Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த ஒருமாத காலத்திற்கு மேலாக பெய்து வரும் மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தைவிடவும் கடந்த 48மணித்தியாலத்தில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் கிழக்கு மாகாணம் எட்டி நிற்கிறது. பல கிராமங்கள் வெள்ளத்தால் மூடப்பட்டு உணவு படுக்கை வசதிகள் யாவையும் இழந்துள்ளார்கள். பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தமது இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக உதவிகளை வழங்குமாறு உலகத்தமிழர்களை நேசக்கரம் அமைப்பு வேண்டிக் கொள்கிறது. உங்கள் நாடுகளில் உள்ள உதவும் அமைப்புகள் ஊடாக அல்லது உங்கள் ஊர் ஒன்றியங்கள் அமைப்புகள் ஊடாக …

    • 0 replies
    • 770 views
  2. சுய நிர்ணைய உரிமையை அங்கீகரித்த இலங்கை ஆசிரியர் சங்கம் நாளை போராட்டம் ஆசிரியர்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் பொறுப்புவாய்ந்த தரப்புக்கள் கவனயீனமாக இருப்பதனைக் கண்டித்து நாளை-06.10.1014- கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் சர்வதேச ஆசிரியர் தினமான நாளை யாழ்.நகரில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. மாணவர்களின் ஆளுமையை வளப்படுத்துவது மட்டுமல்லமல், மாணவர்களுடைய எதிர்காலத்திற்கான அத்திபாரத்தையும் இடும் ஆசிரியர்கள் சமகாலத்தில் பல்வேறு விதமான நெருக்குவாரங்களை எதிர் கொள்கின்றார்கள். அவர்களுடைய நலன்கள் தொடர்பில் அரசாங்கமும் பொறுப்புவாய்ந்த தரப்பு க்களும் கவனயீனமாகவே இருக்கின்றனர். எனவே சர்வதேச ஆசிரியர் தினமான ஒக்ட…

    • 0 replies
    • 414 views
  3. சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி சிறிலங்காவின் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாவது கட்டத்தை செயற்படுத்துவதற்காக, ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீன அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று பிற்பகல் அலரி மாளிகையில் சந்தித்த, சீனத் தூதுவர் செங் ஷியுவான், இந்த தகவலை தெரிவித்துள்ளார். சீனாவின் இந்தக் கடன், எக்சிம் வங்கி ஊடாக வழங்கப்படவுள்ளது. சிறிலங்கா தரப்பு நிர்வாக மற்றும் சட்ட நடைமுறைகளை விரைவாக முன்னெடுக்குமாறும், சீனத் தூதுவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், மற்றும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்த…

  4. ஏ9 பாதை பற்றிய மஹிந்தவின் புதிய அறிவிப்பு பொருள்களின் விலையை மேலும் அதிகரித்துள்ளது புலிகள் வன்முறையைக் கைவிடும் வரை ஏ9 பாதையை திறக்கப் போவதில்லை என இந்தியாவில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் நடைபாதை கடைகளில் பொருள் களின் விலைகள் இதுவரை இருந்ததைவிட பல மடங்காக அதிகரித்துள்ளது. நடைபாதைக் கடைகளில் முன்னர் ரூபா 120 இற்கு விற்பனை செய்யப்பட்ட நுளம்புத்திரி நேற்றுமுன்தினம் 200 ரூபா முதல் 250 ரூபா வரையும், டைமன் பால்மா 600 ரூபாவாகவும், அங் கர் 320 ரூபாவாகவும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதேசமயம் சிறிய ரக பற்றறிகள் 10 ரூபாவாலும் பெரிய பற்றறிகள் 20 ரூபாவாலும் அதிகரித்திருந்தது. முன…

    • 0 replies
    • 888 views
  5. போரின்போதான பாலியல் வன்முறையும் ஒரு போர்க்குற்றமே - ஐ.நாவின் பெண்ணுரிமைக் குழு [ வியாழக்கிழமை, 17 பெப்ரவரி 2011, 08:42 GMT ] [ புதினப்பலகை - சிறப்புச் செய்தியாளர் ] போரின் இறுதி நாட்களிலும், போர் முடிவுக்குவந்த கையோடும் சிறிலங்காவில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட அனைத்துக் குற்றச்செயல்கள் தொடர்பான பூரண விசாரணைகளை மேற்கொண்டு குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துமாறு 'பெண்கள் பாரபட்சமாக நடாத்தப்படுவதை இல்லாதொழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையினது குழு' [The Committee on the Elimination of Discrimination against Women - CEDAW Committee] சிறிலங்காவினைக் கோரியிருக்கிறது. ஐ.நாவின் மனித உரிமை ஆணையகம் முன்மொழிந்திருப்பதைப் போல போ…

