ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143559 topics in this forum
-
வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் உள்ள இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு 50 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கப் பேச்சாளர், மருத்துவத் தாதியர்களின் பணிகளைக் கூட இந்த மருத்துவர்களே செய்ய வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இடம்பெயர்ந்த மக்களுக்காக என வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் போதுமான மருத்துவ வசதிகளோ தேவையானளவு மருத்துவப் பணியாளர்களோ இல்லை என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்திருக்கும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், இதனால் மருத்துவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன், மருத்துவ சேவையையும் வழங்குவதில் நெ…
-
- 0 replies
- 327 views
-
-
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவை ஒன்று விரைவில் தொடங்கவிருக்கின்றது. தெற்கு ஆசியப் போக்குவரத்து அமைச்சர்களுடன் நேற்று சனிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் டல்லஸ் அழகப்பெரும இதனை அறிவித்திருக்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையை மீண்டும் தொடங்கவேண்டும் என சார்க் பிராந்திய போக்குவரத்து அமைச்சர்களின் கடந்த மாநாட்டில் சிறிலங்காதான் முன்வைத்தது எனவும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார். "இந்தியத் தரப்பினர் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதனால் இந்தச் சேவை விரைவில் தொடங்கும்" எனவும் அவர் குறிப்பிட்டார். "இதன்படி கொழும்புக்கும் தென்னிந்திய நகரான கொச்சினுக்கும் இடையிலான கப்ப…
-
- 0 replies
- 429 views
-
-
மன்னார் பேசாலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடற்கரையை அண்டிய கரவலைப்பாடு பகுதியில் இறால் பண்ணை அமைப்பதற்காக அவ்விடத்துக்கு வருகை தந்திருந்தபொழுது அங்கு எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. இது குறித்து தெரியவருவதாவது, இன்று வியாழக்கிழமை காலை மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுடன் தென் பகுதியிலிருந்து வருகை தந்திருந்தவர்கள் மன்னார் மாவட்டத்தில் அதிக மீனவ சமூகம் கொண்ட பேசாலை பகுதியில் இவர்களுக்கு உரிமையான கரவலைப்பாட்டு பகுதிக்கு அண்டிய பகுதியில் இறால் பண்ணை அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது இவ் மீனவ சமூகத்துக்கு தெரிய வந்தது. இதை அறிந்த பேசாலை மீனவ சமூகம் இவ் இறால் பண்ணை இவ்விடத்தில் அமையுமானால் கரவலையை நம்பி வாழும் மீனவ சமூகத்துக்கு இது ப…
-
- 0 replies
- 465 views
-
-
கிளிநொச்சி அரச அதிபர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது? வீரகேசரி இணையம் 8/1/2009 8:35:18 PM - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் விசாரணைக்காக புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன் இரவு இவர் தமது அலுவலக கடமைகளை முடித்துக்கொண்டு, வவுனியாவில் உள்ள தமது அரச விடுதியில் இருந்த போது இவர் புலனாய்வு பிரிவினாரல் கைது செய்யப்பட்டுள்ளதாக சிவில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் கைது செய்யப்பட்டபோது இவரது பொறுப்பில் இருந்த அரச வாகனம், அலுவலகம் தொடர்பான ஆவணங்கள் என்பன அதிகாரிகளினால் கிளிநொச்சி அரச அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பயங்…
-
- 0 replies
- 519 views
-
-
