Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் மாநகரசபையால் மேற் கொள்ளப்படும் பொங்கல் பெரும் திருவிழாவை முன்னிட்டு யாழ் முனியப்பர் கோவில் முன்பாக பெண்கள், ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. thx http://newjaffna.com

  2. ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை இன்று மதியம் 12.30 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். வலிகாமம் வடக்கில் அண்மையில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட வீமன்காமம், வறுத்தலை விளான் ஆகிய பகுதிகளுக்கு ஜரோப்பிய குழு விஜயம் மேற்கொண்டிருந்தது. இதேவேளை யாழ்.மாவட்டத்தில் மேற்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டப் பணிகள் தொடர்பாகவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகனிடம் கலந்துரையாடிச் சென்றனர். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=876474226027808129#sthash.fQSyLSTf.dpuf

  3. வட தமிழீழத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சிறீலங்காச் சிங்கள அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தமிழினப் படுகொலையின் ஓரங்கமாக அப்பாவி மாணவச் செல்வங்களினதும் பொதுமக்களினதும் உயிர்கள் பறிக்கப்பட்டது குறித்து வன்னி மக்கள் தங்கள் எதிர்ப்பையும் கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் சர்வதேச சமூகத்துக்குச் சொல்லிக் கொண்டுள்ளனர். வன்னியில் அரச தொழிலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அரச பயங்கரவாதத்தின் கொடூர செயலால் மரணித்த அப்பாவி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செய்யும் வகையில் இன்று கறுப்புப்பட்டி அணிந்து பணிகளுக்கும் பாடசாலைகளுக்கும் சென்றனர்..! வன்னி மக்களின் எதிர்ப்பின் ஒரு பகுதி இங்கே.. இவர்கள் சிறீலங்காவின் கொடிய பயங்கரவாதிகளான மகிந்த மற்றும் கோத்…

  4. முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் பதவி துறந்தனர் ; தமது அடுத்தகட்ட நகர்வு என்ன - ஹக்கீம் விளக்கம் (ஆர்.யசி, எம்.எப்.எம்.பஸீர்) பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களை கண்டறிவதில் தடையாக உள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் மீது முன்வைகபட்ட குற்றச்சாட்டை அடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்தனர். அத்துடன் குற்றவாளிகளை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு மீது நம்பிக்கை இல்லாததால் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதகாலத்தில் உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீது தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு …

    • 2 replies
    • 815 views
  5. மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு! தொன்மை வாய்ந்த மண்ணித்தலை சிவன் ஆலயம் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பவற்றின் சீரமைப்புப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொல்லியல் திணைக்களத்தால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சோழர் காலத்துக்குரியது என நம்பப்படும் மண்ணித்தலை சிவன் கோவில் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பன தொன்மை வாய்ந்த தலங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அடையாளப்படுத்தபட்டிருந்த நிலையில், அவற்றின் புனரமைப்புக்காக 8 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதையடுத்தே அடுத்தமாதம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. (ப) #Eelam #srilanka #jaffna…

  6. இலங்கையில் அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை வளர்ச்சியும் உறுதிப்பாடும்- இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வாசகம் இலங்கையில் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் உள்ள இடைவெளியான வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாகவுள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 2011 ஆம் ஆண்டு இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை 238 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் அறிக்கை கூறுகிறது. இலங்கையின் பொருளாதாரத்தை பொறுத்தவரையில் இது ஒரு அபாயகரமான நிலையையே காட்டுகிறது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் பற்றாக்குறை குறுகிய காலத்தில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிப்பது ஆரோக்கியமான பொருளாதார ந…

    • 1 reply
    • 1.1k views
  7. June 11, 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்காக முன்னிலையாகுமாறு மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அழைக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரணைக் குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர், அகில இலங்கை ஜமயத்துல் உலமா சபையின் பிரதிநிதி ஆகியோரும் இன்றையதினம் சாட்சிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை எவ்வித அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களுக்கு அடிபண…

    • 2 replies
    • 912 views
  8. வியாழன் 13-12-2007 04:29 மணி தமிழீழம் [மயூரன்] நாட்டில் மனித உரிமைகள் மீறப்படும்போது இறைமையும் பாதிக்கின்றது - இரா.சம்பந்தன் அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைவாக தமிழ் மக்கள் தங்களைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்ள அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று புதன்கிழமை சிறீலங்கா பாராளுமன்றில் மனித உரிமைகள் அமைச்சுக்கான வரவு - செலவு திட்ட விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப் படாதமையே சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் பாரியளவு தொடர்வதற்கு காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் க…