  6. சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிகளை அளித்துள்ளது. சிறிலங்காவின் கடல் கண்காணிப்பு ஆற்றலை பலப்படுத்தும் நோக்கில் ஜப்பான், 30 மீற்றர் நீளமான இரண்டு ரோந்துப் படகுகளை அண்மையில் வழங்கியது. இந்த படகுகளில் பணியாற்றவுள்ள எட்டு கடலோரக் காவல் படையினருக்கு ஜப்பானில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. ரோக்கியோவில் கடந்த மே 7ஆம் நாள் தொடக்கம் 24ஆம் நாள் வரை இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. http://www.puthinappalakai.net/

  7. ஆண்களுக்கு பெண்கள் மஸாஜ் பன்ன முடியாது என்ற சட்டத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார். ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து பெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். https://www.madawalaenews.com/2023/01/blog-post_62.html ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாது... ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் பணி செய்யலாம். இலங்கையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகி…

    • 17 replies
    • 1.6k views
  8. இலங்கையில் அழிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என மன்னார் கத்தோலிக்க பிசப் இராயப்ப யோசப் அவர்களின் அறிக்கையை சுட்டிக்காட்டி காசி ஆனந்தன் பேச்சு இலங்கையில் அழிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என மன்னார் கத்தோலிக்க பிசப் இராயப்ப யோசப் அவர்களின் அறிக்கையை சுட்டிக்காட்டி காசி ஆனந்தன் பேச்சு இங்கே தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. சாதாரணமாக பேசும்போதே "அங்கே மீட் பண்ணுவோம்" என்கிறோம். சந்தியை கார்னர் என்கிறோம். பொறு என்பதை "வெயிட்" பண்ணு என்கிறோம். நீங்கள் ஒன்றை மறந்துவிடக்கூடாது இந்தியாவிலுள்ள 26 மாநிலங்களிலும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழில்தான் பேசியிருக்கிறார்கள். இதை அம்பேத்…

  9. புதன் 20-12-2006 23:12 மணி தமிழீழம் [முகிலன்] மன்னார் உயிலங்குளப் பகுதியில் சிறு மோதல்: இராணுவச் சிப்பாய் பலி மன்னார் உயிலங்குள இராணுவ முகாம் அமைந்த பகுதி தாக்குதலுக்கு உள்ளாகியது. இதன்போது சிறீலங்காப் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இப்பகுதியில் ஆயுததாரிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் சிறு மோதல் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் சுசந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

  10. வெள்ளிக்கிழமை, மார்ச் 4, 2011 போர்க்குற்றம், பொருளாதார நெருக்கடி, வெள்ளப்பெருக்கு ,உள்ளூர் அரசியல் அழுத்தம் என அல்லாடிக்கொண்டிருக்கும் சிங்கள அரசிற்கு இப்போ இடிமேல் இடியாக விழுந்து கொண்டிருப்பது அரபு நாடுகளின் கொந்தழிப்பு. . யார் எதிர்த்தால் என்ன எமக்கு இருக்கவே இருக்கின்றது அரபு நாடுகள் அவர்கள் கேட்டால் வீசி எறிவார்கள் என்ற கோதாவில் மஹிந்த மடிச்சுக்கட்டிக்கொண்டு திரிந்தார். ஆனால் நிலமை இப்படி வரும் என்று நினைக்கவில்லை. . மஹிந்தவின் கஸ்டகாலத்திற்கு அரபு நாடுகளில் திடீர் கொந்தழிப்புக்கள் ஏற்பட்டுவருகின்றன. இது தன்னியல்பாக வந்தால் பிரச்சினை இல்லையே ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற இலங்கையுடன் முட்டி மோதிக்கொண்டிருக்கும் வல்லரசு பிராந்தியங்களின் தூண்டுதலினா…

    • 2 replies
    • 1.4k views
  11. LLRC பரிந்துரைகளை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கத் தயார் – கமலேஸ் சர்மா:- உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கத் தயார் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவிற்கும் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இரு தரப்பிற்கும் இடையிலான உறவுகள் மூலம் சிறந்த நன்மைகள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். கமலேஸ் சர்மா ஜனாதிபதியை சந்தித்த போது, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார…

