ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமத்தின் அல்லது சமூகத்தின் சனத்தொகை செறிவைக் குறைப்பதற்கு ஒன்றில் இனச் சுத்திகரிப்பை அல்லது சட்டவிரோதக் குடியேற்றத்தை ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு கருவியாகப் பயன்படுத்துவது அவர்களின் நீண்ட கால அரசியல் தந்திரோபாயமாகும். அதன் மூலம் குறிப்பிட்ட சமூகத்தின் நிலத்தொடர்ச்சியை இல்லாதொழித்து அவர்களுடன் பேரினத்தை கலப்பதன் மூலம் சனத்தொகையை ஐதாக்கி, அரசியல் பலத்தை சிதைப்பது ஏகாதிபத்தியவாதிகளின் உள்நோக்கமாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலகின் பல நாடுகளில் இந்தத் தந்திரத்தை ஏகாதிபத்திய அரசுகள் மிக இலாவகமாகக் கையாண்டுள்ளன. அயர்லாந்தில் பிரிட்டன் மேற்கொண்ட குடியேற்றங்களும் போல்…
-
- 16 replies
- 1.1k views
-
-
அம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை! அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 6 குற்றவாளிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த 6 பேரும் கெஹலஉல்ல பகுதியில் லொறி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதேச மக்கள் இருவரைத் தாக்கி, பின்னர் அவர்கள் மீது லொறியை ஏற்றிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குறித்த 6 பேருக்கும்…
-
- 0 replies
- 100 views
-
-
தனது பாராளுமன்ற மாதாந்த சம்பளம் அனைத்தும் அம்பாறை மாவட்ட கல்வி வளர்ச்சிக்கே !! எனக் கூறிய றொபின் என அழைக்கப்படும் கவீந்திரன் கோடீஸ்வரன் தமிழ் தேசியகூட்டமைப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்... தான் பாராளுமன்றத்துக்கு மக்களால் தெரிவாகி சென்றால் எப்படியான வேலைத்திட்டங்களை மேற்கொள்வேன் என்பதை ஏற்கனவே துண்டுப்பிரசுரம்மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தி இருந்தார். 1) தனது பாராளுமன்ற மாதாந்த முழுச்சம்பளத்தையும் அம்பாறை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துவேன் 2) பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வறிய மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு. 3) தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு கல்விச்செலவுக்கான மாதாந்தக்கொடுப்பனவு 4) அரசியல் கைதிகளின் விடுதலை. 5) அரசாங்கத்தினா…
-
- 1 reply
- 710 views
-
-
அம்பாறை வந்த மக்களுக்கு மீண்டும் கிடைத்தது அகதி வாழ்க்கை வீரகேசரி இணையம் 9/14/2009 3:35:11 PM - வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்ட, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வேறு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து அம்பாறை மாவட்டத்தின் 48 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் மீள் குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டனர். இவர்களைச் சிவில் அதிகாரிகள் பொறுப்பேற்று சனிக்கிழமை அழைத்து வந்தனர். காரைதீவு இராமகிருஷ்ணன் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்ட இவர்களின் விபரங்கள் பொலிசாரால் பதிவு செய்யப்பட்ட ப…
-
- 0 replies
- 505 views
-
-
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இடையே நடைபெற்ற நேரடி மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 499 views
-
-
அம்பாறை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் மூன்று படையினர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2008, 09:28 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை வனப்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி மோதலில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அம்பாறை மாவட்ட விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளை தேடியழிக்கும் சிறிலங்கா படையினரின் வழமையான நடவடிக்கையின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். புதினம்
-
- 0 replies
- 723 views
-
-
அம்பாறை விநாயகபுரத்தில் கைக்குண்டு மீட்பு அம்பாறை மாவட்டம் திருக்கோவில் விநாயகபுரம் சிறிலங்கா படைச் சோதனைச் சாவடிக்கு அருகில் நேற்று பிற்பகல் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. இதேவேளை, காத்தான்குடி மண்முனைப்பகுதியில் இளைஞர் ஒருவர் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று பிற்பகலில் இவர் கைது செய்யப்படுள்ளதாகவும் அவரிடம் மேலதிக விசாரணை மேற்கொள்வதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். — அம்பாறையிலிருந்து மீனகம் செய்தியாளர் http://meenakam.com/?p=1981
-
- 1 reply
- 482 views
-
-
அம்பாறை விவகாரம் ; பிரதமருடன் ஹக்கீம் இன்றிரவு அவசர சந்திப்பு சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வௌ்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் நாடு திரும்பியவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவசரமாக சந்திக்கவுள்ளார். அம்பாறை கலவரம் தொடர்பாக கொழும்பு 07 இல் 5ஆம் ஒழுங்கையிலுள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்புக்கு பொலிஸ் மா அதிபரும் அழைக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து பிரதமர் தொலைபேசி மூலம் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகொண்டு அம்பாறை நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். …
-
- 0 replies
