Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியா தொடர்ந்தும் இலங்கையைக் கண்காணிக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்! இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு தரப்பு என்ற அடிப்படையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கு முழுமையான தார்மீக உரிமை இருக்கிறது என்பதை இந்தியப் பிரதமரு…

    • 3 replies
    • 724 views
  2. [ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 00:34 GMT ] [ கார்வண்ணன் ] வடக்கிலுள்ள தமிழர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் அனுப்பும் பணம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. சிறிலங்காவின் அரச வங்கிகளே வன்னிப் பகுதியில் அதிகளவில் கிளைகளைக் கொண்டுள்ள நிலையில் அவற்றின் ஊடாக இலகுவாக சிறிலங்கா அரசாங்கம் இதுபற்றிய தகவல்களை திரட்டி வருவதாக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நோர்வே ,கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தே, வன்னிப் பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகளவிலான பணம் கிடைத்து வருவதாக அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. போர் முடிவுக்கு வந்த பின்னர், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் கிளைகளை ஆரம்பித்த சிறிலங்…

  3. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழில்.முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுஉள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் இடம்பெற்று உள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.செம்மணி பகுதியில் (யாழ்.வளைவுக்கு) அருகில் வைத்து வீதியால் சென்ற யுவதியை முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்கள் கடத்தி சென்றுள்ளனர். அதனை வீதியில் சென்றவர்கள் அவதானித்து முச்சக்கர வண்டியினை மடக்கி பிடிப்பதற்கு துரத்தி சென்றவேளை, கடத்தல்கார்கள் முச்சக்கர வண்டியில் மிகவேகமாக பயணித்து உள்ளனர். ஆடியபாதம் வீதி ஊடாக மிக வாகன நெரிசல்கள் அதிகமான கல்வியங்காட்டு சந்தி , மற்றும் திருநெல்வேலி சந்தி உள்ளிட்ட பகுதிகள் ஊடா…

  4. ஏட்டிக்குப் போட்டியான இராணுவ அணுகுமுறை கவலை தருகிறது அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளது ஏட்டிக்குப்போட்டியான இராணுவ ரீதியான அணுகுமுறை பெரும் கவலையளிக்கின்றது. இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இராணுவ ரீதியான வெற்றிகள் ஒரு போதும் உதவப் போவதில்லையென இணைத்தலைமை நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன. விடுதலைப்புலிகள் நேற்று முன்தினம் பலாலி இராணுவ தளம்மீது மேற்கொண்ட விமானத்தாக்குதல். வடபகுதியை நோக்கி பாரிய படை நடவடிக்கைக்கு இராணுவம் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக கருத்துத்தெரிவித்த இணைத்தலமை நாடொன்றின் தூதரக உயர் அதிகாரியொருவரே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவ்வதிகாரி மேலும் கூறியதாவது: இலங்கையில் மோதல்கள் நிறுத்தப்பட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீ…

  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான ஒன்பதாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நேற்று இடம்பெற்றபோதும் எவ்விதமான உடன்பாடுகளோ முன்னேற்றங்களோ இன்றி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தன. மிகவும் குறைந்தளவு நேரமே இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. . ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது, எட்டாம் கட்டப் பேச்சில் சிறிலங்கா அரசு தரப்பால் வழங்கப்படுவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த ஒத்தியங்கல் பட்டியல் அதிகார விட்டுக் கொடுப்புத் தொடர்பிலான எந்த ஆவணங்களும் நேற்றைய ஒன்பதாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின் போதும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையளிக்கப்படவில்லை. ஆனால் மீண்டும் அடுத்த மாதம் நான்காம் திகதி பேச்சுவார்த்தையைத் தொடர்வதென்ற விடயத்தில் மட்டும் இருதரப்ப…

  6. முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை கைது செய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அமைச்சர் அமரதுங்க நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடவுச் சீட்டுக்களில் பிறந்த திகதி உள்ளிட்ட தகவல்களை மாற்றியமைத்து பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. சாதாரண கடவுச்சீட்டு மற்றும் ராஜதந்திர கடவுச்சீட்டுக்களில் பெயர், பிறந்த திகதி உள்ளிட்ட தகவல்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில் பெரும்பா…