  12. அவசரகாலச் சட்டத்தை நீடிக்கவே புலிகள் தொடர்பாகப் பிரதமர் புரளி: மங்கள சாட்டை அவசரகாலச்சட்டத்தைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்து வதற்காகவே தமிழ் நாட்டில் புலிகள் பயிற்சி பெறுகின்றனர் என்று பிரதமர் நாடாளுமன்றில் கூறினார். இப்படி ஐ.தே.க.எம்.பி. மங்கள சமரவீர நேற்றுக் கூறினார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: இந்தியாவின் தமிழ்நாட்டில் புலிகள் பயிற்சி எடுத்து வருகின்றனர் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன நாடாளுமன்றில் அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தின் போது கூறினார்.இந்த விடயம் இந்தியாவுக்குத் தெரியுமா? இந்தியாவில் மிகவும் பலம் வாய்ந்த புலனாய்வு…

    • 0 replies
    • 766 views
  13. சமுர்த்தி வங்கியில் 96 இலட்சம் மோசடி நுவரெலியாவிலுள்ள சமுர்த்திஅபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் உட்பட 19 பேர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அந்த வங்கி சீல் வைக்கப்பட்டுள்ளது. 1900 வாடிக்கையாளர்களை கொண்ட நுவரெலிய சமுர்த்தி அபிவிருத்தி வங்கியில் 96 இலட்சம் ரூபா பண மோசடி இடம்பெற்றிருப்பது தெரியவந்ததையடுத்தது சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையினால் அது சீல்வைக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் வங்கியின் முகாமையாளர் உட்பட 19 பேர் தொடர்புபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சீல் வைப்பு சம்பவத்தையடுத்து வங்கியை தீ மூட்ட முயற்சித்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். வங்கியிலுள்ள ஆவணங்களை தீக்கிரையாக்கும் நோக்குடனேயே வங்கியை தீ மூட்ட…

  14. வீட்டுத் திட்ட விவகாரத்தில் சீனத் தலையீடு – பொறியில் சிக்கியுள்ள கூட்டமைப்பு வடக்கு- கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளைக் கட்டும் திட்டம் சீன நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இந்த திட்டம் சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறித்து இந்தியா கவலை எழுப்பியுள்ளதுடன், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதேவேளை, கடந்த மார்ச் மாதம் பதுளையில் இந்த நிறுவனம் அமைத்த மாதிரி வீட்டைப் பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அதனைப் போன்ற வீடுகளை வடக்கு- கிழக்கில் அமைப்பதற்கு இணங்கியிருந்தது. இந்த மாதிரி வீட்டை அடிப்படையாக…

  15. மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் பெயரிலுள்ள படை முகாம் அகற்றப்பட வேண்டும் – சாணக்கியன்! மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் பெயரில் படை முகாம் எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல் – 2023 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வேட்பாளர்கள் அறிமுகத்துடனுன் தேர்தல் பரப்புரை மக்கள் கூட்டம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்த பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வீதியின் …

    • 3 replies
    • 478 views
  16. பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் சண்டே லீடருக்கு வழங்கிய சிறப்புச் செவ்வி எழுதியவர் மிரியம் அஸ்வர் சண்டே லீடர் மார்ச் 20, 2011 இனமுரண்பாடு சிறிலங்காவில் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் நிலைநாட்ட நிறையவே செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. அவற்றுள் சர்வதேச தமிழ் சமூகத்துடன் பரஸ்பர இலாபம் தரக்கூடிய உறவினைக் கட்டியெழுப்புவதும் ஒன்று என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அது அப்படி இருக்க அரசின் இம்முயற்சிகள் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஜனாதிபதி ராஜபக்ச மீதும், ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி பாலித கோகண மீதும் வழக்குகள் பதியப்பட்டது உட்பட புலம்…

  17. -யோ.வித்தியா மன்னார் மாவட்டத்தில் கடற்பாசி உற்பத்தி பெரியளவில் சாத்தியமளிக்கவில்லை என மன்னார் மாவட்ட நீர் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரி பா.நிருபராஜ் புதன்கிழமை (12) தெரிவித்தார். மன்னார் கடல், அதிக அலைகள் கொண்ட கடலாக காணப்படுகின்றது. அத்துடன், கடல் நீரின் உப்புத்தன்மையிலும் மாற்றம் ஏற்படுகின்றது. இதனால், இங்கு கடற்பாசி உற்பத்திக்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளது. ஆயினும் சவுத்பார், வங்காலை, மாந்தை கிழக்கு ஆகிய இடங்களில் பருவ காலத்திற்கு ஏற்ப இந்த கடற்பாசி உற்பத்தியை மேற்கொள்ள முடியும். நவம்பர், டிசெம்பர் (மழைக் காலங்கள்) மாதங்களில் கடல் நீரின் உவர்தன்மை குறைவடையும் என்பதால் அந்தக்காலங்களில் கடற்பாசி உற்பத்தியை மேற்கொள்ள முடியாது. மன்னார் கடல் நீரில் கடல் உயிரினங்க…