- 239 views
-
-
அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்த்தான வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றத் திருவிழாவானது இன்று (01/09/2010) இடம்பெற்றது.இக் கொடியேற்றத்திருவிழாவானது வீரமுனை பிரதேச மக்களால் நடாத்தப்பட்டது.இந் நிகழ்வினை தொடர்ந்து அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது
-
- 2 replies
- 1k views
-
-
அம்பாறை- உமரியில் காடழித்து நில ஆக்கிரம்பு நடவடிக்கை அம்பாறை- உமரி கிராமம் பகுதியிலுள்ள கல்பாறைகளான மலைகளிலுள்ள காடுகளின் மரங்களை வெட்டி தீயிட்டு, காடழிப்பு நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உமரி கிராமத்தில் இருக்கும் இந்த கல் பாறைகளுடனான காட்டுபகுதி, அரச காணிகள் ஆகும். களப்பு மற்றும் வட்டிகுளம் பகுதியை அண்மித்த பகுதிகளிலுள்ள கிராமங்களிலுள்ள இந்த காடுகளின் மரங்களை சிலர் வெட்டி, அதனை தீயிட்டு அழித்து நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையினை சில வாரங்களாக மேற்கொண்டு வருகின்றனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 479 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம மக்கள் காணிகளை வேறு பிரதேசங்களிலிருந்து வரும் சிங்களவர்களினால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. பரம்பரை பரம்பரையாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவரும் காணிகளே இவ்வாறு அபகரிக்கப்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்வாறு காணிகளை அபகரிப்பவர்களில் ஊர்காவற்படை மற்றும் காவல்துறை ஊழியர்களும் உள்ளனர். அத்துடன், இதுவரை சுமார் 400 ஏக்கர் காணி நிலப்பரப்பு இவ்வாறு பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பலவந்தாக காணிகள் அபகரிக்கப்படுகின்றமை தொடர்பாக பிரதேச செயலர் மற்றும் அம்பாறை காவல்துறையினருக்கு காணி உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ள போதிலும் இதுகுறித…
-
- 1 reply
- 554 views
-
-
அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கெதிராக வெள்ளிக்கிழமை(06) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சிபாரிசு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை மாவட்டம் தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவவதாகவும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சாய்ந்தமருது பிராதான வீதியில் அமைச்சர் ரவூப் ஹக்கிமின் கொடும்பாவியை எரிப்பதற்கு முயற்சித்த…
-
- 0 replies
- 339 views
-
-
-ரீ.கே.றஹ்மதத்துல்லா அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டமடு பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (25) பதற்றமான நிலையொன்று ஏற்பட்டது. இப்பிரதேசத்தில் மகா போகத்துக்கான நெற்செய்கையை மேற்கொள்ளவதற்கென உழவு இயந்திரங்கள், உபகரணங்களுடன் ஒரு தரப்பினர் அங்கு சென்ற போது மற்றுமொரு தரப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் இரு சாராருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இரு குழுக்களுக்குமிடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது. விவசாயச் செய்கையாளர்கள் தமது காணிக்கான உத்தரவுப்பத்திரம் உள்ளதாகவும் தமக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதானது சட்டவிரோதமானது என தெரிவித்தனர். இதேவேளை, 500க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் தமக்கான மேய்ச்சல் தரையினய…
-
- 2 replies
- 500 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் வேல்ட் விஷன் நிறுவனத்தின் திட்டக் கிராமமான நாவிதன்வெளியிலுள்ள சிறுவர் கழகத்தினர் இரண்டு நாள் பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமாகியுள்ளனர். வேல்ட் விஷன் நிறுவன வலி.மேற்கு திட்ட வளவாளர் வி.வென்சஸ், நாவிதன்வெளி திட்ட வளவாளர் ஆர்.சதீஸ் ஆகியோர் தலைமையில் அழைத்துவரப்பட்ட இந்தச் சிறுவர் கழகத்தினர் இன்று பொன்னாலை பாபுஜி முன்பள்ளிக்கு நட்புமுறைப் பயணத்தை மேற்கொண்டனர். இந்த முன்பள்ளியில் இவர்கள் சிரமதானப் பணி ஒன்றையும் முன்னெடுத்தனர். இதைவிட, அராலியில் உள்ள சிறுவர் கழகங்களுடன் சிறுவர் உறவுப் பரிமாற்ற நிகழ்வுகளிலும் இவர்கள் ஈடுபட்டனர். அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இன்று மதியம் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மேற்படி நாவிதன்வெளி சிறுவர் …
-
- 0 replies
- 265 views
-
-
அம்பாறை, பாலமுனை பகுதியில் வெடிப்பொருள்கள் மீட்பு -வசந்த சந்திரபால, எம்.ஏ.றமீஸ் அம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து வெடிப்பொருள்கள் சில இன்று (18) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரி - 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் வெடிப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இராசாய பொருள்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த வெடிப்பொருள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றக்கட்டுள்ளன. இதேவேளை, பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி குறித்த பகுதியில் தொடர்ந்து அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tam…
-
- 1 reply
- 317 views
-
-