பிரபாகரனுடன் நடைபெற்ற கடைசி உரையாடலின் ஒரேயொரு சாட்சி !இறப்பதற்கு முன் விடுதலைப்புலிகள் யாரை நம்பி முள்ளி வாய்க்காலுக்குள் நுழைந்தார்கள் இப்போது யாரை நம்பி கே.பி. மலேசிய கோட்டலுக்குள் நுழைந்தார் ? இரண்டிற்கும் என்ன தொடர்பு ? கே.பி கைதானது தாய்லாந்தில் அல்ல மலேசியாவில் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.பியின் ஆதரவு இணையத்தளம் ஒன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. மலேசியாவில் உள்ள மஜீத் இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியில் இருவரைச் சந்தித்துவிட்டு தொலைபேசி செய்ய வெளியே சென்றவேளை இவர் கடத்தப்பட்டுள்ளார். யார் அந்த இருவர் ஏன் சென்றார்கள் ? கே.பியை சந்திக்கச் சென்ற இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலஞ்சென்ற அரசியல் துறை பொறுப்பாளரான பா.நடேசனின் சக…
-
- 0 replies
- 1.6k views
-
-
தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவு அங்கீகாரம் குறித்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரவேற்பு இலங்கையின் முதலாவது தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரவேற்றுள்ளார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கக் கொள்கை அலுவலகத்தின் இந்த வரைவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாரம் சபையில் சமர்ப்பித்திருந்தார். இதை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. நல்லிணக்கத்துக்கான தேசியக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்தும் முயற்சி 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பமானது. அது முதல் சுமார் ஒரு வருட காலம் வரைவுக்கான ஆலோசனைகள் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும…
-
- 0 replies
- 352 views
-
-
இலங்கையில் சுமூக நிலையா? கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம். இலங்கையில் சுமூக நிலையா? கருணாநிதிக்கு கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம் விடுத்துள்ளார். இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்: ‘‘இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்த பிரச்னையை கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்’’ என முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? அல்லது 3 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உண…
-
- 1 reply
- 643 views
-
-
ஒரு கெரில்லா அமைப்புப் போல செயற்பட்ட சிறிலங்கா தரைப்படையின் தந்திரோபாயம், தரைப்படையை மீள்கட்டமைப்புச் செய்தமை, ஊழல்களை முடிவுக்குக் கொண்டுவந்தமை, சூட்டு வலுவை அதிகரித்தமை மற்றும் சங்கிலித் தொடரான நேரடிக் கட்டளை அமைப்பு என்பனதான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிகொள்வதற்கு உதவியது என சிறிலங்காவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாதுகாப்புத் தலைமை அதிகாரியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் முதல் தடவையாக பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்தார். 'வெற்றிபெறும் படைத்துறை தந்திரோபாயங்கள் - முகாமையாளர்களுக்கான பாடங்கள்' என்ற தலைப்பில் அவர் தனது உரையை நிகழ்த்தினார். தான் தரைப்ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
தம்புள்ளையில் உள்ள காளி கோயிலின் மூலவிக்கிரகம் நேற்று இரவு பௌத்த அடிப்படைவாதிகளால் எடுத்துச் செல்லப்பட்டு உடைத்தெறியப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட விக்கிரமகத்தின் பாகங்கள் வேறு இடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த கோயில் மற்றும் அருகில் உள்ள பள்ளிவாசல் ஆகியவற்றை அகற்றவேண்டும் என்று அங்குள்ள பௌத்த விஹாராதிபதி தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளார் இதனையடுத்து குறித்த கோயில் நிர்வாகத்தினர் எதிர்வரும் 15ம் திகதி வரை தமக்கு அவகாசம் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத பௌத்த அடிப்படைவாதிகள் நேற்று இரவு விக்கிரகத்தை எடுத்து சென்று உடைத்துள்ளனர். ஏற்கனவே தம்புள்ளையில் உள்ள அம்மன் கோயிலும் பாதை சீரமைப்பின் நிமித்தம் அகற்றப்பட்டமை…
-
- 1 reply
- 636 views
-
-
