Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அனந்தியை ஒதுக்குகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? [ திங்கட்கிழமை, 30 செப்ரெம்பர் 2013, 04:42 GMT ] [ கார்வண்ணன் ] வடக்கு மாகாணசபை, அமைச்சரவையில் அனந்தி சசிதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் ஒதுக்கப்படுவதாக, வெளியான தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், “அனந்தி ஒதுக்கப்படுவதான இந்தக் குற்றச்சாட்டு தவறானது. அனந்தி மிகவும் இளையவர். வடக்கு மாகாணசபையில் எமக்கு இளையவர்கள் பலரும், அனுபவம் வாய்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற, குறிப்பிட்ட துறைகளில் அனுபவம் மிக்க சிலரும் இருக்கின்றனர். முதலாவதாக, அனுபவம் உள்ளவர்களை கட்சி…

    • 28 replies
    • 2.3k views
  2. வட மாகாண அமைச்சுப் பதவியில் இருந்து பொ.ஐங்கரநேசன் இராஜினாமா வட மாகாண அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பொ.ஐங்கரநேசன் இன்று வட மாகாண முதலமைச்சரிடம் கையளித்துள்ளார். இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் இன்று வட மாகாண முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்று கலந்துரையாடியுள்ளனர். காணொளியில் காண்க… http://newsfirst.lk/tamil/2017/06/வட-மாகாண-அமைச்சுப்-பதவிய/

  3. சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல. எனவே, இவ்விதமான அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமடைய தேவையில்லை என பாது…

  4. அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை உடனடியாக விடுவிப்பதற்கான அழுத்தங்களை சிறிலங்கா அரசுக்கு வழங்க அனைத்துலக நாடுகள் தீர்மானித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக வன்னி முகாம்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு நிதி உதவி அளிப்பதில்லை என்று நிதி வழங்கும் நாடுகள் முடிவு செய்துள்ளன. தடுப்பு முகாம்களின் வழக்கமான பணிகளுக்காக பிரித்தானியா இனிமேலும் நிதி உதவி வழங்காது என்பது சிறிலங்கா அரசுக்கு திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டது. கொழும்பு சென்ற பிரித்தானிய அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் மைக் போஸ்டர், லண்டனின் முடிவை சிறிலங்கா அரசிற்கு மிகத் தெளிவாக எடுத்து கூறியுள்ளார். சிறிலங்காவிற்கு நிதி உதவிகளை வழங்கிவரும் ஏனைய நாடுகளும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுக்க உள்ளன எனவும் அவர் கூறினா…

    • 0 replies
    • 917 views
  5. வடமாகாணப் பொருளாதாரச் சவால்கள் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 அக்டோபர், 2013 - 15:31 ஜிஎம்டி விரிவுரையாளர் அமிர்தலிங்கம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை பெருமளவில் கொண்ட வடக்கு மாகாண நிர்வாகம், அங்கு தேவையான புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதித் தேட்டங்களுக்கு சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் கூறியுள்ளார். வரிகளை விதிக்கவோ, வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன்களை நேரடியாகப் பெறவோ அதிகாரங்கள் இலங்கையின் மாகாண சபைகளுக்கு இல்லாத நிலையில், முத்திரைகளை வரிகளை மாத்திரமே அவை வசூலிக்க முடியும் என்றும், ஆனாலும் வடக்குக்கு மாகாணத்துக்கு இறைவரித்…

  6. நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீள பெறுவோம். – மாவை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண ஆளுனரிடம் எங்களது உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீள பெறுவது தொடர்பில் ஆளுனருடன் பேச இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சருக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் ஏற்பட்டு உள்ள சமரசம் ஏற்பட்டு உள்ளது அ…

  7. வன்முறை கும்பலை சேர்ந்தவரை... தப்ப விட்ட, சுன்னாக பொலிஸார் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை! பொது மக்களால் மடிக்கிப்பிடிக்கப்பட்ட வன்முறை கும்பலை சேர்ந்த நபரை மக்கள் சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், சந்தேகநபர் தப்பிச்சென்றமை தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடமாகாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அழைப்பாணை அனுப்பியுள்ளார். ஏழாலை பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை இரவு புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வீட்டில் இருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவித்தனர். சத்தம் கேட்டு அயலவர்கள் கூடிய போது, வன்முறைக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். அதன் போது அக்கும்பல…

  8. வன்னி வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 250,000 தமிழ் மக்களில் 58,000 பேர் அடுத்த 15 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என தமிழ்நாட்டில் இருந்து சென்ற திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார். தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி நேற்று புதன் கிழமை இந்தச் செய்தியைத் தெரிவித்தார். ஏனையவர்களும் விரைவாக மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். 58,000 பேரையும் மீளக்குடியமர்த்தும் பணிகள் நாளை தொடங்க உள்ளன எனவும் கருணாநிதி ஊடகவியலாளர்களிடம் கூறினார். தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அடங்கிய குழு திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவர்களில் ஒருவர…

