Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் - விக்கிரமபாகு கருணாரட்ண "காரணமின்றி கைதுசெய்து வைத் திருக்கும் அரசியல் கைதிகளை உடன டியாக விடுதலைசெய்ய வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மைத்திரி ஆட்சி இருக்கும்வரை நீடிக்க அனுமதிக்க முடியும்.'' இவ்வாறு தெரி வித்தார் நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரம பாகு கருணாரட்ன. கொழும்பில் நேற்று நடைபெற்ற அதி காரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்துவோம் அமைப்பின் ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத் துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ""காரணமின்றி கைதுசெய்து வைத்திருப்போரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும். நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்துவதும் இல்லை. எந்தவொரு விச…

  2. கொழும்பில் 58 இடங்களில் விமானஎதிர்ப்பு துப்பாக்கிகள் கொழும்பில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த 58 இடங்களில் சிறீலங்கா படைகளால் விமான எதிர்ப்பு விமான துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. உயர்ந்த கட்டிடங்கள், தொடர்மாடிக் குடியிருப்புகள் சிலவற்றின் மீதும் இத்துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் வான்வழித் தாக்குதல்களை முறியடிக்கும் வகையிலேயே இவ் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/

  3. கிண்ணியா வைத்தியசாலை வைத்தியர்களது பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லை! பொலீஸார் குவிப்பு. (Video in) Tuesday, August 16, 2011, 12:41 திருக்கோணமலை கிண்ணியா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தற்போது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பெருமளவான பொலீஸார்குவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலையில் காணப்படும் பாதுகாப்பு பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சந்திக்க ஏப்பிட்டகடுவ குறிப்பிட்டார். பணிப்பகிஷ்கரிப்பை அடுத்து கிண்ணியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் தற்போது இயங்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார…

  4. ஐக்கிய நாடுகள் சபைக்கான ஜேர்மனியின் தூதரகத்தினால் இனப்படுகொலைகளில் இருந்து வினைத்திறனானதும், பொறுப்புவாய்ந்ததுமான பாதுகாப்பை வழங்குவது குறித்த அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிறிலங்காவின் இனப்படுகொலைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு ஆய்வாளர்களால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் உட்கிடக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த அறிக்கையில் 10 இடங்களில் சிறிலங்கா குறித்து கூறப்பட்டுள்ளதாக, இந்த செய்தியை வெளியிட்டுள்ள இன்னர் சிட்ரி பிரஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. எனினும், சிறிலங்காவில் நடைபெற்ற யுத்தம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்படாமை குறித்த எந்த விதமான விடயங்களும் இத…

    • 0 replies
    • 406 views
  5. நீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி! நீதிமன்றின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கின்றேன் ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் நாளை நாட்டின் பாதுகாப்புக் கருதியே மேற்கண்ட தீர்மானத்தை தான் எடுத்ததாகவும், நாளை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மஹிந்த தரப்பின் மேன்முறையீட…

  6. வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை தடுக்கவே சிங்கள பேரினவாதம் முயல்கிறது: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை விரும்பாத சிங்கள பேரினவாதம், தமிழர்கள் இணைந்து மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்குமுறை மூலம் அடக்க நினைப்பதாக பொத்துவில் பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் நிலங்கள் சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. மாணவர்கள் மீதான தாக்க…

  7. சிறிலங்கா படைத்துறை அமைச்சின் அறிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்குக்கு கையளிப்பு! - ஜாலிய விக்கிரமசூரிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர் தொடர்பில் சிறிலங்காவின் படைத்துறை அமைச்சினால் தயாரிக்கப்பட்ட 'மனிதாபிமானப் போரின் உண்மை சார்ந்த அலசல்கள்' என்ற தலைப்பிலான அறிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்குக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள், கொழும்பிலுள்ள அனைத்து இராஜதந்திர தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களுக்கும் இவ்வறிக்கையின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் படைத்துறை அமைச்சு கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது. இந்நிலையில், சிறிலங்காவின் படைத…