தேரர்கள் அத்துமீறி நுழைந்து காணியை அபகரிக்க முயற்சி தீஷான் அஹமட் திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் நீணாக்கேணி பிரதேசத்தில் முஸ்லிம்கள் பூர்வீகமாகப் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வசித்து வந்த குடியிருப்புக் காணியைக் கைப்பற்றுவதற்கு முயன்றமையால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. பௌத்த மதகுருவும், பௌத்த இளைஞர் குழுவும், இயந்திரங்களின் உதவியோடு, நேற்று (15) காலை அக்காணிக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனால், பதற்ற நிலைமை தோற்றியது. காணியின் பாதுகாப்புக்காக, போடப்பட்டிருந்த வேலிகள் இயந்திரங்களால் உடைத்தெறியப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து அங்கு மக்களும் ஒன்று திரண்டுவிட்டனர். இதனால், இவ்விரு தரப்பினர…
-
- 0 replies
- 266 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட காணிப் பதிவுகள் அனைத்தையும் இரத்துச் செய்யும்படி அரச அதிபரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் றஞ்சித் சில்வா உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக காணிகள் விற்பனை செய்யப்படுவதைத் தடைசெய்வதை உள்நோக்கமாகக் கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு தமிழ் அரசியல்வாதிகளினால் உப்புவெளியில் உள்ள கடற்கரையோர காணிகள் சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்யப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் முழுமையாகும் வரைக்கும் இந்தத் தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும். இந்த மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு என இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குற்றத் தடு…
-
- 0 replies
- 525 views
-
-
பொதுபலசேனா அமைப்பும் அதன் முக்கியஸ்தர் ஞானசாரவும் கடந்த அரசிலும் இந்த அரசிலும் தொடர்ந்தேர்ச்சியாக முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுத்து கொண்டும் வஞ்சித்து கொண்டும் இருக்கின்றார், புனித இஸ்லாத்தையும் இறைவனையும் இழிவாகவும் பேசுகிறார். இப்படி இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியவர்களின் இறுதி நிலை வரலாறுகளின் அடிப்படையில் ஒன்றில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பர் இல்லயேல் முடிவு மிகக் கேவலமாக இருக்கும் என சிலோன் முஸ்லிம் பிரதானி பஹத் ஏ.மஜீத் குறிப்பிட்டுள்ளார்.புலம்பெயர் மத்திய கிழக்கு இலங்கை முஸ்லிம்களை சிலோன் முஸ்லிம் அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார்,மேலும் உரையாற்றிய பஹத் ஏ.மஜீத்,இஸ்லாம் பரிபூரண மார்க்கம், சகவாழ்வு, சமாதானம், ஒழுக்கம், உண்மை, நேர்மை என்பவற்றால்…
-
- 4 replies
- 501 views
-
-
சீனாவும் சிறிலங்காவும் புடம்போடப்பட்ட நண்பர்கள் எனத் தெரிவித்திருக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக சீனா மேற்கொண்ட உதவிகளுக்கு சீனாவிற்கு நன்றிக் கடன்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் தலைமையிலான குழுவினரைச் சந்தித்து உரையாடியபோதே மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு நீண்ட காலமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இப்போது புடம்போடப்பட்ட நண்பர்களாகி உள்ளனர் என்று தெரிவித்தார் மகிந்த ராஜபக்ச. சீனாவின் கொள்கைகளுக்கு சிறிலங்கா எப்போதுமே ஆதரவாக நின்றுள்ளது எனக் கூறிய அவர், அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் தெரி…
-
- 0 replies
- 479 views
-
-
சுமார் 3 லட்சம் தமிழ் மக்களை சிறிலங்கா அரசு அடைத்து வைத்துள்ள தடுப்பு முகாம்களுக்கு காலவரையறையற்று தொடர்ந்தும் நிதி வழங்கிக்கொண்டிருக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 471 views
-
-
