ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
Published By: RAJEEBAN 14 SEP, 2024 | 10:36 AM தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இலங்கையின் பரந்துபட்ட அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இடைக்கால அமைச்சரவையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். வடக்குகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் இடைக்கால அமைச்சரவை ஏற்படுத்துவதற்கு தனது கட்சி முயலும் என அவர் தெரிவித்துள்ளார். …
-
-
- 22 replies
- 1.6k views
- 1 follower
-
-
கள்ளு இறக்குவதற்குத் தயாராகின்றது புதிய இயந்திரம் 2011-07-03 20:11:44 யாழ் மாவட்டத்தில் பனை மரம் ஏறுவதற்கான புதிய சாதனம் ஒன்றை அறிமுகம் செய்வதற்க்கு பனை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக பனை ஏறும் தொழிலாளர்களுக்கு இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட பனை ஏறும் சாதனம் இரண்டு யாழ்ப்பாணத்திற்க்கு எடுத்துவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://newjaffna.com/fullview.php?id=NDQ4MQ==
-
- 5 replies
- 1.6k views
-
-
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பல இடங்களில் புலிகளாய் மாறுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நான்குநேரி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் எரிமலை இரணியன் பெயரில் திசையன்விளை பஸ் ஸ்டாண்ட் பகுதி, நேருஜி கலையரங்கம் உள்பட பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில், எழுச்சி கொண்டு ஆர்ப்பரிப்போம். தமிழ் ஈழத்தை அங்கீகரிப்போம். இந்திய அரசே, இலங்கை போரை தடுத்து நிறுத்து. சாவின் விளிம்பில் உள்ள 5 லட்சம் அப்பாவி தமிழர்களை காப்பாற்று. தலைவர் திருமாவளவன் உயிருக்கு பங்கம் ஏற்பட்டால் 6 கோடி தமிழர்களும் அலைஅலையாக சிறை செல்வோம். தமிழர்களாய் அணி திரள்வோம். சிறுத்தைகளாய் சீறி எழுவ…
-
- 0 replies
- 1.6k views
-
-
என்னடாப்பா தமிழகத்தில நல்ல மாற்றங்கள் எல்லாம் நடக்குது. கேள்விப் பட்டனியோ என்றார் அவர். ம் என்றேன் நான். மன்மோகன் சிங் இலங்கைத் தூதரை அழைத்து யுத்தத்தை உடனடியா நிறுத்தச் சொல்லியிருக்கிறாராம். உண்மையோ என அவர் கேட்டார். அப்பிடியொண்டுமில்லை என நான் மறுதலித்தேன். ச்சே அங்கை கருணாநிதியோடு கதைச்சிருக்கிறாராம். உடனை தூதரை அழைத்து எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லி சொன்னதா மன்மோகன்சிங் சொன்னாராமே - அவருக்கு தன் புளுகம் முறிந்திடக் கூடாதென்ற தவிப்பு. யுத்தத்தை நிறுத்தச் சொல்லியெல்லாம் சொல்லவில்லை. தூதரை சந்தித்து வழமையாக கதைக்கிறமாதிரி பார்த்து அவதானமா நடந்து கொள்ளுங்கோ என சொல்லியிருக்கிறார்கள். சண்டை செய்யும் போது சனம் சாகாமல் பார்த்துக் கொள்ளுங்கோ என்று கேட்டி…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களினால் ஆரம்பிக்கப்பட்ட www.tamilalliance.comஇணையதளம் குறித்து சட்ட மா அதிபர் கவனம் செலுத்தியுள்ளார். இந்த இணையதளத்தில் நாட்டை பிளவுபடுத்த சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழீழ கோரிக்கைக்கு வித்திடுவதாக அமைந்துள்ள இந்த இணையதளம் குறித்து அரசாங்கம் சட்ட மா அதிபருக்கு முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரியவருகிறது. சட்ட மா அதிபரின் ஆலோசனைகளின்படி உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். http://isoorya.blogspot.com/
-
- 2 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பில் தொடர்ச்சியாக சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் குழுவினாரால் இளம் பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "த மோர்ணிங்க் லீடர்" தெரிவித்துள்ளதாவது: மட்டக்களப்பில் இரவு நேரங்களில் இளம்பெண்கள கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது பற்றி காவல்துறையினரிடம் முறைப்பாடுகள் செய்தும் எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். வெள்ளை வானில் வரும் இந்த ஆயுதக்கும்பல்களுக்கு இளம் பெண்களின் பெயர் முதல் சகல விபரங்களும் தெரிந்திருக்கின…
-
- 5 replies
- 1.6k views
-
-