  9. 12 AUG, 2024 | 08:59 PM ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் பொது வேட்பாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டமை தமிழரசு கட்சியை பொது வேட்பாளர் விடயத்தில் எமது வழிக்கு கொண்டு வரும் ஒரு உத்தியே என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பொது வேட்பாளராக அரசியல் கட்சி சார்பற்ற ஒருவர் நியமிக்கப்படுவார் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், இறுதியில் தமிழரசு கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் ஒற்றுமையினை எ…

  10. புதன்கிழமை, 19 டிசெம்பர் 2007,05:35 மு.ப ஈழம் புதினம் நிருபர் தமிழ் மக்கள் உறுதியுடனும் திடசங்கற்பத்துடனும் புத்திசாலித்தனமாக முழு வளங்களையும் பாவித்துப் போராடி வருவதால் அவர்களுக்கான விடுதலை விரைவில் கிடைக்கும் என்று அனைத்துலக மனித உரிமைச் செயற்பாட்டாளரான டியட்றி மக்கென்னல் அம்மையார் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க : http://puthinam.com/full.php?225Vo6203mcYA...d4eSOAca0bCMRde

    • 2 replies
    • 1.4k views
  11. சிறிலங்கா அரசாங்கமானது, தன்மீதான போர்குற்றச்சாட்டுக்களை திசை திருப்பும் நோக்கில், ஆவணப்படம் ஒன்றினை இன்று புதன்கிழமை (08-02-2012) வெளியிட்டுள்ளது. தமிழினத்தின் மீதான, சிங்கள அரச படைகளது போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியற்றை மூடிமறைக்கும் நோக்கில், இந்த ஆவணப்படத்தினை சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால், பொதுமக்கள் மீதும், போராளிகள் மீதும், குற்றச் செயல்களை இழைக்கப்பட்டுள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தினை, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இலங்கையின் உண்மை நிலை பற்றி அறியாமல், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சுமத்தப்படும் போலிக் குற்…

  12. "எங்கள் பிரச்சினைகளை கூறினால் நாங்கள் தீவிரவாதிகளா? : அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 18.09.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். நேரடியாக கேட்க: https://soundcloud.com/imurasu/lttgmol6851v

  13. Comments - 0 Views - 16 உள்நாட்டலுவல்கள் அமைச்சு, கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தை, மீண்டும் திருத்தி வெளியிடுவதில் காலம் தாழ்த்தப்படுவதால், முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனரெனத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளார். இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க, முஸ்லிம்களின் கலாசார உடையில் அபாயா அணிவதை அனுமதித்து, புதிய சுற்று நிருபத்தை விரைவில் வெளியிடுமாறு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார். …

    • 2 replies
    • 1.3k views
  14. அதன் பிரகாரம் 11இலட்சம் அரச சேவையாளர்களுக்கு 2,500ரூபா இடைக்கால கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது. காப்புறுதி, விசேட கொடுப்பனவு, ஓய்வூதிய கொடுப்பனவுக்கான பிணக்குகளை தீர்த்தல், விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பிலான யோசனையும் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கொடுப்பனவுகளுக்காக 40ஆயிரம் மில்லியனை வரவு- செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஒதுகீடு செய்துள்ளது. 11இலட்சம் அரச சேவையாளர்களுக்கும் 2,500ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்காக 20ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. இக்கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டாலும் வாழ்க்கைச் செலவுக்காக வழங்கப்பட்டுவரும் 7,800ரூபா அவ்வாறே தொடர்ந்தும் வழங்கப்படும். சேவையாளர்களுக்கும் 2,500ரூபா இடைக்கால …

    • 0 replies
    • 413 views
  15. ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்தியது ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. அப்பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அரசாங்கம் நிறுத்தி மாற்றுவழிகளை நாடியுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தி தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். மேற்படி நெருக்கடி காரணமாக ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும்போது இலங்கையிலும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என …

    • 10 replies
    • 1.1k views
  16. பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 7 பேர் நேற்றிரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று பகல் யாழ்ப்பாண கடற்தொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=141470&category=TamilNews&language=tamil

  17. இராஜினாமா செய்த முஸ்லீம் அமைச்சர்கள் மீண்டும் தங்களுடைய அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பதா?இல்லையா?என்பது தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதி கூடி ஆராய்ந்து முடிவெடுப்பர் என்று அறியவருகிறது. எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் கூடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை கூடி ஆராய்ந்து தீர்மானத்திற்கு வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. http://thinakkural.lk/article/31491

