ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
சொகுசு வாகனங்கள் ரகசியமாக பதிவு! மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு Published By: VISHNU 11 FEB, 2024 | 09:48 PM மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத பெருமளவிலான கார்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்படாத சுமார் 400 கார்களை திணைக்களம் பதிவு செய்துள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப…
-
- 0 replies
- 418 views
- 1 follower
-
-
Aug 18, 2007 at 04:41 PM யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் படைச்சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த படைச்சிப்பாய் பலாலி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. -நன்றி சங்கதி.
-
- 0 replies
- 604 views
-
-
அம்பாறையில் விடுதலைப் புலிகளுடன் இணைய வந்த 18 வயதிற்கும் குறைவான 14 பேரை, ஐ.நா.சிறுவர் நிதியத்திடம் (யுனிசெவ்) ஒப்படைப்பதற்காக நேற்று திங்கட்கிழமை மாலை அழைத்து வந்த போது அவர்கள் மீது விஷேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பொத்துவில் - திருக்கோவில் வீதியில் தாண்டியடிப் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது; அம்பாறையில் அண்மைக்காலத்தில் தங்களுடன் இணைந்த 18 வயதுக்கும் குறைவான 14 சிறுவர்களை (9 ஆண்கள், 5 பெண்கள்) யுனிசெவ்விடம் ஒப்படைக்க புலிகள் முன்வந்தனர். இது தொடர்பாக ்யுனிசெவ்ீ அதிகாரிகளுக்கும் ஒரு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டது. அவர்களும் இந்த சிறுவர்களை இன்று…
-
- 7 replies
- 2k views
-
-
நீதிமன்றம் தாக்குதல்; 34 பேருக்கு இன்று பிணை வித்தியாவின் படுகொலையினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நீதிமன்றம் தாக்கப்பட்டமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 34 பேரை கடும் நிபத்தனையில் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி பல்வேறு போராட்டங்கள் யாழ்.நகரில் முன்னெடுக்கப்பட்டதுடன் அன்றைய நாள் முழு கதவடைப்புக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நீதிமன்றத்தில் 9 ஆவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என்பவரை ஆஜர்ப்படுத்துவதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து இ…
-
- 0 replies
- 424 views
-
-
சிறிலங்கா காவல்துறையினரின் தாக்குதலில் யாழ். ஊடகவியலாளர் காயம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொக்குவில் பகுதியில் நேற்றுப் பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொக்குவில் பகுதியில் நேற்று வீடு ஒன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர், அங்கிருந்த பொருட்களையும், வீட்டின் யன்னல்கள், கதவுகளையும் அடித்து உடைத்து விட்டு, வாகனங்கள் மீது பெற்றோல் குண்டுகளை வீசினர். இதனால் ஒரு வான் மற்றும் இரண்டு உந்துருளிகள் தீக்கிரையாகின. இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நடராஜா குகராஜ் என்ற ஊடகவியலாளர் மீது கோப்…
-
- 1 reply
- 391 views
-
-
05 MAR, 2024 | 09:21 AM நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குதல் ஆகியவற்றை முறையாக முன்னெடுப்பதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். “பிக்கு கதிகாவத்” சட்டமூலத்தை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்த…
-
- 0 replies
- 395 views
- 1 follower
-
-
செவ்வாய் 04-09-2007 17:36 மணி தமிழீழம் தாயகன் சிறீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் கடந்த மாதம் மட்டும் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுஇ 27 பேர் காணாமல்ப் போகச் செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ சமாதானச் செயலகம்இ புள்ளிவிபரத் தகவல்களுடன் இது பற்றிய அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள நிலையில்இ அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மூன்று வாரங்களில் 34 பேர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதுடன்இ 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவங்கள் எந்தெந்தப் பகுதியில் நிகழ்ந்தன என்பது பற்றிக்கூட அந்த அறிக்கையில் தெளிவான விபரங்களை எது வெளியிடப்படவில்லை. இதேபோன்று போர் நிறுத்தக் கண்காணிப்பு…