மட்டு., அம்பாறையில் விரைவில் சிங்களப் பிரதேச செயலகங்கள் [03 - December - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- கிழக்கு மாகாணத்தில் புதிதாக சிங்கள பிரதேச செயலகங்களை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க சிங்கள பிரதேச செயலகங்களை புதிதாக உருவாக்குவதில் தீவிரமாகச் செயற்படுவதாக கிழக்கு மாகாணத்தின் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலை (தொப்பிகல) மங்களகம மற்றும் சில பகுதிகளை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்து புதிய சிங்களப் பிரதேச செயலகத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்திலும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சில பகுதிகளை தீகவாவியில் இணைத்து மற்று…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கையையும் சொமாலியா போலவே கருதும் அமெரிக்கா! - பண்டார வன்னியன் Sunday, 17 December 2006 10:58 இலங்கை, சோமாலியா அகதிகளுக்கு உதவ 5.215 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஒதுக்கியுள்ளார். இலங்கை, சோமாலியா நாடுகளின் இனப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டு அகதிகளான மக்களுக்கு உதவ இந்த நிதி பயன்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சொந்த நாட்டின் போர்ச்சிக்கல்களால் பாதிக்கப்பட்டு தப்பித்த அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் எதிர்பாராத அவசரத் தேவைகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டுமென வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா றைசுக்கு கடந்த வியாழக்கிழமை எழுதிய அறிக்கையில் ஜனாதிபதி புஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதியை அனைத்துலக, அர…
-
- 2 replies
- 1.6k views
-
-
வடக்கு-கிழக்கிலிருந்து வெளியேறும் விடுதலைப் புலிகள் சிறிலங்காவின் மத்திய பகுதி தோட்டங்களில் அகதிகளாக அடைக்கலம் கோருகின்றனர் என்று பிரதி மின் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் திங்கட்கிழமை சிய மகிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் த டுக்கும் வகையில் இப்பிரதேசத்தில் கூடுதல் அவதானிப்புடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். இந்நிகழ்வில் பேசிய கண்டி காவல்துறை அதிகாரி, கே.டி.சி. கருணாரட்ண, போதிய எண்ணிக்கையில் பாதுகாப்புத் தரப்பினர் இல்லாமையால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலவில்லை என்றார். ஜாதிக ஹெல உறுமயவின் உத்வத்த நந்த தேரர் பேசுகை…
-
- 2 replies
- 1.6k views
-
-
: கேகலிய ரம்புக்வெல ஜசெவ்வாய்க்கிழமைஇ 20 மார்ச் 2007இ 12:41 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பில் தரித்து நிற்கும் ஜோர்தானிய கப்பலான பாராஃ - 03 தொடர்பாக மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்த முடிவுகளும் எடுக்ப்படவில்லை எனவும்இ ஜோர்தானிய அதிகாரிகளுடன் விவாதங்கள் தொடர்வதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜோர்தானிய அதிகாரிகளின் இறுதி முடிவுக்காக நாம் காத்திருக்கின்றோம்இ அதன்பின்னர் கப்பல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாம் தீர்மானிப்போம் என சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தொடர்பாக கலந்துரையாடுவதற…
-
- 3 replies
- 1.6k views
-
-
புதன் 23-05-2007 18:25 மணி தமிழீழம் [மயூரன்] யுத்தகளத்தில் புலிகளின் கைகள் மேலோங்கும் போதே ஆக்கபூவமான சமாதான நடவடிக்கைக்கு அரசாங்கம் முன்வரும் - கஜேந்திரகுமார் யுத்த களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகள் மேலோங்கும் போதுதான் சமாதான நடவடிக்கைகளை ஆக்கபூர்வமான முன்னெடுக்க சிறீலங்கா அரசாங்கம் முன்வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி சிறீலங்காவுக்கான அனைத்துலக நிதியுதவிகளை நிறுத்தியுள்ள சர்வதே சமூகம் மறுபுறத்தில் சிறீலங்காவுக்கான யுத்த தளபாடங்களை வழங்கி அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புக்களுக்கு வழங்கிய அங்கீகாரமாகவே கருத முடியும் எனத் குறிப்பி…
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு இலங்கை தமிழரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன் பத்திரிகை” வெளியீட்டு விழா நாளை காலை 09.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைகள், மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இதன் போது தமிழரசு கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட “புதிய சுதந்திரன் பத்திரிகையானது” மட்டக்களப்பு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. …
-
- 4 replies
- 1.6k views
-
-
