாவுக்கு அனுப்பும் அரசின் திட்டத்துக்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய, காணாமல்போனோரின் உறவினர்கள் தமது எதிர்ப்பை எழுத்துமூலமாக நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர்கள் சார்பில் வாதிடும் சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்தார். சீனா, இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய உறவைப் பேணுவதனால் அதன் பரிசோதனை முடிவுகளில் நம்பகத்தன்மை இல்லை என்று அவர் கூறினார். மாத்தளை புதைகுழி விவகாரத்தில் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிக…
-
- 0 replies
- 410 views
-
-
'மாமனிதர் தில்லை ஜெயக்குமாரும், பன்முக ஆளுமையும்' -சபேசன் 'கடல்கள் தாண்டி, கண்டங்கள் கடந்து, தனது தாயகத்திற்கு வெளியே, தூரதேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதனைத்தான் திரு ஜெயக்குமார் அவுஸ்திரேலிய மண்ணில் புரிந்தார். இந்த நல்ல மனிதரை இழந்து எமது தேசம் இன்று சோகக் கடலிலே மூழ்கிக் கிடக்கின்றது.' தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்: 'அடி தாங்கும் உள்ளம் இது இடிதாங்குமா?' என்று ஒரு பாடலின் வரிகள் கூறும். அடிகளை மட்டுமல்ல, இடிகளையும் தாங்கி நிமிர்ந்து நின்றவர்தான் எங்கள் மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக, அவுஸ்திரேலியாவில் பேரினவாதச் சார்புச் சக்திகள் கொடு…
-
- 0 replies
- 755 views
-
-
'மாமனிதர்' ஜெயக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வு: கிழக்குத் தீமோர் தூதரகம் இரங்கல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வு, இன்று மாலை மெல்பேல்பேண் ஸ்பிறிங்க்வேலில் உள்ள நகர மண்டபத்தில் நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 2.25 மணியளவில் அவருடைய புகழுடல் அடங்கிய பேழை ஊர்தியில் மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது. வாயிலில் இருந்து மேடை வரை, செங்கம்பளம் விரிக்கப்பட்ட, மண்டபத்தின் பிரதான வாயிலில் 'மாமனிதர்' ஜெயக்குமாரின் தமிழ்ப் பாராம்பரிய உடையணிந்த உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அவருடைய உருவப்படத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்ததோடு, படத்தின் அருகாமையில் தமிழீழத்தின் தே…
-
- 1 reply
- 945 views
-
-
'மாவீரர் நாளும்' நல்லிணக்கமும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் என்ற நினைவு தமிழ் மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்று அரசாங்கம் கருதினாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அதனை நினைவுபடுத்தியுள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலைத் திறப்பு விழா கடந்த 27ஆம் திகதி தான் நடைபெற்றது.அந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நவம்பர் 27 என்றதும் வீட்டை விட்டு வெளியே வராமல் கலங்கியபடி இருந்த காலத்தை மறக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். மாவீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த நாளுக்காக, ஒரு வாரத்துக்கு குழந்தைகளைப் பெற்றோர் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தனர் என்றும், அந்த யுகம் இப்போது மாறிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். விடுதலைப் புலிகளால் பிரகடனம…
-
- 0 replies
- 634 views
-
-
'மிகப் பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மிகநெருக்கமாகவும் ஆதரவாகவும் செயற்பட்டனர்' - இரா. சம்பந்தன் [ சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2010, 14:04 GMT ] [ புதினப் பணிமனை ] புலம்பெயர்ந்த எமது மக்கள் தந்த பின்புல ஆதரவும் பலமும் தான் தேர்தலுக்கு முன் நாம் எதிர்கொண்ட உட்கட்சி முரண்பாடுகளினை துணிவுடனும் தெளிவுடனும் கையாள்வதற்கு உதவியது என புதினப்பலகையிடம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். திருக்கோணமலை முடிவுகள் அறிவிக்கப்படாத பரபரப்புக்கும், தனது தலைமைக்கு கிடைத்த வெற்றியின் உற்சாகத்திற்கும் இடையில், தனது பழுத்த அரசியல் முதிர்ச்சியுடன் தற்போதைய அரசியல் நிலமை, தேர்தல் நிலவரங்கள் பற்றி 'புதினப்பலகை' ஆசிரியர்களுட…