  7. 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் படை அதிகாரி': இழப்புக்களை நினைத்து எதிர்கால வாழ்வை சீரழிக்கக் கூடாதாம் யுத்த இழப்புக்கள் எல்லாத் தரப்பினருக்கும் உரியதாம் [Monday, 2011-07-11 20:01:44] இழப்புக்களை நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இருப்பதை உரிய முறையில் உச்சப் பயன்பாட்டில் பயன்படுத்தி எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்தின் மேம்பாடு குடும்பத் தலைவிகளின் திட்டமிட்ட செயற்பாடுகளிலேயே மேல்நிலைபெறும். இவ்வாறு கூறினார் அச்செழு இராணுவமுகாம் பொறுப்பதிகாரி பிரிகேடியர் டபிள்யூ. டி.சி.கே.கொஸ்தா. புத்தூர் கிழக்கு மகாத்மாஜி கலையரங்கில் குடும்பத் தலைவரை இழந்தவர்களுக்கு வாழ்வாதார உதவிகளான பால்மாடு, ஆடு, கோழி, அதற்கான கொட்டில்கள் அமைப்பதற்கா…

  8. இலங்கை அரசியலில் அடுத்த பரபரப்பு -சபை முதல்வராக தினேஸ் குணவர்தன : ஜனாதிபதி தீர்மானம் சபை முதல்வராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல சற்றுமுன்னர் தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் இன்று காலை இடம்பெற்ற கட்சி உறுப்பினர்கள் இடையிலான கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/43814 நாடாளுமன்ற சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க மஹிந்த தரப்பு தீர்மானம் நாடாளுமன்ற சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு அரசியற் கட்சிகள் தீர்மானித்துள்ள…

  9. சர்வதேச சமூகத்தின் எரிச்சலை அறுவடை செய்யும் இலங்கை மனித உரிமைகளைப் பேணும் விவகாரத்தில் இலங்கை அரசுத்தலைமை தொடர்ந்து காட்டிவரும் உதா சீனப் போக்கும், விசேட சட்ட விலக்களிப்பு சிறப்புரிமைகளை வசமாகப் பயன்படுத்திக்கொண்டு பாதுகாப்புத்தரப்பு புரிந்துவரும் கொடூரங்களும் சர்வதேச மட்டத்தில் விபரீத மான விளைவுகளை ஏற் படுத்தப்போகின்றன என்பதை முற்கூட்டியே இப்பத்தியில் மீண்டும் மீண்டும் வலி யுறுத்தி வந்தோம். அதுவே இப்போது யதார்த்தமாகி வருகின்றது. சர்வதேச நிலைப்பாடு இலங்கை அரசுத் தலைமைக்கு எதிராக ஒன்று திரண்டு, உருக்கொண்டு, விஸ்வ ரூபம் எடுத்திருப்பதையும் அதன் விளைவுகளையும் இலங்கை எதிர்கொள்ளும் வேளை வந்துவிட்டது என்றே தோன்று கின்றது. இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான சம…

  10. Published By: VISHNU 07 SEP, 2023 | 07:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வன்னியில் புதிதாக மருந்தகங்களை அமைக்க அனுமதி வழங்குமாறு பலமுறை வலியுறுத்தப்பட்டும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. மாறாக புதிதாக பல மதுபான சாலைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் புதிதாக மதுபானசாலைகளை அமைப்பதால் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்க…

  11. விடுதலைப் புலிகளின் பிந்திய விமானத் தாக்குதலால் "ஷெல்' நிறுவனத்துக்கு 70 மில்லியன் டொலர் நட்டம் கொழும்பு,மே13 விடுதலைப் புலிகளின் விமானங்கள் கடந்த 28ஆம் திகதி முத்துராஜவெலப் பகுதியில் அமைந்துள்ள "ஷெல் காஸ்' நிறுவனத்தின் மீது மேற்கொண்ட தாக்குத லினால் அந்த நிலையத்தின் தீயணைப்பு வசதிகள் முழுமையாக செயலிழந்துவிட் டன. இதனால் அந்த நிறுவனத்துக்கு சுமார் 70 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை அந்த நிறுவனத்தின் ஸ்ரீலங்கா இயக்குநர் ஹசான் மடானி தெரி வித்தார். நேற்றுக் கொழும்பில் நடத்திய செய்தி யாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டார். அவர் இது தொடர்பாக மேலும் தெரி வித்ததாவது ஆரம்ப கணக்கெடுப்பின்படி குண்டுத் தாக்குதலால் ஏற…