இறுதியில் மேற்குலக இணைத்தலைமை நாடுகள், இலங்கைப் பிரச்சினையில் தமது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டன. புலிகளை சரணடையக் கோரியதன் மூலம், தமிழீழ போராட்டம் இதற்கு மேலும் நகர முடியாது என்றும், அதற்கு தமது ஆதரவு கிடையாது என்றும் தெளிவுபடுத்தி விட்டன. ஒரு விடுதலைப் போராட்டம் தொடர வேண்டுமா, அல்லது நிறுத்த வேண்டுமா என்பதை, சம்பந்தப்பட்ட மக்கள் முடிவெடுக்க சுதந்திரமுண்டு. இப்படித்தான் செய்யவேண்டும் என்று உத்தரவிடுவது, ஏகாதிபத்திய தலையீட்டையே குறிக்கின்றது. எனினும் ஆரம்பத்தில் இந்தியாவையும், பின்னர் மேற்குலக நாடுகளையும் நம்பியிருந்த ஈழப் போராட்டம், நெருக்கடிக்குள் சிக்கிய நிலையிலும், தமிழர்கள் மத்தியில் சர்வதேசம் குறித்த மாயை அகல இன்னும் சில காலமெடுக்கலாம். "இலங்கைப் பிரச்சினையை இ…
-
- 3 replies
- 1.6k views
-
-
இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்திருப்பதற்கு, துணைப்படைகுழுவின் தலைவரும்,கிழக்கு முதலைச்சர் பிள்ளையான் (விநாயகமூர்த்தி முரளிதரன்)கண்டனம் தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சி எனவும், அவர்களை மன்மோகன் சிங் சந்தித்திருப்பது தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும் அவர் கூறினார்.தமது கட்சி கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்டது எனவும், மன்மோகன் சிங் தம்மை சந்திக்காது தவிர்த்திருப்பது வேதனை தருவதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதம் ஒன்றை சிறீலங்காவிற்கான இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, இந்திய தலைமை…
-
- 0 replies
- 1.6k views
-
-
முடிவின் ஆரம்பம் [25 - January - 2008] [Font Size - A - A - A] இலங்கையில் இதுகாலவரையான எந்தவொரு சர்வகட்சி மகாநாடுமே பயனுறுதியுடைய விளைபயன்களைக் காண்பதற்கான நோக்கத்துடன் கூட்டப்பட்டதில்லை. சிறுபான்மை இனங்களுக்கு குறிப்பாக, தமிழ் மக்களுக்கு சாத்தியமான அளவுக்கு குறைந்தபட்ச அதிகாரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை வகுப்பதற்கு அல்லது தேசிய இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காணாமல் காலத்தை இழுத்தடிப்பதற்கான ஒரு தந்திரோபாயமாகவே சர்வகட்சி மகாநாடுகளை காலங்காலமாக கொழும்பு அரசாங்கங்கள் பயன்படுத்திவந்திருக்கின்றன. எமது இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டினதும் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இந்த மகாநாட்டின்…
-
- 0 replies
- 1.6k views
-
-
மறு அறிவித்தல் வரும் வரை தமிழ்நாட்டிற்குச் செல்லவேண்டாம்! 03 செப்டம்பர் 2012 இலங்கைக் குடி மக்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல் இலங்கை குடிமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு செல்லும்; இலங்கையர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு, இலங்கை பிரஜைகள் தங்களது பாதுகாப்பை மனதில் கொண்டு, இனி மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாடுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியிருக்கிறது. தமிழ்நாட்டில் 184 இலங்கையர்கள் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களு…
-
- 19 replies
- 1.6k views
-
-
தென்னிலங்கை மீது High Security Zone Residents Liberation Force (HZRLF) என்ற அமைப்பு தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு பத்திரிகை ஒன்றூ செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இனி அப்பாவி தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு சிங்கள மக்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளதாக அப்பத்திரிகை மேலும் விபரித்துள்ளது. யாராவது இது பற்றி உண்மை தகவல்கள் அறிந்தீர்களா? http://www.vg.no/pub/vgart.hbs?artid=126520
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்துள்ள சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான போர்க்குற்ற நபர்களுக்கு எதிராக லண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் பிடியாணை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் பேரவையின் அனுசரணையுடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் நீதிகேட்டு இந்த வழக்குத் தாக்கல் இடம்பெற்றது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகளார், பிரித்தானியா மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சார்பில் இந்த வழக்கை, பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பாக மதிப்பிற்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் றையன் அம்மையார் நீதிமன…
-
- 2 replies
- 1.6k views
-
-
முகமாலைச் சண்டையின் விளைவுகள் என்ன? 27.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_004.html
-