தமிழால் இணைவோம் என்ற தாரக மந்திரத்துடன் த ஹிந்து தமிழ் பதிப்பை ஆரம்பித்து இருக்கின்றது...... ஆரம்பகாலங்களில் எல்லாம் 1980 90 களில் மாலினி பார்த்த சாரதி போன்ற பத்திரிக்கை ஜாம்பவான்கள் ஹிந்து வில் பணியாற்றிய காலத்தில் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக தான் ஹிந்து இருந்தது இன்பாக்ட் புலிகளை ராஜீவ் காந்தியை சந்திக்க வைத்ததிலும் மாலினி போன்றோரின் பங்கு மிகப்பெரியது பின்பு ராஜீவ் காந்தியின் கொலை அதனால் ஏற்ப்பட்ட மாற்றங்கள் என்று ஹிந்துவும் தனது பாதையை மாற்றி இலங்கை தமிழருக்கு எதிராகவே செய்திகளை போட்டு வருகின்றது எது எப்பிடி இருப்பினும் புதிய தமிழ் பதிப்புடனாவது ஈழத்தமிழருக்கும் சேர்த்து குரல் எழுப்பும் பத்திரிகையாக ஹிந்து இருக்கட்டும் புதிய தமிழ் பதிப்பிற்கு வாழ்த…
-
- 6 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்புக்காக 80-க்கும் அதிகமான பாதுகாப்பு அதிகாரிகளை அரசு வழங்கியிருக்கும் அதேவேளையில், அவரின் பாவனைக்காக 12 அரச வாகனங்களும் வழங்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசு நேற்று தெரிவித்திருக்கின்றது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள சந்திரிகா குமாரதுங்க, இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்ட பின்னர் கூட அச்ச நிலை தொடர்வதாகவும், தனது உயிருக்குக் கூட அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். சந்திரிகா குமாரதுங்கவின் இந்தக் குற்றச்சாட்டை நேற்று வியாழக்கிழமை நிராகரித்த ஊடகத்துறை அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா, சந்திரிகா தெரிவித்துள்ள தகவல்கள் தவறானவை எனக…
-
- 0 replies
- 421 views
-
-
வதைகளும் வலிகளும் தந்தவர்களை விடுத்து வாழ்வு வளம்பெற மக்கள் வாக்களிப்பார்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா… ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தினமுரசு பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி கேள்வி: மாகாண சபை உங்களது கனவு என்று கூறிவந்த நீங்கள் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிக் கொண்டது ஏன்? பதில்: மக்களின் ஆணையை பெற்று மாகாணசபையை வெற்றி கொள்வதும், மாகாண சபை அதிகாரங்களை பாதுகாப்பதும், அதற்கான அதிகாரங்களை மேலும் பெற்று மாகாணசபையை வலுவுள்ளதாக வளர்ப்பதும், அதனூடாக எமது அரசியல் இலக்கு நோக்கி செல்வதும் எனது கனவு என்பதில் என்றும் மாற்றம் இல்லை. நான் தேர்தலில் போட்டியிடவில்லை …
-
- 1 reply
- 502 views
-
-
மேற்கத்தேய நாடுகளின் உதவியுடன் ஜனாதிபதியைக் கொலை செய்து, அரசாங்கத்தின்அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு திட்டம் தீட்டப்பட்டதாக குற்றஞ்சுமத்தி ரணில் விக்ரமசிங்கவயும், மங்கள சமரவீரவையும் கைதுசெய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கத்தின் மிகவும் நம்பகரமான தகவலொன்று தெரிவித்தது. எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டமைப்பு கையெழுத்திடுவதற்கு முன்னர் இவர்கள் கைதுசெய்யப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. தமது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து மேலதிக தகவல்களை வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சரொருவர் மேலும் தகவல் தருகையில், ரணில், மங்கள ஆகியோரைக் கைதுசெய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான சூழ…
-
- 1 reply
- 973 views
-
-
டக்ளசின் தேவையும் தயவும் ஆட்சியாளருக்கு புளித்துவிட்டதா? 30 செப்டம்பர் 2013 எதிர்க்கட்சித் தலைவர் பதவி அங்கஜனுக்கா? பனிப்போர் தொடர்கிறது வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட ஈபிடிபிக்கு 2 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தது. மிகுதி 5 ஆசனங்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் 1 ஆசனம் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசிற்கும் கிடைத்தது. அங்கஜன் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வடக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமது கட்சிக்கே வழங்க வேண்டும் என்று ஈபிடிபி கோரியுள்ளது. இதனை வலியுறுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஈபிடிபியின் பொதுச்செயலரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கடிதம் ஒன்றை அனுப்பியுள்…
