ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதத்திற்கு இழப்பீடாக 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று சுற்றுச்சூழல் நீதி மையம் வலியுறுத்துகிறது. இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடந்த 2021 மே மாதம் நீர்கொழும்புக்கு அப்பால் ஆழமற்ற கடலில் தீப்பற்றி அழிவுற்றது. இதனால் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உரிய இழப்பீடு கோருவதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என சுற்றுச்சூழல் நீதி மையம் குற்ற…
-
- 1 reply
- 443 views
- 1 follower
-
-
Published By: VISHNU 06 APR, 2023 | 11:42 AM (நா.தனுஜா) ஐரோப்பிய ஒன்றியம் அதன் அமுலாக்கப்பங்காளியான 'வேல்ட் விஷன்' உடன் இணைந்து பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் சமூக - பொருளாதாரக்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தின் 18 மாதகாலத்துக்கான 2 மில்லியன் யூரோ நிதியுதவியின்கீழ் 'கிரேஸ்' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் 'கீழ்மட்ட மோதல் தடுப்பு' செயற்திட்டம் வத்தளை பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக கற்பிட்டி, நவகத்தேகம, முந்தல் மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளிலும் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கொ…
-
- 0 replies
- 568 views
- 1 follower
-
-
சைவ சமயத்திற்கும் தமிழ்மக்களுக்கும் எதிராக நடத்தப்படும் அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுக்க வேண்டும் – நல்லை ஆதின முதல்வர் சைவ சமயத்திற்கும் தமிழ்மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளை தென்னிலங்கை அரசியல் வாதிகள் தடுத்து நிறுத்தவேண்டும் என நல்லை ஆதின முதல்வர் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யாது விடின் வடக்கு விஜயத்தின் போது சைவதலைவர்கள் சந்திப்புக்களை தவிப்பார்கள் மேலும் இந்தியா ஆதி சமயமான சைவத்தையும், சைவ ஆலயங்களையும் பாதுகாக்க முன்வரவேண்டும் என வைவ சமய அமைப்புக்கள் தீர்மானம் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்கள் எனத் தெரிவித்து நல்லை ஆதின முதல்வர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சைவ சமயம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் த…
-
- 3 replies
- 314 views
-
-
சர்வ தேசியவாதி க. பத்மநாபாவின் சிலை திறப்பு! By kugen ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்)யின் ஸ்தாபகத் தலைவரும் அதன் முதலாவது செயலாளர் நாயகமுமான க.பத்மநாபாவின் திருவுருவச் சிலை 05.04.2023 புதன்கிழமை அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. வவுனியா மணிக்கூண்டு கோபுரத்திற்கு எதிரில் தந்தை செல்வாவின் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள க. பத்மநாபாவின் சிலையினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன்; திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார். இது குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந. சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு: இலங்கையை ஆட்சி செய்த பிரித்தானிய ஏகாதிப…
-
- 8 replies
- 1.3k views
-
-
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானம்! பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த மார்ச் 22ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியானது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஒழித்து, அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள், சட்டத்தரணிகள் சங்கம், சிவில் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வர…
-
- 0 replies
- 195 views
-
-
வெளிநாடுகளின் உதவியுடன் உரிமைகளை பெற்றுக்கொள்ள தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் - சுரேஸ் பிரேமச்சந்திரன் Published By: Vishnu 06 Apr, 2023 | 11:03 AM அரசாங்கம் பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள சூழ்நிலையில் நாம் வெளிநாடுகளின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து விடயங்கைள முன்னெடுப்பது தொடர்பில் ஈபிஆர்எல்எப் மத்தியகுழுவில் கலந்துரையாடப்படதாக அக்கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஈ. பி.ஆர்.எல்.எப் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றதன் பி…
-
- 0 replies
- 427 views
-
-
நஷ்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 52 அரச நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதாகவும், 13 நிறுவனங்கள் நஷ்டம் அடைவதாகவும் அமைச்சர் கூறினார். நட்டத்தில் இயங்கும் 13 அரச நிறுவனங்களின் நட்டம் 1029 மில்லியன் ரூபா எனவும், இலாபம் ஈட்டும் 39 நிறுவனங்களின் இலாபம் 218 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அரச நிறுவனங்களின் வருடாந்த இழப்பு 811 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக உள்ளதாகவும் அ…
-
- 0 replies
- 536 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 05 APR, 2023 | 02:57 PM இலங்கையின்பொருளாதாரம் 2023 இல் வீழ்ச்சியடைந்த பின்னரே மீண்டும் 2024 இல் வளர்ச்சி பாதையைநோக்கி செல்லும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. 2022 இல் 7 வீதமாக வீழ்ச்சியடைந்து காணப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் மூன்று வீதத்தினால் வீழ்ச்சியடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது. இலங்கை மீட்சிக்காக நீண்டபாதையில் பயணிக்கவேண்டும் வறியவர்களும் நலிந்தவர்களும் பாதுகாக்கப்படுவது அவசியம் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிஇயக்குநர் உட்சவ் குமார் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/152188