-
- 25 replies
- 1.9k views
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வடக்காக 10 கிலோமீட்டர் தொலைவில் மிகப்பெரியதான திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார். ஆசியாவிலேயே மிகப் பெரிய மீன்பிடித்துறைமுகம் என்று இலங்கை அரச ஊடகங்கள் விபரித்துள்ள திக்கோவிட்ட துறைமுகம் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் கிட்டத்தட்ட 53 யூரோ மில்லியன் செலவில்(இலங்கை ரூபாயில் கிட்டத்தட்ட 9500 மில்லியன் ரூபாய் செலவில்) நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மொத்த செலவில் 45 யூரோ மில்லியன் நிதியை ( 65 வீதமளவு கடனாகவும் 35 வீதமளவு மானியமாகவும்) நெதர்லாந்து வழங்கியுள்ளது. மிகுதி 8 யூரோ மில்லியன் பணத்தை இலங்கை அரசாங்கம் செலவிட்டுள்ளதாக திக்கோவிட்ட துறைமுக நிர்வாக முகாமையாளர் நுவன் ஜயசிங்க ப…
-
- 1 reply
- 691 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் 1990 இல் மன்னார் மாவட்டத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அனாதரவற்ற முஸ்லிம்களுக்கு பொது பலசேனாவால் இன்று நெருக்கு வாரங்கள் ஏற்பட்டுள்ளன. மிருகங்களிற்கு கொடுக்கப்படும் சலுகைகள் கூட முஸ்லிம்களுக்கு கிடையாதா? இப்படியான ஒரு சோதனை நிலைமையே அகதி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.அந்த வகையில் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமான நாடு இது. இந்த நாட்டை அழகான முறையில் கொண்டு செல்லும் ஜனாதிபதியின் பெயரை நாசப்படுத்தும் செயல்களையும், துரோக செயல்களையும் செய்கின்ற பேரினவாதிகளின் முற்போக்கு செயல்களையும் அடாவடி தனத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவி…
-
- 2 replies
- 563 views
-
-
மிஹின் லங்கா எனும் விமானப் போக்குவரத்து நிறுவனம் தமிழகத்திற்கான சேவைகளை ஜூன் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது. கொழும்பிற்கும் திருச்சிக்குமிடையே வாரம் நான்கு முறை மிஹின் லங்கா விமானங்கள் வந்து போகின்றன. தமிழகத்தில் பிக்குமார் தாக்கப்பட்டதை அடுத்து இலங்கையில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது பயணிகள் போக்குவரத்து வீழ்ச்சியடைந்த நிலையிலேயே சேவைகளை நிறுத்த முடிவெடுக்கப்பட்டதாக மிஹின் லங்கா பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் ட்ரான்ஸ்லங்கா கூறுகிறது. கடந்த செப்டம்பரில் வேளாங்கண்ணி வந்த இலங்கையர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து பயணிகள் வருகை வீழ்ந்திருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கெதிரான தீர்மானம் தொடர்பாக தம…
-
- 8 replies
- 949 views
-
-
'மிஹின் லங்கா' நிறுவனத்துக்கு 8.5 மில்லியன் நட்டம் செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2012 09:57 0 COMMENTS 'மிஹின் லங்கா' நிறுவனம் நடப்பு கணக்கு ஆண்டில் 2 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதுடன் 2007 ஆம் ஆண்டு முதல் கடந்த 5 வருடங்களில் 8.5 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாக கணக்காய்வாளர் தெரிவித்துள்ளார். பொது கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலே மிஹின் லங்கா நிறுவனத்தினத்தின் கணக்காய்வாளர் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது- http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53568----85--.html
-
- 2 replies
- 391 views
-