Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தாய் மண்ணுக்காக தோற்றுப்போன தங்கப்பர்ச்சன் – தமிழ் அவுஸ்திரேலியன்க்கு விசேட செவ்வி [News Published On: Wed, Jun 19th, 2013 at 8:35 pm] ஈழத்தில் தமிழர்களின் அவலங்களையும், விடுதலையின் தேவையையும் வெளிப்படுத்த 2002 இல் நான் ஈழத்திற்கு நேரில் சென்று மக்களின் அவலங்களையும் போரின் பாதிப்பையும் அறிந்துகொண்டேன். அதுமட்டுமல்லாமல் பல நாடுகளுக்கும் சென்று எமது மக்களைச் சந்திதேன் பலவகையான செய்திகளைத் திரட்டி திரைக்கதை ஒன்றை உருவாக்கினேன். அதற்கு ”தாய் மண்” என்று தலைப்பிட்டு திரைப்படமாக்க பலரையும் அணுகினேன். யாரும் முன்வரவில்லை அதில் தோற்றும் போனேன் என்கிறார் தங்கபர்ச்சன்… அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கு வருகைதந்த வேளையில் உங்களுக்காக எங்களுடன் கதைத்த வேளையில்….. ஈழத்தமிழர்கள் …

  2. யாழ். புத்தூரில் தொல்பொருள் திணைக்களத்தால் அகழ்வாரய்ச்சி - ஒன்று திரண்ட மக்கள் யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராய்ச்சியானது நிறுத்தட்ட நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் அதிகளமான மக்கள் ஒன்றுகூடியுள்ளதை அவதானிக்க முடிந்துள்மையும் அங்கு குழப்பமான நிலை உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதிய…

    • 2 replies
    • 591 views
  3. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்டது, தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தவண்ணமுள்ளன. அமெரிக்கா, கலந்து கொள்ளவில்ல?! - 'The Financial Times' நாளேடு - 30 வருட கால போர் கடந்த வாரம் பாரிய அழிவுடன் நிறைவுபெற்றுள்ளதுடன் இந்த போரில் 80,000 - 100,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட தாக்குதல்களின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுட்டும் காயமடைந்தும் உள்ளனர். உதவி நிறுவனங்களின் பணிகளும், தொடர்ச்சியாக சிறிலங்கா அரசினால் தடுக்கபப்டுவதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. மக்கள் காணாமல் போவது, துன்புறுத்தப்படுவது, படுகொலை செய்யபப்டுவது போன்ற தக…

    • 0 replies
    • 683 views
  4. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நிறுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், இது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழரசுக் கட்சியின் யாழ்.கிளைக் கூட்டத்திலேயே, மாவை சேனாதிராசாவை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம், தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் யாழ்.கிளை பிரதி பொதுச்செயலர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நெருக்கமான வட்டாரங்கள், இன்னமும் இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள…

  5. கால அவ­காசம் வழங்­க­வேண்டாம் ஐ.நா.விடம் கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் எண்மர் முறைப்­பாடு (ஆர்.ராம்) இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரி­மைமீறல் கள், மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் தொடர் பில் அர­சாங்­கத்தின் பொறுப்­புக்­கூ­றலை மையப் ப­டுத்தி ஐக்­கிய நாடுகள் சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்துவ­தற்­காக அர­சாங்­கத்­திற்கு மேல­தி­க­மாக கால அவ­காசம் வழங்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எண்மர் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வை­யி­டத்தில் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 34ஆவது கூட்­டத்­தொடர் இன்று…

  6. இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் செல்லாமல் அங்கு அரச தூதுக்குழுவை மட்டும் அனுப்பும் தீர்மானம் நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது. இலங்கையில் நடக்கும் மாநாட்டை கனடா ஒட்டுமொத்தமாக புறக்கணித்தால் மட்டுமே மற்றைய நாடுகளும் கனடாவைப் பின்பற்றும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் பிபிசி தமிழோசைக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=87033&category=TamilNews&language=tamil

  7. இலங்கை VS இந்தியா - இலங்கை பாகிஸ்தானுடன் அணுசக்தி உடன்படிக்கை கைச்சாத்திடத் தீர்மானம் - 14 ஜூலை 2013 இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானுடன் அணுசக்தி உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்க நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்ததனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இலங்கை இவ்வாறு அணுசக்தி உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடத் திட்டமிட்டுள்ளது. சிவில் அணுசக்தி பயன்பாடு குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அணுசக்தி பயன்பாடு தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஆர்வம் காட்டி வருவதாக குறிப்பிடப்படுகிறது. இதேவேளை,…