  12. அரசும் படையினரும் எத்தகைய தடைகளை ஏற்படுத்தினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோத்லில் இருந்து விலகாது [Tuesday, 2011-07-19 18:14:14] அரசும் படையினரும் எத்தகைய தடைகளை ஏற்படுத்தினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடும்; ஒருபோதும் விலகாது என்று தெரிவித்தார் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். அரசு தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்தால் தேர்தலில் இருந்து கூட்டமைப்பு விலகிவிடும் என்று வல்வெட்டித்துறை நகரசபைக்கான கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அது குறித்துத் கூறிய சுரேஷ் பிரேமச்சந்திரன் எத்தகைய நிலையிலும் தேர்தலில் இருந்து விலகுவ…

  13. சிக்கலில் சிக்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பட்டம் MAR 05, 2015 | 7:40by கார்வண்ணன்in செய்திகள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தன்னை மீண்டும் இராணுவ சேவைக்குள் ஈர்க்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கையால், பீல்ட் மார்ஷலாக அவருக்குப் பதவிஉயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வரும் 22ம் நாள் பீல்ட் மார்ஷல் பட்டத்தை அளிக்கும் நிகழ்வுக்கு பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தது. இந்தநிலையில், தன்னை இராணுவ சேவைக்குள் ஈர்க்க ஜெனரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அரசாங்கத்தில் உள்ள முக்கிய பிரம…

    • 0 replies
    • 644 views
  14. தமிழ் மக்களுடைய நலன்களை சிந்திக்காமல் ஆளுக்கு ஒரு கட்சியை தொடங்கிவைத்திருப்பவர்கள்தான் உரிமைகளை பெற்றுக்கொடுப்பார்கள் என தமிழ் மக்கள் நம்புவார்கள் என்பது பகல் கனவு மட்டுமே. அந்த கனவு நனவானால் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற இயலாமல்போகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொது தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து தாமாக விலகி சென்று ஆளுக்கு ஒரு கட்சியை தொடங்கியிருப்பவர்கள் கூட பொது தேர்தலில் களமிறங்குவது குறித்து பேசிக் கொண்…

  15. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு இந்தியா வலியுறுத்தல் தமிழர்கள் உட்பட குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது என ஜெனிவாவில் உள்ள ஐ. நா சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார். அத்துடன், சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிக்கும் அடிப்படைக் கொள்கைகளை இந்தியா ஆதரித்து வருவத…

  16. 65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று : 23 ஜூலை 2011 வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வெறுமனே நடமாடி திரியவேண்டாம் - தேர்தல் ஆணையாளர் 65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று : 65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 2 ஆயிரத்து 226 வாக்களிப்பு நிலையங்களில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. 20 அரசியல் கட்சிகள், 72 சுயேட்சைக்குழுக்களை சேர்ந்த 5 ஆயிரத்து 688 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில் 875 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட உள்ளனர்.ஒரு மாநகர சபை, 9 நகர சபைகள், 55பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது…

  17. இலங்கைக்கு தடைவிதிக்கும் தீர்மானம் குறித்து ஜெயலலிதா மகிழ்ச்சி Posted by சங்கீதா on 27/07/2011 in செய்தி இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது நடந்ததாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் வகையில் இலங்கைக்கான உதவியை தடை செய்யும் தீர்மானம் அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்றம்) குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளதையிட்டு ஜெயலலிதாவின் தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெரும் மகிழச்சியில் ஆழ்ந்துள்ளது என ‘தி ஏசியன் ஏஜ்’ செய்தி வெளியிட்டுள்ளது. அ.இ.அ அண்ணா தி.மு.க வைச் சேர்ந்த பல அமைச்சர்களும், சிரேஷ்ட அங்கத்தவர்களும் அமெரிக்காவின் முன்னுதாரணத்தை பாராட்டி செவ்வாய்க்கிழமை தமிழ் பத்திரிகைகளில் பெரிய விளம்பரங்களை பிரசுரித்திருந்தனர். உலகி…

  18. சர்வதேச மேற்பார்வையுடனேயே உள்ளக விசாரணைப் பொறிமுறையை அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறின்றி, தவறான பாதையில் பயணிக்குமானால், மஹிந்த ஆட்சிக்கு நடந்ததே இந்த அரசுக்கும் நடக்கும். அதைக் காண நாம் விரும்பவில்லை. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் பரணகம ஆணைக்குழு தமது விசாரணை நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்கவில்லை. பரணகம ஆணைக்குழுவின் சில அமர்வுகளில் நானும் பங்குபற்…