-
- 7 replies
- 2.2k views
-
-
[ புதன்கிழமை, 26 ஒக்ரோபர் 2011, 02:12 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அதிபருக்கு எதிரான போர்க்குற்ற வழக்கை விசாரிக்க முடியாமல் தடுத்ததன் மூலம் அவுஸ்ரேலிய அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். அவுஸ்ரேலிய அரசின் இந்த முடிவு அவுஸ்ரேலிய தமிழ்ச் சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ஏபிசி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலிய அரசின் முடிவு தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரசின் பெண் பேச்சாளரான சாம்பரி, ஏபிசியிடம் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் திகதியை அறிவித்த நிலையில், அரசியல்வாதி ஒருவர் அதற்கு அனுமதி அளிக்க ம…
-
- 0 replies
- 643 views
-
-
வடக்கில் 248 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2019 பெப்ரவரி 26 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:44Comments - 0Views - 17 வடமாகாணத்தில் சுமார் 248 பாடசாலைகள் மூடப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக 50 மாணவர்களுக்கும் குறைந்த அளவில் கல்வி கற்று வரும் அரசாங்க பாடசாலைகளை மூடுவதுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த ஆண்டின் இறுதியில் குறித்த பாடசாலைகள் மூடப்படும் என வடமாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மூடப்படும் பாடசாலைகளின் மாணவர்கள் அருகாமையில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு மாற்றப்பட…
-
- 1 reply
- 636 views
-
-
Published By: RAJEEBAN 15 MAR, 2024 | 03:43 PM செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ள நிலையில் ஒழுக்கவியல் சார்ந்த அடிப்படைகள் அவசியம். அவ்வாறா ஒழுக்கவியல் அடிப்படையில்லாவிட்டால் முடிவற்ற நெருக்கடிகள் உருவாகலாம் என தமிழ் நாடு உட்கட்டுமான நிதி முகாமைத்துவ தலைவரும் டான்சம் அமைப்பின் பணிப்பாளருமான பேராசிரியர் எம்.ஆறுமுகம் தெரிவித்தார் வவுனியாவில் இடம்பெற்ற ஆசிய பசுபிக்சமாதான ஆராய்ச்சி சங்கத்தின்2024ம் ஆண்டுக்கான சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிட்டதாவது …
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவுக்கும் இடையேயான உறவானது மிகவும் ஆபத்தானது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 2k views
-
-
ஓஸ்திரேலியாவிற்கு அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு தஞ்சம்கோரும் அகதிகள் உயிரிழந்தனர் என்று இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. 7பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 18பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 70 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் ஜாவாவின் கரையோரத்தில் 18 பேரைக் காணவில்லை என்று மேற்கு ஜாவா கடத்தலுக்கு எதிரான படையணி தெரிவித்துள்ளது. இவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விபரம் அறிவிக்கப்படவில்லை. இலங்கை ஆப்கானிஸ்தான் அகதிகளாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 46 பேர் தண்ணீருக்குள் இருந்து இழுத்து எடுக்கப்பட்டனர் என்றும் காணமற்போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர…
-
- 1 reply
- 963 views
-
-
யாழ்.நெல்லியடி பகுதியில் அநாவசியமாகவீதிகளில் கூடி நின்று பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்களுக்கு செல்லும் மாணவிகள், மற்றும் வீதியால் செல்லும் பெண்களுடன் சேஷ்டை புரிந்தவர்கள் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தவர்கள் என 23 இளைஞர்களை புதன் கிழமை மாலை பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற பொலிசார் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இளைஞர்களின் பெற்றோர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்கள் முன்னையில் இளைஞர்களை கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்தனர். அதன் போது காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் 2 க்கு பொறுப்பான பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பி,ஜவ்வர் பெற்றோருக்கும் இளைஞர்களுக்கும், அறிவுரைகளும் வழங்கி இருந்தார். அவர் பின…