  8. இந்தியாவுக்கு செல்லும் இலங்கையர்கள் எதிர்வரும் காலங்களில் அந்நாட்டு விமான நிலையங்களிலேயே வீசாவினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று முதல் நடைமுறை வந்துள்ளது. இதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கான வீசாவை பெற்றுக்கொள்ள முடியும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாத இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது அவரால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய இந்த வீசா முறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியா ஏற்கனவே 43 நாடுகளுக்கு ‘ஒன் அரைவல் விசா’ அதாவது விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து…

  9. December 20, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் மஹிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையைப் பெற்றுள்ளமையினால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் அல்லவென வாதப் பிரதிவாதங்கள் வலுப்பெற்றுள்ளன. இது தொடர்பில…

  10. 16 NOV, 2023 | 03:31 PM யாழ். மாவட்ட பொலித்தீன் விற்பனையாளர்களுக்கான பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணி இன்றைய தினம் வியாழக்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் குறித்த அலுவலக பிரதி பணிப்பாளர் து.சுபோகரன் தலைமையில் பொலித்தீன், பிளாஸ்டிக் விற்பனையாளர்களுக்கான பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் குறித்த விழிப்பூட்டல் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ். திருக்குடும்ப கன்னியர் தேசிய பாடசாலையின் சுற்றாடல் முன்னோடி மாணவர்கள், பொறுப்பாசிரியர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய சுற்றாடல் பொலிஸ் உத்தியோகத…

  11. Posted on : Tue Jun 19 8:23:28 EEST 2007 புலிகளின் இறுவட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்பான வீடியோ இறுவட்டுக்களை டோகா கட்டாரில் இருந்து இலங்கைக்கு எடுத்துவந்ததாகக் கூறப்படும் இரு தமிழர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து நேற்றுக் கைதுசெய் யப்பட்டனர். டோகா கட்டாரில் தொழில் புரியும் இவர்கள் நேற்று இலங்கை திரும்பினர். கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர்களது உடைமைகள் பொலிஸாரால் சோதனையிடப்பட்டன. இதன்போது அவர்கள் எடுத்துவந்த பொருள்களில் விடுதலைப் புலிகள் அமைப் புத் தொடர்பான பொருந்தொகையான வீடியோ இறுவட்டுக்கள் இருந்தமை பொலி ஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட இரு தமிழர்களும் மன்னார் மற்றும் கற்…

  12. மாவனல்ல பகுதியில் பெளத்த விகாரையில் புத்தர் சிலைககு சேதம் விளைவித்தவர் கைது. சேதம் விளைவித்த இருவர், கிராமத்தவரால் திரத்தப்பட்ட போது, ஒருவர் தப்பிவிட மொகமட்ஆபீர் ( 30) எனும் இளைஞன் பிடிபட்டு போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றில் நிறுத்தி, ரிமான்ட் செய்யப்பட்ட நிலையில், சிங்கள, இஸ்லாமிய மக்களிடையே வன்முறையை உருவாக்கும் நோக்கம் இருந்ததா என போலீஸ் விசாரணை நடக்கின்றது. மாவனல்ல நீயூஸ் வாசித்தால் இப்படி ஆகும் தானே. http://www.dailymirror.lk/article/Suspect-arrested-for-damaging-Buddha-statue-160308.html

    • 10 replies
    • 1.5k views
  13. மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டான்குளம் வீதி ஆக்காட்டி வெளி கிராமத்தில் நேற்று புதன் கிழமை இரவு 9.30 மணியளவில் கடை உரிமையாளர் ஒருவர் தனது கடைக்குள்ளேயே வைத்து இனம் தெரியாத நபர்களினால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் ஆக்காட்டி வெளி கிராமத்தில் வசித்து வரும் குடும்பஸ்தரான கனகரத்தினம் மகேந்திரன் (வயது-42) என விடத்தல் தீவு பொலிஸார் தெரியவித்துள்ளனர். ஆண்டான்குளம் வீதி ஆக்காட்டி வெளி கிராமத்தில் வசித்து வரும் குடும்பஸ்தரான கனகரத்தினம் மகேந்திரன் என்பவர் நேற்று இரவு 9 மணியளவில் தனது கடையில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று இரவு உணவை உண்டு விட்டு மீண்டும் இரவு 9.30 மணியளவில் தனது கடையில் ப…

  14. மன்னார் மனித எலும்புக்கூடு மாதிரிகள் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன January 2, 2019 மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார் மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 10 தினங்களாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதன் கிழமை 122 ஆவது நாளாக அகழ்வு பணிகள் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மனித எலும்பு…