அம்பாறை, மகாஓயா பிரதான வீதியை மறித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்கு எந்தவொரு திட்டமும் முன்வைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். நெல் மூட்டைகள் அடுக்கப்பட்ட ரக்டர் மற்றும் லொறிகளை வீதிக்கு எடுத்து வந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உகண பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக அத தெரண செய்தியாளர் குறிப்பிட்டார். http://www.sankathi24.com/news/33286/64//d,fullart.aspx
-
- 0 replies
- 410 views
-
-
அம்பாறை, மட்டக்களப்பில் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 7 வது வருடாந்த பல்துறை மருத்துவ முகாம் Published By: Vishnu 19 Sep, 2025 | 07:20 PM இராணுவ வீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நடாத்தப்பட்ட பல்துறை மருத்துவ முகாம்களின் 7 வது கட்டம் வெள்ளிக்கிழமை (19) அம்பாறை, கொண்டுவட்டுவான் இலங்கை இராணுவ போர் பயிற்சிப் பாடசாலையில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வசிக்கும் காயமடைந்த போர்வீரர்கள், வீரமரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற வீரர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் உட்பட 1250 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். போர் வீரர் விவகாரம் மற்றும் புணர்வாழ்வு பணிப்…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
-எஸ்.கார்த்திகேசு அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்திலுள்ள இந்து ஆலயங்களில் 30ஆம் திகதி வியாழக்கிழமை(30) இரவு உண்டியல்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம் மற்றும் திருக்கோவில் மண்டானை பிள்ளையார் ஆலய என்பவற்றில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. இதனையடுத்து திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயன தென்னக்கோன் சம்பவம் இடம்பெற்ற ஆலயங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/131554-2014-10-31-11-41-58.html
-
- 0 replies
- 417 views
-
-
அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 446 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 691 views
-
-
பாறுக் ஷிஹான், சகா தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறை மாவட்டத்துக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்ட நிலைப்பாடுகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று, காரைதீவு பிரதேசத்தில் நேற்று (11) நடைபெற்றது. இதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்துத் தெரிவிக்கையில், “அம்பாறை மாவட்ட வேட்பாளர் தொடர்பான இறுதித் தீர்மானம், தமிழரசுக் கட்சியின் பங்காளிக் கட்சிகளான டெலோ இயக்கம், பளொட் இயக்கம் ஆகியவற்றில் வேட்பாளர் தெரிவின் இறுதித் தீர்மானம், திருமலை மாவட்டத்தில் நடைபெறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டத்தி…
-
- 0 replies
- 207 views
-
-
அம்பாறைத் தமிழர்கள் மிகவும் அவதானமாகவும், நிதானமாகவும் வாக்குப் பலத்தைச் செலுத்தாவிடின் நிச்சயம் மாற்றுச் சமூகங்களின் அடிமைகளாகிவிடுவோம் : தவராசா கலையரசன் ! on Sunday, November 03, 2024 By kugen NO COMMENTS (சுமன்) அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகவும், நிதானமாகவும் எமது வாக்குப் பலத்தைச் செலுத்தவில்லை என்றால் நாங்கள் நிச்சயம் மாற்றுச் சமூகங்களின் அடிமைகளாகிவிடுவோம். எனவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விட்ட தவறினைத் திருத்தியமைக்க வேண்டும். என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். …
-
-
- 8 replies
- 428 views
-
-
அம்பாறையிலிருந்து மட்டு விவசாயிகளுக்கு நீர் வழங்கல் – அரச அதிபரின் முயற்சி நிறைவேறியது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக விவசாயிகலான பட்டிப்பளை பிரதேச புளுக்குணாவி குளத்து நீரைநம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் கடந்தமாதம் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிடம் முறையிட்டதையடுத்து அரசாங்க அதிபரின் தீவிரமுயற்சியினால் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உரையாடியதைத் தொடர்ந்து களுகல் ஓயா சமூத்திரத்தில் இருந்து நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி கடந்த வெள்ளிக்கிழமை நவகிரி குளத்தில் இருந்து தற்போது புளுக்குணாவி குளத்திற்கு வந்த நீர் விவசாயிகளின் விழைநிலங்களுக்கு திறக்கப்பட்டுள்ளதாக பட்டிப்பளை பிரதேச பொறியலாளர் சதாசிவம் சுபாகரன் தெரிவ…
-
- 1 reply
- 317 views
-
-
அம்பாறையில் சினைப்பர் தாக்குதல்: அதிரடிப்படையினர் இருவர் பலி. அம்பாறை றூபஸ் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய சினைப்பர் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். றூபஸ் பகுதி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை அரண் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதலைப் புலிகள் சினைப்பர் தாக்குதலை நடத்தினர். இதில் அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்த அரண் மீது விடுதலைப் புலிகள் ஆர்பிஜி தாக்குதலை நடத்தியுள்ளனர். -Puthinam-
-
- 0 replies
- 1.2k views
-
-
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின்போது 12 தமிழ் இளைஞர்கள் கைதானதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 491 views
-