    • 0 replies
    • 301 views
  18. சர்வதேச சமூகத்தின் ஊடாக புலிகள் சரணடைய எத்தனித்தனர் – கோதபாய: தமிழில் : குளோபல் தமிழ்ச் செய்திகள் சர்வதேச சமூகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சரணடைதல் விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித நேரடி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்த போது, கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பிரதானமாக குற்றம் சுமத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் இடம…

    • 1 reply
    • 555 views
  19. இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் வெளியான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க, முன்னதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார். முகநூல் பதிவு அந்த பதிவில், "அவர்கள் எங்களை புதைக்க முயற்சித்தார்கள், நாங்கள் விதைகள் என்று அவர்களுக்கு தெரியாது." என பதிவிட்டுள்ளார். இந்த முகநூல் பதிவினை அநுரகுமாரவின் ஆதரவாளர்கள், தற்போது அதிகம் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். https://tamilwin.com/article/anurakumara-facebook-post-viral…

  20. பிரான்ஸிலிருந்து தொடருந்தில் ஜெனிவா பேரணிக்கு செல்லவுள்ளவர்களுக்கான தொடருந்து பரிஸ் Gare de Lyon இல் இருந்து 05.03.2012 திங்கட்கிழமை காலை 8.11 மணிக்கு 17 இலக்க வழித்தடத்தில் (Acces Grandes Linges - Hall 2 Plateforme - "JAUNE" Voie 17) இருந்து புறப்படவுள்ளது. எனவே இதில் பயணிப்பதற்கான பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் தொடருந்து புறப்படவுள்ள நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் வருகை தருமாறு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் கேட்டுள்ளனர். திங்கட்கிழமை காலை 8.11 மணிக்கு ஜெனிவா புறப்படும் தொடருந்து பேரணி நிறைவடைந்த பின்னர் அன்றைய தினமே மாலை 18.29 மணிக்கு ஜெனிவா தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.57 மணிக்கு Gare de Lyon வந்தடையும். எனவே …

  21. திருகோணமலை சர்சைக்குரிய கன்னியா தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த ஐந்து இடைக்காலத்தடை உத்தரவுக்கோரிக்கையில் நான்கை மேல் நீதிமன்றம் ஏற்று அதற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்தது. இதனடிப்படையில் பல ஆயிரமாம் ஆண்டுகளாக இந்து மக்கள் வழிபட்டு வந்த வழிபாட்டுரிமை மற்றும் பிதிர்கடன் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் தொல்பொருள் திணைக்களம் வழங்கமுடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் ஆலயம் இருந்தாக குறிக்கப்பட்ட இடத்தில் ஆலயத்தை மீள அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி அவ்விடத்தில் ஆலயம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிகையை தவிர மேலும் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கோரிக்கைளையும் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர…

  22. வதந்திகளை நம்பாதீர்கள் சிறீலங்கா மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேசிய ஊடக பாதுகாப்பு மையத்தின் முகாமையாளர் லக்ஷ்மன் குலுகால வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சிறீலங்கா அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றது. அந்த வகையில் தேவையற்ற வதந்திகளை நம்பி நாட்டில் பயச் சூழலலை அதிகரிக்க வேண்டாம் என மேலும் அவர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறீலங்கா மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கு

  23. ஐ.நா தீர்மானத்தை தோற்கடிக்க விமல் வீரவன்சவுடன் கூட இணையத் தயார் - சோமவன்ச அமரசிங்க ஐக்கிய நாடுகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை தோற்கடிப்பதற்கு ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவுடன் கூட இணையத் தயார் என முன்னாள் ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசியல் கட்சி எந்தவொரு அரசியல்வாதியுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை தோற்கடிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைப் பொறிமுறைமை தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கிரமமான ஓர் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டுமெ…

    • 6 replies
    • 1.2k views
  24. தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை! adminOctober 7, 2024 இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளார். பதவியை துறந்தாலும் அவர் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை முக்கியஸ்த்தர் சட்டத்தரணி கே.வி தவராசா தமிழரசுக்கட்சியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/207216/

      • Thanks
      • Like
      • Haha
    • 9 replies
    • 568 views
  25. மன்னாரில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று தாக்குதல் நடத்தியதில் மூன்று படையினர் கொல்லப்பட்டனர். 9 படையினர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 672 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.