  8. டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து மீனவர்களிடையேயான மோதலுக்கே வழிவகுக்கும் – அன்டனி யேசுதாசன் 9 Views இலங்கையின் குறிப்பாக வடபகுதி கடற் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதும் அவர்களை சிறீலங்கா கடற்படையினர் தாக்குவதும், படுகொலை செய்வதுமான சம்பவங்கள் பல தசாப்தங்களாக இடம்பெற்று வருகின்றன. இதுவரையில் சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதல்களால் 500 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழக தமிழ் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நீதி கூட இன்னும் கிட்டவில்லை. இந்த நிலையில் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பகுதியில் சில கட்டுப்பாடுகளுடன் மீன் பிடிக்க அனுமதிப்பது என சிறீலங்கா அரசின் ஆதரவு அமைப்பான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னண…

    • 1 reply
    • 363 views
  9. இலங்கையில் பள்ளி ஒன்றில் இருந்த இயேசு கிறிஸ்து சிலையை இடித்து சிங்கள குண்டர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் வட மத்தியப் பகுதியில் உள்ள மின்னெரியா என்ற இடத்தில் உள்ள கான்வென்ட் பள்ளியில் இயேசு கிறிஸ்து சிலை ஒன்று இருந்தது. இந்நிலையில், அந்த சிலையை சிங்கள் புத்த பிக்கு வெறியர்கள் சிலர் அடித்து உடைத்து, இடித்து தள்ளிவிட்டனர்.அந்த சிலை இருந்த இடம் தற்போது முண்டமாக காட்சியளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டுள்ள தேசிய கத்தோலிக்க சபை, இலங்கையில் சிறுபான்மையினர்களே கிடையாது அனைவரும் இலங்கை குடிமக்களே என்று அதிபர் ராஜபக்சே அறிவித்த சில நாட்களுக்குள்ளாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக அறிக்கை ஒன்றில் குறிப்பி…

    • 7 replies
    • 1.8k views
  10. “இன்று நாட்டின் ஆட்சி யார் கையில்” : மஹிந்த ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச நீதிபதிகளை நிராகரித்ததாக கூறும் போதிலும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நீதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கின்றார். இன்று நாட்டின் ஆட்சி யார் கைகளில் உள்ளது என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையின் உண்மையான நிலவரத்தை சர்வதேச தரப்பிடம் எடுத்துக்கூற பொருத்தமான ஒருவர் இந்த ஆட்சியில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/17907

  11. (எம்.மனோசித்ரா) இலங்கையில் நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மிக்குமளவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். எனினும் தினமும் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது குணமடைந்து வீடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதனால் வைத்தியசாலைகள் , இடை நிலை பராமறிப்பு நிலையங்களில் சிகிச்சை படுக்கை பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் இன்றும் ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு , 800 இற்கும் அதிகமானோர் குணமடைந்தனர். கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் உள்ளிட்ட சகல கல்வி நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேல…

  12. தமிழீழ விடுதலைப்போர் 2 எங்கு சென்றாலும் எதிர்ப்பு. எதனை முயற்சித்தாலும் தடை. எதைக் கேட்டாலும் மறுப்பு. இதுவரை இலங்கை அரசு எம்மை நசுக்கி கொண்டு வந்தது. இப்போது உலக நாடுகள் அனைத்து ஒன்று சேர்ந்து நிற்கின்றன. நாம் அப்படி என்ன தவறு செய்தோம்? எமக்ககு எம் உரிமைகளை தட்டிக் கேட்க உரிமை இல்லையா? இவ்வளவு மக்களை பறிகொடுத்தும் இவ்வுலகம் ஏன் பார்க்க மறுக்கின்றது? பலஸ்தீனா வில் உலகத் தலையீடுகள்;+ ரீபற் விடுதலைக்கு உலக ஆதரவு. எமக்கு மட்டும் ஏன் இல்லை? எம்மை ஏன் எல்லோரும் பயங்கரவாதிகளாய்ப் பார்கிறார்கள்? அடக்கு முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகவே நாம் போராடத் தொடங்கினோம். அதில் த.வி.பு தாம் எடுத்த கொள்கையின் பின் திடமாக பாதைமாறாமல் நின்றார்கள் நாம் அவர்களை ஆதரித்தோம். இதில் தவறு ஏ…

    • 4 replies
    • 2.2k views
  13. -எஸ்.கே.பிரசாத் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்தரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சிலர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் படத்தினை இணைத்து தங்களது சுவரொட்டிகளை இணைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதியில் இந்த தேர்தல் பிரசார விளம்பரத்தில் ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் புகைப்படத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் படத்தினையும் இணைத்து பிரசார நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்.மாவட்டத்தில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விபரங்கள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே வெளியிடப்படும் என்று சுதந்திரக் கட்சி அறிவ…