-
- 1 reply
- 329 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 05 APR, 2023 | 03:25 PM (செய்திப்பிரிவு) இந்திய - இலங்கை கடற்படையினருக்கிடையிலான பத்தாவது வருடாந்த கடல்சார் இருதரப்பு பயிற்சிகள் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகி 8ஆம் திகதி வரை கொழும்பில் இரு கட்டங்களாக நடைபெறுகின்றது. இதில் முதற்கட்டமாக 3ஆம் திகதி முதல் நேற்று வரையில் துறைமுக மட்டத்திலான பயிற்சிகள் கொழும்பிலும் இன்று முதல் 8ஆம் திகதி வரையில் கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடல்சார் பயிற்சிகளும் நடைபெறுகின்றன. இந்தியக் கடற்படையானது ஐ.என்.எஸ். கில்தான் ( அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு கடற்படைக் கப்பல்) மற்றும் ஐ.என்.எஸ். சாவித்ரி (ரோந்துக் கப்பல்) ஆகிய கடற்படை கப்பல்களால் பிரதிநிதித்துவப்படுத்த…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 05 APR, 2023 | 10:39 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கம்பஹா மாவட்டத்தில் ஓமான் முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மிகவும் பயங்கரமானது. அதனால் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை விரைவில் கைதுசெய்து சட்டத்துக்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கம்பஹா மாவட்டத்தில் …
-
- 1 reply
- 546 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 05 APR, 2023 | 11:46 AM கிளிநொச்சி, பாரதிபுரம் கிராமத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பக்கற் ஒவ்வாமையால் 13 மாணவர்கள் வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (4) அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு திட்டத்தின் கீழ், நிறுவனமொன்று பொதியிடப்பட்ட பால் பக்கற்றுகளை வழங்கியிருந்தனர். அந்த பாலினை அருந்திய பின்னரே மாணவர்களுக்கு வாந்தியும் வயிற்றோட்டமும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பல வைத்தியர்கள் ஒன்றிணைந்த…
-
- 1 reply
- 547 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தல் அடுத்தவருட பிற்பகுதியிலேயே சாத்தியம்-மகிந்த தேசப்பிரிய Published By: Rajeeban 05 Apr, 2023 | 11:14 AM ஜனாதிபதி தேர்தல் அடுத்தவருட பிற்பகுதியிலேயே சாத்தியம் என தான் கருதுவதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்கள் குறித்த கருத்துக்களிற்கு மத்தியில்ஜனாதிபதி தேர்தல்களை அடுத்த வருட பிற்பகுதியிலேயே நடத்த முடியும் என கருதுவதாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசமைப்பின் அடிப்படையில் தனது முதலாவது பதவிக்காலத்தின் நான்குவருடங்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியால் புதிய மக்கள் ஆணையை பெறு…
-
- 0 replies
- 383 views
-
-
”வடக்கு, கிழக்கில் நடப்பவை எனக்குத் தெரியாது என்று ஜனாதிபதி கூற முடியாது” - சார்ள்ஸ் நிர்மலநாதன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணி அபகரிப்பு நடவடிக்கை தனக்கு தெரியாது என ஜனாதிபதி குறிப்பிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகத்தில் சேவையாற்றும் கீர்த்தி தென்னகோனே முன்னெடுத்துள்ளார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி இந்…
-
- 0 replies
- 314 views
-
-
உலகில் மிக அழகான 23 நாடுகளில் இலங்கை ! 2023 ஆம் ஆண்டில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான 23 உலக நாடுகளில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் இதழ் சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த 23 நாடுகளுக்குப் பெயரிட்டுள்ளது. விருது பெற்ற பயண ஆவணப்படத் தயாரிப்பாளரான ஜூலியானா ப்ரோஸ்ட் இந்தப் பட்டியலில் இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அதிக பணவீக்கம் இருந்தாலும், இலங்கை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக இருக்கும் என ஜூலியானா குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரம், கண்டி, யானைகள் சரணாலயம் மற்றும் யால தேசிய பூங்கா ஆகியவை சுற்றுலா தலங்களாகவும், இலங்கையில் குறுகிய தூரத்தில் சென்று பார்க்கக்கூடிய பல இடங்கள் இர…
-
- 4 replies
- 932 views
-
-
மூன்று மாதங்களில் தனியாள் முற்பை வருமான வரியாக 25 பில்லியன் !! 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியாள் முற்பை வருமான வரியாக 25 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஈட்டியுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை தனியாள் முற்பை வருமான வரியில் 25,577 மில்லியன் வசூலித்ததாக உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 3,106 மில்லியனும், பெப்ரவரியில் 10,540 மில்லியனும், மார்ச் மாதத்தில் 11,931 மில்லியனும் வரியாக வசூலித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2023/1329429
-
- 0 replies
- 510 views
-
-
நாடாளுமன்ற முடிவை மீறிய சட்டக் கல்லூரி அதிபர் – நடவடிக்கை எடுக்குமாறு எம்.பி.க்கள் வலியுறுத்து மாணவர்களை அவரவர் தாய்மொழியில் பரீட்சை எழுத அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் எடுத்த தீர்மானத்தை மீறி சட்டக்கல்லூரி அதிபர் செயற்பட்டுள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை மீறி சட்டக்கல்லூரி அதிபர் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்தோடு சட்டக் கல்லூரியின் அதிபரை சலுகைகள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான குழுவின் முன் அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்மொழிந்துள்ளார். சமீபகாலமாக சட்…