  15. 08 DEC, 2023 | 05:57 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மிகவும் குறைந்த மட்டத்திலான சம்பளத்தையே ஊடகவியலாளர்கள் பெறுகிறார்கள். ஊடகவியலாளர்களுக்கு எவ்விதமான நலன்புரி திட்டங்களும் தற்போது செயற்படுத்தப்படுவதில்லை.ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை.தற்போதைய வாழ்க்கை செலவுகளுக்கு அமைய ஊடகவியலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெகுஜன ஊடகம் மற்றும் துறைமுகம…

  16. 2009மார்ச்மாதம் 16ம் திகதி இருகால்களையும் சமர்க்களத்தில் இழந்தவள் இவள். முள்ளிவாய்க்காலிலிருந்து புறப்பட்ட மக்கள் வெள்ளத்தில் மிதிபட்டு முட்களும் மனிதக்கால்களும் காயப்படுத்தி உயிரோடு வவுனியாவை அடைந்தவள். முகாமில் பட்ட துயரைச் சொல்லியழும் கதைகள் கண்களை ஈரமாக்கிவிடுகிற துயர்களவை. மலங்களிக்கக்கூட வசதியற்ற முகாமில் 3அல்லது 4நாளுக்கு ஒருமுறை இருளும் வரை காத்திருந்தே இயற்கை உபாதையையும் கழித்திருக்கிறாள். ஊனமுற்றவள் ஊருக்குப் போவதில்லை உறவுகளுக்குத் தொல்லை கொடுப்பதில்லையென்ற முடிவோடு இருந்தவள் முகாமிலிருந்து ஊர்போக வேண்டிய இக்கட்டில் தள்ளியது. பிறந்து 6மாதத்தில் தாயை இழந்தவள் எல்லாமுமாய் அவளுக்கிருந்த எழைத்தந்தையிடம் தான் 2010 இல் தஞ்சமடைந்தாள். அவளது ஒற்றை …

  17. யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள மக்களுடைய நிலங்களில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான கூட்டம் இன்றைய தினம் நடைபெறவிருந்து. இந்தநிலையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் இல்லாமையினால் அந்தக் கூட்டம் 8ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேற்படி கூட்டம் கடந்த 27ம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அன்றைய தினம் நடைபெறாமல் 29ம் திகதி இன்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்றைய தினமும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்தக் கூட்டம் இடம்பெறவில்லை. எனவும் அது பின்னர் 8ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னதாக இடம்பெற்ற மீள்குடியேற்றத்தின் ப…

  18. நீதியரசர்கள் நியமனத்தில் அரசியலமைப்புச் சபை விடாப்பிடி உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்களாக நியமிக்கப்படுவதற்கு, நீதியரசர்கள் துரைராஜா மற்றும் அமரசேகர ஆகியோரின் பெயர்களை அரசியலமைப்பு சபை மீண்டும் உறுதிசெய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நிலவிய இரண்டு நீதியரசர்களின் வெற்றிடத்துக்கு, நீதியரசர்கள் துரைராஜா மற்றும் அமரசேகர ஆகியோரை அரசியலமைப்பு சபை சிறிலங்கா அதிபருக்கு உறுதி செய்திருந்தது. எனினும், இவர்களை நியமிப்பதில் இழுத்தடித்து வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மேலும் இரண்டு நீதியரசர்களின் பெயர்களையும் பரிந்துரைத்திருந்தார். ஆனால் நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடிய அரசியலமைப்பு சபை, ஏற்கனவே உச்சநீதிமன்ற நீதியரசர்…

    • 0 replies
    • 321 views
  19. கூட்டமைப்பின் தலைமையில் இருப்பவர்களும் – முரண்படுபவர்களும் தொடர்ந்து முட்டி மோதி இராணுவ புலனாய்வுக் கட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் மூழ்கப் போகிறீர்களா? என்பதனை தீர்மானியுங்கள்..... நீண்ட் நாட்களாகவே என் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் முக்கிய விடயத்தை பதிவிட வேண்டும் என நினைப்பது உண்டு... பின்பு ஏன் இந்த கட்சி அரசியல் வில்ங்கங்களுக்குள் நேரத்தை மண்ணாக்குவான் என ஒதுங்கிக் கொள்வது உண்டு... ஆனால் நேற்று (04.05.15) எனக்கு வந்த ஒரு செய்தி எனது பதிவின் அவசியத்தை உணர்த்தி நின்றது... அதனை நான் வெளியிடவில்லை காரணம் ஆதாரம் இல்லாத செய்திகளை நான் பதிவிடுவதில்லை.... ஒரு சந்திப்பாக இருந்தால் அந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் அதனை உறுதிப்படுத்தி தெரிவிக்க வேண்டும்...…