-
- 4 replies
- 491 views
-
-
மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய-இலங்கை கூட்டு செயற்குழு விரைவில் கூடவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. Fishermen Care என்ற தனியார் அமைப்பு தாக்கல் செய்த பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர் பிரமாணப் பத்திரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் இதனை குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் மீன்பிடி தொடர்பான இந்திய-இலங்கை கூட்டு செயற்குழுவின் ஆறாவது கூட்டத்தை நடத்த முன்மொழியப்பட்ட போதிலும், உள்நாட்டு பிரச்சினைகளால் அந்த திட்டம் பலனளிக்கவில்லை என இந்திய மத்திய அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தி…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான தமிழீழத் தேசிய தொலைக்காட்சி யாழ். குடாநாட்டில் மிகவும் தெளிவாக ஒளிபரப்பை மேற்கொண்டு வருவதாகவும், அது உயர் அலைவரிசையுடன் ஏனைய தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை விட தெளிவாக இருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
கனடாவின் ஸ்காபரோ நகரில், மார்க்கம் வீதியில் 2691 அறையிலக்கம் 9B என்ற முகவரியில் அமையப் பெற்ற புதிய காரியாலயத்தில் மாவீரர் பணிமனை வெகு விமரிசையாகத் திறந்து வைக்கப்பட்டது. மாவீரரை மனங்களில் நிறுத்திய படி குழுமிய மக்கள் வெள்ளத்துடன் திறப்பு விழா ஆரம்பமானது. முறைப்படியாகக் கனடிய அரசுக்கு அறவித்து தேவையான அனுமதியைப் பெற்றபின் மக்களுக்காக மக்களால் மக்களிடமிருந்த உருவாகியுள்ள செயற்பாட்டாளர்களால் இந்தப் பணிமனை திறந்து வைக்கப்பட்டது,இப்ணிமனைத் திறபுபு நிகழ்வினை, மாவீரராகிவிட்ட மேஜர் நிதிலாவின் அன்னையார் திருமதி செல்வநாயகம் சம்பிரதாயபூர்வமாகக் குத்து விளக்கேற்ற, மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு லோகன் கணபதி அவர்கள் வாயிற் கதவில் நாடாவை வெட்டி விழாவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.…
-
- 0 replies
- 857 views
-
-
இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கையில்லை! - சுரேஸ் பிரேமச்சந்திரன்[Thursday 2015-06-25 19:00] காணாமற்போனவர்கள் பற்றிய தகவல்களை கண்டறிய சர்வதேச விசாரணையே தேவை. இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் விசாரணையில் எமக்கு நம்பிக்கையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணததில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசிய போது, காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இரகசிய முகாம்கள் பற்றி பேசியுள்ளனர். காணாமல் போனவர்கள் தொடர்பான குழுவிடம் காணாமல் போனவர்கள் ஏறத்தாழ…
-
- 17 replies
- 1k views
-
-
மன்னார் புதைகுழி குறித்து இன்னொரு ஆய்வை நடத்த வேண்டும் – சிவமோகன் மன்னார் – மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக வேறொரு நாட்டிலும் காபன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவை, 1499 ஆம் ஆண்டுக்கும், 1719 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டவை என்று தெரியவந்தது. எனினும், இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூற முடியாது. அதேவேளை, மன்னார் புதைகுழியின் முக்கியத்துவம் கருதி, இரண்டாவது ஆய்வு ஒன்றை மேற…
-
- 0 replies
- 420 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 23 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மற்றும் மாதவணை ஆகிய இடங்களில் தமிழர்கள் பாரம்பரியமாக கால்நடை மேய்த்து வந்த மேய்ச்சல் நிலத்தில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள விவசாயிகள், தங்கள் மாடுகளை சித்ரவதை செய்து கொன்று வருவதாகத் தமிழ் பண்ணையாளர்கள் (கால்நடை வளர்ப்பாளர்கள்) குற்றம் சாட்டுகின்றனர். இப்பிரச்னைக்கு உரிய தீர்வு வேண்டி அவர்கள், கடந்த 200 நாட்களாக இரவு பகலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் கூடாரம் அமைத்துள்ள தமிழ் பண்ணையாளர்கள், இந்தப் போராட்டத்தை சுழற்ச…
-