  19. நாம் நாமாக, நாம் தமிழர்களாக இருப்போம் `எங்கள்', `உங்கள்' என்று பிரித்துப் பேசாதீர் [29 - May - 2007] * உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டில் கருணாநிதி வேண்டுகோள் தமிழ் நமது மொழி, அதுவே நமது வழி. எனவே `எங்கள்`, `உங்கள்' என பிரித்துப் பேசாதீர்கள். நாம் நாமாக இருப்போம். நாம் தமிழர்களாக இருப்போமென இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களிடம் முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 7 ஆவது மகாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் இடம்பெற்றுவந்தது. இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் கருணாநிதி இவ்வாறு தெரிவித்த…

  20. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை : மக்கள் பாதிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக என முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உதவிகள் வழங்கப்பட்டன. அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்படும் போது எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய செயற்பாடுகளில் மக்கள் ஈடுபடவேண்டும். தற்காலிக வீடுகளில் இருக்கின்ற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்க…

  21. இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ‘Airavat’ யுத்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (18) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. 124.8 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 170 கடற்படை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், அதன் பணியாளர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பல பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். நாட்டிலுள்ள சில சுற்றுலாத்தலங்களையும் அவர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பல் நாளைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது. https://thinakkural.lk/article/277587

  22. ஓமந்தை முன்னரங்க நிலைகளில் மோதல்: படைத் தரப்பில் ஒருவர் பலி! மற்றவர் படுகாயம். வவுனியா ஓமந்தை முன்னரங்க நிலைகளில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற மோதலில் சிறீலங்காப் படைத்தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு மற்றவர் ஒருவர் காயமடைந்துள்ளார் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் உறுதி செய்துள்ளது. -Pathivu-

  23. இன்று இரவு டென்மார்க் தொலைக்காட்சியில் "இலங்கையின் படுகொலைக்களம்" பதிந்தவர்: தம்பியன் புதன், 10 ஆகஸ்ட், 2011 2009ம் ஆண்டு முற்பகுதியில் தமிழீழ மக்கள் மீது இலங்கை இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான இனப்படுகொலையை தொகுப்பாக்கி சனல்4 தொலைக்காட்சி "இலங்கையின் படுகொலைக் களம்" என பெயர்சூட்டி ஒரு ஆவணத் திரைப்படமாக்கியது. இத் திரைப்படம் பல நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டு எல்லோர் மனதிலும் ஈழத் தமிழர்களின் அவலங்களை பதிவாக்கியது. இந்நிலையில் இன்று புதன்கிழமை டென்மார்க் தொலைக்காட்சியிலும் (DR2) இரவு 10.50 மணிக்கு ஒளிபரப்பபடும் என தெரியவந்துள்ளது. சிறிலங்காவில் கொலைக்களம் ஒளிபரப்பப்பட்ட நாடுகளால் தமிழினப் படுகொலைக்கு எதிரான விசாரணையின் அவசியம் வலியுறுப்பட்டுள…

    • 4 replies
    • 1.3k views
  24. திஸ்ஸ கரலியத்த இராஜினாமா புத்தசாசனம் மற்றும் பொது நிர்வாக பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசின் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டபோது, திஸ்ஸ கரலியத்தவிற்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தாமை உள்ளிட்ட சில விடயங்கள் காரணமாக, தாம் பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததாக திஸ்ஸ கரலியத்த மேலும் தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=240653955202202071

  25. பால்நிலை வன்முறைக்கெதிராக யாழில் அமைதி ஊர்வலம். யாழ்ப்பாணத்தில் பால்நிலை வன்முறைக்கெதிராக அமைதி ஊர்வலமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றது. யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் வேலைத் தளங்களில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாது ஒழிப்போம் என்ற தொணிப் பொருளில் இவ் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. யாழ் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் நாவலர் கலாச்சார மண்டபம் வரை சென்று நிறைவடைந்தது. பெண்களை ஒதுக்காது புதிய வாய்ப்புக்களை வழங்குவோம்,நான் எல்லா வகையான வன்முறைக்கும் எதிரானவள்,வன்முறையை தவிர்ப்போம் பெண்களை வாழவிடுவோம் உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு பெண்கள் ஊர்வலத்தில் பங்குபற்றியிருந்தனர். ஊர்வலத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.