-
- 0 replies
- 395 views
-
-
Published By: DIGITAL DESK 5 04 APR, 2023 | 04:26 PM (எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின் போது அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அழிக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) விசேட அறிவிப்புக்களை அறிவிக்கும் போது மேற்கண்டவாறு குறப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 40 ஆவது உறுப்புரையின் அத்தியாயம்,பாரா…
-
- 0 replies
- 412 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கை முடக்குவோம்! - சாணக்கியன் தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தினதும் அரசினதும் இனவாதச் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கில் தொடர்ந்தால் தெற்கு இனவாதிகள் நுழைய முடியாதவாறு வடக்கு, கிழக்கை முடக்கியே தீருவோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “அமைச்சரே (விதுர விக்கிரமநாயக்க) நீங்கள் ஓர் இனவாதி. நீங்கள் கடந்த காலத்திலே மட்டக்களப்புக்கு வந்த போது குசலான மலையில் வைத்து உங்களைத் தடுத்து அனுப்பியமை காரணமாகவே இன்றும் குசலான மலையில் சைவ சமய வழிபாடுகளைச் செய்ய முடிகின்றது. இந்தத் தொல்பொருள் திணைக்…
-
- 1 reply
- 781 views
-
-
Published By: VISHNU 04 APR, 2023 | 03:57 PM (எம்.ஆர் எம்.வசீம். இராஜதுரை ஹஷான்) இலங்கை தேரவாத சிங்கள பௌத்த நாடு ஆகவே பௌத்த மரபுரிமைகளை நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாக்க வேண்டும். இனப்பிரச்சினை உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார், ஆனால் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது, தமிழ் அரசியல்வாதிகளே இனப்பிரச்சினை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்களவர்களை இனப்படுகொலையாளர்கள் என சித்தரிக்கிறார்கள். பௌத்த மத மரபுரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (04) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்க…
-
- 1 reply
- 415 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 04 APR, 2023 | 02:21 PM (எம்.மனோசித்ரா) வருமான வரி அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு , அரச உத்தியோக்கதர்களுக்கு ஏதேனும் நிவாரணத்தை வழங்க முடியுமெனில் அது தொடர்பான யோசனை அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , வருமான வரி தொடர்பில் தொழிற்சங்கங்கள் அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந…
-
- 0 replies
- 594 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 04 APR, 2023 | 04:16 PM இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை 'ராமர்பாலம்' பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில், இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இந்திய தூதரகத்தின் துணை தூதுவரும், அந்நாட்டு முதலீட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர். அத்துடன், இலங்கை கடற்படை …
-
- 0 replies
- 423 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 04 APR, 2023 | 02:35 PM (எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்) இனவாதத்தின் உச்சம் தமிழர்களின் மத உரிமைகளையும் விட்டு வைக்கவில்லை.சிவ தோஷம்-குல நாசம் என்ற வாக்குக்கு அதிக பலம் உள்ளது, சிவன் மீது கை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கி செல்லும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டளைச்சட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வவுனியா வெடுக்குநாறி காட்டுப்பகுதியில் தமி…
-
- 0 replies
- 410 views
- 1 follower
-
-
மின்சார கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மின் தேவை குறைந்துள்ளமை, டொலரின் மதிப்பு சரிவு, எரிபொருள் மற்றும் நிலக்கரி விலை குறைப்பு போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு அதற்கேற்ப மின் கட்டணமும் குறைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மின்சாரத் தேவை 18 சதவீதம் குறைந்துள்ளது. மின் தேவை குறைவதால், மின் உற்பத்தி மற்றும் வழங்கல் செலவும் குறைகிறது. எனவே, இந்த வருடத்திற்கான மின்தேவை மின்சார சபையினால் சரியாக மதிப்பிடப்படவில்லை என…
-
- 1 reply
- 232 views
- 1 follower
-
-
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தமிழ் – சித்திரை புது வருடப் பிறப்பை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, விசேட சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 15 லீற்றர் வரை அதிகரிக்கப்படுகிறது. சாதாரண சேவைகளில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 05 லீற்றரில் இருந்து 8 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 7 லீற்றராகவும், கார்களுக்கான ஒதுக்கீடு 30 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 524 views
- 1 follower
-
-
தம்பாட்டி இறங்குதுறை காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் April 4, 2023 ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஊர்காவற்துறை மீனவர்களுக்கு சொந்தமான தம்பாட்டி இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடற்படையினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் குறித்த அரச காணியிலிருந்து கடற்படையினர் வெளியேறாத நிலையில், நில அளவை த…
-
- 0 replies
- 590 views
-