-
- 5 replies
- 950 views
-
-
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் இயங்கும்... நீர் விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சுத்திகரித்த குடிநீர் விற்பனை செய்யும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை ) நடைபெற்றது. அதன் போது , மாநகர சபை உறுப்பினர் வ. பார்தீபன் “மாநகர சபை எல்லைக்குள் அனுமதி இன்றி சுத்திகரிக்கப்பட்ட நீர் விற்பனை நிலையங்கள் பல இயங்கி வருகின்றன அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் ” என கோரி பிரேரணையை சபையில் முன் வைத்தார். அதனை சபை ஏக மனதாக ஏற…
-
- 1 reply
- 299 views
-
-
சிறிலங்காவில் இருந்து ஆட்களை வெளிநாடுகளுக்கு கடந்த முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் தீவிரவாதத் தடுப்புக் காவல்துறையினரிடம் மேலதிக விசாரணைகளுக்காகக் கையளிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 312 views
-
-
ஜனாதிபதியுடன் பல்வேறு முக்கியமான விடயங்கள் குறித்து பேசினேன்! - மகிந்தவுடனான சந்திப்புத் தொடர்பில் சம்பந்தன் கருத்து!! சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பல்வேறு முக்கியமான விடயங்கள் குறித்து பேசியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நேற்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்தை நடத்தியிருந்தார். இந்நிலையில், சிறிலங்கா ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க விடுத்த அழைப்பின் பேரிலேயே தான் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்ததாகவும், இதன்போது பல்வேறு முக்கியமான விடயங்கள் குறித்து பேசியதாகவும் சம்பந்தன் கூற…
-
- 0 replies
- 409 views
-
-
வட மாகாண சபை சபையின் புதிய அமைச்சர்களாக கந்தையா சர்வேஸ்வரன்மற்றும் கந்தையா சிவனேசன்ஆகியோர் பதவியேற்கவுள்ளனர் என இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சராக யாழ் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மற்றும் சுற்றாடல் அமைச்சராக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவனேசனும் பதவியேற்கவுள்ளனர். அத்துடன் அவைத்தலைவர் மாற்றங்களும் அடுத்த அமர்வில் இடம்பெற்றுள்ளது என எமது செய்திச்சேவைக்கு தகவல் கிடைத்துள்ளது. http://www.quicknewstamil.com/2017/06/20/வடக்கு-மாகாண-சபைக்கு-புத/
-
- 0 replies
- 623 views
-
-
இலங்கையில் புதிதாக... எரிபொருள் நிறுவனம் ஒன்றை, உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி! இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், சுத்திகரிப்பு உற்பத்திகளைப் பயன்படுத்தி, திரவப் பெற்றோலிய எரிவாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமான வகையில், குறித்த கூட்டுத்தாபனத்துடன் கூட்டிணைந்த நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த யோசனை எரிசக்தி அமைச்சரினால், நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1243272
-
- 0 replies
- 193 views
-
-
இது சிவசேகரத்தாரின், தமிழக இதழான புதிய ஜனநாயகத்துக்கென கொடுக்கப்பட்ட பேட்டி. தன் கடும் புலியெதிர்ப்பினை மார்க்சிய கோட்பாட்டுக்களுக்குள்ளும், மார்க்சிய புனைவுகளினூடும் மறைத்து கொள்ள முயன்று, அதில் தோல்வி கண்ட தமிழ் புத்திசீவித்தனத்தின் ஒரு பேட்டி சிவசேகரம் மீது வைத்திருந்த நல்ல அபிப்பிராயம் அனைத்தும், இந்த புலியெதிர்ப்புப் பேட்டியால் இல்லாமல் போய்விட்டது. பேராசிரியர் என்பதற்கு அப்பால், சிறந்த கவிஞர், சமூக ஆய்வாலார் என்பதால் அவரால் சிறந்த விதத்தில் அலசியிருக்க முடியும். ஆனால் கடும் புலியெதிர்ப்பு அவரின் புலமையை அழித்துவிட்டது. சிங்கள பேரினவாதத்தின் தமிழ் மக்களின் மீதான அடக்குமுறையின் எதிர்வினை தான் புலிகள் என்பதனை ஏற்காமல், எந்தவிதமான மறுவிவாதமும் இன்றி புலிகளிகளை பாசி…
-
- 4 replies
- 1.8k views
-