- 0 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சியில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கடத்தப்பட்டுக் கொலை... புதன்கிழமை, 09 மார்ச் 2011 01:20 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரொருவர் கிளிநொச்சிப் பிரதேசத்தில் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவர் காணாமற் போயிருந்ததுடன், அது குறித்து அவரது உறவினர்கள் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். ஆயினும் அவர் பற்றிய எதுவித தகவல்களும் கிடைத்திருக்கவில்லை. அவ்வாறான நிலையில் நேற்றைய தினம் அவருடைய சடலம் கிளிநொச்சியின் முரசுமோட்டைப் பிரதேசத்தில் இருந்து கிளிநொச்சிப் பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு 24 வயதுதான் ஆகின்றது என அவரின் உறவினர்கள் தெரி…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை: ஆணையாளர் நாயகம் 16-01-2015 03:51 AM -ஏ.பி.மதன் விசாரணைக் கைதிகளாக நீண்டகாலமாக இருக்கும் அனைவரது விடுதலை பற்றியும் ஜனாதிபதி செயலாளர் மற்றும் உயரதிகாரிகளிடம் எடுத்துரைப்பதோடு அவர்களது விடுதலையை மிகவிரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, கூறினார். தமிழர் முன்னேற்றக்கழகத்தின் பிரதம அமைப்பாளர் வி.ஜனகனின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் நிகழ்வு, கொழும்பு வெலிக்கடை மற்றும் புதிய மகசின் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் வியாழக்கிழமை (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டபோதே சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, மேற்கண்டவாறு கூறினார். அவர், தமிழ் அரசி…
-
- 15 replies
- 1.6k views
-
-
83 இனப் படுகொலைக்கே மன்னிப்பு கேட்காத போது சிலரை வெளியேற்றியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமா?: பெர்னாண்டோபுள்ளே. 1983 ஆம் ஆண்டு தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்காக அரசாங்கமோ அல்லது சிங்களவரோ மன்னிப்புக் கேட்கவில்லை. அப்படியான நிலையில் தற்போது சில தமிழர்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்காக ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகிந்தவின் அமைச்சரான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் முஸ்லிம் ஊடக மையத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை நான் ஆதரிக்கவில்லை. ஒரு தனியரச…
-
- 5 replies
- 1.6k views
-
-
சிங்களப் போர்க்குற்றவாளிகளான ராஜபக்ஷ சகோதரர்களை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டுமா? - கருத்துக்கணிப்பு இந்தியாவின் கெட்லயின்ஸ் டுடேயில் இக்கருத்துக்கணிப்பு நடக்கிறது. நீங்களும் வாக்களியுங்கள். http://headlinestoday.intoday.in/site/headlines_today/poll_result.jsp
-
- 7 replies
- 1.6k views
-
-
தான் ஆட்சிக்கு வந்த போது அரச உயர்பதவிகளில் நாட்டுக்கு என்றும் விசுவாசமாக உழைக்க கூடியவர்களையே நியமித்ததாகவும் ஆனால் அதில் ஒருசிலர் நாட்டை காட்டிகொடுப்பவர்களாக மாறியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் மஹிந்த. ஆனால் யார் அந்த ஒரு சிலர் என்பதற்கு பதிலளிக்க மறுத்துள்ளார் மஹிந்த முன் நாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவினையே இவர் மறைமுகமாக சுட்டி காட்டியுள்ளதாக கூறப்பட்டாலும் இன்னும் சிலரும் அதில் அடங்குவதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தொழில்சார் அறிஞர்களிற்கான 29 வது பரிசளிப்பு விழாவில் உரையாற்றிய மஹிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் மஹிந்த தமது உரையில் கைத்தொழில் பொருட்கள் ஏற்றுமதியில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிசலுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் அதனை கவனமாக பரிசீல…
-
- 0 replies
- 1.6k views
-
-
சனி 04-08-2007 16:25 மணி தமிழீழம் [மயூரன்] இயற்கை மரணமெய்யும் அரசாங்கத்தை நாங்கள் காப்பாற்றப் போவதில்லை - ஜேவிபி இயற்கை மரணமெய்யும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை தாங்கள் காப்பற்றப் போவதில்லை என்று ஜே.வி.பி அறிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து அபரும்பான்மையi இழந்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்காலத்தில் மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களை இழக்க நேரிடலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்த ஜே.வி.பி ஆதரவளிக்குமா என வினவியபோது தமது கட்சி இயற்கை மரணமடைந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தை காப்பாற்ற முயடிhது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள…
-
- 5 replies
- 1.6k views
-