  18. சிறுத்தை கொலை வழக்­கில் -மேலும் 4 பேர் சர­ண­டைவு!! கிளி­நொச்­சி­யில் சிறுத்தை ஒன்று அடித்­துச் கொல்­லப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் நேற்று வரை 10 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் அனை­வ­ரும் கிளி­நொச்சி மாவட்ட நீதி­மன்­றால் எதிர்­வ­ரும் 3ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­ லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். கிளி­நொச்சி அம்­பாள்­கு­ளம் பகு­தி­யில் சிறுத்தை ஒன்று 10 பேரைத் தாக்­கிக் காயப்­ப­டுத்­தி­யது. அத­னைக் கட்­டுப்­ப­டுத்த முயன்ற வன­உ­யி­ரி­கள் திணைக்­கள அதி­கா­ரி­க­ளை­யும் அது தாக்­கி­யது. இதை­ய­டுத்து கிரா­மத்­த­வர்­க…

  19. இருவேறு மோதல்களில் ஆறு போராளிகள் வீரச்சாவு. சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற இருவேறு மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (09.01.07) சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய பதுங்கித் தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த வீரவேங்கை மாதுளன் என்றழைக்கப்படும் சிவானந்தராசா கோபிநாத் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கப்டன் துர்க்காதரன் என்றழைக்கப்படும் விஜயகுமார் சிவாகரன் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கப்டன் ஹேமன் அல்லது கமலன் என்றழைக்கப்படும் திருக்கேதீஸ்வரன் ஹேமநாதன் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த வீர…

  20. அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களின் தலையீடுகளே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாமைக்குக் காரணம் - விக்னேஸ்வரன் சாடல் Published By: VISHNU 06 MAR, 2023 | 09:11 PM (நா.தனுஜா) இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம் என்பதே எனது நிலைப்பாடாகும். வட, கிழக்கு வாழ் தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ்மொழி பேசக்கூடிய பௌத்த தேரர்கள் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடுவது இன்றியமையாததாகும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முத…

  21. அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐாதிக ஹெல உறுமயவும் எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளது. அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=294673662722473408

  22. அனுமதியின்றி முல்லைத்தீவில் முளைத்த மதுபான சாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மதவாளசிங்கன் குளத்திற்கு அருகில் புதிதாக ஒரு மதுபான சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த மதுபான சாலை யாருடையது? யார் இதற்கு அனுமதி கொடுத்தது? என்பது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் அவர்களினால் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் யாரிடமும் அனுமதி பெறப்படாமல் இயங்குவதாக தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த மதுபானசாலை அமைந்துள்ள இடம் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி எனவும் இது ஏற்கனவே இராணுவத்தால் உணவகமாக பயன…

  23. Started by வர்ணன்,

    தினமணி இப்பிடி - சொல்லுதாம்... வேற எங்கையும் வாசிசவங்க - சொல்லுங்க ! ஏற்கனவே - இது இணைக்கப்படாதிருந்தால்! http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...7Ls&Topic=0

    • 12 replies
    • 3.5k views
  24. இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பான போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை பான்கீ மூனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதி ஒன்றும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த அறிக்கையை இலங்கை அரசு கடுமையாக விமர்சித்து நிராகரித்தும் உள்ளது. இந்நிலையில் இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் உத்தியோகபூர்வமாக இன்னமும் வெளியிடப்படாத நிலையில் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. இந்த நிபுணர் குழு அறிக்கையின் முக்கிய அம்சமாக சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை பான்கீ மூன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபாரிசு செய்திருப்ப…

  25. உன்னத இலட்சியத்திற்காக தமது உயிரை அர்ப்பணித்த உத்தமர்களின் நினைவுகளை தமிழ் மக்களது மனங்களில் இருந்து அழித்துவிட ஒட்டுமொத்த இலங்கையே அணி திரண்டு வந்தாலும் முடியாத காரியம் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எமது இன விடுதலைப் போராட்டத்திற்காக தங்களுடைய உயரிய உயிரையே அர்ப்பணித்த மாவீரர்களுடைய தினம் எப்போதும் மக்கள் மனங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளது. அவர்களது மன உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் ஒருபோதும் முடியாது. அன்று தொட்டு இன்றும் உணர்வு பூர்வமாக அனைத்து தமிழ் மக்களும் கொள்கை வேறுபாடு இன்றி புனிதமான மாவீரர் தினத்தை கடைப்பிடித்து வருகின்றார்கள். இந்தநிலையில் ஒட்டுமொத்த இலங்கையும் அணி திரண்டு தமிழ் மக்களது மன உணர்வுகளை கட்டுப்படு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.