    • 0 replies
    • 274 views
  20. மொட்டு கட்சியில் இருந்தே அடுத்த அதிபர் – பசில் திட்டவட்டம் சிறிலங்காவின் அடுத்த அதிபர் சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு முடிவுக்குள், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையிலான புதிய கூட்டணியில் இருந்து அதிபர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த தேர்தலில் சில மாவட்டங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி ஆகிய கட்சிகளை விட, சிறிலங்கா பொதுஜன முன்னணி அதிக பலத்தை நிரூபித்திருக்கிறது, என்றும், எதிர்காலத் தேர்தல்களில் அதனை விடப் பெரிய பலத்தைப் பெறும் என்றும் பசில் ராஜபக்ச கூறியிருக்கிறார…

    • 0 replies
    • 398 views
  21. தமிழரசுக் கட்சியின் மாநாட்டை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை - இரா.சாணக்கியன் தெரிவிப்பு! Vhg டிசம்பர் 30, 2023 "இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுடைய மனங்களில் மாநாட்டை ஒத்திவைக்கின்ற எண்ணம் இல்லை." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (29-12-2023) வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கைத் தமிழரசுக் கட…

  22. [Monday, 2011-09-19 10:41:58] தமிழ்ப் பெண்களைக் கேவலப்படுத்தி தமிழர்கள் வாழும் பிரதேசங்களை உல்லாச புரியாக்க முனைகிறது இலங்கை இராணுவம். போரினால் சிதைந்து போயுள்ள வடபகுதியையும், அவல நிலையில் வாழும் தமிழ் மக்களையும் காட்சிப் பொருளாக்கி இங்கே தென்பகுதிச் சிங்களவர்களை அழைத்து வந்து கண்காட்சி நடத்துகின்றது அரசு என்று சாடுகின்றார் மாவை சேனாதிராசா. நேற்று முன்தினம் நாவாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றிய மாவை சேனாதிராசா மேலும் கூறியதாவது; கிறீஸ்பூதம் என்று ஒன்று கிடையாது. இந்த இராணுவத்தினர் தான் கிறீஸ் பூதங்களாக நடமாடுகின்றனர். இவர்கள் குறிப்பாகத் தமிழ்ப் பெண்களின் மீதே குறிவைத்து சேட்டைகளில் ஈடுபட முனைகின்றனர். இ…

  23. இனப்பிரச்சியை தீர்க்க அரசாங்கம் முனையவில்லை - ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைளை தீர்க்க முனைப்பு காட்டவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான தூதுவர் டேவிட் டேய்லி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், இதனைத் தெரிவித்துள்ளார்.பதிவு இணைய செய்தி யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. இனப்பிரச்சினையை தீர்க்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனிவரும் காலத்திலேனும் இனப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பதிவு இணைய செய்தி அதேநேரம் முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும…

    • 6 replies
    • 687 views
  24. 11 JAN, 2024 | 07:25 PM நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஆண், பெண் சமத்துவத்தை (Gender Equality Bill) ஆண், பெண் சமத்துவ சட்டமூலத்தின் வாயிலாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் 120,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவை வழங்குவது சவாலாக அமைந்திருந்தது. அந்த …

  25. [Monday, 2011-09-26 08:19:12] சிறிலங்காவினது போர்க்குற்ற விவகாரத்தில் வெளிநாடுகளது தலையீடுகள் மற்றும் அழுத்தங்களை தவிர்ப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்துகின்ற பேச்சுக்களை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டியது அவசியம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நியுயோர்க்கில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமரின் ஐ.நாவுக்கான பயணம் தொடர்பாக நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம பேசிய இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய், இரு நாடுகளினதும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.