    • 0 replies
    • 300 views
  9. கூட்டமைப்புக்கு கூட்டுத் தலைமையே தேவை ; வலியுறுத்துகிறார் செல்வம் அடைக்கலநாதன் October 15, 2021 சம்பந்தனின் காலத்தின் பின் கூட்டுத்தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படும். சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தை பெரிய விடயமாகப் பார்க்கத் தேவையில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை மன்னாரில் அவரின் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோவின் தலைவர் த…

  10. இலங்கை அதிபர் ராஜபக்ஷே, திருமலையில் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தபோது நடந்துள்ள சம்பவங்கள், ஆன்மிக பக்தர்களிடையே பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. ராஜபக்ஷே மனைவி, மகன் உட்பட 80 பேர் கொண்ட குழுவினர் திருமலைக்கு வந்து சுவு�மி தரிசனம் செய்துள்ளனர்.பாதுகாப்பு காரணங்கள் கருதி, திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் பிரதான வாயில் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேட்டுகள் ஒரு மணி நேரம் மூடப்பட்டது.ராஜபக்ஷே திருமலை கோவிலுக்குள் நுழையும் முன், கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.சுவாமி தரிசனத்திற்காக கியூவில் சென்று கொண்டிருந்த பக்தர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் பக்தர்கள் கால் கடுக்க கியூவில் காத்திருந…

    • 4 replies
    • 1.9k views
  11. வடக்கு முதல்வரை சந்தித்தார் தமிழிசை! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடுக் கிளைத் தலைவர் தமிழிசைக்கும் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றது. தமிழிசை தனிப்பட்ட பயணமாக நேற்று இலங்கைக்கு வந்திருந்தார். அவர் இன்று யாழ்ப்பாணம் வந்தார். வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்களை அவர் இன்று சந்தித்தார். நேற்று தமிழிசையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் சந்தித்திருந்தனர். http://uthayandaily.com/story/9830.html

  12. இலங்கையில் குண்டுகள் வெடிப்பது நிறுத்தப்பட்டுள்ளபோது ஜெனிவாவில் வெடிக்கத் தொடங்கியுள்ளதாக மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையை திறந்து வைத்து அங்கு பேசும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் பேசுகையில், 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் நாட்டில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவமோ, பயங்கரவாத செயலோ இடம்பெறவில்லை. ஆனால் இது பற்றி யாரும் கதைப்பதில்லை. இதன்காரணமாக இந்த சம்பவங்களை மக்கள் மறக்கின்றார்கள். அதுவும் நன்மைக்குத் தான். 30 வருடகாலம் யுத்ததால் பாதிக்கப்பட்ட நாட்டை 3 வருடத்தில் அபிவிருத்தி என்ற சவாலை ஏற்றுக் கொண்டோம். அதனை வெற்றிகரமாக செயற்படுத்தி வருகிறோம். உலகில் வேற எந்த நாட்டிலும் இப்படியான அபிவிருத்தி இடம்பெற்றிரு…

  13. நாட்டில் தற்போது 2.2 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இருப்பே காணப்படுகிறது. இதில் 1.7 பில்லியன் டொலரை மாத்திரமே பயன்படுத்த முடியும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 1043 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நெருக்கடிக்கு என்ன தீர்வு? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார். அத்தோடு தற்போதைய அரசாங்கம் வருடாந்தம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பில்லியன் டொலர் கடனும் 2010, 2011 மற்றும் 2012 தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நினைவுபடுத்துவதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்…

    • 17 replies
    • 809 views
  14. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் இந்தியப் பயணம் திடீரெனக் கைவிடப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று புதுடெல்லி வரவுள்ளதாகவும், அவர், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனி உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், எதிர்பார்க்கப்பட்டது போல, கோத்தாபய ராஜபக்ச இன்று புதுடெல்லி செல்லவில்லை. http://www.paristamil.com/tamilnews/view-news-MzAzNzY2MDA4.htm#.UnWAO_kWKnY

    • 10 replies
    • 1.2k views
  15. தமிழரசுக் கட்சி மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது: தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை நீடிக்கின்றதா? இலங்கை தமிழரசுக் கட்சி ஏனைய கட்சிகளை உதாசீனம் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், புளொட் எனப்படும் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சி தமது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அந்தக் கருத்தினை வெளியிட்ட…

  16. வெளிநாட்டில் இருந்து பணம் வழங்கி யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தம்மிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த மாதம் 10ஆம் திகதி பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ம…

  17. சென்னை: வரலாற்றில் மட்டுமே நாம் படித்த மாவீரன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னவர்இ பிரபாகரன் மட்டுமே என்று கூறியுள்ளார் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர். இன்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய 55வது பிறந்த நாளையொட்டி அவர் கூறுகையில்இ ஒவ்வொரு பூவுக்கும் வாசமிருப்பதைப் போல... ஒவ்வொரு நாளுக்கும் ஒரு அர்த்தமிருக்கிறது. இந்த நாள் மாவீரன் பிறந்த நாள். வரலாற்றில் எத்தனையோ மாவீரர்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். மாவீரன் என்றால் இந்த சமகாலத்தில் நெப்போலியனை மட்டுமே வரலாறு சொல்லுகிறது. அந்த நெப்போலியன் வரலாற்றைப் படித்தபோதே என் நரம்புகள் புடைத்தன. ஆனால் இன்று ஒரு தமிழனாக... மாவீரன் என்ற வார்த்தைக்கே புதிய அர்த்தத்தைப் பார்க்கிறேன்இ பிரபாகரன் ம…