  14. சர்­வ­தேசத்­திற்கு அடி­ப­ணிய ­போ­வ­தில்லை யுத்­தக்­குற்ற விசா­ர­ணையையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஒரு­போதும் ஒன்­றி­ணைக்­கவே முடி­யாது என்­கிறார் நீதி அமைச்சர் விஜே­தாஸ (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) யுத்­தக்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்­பாக சர்­வ­தேசம் எமக்கு அழுத்தம் பிர­யோ­கிக்க முடி யாது. எமது நாட்டு மக்­களின் மீது எமக்­ குள்ள அக்­கறை சர்­வ­தே­சத்­திற்கு இருக்க முடி­யாது. சர்­வ­தேசம் சொல்­வ­தற்கு எல்லாம் நாம் அடி­ப­ணிய போவ­தில்லை என நீதி அமைச்சர் விஜேய­தாஸ ராஜ­பக் ஷ சபையில் உறு­தி­ப­டத்­தெ­ரி­வித்தார். யுத்­தக்­குற்ற விசா­ர­ணை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஒன்­றி­ணைக்க முடி­யாது. இது ரயில் தண்­ட­வாளம் போன்­றது. அவை இணையும் பட…

  15. மிஸ்டர் மர்மம்! ப.திருமாவேலன் திருப்பதி வேங்கடாசலபதி தேவஸ்தானத்துக்குப் பக்கத்தில் நடந்தது அந்தச் சந்திப்பு... தனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞனிடம் அந்த அதிகாரி, ''தெற்காசியாவில் பிராந்திய வல்லரசாக இந்தியா இருக்கிறது. அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்'' என்றார். ''என்னால் என்ன செய்ய முடியும்?'' என்று அந்த இளைஞன் கேட்க, ''நீங்கள் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்'' என்றார் அதிகாரி. சிரித்தான் அந்த இளைஞன். ''காந்தியைப் போல அகிம்சையாகப் போராடிப் பார்த்து, எதுவும் நடக் காததால்தான் ஆயுதத்தைக் கையில் எடுத்தோம். அரசியல் தீர்வை இந்தியா வாங்கிக் கொடுத்தால், தமிழர்கள் நன்றியுடையவர்களாக இருப்போம். ஆனால், சிங்களவர…

    • 0 replies
    • 2.2k views
  16. பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை தேர்தலில் ஈடுபடுத்த வேண்டும் - பெபரல் 27 ஜூலை 2013 பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென பெபரல் அமைப்பு கோரியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தலின் பொது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டுமன்றி பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரியுள்ளார். சுதந…

  17. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமமான கெவிலியா மடுவில் 100 சிங்கள குடும்பங்கள் அத்து மீறி மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தெரிவித்தார். மேலும், http://tamilworldtoday.com/?p=25345

    • 0 replies
    • 321 views
  18. நாட்டை புதிய திசையில் கொண்டு செல்வதாக ஜனாதிபதிக்கு ஜேர்மனி பாராட்டு மனிதர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பலப்படுத்தி, நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி நாட்டை புதிய திசையில் கொண்டு செல்ல ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஜேர்மானிய பாராளுமன்ற சபாநாயகர் நோபட் லம்மர்ட் (Norbert Lammert) தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜேர்மானிய பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனநாயக நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எ…

  19. யாழில்... தடுப்பூசி போடப் பின்வாங்கும் மக்கள்- இன்று 6000 பேரே தடுப்பூசி போட்டனர்! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பின்னடிப்பதாக்த தெரிவிக்கப்படுகிறது. யாழில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் ஆறாயிரத்து 72 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையானது, இன்று தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 60 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாண…

  20. சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சி ஒன்று எதிரணிகளால் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரான மங்கள சமரவீரவே இதற்கான முயற்சிகளின் பின்னணியில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமான தேர்தல்கள் எதிர்நோக்கப்படும் நிலையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை எதிர்கொள்வதற்கான ஒரு முக்கிய உபாயமாக இந்தக் காய் நகர்த்தலை மங்கள சமரவீர மேற்கொண்டிருக்கின்றார். 2007 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோ

    • 1 reply
    • 503 views
  21. http://www.reuters.com/article/marketsNews...011582220090720

  22. தொண்டமானாற்றில் 174 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் இருவர் கைது தொண்டமனாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய சந்தேகநபர் இருவர், கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபர்களிடம் இருந்து 174 கிலோ கிராம், கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த சம்பவத்தில் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இருவரை, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1224066

  23. கிழக்கு மாகாண சபையைக் கலந்தாலோசிக்காமல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காணித் துண்டு ஒன்றை இரண்டு தனியார்துறை நிறுவனங்களுக்குக் கையளிப்பதற்கு சிறிலங்கா மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை கிழக்கு மாகாண சபை இரத்துச் செய்திருப்பது அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இடையில் புதிய சர்ச்சை ஒன்றை உருவாகிகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 35 ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியை இரண்டு தனியார்துறை நிறுனங்களுக்குக் கொடுப்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கையே இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாகவுள்ளது. காணி அதிகாரம் மாகாண சபைக்கு உட்பட்டதாகவே உள்ளது எனக் குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர் சந்திரகாந்தன், மத்திய அரசின் இந்த நடவடி…

    • 0 replies
    • 267 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.