- 2 replies
- 534 views
- 1 follower
-
-
உணவு, சுற்றுச்சூழல், சுகாதார பாதுகாப்புகளுக்கு சேதன விவசாய முறை அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது. இது ஒரு புலமைசார் கோட்பாட்டு விடயமாக இல்லாது வாழ்வியலுடன் தொடர்புடையதாகவும் காணப்படுகின்றது. சேதனப்பசளைப் பயன்பாடு என்பது இன்று பூகோள ரீதியாக முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது என வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார தெரிவித்தார். சேதனப் பசளைப் பயன்பாடு தொடர்பில் யாழ்.பொது நூலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற கலந்துரையாடலில் தலைமையுரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், சேதனப் பசளைப் பயன்பாடு என்பது வாழ்வியலுடன் தொடர்புடையது ஆகும். இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். மாகாண கட்டமைப்புக்கள், மத்திய கட்டமைப்புக்கள் மற்ற…
-
- 2 replies
- 1.2k views
-
-
கருகம்பனை சீதாவளை சவாரித்திடலில் இடம்பெற்ற மாட்டுவண்டி சவாரி போட்டி March 18, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்ட சவாரி சங்கத்தின் அனுசரணையுடன் வலி.வடக்கு சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் கீரிமலை நகுலகிரி இளைஞர் கழகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டி சவாரி போட்டியினை நடாத்தி இருந்தது. வலி. வடக்கின் சவாரி திடலான கருகம்பனை சீதாவளை சவாரித்திடலில் குறித்த போட்டி நடைபெற்றது. http://globaltamilnews.net/2019/116276/
-
- 0 replies
- 654 views
-
-
வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை சீரமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன. போரினால் அழிக்கப்பட்ட வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை 150 மில்லியன் டொலர் செலவில் புனரமைப்புச் செய்வதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில், சிறிலங்கா தொடருந்து திணைக்களமும், இந்தியாவின் இர்கோர்ன் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன. கொழும்பில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் கையெழுத்திடப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கமைய பளை தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான தொடருந்துப் பாதை இந்தியாவின் உதவியுடன் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே ஓமந்தை தொடக்கம் பளை வரையிலான தொடருந்துப் பாதையை புனரமைப்பதற்கான புர…
-
- 4 replies
- 1.3k views
-
-
இனப்பிரச்சினைத் தீ்ர்வுக்கு கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை தரக் கோருகிறார் செல்வம் அடைக்கலநாதன்! [Friday 2015-07-10 07:00] இந்த தேர்தலில் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு விடிவை நோக்கிச் செல்லுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் ஆணையாகத் தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வருகின்ற அரசாங்கம் உண்மையிலே இழுபறி அரசாங்கமாக வர இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களை கைப்பற்றுகின்ற போது இந்த அரசாங்கத்தை நிபந்தனையின் அடிப்படையிலே செயலாற்றுவதற்கான வழியை நாங்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கான சூழல், சிறையில் உள்ள இளைஞர்- யுவ…
-
- 8 replies
- 452 views
-
-
உலகிலேயே ஒரு புதிய நடைமுறையாக தமிழீழத்தில்தான் 17 வயது வரை சிறார்களுக்கு கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்று தமிழீழ அரசியல்துறையின் நடுவப் பணியகப் போராளி சி.எழிலன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 714 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து தந்தையையும் மகனையும் வாளினால் வெட்டி காயப்படுத்தி , வீட்டின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த இளைஞன் மீதும் அவரது தந்தை மீதும் வாளினால் வெட்டி தாக்குதல் நடாத்தியதன் பின்னர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் வீட்டில் இருந்த தொலைகாட்சி பெட்டி உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்று இருந்தனர். குறித்த சம்பவத்தில…
-
- 0 replies
- 535 views
-