  18. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறது – கஜேந்திரன் இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச நாடுகளில் பொலிஸ் மற்றும் நீதித்துறை என்பன ஜனநாயகத்தையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்கும் கவசமாக இருக்கும் நிலையில், இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக அவை செயற்படுகின்றன என அவர் குற்றம் சுமத்தினார். பொலிஸ் துறையினால் நீதிமன்றங்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார். அவர்கள் தவ…

  19. ஈழத்தமிழர் அவலம் குறித்து இந்திய நாடாளுமன்றில் தமிழில் உணர்ச்சிகரமாய் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் சுஷ்மா ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து ராஜ்யசபாவில் தமிழில் பேசி வேதனையை வெளிப்படுத்தி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் பாஜக உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ். நேற்று ஈழத் தமிழர்கள் நிலை குறித்து மத்திய அரசை மிகக் கடுமையாக சாடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். பாஜக, மதிமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக என அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக சாடின. குறிப்பாக பாஜக மூத்த உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். தனது பேச்சின்போது தமிழிலும் அவர் பேசியது அனைவரையும் வியப்படைய வைத்தது. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, பாரதியா…

  20. தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்கினால் மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடிவதுடன் அரசாங்கம் எதிர்பார்க்கும் இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என தமிழ தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து…

  21. பிறப்பினால் மாத்திரமே தமிழன் என்ற நாமத்தைப்பெற்றுள்ள முத்தையா முரளிதரன் இவ்வாறு செயற்படுவது குறித்து நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவர் தற்போது அரசுக்கு அதீத விசுவாசத்தைக்காட்ட ஆரம்பித்துள்ளார் என்று கூறியுள்ளார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன. பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வடக்குக்குப் பயணம் செய்தவேளை, அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழர்கள் முன்னெடுத்த போராட்டத்தையும் அவர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள முத்தையா முரளிதரனுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தமிழக அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் முன்னாள் கிரிக்கெட் வீரரா…

  22. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து 19 பேர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்காக மிக விரைவில் எம்மோடு இணையவிருக்கின்றனர். இந்நிலையில், விமுக்தி குமாரதுங்க பண்டாரநாயக்க அரசியலுக்குள் பிரவேசிப்பார் என்பதும் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இணைவார் என்று வெளியாகின்ற செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளருமான மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார். தென்னிலங்கையில் சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர்களை இல்லாதொழித்தவர்கள் வடக்கிலே தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக சுதந்த…

  23. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முதலமைச்சரின் அழைப்பில் இந்தியப்பிரதமர் யாழப்பாணம் செல்வதை எதிர்ப்பதாக ஐக்கியதேசிய கட்சி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் கூறினார். சர்வதேச நாடுகளின் தலைவர்களை அழைப்பதற்கு மாகாண அரசுகளுக்கு உரிமை இல்லை. இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸவரன் யாழ்ப்பாணத்திற்கு வருமாறு இந்திய பிரதமருக்கு எவ்வாறு அழைப்பு விடுத்தார் என்று ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார். அரசாங்கம் இதற்கு அனுமதிக்கக்கூடாது. பொதுநலவாய மாநாட்டுக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பும் விடுத்தபோது கொழும்புக்கு வருகை தரமறுத்த பிரதமர் மன்மோகன் சிங்க எவ்வாறு யாழ்ப்பாணம் செல்ல முடியும் என்று கேள்வி தொடுத்தா…

  24. வடக்கு தமிழர்கள் தேர்தலை பகிஷ்கரிக்கக் கூடாது என வணக்கத்திற்குரிய பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு தமிழ் மக்கள் இழைத்த தவறை மீண்டுமொருமுறை இழைத்துவிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமக்கு விருப்பமான நபருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும் எனவும், தேர்தல்களை பகிஷ்கரிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளினால் யாழ்ப்பாண மக்கள் இன்னமும் அவதியுறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந…

  25. வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு உரிமையாளரிடம் வரி அறவிட கொழும்பு மாநகரசபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் கொழும்பு நகரில் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் பற்றி விபரங்கள் கொழும்பு நகர சபையில் பதிவு செய்யப்பட்டு வருடந்தோறும் வரி அறவிடப்படும் என கொழும்பு மாநகர சபையின் கால் நடை மருத்துவ அதிகாரி ஐ.பீ.பீ. தர்மவர்த்தன தெரிவித்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொழும்பு மாநகர சபையின் அமுல்படுத்தப்பட்ட சட்டத்திற்கு அமைய இந்த வரி அறவீடுகள் மேற்கொள்ளப்படும். தற்பொழுதுள்ள விபரங்களின் படி கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் 11 ஆயிரம் நாய்கள் இருக்கின்றன. அவற்றில் சுமார் 5 ஆயிரம் நாய்களே பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=98568&a…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.